Jump to content

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது துனிசியாவில் ஒரு நகரம்..

 

முகமெட்  ஓரளவு வசதியானவன்

சொந்தமாக TAXI  வைத்திருந்தான்..

திருமணமாகி  ஒரு ஆண்குழந்தை

அழகான மனைவி

சொந்தவீடு

ஆனந்தமான வழமாக வாழ்க்கை என வாழ்வு போய்க்கொண்டிருந்தது..

 

 மார்கழி மாசம்

சரியான குளிர்

மனைவி  கேட்டாள்

பிள்ளையைக்கூட்டிக்கொண்டு போய்  அம்மாவீட்டில் 2 நாள் தங்கி  வரட்டா என.

இன்றைய தினத்தின் முக்கியத்தை  உணராதவன்

அதற்கென்ன

ஆனால் நான் வேலைக்கு போய்விட்டு அங்கு வரமாட்டேன்

அங்கு வந்தால் ஆட்கள் அதிகம்

அவர்களுடன் பொழுது போகும்

ஆனால் நான் ஓய்வெடுக்கமுடியாது என.

அது வழமையாக நடப்பது என்பதால் மனைவியும் ஒத்துக்கொண்டாள்.

 

வழமை போல டக்சியை எடுத்துக்கொண்டு புறப்பட்ட முகமெட்

மனைவியைக்கொண்டு போய்  தாய்வீட்டுக்கு போகும் புகையிரத நிலையத்தில் விட்டுவிட்டு

தனது அன்றைய தினத்தை ஆரம்பிக்க புறப்பட்டான்...

 

சிறிது தூரம் போனவனை

ஒரு அழகான பெண் வழி மறித்தாள்...

வாகனத்தை நிறுத்தியவன்

பின் சீற்றில் ஏறும்படி சைகை செய்தான்...

ஏறியவள் சப்பாத்தையும் களட்டிவிட்டு

பெரும் நிம்மதிப்பெருமூச்சுடன் சீற்றில் சாய்ந்தாள்...

எங்கே போகணும் என முகமெட் கேட்க

எங்கு என்றாலும் போ என்றவள் கண்களை மூடினாள்...

 

தொடரும்........

Link to comment
Share on other sites

  • Replies 97
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறிது தூரம் போனவனை

ஒரு அழகான பெண் வழி மறித்தாள்...

வாகனத்தை நிறுத்தியவன்

பின் சீற்றில் ஏறும்படி சைகை செய்தான்...

ஏறியவள் சப்பாத்தையும் களட்டிவிட்டு

பெரும் நிம்மதிப்பெருமூச்சுடன் சீற்றில் சாய்ந்தாள்...

எங்கே போகணும் என முகமெட் கேட்க

எங்கு என்றாலும் போ என்றவள் கண்களை மூடினாள்...

 

தொடரும்........

 

வாகனத்தில் ஏறினால் போகும் இடத்தைச்சொல்லணும்

இல்லாது விட்டால் நான் எப்படி இடத்தைக்கண்டுபிடிப்பது என்று கொஞ்சம் கோபமாகக்கேட்டான் முகமெட்...

 

மீற்றரைப்போடு

எங்கு என்றர்லும் போ..

இறுதியில் எவ்வளவு பணம் என்று சொல்லு

அது தான் உன் வேலை என்றாள்...

நீ இடத்தைச்சொல்லாமல் என்னால் நகரமுடியாது

காலையிலேயே பிரச்சினை கொடுக்காதே என்றான்

சரி

ரவுணுக்குப்போ என்றவள் படுத்துவிட்டாள்...

 

ரவுணை ஒரு சுற்று சுற்றியவன் ஒரு இடத்தில் நிறுத்தி இனி என்றான்

கொஞ்சம் பொறு. பசிக்குது ஏதாவது வாங்கி வருகின்றேன் என்று இறங்கிச்சென்றவள்

2 சண்விச்சுடன் வந்தாள். அவனுக்கும் ஒன்றைக்கொடுத்து தானும் சாப்பிட்டவளை

நான் என்ன செய்ய இனி எனக்கேட்டான்..

