Jump to content

கனடாவில் ஆயுத எழுத்து ...


Recommended Posts

கனடாவில் ஆயுத எழுத்து ...

கனடாவில் ஆயுத எழுத்து நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் காலம் March 14th 2015..இடம் BURROWS HALL Community Center 1081 Progress avenue Scarborough Ontario M1B 5Z6 நேரம் - 1.30PM TO 5PM    யாழ் கள உறவுகள் அனைவரையும்  வரவேற்கிறேன் .நன்றி

10351336_785098984877332_300118638488023

·

Link to comment
Share on other sites

சாத்திரி நீங்களும் வருகின்றீர்களா?

 

நான் கண்டிப்பாக வர முயல்வேன்.. இன்ஷா அல்லாஹ்

Link to comment
Share on other sites

சாத்திரி நீங்களும் வருகின்றீர்களா?

 

நான் கண்டிப்பாக வர முயல்வேன்.. இன்ஷா அல்லாஹ்

 

வருவதுக்கான முயற்சியில் இருக்கிறேன் .முதலில் லீவு கிடைக்கவேண்டும் ..இரண்டாவது பயண சீட்டு விலை அதிகமாக உள்ளது .இரண்டும் சரி வந்தால் கனடாவில் கால் வைக்கலாம் ..

 

பி .கு ...டிக்கெட் போட்டுத் தரச்சொல்லி றோ விடம் கேட்டிருக்கிறேன் பாக்கலாம்

1528458_785266968193867_6227593127550881

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 14 உங்களுடைய நூல் மார்ச் 15 மீராபாரதியின் நூல் இரண்டும் பிள்ளைகளின் மார்ச் விடுமுறைக்குள் வருகின்றன. பிள்ளைகளின் மார்ச் விடுமுறைக்கு எங்கும் செல்லாது இருந்தால் கண்டிப்பாக நூல் விமர்சன நிகழ்வுக்கு வருவேன் சாத்தர்.

Link to comment
Share on other sites

மார்ச் 14 உங்களுடைய நூல் மார்ச் 15 மீராபாரதியின் நூல் இரண்டும் பிள்ளைகளின் மார்ச் விடுமுறைக்குள் வருகின்றன. பிள்ளைகளின் மார்ச் விடுமுறைக்கு எங்கும் செல்லாது இருந்தால் கண்டிப்பாக நூல் விமர்சன நிகழ்வுக்கு வருவேன் சாத்தர்.

 

முடிந்தால் வாருங்கள் நானும் வர முயற்சி செய்கிறேன்

Link to comment
Share on other sites

 

பி .கு ...டிக்கெட் போட்டுத் தரச்சொல்லி றோ விடம் கேட்டிருக்கிறேன் பாக்கலாம்

 

 

 

 

அண்மையில் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் திடீரென்று "இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினர் தமிழ் மக்களை கொன்று குவித்தனர் அதனால் புலிகளின் இந்திய இராணுவத்திற்கு எதிரான யுத்தம் மிகவும் நியாயம்" என்று ஒரு செய்தி வாசித்திருந்தேன். 

அடடா, திடீர் என்று என்ன நடந்தது உலகளவில் என்று நான் ஆராயும் போது, அது ஒரு காலத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரை எதிர்த்து தீரமுடன் போராடிய வீரன் ஆகிய சாத்திரி அவர்கள் இந்திய அமைதிகாக்கும் படையின் அதிகாரி ஒருவரையே தன் புத்தக வெளியீட்டுக்கு வரவழைத்து மேடையில் வைத்தே இந்திய படையினரின் அட்டூழியங்களை ஒப்புக் கொள்ள வைத்த விடயம் தான் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களின் மனசாட்சியை கதைக்க வைத்தது என்று அறிந்து கொண்டேன்

 

அந்தளவுக்கு, ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்தவர்களின் மனசாட்சியையே உலுப்பக்கூடிய அதி சிறந்த மானுடப் போராளி நீங்கள் கேவலம் றோவிடம் டிக்கெட் தொடர்பாக கேட்டது மிகவும் கவலையளிக்கின்றது. ஆகக் குறைந்தது CIA விடமாவது கேட்டு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

அண்மையில் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் திடீரென்று "இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினர் தமிழ் மக்களை கொன்று குவித்தனர் அதனால் புலிகளின் இந்திய இராணுவத்திற்கு எதிரான யுத்தம் மிகவும் நியாயம்" என்று ஒரு செய்தி வாசித்திருந்தேன். 

