Jump to content

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நேரத்தைப்பார்த்தாள்
சரியாக அவன் போய் 2 மணித்தியாலமாகியிருந்தது
கதவை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்..
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது....
 
தொடரும்......
 
காவல்த்துறை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட முகமெட்
அலுவலகத்தில் நிறுத்தப்பட்டான்
அவனை விசாரிக்குமாறு அங்கிருந்த அலுவலகரிடம் ஒப்படைத்த காவல்த்துறையினர் 
வேறு அவசரமான வேலையாக வெளியில் போகும் போதும் கூட
இவனை கண்டபடி ஏசியபடி சென்றனர்..
அலுவலகரிடம் இவர் விடயத்தில் கடுமையாக நடந்து கொள்ளுமாறும் சொல்லிச்சென்றனர்
இவனை ஓரிடத்தில் இருக்குமாறு சொன்ன அலுவலகர்
கைத்தொலைபேசியில் யாரிடமோ  லொள்ளுவிட்டபடியிருந்தார்
 
முகமெட் துடித்துக்கொண்டிருந்தான்
அலுவலகரிடம் ஒரு தொலைபேசி எடுக்கமுடியுமா எனக்கேட்டதற்கு அவர் பெல்ரைக்காட்டி பயமுறுத்தினார்
இனி பேசினால் வழக்கை வேறு விதமாக அமைத்துவிடுவார்கள்
ஆனால் பேசாமலும் இருக்கமுடியவில்லை..
 
அவன் தான் காவல்த்துறை அலுவலகத்தில் இருந்தானே ஒழிய
மனசு முழுக்க
வீட்டிலும்
மனைவி பிள்ளை
உறவுகள்
இவ்வளவு நாள் காப்பாற்றிவைத்த மானம் மரியாதை நல்நடத்தை...
அத்துடன்
வீட்டிலிருப்பவள்
ரொம்ப நொந்து போயிருக்கிறாள்
அவள் ஏதாவது வீட்டிலிருந்தபடி ஏடாகூடமாக செய்துவிட்டால் என்றெல்லாம யோசித்தபடி 
தனியே புலம்பியபடியிருந்தான்..
 
சிறிது நேரத்தில்
அந்த மாகாண பெரிய அதிகாரி அங்கு வந்தார்
ஏன் நிற்கிறாய் என இவனை அதட்டினார்.
இவன் தான் விபத்தில் மாட்டிக்கொண்டதாக சொல்லவும்
அதிகாரியைக்கண்ட 
அலுவலகர் தொலைபேசியைத்துண்டித்து
இவனைக்கூப்பிட்டு விசாரணையையும் பதிவையும் ஆரம்பித்தார்...
 
தனது தொலைபேசித்தொடர்பு அறுந்து போன கோபத்திலோ என்னவோ
கேள்விகள் நறுக்கென்று சூடாக வந்தன.
சாவுக்கிராக்கி
என்ர நேரத்தை வீணடிக்க வந்திருக்கிறியா?
சொல்லு எவளை நினைத்துக்கொண்டு கார் ஓட்டினாய்??
அல்லது எவளை தள்ளிட்டுப்போக இவ்வளவு அவசரமாக போனாய்??
 
இவன் அமைதியாக ஆனால் பதட்டப்பட்டபடி..
காலையில் மனைவியைக்கொண்டு போய் புகையிரத நிலயத்தில் வைத்து அவரது தாய்வீட்டுக்கு அனுப்பினேனா?
அப்படியே வேலைக்கு போனேனா?
இன்றைக்கு அதிக வேலையா?
அதனால் களைத்து வீட்டுக்கு வந்தனா?
பிள்ளையின் பொருட்களை மனைவி மறந்துவிட்டதாக தொலைபேசி எடுத்தாவா?
அதை எடுத்துக்கொண்டு கிளம்பினேனா?
என்ன நடந்தது என்றே தெரியவில்லை
அந்தம்மாவை இடித்துவிட்டேன்
ஒன்றும் பிரச்சினையில்லை
பிழை என்னில் தான்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கின்றேன் என்னைப்போகவிடுங்கள் எனக்கெஞ்சினான்..
அலுவலருக்கு சந்தேகம்
எதுக்கு இவ்வாறு எல்லாவற்றையும்  ஒத்துக்கொள்கின்றான்..
 
