Jump to content

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வைணவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிய ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
பொய்கையாழ்வார்> நம்மாழ்வார்     ஆண்டாள்
பூதத்தாழ்வார்>     மதுரகவியாழ்வார்     தொண்டரடிப்பொடியாழ்வார்
பேயாழ்வார்>     குலசேகர ஆழ்வார்>     திருப்பாணாழ்வார்
திருமழிசையாழ்வார்>    பெரியாழ்வார்>    திருமங்கையாழ்வார்.
இவர்கள் மொத்தம் 4>000 பாசுரங்களைப் பாடியுள்ளனர்.  அப்பாசுரங்களைப் பின்வரும் 24 தலைப்புகளில் அடக்கலாம்:
திருப்பல்லாண்டு     அமலனாதிபிரான்     நான்முகன் திருவந்தாதி
பெரியாழ்வார் திருமொழி     கண்ணிநுண் சிறுத்தாம்பு     திருவிருத்தம்
திருப்பாவை     பெரிய திருமொழி     திருவாசிரியம்
நாச்சியார் திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     பெரிய திருவந்தாதி
பெருமாள் திருமொழி     திருநெடுந் தாண்டகம்     திரு எழுகூற்றிருக்கை
திருச்சந்த விருத்தம்     முதல் திருவந்தாதி     சிறிய திருமடல்
திருமாலை     இரண்டாம் திருவந்தாதி     பெரிய திருமடல்
திருப்பள்ளி எழுச்சி    மூன்றாம் திருவந்தாதி    இராமானுச நூற்றந்தாதி
திவ்வியப்பிரபந்தங்களைத் தொகுத்தவர் நாதமுனி என்பவராவார்.
ஆண்டாளின் திருப்பாவை மார்கழி மாதத்தில் வைணவர்களாற் பாடப்படுகின்றது.  மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் சிவனின் பெருமைகளைக் கூறிச் சிவ பக்தைகள் தம் தோழியர்களைச் சிவபூசைக்குக் கூட்டிச் செல்லத் துயிலெழுப்புவது போன்றே திருப்பாவையிலும் கிருஷ்ணனின் புகழ்கூறிக் கிருஷ்ண பக்தைகள் தம் தோழிமார்களைத் துயிலெழுப்புகிறார்கள். அதற்காக முதலில்  ஆற்றிற்குச்சென்று நீராடுவதற்காக அவர்களை அழைக்கும்பாடல்  

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்   (நேரிழை> ஆயிழை)
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்   என்று தொடங்குகின்றது.

மார்கழி மாதம் முழுநிலவு நாள் இன்று! நீராட வாருங்கள்! வாருங்களேன் சிறந்த நகைகளை அணிந்தவர்களே! செல்வச் சீர் மல்கும் திருவாய்ப்பாடியின் செல்லச் சிறுமியர்களே! கூரிய வேலைக் கொண்டு பகைவர்களை அழிக்கும் நந்தகோபனின் திருக்குமரன்> நீண்ட அழகிய கண்களை உடைய யசோதையின் இளஞ்சிங்கம்> கரிய திருமேனியும் சிவந்த கண்களும் கொண்டு> சு+ரியனையும் சந்திரனையும் ஒத்த திருமுகத்தான்> நாராயணனே நமக்கே வேண்டியதெல்லாம் தருவான்! உலகத்தவர் புகழ நீராடுவோம்!  

என்பது அந்தப் பாடலின் கருத்தாகும்.  இதற்கு அடுத்த பாடல் சமய உலகில் சிறு சர்ச்சையை ஏற்படுத்திய பாடலாகும். அந்தப் பாடல்:

    வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.    