அடடா, திடீர் என்று என்ன நடந்தது உலகளவில் என்று நான் ஆராயும் போது, அது ஒரு காலத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரை எதிர்த்து தீரமுடன் போராடிய வீரன் ஆகிய சாத்திரி அவர்கள் இந்திய அமைதிகாக்கும் படையின் அதிகாரி ஒருவரையே தன் புத்தக வெளியீட்டுக்கு வரவழைத்து மேடையில் வைத்தே இந்திய படையினரின் அட்டூழியங்களை ஒப்புக் கொள்ள வைத்த விடயம் தான் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களின் மனசாட்சியை கதைக்க வைத்தது என்று அறிந்து கொண்டேன்

 

அந்தளவுக்கு, ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்தவர்களின் மனசாட்சியையே உலுப்பக்கூடிய அதி சிறந்த மானுடப் போராளி நீங்கள் கேவலம் றோவிடம் டிக்கெட் தொடர்பாக கேட்டது மிகவும் கவலையளிக்கின்றது. ஆகக் குறைந்தது CIA விடமாவது கேட்டு இருக்கலாம்.

 

நம்ம ஆக்களுக்கு தெரிந்து உளவு பிரிவு என்றால்  உலகத்திலேயே ..றோ .. அல்லது  இலங்கை புலனாய்வு பிரிவு (இலங்கை புலனாய்வு பிரிவின் ஆங்கிலம் தெரியாது ),மகிந்தா போனப்பிறகு அங்கை பவர் இல்லை  அடுத்த உலக புலனாய்வு ...றோ ...தான்  அதை தவிர வேறை எதுவும் தெரியாது அதுதான் அவர்களிடம் டிக்கெட் ....டிக்கெட் ..டிக்கெட்

 

..பி கு ..நீங்கள் எப்பவுமே உலகத் தரம் ..என்னால் அப்படி யோசிக்க முடியாது நான் எப்பவும் லோக்கல்

Link to comment
Share on other sites

மீரா  புத்தகம் கேட்டிருந்தீர்கள்   ஆயுத எழுத்து நாவலை லண்டனில் இப்பொழுது பெற்றுக்கொள்ளலாம் .விலாசம் .
317 High Street North , Eastham , London , E12 6SL , phone number is 07817262980..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. உந்த இடத்திற்கு போக 2 மணித்தியாலம் எடுக்கும். எதுக்கும் அடுத்த கிழமை முயற்சி செய்கிறேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நன்றி. உந்த இடத்திற்கு போக 2 மணித்தியாலம் எடுக்கும். எதுக்கும் அடுத்த கிழமை முயற்சி செய்கிறேன்

உங்களுக்கு தபால் மூலமும் அனுப்பி வைப்பார்கள் .தொடர்பு கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

 

வருவதுக்கான முயற்சியில் இருக்கிறேன் .முதலில் லீவு கிடைக்கவேண்டும் ..இரண்டாவது பயண சீட்டு விலை அதிகமாக உள்ளது .இரண்டும் சரி வந்தால் கனடாவில் கால் வைக்கலாம் ..

 

பி .கு ...டிக்கெட் போட்டுத் தரச்சொல்லி றோ விடம் கேட்டிருக்கிறேன் பாக்கலாம்

1528458_785266968193867_6227593127550881

 

றோவுக்கு பணக் கஷ்டமாக இருந்தால் கே.பியிடம் கேட்டு பார்க்கலாம்   :D  :lol: 

அது சரி சாத்திரி அண்ணை ராஜேந்திர சோழனுக்கு கடைசி வரைக்கும் ஜப்பானிய பெண் கிடைக்கவேயில்லையா?  :D

நம்ம ஆக்களுக்கு தெரிந்து உளவு பிரிவு என்றால்  உலகத்திலேயே ..றோ .. அல்லது  இலங்கை புலனாய்வு பிரிவு (இலங்கை புலனாய்வு பிரிவின் ஆங்கிலம் தெரியாது ),மகிந்தா போனப்பிறகு அங்கை பவர் இல்லை  அடுத்த உலக புலனாய்வு ...றோ ...தான்  அதை தவிர வேறை எதுவும் தெரியாது அதுதான் அவர்களிடம் டிக்கெட் ....டிக்கெட் ..டிக்கெட்

 

..பி கு ..நீங்கள் எப்பவுமே உலகத் தரம் ..என்னால் அப்படி யோசிக்க முடியாது நான் எப்பவும் லோக்கல்

 

இன்னும் இரண்டு மேலதிகமாக தெரியும் சாத்திரி அண்ணை. 
ஒண்டு மொசாட் & மற்றது கே ஜி பி  :D
Link to comment
Share on other sites