பெரிய கடைக்குப்போ என்றாள்..

அவன் கடைப்பக்கமாக காரை நகர்த்தத்தொடங்கினான்....

அங்கும் ஒரு சுற்றுச்சுற்றியவன்

ஒரு இடத்தில் நிறுத்தினான்

Ice கிறீம் கடையைக்கண்டவள் இருவருக்கும் Ice கிறீம் வாங்கி  வந்தாள்..

 

இவன் மீண்டும் இனி என்றான் ...

கடற்கரைக்கு போ என்றாள்..

கடற்கரையை நோக்கி காரைச்செலுத்தத்தொடங்கினான்...... 

ஆனாலும் மனதில் கேள்வி

இந்தக்குளிருக்குள் கடற்கரையில் என்ன செய்யப்போகின்றாள்...

 

தொடரும்....

 

 

 

 

Link to comment
Share on other sites

கடலுக்குள் குளித்து தற்கொலை செய்யப்போறா.. :o தொடருங்கோ.. :D

(அதுசரி.. நாலு வரி மட்டும் எழுதக்கூடாது என்கிற சட்டம் எனக்கு மட்டுமோ?! :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் மீண்டும் இனி என்றான் ...

கடற்கரைக்கு போ என்றாள்..

கடற்கரையை நோக்கி காரைச்செலுத்தத்தொடங்கினான்...... 

ஆனாலும் மனதில் கேள்வி

இந்தக்குளிருக்குள் கடற்கரையில் என்ன செய்யப்போகின்றாள்...

 

தொடரும்...

 

கடற்கரையை அடைந்ததும் சிறிது நேரம் காருக்குள் இருந்தவள்

மீற்றரை நிறுத்தாதே. இதோ வருகின்றேன் என இறங்கியவள் நேரே கடலுக்குள் சென்று குளிக்கத்தொடங்கி விட்டாள்.

அவள் உடுத்த உடுப்புடன் கடலுக்குள் இறங்க

இவனுக்கே நடுங்கத்தொடங்கிவிட்டது. அவ்வளவு குளிர். 

அத்துடன் பணம் தருவாளா??

ஆளைப்பார்த்தால்

படித்த

வசதியான 

பெரிய குடும்பத்தை சேர்ந்தவள் போலுள்ளது.

ஆனால் ஏன் இப்படி  நடந்து கொள்கின்றாள்.

இவளது பின்புலம்

வாழ்க்கை

அடுத்த கட்டம் என்ன....?

யோசித்துப்பார்த்தவனுக்கு எந்த முடிவும் தெரியவில்லை

காத்திருந்தான்......

 

ஈர உடுப்போடு வந்தவள்

அப்படியே காருக்குள் ஏற முற்பட்டாள்..

இவனுக்கோ சங்கடம்

நனைந்த உடுப்புடன் அவளைப்பார்க்க சங்கடமாக இருந்தது

மிகவும் கவர்ச்சியாக தென்பட்டாள்...

இருந்தாலும் இறங்கிச்சென்றவன்

டிக்கிக்குள் தான் வைத்திருந்த துவாயை எடுத்து

தலையை துவட்டிக்கோ துடைச்சுக்கோ எனக்கொடுத்தான்

வாங்கிக்கொண்டவள் துடைத்துவிட்டு  மீண்டும் காருக்குள் ஏறி 

பசிக்குது வண்டியை நல்ல சாப்பாடு கிடைக்கும் இடத்துக்கு விடு என்றாள்...

 

சாப்பாட்டு இடத்துக்கு வந்ததும் இருவருக்கும் சாப்பாடு வாங்கி  வந்தாள்

இருவரும்  சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது.....