 
என்ற பாடலாகும். உலகத்தில் வாழ்பவர்களே! நாங்கள் எங்கள் பாவை நோன்பிற்காகச் செய்யப் போகும்செயல்களைக்கேளுங்கள்!
பாற்கடலுள் ஓய்வாகப் படுத்திருக்கும் பரமனின் திருவடிகளைப் பாடுவோம்! நெய் உண்ண மாட்டோம்! பால் உண்ண மாட்டோம்! அதிகாலையில் நீராடுவோம்! கண்களுக்கு மை இட்டு அழகு செய்ய மாட்டோம்! மலர்களைக் கூந்தலில் சு+டி முடிய மாட்டோம்! முன்னோர்கள் செய்யாதனவற்றைச் செய்ய மாட்டோம்! தீமை தரும் கோள் சொல்லை சொல்ல மாட்டோம்! (குறளை - கோள் சொல்லுதல்) மாணவர்களுக்கும் (பிரம்மசாரிகளுக்கும்)> துறவிகளுக்கும் அவர்கள் வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனதார கையால் காட்டித் தருவோம்! நாம் உய்வதற்கு உரிய வழியான திருமால் திருவடிகளை எண்ணி மகிழ்ச்சியுடன் இருப்போம்!  
என்பதாக அதன் கருத்தைக் கூறுகின்றனர். ஆனால் காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்  இந்தப் பாடலில் வரும் “தீக்குறளைச் சென்றோதோம்” என்ற வரிகளுக்கு திருக்குறளைக்கூடப் படிக்கமாட்டோமென்ற விளக்கத்தையே கொடுத்திருக்கிறார். இதனால் திருப்பாவையின்மேல் சைவத் தமிழர்கள் மத்தியில் வெறுப்பேற்படக்கூடிய நிலைமையுருவாகியது.

மேற்படி கூற்று அவரால் 1963 ஜுன்மாதம் மதுரையில் அவர் திருக்குறள் பற்றிப் பேசியபோது வெளிப்படுத்தப்பட்டது. (hவவி:ஃஃயபபசயாயசயஅ.டிடழபளிழவ.உழ.ரமஃ2013ஃ01ஃடிடழப-pழளவ_21.hவஅட -18ஃ10ஃ13-11.55pஅ).  அவரது அந்தக் கூற்றுக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் மாத இதழ் தனது சோதி16 ஒளி12 இல் தலையங்கம் தீட்டிக் கண்டனத்தை வெளியிட்டது. 21-11-1963 குமுதம் இதழும் தனது தலையங்கத்தில் திருக்குறளுக்கு எதிரானதாகத் திருப்பாவையைச் சிலாகித்த பெரியவாளின் கருத்துக்கு மறுப்பையும் வருத்தத்தையும் தெரிவித்தது.   

காஞ்சிப் பெரியவர் தனது கூற்றைத் தவறானதாக ஒப்புக்கொள்ளவில்லை.  ஆனால் 5-12-63 குமுதத்தில் அவர் கொடுத்த விளக்கத்தில்: தான் “தீக்குறளைை” என்ற சொல்லை (தீந்தமிழ்> தீஞ்சுவை என்பது போல) இனிய குறளை என்ற அர்த்தத்திலேயே எடுத்தாண்டதாகவும்> அந்த இனிய குறளையும் ஓதமாட்டோமென்று திருப்பாவை குறளைப் பெருமைப்படுத்துவதாகவே கருதுவதாகவும் கூறிச்சமாளித்தார். இதனை ஒருவகைச் சப்பைக்கட்டாக எடுத்த அறிஞர்கள் இனிய குறளெனக் கொள்வதாயின் “தீங்குறள்” என்றே திருப்பாவை கூறியிருக்கவேண்டும். ஆனால் “தீக்குறளைச் சென்றோதோம்” என்பதால் அந்த வாக்கியத்திலுள்ள “ச்” ஐ எடுத்துவிடும்போது தீக்குறளை – அதாவது தீயதான கோள்களைக் காவித்திரியமாட்டோமென்ற அர்த்தமேயுள்ளதென்றும்>  ஆகவே ஆண்டாள் அந்த அர்த்தத்திலேயே பாடியிருக்கவேண்டுமென்றும் கூறி திருப்பாவை  குறளை இழிவு செய்யவில்லையென்று சமாதானஞ் செய்துகொண்டனர்.

மொத்தத்தில் ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போல தெய்வத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்த காஞ்சிப் பெரியவாளின் கூற்றிலும் தவறு நேர்ந்ததா அல்லது  நாச்சியார் தன் திருப்பாவையில் குறளை இழிவு செய்தாரா என்பது தெளிவற்றதாகவேயுள்ளது.  இத்தகைய விடயங்களுக்கு திருப்பாவையை எழுதிய நாச்சியாராலன்றி வேறு யாராலும் விடைகூறமுடியாது.  ஒருவேளை திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனி போன்றவர்கள் அல்லது அதனை அச்சுக்குக் கொண்டு வந்தவர்கள் தங்களுக்கிருந்த வைஷ்ணவ வெறியினாலும் திருக்குறள் விரோதப் போக்கினாலும் இத்தகைய அபத்தங்களுக்குக் காரணமாய் இருந்திருக்கக் கூடும்.  எதையும் ஆராயாமல் முடிவெடுப்பது தவறானதாகையால்> “தீக்குறளைச் சென்றோதோம்” என்னும் வாக்கியம் தீயதான கோளைக் காவுவதைச் செய்யோமென்ற அர்த்தத்தையே கொடுக்கிறது என எடுத்துக்கொள்வதே சிறப்பானதாகும்.

