Jump to content

இன்று திருநீற்றுப் புதன் (ASH Wednesday)


Recommended Posts

இன்று திருநீற்றுப் புதன் (ASH Wednesday)
February 18, 2015
 

Ash-wednesday.jpg

 

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று பெப்ரவரி 18 திருநீற்றுப் புதன் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் ஆரம்ப நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த திருநீற்றுப் புதன் வி பூதிப் புதன், சாம்பல் புதன் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
இன்றைய நாளில் ஒரு சந்தியும் சுத்தபோசனமும் (மாமிச தவிர்ப்பு) அனுஷ்டிக்க கத்தோலிக்க திருச்சபை கட்டளையிட்டுள்ளது. சிறியவர்களும் நோயாளர்களும் முதியவர்களும் இந்தக் கட்டளையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.இப்புதனன்று முதல் நாம் தவக்காலத்தில் நுழைகிறோம். இதனைத் தொடர்ந்து வரும் 40 நாட்களும் நமது செப, தவ , ஒறுத்தல் முயற்சிகளுக்காக நமக்கு கொடுக்கப்பட்ட காலமாக இந்த 40 நாட்களும் கருதப்படுகின்றது.

தவக்காலம் வசந்தத்தைக் கொண்டு வருவதற்கு முன்னதான காலமாக கருதப்படுகி;ன்றது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு வழங்கியுள்ள தவக்காலச் செய்தியின் ஆரம்ப வார்த்தைகள் இந்த எண்ணத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
“திருஅவை முழுவதும் மறுமலர்ச்சி பெறும் காலம், தவக்காலம். தனி மனிதரும், குழுமங்களும் மறுமலர்ச்சி பெறும் காலம் இது. அனைத்திற்கும் மேலாக, ‘இதுவே அருள்நிறை காலம்’ (2 கொரி. 6:2)” என்று பரிசுத்த பாப்பரசர் தன் தவக்காலச் செய்தியை ஆரம்பித்துள்ளார்.
தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent season என்று அழைக்கிறோம். Lenten (அல்லது, Lencten) என்ற வார்த்தை ஒரு Anglo Saxon வார்த்தை. அதன் பொருள் வசந்தம். வசந்த காலம், தவக்காலம் இரண்டையும் இணைப்பதே ஓர் அழகான எண்ணம். புதுமையான எண்ணம்.

வசந்த காலத்தை அனுபவிப்பதற்கு முன்னதாக நம்மில் பல மாற்றங்கள் நடைபெறவேண்டும். அதற்கான அர்ப்பண வாழ்வில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அது நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அந்த நாட்கள் நமக்காகவே கொடுக்கப்பட்டுள்ளன.

தவக்காலத்தில் நாம் கைக்கொள்ளும் நடைமுறை வாழ்க்கை முயற்சிகள் ஆன்மீக வழி நின்று நம்மை புதிய மனிதர்களாக மாற்றிக் கொள்வதற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.
இந்த மனமாற்றங்களை நாம் எவ்வாறு ஏற்படுத்தப் போகின்றோம்?
நமது ஆசாபாசங்களை ஒறுத்து நம்மாலான தானதருமங்கள், உதவிகளை நம்மைச் சார்ந்தவர்களுக்கு செய்யலாம்.

சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் Phoenix பறவையைப்பற்றி கேள்விபட்டிருக்கிறோம். இல்லையா? அந்தப் பறவையைத் தவக்காலத்தின் ஒரு அடையாளமாக நாம் சிந்திக்கலாம்.

திருநீற்றுப் புதனன்று நமது நெற்றியில் குருவானவரால் அடையாளப்படுத்தப்படும் சிலுவை அடையாளத்தின் போது குருவானவர் நமக்கு சொல்லும் வார்த்தைகளான
மனிதா நீ மண்ணாயிருக்கிறாய். மண்ணுக்கே திரும்புவாய் என்ற அழைப்பு இவ்வுலக வாழ்வு நமக்கு நிலையற்றது என்பதை நினைவுறுத்துகின்றது.

ஆகவே இந்த உலகவாழ்வில் நாம் செய்யும் பணிகள் நம்மை இறைவன்பால் அழைத்துச் செல்ல உதவுகின்றன.

