Jump to content

ஒவ்வொரு ஆணும், "ஷேவ்" எடுக்கும் போது, கவனிக்க வேண்டியவை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Protect-Your-Skin-with-Best-Shaving-Crea

 

ஒவ்வொரு ஆணும்.. தெரிந்து கொள்ள வேண்டிய,  "ஷேவிங்" பற்றிய விஷயங்கள்!!!

 

பெண்கள் எப்படி தங்களை அழகாக வெளிக்காட்ட புருவங்களை ட்ரிம் செய்தல், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்றுகிறோர்களோ, அதேப் போல் ஆண்கள் தங்களின் அழகை அதிகரித்துக்காட்ட, ஷேவிங் செய்வார்கள். ஆனால் சில ஆண்களுக்கு எப்படி சரியான முறையில் ஷேவிங் செய்வதென்றே தெரியாது. இதனால் பலரும் ஷேவிங் செய்த பின்னர் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

 

ஷேவிங் மூலம் 'மிஸ்டர் பெர்பெக்ட்' என்ற பெயர் வாங்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்...

ஆண்கள் பொதுவாக ஷேவிங் செய்யும் போது ஒருசில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அதன்படி நடந்தால், ஷேவிங் செய்த பின்னர் முகம் மென்மையாகவும், பிரச்சனையின்றியும் இருக்கும். இங்கு சரியான வழியில் ஷேவிங் செய்வது எப்படி என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றி, அழகான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறுங்கள்.

 

ஷேவிங் க்ரீம் தீர்ந்துவிட்டதா? கவலையவிடுங்க...

சுடுநீரில் முகத்தை கழுவவும்
ஷேவிங் செய்யும் முன், முகத்தை சுடுநீரில் கழுவி, துணியால் துடைக்காமல் அப்படியே விட வேண்டும். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து, ஷேவிங் செய்யும் போது ஈஸியாக முடி வெளிவந்துவிடும்.

 

ஷேவிங் ஜெல்
பின் ஷேவிங் ஜெல்லை முகத்தில் தடவி 2-3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஷேவிங் க்ரீம் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, ஷேவிங் செய்யும் போது முடி எளிமையாக வெளிவரவும் உதவும். ஒருவேளை உங்களுக்கு தாடி அதிகம் இருந்தால், ஷேவிங் க்ரீமை அதிகம் தடவி ஊற வையுங்கள்.

ஷேவிங்..
அடுத்து ஷேவிங் மிஷின் கொண்டு, வளைவுகள் அதிகம் உள்ள இடங்களில் ஷேவிங் செய்யாமல், முதலில் மேடு பள்ளங்கள் இல்லாத கன்னங்களில் ஷேவிங் செய்ய வேண்டும், இதனால் கடினமான இடங்களில் உள்ள முடி ஷேவிங் க்ரீம்மில் நன்கு ஊறி, ஷேவிங் செய்யும் போது பின் ஈஸியாக வந்துவிடும். இதனால் சருமத்தில் எவ்வித வெட்டுக் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கலாம்.
 

ஷேவிங்கிற்கு பிறகு.....
ஷேவிங் செய்து முடித்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகள் திறக்கப்படும். பின் ஷேவிங்க்கிற்கு பிறகு தடவ வேண்டிய ஜெல் மற்றும் ஆஃப்டர் ஷேவ் தடவி, சருமத்தில் ஈரப்பசையூட்டினால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். முக்கியமாக நீங்கள் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ்வில் ஆல்கஹால் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆல்கஹால் கலந்த பொருட்கள் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.

 

கற்றாழை ஜெல்
முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின்னர், வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும், கருத்து பகிர்விற்கும்... நன்றி வன்னியன். :) 
 

எனக்கு மெசினால்... ஷேவ் எடுத்தால், ஷேவ் எடுத்த திருப்தி இராது.
கிறீம் பூசி, வில்கின்சன் பிளேடால் ஷேவ் எடுப்பது தான் பிடிக்கும்.
அத்துடன், ஒவ்வொரு நாளும்.... கிளீன் ஷேவ் எடுப்பேன்.sbathroom_grooming_shaving_100-100.gif?w
என்னை... முகத்தில், முடியுடன் ஒரு நாளும் காணவில்லை என்று...

