Jump to content

அம்மாவும் நானும்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா - முதலில் சிறிய குறிப்பு.

 

எனதம்மா

எங்கள் குடும்ப விளக்கு..

குடிக்கு அடிமையான எனது தகப்பனாருடன் 60 ஆண்டு பொறுமையோடு குடும்பம் நடாத்தி

எம்மை வளர்த்தவர். 

எனது தகப்பனாருக்கு குடி தான்  என்றும் முதலாவது.  

எப்பொழுதும் வெள்ளை வேட்டி கட்டும் அவர்

3 தலைப்புக்களில் 3 நாளைக்கு குடிக்கத்தேவையான பணத்தை பதுக்கி  வைத்து

மீதியையே அம்மாவிடம் கொடுப்பார் எம்மை வளர்க்க.

3 அண்ணன்களுக்கு ஒரு பெண் பிள்ளையாக பிறந்த எனது தாயார்

பாடசாலைக்கே சென்றதில்லை.

இத்தனைக்கும் அவரது 3 அண்ணன்களும் பின்நாளில் அதிபர்களாக இருந்தார்கள்.

அதிலொருத்தர்  இலங்கையில் தமிழ் மற்றும் சைவசமயநெறிப்படிப்பு  சார்ந்து இன்றுவரை முதலிடத்திலுள்ள வித்துவான் பொன்.அ. கனகசபையாவார்.

34 பேரப்பிள்ளைகளையும்

32 பூட்டப்பிள்ளையையும் கண்டவர்

முதலாவது பூட்டப்பையனுக்கு 27 வயசு.

அவன் திருமணம் முடித்தால் அடுத்த தலைமுறையையும் கண்டுவிடுவார்..

காணவேண்டும் என்பதே எனது கனவு.

அம்மாவின் இன்றைய வயசு 88.

சீனி கொழுப்பு நெஞ்சுவருத்தம் என பாவிக்கும் மருந்துக்கள் நாளொன்றுக்கு 20க்கு மேல்.

 

இனி விடயத்துக்கு வருகின்றேன்.

 

தம்பி வீட்டில் இருக்கும் அவரைப்பார்க்க நானும் மனைவி மற்றும் மக்களும் சனிக்கிழமைகளில் செல்வது வழமை.

நேற்றும் சென்றிருந்தேன்.

அம்மாவின் மடியில் தலைவைத்து சிறிது படுத்துவிட்டு

அவருக்கு வலிக்கும் என்பதால் பக்கத்தில் இருந்தேன்.

(வழமையாக போனவுடன் சிறிது நேரம் மடியில் படுப்பதும் அவர்தலையை வாரி விடுவதும் சிறுவயதிலிருந்து பழக்கம்.  இது எனக்கு மட்டும் தான்.  தம்பி கேட்பான் நானும் தான் மடியில் படுக்கின்றேன்.  இந்தக்கை எனக்கு ஒரு நாளும் எனக்கு தலைவாரி விட்டதில்லை என.   5 பெண் பிள்ளைகளுக்குப்பின் பிறந்ததால் வந்த பாசமது)

 

 

தம்பியின் சிறிய மகள் சொக்கலேற் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுத்தபடி வந்தாள்

நானும் எடுத்தேன்

பக்கத்தில் பார்த்தால் அம்மா கையை நீட்டியபடி.

எனக்குத்தெரியும் அவருக்கு அது கூடாது என்று.

ஆனால் கையை   நீட்டியிருப்பது எனது அம்மா

என்ன வேண்டுமென்றாலும் வாங்கிக்கொடுப்பேன் அவாவுக்கு

ஒரு சொக்கலேற்றுக்கா யோசிப்பேன்

எடுத்துக்கொடுத்தேன்

அந்த மாதிரி ருசித்துச்சாப்பிடத்தொடங்கினார்.

 

இது அவரைப்பராமரிப்பவர் கண்ணில்  பட்டுவிட்டது

இஞ்ச வாங்கோ

நேற்று உங்கட தம்பி 

அவாவுக்கு  லா சப்பலில் இருந்து பலப்பழத்தை வாங்கி வந்து கொடுத்து அவாவுக்கு மூச்சுவாங்கி 

ரொம்ப கடினமாகிவிட்டது

ராத்திரி முழுவதும் நித்திரை கொள்ளாது சிரமப்பட்டார்

இப்பத்தான் ஒரு மாதிரி இருக்கிறார்

இப்ப நீங்க சொக்கலேற் கொடுக்குறீர்கள்

ஏதாவது நடந்தால் என்னை குறை சொல்லக்கூடாது என்று முடித்தார்..