நம்ம ஆக்களுக்கு தெரிந்து உளவு பிரிவு என்றால்  உலகத்திலேயே ..றோ .. அல்லது  இலங்கை புலனாய்வு பிரிவு (இலங்கை புலனாய்வு பிரிவின் ஆங்கிலம் தெரியாது ),மகிந்தா போனப்பிறகு அங்கை பவர் இல்லை  அடுத்த உலக புலனாய்வு ...றோ ...தான்  அதை தவிர வேறை எதுவும் தெரியாது அதுதான் அவர்களிடம் டிக்கெட் ....டிக்கெட் ..டிக்கெட்

 

..பி கு ..நீங்கள் எப்பவுமே உலகத் தரம் ..என்னால் அப்படி யோசிக்க முடியாது நான் எப்பவும் லோக்கல்

 

நீங்கள் எப்பவும் லோக்கல்தான் சாத்திரி அண்ணை ஆனால் ராஜேந்திர சோழன் ஜப்பானிய பெண்தான் 
வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராமில்ல.   :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகள் யாரேனும் சாத்துவின் நூல்விமர்சனத்திற்குப் போகிறீர்களா?

Link to comment
Share on other sites

ஆயுத எழுத்திலும் நிறைய இடத்தில அண்ணன் சக்கை சியாம் நல்லா சக்கை அடைஞ்சிருக்கிறார் எண்டு புத்தகத்தை வாசிச்ச புண்ணியவான்கள் சொல்லினை. :D  :D  :D
நிஜமாலுமா?  :lol:  :icon_idea:
Link to comment
Share on other sites

ஒலி  ஒளிப்பதிவு கனடா..நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் பார்க்கவும்

 

https://www.youtube.com/playlist?list=PL-qG_O5awlE4No6tHOlaigevFI2_uwvnv

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி சாத்திரியார்
ஜேர்மனியில் எங்கேயும் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

இணைப்புக்களுக்கு நன்றி சாத்திரியார்

ஜேர்மனியில் எங்கேயும் கிடைக்குமா?

 

யேர்மனியில் டோட்மண்டில்  மே மாதம் வெளியிடவுள்ளேன் அதற்கு முதல் புத்தகம் தேவையாயின் முகப்புதகத்தில் கோமகனோடு தொடர்பு கொள்ளவும் ..அல்லது ஜெர்மனியில் சபேசனோடு தொடர்பு கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் டோட்மண்டில்  மே மாதம் வெளியிடவுள்ளேன் அதற்கு முதல் புத்தகம் தேவையாயின் முகப்புதகத்தில் கோமகனோடு தொடர்பு கொள்ளவும் ..அல்லது ஜெர்மனியில் சபேசனோடு தொடர்பு கொள்ளுங்கள்

 

நன்றி சாத்திரியார்

சபேசனைக் கடையில் கண்டால் வேண்டிக்கொள்கின்றேன்

எனக்கு அழைப்பிதழ் வேண்டாம் :D

கட்டாயம் வருவேன்

 

Link to comment
Share on other sites

ஆயுத எழுத்து  - சாத்திரி 
 
மூச்சு விடாமல் வாசித்து முடித்த நாவல்கள்  பட்டியலில் இதுவும் அடங்குகின்றது .
 
எம்மவர் நாவல் ,எமது விடுதலை போராட்டத்தை பற்றியது ,ஆசிரியர் விடுதலை புலிகளின்  இயக்கத்தில் இருந்தவர் ,எமது போராட்டத்தின் இதுவரை எவரும் எழுதாத ஆயுத விநியோகம் பற்றி இருக்கு, இவை எல்லாவற்றையும் விட பலர் எழுத விரும்பாத பக்கங்களையும் தொட்டு செல்கின்றது, இவற்றை விட வேறு என்ன காரணம் வேண்டும் மூச்சு விடாமல் வாசிப்பதற்கு ,
 
நாவலை வாசிக்கும் போது  சற்றும் அன்னியமில்லாமல் எமது மண்ணில் சயிக்கிளில் திரிந்தது போல ஒரு  உணர்வு வந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது கல்லு முள்ளு குத்தவும் தவறவில்லை . 
 