 

சூரியன் மறைந்து இருட்ட ஆரம்பித்திருந்தது

இன்னும் சிறிது தூரம்  தான் தான் வண்டியை செலுத்தமுடியும்

தனது இன்று ஓடக்கூடிய

தனது மீற்றர் காட்டக்கூடிய அதிக தொகை வரப்போகிறது

வந்தால் மீற்றர் அதற்கு மேல் நகராது என்பதை உணர்ந்தவன்

அவளிடம் சொன்னான்..

நான் எவ்வளவு தரணும் எனக்கேட்டவளுக்கு  தொகையைச்சொன்னான்...

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றவள் திடீரென காரைவிட்டு இறங்கி

வங்கிக்காட்டால் பண்ம் எடுக்கும் இயந்திரத்தை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்...

 

தொடரும்.........

 

தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்குள் குளித்து தற்கொலை செய்யப்போறா.. :o தொடருங்கோ.. :D

(அதுசரி.. நாலு வரி மட்டும் எழுதக்கூடாது என்கிற சட்டம் எனக்கு மட்டுமோ?! :lol: )

 

தம்பி  எவ்வழியோ

நானும் அதேவழி....

 

இந்தக்கதையை  எழுதத்தூண்டியவரே நீங்க தானையா.... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின்... முடிவு எப்படி இருக்கும் என்று, எம்மால் ஊகிக்க கடினமாக உள்ளது.
தொடருங்கள்... விசுகு. :)

Link to comment
Share on other sites

விசுகண்ணாட கதையே. அப்ப ஒண்டுமே நடக்காது. என்ன தான் ஈரத்துணியோட இருந்தாலும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் ஊகிக்க முடியுது, இந்தக் கதைக்கு ஒரு முடிவு இருக்கெண்டு...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு புல்லரிக்கும் தொடர்கதை . அதனால்  கிழமைக்கு இரண்டு தொடர் மட்டும் தானாம் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றவள் திடீரென காரைவிட்டு இறங்கி

வங்கிக்காட்டால் பண்ம் எடுக்கும் இயந்திரத்தை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்...

 

தொடரும்...

 

அவள் போவதை முகமெட் பார்த்துக்கொண்டே இருந்தான்..

திரும்பி வருவாளா?

பணத்தை தருவாளா? என்ற சந்தேகம் வலுப்பட்டிருந்தது அவனுக்கு...

பணத்தை எடுப்பது தெரிந்தது

பணத்துடன் வந்தவள் இவனுக்கு கொடுக்கவேண்டியதைக்கொடுத்து விட்டு

மீண்டும் காருக்குள் ஏறி  தொடர்ந்து போ என்றாள்.

 

மீண்டுமா?  எங்கே?

எனது நேரம் முடிவடைந்துவிட்டது என்றான் முகமெட்...

இல்லை இப்படி என்னால் வெளியே போகமுடியாது

உடுப்பு எடுக்கணும்

ஒரு உடுப்புக்கடைக்கு போ என்றாள்...

 

மீற்றரை மீண்டும் போட்டவன்

உடுப்புக்கடையில் நிறுத்தினான்

உடுப்புடன் வந்தவள்

மீண்டும் காருக்குள் ஏறி தொடர்ந்து போ என்றாள்

முகமெட்டுக்கு கோபம் வந்து விட்டது

இனி  எங்கு போவது?

 

பார்த்தால் நல்லவளாக 

படித்த  பண்பானவளாக தெரிகிறாய்

ஆனால் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?

உன்னுடைய நோக்கம் என்ன?

யார் நீ....?  என கேள்விகளை  அடுக்கிக்கொண்டே   போனான்

அவள் பதிலே சொல்லாமல் இருப்பதைப்பார்த்து

திரும்பி அவளைப்பார்த்தான்..

அவளது கண்கள் கலங்கியிருந்தன

அழுவது தெரிந்தது..

சிறிது அமைதியாக இருந்தான்.

