Jump to content

இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு.

அரசியலில் ஈடுபடும் உரிமையும் உண்டு.

ஆனால் விரைவில் இரட்டை குடியுரிமைக் காரர் பாராளுமன்றம் செல்வதை தடை செய்யப்போகிறார்களாம்.

எனக்கு நியாயமாய் படுது.

உங்களுடைய எண்ணம் 
கொஞ்சம் புத்திசாலித்தனமா தெரிகிறது.
 
(நீங்க நல்லவரா கெட்டவரா ?  உண்மையிலேயே தமிழருக்கு நல்லம்  என்று கருதிதான் சொல்கிறீர்களா ? அல்லது சுறா பிடிக்க இறாலை காட்டுகிறீர்களா ?)
Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நம்புங்க ஸார் நான் ரொம்ப நல்லவன் :)

ஆனால் புலி சார்பு அரசியல்.... அது வேண்டாம் காணாமல் போனோரை தேடுதல் போன்ற விடயங்களையே கையில் எடுத்தால் -

நான் சொல்லவேண்டியதில்லை.

பெருமாள் சொன்ன மாரி உங்கள் மற்ற நாட்டு தூதரகமும் உதவ முடியாமல் போகும்.

இலங்கையில் அரசியல் அதுவும் தமிழ் சார்பு அரசியல் என்பது கத்திமேல் நடை.

புலத்தில் இருந்து கருத்தெழுதுவது போலாகாது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் கிழவி,

எனக்குத்தான் விளக்கம் பத்தவில்லை.

இந்த கதிர்காமம் வரை நீளும் நாட்டுக்கு பிரஜா உரிமை எடுக்கும் முறையை ஒருக்கா சொல்லித்தாங்கோவன்.

சொறிலங்காவுடன் நிண்டு மாரடியாம நாங்களும் பிரஜா உரிமை எடுப்பம்.

அப்படியே செவ்வாய் கிரகம், யுரேனசிலும் எடுத்து வையுங்கோ, காணி நல்ல மலிவா போகுதாம் :)

 

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு கோயில்கள் உள்ளது. ஆனால், கடவுளை இன்னும் ஒருவரும் நேரடியாய் தரிசனம் செய்யவில்லை. அகக்கண்ணில்  மட்டும் கடவுளை உணர்கின்றார்கள். ஈழமும் இப்படித்தான். உலகு எங்கும் இல்லாத கடவுளை உருவாக்கி இல்லாத கடவுளின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்தால், மனக்கண்ணில் தெரிகின்ற ஈழத்தின் அடியொற்றி வாழ்வதில் தவறு இல்லை.

 

நான் ஏற்கனவே கூறியுள்ளேன். உண்மையான பிரஜாவுரிமை அடுத்தவன் தந்து வாங்குவது அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

 

 

வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவுவதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது. சொறி லங்காவில் 25 இலட்சம் வைப்பில் இடாமல், உங்களது சொத்துக்கள் நில, புலங்களை ஏதிலிகள், வசதி குறைந்த தமிழர்களுக்கு தானமாகவோ, தற்காலிகமாகவோ வழங்கலாமே? சொறி லங்காவின் வங்கியில் வைப்பிலிடும் 25 இலட்சம் பணத்தை வசதியற்ற தமிழர் வியாபாரம் செய்வதற்கு மூலதனமாக வழங்கலாமே.

 

இரட்டைப்பிரஜாவுரிமை அடுத்தவருக்கு உதவுவதற்கு தேவையானத எனும் வாதம் நகைச்சுவையானது. உலகில் எத்தனை மில்லியன் தொண்டர்கள், மனிதநேயம் மிக்கவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் ஆசியா தொடக்கம் ஆபிரிக்கா வரை உலகில் வெவ்வேறு நாடுகளில் வாழும் முன்பின் தெரியாத எத்தனை எத்தனை கோடி மக்களுக்கு உதவி செய்கின்றார்கள். உலகெங்கும் மனிதநேயம் மிக்கவர்களால் பில்லியன் கணக்கில் உதவி கொடுக்கப்படுகின்றது. இவர்கள் எல்லோரும் இரட்டைப்பிரஜாவுரிமை வைத்துக்கொண்டா இவற்றையெல்லாம் செய்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் எனக்கு கடவுளிலும் நம்பிக்கை இல்லை. :)

தமிழ் ஈழம் அமைந்தாலும் - வெளிநாட்டு பிரஜைகள் அந்த அரசிடம் இரந்துதான் இரட்டை பிரஜா உரிமை பெற வேண்டும்.