ஆசியரின் தற்கால அரசியலை வைத்து நாவலை வாசிக்காமலோ சிலர் எதிர்க்க  தொடங்கிவிட்டார்கள் .வெளியீட்டிலும் தடை என்று  நாவல் இலவச விளம்பரத்துடன் வெளிவந்துவிட்டது , இப்போ இலக்கிய உலகில் இது வெகு சகஜம் .
83 ஆண்டு இனக்கலவரத்துடன் விடுதலை போராட்டத்தில் இணைந்துகொண்ட பல்லாயிரம் கணக்கான போராளிகளில் ஒருவரின் கதை . இதுவரை வெவ்வேறு இயக்கங்களில் இருந்த  போராளிகள் எழுதிய  பத்து நாவல்கள் வரை படித்துவிட்டேன்  .எல்லாவற்றிலும் பொதுப்படையான சில விடயங்கள்  இருந்தது .
 
தமது செயற்பாட்டை  , தமது அமைப்பை நியாயப்படுத்துவது .
 
தான் நேரடியாக சம்பந்தப்பட்ட விடயங்களை ஓரளவு நேர்மையாகவும்  மற்றவர்கள் சொல்லி அறிந்த  விடயங்கள் என்று சிலவற்றை  பிழையான அல்லது மிகைப்படுத்திய தரவுகளுடன்  எழுதுவது ,
 
சுய தம்பட்டம்  , தனது கதையை எழுதும் போது அது தவிர்க்க முடியாததோ அல்லது வாசிப்பவர்களுக்கு தன்னால் முடியாததை அவர் செய்ததால் அப்படிப்படுகின்றதோ தெரியாது .
 
நாவலுக்குள் ,
 
அப்பாவிடம் பேச்சு ,அம்மாவின் அரவணைப்பு, நண்பர்களுடன் உல்லாசம் ,வாலிப காதல் என்று இருந்த ஒரு சாதாரண  இளைஞன் "அவனின் " வாழ்க்கை , விடுதலை பயிற்சி ஆயுதம் என்று திசை மாற்றிய அரசியலில் தொடங்குகின்றது .வேறு சில இயக்கங்களுக்கு முதலில் போக முயற்சித்து பின்னர் ரிவோல்வரின் பரிசம் புலிகளில் இணையவைக்கின்றது .
பீட்டரின் நட்பு  அவனின் காதல்  அதானல் தண்டனை பின் தற்கொலை  ,கார்க்கார சிங்கராசாவின் மகனின் கொலை ,செட்டியார் மகளின் காதல் இப்படி பல சம்பவங்கள் . எமது போராட்டத்தில் ஆயுதத்தை கண்டதும் எம்மவருக்கு  பிடித்த முதல் வியாதியின் விளைவுகள்  இவை  ஆனால் இவற்றை விடுதலைக்கான ஒரு விதையாக அந்த நாட்களில் எண்ணிய அறியாமை .
 
மாற்று இயக்க முரண்பாடுகள் முற்றி கொலைவெறி ஆட்டத்தில் முடிந்த மாற்று இயக்க தடைகள் .அதையும் பெருமையாக நினைத்த அரசியல் வறுமை. மயூரனின் சினைப்பர் ,டெலோ தலைவர் சிறி சுரேசின் M16 பறிக்க பாய்ந்தது ,டோச்சனின் சூடு என்று அவரது இயக்க பாணியிலேயே புல்லரிக்க வைக்கின்றார் .
 
இந்தியன் ஆமியின் வருகை . அவர்களின் பேயாட்டம் ,மக்கள் அவலம் . மக்கள் பட்ட இன்னல்கள். ரவிக்கு கிரீசு போல எமக்கும் ரணத்தை உண்டாக்குகின்றது .மாற்று இயக்கங்கள் இலங்கை அரசுடன் சேர்ந்து செய்த துரோகங்கள் அதில் அவன் பட்ட கஷ்டங்களும் அடக்கம் .
 
தாக்குதலில் ஏற்பட்ட காயம் அவனை வெளிநாடு செல்ல வைக்கின்றது .நாட்டில் நடந்த போராட்டத்தை பற்றியே அதிகம் வாசித்தவர்களுக்கு அவனின் பதிவுகள் பல புது விடயங்களை சொல்லி நிற்கின்றது. உட்கொலை , தூள் கடத்தல் ,மது ,மாது  போன்ற விடயங்கள் இயக்க கட்டுப்பாடு, தூய்மை என்று வளர்த்துவைத்த இயக்கத்தின் பிம்பம்  அடிபட்டு போக  இங்குதான் பலர் வெறுப்பிற்கு "அவன்" உள்ளாகின்றான்  .வெளியில் இருந்து இயக்க வேலை செய்தவர்களுக்கு இவை ஒன்றும் புதியவிடயமல்ல. திரைக்கு பின்னால் நடந்த விடயங்களை ஏன் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதும் கேள்விக்குரியதுதான் . 
 