திருப்பிச்சொல்லு என்றார்
காலையில் மனைவியைக்கொண்டு போய் புகையிரத நிலயத்தில் வைத்து அவரது தாய்வீட்டுக்கு அனுப்பினேனா?
அப்படியே வேலைக்கு போனேனா?
இன்றைக்கு அதிக வேலையா?
அதனால் களைத்து வீட்டுக்கு வந்தனா?
பிள்ளையின் பொருட்களை மனைவி மறந்துவிட்டதாக தொலைபேசி எடுத்தாவா?
அதை எடுத்துக்கொண்டு கிளம்பினேனா?
என்ன நடந்தது என்றே தெரியவில்லை
அந்தம்மாவை இடித்துவிட்டேன்
ஒன்றும் பிரச்சினையில்லை
பிழை என்னில் தான்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கின்றேன் என்னைப்போகவிடுங்கள் எனக்கெஞ்சினான்..
 
அலுவலகருக்கு சந்தேகம்
இவனது வாய்தான் பேசுது
ஆனால் இவன் இங்கில்லை
இதை நேர் எதிரே அறையில் இருந்து 
இந்த காவல்த்துறைப்பகுதிக்கான அறிக்கைகளை சரி பார்த்துக்கொண்டிருந்த 
உயர் அதிகாரியும் கவனித்தார்
அனுபவமும் பல பதக்கங்களையும் பெற்றவரான அவருக்கு 
இவன் சொல்வது பொய் எனத்தெரிந்தது
 
இவன் சொல்வதைப்பதியும்படி சொன்னவர்
இவனைத்தன்னிடம் வரும்படி அழைத்தார்...
 
அறைக்குள் வந்ததும்  அறையின் கதவைச்சாத்தியவர்
கன்னத்தில் நாலு அறை போட்டார்
யாருக்கு விடுகிறாய்?
வாய் தான் பேசுது
முழுப்பொய் என்பதை முகம்காட்டுது
கொன்று போடுவன்
உண்மையைச்சொல் என்றார்....
 
இவனுக்கும் இனி யாரிடமாவது உண்மையைச்சொல்லி வழி கேட்பதைத்தவிர வேறு வழியில்லை.
இவர்  கண்டிப்பானவராக இருக்கிறார்
மேலதிகாரி
எனவே இவரிடம் உண்மையைச்சொல்லி அனுமதி பெற்றால் வீட்டுக்கு சென்றுவிடலாம் என இவனது உள் மனது சொன்னது.
அவரது காலடியில் உட்கார்ந்தபடி
எல்லாவற்றையும் கண்ணீர் மல்க சொல்லிமுடித்தான்..
கேட்ட அதிகாரி அமைதியாக இருப்பது இவனுக்கு ஆறுதலளித்தது...
 
இடத்தைவிட்டு எழுந்த அதிகாரி
சரி உன்னை நான் நம்பணும் என்றால்
உனது வீட்டுக்கு போகணும்
நீ சொல்பவர் அங்கு இருக்கணும்
நான் போய்ப்பார்த்துவிட்டு வருகின்றேன்
இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு
அவனது முகவரியை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.....
தொடரும்........
 
Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அடுத்த கட்டத்துக்கு போவமா??

 

அல்லது அல்லாவைக்கூப்பிடுவமா??

கடைசியில 

அவர்தானே கதி.....?? :icon_idea:

Link to comment
Share on other sites

போங்கோ போங்கோ :) :)

 

அம்மாவை கூப்பிடுவீங்களோ அல்லாவை கூப்பிடுவீங்களோ ............. :lol:

விரைவில் முடிவு வேண்டும்........... விறுவிறுப்பு  (புல்லரிப்பு) தாங்கமுடியல வி.அண்ணா :icon_idea:

 

நன்றாக எழுதுகின்றீர்கள் வி.அண்ணா ......தொடருங்கள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போங்கோ போங்கோ :) :)

 

அம்மாவை கூப்பிடுவீங்களோ அல்லாவை கூப்பிடுவீங்களோ ............. :lol:

விரைவில் முடிவு வேண்டும்........... விறுவிறுப்பு  (புல்லரிப்பு) தாங்கமுடியல வி.அண்ணா :icon_idea:

 

நன்றாக எழுதுகின்றீர்கள் வி.அண்ணா ......தொடருங்கள்!!!!

 

வரும்

ஆனா  வராது.. :icon_idea:  :icon_idea:

 

அது சரி

அம்மா பாத்திரம் வந்த மாதிரி தெரியலையே...

கொண்டு வந்தாப்போச்சு...

ஆனால் ஒரு உண்மை தெரியுமோ...