 

சிறிய இடைவெளியின் பின் அவளாகவே பேசத்தொடங்கினாள்..

நான் திருமணமானவள்

இந்த நகரத்தின் முக்கிய நபரின் மனைவி

ஆனால் அவருடன் வாழ்வது நரகமானது

எனது உடம்பில் வெளியாருக்கு காட்டமுடியாத இடமெல்லாம் 

சுறு(ரு)ட்டால் சுட்ட காயங்கள் உள்ளன

முதுகை மட்டும்  கர்ட்டினாள்

அப்படியே வெந்து போயிருந்தது

இவன் கண்களும் பனித்தன...

அதே நேரம் எனது குடும்பம் அவருக்கு பயப்படுகிறது

என்னை ஏற்க அஞ்சுகிறார்கள்...

என்னால் அவரது முரட்டுக்குணாதிசியங்களை தாங்கமுடியல.

அது தான் புறப்பட்டு வந்துவிட்டேன்

ஆனால் எங்கு போவது? என்ன செய்வது ஒன்றும் புரியல??

கோட்டல்களுக்கும் போக என்னிடம் அடையாள அட்டை கூட இல்லை

எனக்கு இந்த உடையை  மாற்ற மட்டும் ஒரு  இடம்  ஏற்பாடு செய்து தா..

ஈரத்தால் உடம்பெல்லாம  நடுங்குகிறது

இப்படியே இங்கு இறங்கி நின்றால் செத்துவிடுவேனோ என பயமா இருக்கு என்றாள்..

 

 

என்ன செய்வது என்று இவனுக்கு ஒரே குழப்பம்

அவளுக்கு உதவலாமா?

இப்படியே விடுவது பாவமல்லவா..?

ஒரு முடிவுக்கு வந்தான்

 

சரி

எனது வீடு பக்கத்தில் தான் உள்ளது

அங்கு உனது உடுப்பை மாற்றிக்கொள்ள உதவுகின்றேன்

நான் திருமணமானவன்

எனது குடும்ப வாழ்வு நிம்மதியாக அமைதியாக போகிறது

அதில் குழப்பங்கள் வரக்கூடாது என்றான்

அவளும் அதே பெரிய உதவி.

நன்றி  என்றாள்..

 

இன்சா அல்லா என்றபடி காரை தனது வீட்டை நோக்கி ஓட்டத்தொடங்கினான்....

 

இவன் இன்சா அல்லா என்றதும் அல்லா இவன் மீது பார்வையைத்திருப்பினார்

அவர் முகத்தில் சோகம் பரவியிருந்தது

இதுவரை இவனது பைலை வைத்து பார்த்து

இவனது ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் இவனைக்காப்பாற்ற துடித்த அல்லா

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

தொடரும்....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு..... :D

தொடருங்கள்

 

பிறகு...

பொறுங்கள்....

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின்... முடிவு எப்படி இருக்கும் என்று, எம்மால் ஊகிக்க கடினமாக உள்ளது.

தொடருங்கள்... விசுகு. :)

 

முடிவு அல்லாவின் கையில் சிறி... :lol:  :D

 

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

விசுகண்ணாட கதையே. அப்ப ஒண்டுமே நடக்காது. என்ன தான் ஈரத்துணியோட இருந்தாலும். :lol:

 

உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல்

எனது உறவுகள் எனது தலையில் பொறுப்பை வைத்துவிட்டார்கள்... :)

பொறுமையாக இருங்கள் :icon_idea:

 

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் ஊகிக்க முடியுது, இந்தக் கதைக்கு ஒரு முடிவு இருக்கெண்டு...! :)

 

 

முடியும்

ஆனா முடியாது..

நன்றியண்ணா

வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

இது ஒரு புல்லரிக்கும் தொடர்கதை . அதனால்  கிழமைக்கு இரண்டு தொடர் மட்டும் தானாம் :D:lol:

 

 

திரிகளில் ஏற்பட்ட

கருத்துக்கள உறவுகளின் உரசல்களை களம் மாற்றவே இது திறக்கப்பட்டது

எனவே இழுக்கலாம்...