வேலை இடத்தில் சொல்லிக் கொள்வதை கேட்க... எனக்கு பெருமையாக இருக்கும். :D

 

வேலை இடத்து பெண்கள்..... எனது கன்னம் மிருதுவாக, முடி குத்தாமல்... இருக்கின்றது என்று தடவிப் பார்ப்பார்கள். அதற்காகவே.... தினமும், ஷேவ் எடுப்பேன். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் திங்கள், புதன், சனிகளில்  மட்டும். கண்ணுக்கு முன்னால் கை எட்டும் தூரத்தில் எது கிடக்குதோ (சோப், ஷாம்பு, கிறீம்) அதை கையாலேயே தேய்த்து விட்டு  big ரேசரால் (ஒன்று அல்லது இரு பிளேட்) அழகாக மழித்து விடுவேன். அதன் பின் தோயுறது. எந்த லோஷனும் பாவிப்பதில்லை....!  :)

Link to comment
Share on other sites

நான் திங்கள், புதன், சனிகளில்  மட்டும். கண்ணுக்கு முன்னால் கை எட்டும் தூரத்தில் எது கிடக்குதோ (சோப், ஷாம்பு, கிறீம்) அதை கையாலேயே தேய்த்து விட்டு  big ரேசரால் (ஒன்று அல்லது இரு பிளேட்) அழகாக மழித்து விடுவேன். அதன் பின் தோயுறது. எந்த லோஷனும் பாவிப்பதில்லை....!  :)

 

காட்டுவாழ்க்கை வாழ்ந்த எங்களுக்கு இந்த ஆடம்பரம் எதற்கு. நானும் உங்கள் வகை தான். கிரீம், ஆப்டர் ஷேவ் கைகெட்டிய இடத்தில் இருந்தால் போடுவேன். அதுவும் என் மனுசிக்கு அந்த மணம் பிடிக்காது என்பதால் வார விடுமுறையில் எதுவும் போடுவது இல்லை.

பொருளாதார தடைக்குள் வாழ்ந்த போது, பனம் பழம் தடவி குளிச்ச எனக்கு இதுகள் ஒரு தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முகச்சவரம் செய்து 20வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அவ்வப்போது தாடியை தடவுவதிலும் ஒரு தனிச்சுகம் உண்டு.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் குளிக்கும் இடத்திலேயே நாலைந்து தரம் எடுத்து போட்டு எறியிறது வைத்திருக்கிறேன்.

குளிக்கும் போது ஒரு இழுவை.


நான் முகச்சவரம் செய்து 20வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அவ்வப்போது தாடியை தடவுவதிலும் ஒரு தனிச்சுகம் உண்டு.  :)

சிலருக்கு தாடி வைத்திருப்பது நன்றாக இருக்கும்.

தாடி இல்லாமல் பார்க்க முடியாமல் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கற்றாழை ஜெல்
முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின்னர், வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்."

 

இது சரியான தகவல், நான் சேவ் செய்தபின் கத்தாளையை முகத்தில் தடவிடுவேன், நல்ல வழு வழுப்பாக தோலிருக்கும்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முகச்சவரம் செய்து 20வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அவ்வப்போது தாடியை தடவுவதிலும் ஒரு தனிச்சுகம் உண்டு.  :)

 

சவரம் செய்து... 20 வருடங்களுக்கு மேல் என்றால்....

ஒசாமா பின்லாடனின், தாடியை... விட உங்களுக்கு மிக நீளமாக இருக்குமே..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கற்றாழை ஜெல்

முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின்னர், வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்."