இயேசு சிலுவையில் கூறியதாய் சொல்லப்படும் ஏழு வாக்கியங்கள்ளை நம் தவக்காலத்தின் பாடங்களாக எடுத்துக்கொள்வோம்.

தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை.” (லூக்கா 23:34)

தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்கு, அடிப்படையாக நமக்குத் தேவையானது, மன்னிப்பு.

இந்தத் தவக்காலத்தை நாம் சரியான வழியில் பயன்படுத்தி நம்மில் மாற்றங்களை உருவாக்கி இறைவனுக்கேற்ற மனிதர்களாக நாம் வாழும் வகையில் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோம்.

நமது பரிசுத்த பாப்பரசர் நமக்காய் இந்த ஆண்டு தவக்காலத்திற்கான சிந்தனையாய் வழங்கிய மடல் இங்கு தரப்படுகின்றது.

இந்த ஆண்டிற்கான பரிசுத்த பாப்பரசரின் தவக்காலமடல்

அன்புநிறை சகோதர சகோதரிகளே!

திருச்சபை முழுமையையும், ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு விசுவாசியையும் புதுப்பிக்கும் காலமே இத்தவக்காலம் ஆகும். எல்லாவற்றிகும் மேலாக இது ‘அருளின் காலம்’ ஆகும் (2 கொரி 6:2). ஏற்கனவே நம்மிடம் கொடுக்காத எதனையும் நம்மிடமிருந்து இறைவன்; ஒருபோதும் கேட்பதில்லை. ~அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்| (1யோவா 4:19). நம்மிடமிருந்து அவர் விலகியிருப்பதில்லை. அவர்தம் உள்ளத்தில் நம் ஒவ்வொருவருக்கும் இடமுண்டு. அவர் நம் பெயரை அறிந்திருக்கிறார்@ நம்மைப் பாதுகாக்கிறார்@ அவரை விட்டு நாம் விலகுகிறபோதெல்லாம் அவர் நம்மைத் தேடுகிறார்@ அவர் நம்மில் அக்கறைக் கொள்கிறார்@ நமக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றி கவலையில்லாமல் இருப்பதற்கு அவர்தம் அன்பு ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நாம் ஆரோக்கியமாகவும் சௌகரியமாகவும் இருக்கிறபோது, இயல்பாகவே, நாம் மற்றவரை மறந்துவிடுகிறோம் (இதனை தந்தையாம் இறைவன் ஒருபோதும் செய்வதில்லை): நமக்கு மற்றவர்களுக்கு நேருகிற பிரச்சனைகளையும், அவர்கள் தம் துயரங்களையும், அவர்கள் எதிர்கொள்கிற அநீதிகளையும் …குறித்து அக்கறையற்றவர்களாக இருக்கிறோம். நம் உள்ளம் அந்த அளவுக்கு இயல்பாக இறுகிவிடுகிறது. நான் உடல் நலத்தோடும், சௌகரியமாகவும் இருக்கிறபோது நான் நலமின்றி இருக்கிறவர்களைப் பற்றிக் கிஞ்சித்தும் நினைப்பதில்லை. இந்த அக்கறையற்ற மெத்தனப்போக்கு இன்று உலகளாவிய அளவில் நீக்கமற நிறைந்திருக்கிறது@ அதாவது எந்தளவுக்கெனில் உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் தற்போது குறிப்பிட்டு பேசுகிற அளவுக்கு வளர்ந்துள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாம், இந்தப் பிரச்சனையை, துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும்.
இறைமக்கள் ஒவ்வொருவரும் இறைவனின் பேரன்பிற்கு ஆட்படுகிறபோது, இந்த வரலாறு தொடர்ந்து எழுப்பிக்கொண்டிருக்கிற எல்லா கேள்விகளுக்குரிய பதில்களையும் கண்டடையமுடியும். நான் இந்தத் தவக்காலச் செய்தியில் குறிப்பாக, உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மையைப் பற்றிதான் நான் பேச விழைகிறேன். இதுவே நம்முன் உள்ள உடனடி சவாலாகும்.