 

அம்மாவைப்பார்த்தேன்

அவர் முன்பைவிட அவசரமாக சொக்கலேற்றை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்

பறித்துவிடுவார்கள் என்ற பயம் போலும்...

 

அப்படியே உடல்  முழுவதும் ஒரு முறை ஆட்டம் கண்டு

எனது இயலாமை 

வேதனை

என்ன செய்வது என்ற தவிப்பு

அப்படியே கண்ணெல்லாம் சிவந்து ......

 

ஒன்றுமே சொல்லாது வருகின்றேன் என்றபடி அம்மாவுக்கு கை காட்டிவிட்டு

அவரும் கை காட்ட வந்துவிட்டேன்.

இரவு முழுவதும் நித்திரை வரவில்லை

மனைவி கேட்டார் என்னப்பா  நடந்தது இன்று நித்திரை கொள்ளாதிருக்கிறீர்கள் என்று.

விசயத்தைச்சொன்னேன்.

அதற்குத்தானே மருந்து குடிக்கிறார்

கொஞ்சம் ஆசைக்கு சாப்பிடட்டுமே என்றார்.

ஆனாலும் மனசு கேட்கல.

இரவு முழுவதும் மனச்சங்கடம்.

அவர் நூறு வருசம் வாழணும் என்றும் ஆசை (இன்றும் 12 வருடங்கள்)

அவர் எல்லாவற்றையும் அனுபவிக்கணும் என்றும் ஆசை.

ஆனால் ஒன்றைத்தானே செய்யமுடியும்........??

 

 

கொடுக்கலாமா?

வேண்டாமா உறவுகளே..?

 

குறிப்பு : வயசான அப்பா அம்மாவை வைத்திருப்பவர்கள் படும் இது போன்ற வேதனையை

அதனால் மனதால் சிரமப்படுபவர்களும் மற்றவர்களும் பார்க்கவும்

அனுபவங்களைப்பகிரவும் என்றே இங்கே பதிகின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கலாம் என மனம் சொல்லுது, கொடுக்கக் கூடாது என அறிவு சொல்லுது..!

ஆகையால் வாழும் தெய்வம்-தாய் எம்முடனேயே இருக்க, மனதை கல்லாக்கிவிட்டு அவரின் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் எப்பொருளையும் மறைப்பதே நன்று..

Link to comment
Share on other sites

கொடுக்கலாம் என்பதே என் கருத்து, நான் அப்படிக் கொடுத்து இருக்கிறேன். விரும்பியதுகளைச் சாப்பிடாமல் 100 வருடம் இருப்பதிலும் பார்க்க இருக்கும் போது விரும்பியதைச் சாப்பிடலாம் என்பதே என் கருத்து.

 

உங்கள் அம்மா நீங்கள் தான் முடிவு எடுக்க வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கலாம். அவ ஆசைப்படுவதை எனி எப்போ சாப்பிடுவது?

 

சும்மா ஒன்றும் சாப்பிடாமல், குடிக்காமல் நீண்ட நாட்கள் ஆசையுடன் இருந்துவிட்டு போவதை விட, எல்லாவற்றையும் ஆசை தீர அனுபவித்துவிட்டு போவது தான் எனது விருப்பம். ஒரு சின்னப்பிரச்சினை, வருத்தம் வந்து படுக்கையில் இருந்தால் மற்றவர்களுக்கு பிரச்சினையாகப் போய்விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகர்! உங்கள் அம்மா தினசரி மருந்துகள் பாவிக்கின்றபடியால் விரும்பிய உணவுவகைகளை ஆசைதீர சாப்பிடாமல் ஆசைக்கு சாப்பிடலாம் என நினைக்கின்றேன்.  இரவு நேரங்களை தவிர்த்து பகல் நேரங்களில் ஆசைப்பட்டதை செய்து குடுக்கலாம் என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் ஆசையை நிறைவெற்றலாம் என்பது எனது கருத்து....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைப் படுகிறா என்பற்காக அதிகம் கொடுக்கக் கூடாது. பின் வேதனைப் படுவதும் அவதான்...! நாவின் ருசிக்காக எதுவும் சிறிதளவு கொடுக்கலாம், ஆனால் அதுவும் தப்பு. மருந்து அள்ளியா உண்கிறோம்..! அதுவும் துளிகள் தானே என்பதை நினைக்க வேண்டும்...!