நாவல் பின்பு அவன் களம் மாற தலைநகரில் நடந்த சில தாக்குதல்கள் , புலிகளின்  அளப்பரிய அர்ப்பணிப்புகள் ,தற்கொலை தாக்குதல்கள் ,வீரசாகங்கள் ,துல்லியமான புலனாய்வுகள் ,ஆயுத பரிமாற்றங்கள்  என்பனவற்றையும் கண்முன்னே படமாக கொண்டுவருகின்றது .உதயண்ணை காற்று புகாத இடங்களில் Mr invisible ஆக  புகுந்து விளையாடுகின்றார் .
 
உலகமெல்லாம் சுற்றி இவ்வளவு சாகசங்களும் நடத்திக்கொண்டிருந்த "அவன் " பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது இனி கட்டமைப்பை கலைத்துவிட்டு எல்லோரும் ஏதாவது நாடுகளில சொந்த வாழ்க்கைக்கு போகலாம் என்ற வசனத்துடன் கலையவேண்டிய அவலம் பெரும் கொடுமைதான் .நாட்டில் இருந்தவர்களுக்கு இந்த நிலை வரவில்லை .
இது வரை வாசித்த மற்ற இயக்க  நாவல்களில் இருந்த  அரசியல் சார்ந்த பிரச்சனைகள் எதுவும் இல்லாமல்  ஆயுத போராட்டத்தில் இருக்கும் ஒரு போராளி எப்படி தலைமையின் கட்டளையின் கீழ் விசுவாசமாக செயற்படுகின்றான் என்பதே இந்த நாவல் .
 
முரண்பாடு,
 
மாற்று இயக்க தடைகள் ,தாக்குதல் பற்றிய சில விடயங்கள் இதுவரை நான் அறிந்ததில் இருந்து பெரிதும் மாறுபட்டு இருந்தது .டெலோ அழிப்பு ,ஈ பி ஆர் எல் எப் புலிகளின் முகாமை தாக்கியது ,குறிப்பாக மட்டக்களப்பில் புளொட் வாசு கண்ணன் பவானந்தன் ஆகியோரை கருணா அழித்தது. இதில் சம்பந்தப்பட் ஒருவர் எனது நண்பர் அவர் சொல்வது முற்றிலும் வேறு கதை . இது அநேகமாக நிராஜ் டேவிட்  கட்டி விடும்  கதைகளில் ஒன்றாக இருக்கலாம் .
 
எமது விடுதலை போரட்டம் வெறுமன எமது நாட்டில் நடந்த  அரசியல், ஆயுதபோராட்டம் அல்ல தமிழ்நாட்டில் ,இந்தியாவில்,சர்வதேசத்தில் பல பரிணாமங்களில் பல மட்டங்களில் நடந்தது  .நாட்டில் நடந்த ஆயுத போராட்டத்தை பற்றி மட்டுமே எழுதிவந்தவர்கள் மத்தியில் சாத்திரியின் ஆயுத எழுத்து  புதிய பல விடயங்களை  சொல்லுவதால் முக்கியம் பெறுகின்றது .
 
எமது விடுதலை போராட்டம் பற்றி பலர்  அறியாத பக்கங்களை  அதில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் எழுதவேண்டும்  என்பதே பலர் ஆதங்கம் அந்த ரீதியில் சாத்திரியின் ஆயுத எழுத்து ஒரு முக்கிய படைப்புத்தான்.
Link to comment
Share on other sites

எமது விடுதலை போராட்டம் பற்றி பலர்  அறியாத பக்கங்களை  அதில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் எழுதவேண்டும்  என்பதே ஆதங்கம்

Link to comment
Share on other sites

அர்ஜுன்   ஆயுத எழுத்து மீதான உங்கள் பார்வைக்கு நன்றி .நிகழ்வு படங்களில்  உங்களை காணவில்லை .

Link to comment
Share on other sites

அர்ஜுன்   ஆயுத எழுத்து மீதான உங்கள் பார்வைக்கு நன்றி .நிகழ்வு படங்களில்  உங்களை காணவில்லை .

நிகழ்வை ஒருங்கமைக்க என்னை கேட்டிருந்தார்கள் , ஓம் என்றும் சொல்லிவைத்தேன் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது .

அதுதான் ஒரு பிரதிநிதியை  :o  அனுப்பி வைத்தேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் சாஸ்திரி அண்ணா,
என்னால் போகமுடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.
புத்தகத்தை நண்பர் மீரா பாரதியிடம் பெற்றுக்கொள்கிறேன். 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.