நமது அயலார்மீதும் இறைவன்மீதும் நாம் கொண்டிருக்கிற இந்த அக்கறையின்மைதான் கிறிஸ்தவர்களாகிய நமக்கு உண்மையானச் சோதனையாக இவ்வமயம் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தவக்காலத்தின்போது, நம் மனசாட்சியை தட்டி எழுப்புகிற இறைவாக்கினர்களுடைய கூக்குரலை நாம் மீண்டும் ஒருமுறை கேட்கவேண்டியுள்ளது.
இறைவன் நம் உலகத்தின்மீது ஒருபோதும் அக்கறையின்றியிருப்பதில்லை. அவர் நம்முடைய மீட்புக்காக தம் ஒரே மகனை அளிக்கும் அளவுக்கு நம்மீது அன்பு செலுத்துகிறார். மனுவுருவானபோதும், மனுமகனின் இம்மண்ணுலக வாழ்வு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலிலும், இறைவனுக்கும் மனிதருக்கும் இடையிலான, விண்ணிற்கும் மண்ணிற்குமான வாயில் எக்காலத்திற்குமென திறக்கப்பட்டுள்ளது. திருச்சபை என்பது இவ்வாயிலைத் திறந்திட உதவும் கரம் போல விளங்குகிறது. அவள்தம் இறைவார்த்தை அறிவிப்பிற்கும், அவள்தம் திருவருட்சாதனங்களின் கொண்டாட்டத்திற்கும் அன்பின் வழியாய் செயலாற்றும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி (காண்க: கலா 5:6). ஆனால் இவ்வுலகமோ தமக்குத்தாமே விலகிச் செல்லவும், இறைவன் இவ்வுலகிற்கு வந்திடவும், உலகம் அவரிடம் வந்திடவும் பேருதவியாக இருக்கும் இவ்வாயிற்கதவை இழுத்துமூடிட எத்தனிக்கிறது. ஆகையால் இந்த வாயிற்கதவின்மீது உள்ள திருச்சபையின் கரம், கைவிடப்பட்டாலோ, நசுக்கப்பட்டாலோ, ஏன் காயப்படுத்தப்பட்டாலோ ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏனெனில் நாம் அக்கறையில்லாதவர்களாகவும் நமக்குள்ளே விலகிக் கொள்ளா திருக்கும்படியும் இறைமக்களாகிய நமக்கு ஒர் உள்ளார்ந்தப் புதுப்பித்தல் அவசியம் தேவைப்படுகிறது. இந்தப் புதுப்பித்தலை இன்னும் ஆழமாக்க, நமது சிந்தனைக்கு மூன்று விவிலியப் பகுதிகளை வழங்க விழைகிறேன்.