 

நாங்கள் எமது மாமியையும் , தாயாரையும் எங்கள் வீட்டிலேயே வைத்துப் பார்த்தோம், இரு வருடங்களுக்கு முன் மாமி ( என் சதியின் தாயார்) காலமாகினார். அவவுக்கு இதயத்தில் பற்றி வைத்திருந்தது. அத்துடன் வயோதிபத்துக்குரிய இழுப்பு, மூட்டு வருத்தங்கள் எனப் பலவும் இருந்தன. அதனால் பத்தியமான உணவுவகைகள்தான் அவவுக்கு. சாக்கிலேட் மிக விருப்பம், ஆனல் எப்பவாவது சிறு துண்டு எடுப்பா. கொண்டாட்டங்களில் கூட சுய கட்டுப்பாட்டுடன் சிறிதளவுதான்.. நல்லூரில் வசித்தவ., படித்தவ ஆங்கிலம் சரளம்!

 

என் அம்மா 5 மாதங்களுக்கு முன் காலமானார். அவ சிறுவயதில் இருந்தே மாவிடித்து ,நெல்லுக் குத்தி வாழ்ந்தவ. பின் மாவிட்டபுரத்தில் அதிக காலம் வசித்தவ. அதிகம் பனைமர உணவு வகைகள், குத்தரிசிச் சோறு என்று அந்தக் கிராமத்துக்குரிய இயற்கையான உணவு வகைகள். 83 வயதுவரை வாழ்ந்தா. ஒரு வருடமளவில்தான் பார்வை சிறிது மங்கள், பல்லுகளும் பறவாயில்லை. பீட்சாவெல்லாம் இழுத்து இழுத்து சாப்பிடுவா. ஆஸ்பத்திரி என்று போய் படுத்ததில்லை. கடைசி மூன்டு மாதமளவில்தான் நடக்க ஏலாமல் படுக்கையில். ஆனால் எது கொடுத்தாலும் சாப்பிடுவா. பான் வாழைப் பழம், மைக் டொனால்ட் எல்லாம் நல்ல விருப்பம். கடைசி 20 நாளுக்கு முன் ஒரு சின்னப் புண் இடுப்பில். வீட்டிலேயே ஆஸ்பத்திரிபோல் எல்லா வசதிகளும் செய்து பார்த்தோம். சாப்பிடுவது குறைந்து விட்டது.தொன்டையில் நோவு. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகவேணும் என்டார்கள், ஆம்புலன்ஸ் வந்தது , கட்டிலில் கிடத்தி வீட்டு வாசலைக் கடக்கும் போது முன்னுக்கு இருந்த பிள்ளையார் படத்தைக் கையெடுத்துக் கும்பிட்டா,  மருமகளைக் கொஞ்சினா, மகளையும் கொஞ்சிப் போட்டு போனவ இரு நாட்களில் இறைவனிடம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கலாம் என மனம் சொல்லுது, கொடுக்கக் கூடாது என அறிவு சொல்லுது..!

ஆகையால் வாழும் தெய்வம்-தாய் எம்முடனேயே இருக்க, மனதை கல்லாக்கிவிட்டு அவரின் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் எப்பொருளையும் மறைப்பதே நன்று..

 

நேற்றே  உங்கள் இந்த கருத்தை வாசித்தேன்

மிகவும் ஆறுதலாக இருந்தது

 

நன்றி  ஐயா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் நிலைமை பிள்ளைகளுக்குத்தான் தெரியும்.
எப்போதாவது அவரின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளை வழங்கலாம்.
எப்போதும் வழங்கினால் ஆபத்தாகும் என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வயது வந்தவர்கள்,நோயாளிகள் எந்த வித வருத்தங்களும் இல்லாது றூறாண்டுகள் வாழ்ந்தால் விரும்பியதை சாப்பிடலாம்,குடிக்கலாம் எந்த வித தடையும் போட ஏலாது..ஆனால் இனிப்பு,உப்பு இப்படியானவற்றை எடுக்கக் கூடாது என்று தெரிந்தும் தேடி,தேடிச் சாப்பிட்டு விட்டு நீண்ட காலத்திற்கு கட்டிலிலில் கிடக்கும் நிலை ஏற்பட்டால் எத்தனை விதமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.நானும் வயது வந்த பெற்றோருடன் அதுவும் உடல் நலக் குறைவோடு இருப்பவர்களோடு தான் இருக்கிறன்..நான் இதை எழுதுவதற்கு காரணம் தொடர்ந்து வைத்து பராமரிக்கும் ஒருவருக்கும் இடைக்கிடை போய்ப் பார்ப்பவர்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கிறது...எப்படிப் பார்த்தாலும் கடசியில் நம் உறவுகளிடத்தில் நன்மையும் கேட்க முடியாது என்பதும் உண்மை.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ விரும்பியதை அளவோடு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம்.

