Jump to content

1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.


Recommended Posts

1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.

 

 

மூன்றாவது தவணைப்பரீட்சை கடைசி நாள். கணிதப்பரீட்சை அன்று வழமைக்கு மாறாக 12 மணிக்கே அன்றைய நாளின் பாடசாலை முடிவு. புத்தகப்பை கையில் இல்லை. ஏழுத்து உபகரணங்களை வகுப்பில் வைத்துவிட்டு வரும்போது ஏதோ எல்லாப்பாரமும் குறைந்தது போலிருந்தது. அப்பாடா இனி புதிய வருடம் புதிய வகுப்பு மனம் எங்கோ பறந்தது. முதலாம் இரண்டாம் தவணைப் பரீட்சையின் பின் என்றால் மணிக்கூட்டுக்கோபுரத்தில் நேரம் பார்த்தபடி கிரிக்கெட் அல்லது புட்போல் இல்லை யாழ் நூலகத்தில் மித்திரனில் வரும் ஜி நேசனின் தொடர் முதல் அம்புலி மாமாவரை மேய் ந்துவிட்டு 3:30க்கு வீட்டிற்குப் போகலாம். ஆனால் இப்போ மழைக்காலம் மைதானத்தில் வெள்ளம், திங்கட்கிழமை நூலகமும் பூட்டு. மத்தியானத்திற்கும் வயிற்றிற்கு ஏதுமில்லை. வீடு போவதைத் தவிர வேறு தெரிவில்லை.

 

அங்கன திரியாமல் பஸ்ஸில வீட்டை வா என்று அம்மா தந்த பழைய இரண்டு ரூபாய் நோட்டை கைகள் தன்னிச்சையாய் பொக்கற்றுக்குள் தடவி நின்றது. பஸ்ஸுக்கு ஒரு ரூபாய் போதும். அதுவும் 12 வயதில் எனது உடல்தோற்றத்திற்கு கண்டக்டர் அரை ரிக்கற் தானாகவே தருவார். அம்மாவுடன் போனால் இல்லை இவனுக்கு 12 வயது என சொல்லி முழு ரிக்கற் வாங்குவா. அரிச்சந்திரன் பரம்பரை என்ற நினைப்பா அல்லது தன்ரை கடைக்குட்டிக்கு 12 வயது என்பதில் பெருமையா தெரியாது. மனம் ஏற்கனவே முடிவெடுத்திருந்தது 13:50 க்குப் போகும் ரயிலில்தான் பயணம் என்று. ரயிலிற்கு மாதாந்த பிரயாணச்சீட்டு இருந்ததால் ஒரு ரூபாய் மிச்சம். மனம் ஒரு ரூபாய்க்கு என்னசெய்யலாம் என கணக்குப்போட்டுக் கொண்டது.

 

பஸ்ரான்டிற்குப் போனால் ராஜா கூல்பார் அருகில் உள்ள புத்தகக்கடையில் பி டி சாமியின் பேய்கதை, தமிழ்வாணனின் சங்கரலால் அல்லது முத்து கொமிக்ஸ் சிஜடி மூசாவின் சித்திர துப்பறியும் நாவல் வாங்கலாம். பத்தகத்தை நாளைக்கு வகுப்பிற்கு கொண்டுவந்தால் நான்தான் ஹீரோ. பாடசாலைக்கு மனதார ஆசையுடன் செல்லும் நாட்கள் பரீட்சை முடிந்ததிலிருந்து ரிப்போட் தரும் நாள்வரைதான். படிப்பு கொஞ்சம் மண்டையில் ஏறுவதால் ரிப்போட் பற்றிய பயமில்லை. முதலாவதாக வந்தால் அது போணஸ் வராவிட்டாலும் 75% சராசரிக்கு மேலிருந்தால் வீட்டில் கும்பாபிஷேகம் இல்லை. இந்தமுறை செவ்வாய் முதல் வெள்ளி வரை ஜாலிதான். அம்மாவும் இந்நாட்களில் 25 சதம் தருவா கணக்கு கேட்கமாட்டா. 

