Jump to content

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது துனிசியாவில் ஒரு நகரம்..

 

முகமெட்  ஓரளவு வசதியானவன்

சொந்தமாக TAXI  வைத்திருந்தான்..

திருமணமாகி  ஒரு ஆண்குழந்தை

அழகான மனைவி

சொந்தவீடு

ஆனந்தமான வழமாக வாழ்க்கை என வாழ்வு போய்க்கொண்டிருந்தது..

 

 மார்கழி மாசம்

சரியான குளிர்

மனைவி  கேட்டாள்

பிள்ளையைக்கூட்டிக்கொண்டு போய்  அம்மாவீட்டில் 2 நாள் தங்கி  வரட்டா என.

இன்றைய தினத்தின் முக்கியத்தை  உணராதவன்

அதற்கென்ன

ஆனால் நான் வேலைக்கு போய்விட்டு அங்கு வரமாட்டேன்

அங்கு வந்தால் ஆட்கள் அதிகம்

அவர்களுடன் பொழுது போகும்

ஆனால் நான் ஓய்வெடுக்கமுடியாது என.

அது வழமையாக நடப்பது என்பதால் மனைவியும் ஒத்துக்கொண்டாள்.

 

வழமை போல டக்சியை எடுத்துக்கொண்டு புறப்பட்ட முகமெட்

மனைவியைக்கொண்டு போய்  தாய்வீட்டுக்கு போகும் புகையிரத நிலையத்தில் விட்டுவிட்டு

தனது அன்றைய தினத்தை ஆரம்பிக்க புறப்பட்டான்...

 

சிறிது தூரம் போனவனை

ஒரு அழகான பெண் வழி மறித்தாள்...

வாகனத்தை நிறுத்தியவன்

பின் சீற்றில் ஏறும்படி சைகை செய்தான்...

ஏறியவள் சப்பாத்தையும் களட்டிவிட்டு

பெரும் நிம்மதிப்பெருமூச்சுடன் சீற்றில் சாய்ந்தாள்...

எங்கே போகணும் என முகமெட் கேட்க

எங்கு என்றாலும் போ என்றவள் கண்களை மூடினாள்...

 

தொடரும்........

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறிது தூரம் போனவனை

ஒரு அழகான பெண் வழி மறித்தாள்...

வாகனத்தை நிறுத்தியவன்

பின் சீற்றில் ஏறும்படி சைகை செய்தான்...

ஏறியவள் சப்பாத்தையும் களட்டிவிட்டு

பெரும் நிம்மதிப்பெருமூச்சுடன் சீற்றில் சாய்ந்தாள்...

எங்கே போகணும் என முகமெட் கேட்க

எங்கு என்றாலும் போ என்றவள் கண்களை மூடினாள்...

 

தொடரும்........

 

வாகனத்தில் ஏறினால் போகும் இடத்தைச்சொல்லணும்

இல்லாது விட்டால் நான் எப்படி இடத்தைக்கண்டுபிடிப்பது என்று கொஞ்சம் கோபமாகக்கேட்டான் முகமெட்...

 

மீற்றரைப்போடு

எங்கு என்றர்லும் போ..

இறுதியில் எவ்வளவு பணம் என்று சொல்லு

அது தான் உன் வேலை என்றாள்...

நீ இடத்தைச்சொல்லாமல் என்னால் நகரமுடியாது

காலையிலேயே பிரச்சினை கொடுக்காதே என்றான்

சரி

ரவுணுக்குப்போ என்றவள் படுத்துவிட்டாள்...

 

ரவுணை ஒரு சுற்று சுற்றியவன் ஒரு இடத்தில் நிறுத்தி இனி என்றான்

கொஞ்சம் பொறு. பசிக்குது ஏதாவது வாங்கி வருகின்றேன் என்று இறங்கிச்சென்றவள்

2 சண்விச்சுடன் வந்தாள். அவனுக்கும் ஒன்றைக்கொடுத்து தானும் சாப்பிட்டவளை

நான் என்ன செய்ய இனி எனக்கேட்டான்..

பெரிய கடைக்குப்போ என்றாள்..

அவன் கடைப்பக்கமாக காரை நகர்த்தத்தொடங்கினான்....

அங்கும் ஒரு சுற்றுச்சுற்றியவன்

ஒரு இடத்தில் நிறுத்தினான்

Ice கிறீம் கடையைக்கண்டவள் இருவருக்கும் Ice கிறீம் வாங்கி  வந்தாள்..