 

இது சரியான தகவல், நான் சேவ் செய்தபின் கத்தாளையை முகத்தில் தடவிடுவேன், நல்ல வழு வழுப்பாக தோலிருக்கும்

 

 

107790_Etienne-Aigner-Statement-After-Sh
 
நாங்கள், ஜேர்மனியில்... கத்தாளைக்கு எங்கை போறது உடையார்.

நான், ஷேவ் எடுத்த பின்... மேலே உள்ள After Schave Lottion பாவிப்பேன்.

வாசமும்... அந்த மாதிரி சுண்டி இழுக்கும், அந்த வாசம் நாள் முழுக்க புத்துணர்ச்சியை தரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒவ்வொரு நாளும் 'சவரம்' பண்ண வேண்டியிருக்கும்!

 

அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வதுண்டு...அட... ஒரு ஆணாய்ப் பிறந்து எவ்வளவெல்லாம் கஷ்படவேண்டியிருக்கு.. எண்டு..! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒவ்வொரு நாளும் 'சவரம்' பண்ண வேண்டியிருக்கும்!

 

அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வதுண்டு...அட... ஒரு ஆணாய்ப் பிறந்து எவ்வளவெல்லாம் கஷ்படவேண்டியிருக்கு.. எண்டு..! :o

 

பெண்ணாய் பிறந்தால், நாள் முழுக்க அடிக்கடி.... மேக்கப் போட வேண்டியிருக்கும், புங்கை.

அதனை விட.. காலையில் மட்டும் மூன்று நிமிடம் செலவழித்து... சவரம் எடுப்பது, எவ்வளவோ மேல். :D

Link to comment
Share on other sites

இப்ப நானும் தினமும் சேவ் எடுக்கும் ரகம் தான் .முன்னர் தாடி விட்டிருந்தேன் .

 

பெரிதாக நேரம் செலவழிக்காமல் இரண்டு நிமிடங்களில் சட்டு புட்டேன்று அலுவலை முடித்துவிடுவன்.ஒன்றிரண்டு மயிர்கள் தப்பியும் விடும் .அதனால் இடைக்கிடை மனைவியார் அழகாக எடுத்துவிடுவார்  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நானும் தினமும் ஷேவிங் செய்கின்றனான். கிறீமை தடவி விட்டு உடனேயே ஷேவ் செய்து விடுவேன். 4 அல்லது 5 பிளேட்கள் உள்ள ரேசரால் மழித்தால் தான் திருப்தியாக இருக்கும்

 

 

அது சரி,  'முக்கியமான' இடங்களை ஷேவ் செய்ய இலகுவான வழிகள் இருக்கா? மனுசருக்கு வெறுபேத்தும் விடயம் இதுதான்.. எவ்வளவு கஷடப்பட வேண்டி இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

அது சரி,  'முக்கியமான' இடங்களை ஷேவ் செய்ய இலகுவான வழிகள் இருக்கா? மனுசருக்கு வெறுபேத்தும் விடயம் இதுதான்.. எவ்வளவு கஷடப்பட வேண்டி இருக்கும்

 

கமக்கட்டு, ஷேவ் எடுப்பதில் பிரச்சினை இல்லை.

ஆனால்... மற்ற இடம் ஷேவ் எடுக்கப் போகும் போது தான், இரத்தக் களரியாகி... வாழ்க்கையே வெறுத்துப் போகும். :D  :lol:

Link to comment
Share on other sites

நான் பொதுவாக ரெசார் பாவித்து மழிப்பது இல்லை. கிழமைக்கு ஒருகால் அல்லது இரண்டு தரம் ஹேர் ட்ரிம்மர் (Hair trimmer) மூலம் ஜீரோ சைஸ்ல் கட் பண்ணி விடுவன். எனவே கிரீம், அப்டெர் ஷேவ் பிரச்சினை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு இன்னமும் மீசை முளைக்கவில்லை.
செவ் எடுக்கும் அனுபவம் இல்லை 
Link to comment
Share on other sites

இருக்கிறவர்கள் வைத்திருக்கிறார்கள் இல்லாதவர்கள் வரைஞ்சுக்கிறார்கள்

மூலம் :- வடிவேலு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களாக நான் பாவிப்பது இந்தவகை..