அது சரி 34 பேரப்பிள்ளைகளிலும் 32 பூட்டப்பிள்ளைகளிலும் எத்தனை போராளிகள் மாவீரர்கள் இருக்குறார்கள் என்பதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!

Link to comment
Share on other sites

அவ விரும்பியதை அளவோடு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம்.

அது சரி 34 பேரப்பிள்ளைகளிலும் 32 பூட்டப்பிள்ளைகளிலும் எத்தனை போராளிகள் மாவீரர்கள் இருக்குறார்கள் என்பதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!

என்ன கேள்வி இது? அவர்கள் எல்லாம் சுக போகமாக அமெரிக்கா,கனடா, ஐரோப்பாவில்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கள் இடத்தில் இருந்திருந்தால்... எனது மனது மிகவும் சங்கடப்பட்டிருக்கும்!

 

ஆனால்.. பின்வருமாறு தான் நடந்திருப்பேன் என்று எண்ணுகின்றேன்!

 

அம்மா.. கோவிக்கக் கூடாது....!

 

நான் கொஞ்சம் கடிச்சுப் போட்டுத்தான் தருவேன்!

 

எனது மனத்தைக் கல்லாக்கி... ஒரு சின்னத்துண்டு மட்டுமே கொடுத்திருப்பேன்! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ விரும்பியதை அளவோடு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம்.

அது சரி 34 பேரப்பிள்ளைகளிலும் 32 பூட்டப்பிள்ளைகளிலும் எத்தனை போராளிகள் மாவீரர்கள் இருக்குறார்கள் என்பதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!

என்ன கேள்வி இது? அவர்கள் எல்லாம் சுக போகமாக அமெரிக்கா,கனடா, ஐரோப்பாவில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உறவுகளே பதிலுக்கும்

அக்கறைக்கும் அறிவுரைக்கும்...

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ விரும்பியதை அளவோடு கொடுக்கலாம் என்பது எனது எண்ணம்.

அது சரி 34 பேரப்பிள்ளைகளிலும் 32 பூட்டப்பிள்ளைகளிலும் எத்தனை போராளிகள் மாவீரர்கள் இருக்குறார்கள் என்பதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!

 

அம்மாமேல் பெரிய பாசமான  பிள்ளை நீங்கள்

இதன் மூலம் தான் நாம் அறிமுகமானோம்.

எனவே பேசலாம்

ஆனால் இதற்குள் வேண்டாம்..

 

வேறு ஒரு திரியை  ஆரம்பியுங்கள்....

நான் எப்பவுமே திறந்த புத்தகம்...

Link to comment
Share on other sites

விசுகு அண்ணனின் வயதை நான் தப்பாக கணித்திருந்து விட்டேன் போலும்....

அம்மா செஞ்சரி அடிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு

நூறு வயசல்ல அதற்கு மேலே இருந்தாலும் சந்தோசமே.

ஆனால் சுகமாக இருக்க வேண்டும்.

 

கூடிய காலம் இருக்க வேண்டுமென்பதை விட இருக்கும் வரை சுகமாக இருக்க வேண்டும்.

 

மருந்துகளை விட பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பக்கத்தில் இருந்தால் அதுவே ஒரு தனிச் சுகம்.

உங்கள் அம்மா சுகமாகவும் நீண்ட ஆயுளோடும் இருக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின்அம்மா பாசத்தைகண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன் .

அம்மா ஆசைபடுகையில் எல்லாவற்றையும் கொடுக்க தான் மனம் விரும்பும் . அளவோடு கொடுங்கள் . ஆனால் நிச்சயம்

அம்மாவின் உடம்புக்கு தீங்கு என்று தெரிந்தால் அவருக்கு காட்டாமல் தவிர்த்து விடுங்கள் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதி  

ஆலோசனை சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.