 

இவன் மீண்டும் இனி என்றான் ...

கடற்கரைக்கு போ என்றாள்..

கடற்கரையை நோக்கி காரைச்செலுத்தத்தொடங்கினான்...... 

ஆனாலும் மனதில் கேள்வி

இந்தக்குளிருக்குள் கடற்கரையில் என்ன செய்யப்போகின்றாள்...

 

தொடரும்....

 

 

 

 

Link to comment
Share on other sites

கடலுக்குள் குளித்து தற்கொலை செய்யப்போறா.. :o தொடருங்கோ.. :D

(அதுசரி.. நாலு வரி மட்டும் எழுதக்கூடாது என்கிற சட்டம் எனக்கு மட்டுமோ?! :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் மீண்டும் இனி என்றான் ...

கடற்கரைக்கு போ என்றாள்..

கடற்கரையை நோக்கி காரைச்செலுத்தத்தொடங்கினான்...... 

ஆனாலும் மனதில் கேள்வி

இந்தக்குளிருக்குள் கடற்கரையில் என்ன செய்யப்போகின்றாள்...

 

தொடரும்...

 

கடற்கரையை அடைந்ததும் சிறிது நேரம் காருக்குள் இருந்தவள்

மீற்றரை நிறுத்தாதே. இதோ வருகின்றேன் என இறங்கியவள் நேரே கடலுக்குள் சென்று குளிக்கத்தொடங்கி விட்டாள்.

அவள் உடுத்த உடுப்புடன் கடலுக்குள் இறங்க

இவனுக்கே நடுங்கத்தொடங்கிவிட்டது. அவ்வளவு குளிர். 

அத்துடன் பணம் தருவாளா??

ஆளைப்பார்த்தால்

படித்த

வசதியான 

பெரிய குடும்பத்தை சேர்ந்தவள் போலுள்ளது.

ஆனால் ஏன் இப்படி  நடந்து கொள்கின்றாள்.

இவளது பின்புலம்

வாழ்க்கை

அடுத்த கட்டம் என்ன....?

யோசித்துப்பார்த்தவனுக்கு எந்த முடிவும் தெரியவில்லை

காத்திருந்தான்......

 

ஈர உடுப்போடு வந்தவள்

அப்படியே காருக்குள் ஏற முற்பட்டாள்..

இவனுக்கோ சங்கடம்

நனைந்த உடுப்புடன் அவளைப்பார்க்க சங்கடமாக இருந்தது

மிகவும் கவர்ச்சியாக தென்பட்டாள்...

இருந்தாலும் இறங்கிச்சென்றவன்

டிக்கிக்குள் தான் வைத்திருந்த துவாயை எடுத்து

தலையை துவட்டிக்கோ துடைச்சுக்கோ எனக்கொடுத்தான்

வாங்கிக்கொண்டவள் துடைத்துவிட்டு  மீண்டும் காருக்குள் ஏறி 

பசிக்குது வண்டியை நல்ல சாப்பாடு கிடைக்கும் இடத்துக்கு விடு என்றாள்...

 

சாப்பாட்டு இடத்துக்கு வந்ததும் இருவருக்கும் சாப்பாடு வாங்கி  வந்தாள்

இருவரும்  சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது.....

 

சூரியன் மறைந்து இருட்ட ஆரம்பித்திருந்தது

இன்னும் சிறிது தூரம்  தான் தான் வண்டியை செலுத்தமுடியும்

தனது இன்று ஓடக்கூடிய

தனது மீற்றர் காட்டக்கூடிய அதிக தொகை வரப்போகிறது

வந்தால் மீற்றர் அதற்கு மேல் நகராது என்பதை உணர்ந்தவன்

அவளிடம் சொன்னான்..

நான் எவ்வளவு தரணும் எனக்கேட்டவளுக்கு  தொகையைச்சொன்னான்...

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றவள் திடீரென காரைவிட்டு இறங்கி

வங்கிக்காட்டால் பண்ம் எடுக்கும் இயந்திரத்தை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்...

 

தொடரும்.........

 

தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்குள் குளித்து தற்கொலை செய்யப்போறா.. :o தொடருங்கோ.. :D

(அதுசரி.. நாலு வரி மட்டும் எழுதக்கூடாது என்கிற சட்டம் எனக்கு மட்டுமோ?! :lol: )

 

தம்பி  எவ்வழியோ

நானும் அதேவழி....