பிறந்தநாள் பரிசாக மக்கள் வாங்கித்தந்தார்கள்..

 

philips_rq1145_32_d1305283761185_A_13534

இங்க கனபேருக்கு வீட்டில் இன்னும் 2 கைகள் இருப்பது தெரியாத போலிருக்கு...

இதுக்கு கூட பாவிக்காது விட்டால்... :wub:  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களாக நான் பாவிப்பது இந்தவகை..

பிறந்தநாள் பரிசாக மக்கள் வாங்கித்தந்தார்கள்..

 

philips_rq1145_32_d1305283761185_A_13534

இங்க கனபேருக்கு வீட்டில் இன்னும் 2 கைகள் இருப்பது தெரியாத போலிருக்கு...

இதுக்கு கூட பாவிக்காது விட்டால்... :wub:  :D 

 

.. #14ம் நம்பரிலை எழுதினவர் தெரியாத்தனமாய் வாயை விட்டுட்டார்.... :D  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களாக நான் பாவிப்பது இந்தவகை..

பிறந்தநாள் பரிசாக மக்கள் வாங்கித்தந்தார்கள்..

 

philips_rq1145_32_d1305283761185_A_13534

இங்க கனபேருக்கு வீட்டில் இன்னும் 2 கைகள் இருப்பது தெரியாத போலிருக்கு...

இதுக்கு கூட பாவிக்காது விட்டால்... :wub:  :D 

விசுகு எனக்கும் இப்படி ஒன்று பாவிக்கலாம் என்று பிள்ளைகளிடம் சொன்னேன்.

இது பாவித்தால் முகம் கறுப்பாகி விடுமாம்.இப்பவே அப்படி இப்படி இன்னும் கறுப்பாக போறீங்களோ என்றார்கள் அத்துடன் விட்டு விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு எனக்கும் இப்படி ஒன்று பாவிக்கலாம் என்று பிள்ளைகளிடம் சொன்னேன்.

இது பாவித்தால் முகம் கறுப்பாகி விடுமாம்.இப்பவே அப்படி இப்படி இன்னும் கறுப்பாக போறீங்களோ என்றார்கள் அத்துடன் விட்டு விட்டேன்.

நாங்கள் இப்பவும் இது தான்.. ஈழப்பிரியன்! 

 

ஞாபகமிருக்கோ? :lol:

 

old-3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை ஆரம்பத்தில் நானும் இது தான் பாவித்தேன்.இழுத்துப் போட்டு எறிவது கொஞ்சம் சுலபமாக இருந்ததால் அதையே பழகிவிட்டேன்.

அடுத்தது எனக்கு மயிர் அவ்வளவு அடர்த்தி கிடையாது.

எனது மகன் இப்போதும் நீங்கள் பாவிக்கிற மாதிரி தான் வைத்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்க கனபேருக்கு வீட்டில் இன்னும் 2 கைகள் இருப்பது தெரியாத போலிருக்கு...

இதுக்கு கூட பாவிக்காது விட்டால்... :wub:  :D 

 

விசுகரைப் போல, எல்லாருக்கும்.... அந்தப் பாக்கியம் கிடைக்காது. :D  :lol:

Link to comment
Share on other sites

இப்போதெல்லாம் பெண்களின் பதிவுகளும் பின்னூட்டங்களும் யாழில் குறைந்துவிட்டதுபோல் தெரிகிறது!. :(
 
ஆண்கள் அவர்களது உரிமைகளை உதாசீனம் செய்கிறார்களா...?  :o
 
அன்றி இந்த மஞ்சள்நிற எழுத்து வரிகள் அதிகமாகி அவர்களைத் தயங்கச் செய்கிறதோ..??  smiley5907.gif  
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.