 

ஜீவா டேய்! குரல் என்னை நிஜத்துக்குள் தள்ளியது. அந்த வயதிலும் வாட்ட சாட்டமான நண்பன். மாபிள் விளையாட்டில் விண்ணன் ஆனால் அவனால் மாபிள்களை பாடசாலைக்கு கொண்டு வரமுடியாது வென்றதை வீட்டிற்கு கொண்டு போகவும் முடியாது. எனது மாபிள்களில் விளையாடி வென்று தருவான். என்னிடம் அப்போது 300க்கும் மேல் மாபிள்கள் இருந்ததின் சூத்திரன் கண்ணன் இவனே. தன் உடல்வாகுவை வைத்து வாக்குவாதங்கள் முற்றி அது குருஷேத்தரமாகும் தருணங்களில் எல்லாம் என்னை காப்பாத்தும் நண்பர்கள் இருவர்களில் ஒருவன். மற்றவர் இரு வகுப்பு கூட ரயில் சிநேகிதம், அவர் ஜெயசிக்குரு போன்ற பெரிய தாக்குதல்களிற்கு மட்டும்.

 

வாடா கன்ரீனுக்கப் போவம் அங்கை சின்னத்தம்பி (மன்னிக்கவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது பிழையிருந்தால் பதிவிடவும்) சுடச்சுட கடலட் தருவார் என்றான். பூதத்திற்கு (மன்னிக்கவும் உலோகவேலை ஆசிரியர்க்கான பட்டம்தான்) ரீ வாங்க மட்டுமே இதுவரை தனிய கன்ரீனுக்கப் போன நான் முதல்முறை எனக்காக. மனம் ஏங்கியது அதுவும் கையில் ஒரு ரூபாயுடன். சரி என்றேன். எமது பாடசாலையின் கன்ரீனை மக்டொனல் மாதிரி கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல. விளையாட்டிற்கு கூட ஒதுங்காத பாழ் மண்டபம். அது 100 வருடத்திற்கும் மேலானது. தொல்பொருள் ஆராட்சியாளர்கள் கண்டால் தோண்டி விடுவார்கள். 3ம் வகுப்பிருக்கும் என ஞாபகம் அண்ணனுடன் அந்த கன்ரீனுக்குள் முதல் தடவையாக போனது. அம்மா சுகயீனம் காரணமாக அண்ணாவிடம் காசு கொடுக்க நானும் சேர்ந்து இடியப்பம் சம்பல் சொதியுடன் சாப்பிட்ட நினைவு. அண்ணனும் மறக்காமல் கடைசி தம்பியை வெருட்டி விட்டே போனர்.

 

வீட்டில் கழியலறைக்கு குசினியையும் தாண்டிப் போகவேண்டும். லைற் சுவிட்ச் கூட விராந்தையின் முடிவில்தான். அம்மா குசினி அலுவல் முடிந்து லைற் ஒவ் பண்ணினால் மூத்திரம் போக கூட உதவி தேவையான வயது. இது பத்தாது என்று எலி ஓடினாலே பேய் என பயமுறுத்தும் அண்ணன்மார். கடைசியாகப் பிறந்தாலே இதுதான் தங்கள் பயமெல்லாத்தையும் என் தலைமேல் போட்டுவிட்டு தாங்கள் பயமில்லாதவர்கள் போல நடிப்பார்கள்.

 

அப்போதுதான் கன நாட்களின் பின் மழை, லயிக்கத் தெரியாத வயதில் கூட புழுதி மணம் மனதை வருடவே செய்தது. கால்கள் பேய்குகை நோக்கி நண்பனின் தைரியத்தால் நடந்தன.