 

நன்றி  வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 - 3  ஆவது பதிவை வாசிக்கப் புல்லரிக்க ஆரம்பிக்கிறது. தொடருங்கள். 

 

தேவையான  அளவு வரவேற்பு  கிடைக்கவில்லை

அதனால் நிறுத்தலாம் என்றிருந்தேன்...

 

நீங்க புல்லரிக்குது என்றதே பெரிய  வரவேற்பு எனக்கு.. :icon_idea:

தொடரலாம்...

 

நன்றி 

வருகைக்கும் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் வீட்டுக்கு கூட்டிப்போகும் முடிவை எடுத்ததும்...

இனி அல்லாவாலும் உன்னைக்காப்பாற்ற முடியாது முகமெட்

விதியை மதியால் வெல்வதற்காக நான் கொடுத்த தருணங்களை எல்லாம் நீ பயன்படுத்தத்தவறிவிட்டாய்

இனி விதியே உன்னை வழி நடாத்தப்போகிறது

தொலைந்து போ என்று சலித்தபடி இவனது பைலை ஓரமாக வீசியவர்

தனது ஆத்திரத்தை தீர்க்க

விதியை மதியால் வெல்பவர்கள்

வெல்ல முயல்பவர்கள் இருக்கும் பக்கம் சென்று ஒரு பைலை எடுத்துக்கொண்டார்

அந்த பைல்

அவளுடைய  கணவனுடையது.....

 

தொடரும்....

 

வீட்டுக்கு வந்தவுடன்

குளிக்கும் இடத்தைக்காட்டி குளித்து உடுப்புக்களை மாற்றும்படி சொல்லிவிட்டு

இருவருக்கும் தேநீர் போட்டான் முகமெட்.

 

தேநீர் போட்டுக்கொண்டிருக்கும் போது அவனது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு

காலையில் அவசரமாக போகும்  பொது

பிள்ளையின் முக்கிய  பொருட்கள் அடங்கிய தோழ்ப்பையை கதவடியில் விட்டு விட்டு வந்துவிட்டேன்

அதற்குள் இருக்கும் பொருட்களை  கொடுக்காது விட்டால் மகன் இரவுக்க படுக்கமாட்டான்

கொண்டு வந்து தரமுடியுமா எனக்கேட்டாள்.

அப்பொழுது தான் இவனும் கவனித்தான் அது வாசலடியில் கிடப்பதை.

ஓம் ஒரு அரை மணித்தியாலத்தில் கொண்டு வந்து தருகின்றேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே

அவள் உடுப்பு மாற்றி விட்டு வந்து இவர்களது படுக்கை அறையை எட்டிப்பார்த்தபடி வந்து அமர்ந்தாள்..

 

இவனுக்கு அவசரம்

பதபதைப்பு

அவளோ தேனீரைக்குடித்தபடியே அரை நித்திரைக்கு போய்விட்டிருந்தாள்..

அவளை உலுப்பியவன் 

தான் புறப்படணும் என்பதைச்சொன்னான்..

 

எத்தனையோ நாளாச்சு நான் நித்திரை கொண்டு....

உனது கட்டிலைக்கண்டதும் தூக்கம் தூக்கமாக வருகுது

நீ போய் வரும் வரை உனது கட்டிலில் நித்திரை கொள்கின்றேனே எனக்கெஞ்சினாள்..

இவனுக்கு என்ன சொல்வதென்றெ தெரியவில்லை

அவள் எழும்பி  நடப்பாள் போலவும் தெரியவில்லை

பாவமாகவும் இருந்தது..

 

சரி நான் 2 மணித்தியாலத்தில் திரும்பி  வந்துவிடுவேன்

அது வரை நித்திரை கொள்.

