Jump to content

அன்று ....இளமைகால..நடிகர்கள்


Recommended Posts

  • Replies 131
  • Created
  • Last Reply
  • 4 weeks later...
  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு பார்க்காத.... அருமையான படங்கள், தொடருங்கள் அன்புத்தம்பி.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த  போட்டோவில் இருக்கும் ஒரு நட்சத்திரம் யார் ,,

 

 

343reio.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, அன்புத்தம்பி said:

இந்த  போட்டோவில் இருக்கும் ஒரு நட்சத்திரம் யார் ,,

ஜெமினி கணேசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  போட்டோவில் இருக்கும்  நட்சத்திரம் யார்?

 

 

8vx0ys.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை சொன்ன சொல் படத்தில் ரவிச்சந்திரன்

 

 

RAVIASSOLFW_zpse48c310a.jpg

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

CbJw3uUVIAA6TM6.jpg

இப்புகைப்படத்தில் உள்ளவர்கள் யார் எனக்கு  ஒருவர் மட்டும் தெரிந்தவர்...

 

 

wx7a7w2u6gjappk6g.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி T.P.ராஜலக்ஷ்மி



தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி – முதல் பெண் தயாரிப்பாளர் – முதல் பெண் இயக்குநர் என்று திறன் காட்டியவர், நாடக ராணி – சினிமா ராணி என்று பேறு பெற்ற டி.பி.ராஜலக்ஷ்மி.

 
Image
T.P.ராஜலக்ஷ்மி
 
1. டி.பி.ராஜலக்ஷ்மி – வாழ்க்கை குறிப்பு


தஞ்சாவூர் ஜில்லா திருவையாறு நகரத்தில் கிராமக் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரி – மீனாக்ஷி தம்பதிக்கு 11 – 11 – 11 இல் மகளாக பிறந்தார் ‘திருவையாறு பஞ்சாபகேச அய்யர் ராஜலக்ஷ்மி’ என்ற தி.ப. ராஜலக்ஷ்மி (T.P.ராஜலக்ஷ்மி). டி.பி.ராஜகோபால், டி.பி.ராஜேந்திரன் என்ற இருவரும் ராஜலக்ஷ்மிக்கு உடன் பிறந்த தம்பிகள். டி.பி.ராஜகோபால் சிரந்த ஹார்மோனிய இசைக் கலைஞராக விளங்கியவர். டி.பி.ராஜேந்திரன் ‘ஹிந்துஸ்தான் லிவர்’ கம்பெனியில் வேலை பார்த்தவர். இப்பொழுது இரு சகோதரர்களும் இல்லை. ராஜலக்ஷ்மி சிறு வயதிலேயே அழகுடனும் அறிவுடனும் விளங்கியதுடன் நல்ல குரல் வளமும் கொண்டிருந்தார். அக்காலத்தின் வழக்கப்படி ராஜலக்ஷ்மிக்கு எட்டு வயதிலேயே திருமணம் நடைபெற்றது. முகத்தில் மீசை அரும்பாத முத்துமணி என்பவரை மணந்தார் ராஜலக்ஷ்மி. ராஜலக்ஷ்மிக்கும் புகுந்த வீட்டாருக்கும் வரதட்சணை பிரச்சினையால் ஒத்துப் போகவில்லை. அதனால் வாழாதப் பெண் என்ற வசவைப் பெற்ற ராஜலக்ஷ்மி கணவரிடமிருந்து விடுதலை பெற்றார். கணவனிடமிருந்து விடுதலை பெற்ற மகளின் நிலைமையினால் மனமுடைந்த சாஸ்திகள் பூவுலகிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டார். ராஜலக்ஷ்மியின் பத்தாவது வயதில் அவரின் தந்தை காலமாகி விட்டார். தாரமாக வாழ முடியாமலும், தந்தை இறந்து விட்ட நிலையிலும், பிழைப்புத் தேடி தனது தாயுடன் திருச்சிராப்பள்ளிக்கு சென்றார் ராஜலக்ஷ்மி.