1. ஓர்; உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும் (1 கொரி 12:26) – திருச்சபை
அக்கறையின்மை (iனெகைகநசநnஉந) என்று நமக்குள்ளாக விலகிக்கொள்ளுதலை இறைவனின் பேரன்பு சுக்குநூறாக தகர்த்தெறிகிறது. இந்த இறைவனின் அன்பை தமது போதனையின் வழியாகவும் சிறப்பாக திருச்சபைத்தம் சாட்சியத்தின் மூலமாகவும் வழங்குகிறது. நாம் நமக்கு நாமே எதனை அனுபவித்தமோ அதற்குத்தான் நம்மால் சான்று பகரமுடியும். நன்மை மற்றும் கருணை ஆகியவற்றை யார் தங்களுக்கு அணிவிக்க இறைவனை அனுமதிக்கிறார்களோ அவர்கள்தான் கிறிஸ்தவர்கள். அவர்கள் கிறிஸ்துவுடன், இன்னொரு கிறிஸ்துவாக மாறும் பொருட்டு, இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் தொண்டர்களாகிறார்கள். இதனை பெரிய வியாழன் அன்று நடைபெறும் பாதம் கழுவும் சடங்கின்போது ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவுவதன் வழியாக தெளிவாகக் காண்கிறோம். பேதுரு, இயேசு தம் பாதங்களைக் கழுவ விரும்பவில்லை@ ஆனால் நாம் ஒருவர் மற்றவருடைய பாதங்களைக் கழுவிட வெறுமனே ஒர் முன்னுதாரணமாக மட்டும் இயேசு இருக்க விரும்பவில்லை என்பதை பேதுரு பின்னர் உணர்ந்தார். தாமே முன்வந்து இயேசு தங்களின் பாதங்களைக் கழுவ முதன்முதலில் அனுமதித்தவர்களால் மட்டுமே, இந்தத் தொண்டினை மற்றவர்களுக்கு வழங்க இயலும். அவரோடு ~பங்கு| (யோவா 13:8) கொள்பவர்களால் மட்டுமே மற்றவர்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்ற முடியும்.
தவக்காலம் என்பது கிறிஸ்து நமக்குத் தொண்டாற்ற அனுமதிக்கிற உகந்த காலம்@ அதன் மூலம் நாமும் அவரைப் போன்று மாறிட இயலும். நாம் இறைவார்த்தையைக் கேட்கிறபோதும் திருவருட்சாதனங்களைப் பெறும்போதும், குறிப்பாக நற்கருணையைப் பெறும்போதும் இது சாத்தியாமாகும். நாம் எதனைப் பெறுகிறோமோ அதுவாகவே மாறுகிறோம்@ கிறிஸ்துவின் உடலாகிறோம். நம் உள்ளத்தை இயல்பாக ஆக்கிரமிக்கும் அக்கறையின்மைக்கு இந்த உடலில் ஒருபோதும் இடமில்லை. கிறிஸ்துவுடன் யார் இருக்கிறார்களோ, அவர்கள் ஒரே உடலைச்சார்ந்தவர்கள்@ அவரில் நாம் ஒருவர் மற்றவரிடம் அக்கறையின்றி ஒருபோதும் இருக்க இயலாது. ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ~ஓர் உறுப்பு பெருமைப் பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் | (1 கொரி 12:26).
திருச்சபை என்பது புனிதர்களின் சமூகஒன்றிப்பு ஆகும்@ இது அவள் தம் புனிதர்களால் மட்டுமின்றி, புனிதப் பொருட்களோடு அவள் கொண்டுள்ள ஒன்றிப்பின் வழியாகவும் வருகிறது.ஏனெனில் இறைவனின் அன்பு கிறிஸ்துவுக்குள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, அவர்தம் கொடைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் அருட்கொடைகளில் இந்த அன்பினால் ஆட்கொள்ளப்பட அனுமதிக்கப்பட்டவர்களுடைய பதிலும் அடங்கியுள்ளது. இந்த புனிதர்களுடனான சமூக உறவில், புனிதப் பொருட்களின் பங்கினில் யாரும் தனக்கென்று எதனையும் கொள்வதில்லை@ ஆனால் மற்றவர்களோடு அனைத்தையும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். நாம் இறைவனோடு ஒன்றித்திருக்கிறோம்@ ஆகையால், வெகு தொலைவில் உள்ளவர்களுக்கும், நம்மால் ஒருபோதும் அடைய முடியாதவர்களுக்கும் நம்மால் ஏதாவது செய்ய இயலும். ஏனெனில், அவர்களோடும், அவர்களுக்காகவும் நாம் அவர்தம் மீட்புத்திட்டத்தில் செவிசாய்க்க நாம் இறைவனிடம் மன்றாட முடியும்.
2. எங்கே உன் சகோதரன்? (தொநூ 4:9) – பங்குகளும் சமூகங்களும்
அகில உலகத் திருச்சபையைப் பற்றி நாம் சொல்வதனைத்தும் நம்முடைய பங்குகளுக்கும் பங்குச் சார் இறைச் சமூகத்திற்கும் இப்பொழுது செயல்படுத்தப்பட வேண்டும். திருச்சபைச்சார்ந்த இந்தக் கட்டமைப்புமுறை நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்பு என்பதை அனுபவிக்க உதவுகிறதா? இறைவன் எதை நமக்குத் தர விரும்புகிறாரோ அதனை இந்த உடல் பெறுகிறதா? பகிர்கிறதா? பலவீனமானவர்களையும், ஏழைகளையும் மிகவும் ஒடுக்கப்பட்ட அங்கீகாரமற்றவர்களையும் இந்த உடல் அங்கீகரிக்கிறதா? பாதுகாக்கிறதா? நம் மூடப்பட்ட கதவருகே பசியோடு காத்திருக்கிற ஏழை இலாசரைக் கண்டுக்கொள்ளாமல், அகில உலகையும் ஆரத்தழுவுகிற உலகளாவிய அன்பில் நாம் அடைக்கலம் புகுகிறோமோ?
கடவுள் நமக்கு எதை தருகிறாரோ அதனைப் பெறும்பொருட்டும், அது மிகுதியாக கனிதரும்பொருட்டும், நாம் காணும் திருச்சபையின் எல்லைகளை இருவழிகளில் கடந்து செல்ல வேண்டும்.