நான் வந்தவுடன்  போய்விடணும் என்றான்

கடவுளைக்கண்டது போல் கையெடுத்துக்கும்பிட்டாள்...

போகும் போது திறப்பைக்கொடுத்து உள்ளே பூட்டிக்கோ

நான் வந்து எனது 5 விரல்களும் கதவில் படும்படியாக 5 தரம் தட்டுவேன்

அப்படி தட்டினால் மட்டுமே திறக்கணும்

மற்றும் வீட்டு தொலைபேசி அழைப்பு வந்தால் எடுக்கக்கூடாது எனச்சொல்லிவிட்டு

TAXI எடுத்துக்கொண்டு புறப்பட்டான்

விதி விளையாட காத்திருக்கு என்பதையறியாமல்.....

 

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகும் போது திறப்பைக்கொடுத்து உள்ளே பூட்டிக்கோ

நான் வந்து எனது 5 விரல்களும் கதவில் படும்படியாக 5 தரம் தட்டுவேன்

அப்படி தட்டினால் மட்டுமே திறக்கணும்

மற்றும் வீட்டு தொலைபேசி அழைப்பு வந்தால் எடுக்கக்கூடாது எனச்சொல்லிவிட்டு

TAXI எடுத்துக்கொண்டு புறப்பட்டான்

விதி விளையாட காத்திருக்கு என்பதையறியாமல்.....

 

தொடரும்...

 
 
 
காரை ஓட்டிக்கொண்டிருந்தாலும் மனசு முழுவதும்
அவளும்
அவளுக்கு நடந்த கொடுமைகளும்
இன்றைய தனது பொழுதும்
இன்னும் அவள் தன்னை விட்டுப்போகாததால் வரப்போகும் சங்கடங்களும்
என மனது அலைந்தது அவனுக்கு.....
 
நான் வந்து எப்படி இவளை அனுப்புவது?
மீண்டும் மீண்டும் உதவி கேட்பாளா?
எங்கு போவாள்?
எப்படி அர்த்த ராத்திரியில் வீதியில் விடுவது??
அல்லா என்ன இது சோதனை?? என கண்ணை மூடியவன்  
அல்லா என சத்தம் கேட்டு  பிரேக் பிடிக்கவும்
கார் ஒரு பெண்ணை  தூக்கி  எறிந்திருந்தது...
 
சனங்கள் ஓடிவந்து இவனை அடிக்கவர
ஏதோ நல்ல காலமாக பக்கத்தில் காவல்துறையினர் நின்றபடியால் தப்பித்தான்.
பொக்கற்றிலிருந்த பணம்
பத்திரங்கள்
கைத்தொலைபேசி அனைத்தும் பறிக்கப்பட்டு
கைத்தொலைபேசி உடனடியாகவே நிறுத்தப்பட்டு
உடனடியாகவே விலங்கு மாட்டப்பட்டுவிட்டான்...
 
கண் மூடிமுடிப்பதற்குள் இவை அத்தனையும் நடந்துவிட
இவனுக்கோ விபத்தைவிட
வீடே கண்முன்னே  நின்றது
மாட்டிக்கொள்ளப்போகிறேனே என அழாத குறையாக காவல்துறையினரிடம்  கெஞ்சினான்...
 
துனிசியிலெல்லாம் காவல்துறையை கை காட்டி கதைத்தாலே கை இருக்காது..
அவர்கள் சொல்வது தான் வேதவாக்கு
அவர்கள் சொல்வது தான் சட்டம்...
காவல்த்துறை வாகனத்தில் இவனைத்தூக்கிப்போட்டவர்கள்
காவல்த்துறை அலுவலகத்தை நோக்கி வாகனத்தை செலுத்தத்தொடங்கினர்......
 
தொடரும்...
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வஸிட்டர் வாயால் பிரம்ம ரிசி....! கலக்குங்கள் விசுகு...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வத்துடன் வாசிக்கிறேன் விசுகர்!