கேளாமல் கிடைக்கும் பிரஜா உரிமை பிறப்பில் வந்தது மட்டுமே. அதை இழக்கும் வரை.

புலிகளின் சட்டக்கோவையில் புலம்பெயர் மக்களின் காணி உரிமைக்கு என்ன நிலை - என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு கோயில்கள் உள்ளது. ஆனால், கடவுளை இன்னும் ஒருவரும் நேரடியாய் தரிசனம் செய்யவில்லை. அகக்கண்ணில்  மட்டும் கடவுளை உணர்கின்றார்கள். ஈழமும் இப்படித்தான். உலகு எங்கும் இல்லாத கடவுளை உருவாக்கி இல்லாத கடவுளின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்தால், மனக்கண்ணில் தெரிகின்ற ஈழத்தின் அடியொற்றி வாழ்வதில் தவறு இல்லை.

 

நான் ஏற்கனவே கூறியுள்ளேன். உண்மையான பிரஜாவுரிமை அடுத்தவன் தந்து வாங்குவது அல்ல. 

“உண்மையான பிரஜாவுரிமை அடுத்தவன் தந்து வாங்குவது அல்ல”

 

அருமை! உண்மையான பிரஜாவுரிமையை மற்றொன்றுக்காக தொலைத்தால், தொலைத்ததை அடுத்தவனிடம் அப்ளை பண்ணி வாங்க வேண்டியிருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவுவதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது. சொறி லங்காவில் 25 இலட்சம் வைப்பில் இடாமல், உங்களது சொத்துக்கள் நில, புலங்களை ஏதிலிகள், வசதி குறைந்த தமிழர்களுக்கு தானமாகவோ, தற்காலிகமாகவோ வழங்கலாமே? சொறி லங்காவின் வங்கியில் வைப்பிலிடும் 25 இலட்சம் பணத்தை வசதியற்ற தமிழர் வியாபாரம் செய்வதற்கு மூலதனமாக வழங்கலாமே.

 

இரட்டைப்பிரஜாவுரிமை அடுத்தவருக்கு உதவுவதற்கு தேவையானத எனும் வாதம் நகைச்சுவையானது. உலகில் எத்தனை மில்லியன் தொண்டர்கள், மனிதநேயம் மிக்கவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் ஆசியா தொடக்கம் ஆபிரிக்கா வரை உலகில் வெவ்வேறு நாடுகளில் வாழும் முன்பின் தெரியாத எத்தனை எத்தனை கோடி மக்களுக்கு உதவி செய்கின்றார்கள். உலகெங்கும் மனிதநேயம் மிக்கவர்களால் பில்லியன் கணக்கில் உதவி கொடுக்கப்படுகின்றது. இவர்கள் எல்லோரும் இரட்டைப்பிரஜாவுரிமை வைத்துக்கொண்டா இவற்றையெல்லாம் செய்கின்றார்கள்?

அதே ..............................................விளங்குபவர்களுக்கு  விளங்கினால் சரி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் இருக்கும் எனது சில நண்பர்கள் இரட்டை குடியுரிமை வைத்திருக்கின்றார்கள் .அடிக்கடி நாட்டிற்கு போய் வருபவர்கள் தமிழ் மக்களுக்கு நல்ல விடயங்கள் பல செய்தும் வருகின்றார்கள் .இதுதான் உண்மையான யதார்த்த வாழ்க்கை. :o

 