இது ஒரு உண்மைக்கதை

கண்டதைப்புகுத்தமுடியாது... :icon_idea:

ஆனால்

அல்லா

விதி

மதி

நாய்

அடியேனின் கைவரிசை......... :lol:  :D

இறுதிக்கட்டத்துடன் எனக்கே மூச்சு நிற்கலாம்....அல்லா என்றால் சும்மாவா..?? :icon_idea:  

Link to comment
Share on other sites

இவன் இன்சா அல்லா என்றதும் அல்லா இவன் மீது பார்வையைத்திருப்பினார்

 

அவர் முகத்தில் சோகம் பரவியிருந்தது

இதுவரை இவனது பைலை வைத்து பார்த்து

இவனது ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் இவனைக்காப்பாற்ற துடித்த அல்லா

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

இப்பிடி ஒரு எழுத்தாளர் இருந்தது இதுவரையும் தெரியவில்லையே... நல்லாயிருக்கு.. வாழ்த்துகள்!!
தொடருங்கள்!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் இன்சா அல்லா என்றதும் அல்லா இவன் மீது பார்வையைத்திருப்பினார்

 

அவர் முகத்தில் சோகம் பரவியிருந்தது

இதுவரை இவனது பைலை வைத்து பார்த்து

இவனது ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் இவனைக்காப்பாற்ற துடித்த அல்லா

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

இப்பிடி ஒரு எழுத்தாளர் இருந்தது இதுவரையும் தெரியவில்லையே... நல்லாயிருக்கு.. வாழ்த்துகள்!!

தொடருங்கள்!!

 

 

நன்றியண்ணா

இது  ஒரு பெரிய விருது எனக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கு என்ன நடந்தது ? கதை அந்த மாதிரி போகுது . :D

 

நன்றியண்ணா..

வித்தியாசமான ஒரு கரு (உண்மைக்கதை) கிடைத்தது

கொஞ்சம் விளையாடிப்பார்க்கலாம் என்று தான்..

கதையின்... முடிவு எப்படி இருக்கும் என்று, எம்மால் ஊகிக்க கடினமாக உள்ளது.

தொடருங்கள்... விசுகு. :)

 

இன்னும் ஊகிக்கவில்லையா?

வில்லன் வந்துவிட்டாரா இல்லையா?

அப்ப

நான்  தொடர் எழுதலாம்...

 

நன்றி  சிறி

என்னால் ஊகிக்க முடியுது, இந்தக் கதைக்கு ஒரு முடிவு இருக்கெண்டு...! :)

 

நன்றியண்ணா...

முடிவு

சும்மா அதிருமில்ல.. :icon_idea:

இது ஒரு புல்லரிக்கும் தொடர்கதை . அதனால்  கிழமைக்கு இரண்டு தொடர் மட்டும் தானாம் :D:lol:

 

வாத்தியார்த்தம்பி...

கதை நடந்தது ஒரே ஒரு நாளில் தான்..

ஆனால் அப்படித்தரமுடியாது

வேறு இடங்களில் அடிபட போய்விடுவார்கள்

அப்படியே அமுக்கி வைத்திருக்கணும்

எப்படியும் 1 மாதம் இழுக்கும் போலத்தான் தெரியுது :lol:  :D

 

நன்றி  வருகைக்கும் ஊக்கத்துக்கும்..

வஸிட்டர் வாயால் பிரம்ம ரிசி....! கலக்குங்கள் விசுகு...!!

 

ராசா கையை  வைச்சா....?? :D  :icon_idea:  

ஆர்வத்துடன் வாசிக்கிறேன் விசுகர்!

 

புல்லரிக்குது தான்...!

 

கனடாக்காரருக்கும், ஐரோப்பியருக்கும் 'டபுள்' புல்லரிப்பாய் இருக்கும்!

 

குளிரைச் சொன்னேன்!  தொடருங்கள்!

 

நன்றியண்ணாக நீங்க பாராட்டினா

இரட்டிப்பு மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

சூப்பராக போகுது... அம்மான இதை நீங்ளா எழுதுகின்றீர்கள் என்று சந்தேகமாகவே இருக்கு.. இவ்வளவு நாளும் என்னையா செய்து கொண்டு இருந்தீர்கள்..?

 

அழகி, குளிர், நனைந்த உடை, குளியல், மனைவி இல்லை, இரவு, படுக்கை...இப்படி எல்லாம் சரியாக இருந்தும் சும்மா இருந்த அவனுக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும்..  கொஞ்சம் மினக்கெட்டு இருந்தால் வீதியில் வைச்சு பெண்ணை இடித்து இருக்க மாட்டான்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது விசுகு அண்ணா.. தொடருங்கள்..!