முதலாவதாக, விண்ணுலகத் திருச்சபையோடு நாம் அனைவரும் செபத்தில் ஒன்றிக்க வேண்டும். இவ்வுலகத் திருச்சபையின் செபங்கள் பரஸ்பர சேவையிலும் நற்குணத்திலும் ஓர் ஒன்றிப்பை ஏற்படுத்தி, அது இறைவனின் அருட்பார்வையைச் சென்றடைகிறது. இறைவனில் முழுநிறைவை கண்டடைந்த புனிதர்களோடு நாமும் ஒன்றிணைந்து, நாமும் அந்த சமூக ஒன்றிப்பின் ஒர்; அங்கமாகி, நமது அக்கறையின்மையை நம் அன்பால் வெற்றிக்கொள்ள வேண்டும். இவ்வுலகத் துன்பத்திலிருந்து தப்பி, உயரிய தனிமையில் அக்களிக்கிற காரணத்தினால், விண்ணுலகத் திருச்சபை என்பது வெற்றித் திருச்சபையன்று@ மாறாக, இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக, அவர்கள் அக்கறையின்மையையும், கடின உள்ளத்தையும், பகைமையையும் முன்பு வென்றெடுத்தததைத் தற்சமயம் அவர்கள் தங்கள் கண்முன் மகிழ்ச்சியாகக் காட்சித்தியானம் செய்கிறார்கள். இந்த அன்பின் வெற்றி இந்த உலகம் முழுவதையும் ஊடுருவுகிற வரை, புனிதர்கள் இத்திருப்பயணத்தில் நம்மோடு இணைந்து தோழமையோடு உடன் நடக்கிறார்கள். இவ்வுலகில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் துன்புற்று, அதன் வலியால் கதறுகிறவரை சிலுவையில் அறையப்பட்ட அன்பின் வெற்றி, இன்னும் முழுமையடையாமல் அப்படியே இருக்கிறது என்று மறைவல்லுநரான புனித குழந்தைத் தெரசாள் உறுதிப்பட கூறுகிறார். ~நான் விண்ணுலகில் ஒருபோதும் நான் சேம்பேறியாய் இருக்கமாட்டேன் என்று நான் உறுதி கூறுகிறேன். திருச்சபைக்காகவும் ஆன்மாக்களுக்காகவும் நான் தொடர்ந்த உழைக்கவேண்டும் என்பது என் விருப்பம்| என்று கூறுகிறார் (காண்க: மடல் 254, ஜூலை 14,1897)
நாம் புனிதர்களின் மகிழ்ச்சியிலும் அவர்கள் தம் நற்குணங்களிலும் நாம் பங்கெடுக்கிறோம்: அவர்களோ, சமாதானம் மற்றும் ஒப்புரவுக்கான நமது போராட்டங்களிலும் ஏக்கத்திலும் வாஞ்சையோடு பங்கெடுக்கிறார்கள். உயிர்த்த கிறிஸ்துவின் வெற்றியிலுள்ள அவர்களின் மகிழ்ச்சி நம்முடைய அக்கறையின்மையையும் உள்ளக்கடினத்தையும் வெற்றிக்கொள்ள நமக்கு வலிமையைத் தருகிறது.
இரண்டாவதாக, ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் தன்னிலிருந்து வெளியே சென்று, அது ஓர் அங்கமாக விளங்கும் மிகப்பெரிய சமூகத்தின் வாழ்வில் குறிப்பாக ஏழைகளோடும் புறக்கணிக்கப்பட்டவர்களோடும் பங்கெடுக்கவேண்டும். திருச்சபை என்பது இயல்பாகவே மறைப்பரப்பாளராக விளங்குகிறது. அவள் தனக்குத்தானே ஒருபோதும் வேலி அமைத்துக்கொள்வதில்லை: மாறாக, உலகின் கடையெல்லைவரைக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் அனுப்பப்பட்டவளாவாள்.