நான் தமிழ் ஈழம் பிரஜையாக அங்கு போனாலும் போவேனே ஒழிய சொறிலங்காவிற்கு போகமாட்டன்  இது இணையத்தில் பச்சைக்கான வாழ்க்கை . :icon_mrgreen:

 

எனக்கு தெரிந்த தமிழர்களில் பெரும்பாலானோர் ஒரு குடியுரிமை மட்டும் வைத்துள்ளார்கள். சொறி லங்காவில் குடியுரிமை வைத்திருக்கவில்லை. ஆனாலும், மக்களுக்கு உதவியும் செய்கின்றார்கள். தமிழீழத்திலேயே இரட்டை குடியுரிமை பெறுவோம் என்று இவர்கள் நினைக்கவில்லை. மாறாக, சொறி லங்காவின் இரட்டை பிரஜாவுரிமை தேவையற்றது என்று வாழ்கின்றார்கள். இவர்களில் பலருக்கு யாழ் இணையம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. அப்படி என்றால் இவர்களுக்கு பச்சை எப்படி கிடைக்கின்றது? யதார்த்தத்துடன் வாழ்பவர்கள் சொறி லங்காவில் இரட்டைக்குடியுரிமை பெறுவது பற்றி அதிகம் அக்கறை காட்டுவது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் எனக்கு கடவுளிலும் நம்பிக்கை இல்லை. :)

தமிழ் ஈழம் அமைந்தாலும் - வெளிநாட்டு பிரஜைகள் அந்த அரசிடம் இரந்துதான் இரட்டை பிரஜா உரிமை பெற வேண்டும்.

கேளாமல் கிடைக்கும் பிரஜா உரிமை பிறப்பில் வந்தது மட்டுமே. அதை இழக்கும் வரை.

புலிகளின் சட்டக்கோவையில் புலம்பெயர் மக்களின் காணி உரிமைக்கு என்ன நிலை - என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்.

கருத்துக்கள் பின்வாங்கினால் ஒவ்வொரு முறையும் புலியிடம் தஞ்சம் கோருவது உங்கள் வாடிக்கையாக்கும்  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்ய பிரஜா உரிமை தேவை எண்டு யாரும் சொல்லவில்லை. பிரஜா உரிமை சிலவற்றை இலகுவாக்கும்.

உதாரணத்துக்கு இலங்கையில் ஒரு NGO தொடங்கவோ not for profit அமைப்பையோ இலகுவில் தாபிக்கலாம்.

இது ஒரு நடைமுறை அனுகூலம்.

இதில் நகைக்க ஒன்றுமில்லை.

தன் தாய் நிலத்தில் தம் இருப்பை நிலநாட்ட, இஸ்ரேல் உருவாக முன்பே நாடுதிரும்பி தம் இருப்பை உறுதி செய்தனர் யூதர்கள்.

நாங்களோ போகமாட்டம், போறவையை விடவும் மாட்டோம், ஆனால் சிங்கள மயமாகுது என்று மாய்மாலம் மட்டும் போடுவோம்.

எமது மண்ணை நாம் நிரப்பாவுடின் வேறு யாரோ தான் நிரப்புவார்கள்.

பெருமாள் கருத்து வறுமையில் குசேலன் நீங்கள். என்னைப் பார்த்து கூவுவது செம காமெடி. நல்லா போற திரிக்குள் ஏனையா உங்கள் ஈபிடிபி குழப்பங்காசி வேலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்ய பிரஜா உரிமை தேவை எண்டு யாரும் சொல்லவில்லை. பிரஜா உரிமை சிலவற்றை இலகுவாக்கும்.

உதாரணத்துக்கு இலங்கையில் ஒரு NGO தொடங்கவோ not for profit அமைப்பையோ இலகுவில் தாபிக்கலாம்.

இது ஒரு நடைமுறை அனுகூலம்.

இதில் நகைக்க ஒன்றுமில்லை.

தன் தாய் நிலத்தில் தம் இருப்பை நிலநாட்ட, இஸ்ரேல் உருவாக முன்பே நாடுதிரும்பி தம் இருப்பை உறுதி செய்தனர் யூதர்கள்.

