Jump to content

அமெரிக்காவில் நூறு கோடி மின்னஞ்சல் முகவரிகள் திருட்டு! - மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு உறுதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Email-thift-080315-400-world.jpg

அமெரிக்காவில் இணையதளம் வாயிலாக 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி, அந்த முகவரிகளுக்கு விளம்பர அஞ்சல் அனுப்பியதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய வழக்கில் மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜியார் ஹோங் வூ (25), வியட் குவோக் குயேன் (28) ஆகிய வியத்நாமைச் சேர்ந்த இருவரும், டேவிட் மானுவேல் சான்டாஸ் டாசில்வா (33) என்ற கனடா நாட்டைச் சேர்ந்தவரும் குற்றவாளிகள் என அட்லாண்டா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

   

இதுகுறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி - இரண்டு வணிக நிறுவனங்களின் மின்னணு தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் வாயிலாக ஊடுருவிய அந்த நபர்கள், அந்த நிறுவனங்களின் 100 கோடி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடியுள்ளனர். மேலும், அந்த முகவரிகளுக்கு அந்த நிறுவனங்களின் இணையதளத் தொடர்பைப் பயன்படுத்தி விளம்பர அஞ்சல்களை அவர்கள் அனுப்பியுள்ளனர்.

 

இந்த விளம்பரங்களால் பலனடைந்த நிறுவனங்களிடமிருந்து 20 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.12.6 கோடி) வருவாயாகப் பெற்றுள்ளனர். இணையதளத்தைப் பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமான அளவில் மின்னணுத் தகவல்கள் திருடப்பட்ட மிகச் சில வழக்குகளில் இதுவும் ஒன்று என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

http://seithy.com/breifNews.php?newsID=127893&category=WorldNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.