Jump to content

உனக்காக...


Recommended Posts

Page%2BPoem%2BUnakkaaga.jpg

 

சுடும் மழைக் காலம்...  குளிர் வெயிலாய் நீ வந்தாய் !
இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !!
மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை,
இதழிடை  பாடும்....  இன்னிசையாய் நீ அமைந்தாய் !!!

கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...!
நிரந்தர வதிவிடம்...  மனங்களும் கொடுத்திடும்...!!
சிலதரம் பார்த்திடும்...    நால்-விழிகளும்  கலந்திடும்...!
வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!!

எங்கே நீ சென்றாலும்...

என் நினைவும் பின்னால் அலையுமடி..!
அங்கே  வானவில் வீடு கட்டி... 

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள்  பூக்காதா... ?
பூமொட்டு விரியும்  தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??
என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்....  கொஞ்சம் நிக்காதா..?
உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??

எனக்கே எனக்கென எனக்காக...  உனையே தந்தாய் எனக்காக!
உயிரென உணர்வென உனக்காக.... என் காதலை தந்தேன் உனக்காக!!
வருவாய் தருவாய் வரமாக   .... உனதாய் எனதாய்... எமதாக !
உனக்கே உனக்கென  உனக்காக...  எனையே தருவேன் எமக்காக...!!

 

************              ************             ***********            ************            ************

 

© ஒருவன்









 

Link to comment
Share on other sites

பாட்டெல்லாம் எழுத தொடங்கிட்டுது நம்ம கவிதையண்ணே,

 

நல்லாயிருக்கு பாடல்  வரிகள் ..  

அது சரி உங்க கிட்ட ரொம்பநாளா கேக்க நினைச்சன்,

© இந்த ஸ்மைலி ஏன் எல்லா கவிதையிலும் கடைக்குட்டியாய் வருது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசையோடு பாட இசைவான காதல் கவிதை. வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

எங்கே நீ சென்றாலும்...

என் நினைவும் பின்னால் அலையுமடி..!

அங்கே வானவில் வீடு கட்டி...

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ?

பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??

என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்.... கொஞ்சம் நிக்காதா..?

உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??

அருமையானவரிகள் . வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

பாட்டெல்லாம் எழுத தொடங்கிட்டுது நம்ம கவிதையண்ணே,

 

நல்லாயிருக்கு பாடல்  வரிகள் ..  

அது சரி உங்க கிட்ட ரொம்பநாளா கேக்க நினைச்சன்,

© இந்த ஸ்மைலி ஏன் எல்லா கவிதையிலும் கடைக்குட்டியாய் வருது

தம்பி இரா.விஷ்வா...! ரொம்ப நன்றி :)

 

ரொம்பப்பேர் பல வ(டை)ரிகளை சுட்டு....தாங்களே சுட்ட வடைபோல பேஸ்புக் அங்க இங்க எண்டு  சுடச்சுட வித்திடுறாங்கள்! :o

எதுக்கும் © இதப் போட்டு வைப்பம் எண்டுதான்.

© ஒருவன் :rolleyes::lol::icon_idea:

Link to comment
Share on other sites

இசையோடு பாட இசைவான காதல் கவிதை. வாழ்த்துகள்

மிக்க நன்றி செயோன் யாழ்வேந்தன்! :)

Link to comment
Share on other sites

எங்கே நீ சென்றாலும்...

என் நினைவும் பின்னால் அலையுமடி..!

அங்கே வானவில் வீடு கட்டி...

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள் பூக்காதா... ?

பூமொட்டு விரியும் தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??

என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்.... கொஞ்சம் நிக்காதா..?

உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??

அருமையானவரிகள் . வாழ்த்துக்கள்

 

மிக்க நன்றி செந்தமிழாளன்...! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.