 

இருண்ட குகை மாதிரியே இருக்கும் எங்கள் கன்ரீன். அண்ணன் வேறு இரவில் பழைய இறந்த அதிபர்கள் வந்திருந்து கதைப்பார்கள் என்று சிறுவயதிலேயே பயமுறுத்தியிருந்தான். பூதத்திற்காக (ஜெயரட்ணம் மாஸ்டர் மன்னிக்கவும்) பாதாளகுகைக்குள் போனதை தவிர தனிய போனதில்லை. முழு வகுப்பின் முன் "ஜீவா கன்ரினில் எனது பெயரைச் சொல்லி ரீ வாங்கி வா" என்றால் ட்டனென்றா சொல்லமுடியும். பயம் என்று சொன்னால் எனது மரியாதை என்னாவது. நாங்களெல்லாம் அப்ப கவரிமான் மாதிரி. பயப்படாத மாதிரி உள்ளே போய் ரீ சொல்லிவிட்டு வெளியே வந்து நிப்பன். அப்ப உள்ளே சின்னத்தம்பி தவிர யாரும் இருக்க மாட்டார்கள். சின்னத்தம்பி சூழலுக்கேற்ற நிறம் தனியாக தேடிப்பிடிக்க வேண்டும். கூப்பிட்டதும் போய் வாங்கி வருவேன்.

 

இந்தப் பேய்குகைக்குள் நானும் நண்பனும். மனதில் நண்பனின் உடல்வாகுவின் மீது மிகுந்த நம்பிக்கை. ஆபத்தாந்தவன் அவனே. இப்போது பேய்குகைக்குள் நாங்கள் மற்றும் சின்னத்தம்பி மட்டுமே. சின்னத்தம்பி வெளிச்சத்தில் மட்டும் தெரிவார். யார் பணம் செலுத்துவது என்ற சண்டையில் நான் வென்றுவிட, கம்பீரமாக ஓடர் செய்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தோம். நாற்காலி கூட ஸ்டீபன் ஸ்பீல்பேர்க்கின் பேய் படங்களில் வருவது போல கிரீச் என்ற சத்தத்துடனேயே இருக்க விட்டது.

 

பயம் சிறிதளவாக குறையவே சின்னத்தம்பியின் மேல் நோட்டம் போனது. அவர் கட்லட் செய்து வைப்பதில்லை. எல்லாவற்றையும் ஆயத்தமாக குழைத்து வைத்திருந்தார். உருட்டி கொதித்த எண்ணையில் போட்டார். மணத்தில் பத்தடி தூரத்திலிருந்த மூக்கு துள்ளியது. அகப்பையின் பின்புறத்தால் முதுகையும் சொறிந்து  கொண்டார். மணத்தில் லயித்திருந்த மனம் முதுகை சட்டை செய்யவில்லை.

 

தம்பீங்களா! மறுபடியும் நிஜத்தில். அவர் முதுகு போலவே பல மேடு பள்ளங்களுடன் ஒரு அலுமீனியத்தட்டு அதில் இரண்டு கட்லட். கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. நான் பார்த்த சுவைத்த கட்லட்கள் வடையை விட சிறியன ஆனால் இது போண்டா அளவில் இருந்தது. மனதில் சிறு சந்தேகம் போண்டாவா என்று. கொதிக்க கொதிக்க வைத்த முதல் வாய் கட்லட்தான் என்றது.

 

இப்போது பேய்குகை பயம் போயிருந்தது. உருசி நாக்கில் இருந்தது. டேய் நாளைக்கும் வருவோம் என்ரை முறை என்றான் நண்பன். சரி என்றேன் மனதுக்குள் இருந்த பயத்தை வென்றது இந்த உலகையே வென்றது போலிருந்தது. ஒரு கட்லட் 20 சதம் இருவருக்கும் 40 சதம். மிகுதி 1.60 இல் அம்மா ஒரு ரூபாவை எப்படியும் புடுங்கி விடுவா. 60 சதம் இன்னுமிருக்கு 3 கட்லட்டிற்கு.