இப்படைப்பனைத்தையும் ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் தந்தையிடம் இட்டுச்செல்ல விரும்புவருக்கு எப்போதும் சான்றுபகர்வதே அவள்தம் பணியாகும். அனைவருக்கும் அன்பைக் கொண்டுச் சேர்ப்பதே அவள்தம் பணியாகும்@ அந்த அன்பு ஒருபோதும் மௌனித்திருப்பதில்லை. ஒவ்வொரு ஆணிடமும் பெண்ணிடமும், உலகின் கடையெல்லை வரைக்கும் (திருத்தூதர்பணி 1:8) இட்டுச் செல்லும் பாதையில் கிறிஸ்துவை திருச்சபைப் பின்தொடர்கிறது. நம் அயலார் ஒவ்வொருவரிலும், கிறிஸ்து யாருக்காக இறந்து மீண்டும் உயிர்த்தரோ, அந்த சகோதரனையும் சகோதரியையும் நாம் காணவேண்டும். நாம் எதனைப் நமக்காகப் பெற்றுக்கொண்டோமோ அதனை நாம் அவர்களுக்காகவும் பெற்றுக்கொண்டோம். அவ்வண்ணமே, நம்முடைய சகோதர சகோதரிகள் உடமையாக்கியிருக்கிற அனைத்தும் திருச்சபைக்கும் ஒட்டுமொத்த மானுடத்திற்குமான கொடையாகும்.
அன்பான சகோதர சகோதரிகளே! திருச்சபை எங்கெங்கெல்லாம் நிறைந்துள்ளதோ, அவ்விடங்களிலெல்லாம், குறிப்பாக நம்முடைய பங்குகளிலும் நம்முடைய பங்குச்சார் சமூகங்களிலும் திருச்சபையானது, அக்கறையின்மை என்னும் கடலின் நடுவில் அமைந்துள்ள கருணையின் தீவுகளாக துலங்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
3. உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள் (யாக் 5:8)- கிறிஸ்தவர் ஒவ்வொருவரும்
ஒவ்வொருவரும் தனிநபர் என்ற வகையிலும்கூட, அக்கறையின்மையால் நாம் சோதிக்கப்படுகிறோம். மானுடத் துயரம் சம்பந்தப்பட்ட செய்திகளும், மனதைப் பாதிக்கும் புகைப்படங்களும், நமது ஆற்றாமையை நமக்கு அடிக்கடி உணர்த்துகிறது. இந்த அவலநிலையையும் ஆற்றாமையும் தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
முதலாவதாக, இவ்வுலகத் திருச்சபையோடும் விண்ணுலகத் திருச்சபையோடும் ஒன்றித்து நாம் செபிக்க வேண்டும். செபத்தில் இணையும் எண்ணிறந்த குரலை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதிருப்போமாக! ஆண்டவருக்காக 24 மணி நேரம் என்னும் இந்த முன்னெடுப்பு, அகில உலகத் திருச்சபை முழுவதும், மறைமாவட்ட அளவில், மார்ச் மாதம் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கடைப்பிடிக்கப்படும் என்று நம்புகிறேன்@ இது செபத் தேவைக்கான ஒர்; அடையாளமாக இது விளங்குகிறது.
இரண்டாவதாக, நம் அருகிலும், தொலைவில் உள்ளவர்களை, திருச்சபையின் எண்ணிறந்த தொண்டு நிறுவனங்கள் மூலமாக நமது கருணைமிக்கச் செயல்களால் நாம் உதவ முடியும். ஒரே மானுடக் குடும்பத்துடனான நமது சார்புத்தன்மையின் சின்னஞ்சிறிய ஆனால் மெய்யான இந்த அடையாளங்கள் வழியாக, நாம் அடுத்தவர்மீது கொண்டிருக்கிற அக்கறையை அன்பை வெளிப்படுத்த மிகவும் உகந்த காலம் இத்தவக்காலம் ஆகும்.