 

இந்தக்கதையை  எழுதத்தூண்டியவரே நீங்க தானையா.... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின்... முடிவு எப்படி இருக்கும் என்று, எம்மால் ஊகிக்க கடினமாக உள்ளது.
தொடருங்கள்... விசுகு. :)

Link to comment
Share on other sites

விசுகண்ணாட கதையே. அப்ப ஒண்டுமே நடக்காது. என்ன தான் ஈரத்துணியோட இருந்தாலும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் ஊகிக்க முடியுது, இந்தக் கதைக்கு ஒரு முடிவு இருக்கெண்டு...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு புல்லரிக்கும் தொடர்கதை . அதனால்  கிழமைக்கு இரண்டு தொடர் மட்டும் தானாம் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றவள் திடீரென காரைவிட்டு இறங்கி

வங்கிக்காட்டால் பண்ம் எடுக்கும் இயந்திரத்தை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்...

 

தொடரும்...

 

அவள் போவதை முகமெட் பார்த்துக்கொண்டே இருந்தான்..

திரும்பி வருவாளா?

பணத்தை தருவாளா? என்ற சந்தேகம் வலுப்பட்டிருந்தது அவனுக்கு...

பணத்தை எடுப்பது தெரிந்தது

பணத்துடன் வந்தவள் இவனுக்கு கொடுக்கவேண்டியதைக்கொடுத்து விட்டு

மீண்டும் காருக்குள் ஏறி  தொடர்ந்து போ என்றாள்.

 

மீண்டுமா?  எங்கே?

எனது நேரம் முடிவடைந்துவிட்டது என்றான் முகமெட்...

இல்லை இப்படி என்னால் வெளியே போகமுடியாது

உடுப்பு எடுக்கணும்

ஒரு உடுப்புக்கடைக்கு போ என்றாள்...

 

மீற்றரை மீண்டும் போட்டவன்

உடுப்புக்கடையில் நிறுத்தினான்

உடுப்புடன் வந்தவள்

மீண்டும் காருக்குள் ஏறி தொடர்ந்து போ என்றாள்

முகமெட்டுக்கு கோபம் வந்து விட்டது

இனி  எங்கு போவது?

 

பார்த்தால் நல்லவளாக 

படித்த  பண்பானவளாக தெரிகிறாய்

ஆனால் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?

உன்னுடைய நோக்கம் என்ன?

யார் நீ....?  என கேள்விகளை  அடுக்கிக்கொண்டே   போனான்

அவள் பதிலே சொல்லாமல் இருப்பதைப்பார்த்து

திரும்பி அவளைப்பார்த்தான்..

அவளது கண்கள் கலங்கியிருந்தன

அழுவது தெரிந்தது..

சிறிது அமைதியாக இருந்தான்.

 

சிறிய இடைவெளியின் பின் அவளாகவே பேசத்தொடங்கினாள்..

நான் திருமணமானவள்

இந்த நகரத்தின் முக்கிய நபரின் மனைவி

ஆனால் அவருடன் வாழ்வது நரகமானது

எனது உடம்பில் வெளியாருக்கு காட்டமுடியாத இடமெல்லாம் 

சுறு(ரு)ட்டால் சுட்ட காயங்கள் உள்ளன

முதுகை மட்டும்  கர்ட்டினாள்

அப்படியே வெந்து போயிருந்தது

இவன் கண்களும் பனித்தன...

அதே நேரம் எனது குடும்பம் அவருக்கு பயப்படுகிறது

என்னை ஏற்க அஞ்சுகிறார்கள்...

என்னால் அவரது முரட்டுக்குணாதிசியங்களை தாங்கமுடியல.

அது தான் புறப்பட்டு வந்துவிட்டேன்

ஆனால் எங்கு போவது? என்ன செய்வது ஒன்றும் புரியல??

கோட்டல்களுக்கும் போக என்னிடம் அடையாள அட்டை கூட இல்லை

எனக்கு இந்த உடையை  மாற்ற மட்டும் ஒரு  இடம்  ஏற்பாடு செய்து தா..

ஈரத்தால் உடம்பெல்லாம  நடுங்குகிறது

இப்படியே இங்கு இறங்கி நின்றால் செத்துவிடுவேனோ என பயமா இருக்கு என்றாள்..