 

பி.டி.சாமி, சிஜடி மூசா, தமிழ்வாணனின் சங்கர்லால் எதுவுமே  பாதாளக் குகை சின்னத்தம்பியின் கட்லட் அனுபவத்திற்கு இணையாகுமா. மறுபடியும் நாளைய கட்லட்டிற்கு மனது ஏங்க பாடசாலையிலிருந்து வெளியேறினோம்.

 

 

இது எனது அனுபவத்தின் பதிவு யார் மனத்தையும் புண்படுத்தவல்ல

 

வேலும்மயிலும் என்ற பெயர் சின்னத்தம்பியாக மாற்றப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு படு சீனியர் தான் போல ஜீவன் சிவா. அப்பவும் கந்தையாண்ணை வகுப்பில வந்து பற்றிஸ் எல்லாம் விக்கிறவரோ? உங்களுக்கு பிரான்ஸ் முத்துக்குமாரையும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

எங்களுக்கு படு சீனியர் தான் போல ஜீவன் சிவா. அப்பவும் கந்தையாண்ணை வகுப்பில வந்து பற்றிஸ் எல்லாம் விக்கிறவரோ? உங்களுக்கு பிரான்ஸ் முத்துக்குமாரையும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

 

எனது ஞாபகத்திலும் கந்தையா அண்ணை என்றுதான் இருந்தது விளக்கத்திற்காக திண்ணையில் கேட்டேன் வேலும்மயிலும் என்ற பதில் கிடைத்ததால் மாற்றினேன். ஆனாலும் கந்தையா அண்ணை groundboy அல்லவோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஞாபகத்திலும் கந்தையா அண்ணை என்றுதான் இருந்தது விளக்கத்திற்காக திண்ணையில் கேட்டேன் வேலும்மயிலும் என்ற பதில் கிடைத்ததால் மாற்றினேன். ஆனாலும் கந்தையா அண்ணை groundboy அல்லவோ.

 

கந்தையாண்ணை கிரவுண்ட் போய் தான். ஆனால் குறுகிய இடைவேளை நேரம் ஒரு பையில் ரோல்ஸ் வடை எடுத்துக் கொண்டு வகுப்பு வகுப்பாகப் போவார். காசு கையில் இருக்கும் மாணவர்கள் வாங்குவார்கள். கன்ரீன் நடத்தியவர் பெயர் வேலும் மயிலும் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்திருக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாடா கன்ரீனுக்கப் போவம் அங்கை வேலும்மயிலும் (மன்னிக்கவும் பெயர் ஞாபகமில்லை நினைவிலிருந்தால் பதிவிடவும்) 

சின்னத்தம்பி

Link to comment
Share on other sites

1975 - யாழ் மத்திய கல்லூரி யில் அரைமணி நேரம்.

 

 

.பூதத்திற்கு (மன்னிக்கவும் உலோகவேலை ஆசிரியர்க்கான பட்டம்தான்)

 

 

ஹஹா இவர் ஒரு வித்தியாசமான ஆசிரியர் :lol:    அவருக்கு கிட்ட போக முடியாது நறுமணம் :icon_mrgreen:

 

உலோகவேலை பாடம் எடுக்க வருவார். புதன்கிழமைகளில் 2 பாடம் அவரது. அந்த நேரம் எப்படி போகும் என்று இருக்கும்.

 

மிக தடிப்பான கண்ணாடி போடுவார், தனது மேசையில் தலையை குனிந்து எதாவது எழுதி கொண்டு இருப்பார்.