மூன்றாவதாக, மற்றவருடைய துயரம் என்பது மனமாற்றத்திற்கான ஒர் அழைப்பு@ ஏனெனில் அவர்களுடைய தேவை எனது வாழ்வின் நிலையாமையையும், இறைவனையும், எனது சகோதர சகோதரிகளையும் நான் சார்ந்துள்ளதையும் எனக்கு நினைவுப்படுத்துகிறது. நாம் இறையருளை மனத்தாழ்மையோடு இறைஞ்சி, நமது சொந்தக் குறைகளை ஏற்றுக்கொண்டால், இறைவனின் பேரன்பு நமக்கு உறுதியளிக்கிற முடிவில்லாத சாத்தியங்களில் நாம் நம்பிக்கைக் கொள்வோம். நமது சொந்த முயற்சியின் மூலமாகவே இவ்வுலகையும் நம்மை நாமேயும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று சிந்திக்கும் கொடிய சோதனைகளை நாம் எதிர்த்து நிற்க நம்மால் இயலும்.
இந்த அக்கறையின்மையையும் தன்னிறைவுக்கான நமது வெளிவேடங்களையும் வெற்றிக்கொள்ளுகிற வகையில், இந்தத் தவக்காலத்தை, பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் குறிப்பிடுகிற உள்ளத் தயாரிப்பில் (காண்க:னுநரள ஊயசவையள நளவஇ 31) முனைப்போடு ஈடுபட ஒரு வாய்ப்பாக இந்தத் தவக்காலத்தை வாழ்ந்துக் காட்ட நான் ஒவ்வொருவரையும் மனமுவந்து அழைக்கிறேன். கருணைமிக்க உள்ளம் என்றால் அது பலவீனமான உள்ளம் என்று அர்த்தமல்ல. கருணைமிக்கவர்களாக இருக்க எவர் விரும்பினாலும், அவர் சோதிப்பவரை புறந்தள்ளி, ஆனால் இறைவனுக்கு மனம் திறக்கும் உறுதியான, தடுமாற்றமில்லாத உள்ளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தூய ஆவியால் ஊடுருவப்பட தன்னைத்தானே அனுமதிக்கிற உள்ளமே, நமது சகோதர சகோதரிகளிடம் இட்டுச் செல்லும் இந்தச் சாலைகள் வழியாக அன்பைக் கொணர்ந்திடும். இறுதியாக, தனது ஏழ்மையை உணரும் ஏழை உள்ளம், மற்றவர்களுக்காக தன்னையே தாரளமாக வழங்கும்.
இந்தத் தவக்காலத்தில், அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இறைவனிடம் இறைஞ்சுவோமாக! ~எங்களுடைய இருதயத்தை உம் இருதயம் போல் ஆக்கியருளும்!| (திரு இருதய மன்றாட்டு மாலை). இவ்வாறு, நாம் உறுதியும் கருணையுமிக்க, விழிப்புணர்வுமிக்க, பரந்த மனப்பான்மையுள்ள, மூடப்படாத, பாரபட்சமில்லாத அல்லது உலகமயமாகிய அக்கறையின்மைக்கு பலியாகாத ஒர்; உள்ளத்தைப் பெற முடியும்.
இத்தவக்காலம் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒவ்வொரு திருச்சபைச்சார் சமூகத்திற்கும் ஆன்மீகளவில் பலன் தரக்கூடியதாக அமைந்திடும் என செபத்தின் மூலம் நம்புகிறேன். எனக்காகச் செபிக்கும்படி உங்கள்அனைவரையும் வேண்டுகிறேன். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! அன்னை மரியாள் உங்களைப் பாதுகாப்பாராக!

 

 

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்
வத்திக்கான்

 

Link to comment
Share on other sites

https://www.youtube.com/watch?v=a1DQ5QIOiAw

 

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

 

பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்

 

மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ

 

இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.