 

புல்லரிக்குது தான்...!

 

கனடாக்காரருக்கும், ஐரோப்பியருக்கும் 'டபுள்' புல்லரிப்பாய் இருக்கும்!

 

குளிரைச் சொன்னேன்!  தொடருங்கள்!

Link to comment
Share on other sites

நன்றாகப் போகிறது விசுகு அண்ணா.. தொடருங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விசுகர் :D

 

 

 

உந்தப் பக்கம் எல்லோ வர ஏலாமல் கிடக்கிது " ஒரு ஆத்தாத்தை இருந்த வீடு வளவு ஒண்டு விக்கப் போட்டவங்கள் அங்காலை  இஞ்சாலை பாத்திற்று தாறன் எண்டு காசு மாறி பொருத்திப் போட்டன். சித்திரை பிறக்க முதல் உள்ளுக்கு போகவேணும் ஊரிப்பட்ட வேலை கிடக்கிது   வேலைக்கு  வந்தவங்கள் எல்லாம் தண்ணிக்கு கீளால நெருப்பு கொண்டுபோறவங்களா இருக்கிறாங்கள் விட்டு விலத்த ஏலாமல் கிடக்கிது "

 

வந்த வீச்சுக்கு சுத்திப்போடு மாறீற்றான் எண்டு நினைசுப் போடுவியள் எண்டுதான் விசயத்தை சொன்னனான். இனிதான் கண்ணை புளிஞ்சு புளிஞ்சு வாசிக்கப்போறன் :lol:  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
துனிசியிலெல்லாம் காவல்துறையை கை காட்டி கதைத்தாலே கை இருக்காது..
அவர்கள் சொல்வது தான் வேதவாக்கு
அவர்கள் சொல்வது தான் சட்டம்...
காவல்த்துறை வாகனத்தில் இவனைத்தூக்கிப்போட்டவர்கள்
காவல்த்துறை அலுவலகத்தை நோக்கி வாகனத்தை செலுத்தத்தொடங்கினர்......
 
தொடரும்...
 
முகமெட்டின்  மாமியார் வீட்டிலிருந்த அவனது மனைவி
அவனுக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்தாள்
கைத்தொலைபேசி நிறுத்தப்பட்டிருப்பதாக அலறியது.
வீட்டுக்கும் அழைத்தாள்
பதிலில்லை.
அரை மணித்தியாலத்தில் வருவதாக சொன்னவர்
ஒன்றரை மணித்தியாலமாகியும் இன்னும் வரவில்லை
அவளுக்குள் ஒருவித பயம்  படரத்தொடங்கியது.....
 
முகமெட்டின் தம்பியை தொலைபேசியில் அழைத்து நிலமையைச்சொன்னாள்..
அவனும் தொடர்பு கொள்ள முயன்றான்
தோல்வியே.
சரி  நான் நேரே வீட்டுக்குப்போய் பார்த்துவிட்டு தொடர்பு கொள்கின்றேன் என்றவன்
இரவானதால் தான் வளர்க்கும் நாயையும் பாதுபாப்புக்கு அழைத்துக்கொண்டு 
முகமெட்டின் வீட்டை நோக்கி போகலானான்...
 
வீட்டுக்கு போனவன்
ஆள் நடமாட்டமில்லாதது கண்டு
வீட்டின் கதவைத்தட்டினான்...
 
மிகுந்த தூக்கத்திலிருந்தவள்
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முழித்தாள்
அடிக்கடி தொலைபேசி அழைப்பு வந்து நிம்மதியான தூக்கத்தை குலைத்ததால் 
அடிக்கடி தூக்கம் கலைந்ததால் தலை வேறு இடித்தது...
 
நேரத்தைப்பார்த்தாள்
சரியாக அவன் போய் 2 மணித்தியாலமாகியிருந்தது
கதவை நோக்கி  நடக்கத்தொடங்கினாள்..
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது....
 
தொடரும்......
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.