 

நன்றி  தம்பி

காரணம் நீ தானே... :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்றாகப் போகிறது கதை அனால் எனக்கும் கூடச் சந்தேகம் தான் நீங்கள் எழுதும் கதைதானா என்று அண்ணா. தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நேரத்தைப்பார்த்தாள்
சரியாக அவன் போய் 2 மணித்தியாலமாகியிருந்தது
கதவை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்..
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது....
 
தொடரும்......
 
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும்
முகமெட் போகும் போது சொல்லிச்சென்றது திடீரென ஞாபகம் வந்தது
5 விரலும் கதவில் படுவது போல் 5 தரம் தட்டுவேன்
அப்படித்தட்டினால் தான் கதவைத்திறக்கணும் என்றல்லவா சொல்லிச்சென்றான்.
ஆனால் இது..??
அப்படியே மெதுவாக பின் வாங்கி
கதவு மீண்டும் தட்டப்படும்வரை பொறுத்திருந்தாள்
மீண்டும் தட்டப்பட்டதும்
 
இது அவனில்லை என்றபடி மீண்டும் கட்டிலில் சாய்ந்தாள்...
 
 பலமுறை கதவைத்தட்டியும் அது திறக்காததால்
நாயுடன் வீட்டைச்சற்றி  வந்தான் முகமெட்டின் தம்பி.
TAXI அங்கில்லாதது கண்டு
முகமெட்டின் மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து
ஆள் இங்கில்லை TAXI யும் இங்கில்லை என்றான்
அவள் பதட்டப்படுவதை அவதானித்தவன்
உங்களிடம் வீட்டுத்திறப்ப இருக்கிறதல்லவா எனக்கேட்டான்
அவளும் ஆம் என்றதும் 
அப்போ வெளிக்கிட்டு நில்லுங்கள்
நான் வந்து உங்களை ஏற்றி வருகின்றேன்
வந்து பார்ப்போம் என்றபடி காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்
அண்ணிக்காரிக்கு ஆறுதலுக்காக அவன் சமாதானமாப்பேசினாலும்
மனதில் அவனுக்கும் பயம் குடிகொள்ளத்தொடங்கியிருந்தது..
ஒரு போதும் இவ்வாறு நடந்ததில்லையே
என்னாச்சு என்று யோசித்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்..
 
தொடரும்...........
 
Link to comment
Share on other sites

விசகண்ணா பயங்கரமான துப்பறியும் கதை பாணியில் செல்கிறது, ஒரே மூச்சில் வாசித்தேன்...

 

எழுத்து நடையும், விவரணையும் இரத்தின சுருக்கமாய் அருமையாய் உள்ளது...

 

தொடருங்கோ ராசா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இடத்தைவிட்டு எழுந்த அதிகாரி
சரி உன்னை நான் நம்பணும் என்றால்
உனது வீட்டுக்கு போகணும்
நீ சொல்பவர் அங்கு இருக்கணும்
நான் போய்ப்பார்த்துவிட்டு வருகின்றேன்
இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு
அவனது முகவரியை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.....
தொடரும்.....
 
காவல்துறை அலுவலகத்திலிருந்த முகமெட்டுக்கு மேலும் கவலை படரத்தொடங்கியிருந்தது..
அந்த உயர் அதிகாரியிடம் தான் உண்மை அனைத்தையும் சொன்னது சரியா?
ஆபத்தை விலைக்கு வாங்கிவிட்டேனா?
அதற்கொரு காரணம் இருந்தது
அந்த உயர் அதிகாரி புறப்படும் போது
இவனது உடமைகள் அனைத்தையும்  (தொலைபேசி பணம் சிகரெட் உட்பட) 
தன்னுடன் எடுத்தச்சென்றதும்
அவர் வாகனத்தில் புறப்படும் போது வாகனத்தின் நாலு ரயர்களும் சுற்றியவிதம்
புழுதியை வாரி எறிந்தவிதம்......
இவனுக்குள் ஒரு பயத்தை உருவாக்கியிருந்தது..
 
இப்பொழுது உயர் அதிகாரி எனது வீட்டுக்கு போயிருப்பான்
காவல்துறையினரின் அத்துமீறல்களும் அடாவடித்தனங்களும்  செய்தி செய்தியாக வருகின்றன
எதையாவது செய்துவிட்டு என் தலையில் போடக்கூடிய வாய்ப்பை நானே கொடுத்துவிட்டேனோ?
என பயங்கொள்ளலானான்..
 
மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த அல்லாவுக்கு
கொஞ்சம்  விளையாடிப்பார்க்கலாம் என்ற புத்தி வேலை செய்யத்தொடங்கியது
இவன் இங்கே இருப்பதைவிட களத்தில் இருந்து
நடப்பதை பார்ப்பதே இவனுக்கான தண்டனை என உணர்ந்தவர்
வெளியே போன காவல்த்துறையினரை அலுவலகத்துக்குள் அனுப்பிவிட்டார்..
 
அலுவலகத்துக்குள் வந்த காவல்த்துறையினர்
இவன் இன்னும் அங்கிருப்பதைப்பார்த்து
அலுவலகத்தவரிடம் இவனது விசாரணை இன்னுமா முடியவில்லை என்று கேட்டனர்
முடிந்துவிட்டதே என அவரும் பதில்தர
நீ  போகலாம்
ஆனால் கூப்பிடும்  போதெல்லாம் வரணும் என்று எச்சரித்து போக அனுமதித்தனர்....
அவர்கள் சொன்னது தான் தாமதம் தனது TAXI இன்  திறப்பை காவல்த்துறையினரிடம் கேட்டு வாங்கியவன் 
அங்கிருந்து புறப்பட்டான்
இல்லை பறந்தான்...
அவனது GPS - 25 நிமிடங்கள் காட்டியது அவனது வீட்டை அவன் அடைய....
 
இதேநேரம் உயர் அதிகாரி அவனது வீட்டுக்க முன் காரை நிறுத்தி இறங்கியவர்
நேரே சென்று கதவைத்தட்ட முயன்றவர்
ஒரு செக்கன் யோசித்தார்
5 விரலும் படும்படியாக 5 தரம் தட்டணும் என்றல்லவா சொன்னான்.....
சரியாக தட்டினார்...
 
அசந்து படுத்திருந்தவள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்தாள்
நன்றாக காது கொடுத்தாள்
இரண்டாவது முறையாகவும் அவன் சொன்னது போல் சரியாகவே தட்டப்படுவதை புரிந்து கொண்டவள்
ஓடி வந்து கதவைத்திறந்தாள்...
 
 
அவள் வாயைத்திறந்து கத்துவதற்குள் 
ஓடிப்போய் வாயைப்பொத்தியவன்
அப்படியே அவளை அலக்காக தூக்கினான்... :icon_idea:
 
தொடரும்....
Link to comment
Share on other sites

நன்றி தம்பி

காரணம் நீ தானே... :icon_idea::icon_idea:

மக்களே.. நோட் திஸ் பாய்ண்ட்.. ஒரு நல்ல எழுத்தாளனை வெளிக்கொண்டுவந்துள்ளேன்.. :D

Link to comment
Share on other sites

அவள் வாயைத்திறந்து கத்துவதற்குள் 

ஓடிப்போய் வாயைப்பொத்தியவன்

அப்படியே அவளை அலக்காக தூக்கினான்... 

ம்ம்ம்.. மேலே.. :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கும் மேலே தூக்கினால் அவள் விழுந்திடுவாள்...! :lol:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. மேலே.. :huh::D

 

 

இத்துடன் இதை நிறுத்தி

மற்றைய  எழுத்தாளர்களையும் வெளியில் கொண்டு வருவோம் என நினைக்கின்றேன் இசை...

 

எங்கே எழுதுங்கள் உறவுகளே..

அடுத்தது என்ன?

 

எனது முடிவை உங்களால் கணிக்கமுடிகிறதா??

உங்களால் கணிக்கமுடியவில்லை என்றால்

நான் நினைத்ததை (அதாவது முடிவை அறிந்து விடக்கூடாது என நான் போட்ட சில தூண்டில்கள் தமது கடமையை  சரியாகச்செய்திருக்கின்றன என அர்த்தம்)

அப்படியானால் பதக்கம் பெறும் எழுத்தாளர் நான் தான்.. :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

இல்லை இல்லை இதை அருமையாக தொடங்கி சிறப்பாக நடத்தி கொண்டு போகின்றீர், நீங்களே தன இதை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும், ஒரு நல்ல கதையை நல்ல முறையாக முடித்து வையுங்கள். தம்பியின்  வேண்டுகோள்.... plss