இருப்பினும் திருக்குறளை நன்கறிந்து இருந்திருக்கக்கூடிய தமிழறிவாளரான ஆண்டாள் இத்தகைய குழப்பநிலை பிற்காலத்தில் ஏற்படக்கூடுமென்று கருதியாவது அப்பாடலில் வரும் தீக்குறளை என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாமென்று எண்ணத் தோன்றுகின்றது.

 

-By Karu-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீ ஆண்டாள்   ஶ்ரீ ரங்கநாதனின் திருவடிச் சிந்தனையில் ஆழ்ந்து பாடியவர். அரங்கனின் எண்ணங்களே ஆண்டாளின் வார்த்தைகளாக வந்தது , தப்பாக இருக்காது.

 

திருக்குறளில் அறத்துப்பால் , பொருட்பால் எல்லோர்க்கும் உரியது. காமத்துப்பால் பெரும்பாலும் இல்லறத்தார்க்குரியது. (18+).

இங்கு ஆயர்குலச் சிறுமியர்களான ஆண்டாலும் ,அவர் தோழியரும் அக் காமத்துப்பாலைப்  படிக்கும் பருவத்தினர் அல்ல. ஆகையால் அது போன்றவற்றை தேடிப் பிடித்து ஓதமாட்டோம் எனக் கூறியிருக்கலாம்.

 

பண்ணிரு ஆழ்வார்கள் , அறுபத்திமூன்று நாயன்மார்கள் இவர்களில் ஶ்ரீ ஆண்டாளும், காரைக்கால் அம்மையாருமே பெண்களளானால் ஏனைய ஆண்களுக்கில்லாத சிறப்பு அவர்களுக்கு இருந்தது. ஆண்டாள் திருவரங்கனுடன் கருவறைக்குள் சென்று இரண்டறக் கலந்தவர்.  அம்மையார்  அந்த ஆடல்வல்லானுக்கே அன்னையராகும் சிறப்புப் பெற்றவர்.

 

மஹா பெரியவருக்கு ஸ்தோத்திரம்...!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி

தங்கள் கருத்துகள் சிந்தனைக்குரியவை.  இருப்பினும் திருக்குறளின் காமத்துப்பாலை ஆண்டாள் படிக்கும் பருவத்தினளல்ல என்பதை ஏற்க முடியவில்லை.   "கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ..." என்று   பக்திச் சுவையைக் காமச்சுவையுடன் கலந்து காட்டிய ஆண்டாள்  கண்ட கனவுகளும் ஓர் முதிர் கன்னி காணக்கூடிய கனவுகளேயன்றி சிறுமியொருத்தி காணக்கூடிய கனவுகளல்ல.   தனது பாசுரங்களில் இத்தகைய சிருங்கார ரசங்களைக் கலந்த ஆண்டாள் திருக்குறளை மட்டும் அதன் காமத்துப் பாலுக்காக எப்படி ஒதுக்கியிருக்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபியர்  கண்ணனுக்காக  ஏங்கியதற்கும் , ஶ்ரீ ஆண்டாள் நேசித்ததற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. அவர்கள் அனுபவித்து அனுபவித்து அவனைக் காணாத போதெல்லாம் அவனுக்காக ஏங்கினார்கள். கோதை ஆண்டாள் அப்படியல்ல..., அரங்கனை அவள்தான் வரித்துக் கொண்டாளே தவிர..., அவன் வருவானா தன்னை ஏற்பானா என்டும் தெரியாது. பெரியாழ்வாரின் கதைகளைக் கேட்டு கேட்டு பித்துப் பிடித்தவள் போலாகி விட்டாள்.