 

மாணவர்கள் யாராவது கதைத்து சத்தம் போட்டால் குனிந்த தலை நிமிராமல்  நம்பர் 7 (  Register இல் யாரது பெயர் 7வரிசையில் இல் இருக்கோ) எழும்பு

 

என்பார். பிறகு என்ன  அவருக்கு கன்னத்தை பொத்தி 2 விழும் :icon_mrgreen::D  கதைத்தவன் யாரோ அடிவாங்குவன் வேறு யாரோவாக இருக்கும். :lol:

 

அவர் வகுப்பில் இருக்கும் போதே பலர் வகுப்பை விட்டு வெறியேறி விடுவார்கள் அவருக்கு எதுவும் தெரியாது :o

Link to comment
Share on other sites

 

 

அவர் வகுப்பில் இருக்கும் போதே பலர் வகுப்பை விட்டு வெறியேறி விடுவார்கள் அவருக்கு எதுவும் தெரியாது :o

 

இவர் எப்பவும் புத்தகத்தை கண்ணிற்கு மிக அருகிலேயே வைத்துப் படிப்பார். சார் இது சரியா என ஒருவர் கொப்பியை காட்ட மற்றவரகள் வகுப்பை விட்டு வெளியேறுவது எமது வகுப்பிலும் நடந்ததுதான். ஆனால் அவரிடம் நுள்ளு மட்டும் வாங்கக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கலூரியில் பல நண்பர்கள் படித்தார்கள்.
எனக்கு மட்டும் அந்தக் கல்லூரியில் ஏனோ ஒரு பிடிப்பும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மத்தியை ரெம்பப் பிடிக்கும். வேற எதுக்கு பக்கத்தில.. நல்ல மைதானமும்.. நல்ல பாடசாலை ஒன்றும் உள்ளதால்.

 

மத்தியின் நண்பர்கள் பலர் தற்பெருமை அற்ற இயல்பானவர்கள். அது உண்மையில் வரவேற்கக் கூடியது.

 

மத்தியும்  பல திறமைசாலிகளை உருவாக்கியுள்ளது. எங்களுக்கு கிரிக்கெட் போதித்த ஒர் அண்ணா.. மத்தியின் மைத்தன். அங்கேயே படித்து 3ஏ பி எடுத்தவர். கிரிக்கெட்டிலும்.. பாடசாலை அணிக்காக விளையாடிய ஒருவர். :):icon_idea:

 

பகிர்விற்கு நன்றி.. ஜீவன் சிவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியின் சிறந்த ஆசிரியர்கள் பலர் பல்வேறு பாடசாலை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.

 

1. பிரவுன் வீதி சிவகுமார் - கணிதம்.

 

2. கப்டன் நாகரத்தினம் - இரசாயனவியல்.

 

3. குசும்பு பாலா - விஞ்ஞானம்

 

4. சிவப்பிரகாசம் - சித்திரம் (யாழ் மணிக்கூட்டு கோபுரத்தை அண்டி அண்மையில் தமிழ் மன்னர்களின் சிலைகளை வடிவமைத்த ஆசிரியர். யாழ் நல்லூர் ஆறுமுக நாவலர் சிலை உட்பட பல சிலைகள் இவரால் வடிவமைக்கப்பட்டவை.)

 

5. போல்  - சங்கீத ஆசிரியர் - இலங்கை சிறந்த சங்கீத ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர்.

 

இன்று இவர்களை விட இன்னும் பலர் உருவாகி இருக்க முடியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியின் சிறந்த ஆசிரியர்கள் பலர் பல்வேறு பாடசாலை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்.

 

1. பிரவுன் வீதி சிவகுமார் - கணிதம்.

 

2. கப்டன் நாகரத்தினம் - இரசாயனவியல்.

 

3. குசும்பு பாலா - விஞ்ஞானம்

 

4. சிவப்பிரகாசம் - சித்திரம் (யாழ் மணிக்கூட்டு கோபுரத்தை அண்டி அண்மையில் தமிழ் மன்னர்களின் சிலைகளை வடிவமைத்த ஆசிரியர். யாழ் நல்லூர் ஆறுமுக நாவலர் சிலை உட்பட பல சிலைகள் இவரால் வடிவமைக்கப்பட்டவை.)