அப்பொழுது திருச்சிராப்பள்ளியில் சாமண்ணா என்பவர் நாடக கம்பெனி நடத்தி வந்தார். அப்பொழுது அந்தக் கம்பெனியில் நாடகப் பேராசிரியர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் சாகித்யம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் பெண்கள் நாடகங்களில் நடிக்க தயங்கிக் கொண்டிருந்த வேளையில், ராஜலக்ஷ்மி இந்த நாடக கம்பெனிக்கு சென்று வய்ப்பு கேட்டார். ராஜலக்ஷ்மிக்கு வாய்ப்பளிக்க சாமண்ணா தயங்கினாலும், சங்கரதாஸ் ஸ்வாமிகள் ராஜலக்ஷ்மியை கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார். கம்பெனியில் சேர்ந்த ஒரே மாதத்தில் கதாநாயகியாகிவிட்டார் டி.பி.ஆர். பவுன் 13 ரூபாய் விற்ற அக்காலத்தில் ராஜலக்ஷ்மியின் சம்பளம் 30 ரூபாய் ஆகும். அக்கால கலைஞர்களுக்கே உரிய பாட்டு பாடி நடிக்கும் திறமை கொண்டிருந்த ராஜலக்ஷ்மி, சி.எஸ்.செல்லப்பா, கே.பி.மொய்தீன் சாயபு, கன்னையா நாயுடு, - போன்ற பிரபல நாடக கம்பெனிகளில் நடித்து புகழ் பெற்றார். கன்னையா கம்பெனியில் ராஜலக்ஷ்மிக்கு ஜோடியாக நடித்தவர் நாடகப் புகழ் கிட்டப்பா. எம்.கே.தியாகராஜ பாகவதருடனும் சேர்ந்து நாடகங்களில் நடித்துள்ளார் ராஜலக்ஷ்மி.

தேசத்தின் மீதும் தேசத் தந்தை காந்தி மகான் மீதும் பற்று கொண்ட இவர் ‘இந்தியத் தாய்’ என்ற படத்தை தயாரித்தார். ஆங்கில அரசு செய்த கெடுபிடிகளினால் இந்தியத் தாய் படத்துக்கு விடுதலை கிட்டவில்லை. அதனால் இப்படம் வெள்ளித்திரையை எட்டவில்லை.

‘1, ராஜரத்னம் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை – 10’ என்ற முகவரியில் ஈகா தியேட்டருக்கு அருகில் இருந்த ‘ராஜ்மகால்’ என்ற பங்களாவில் இவர் வசித்துள்ளார். இந்த பங்களாவின் அருகில் இருந்த இரு வீடுகளை, தன்னுடைய தம்பிகளுக்கு கொடுத்து விட்டர் ராஜலக்ஷ்மி.

டி.பி.ராஜலக்ஷ்மி தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு, வள்ளித் திருமணம் படத்தில் நாரதராக நடித்த டி.வி.சுந்தரத்தை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கமலா என்ற மகளும், ராஜன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். கமலாவின் மகன் ராகவன் ஏர் இந்தியாவில் வேலை பார்க்கிறார்.

1961 இல் இவருக்கு தமிழக அரசு ‘கலமாமணி’ விருது வழங்கி பொற்பதக்கமும் வழங்கியது. பதக்கத்தை நடிகை பத்மினி அணிவிக்க, சிவாஜி கணேசன் வாழ்த்து மடலை வாசித்து கௌரவித்தார். செப்டம்பர் 2013 இல் டி.பி.ராஜலக்ஷ்மியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடியது.

1964 இல் இவர் தனது 53 வயதில் இயற்கை எய்தினார். டி.பி.ராஜலக்ஷ்மியின் கணவர் டி.வி.சுந்தரம் தனது 98 வது வயதில் 1998 இல் இயற்கை எய்தினார்.

(தொடரும்)
 
அன்புடன்,
பொன். செல்லமுத்து
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏசுதாஸூடன் இருப்பவர் யாரென்று தெரிகிறதா?

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அன்புத்தம்பி said:

ஏசுதாஸூடன் இருப்பவர் யாரென்று தெரிகிறதா?

Image

பாடகி ஜென்சியாக இருக்கலாம் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image

P U சின்னப்பா - கண்ணாம்பா


Image

P U சின்னப்பா - MGR - கண்ணாம்பா
Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம். வாகனங்களுக்கு அனுமதி இல்லை ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம். அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது.   பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும். தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும். அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.   மூன்றடுக்குப் பாதுகாப்பு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர். இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko
    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.