 (டிஸ்கி : குரு கூட சேராதையுங்கோ கதையின் போக்கை மாற்றி விடுவார் :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகர் :D

 

உந்தப் பக்கம் எல்லோ வர ஏலாமல் கிடக்கிது " ஒரு ஆத்தாத்தை இருந்த வீடு வளவு ஒண்டு விக்கப் போட்டவங்கள் அங்காலை  இஞ்சாலை பாத்திற்று தாறன் எண்டு காசு மாறி பொருத்திப் போட்டன். சித்திரை பிறக்க முதல் உள்ளுக்கு போகவேணும் ஊரிப்பட்ட வேலை கிடக்கிது   வேலைக்கு  வந்தவங்கள் எல்லாம் தண்ணிக்கு கீளால நெருப்பு கொண்டுபோறவங்களா இருக்கிறாங்கள் விட்டு விலத்த ஏலாமல் கிடக்கிது "

 

வந்த வீச்சுக்கு சுத்திப்போடு மாறீற்றான் எண்டு நினைசுப் போடுவியள் எண்டுதான் விசயத்தை சொன்னனான். இனிதான் கண்ணை புளிஞ்சு புளிஞ்சு வாசிக்கப்போறன் :lol:  

 

 

வணக்கம் ஐயா (உங்கள் பெயரை என்னால் உச்சரிக்கமுடியாது)

 

தங்களது சுமைகளுக்கும் நடுவில் எம்மை உற்சாகப்படுத்தணும்

எழுதணும்  என்று நினைத்தமைக்கு நன்றிகள்...

தொடர்ந்து நேரமிருக்கும் போது எழுதுங்கள்

 

இந்த யாழ்களம்

எத்தனையோ எழுத்தாளர்களை

படைப்பாளிகளை

புத்தக ஆசிரியர்களை

கவிஞர்களை

சிறுகதை எழுத்தாளர்களை

பாராட்டி சீர்தூக்கி 

அரவணைத்து வளர்த்துவிட்டுள்ளது...

நாம் இருக்கலாம்  இல்லாது போகலாம்

ஆனால் அந்தக்களத்தில் இவை தொடரணும் என்பதே விரும்பம்

நன்றி ஐயா

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

கதை செமயா போகுது. தொடருங்களண்ணா.

நன்றி  தம்பி

தொடர்வோம்

ஒரு சிறு இடைவேளையில்... :icon_idea:

 

நன்றி 

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

கதை நன்றாகப் போகிறது. தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

 

நன்றி  அக்கா

உங்கள் ஆசியும் வாழ்த்தும் பெரும் விருது எனக்கு..

என்னையும் ஒரு பொருட்டாக மதித்து

கதையை வாசித்தது மட்டுமல்லாது

கருத்தையும் பதிந்து உற்சாகப்படுத்தியமைக்கு பெரும் பாக்கியம் செய்திருக்கணும்...

 

நன்றி அக்கா

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

சூப்பராக போகுது... அம்மான இதை நீங்ளா எழுதுகின்றீர்கள் என்று சந்தேகமாகவே இருக்கு.. இவ்வளவு நாளும் என்னையா செய்து கொண்டு இருந்தீர்கள்..?

 

அழகி, குளிர், நனைந்த உடை, குளியல், மனைவி இல்லை, இரவு, படுக்கை...இப்படி எல்லாம் சரியாக இருந்தும் சும்மா இருந்த அவனுக்கு இதுகும் வேணும் இன்னமும் வேணும்..  கொஞ்சம் மினக்கெட்டு இருந்தால் வீதியில் வைச்சு பெண்ணை இடித்து இருக்க மாட்டான்

 

 

 

நன்றி  நிழலி

உங்கள் கோபம் எனக்கு என்னை உணர்த்துகிறது

கவனிக்கின்றேன் ராசா..

 

நன்றி தம்பி

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஊகிக்கவில்லையா?

வில்லன் வந்துவிட்டாரா இல்லையா?

அப்ப

நான்  தொடர் எழுதலாம்...

 

நன்றி  சிறி

 

விசுகு, உங்கள் தொடரின் முதல் இரண்டு பகுதிகள் வாசித்த நிலையில்...

மிகுதியை... வரும் ஞாயிற்றுக்கிழமை, ஓய்வான நேரம் ரசித்து வாசிக்க உள்ளேன்.

அதன் பின்... மிகுதி கருத்துக்களை பகிர்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.... வாசிக்கிறேன் :)

 

நன்றி நவீனன்

 

 

கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.