 

 

என்ன செய்வது என்று இவனுக்கு ஒரே குழப்பம்

அவளுக்கு உதவலாமா?

இப்படியே விடுவது பாவமல்லவா..?

ஒரு முடிவுக்கு வந்தான்

 

சரி

எனது வீடு பக்கத்தில் தான் உள்ளது

அங்கு உனது உடுப்பை மாற்றிக்கொள்ள உதவுகின்றேன்

நான் திருமணமானவன்

எனது குடும்ப வாழ்வு நிம்மதியாக அமைதியாக போகிறது

அதில் குழப்பங்கள் வரக்கூடாது என்றான்

அவளும் அதே பெரிய உதவி.

நன்றி  என்றாள்..

 

இன்சா அல்லா என்றபடி காரை தனது வீட்டை நோக்கி ஓட்டத்தொடங்கினான்....

 

இவன் இன்சா அல்லா என்றதும் அல்லா இவன் மீது பார்வையைத்திருப்பினார்

அவர் முகத்தில் சோகம் பரவியிருந்தது

இதுவரை இவனது பைலை வைத்து பார்த்து

இவனது ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் இவனைக்காப்பாற்ற துடித்த அல்லா

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

தொடரும்....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு..... :D

தொடருங்கள்

 

பிறகு...

பொறுங்கள்....

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின்... முடிவு எப்படி இருக்கும் என்று, எம்மால் ஊகிக்க கடினமாக உள்ளது.

தொடருங்கள்... விசுகு. :)

 

முடிவு அல்லாவின் கையில் சிறி... :lol:  :D

 

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

விசுகண்ணாட கதையே. அப்ப ஒண்டுமே நடக்காது. என்ன தான் ஈரத்துணியோட இருந்தாலும். :lol:

 

உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல்

எனது உறவுகள் எனது தலையில் பொறுப்பை வைத்துவிட்டார்கள்... :)

பொறுமையாக இருங்கள் :icon_idea:

 

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் ஊகிக்க முடியுது, இந்தக் கதைக்கு ஒரு முடிவு இருக்கெண்டு...! :)

 

 

முடியும்

ஆனா முடியாது..

நன்றியண்ணா

வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

இது ஒரு புல்லரிக்கும் தொடர்கதை . அதனால்  கிழமைக்கு இரண்டு தொடர் மட்டும் தானாம் :D:lol:

 

 

திரிகளில் ஏற்பட்ட

கருத்துக்கள உறவுகளின் உரசல்களை களம் மாற்றவே இது திறக்கப்பட்டது

எனவே இழுக்கலாம்...

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 - 3  ஆவது பதிவை வாசிக்கப் புல்லரிக்க ஆரம்பிக்கிறது. தொடருங்கள். 

 

தேவையான  அளவு வரவேற்பு  கிடைக்கவில்லை

அதனால் நிறுத்தலாம் என்றிருந்தேன்...

 

நீங்க புல்லரிக்குது என்றதே பெரிய  வரவேற்பு எனக்கு.. :icon_idea:

தொடரலாம்...

 

நன்றி 

வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

தொடரும்....

 

வீட்டுக்கு வந்தவுடன்

குளிக்கும் இடத்தைக்காட்டி குளித்து உடுப்புக்களை மாற்றும்படி சொல்லிவிட்டு

இருவருக்கும் தேநீர் போட்டான் முகமெட்.

 

தேநீர் போட்டுக்கொண்டிருக்கும் போது அவனது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு

காலையில் அவசரமாக போகும்  பொது

பிள்ளையின் முக்கிய  பொருட்கள் அடங்கிய தோழ்ப்பையை கதவடியில் விட்டு விட்டு வந்துவிட்டேன்

அதற்குள் இருக்கும் பொருட்களை  கொடுக்காது விட்டால் மகன் இரவுக்க படுக்கமாட்டான்

கொண்டு வந்து தரமுடியுமா எனக்கேட்டாள்.

அப்பொழுது தான் இவனும் கவனித்தான் அது வாசலடியில் கிடப்பதை.

ஓம் ஒரு அரை மணித்தியாலத்தில் கொண்டு வந்து தருகின்றேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே

அவள் உடுப்பு மாற்றி விட்டு வந்து இவர்களது படுக்கை அறையை எட்டிப்பார்த்தபடி வந்து அமர்ந்தாள்..