 

5. போல்  - சங்கீத ஆசிரியர் - இலங்கை சிறந்த சங்கீத ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர்.

 

இன்று இவர்களை விட இன்னும் பலர் உருவாகி இருக்க முடியும். :)

 

கப்ரன் அல்ல, 2 ஆம் லெப்டினன்ட் என்பார் (சிறி லங்கா ஆமி கடேற் பிரிவு இருந்து அணிநடை மட்டும் செய்த காலத்தில் இருந்தாராம்!) ஆனால் இவர் பள்ளிக் கூடத்தில் எங்களுக்குப் படிப்பித்த நாட்களை இலகுவாக ஒரு கை விரல்களில் எண்ணி விடலாம்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் அவர் லெப்டினட் நாகரட்னம் என்று தான் அவரின் இரசாயனவியல் பயிற்சி நூல்களில் போடுறவர் என்று நினைக்கிறோம். யாழ் இந்துவின் சோமர் தான் கப்டன் என்று சொல்லிக் கொள்ளுறவர்.

 

நாகர் பள்ளியில் படிப்பிப்பது குறைவு. ஆனால் அவரின் தனியார் கல்வி நிலையத்தில் கற்ற பலர் நல்ல பெறுபேறுகளை பெற்றுள்ளனர். :):icon_idea:

Link to comment
Share on other sites

உந்த ஸ்கூலுக்குப் போற பையன்கள் படிக்கவா போறாங்க வேம்படிப் பெண்ணுகளைப் பார்க்கவல்லா போறாங்க. காவாலிப் பையன்கள்! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

யாழ் இந்துவில் படித்தாலும் என்ன மத்திய கல்லூரியின் வாலென்று நக்கல் அடிப்பார்கள் .அண்ணர் மத்திய கல்லூரி மூன்று அக்காமார் வேம்படி .ஊரில் தமிழ் பாடசாலையில் படிக்கும் போதே (முன்றாம் நாலாம் வகுப்பு ) கிரிக்கெட் பார்க்கவென்று அண்ணையுடன் மத்திய கல்லூரிக்கு போக தொடங்கிவிட்டேன் .Big Match என்றால் அக்காமாரும் வருவார்கள் .இடைவேளையில் city bakery யில் பருப்பும் பாணும் சாப்பிட்ட சுவை இன்னமும் நாக்கில் இருக்கு .

பிறகு அண்ணர் மூன்றாம் அணியில் உதைபந்து விளையாட தொடங்கிவிட்டார் .வரலாறு காணாத மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி அது .அதே அணி 3rd team ,2nd team ,1st team அனைத்தும் இறுதி சம்பியன் ஆட்டத்திற்கு வந்தது ஆனால் இறுதி ஆட்டத்தில் வெல்லவில்லை .அண்ணருடன் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்றாக விளையாடியவர்கள் சில்வெஸ்டர் ,வால்டேர்ஸ்,தம்பா மகேஸ்வரன் ,சுபாஸ் மனோ ,தேவராஜா ,

 

1st team துரையப்பா மைதானத்தில் திருத்த வேலை நடந்ததால் பரமேச்வராவில் அனைத்து ஆட்டங்களும் நடந்தது .அந்த வருட மிக நல்ல அணிகளான மானிப்பாய் இந்துவையும் யாழ் இந்துவையும் வென்று இறுதி ஆட்டத்தில் தெல்லிப்பளை மகாஜனாவுடன் மத்திய கல்லூரி விளையாடியது ."பட்டிக்காடா பட்டணமா " என்று நோட்டிஸ் வேறு அடித்துவிட்டார்கள் .

மகாஜனா வஞ்சகமில்லால் ஆறு கோல்கள் அடித்தது .அண்டைக்கு உண்மையில் உருப்படியாக விளையாடியது அண்ணர் மட்டும் தான் .

 

Link to comment
Share on other sites

"பட்டிக்காடா பட்டணமா " என்று நோட்டிஸ் வேறு அடித்துவிட்டார்கள் .