 

வண்டு வந்து தேன் எடுக்குமுன் கூம்பிய மொட்டாகப் பறித்து வந்து மாலை தொடுத்து சேவை செய்பவர் பெரியாழ்வார். சுவாமிக்குப் பிரசாதமாகப் போகிற மாலையையே அதன் தன்மை புரியாமல் குழந்தைத் தனமாக தான் அணிந்து கொடுத்தவள். நீங்கள் கூறியதுபோல் பார்த்தாலும் கற்பூரமும், கமலப் பூவும் நாறுமோ , இதழ் தித்திக்குமோ என்று  கேள்வியாகத்தான் கேட்கின்றாள். காரணம் அவற்றின் சுவைகள் அவளுக்குத் தெரியாது.

 

ஆண்டாள் பெருமாளுடன் ஐக்கியமான பின்னும்  ஆழ்வார் பெருமாளிடம் விண்ணப்பின்றார் .... ஆண்டாள் குழந்தை அவளுக்கு சமைக்கத் தெரியாது, உப்பு கூட சரியாய் போடத் தெரியாது என்கின்றார். அப்போது அசரீரியாக யாம் உப்பில்லாமலே ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்கின்றார் அந்த ஒப்பிலியப்பன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி

தங்களுக்கு ஆண்டாள் பாசுரங்களிலுள்ள ஈடுபாடு புரிகிறது. அனால் ஆண்டாள் பெரியாழ்வாரின் ஓர் கற்பனைப் பாத்திரமேயன்றி அப்படியொருவர் இருந்ததில்லையென்றும் சிலர் கூறுவர்.  உதாரணம் மூதறிஞர் ராஜாஜி.  ஆதலால் பெரியாழ்வாரின் அதீத வைஷ்ணவ வெறி திருக்குறளை அவமதிக்கும்படி செய்ததோ தெரியவிலை.  இக்காலத்தில் இத்தகைய சர்ச்சைகள் அடங்கிவிட்டன.  ஆண்டாளை எல்லோரும் ஆழ்வார்களுள் ஒருவராகவே ஏற்கிறார்கள்.

Link to comment
Share on other sites

திருக்குறள் கல்வி நூலாக இருந்தது.
 
பரமன் நினவில்..
 
உண்ணோம்
மையிடோம்
மலர் சூடோம்
கல்லோம் ( குறளை )
அவன் நினைவு ஒன்றிலேயே நின்றோம்.
 
 
காஞ்சிப் பெரியவர் அது திருக்குறளே என்றாலும் அதில் தப்பிருப்பதாக தெரியவில்லை. விருப்புக்குரியவை, மதிப்பிற்குரியவை எல்லாவற்றையும் பரமன் நினைவு ஒன்றிற்காக கைவிட்டோம் என்னும் கருத்தில் பாசுரம் வருகிறது. திருக்குறள் இழிவாகச் சொல்லப்படவில்லை. மதிப்பிற்குரியதாகவே சொல்லப்படுகின்றது.
 
பரமனுக்காக மதிப்புக்குறைந்த‌ ஒன்றைச் செய்யாமல் விடுவோம் என்று சொல்வார்களா ?
 
 
.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈசன்

ஆனால் தீக்குறளைச் சென்றோதோம் என்றல்லவா சொல்லப்படுகிறது.  குறள் யாருக்கு என்ன தீமை பயத்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பாவையில் வரும் இரண்டாவது பாடலைத்தான் நீங்கள் குரிப்பிடுகின்றீர்கள். அவர்கள் ஶ்ரீமன் நாராயணின் குணங்களையும் அவனது சேவைகளையும் , நியமங்களையும் சொல்லித் துதித்துக் கொண்டு போகின்றார்கள். அதில்...

 

 1.  மார்கழித் திங்கள் .....................         நாராயணன் நமக்கே பறை தருவான்.

  2. வையத்து வாழ்வீர்காள்.............      விரதம் இருக்கும் முறையும் , கைப்பிடிக்க வேண்டிய முறைகளும்.

( காலையில் நீராடி நேய் பால் அருந்தாமல் நோன்பிருந்து , அலங்காரங்களைக் கைவிட்டு, வீணான பேச்சுக்கள் , வம்புகள் பேசாமல் பாடாமல்  பாற்கடலில் பாம்பணையில் துயிலும் பரமணைத் துதித்து வீடுபேறடைவோம்.

 

  3. ஓங்கி உலகலந்த ........................       அவனைத் துதிக்க  திங்கள் மும்மாரி , பசுக்கூட்டம் பெருகும் போன்றவை.