 

இவனுக்கு அவசரம்

பதபதைப்பு

அவளோ தேனீரைக்குடித்தபடியே அரை நித்திரைக்கு போய்விட்டிருந்தாள்..

அவளை உலுப்பியவன் 

தான் புறப்படணும் என்பதைச்சொன்னான்..

 

எத்தனையோ நாளாச்சு நான் நித்திரை கொண்டு....

உனது கட்டிலைக்கண்டதும் தூக்கம் தூக்கமாக வருகுது

நீ போய் வரும் வரை உனது கட்டிலில் நித்திரை கொள்கின்றேனே எனக்கெஞ்சினாள்..

இவனுக்கு என்ன சொல்வதென்றெ தெரியவில்லை

அவள் எழும்பி  நடப்பாள் போலவும் தெரியவில்லை

பாவமாகவும் இருந்தது..

 

சரி நான் 2 மணித்தியாலத்தில் திரும்பி  வந்துவிடுவேன்

அது வரை நித்திரை கொள்.

நான் வந்தவுடன்  போய்விடணும் என்றான்

கடவுளைக்கண்டது போல் கையெடுத்துக்கும்பிட்டாள்...

போகும் போது திறப்பைக்கொடுத்து உள்ளே பூட்டிக்கோ

நான் வந்து எனது 5 விரல்களும் கதவில் படும்படியாக 5 தரம் தட்டுவேன்

அப்படி தட்டினால் மட்டுமே திறக்கணும்

மற்றும் வீட்டு தொலைபேசி அழைப்பு வந்தால் எடுக்கக்கூடாது எனச்சொல்லிவிட்டு

TAXI எடுத்துக்கொண்டு புறப்பட்டான்

விதி விளையாட காத்திருக்கு என்பதையறியாமல்.....

 

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகும் போது திறப்பைக்கொடுத்து உள்ளே பூட்டிக்கோ

நான் வந்து எனது 5 விரல்களும் கதவில் படும்படியாக 5 தரம் தட்டுவேன்

அப்படி தட்டினால் மட்டுமே திறக்கணும்

மற்றும் வீட்டு தொலைபேசி அழைப்பு வந்தால் எடுக்கக்கூடாது எனச்சொல்லிவிட்டு

TAXI எடுத்துக்கொண்டு புறப்பட்டான்

விதி விளையாட காத்திருக்கு என்பதையறியாமல்.....

 

தொடரும்...

 
 
 
காரை ஓட்டிக்கொண்டிருந்தாலும் மனசு முழுவதும்
அவளும்
அவளுக்கு நடந்த கொடுமைகளும்
இன்றைய தனது பொழுதும்
இன்னும் அவள் தன்னை விட்டுப்போகாததால் வரப்போகும் சங்கடங்களும்
என மனது அலைந்தது அவனுக்கு.....
 
நான் வந்து எப்படி இவளை அனுப்புவது?
மீண்டும் மீண்டும் உதவி கேட்பாளா?
எங்கு போவாள்?
எப்படி அர்த்த ராத்திரியில் வீதியில் விடுவது??
அல்லா என்ன இது சோதனை?? என கண்ணை மூடியவன்  
அல்லா என சத்தம் கேட்டு  பிரேக் பிடிக்கவும்
கார் ஒரு பெண்ணை  தூக்கி  எறிந்திருந்தது...
 
சனங்கள் ஓடிவந்து இவனை அடிக்கவர
ஏதோ நல்ல காலமாக பக்கத்தில் காவல்துறையினர் நின்றபடியால் தப்பித்தான்.
பொக்கற்றிலிருந்த பணம்
பத்திரங்கள்
கைத்தொலைபேசி அனைத்தும் பறிக்கப்பட்டு
கைத்தொலைபேசி உடனடியாகவே நிறுத்தப்பட்டு
உடனடியாகவே விலங்கு மாட்டப்பட்டுவிட்டான்...
 
கண் மூடிமுடிப்பதற்குள் இவை அத்தனையும் நடந்துவிட
இவனுக்கோ விபத்தைவிட
வீடே கண்முன்னே  நின்றது
மாட்டிக்கொள்ளப்போகிறேனே என அழாத குறையாக காவல்துறையினரிடம்  கெஞ்சினான்...
 
