Jump to content

அமெரிக்காவில் கை வைத்த புலிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே Google இல் கைவைத்த புலிகள் எண்டு ஒரு ஆக்கம் யாழில வந்து பலத்த சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் அது ஏன் எழுதப்பட்டது எண்டதை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. இன்று மாற்றுக் கருத்து எண்ட பெயரில் எப்படியெல்லாம் புலிகளை அர்ச்சிக்க முடியுமோ அப்படியெல்லாம் அர்ச்சிக்கும்.. யதார்த்தம் தெரியாமல் சும்மா கண்ட மேனிக்கு பாசிசம் ஜனநாயக புரட்சி எண்டெல்லாம் கதை விடும் ஒரு சில கருத்தாளர்களை மனதில் வைத்து அவர்கள் இப்படித்தான் எழுதவார்கள் என்ற ஓட்டத்தில் அது எழுதப்பட்டது. அதே போலத்தான் இந்த ஆக்கமும். இதை தமிழில் வஞ்சப்புகழ்ச்சி என கூறுவார்கள் என நினைக்கிறேன்.. ( இதற்கு மேலும் இதை சிரியசாக எடுத்துக்கொண்டு யாரும் எழுதினால் நான் பொறுப்பல்ல )

ஏற்கனவே "கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்" என்று விவரமான கட்டுரையொன்றை எழுதியிருந்தோம்.

பாசிசப்புலிகளின் உலகளாவிய அடாவடிகளை இனங்கண்டு அவற்றை வேரோடு களைய அனைவரையும் அணிதிரளும் வண்ணம் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

அதை யாரும் பொருட்படுத்தவில்லை என்பதற்கப்பால் எம்மை நையாண்டி வேறு செய்தார்கள்.

இப்போது பார்த்தீர்களா புலிகளின் வேலையை?

இப்போதாவது நம்புகிறீர்களா நாம் முன்பு சொன்னதை?

அப்படி என்னதான் செய்தார்கள் புலிகள்?

அமெரிக்காவில் அண்மையில் நடந்த தேர்தலில் தமது கைவரிசையைக் காட்டிவிட்டார்கள்.

அங்கு நடந்த பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் புலிகளின் தீவிர ஆதரவாளர் டேனி டேவிஸ் 87 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

புலிகளின் பணத்தில் வன்னி சென்று அங்கு புலிகளைச் சந்தித்துத் திரும்பி வந்தவர் இவர். இவரின் பயங்கரவாதிகளுடனான தொடர்பு எல்லா ஊடகங்களிலும் பிரச்சினையாக்கப்பட்டது. இந்தத் தேர்தலிலும் இவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா இடத்திலும் இவரின் பயங்கரவாதத் தொடர்பு பற்றி தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. புலிகளுடனான இவரின் தொடர்பைக் கருத்திற்கொண்டே இவருக்கெதிரான தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அவ்வகையில் இவருக்குப் படுதோல்வி ஏற்படுமென்று நினைத்திருந்தவேளைஇ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் இந்த புலி ஆதரவாளர்.

இது எப்படிச் சாத்தியம்?

இங்குத்தான் புலிகளின் கைவரிசை காட்டப்பட்டுள்ளது. தேர்தலில் மோசடி செய்து அவரை வெல்ல வைத்துள்ளனர் புலிகள். கொஞ்சநஞ்ச வாக்கு வித்தியாச வெற்றியல்லஇ 87 சதவீத வாக்குகளைப்பெற்று மாபெரும் வெற்றி.

தங்களுக்குத் தெரிந்த அனைத்து அடாவடி முறைகளையும் பாவித்து இவரை வெற்றிபெற வைத்த புலிகளின் கைங்கர்யம் அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு மட்டுமன்றி உலகத்துக்கே ஆபத்து. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இப்போது அமெரிக்காவையே கடித்துவிட்டனர் பாசிசப்புலிகள்.

இதை நான் மட்டும் சொல்லவில்லை. 'நெருப்பு" என்கிற சர்வதேசப் புகழ்பெற்ற இணையத்தளமும் சொல்கிறது.

அதைச் சிலர் நக்கலடிக்கிறார்கள். விசயம் தெரியாத சின்னப்பொடியங்கள்.

நாம் கூகிள் விவகாரத்தில் அன்றே சொன்னதை இப்போது வேறும் சிலர் புரியத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் வாசகர்களேஇ

இப்பயங்கரத்தை நாம் எதிர்கொள்ள வேண்டாமா?

ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியபடி புலிகளின் கை உலகம் முழுவதும் நீள்கிறது. உடனடியாக இதைத் தறிக்க வேண்டும். இதற்கு எமக்குத் தோள்கொடுங்கள். மக்களைத் திரட்டி 'புதிய ஜனநாயகப் புரட்சி'க்கு (இது என்ன சாமான் எண்டு தெரியாத ஆக்கள் குழம்ப வேண்டாம்.) வித்திடுவதன் மூலம் பாசிசப் புலிகளின் ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம்.

புலிகளின் இப்படியான தகிடுதத்தங்களை நன்குணர்ந்த ஒருவர் எமக்குப் பக்கத்துணையாகக் கிடைத்திருக்கிறார். புலிகளை முறியடிக்க அவரால் மட்டுமே முடியும். தமிழரை மட்டுமன்றி அமெரிக்காவை - ஏன் உலகத்தையே பயங்கரவாதத்தின் பிடியினின்று காப்பாற்ற காலம் எமக்குத் தந்த தலைவன் கருணாவின் துணையோடு எமது இயக்கம் இந்தப் பாசிசப் புலிகளை முறியடிக்கப் புறப்படுகிறது.

"தூரம் அதிகமில்லை -துயரம்

வழியிலில்லை"

_____________

"வாருங்கள் வீரர்களே -ஒன்றாய்ச்

சேருங்கள் தோழர்களே"

தோழமை வேண்டி

-உம்மாண்டி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...அமெரிக்காவிலும் கையை வைத்துவிட்டர்களா பாசிசப்புலிகள்? :rolleyes: உலகதிற்கே படியளக்கும் அமெரிக்காவுக்கே இப்படியென்றால்....................ம் :D கொதித்தெழுங்கள் தோழர்களே. :D :P :P

Link to comment
Share on other sites

ஆ...அமெரிக்காவிலும் கையை வைத்துவிட்டர்களா பாசிசப்புலிகள்? :rolleyes: உலகதிற்கே படியளக்கும் அமெரிக்காவுக்கே இப்படியென்றால்....................ம் :lol: கொதித்தெழுங்கள் தோழர்களே. :lol: :P :P

நான் கடைசியாக கேள்விப்பட்டதன் படி டேனி டேவிஸ் வென்ற மானிலத்துக்கு

நேட்டோ படைகள் தாக்குவதுக்கு தயாரகிவிட்டார்கள் என்றும் அதுக்கு உளவு வேலை

செய்ய லண்டனில் இருந்து டமில் F15புலன்நாய்வுத்துறை

தங்கள் புலன் ஆய்வு திறமைகளை பாவித்து தாக்கவேண்டிய இடங்களை இனம் கண்டு கொண்டு இருபதாகவும் தெரிவிக்க படுகிறது அத்துடன் எப்படியும் டேனி டேவிஸ் அவர் ஆதரவு புலிகளிடமும் இருந்து மீட்டுவிடுவார்கள் என்று யாழ்நேட்டோ படைகளின் பேச்சாளர் தேரிவித்துள்ளார்................................

.........

Link to comment
Share on other sites

;) இது நகைச்சுவை!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.