மகாஜனா வஞ்சகமில்லால் ஆறு கோல்கள் அடித்தது .அண்டைக்கு உண்மையில் உருப்படியாக விளையாடியது அண்ணர் மட்டும் தான் .

 

மலரும் நினைவுகள்
 
பழையமாணவர்கள் மாட்டுவண்டியில் சகல வாத்தியங்களுடன் வந்திறங்கி அட்டகாசம் பண்ணினார்கள். ஆனாலும் முடிவு சோகக்கதைதான். மஹாஜனாவிற்காக எனது நெருங்கிய உறவினர்கள் இருவர் விளையாடியிருந்தார்கள். அவர்களின் கேலியால் கூணிக்குறுகியது இப்பவும் ஞாபகத்தில் உள்ளது. இதில் ஆச்சரியமானது உயர்தரக் கல்வியை நான் மஹாஜனாவில்தான் கற்றேன். ஆரம்பநாட்களில் பட்டிக்காடா பட்டணமா என்ற நக்கல்கள் வேறு...
 
ஊக்கமளித்த, ஊக்கமளிக்கும் நண்பர்களிற்கு நண்றிகள்.
Link to comment
Share on other sites

அண்ணருடன் வெவ்வேறு காலகட்டத்தில் ஒன்றாக விளையாடியவர்கள் சில்வெஸ்டர் ,வால்டேர்ஸ்,தம்பா மகேஸ்வரன் ,சுபாஸ் மனோ ,தேவராஜா ,

 

 

 

இவர்களில் சிலர் அண்ணருடன் படித்தவர்கள். தேவராஜா அண்ணரின் வகுப்பு. இவர்களுடன் கிரிக்கெட் வீரர்களான சிவகுமார், தியாகராஜா, ஸ்ரீகாந்தா போன்றோரும் ஒரே வகுப்புத்தான்.

Link to comment
Share on other sites

உந்த ஸ்கூலுக்குப் போற பையன்கள் படிக்கவா போறாங்க வேம்படிப் பெண்ணுகளைப் பார்க்கவல்லா போறாங்க. காவாலிப் பையன்கள்! :icon_mrgreen:

 

சரி உங்கள் பிரச்சினை என்ன? :icon_mrgreen:  சென்றல் பெடியள் காவாலி தான் :lol:  வேம்படி பெண்களை பார்ப்பதில் என்ன தப்பு? :icon_idea:

அவர்களும் விரும்பினால் பார்த்துவிட்டு போகட்டுமே :D:lol:

 

நீங்கள் என்ன கலவன் பாடசாலையா? :icon_mrgreen:  உங்கள் கதையையும் எழுதுங்கோ நாங்கள் கேட்க தயார்

 

Link to comment
Share on other sites

http://sinnakuddy1.blogspot.co.uk/2014/04/70_9.html

 

70 களின் யாழ் மத்திய கல்லூரி சூழலை விவரிக்கும் புகைபடங்களை தொகுத்து இந்த வீடியோ தொகுக்க பட்டிருக்கிறது. அக்கால இளைஞர்களின் தலை அலங்காரம் ,பெல்பொட்டம் உடை அணியும் முறை மற்றும் பலவற்றை ஞாபகபடுத்த வைக்கிறது. மணிக்கூட்டு கோபுரம் ,சுப்பிரமணியபூங்கா, யாழ் மத்திய கல்லூரி ஆரம்ப பாடாசாலை மற்று ஹாஸ்டல் முன் இளைஞர்கள் கூடுவது எல்லாம் 70களை கண் முன் நிற்க வைக்கிறது....சில புகைபடங்களை கஸ்டபட்டு உற்று நோக்கினால் சில பழைய கிரிக்கட் வீரர்கள் உதைபந்தாட்ட வீர்ர்களை சாடையாக ஞாபக படுத்த முடிகிறது ...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படியும், சுண்டுக்குளியும் சென்ட்ரலின் இரு கண்கள் அல்லவா...!