துனிசியிலெல்லாம் காவல்துறையை கை காட்டி கதைத்தாலே கை இருக்காது..
அவர்கள் சொல்வது தான் வேதவாக்கு
அவர்கள் சொல்வது தான் சட்டம்...
காவல்த்துறை வாகனத்தில் இவனைத்தூக்கிப்போட்டவர்கள்
காவல்த்துறை அலுவலகத்தை நோக்கி வாகனத்தை செலுத்தத்தொடங்கினர்......
 
தொடரும்...
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வஸிட்டர் வாயால் பிரம்ம ரிசி....! கலக்குங்கள் விசுகு...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வத்துடன் வாசிக்கிறேன் விசுகர்!

 

புல்லரிக்குது தான்...!

 

கனடாக்காரருக்கும், ஐரோப்பியருக்கும் 'டபுள்' புல்லரிப்பாய் இருக்கும்!

 

குளிரைச் சொன்னேன்!  தொடருங்கள்!

Link to comment
Share on other sites

நன்றாகப் போகிறது விசுகு அண்ணா.. தொடருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விசுகர் :D

 

 

 

உந்தப் பக்கம் எல்லோ வர ஏலாமல் கிடக்கிது " ஒரு ஆத்தாத்தை இருந்த வீடு வளவு ஒண்டு விக்கப் போட்டவங்கள் அங்காலை  இஞ்சாலை பாத்திற்று தாறன் எண்டு காசு மாறி பொருத்திப் போட்டன். சித்திரை பிறக்க முதல் உள்ளுக்கு போகவேணும் ஊரிப்பட்ட வேலை கிடக்கிது   வேலைக்கு  வந்தவங்கள் எல்லாம் தண்ணிக்கு கீளால நெருப்பு கொண்டுபோறவங்களா இருக்கிறாங்கள் விட்டு விலத்த ஏலாமல் கிடக்கிது "

 

வந்த வீச்சுக்கு சுத்திப்போடு மாறீற்றான் எண்டு நினைசுப் போடுவியள் எண்டுதான் விசயத்தை சொன்னனான். இனிதான் கண்ணை புளிஞ்சு புளிஞ்சு வாசிக்கப்போறன் :lol:  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
துனிசியிலெல்லாம் காவல்துறையை கை காட்டி கதைத்தாலே கை இருக்காது..
அவர்கள் சொல்வது தான் வேதவாக்கு
அவர்கள் சொல்வது தான் சட்டம்...
காவல்த்துறை வாகனத்தில் இவனைத்தூக்கிப்போட்டவர்கள்
காவல்த்துறை அலுவலகத்தை நோக்கி வாகனத்தை செலுத்தத்தொடங்கினர்......
 
தொடரும்...
 
முகமெட்டின்  மாமியார் வீட்டிலிருந்த அவனது மனைவி
அவனுக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்தாள்
கைத்தொலைபேசி நிறுத்தப்பட்டிருப்பதாக அலறியது.
வீட்டுக்கும் அழைத்தாள்
பதிலில்லை.
அரை மணித்தியாலத்தில் வருவதாக சொன்னவர்
ஒன்றரை மணித்தியாலமாகியும் இன்னும் வரவில்லை
அவளுக்குள் ஒருவித பயம்  படரத்தொடங்கியது.....
 
முகமெட்டின் தம்பியை தொலைபேசியில் அழைத்து நிலமையைச்சொன்னாள்..
அவனும் தொடர்பு கொள்ள முயன்றான்
தோல்வியே.
சரி  நான் நேரே வீட்டுக்குப்போய் பார்த்துவிட்டு தொடர்பு கொள்கின்றேன் என்றவன்
இரவானதால் தான் வளர்க்கும் நாயையும் பாதுபாப்புக்கு அழைத்துக்கொண்டு 
முகமெட்டின் வீட்டை நோக்கி போகலானான்...
 
வீட்டுக்கு போனவன்
ஆள் நடமாட்டமில்லாதது கண்டு
வீட்டின் கதவைத்தட்டினான்...
 
மிகுந்த தூக்கத்திலிருந்தவள்
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முழித்தாள்
அடிக்கடி தொலைபேசி அழைப்பு வந்து நிம்மதியான தூக்கத்தை குலைத்ததால் 
அடிக்கடி தூக்கம் கலைந்ததால் தலை வேறு இடித்தது...
 
நேரத்தைப்பார்த்தாள்
சரியாக அவன் போய் 2 மணித்தியாலமாகியிருந்தது
கதவை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்..
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது....
 
தொடரும்......
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.