  4. ஆழிமழைக் கண்ணா................. நாம் வாழ மழை பொழியச் செய்.   ( அந்த மழை எப்படி கருவாகி உருவாகி வருகின்றது என்பதை நினைத்து நினைத்து உருகலாம்).

 

இப்படியே ஒவ்வொரு விடயமாகப் போகின்றது அவ்வளவுதான்......!

 

குறள் :  குறளிவித்தை, மாயத்தோற்றம், வதந்திகள் , வம்பளத்தல் இதுபோல் போகும் என நினைக்கின்றேன். நீங்கள் கூறியதுபோல் கோள் சொல்லல் என்றும் வரும், அதாவது நோன்புக்கு பங்கமானவைகள்.

 

 

ஆண்டாள் கற்பனை என்பதும் எனக்கு சரியென்று படவில்லை.

 

திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தத்தில்   49 வது பாடலில்:

 

கொண்டை கொண்ட கோதைமீது

தேனுலாவு  கூனிகூன்,

உண்டை கொண்ட  ரங்கவோட்டி

யுள்மகிழ்ந்த நாதனூர்,

நண்டையுண்டு நாரைபேர

வாளைபாய நீலமே,

அண்டைகொண்டு கெண்டைமேயு

மந்தணீர ரங்கமே !

 

என்று சாதிக்கின்றார்.

 

எனினும் ஒரு நல்ல சம்பாசனைக்கு வித்திட்ட உங்களுக்கு மிகவும் நன்றி கரு...!  :)

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமழிசையாள்வாரை மேற்கோள்காட்டி ஆண்டாள் கற்பனைப்பாத்திரமல்ல என்று சாதித்த தங்களின் பாசுரங்கள் தொடர்பான அறிவைப் பாராட்டுகிறேன் நன்றி.  நீங்கள் குறிப்பிட்ட அந்த செய்யுளின் சந்த நடை மிவும் சிறப்பாயிருக்கிறது.  எனினும் மூதறிஞர் ராஜாஜி எதை வைத்துக்கோண்டு ஆண்டாளைக் கற்பனைப் பாத்திரமாக்கினார் என்று புரியவில்லை.  அது தொடர்பாக அவரெழுதிய முதல் மூவர் என்னும் கட்டுரையைத் தேடுகிறேன்.  கிடைக்கவில்லை.  கிடைத்தால் மீண்டும் வருகிறேன்.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஞ்சநேயா அந்தப் புத்தகத்தை அபேஸ் பண்ணிவிடு..., கருவுக்கு  கருவும், கட்டுரையும் காணாமல் இருக்கட்டும் ....! :huh::)

 

பொய்கையாழ்வாரே  பொய்கைக்குள் போட்டு விடுங்கள்...!

பூதத்தாழ்வாரே   கிணற்றினுள் அமுக்கி விடுங்கள்...!

பேயாழ்வாரே   மயாணத்தில் மறைத்து விடுங்கள்...!

 

 

அவதரித்த ஆண்டாளை

கருவறுக்க  கருநிக்க

கோதை உயிர் தரிக்க

உதவிடுவீர்...!  :D :D

 

Link to comment
Share on other sites

நன்றி ஈசன்

ஆனால் தீக்குறளைச் சென்றோதோம் என்றல்லவா சொல்லப்படுகிறது.  குறள் யாருக்கு என்ன தீமை பயத்தது?

 

 

தீந்தமிழ்  !!   :icon_idea:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஞ்சநேயா அந்தப் புத்தகத்தை அபேஸ் பண்ணிவிடு..., கருவுக்கு  கருவும், கட்டுரையும் காணாமல் இருக்கட்டும் ....! :huh::)

 

பொய்கையாழ்வாரே  பொய்கைக்குள் போட்டு விடுங்கள்...!

பூதத்தாழ்வாரே   கிணற்றினுள் அமுக்கி விடுங்கள்...!

பேயாழ்வாரே   மயாணத்தில் மறைத்து விடுங்கள்...!

 

 

அவதரித்த ஆண்டாளை

கருவறுக்க  கருநிக்க

கோதை உயிர் தரிக்க

உதவிடுவீர்...!  :D :D

 

சுவி

உங்கள் ஆதங்கம புரிகிறது.  ஆனால்

இது கலியாணத்தை நிறுத்தக் கரண்டியை ஒழிக்கும் கதையாகவல்லவோ இருக்கிறது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.