 

நாங்களும் சைக்கிளில் அங்கு வீதியுலா வந்திட்டுத்தான் இங்கு பாடசாலை போறது.

 

சென்ட்ரலில் நடைபெறும் கண்காட்சிகள், கலை விழாக்கள், மற்றும் தென்பகுதிப் பாடசாலைகளில் இருந்து வரும் நல்லெண்ணக் குழு விஜயங்கள் . போன்றவற்றிலும் நாங்கள் பாடசாலை யூடாகப் பங்கு பற்றுவதுண்டு...!! :D :D

 

பகிர்வுக்கு நன்றி ஜீவன் சிவா...!!!

Link to comment
Share on other sites

இவர்களில் சிலர் அண்ணருடன் படித்தவர்கள். தேவராஜா அண்ணரின் வகுப்பு. இவர்களுடன் கிரிக்கெட் வீரர்களான சிவகுமார், தியாகராஜா, ஸ்ரீகாந்தா போன்றோரும் ஒரே வகுப்புத்தான்.

இவர்கள் எல்லோரையும் எனக்கு தெரியும் .தேவராஜா கனடாவில் தான் உள்ளார் .கனடாவில் தமிழ் இளைஞர்களுக்கு ஒழுங்காக Track & field பயிற்சி கொடுப்பது என்றால் இவர்தான் .சிவகுமாரும் சிறிகாந்தவும் லண்டனில் .தியாகராஜா போதகர் ஆகியதாக அறிந்தேன் .தியகராஜாவை நல்ல பழக்கம் இவரது அப்பாவும் எனது அப்பாவும் ஒரே பாடசாலை ஆசிரியர்கள் . 

இரண்டு வருடங்களுக்கு முதல் யாழில் நான் எழுதிய கதை ஒன்றில் சிறிகாந்தா வருகின்றார் . :o

Link to comment
Share on other sites

மதராசி இணைத்த வீடியோவில் பல தெரிந்த முகங்கள் .

 

நாடா ஜெயதேவன் ,ரமீஸ் -கனடா

முத்துக்குமார் -பிரான்ஸ்.

உருத்திரகுமார் -அமேரிக்கா (நாடு கடந்த அரசு )

மித்திரன் ,ரஞ்சிற்-காலாமகிவிட்டார்கள் .

சூப்பர் வீடியோ ஒருக்கா மத்திய கல்லூரி சூழலை சுற்றிவந்தது போலிருக்கு .


இரு வருடங்ககுக்கு முன் கனடாவில் யாழ் மத்திய கல்லூரி பெரியதொரு ஒன்றுகூடல் வைத்தார்கள் .

வெளிநாட்டில் இருந்து வந்த ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களின் கிரிக்கெட் டீம் இது .

 

533787_10151461646353674_1957096045_n.jp

Link to comment
Share on other sites

மதராசி இணைத்த வீடியோவில் பல தெரிந்த முகங்கள் .

 

நாடா ஜெயதேவன் ,ரமீஸ் -கனடா

முத்துக்குமார் -பிரான்ஸ்.

உருத்திரகுமார் -அமேரிக்கா (நாடு கடந்த அரசு )

மித்திரன் ,ரஞ்சிற்-காலாமகிவிட்டார்கள் .

சூப்பர் வீடியோ ஒருக்கா மத்திய கல்லூரி சூழலை சுற்றிவந்தது போலிருக்கு .

 

உருத்திரகுமார், நகுலேஸ்வரன் எனது இன்னொரு அண்ணரின் வகுப்பு.
 
அது சரி 9 வருடங்கள் படித்த எனக்கு தெரியாத முகங்கள் உங்கள்  ஞாபகத்தில் எப்படி. நீங்கள்தான் மத்திய கல்லூரியில் படிக்கவேயில்லையே.
 
இணைப்புக்கு நன்றி மதராசி.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.