நாங்களோ போகமாட்டம், போறவையை விடவும் மாட்டோம், ஆனால் சிங்கள மயமாகுது என்று மாய்மாலம் மட்டும் போடுவோம்.

எமது மண்ணை நாம் நிரப்பாவுடின் வேறு யாரோ தான் நிரப்புவார்கள்.

பெருமாள் கருத்து வறுமையில் குசேலன் நீங்கள். என்னைப் பார்த்து கூவுவது செம காமெடி. நல்லா போற திரிக்குள் ஏனையா உங்கள் ஈபிடிபி குழப்பங்காசி வேலை?

இங்கு யூதனையும் எங்களையும் வச்சு குழப்பவேண்டாம் நாடே இல்லமால் வந்தவன் யூதன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே நான் புலிகள் பற்றி கதைக்கவில்லை. ஈழம் என்றால் புலிகள், போர், போராட்டம் எனும் அடிப்படையில் நீங்கள் விளங்கிக்கொண்டால் அது உங்கள் அறியாமை. புலிகளின் தோற்றம் 1970களில். ஆனால், ஈழம் என்பது அதற்கும் முன்பு உள்ளது. அது இலங்கையில் போர்த்துக்கேயர், ஆங்கிலேயர், ஒல்லாந்தரின் வருகைக்கு முன்பு இருந்தது. பிரித்தானியர்கள் நிர்வாக முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி சொறி லங்காவை உருவாக்கினார்கள். அதற்காக, ஈழம் என்பது அழிந்துவிட்டதாய் இல்லை. ஈழம் என்பது தொன்றுதொட்டு உள்ளது. நான் ஒரு ஈழத்தவன். எனது அப்பன், பாட்டன், முப்பாட்டன் ஈழத்தவர்கள். அவர்கள் சொறி லங்கர்கள் இல்லை. உங்கள் பாட்டன், முப்பாட்டனும் அவ்வாறே என்று நினைக்கின்றேன். உங்கள் முப்பாட்டன் இப்போது உயிருடன் இருந்தால் தான் ஒரு ஈழத்தவன் என்று தன்னை அடையாளப்படுத்துவாரா அல்லது தன்னை ஒரு சொறி லங்கன் என்று அடையாளப்படுத்துவாரா? பிரித்தானியன், சிங்களவன் தமது நன்மைகளுக்காக மாற்றங்களை செய்யும்போது அம்மாற்றங்களுடன் நாமும் உடன்படவேண்டும் என்று இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடில்லாமல் வந்தவனில்லை, நாடில்லாமல் (எம்மைபோல்) ஆக்கப்பட்டவன் யூதன்.

பேரரசர் டேவிட் காலம் முதல், மோசஸ் காலத்திலிருந்து, ஆபிரகாம் தொட்டு இஸ்ரேலின் பூர்வ குடிகள் யூதர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இப்போ இந்தியா என்று ஒரு நாடில்லை?

பாகிஸ்தான் இல்லை. பங்களத்கேசம் இல்லை?

அவுஸ்ர்ரெலியா இல்லை, நியூசிலாந்து இல்லை அப்படித்தானே?

ஏன் 300 வருடங்களோடு நின்று விட்டீர்கள்?

20000 வருடங்கள் பின் போனால் நாமெல்லாம் லெமூரியாவின் பிரசைகள் என்று சொல்லலாமே?

வரலாறு எம்மை இப்படித்தான் இப்போதைக்கு வகை செய்துளது. இன்னும் 100 வருடத்தில் ஈழம் மலரலாம். அப்போ ஓகே.

இப்போ இது வெறும் கற்பனை.

நீங்கள் போட்டிருப்பது emperor's clothes.

உங்கள் கண்மூடிதனமான கொள்கை பற்றை பார்த்து வியக்கலாம். ஆனால் இந்த imaginary virtual உலகில் சாதாரணத்களால் வாழ முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடில்லாமல் வந்தவனில்லை, நாடில்லாமல் (எம்மைபோல்) ஆக்கப்பட்டவன் யூதன்.

பேரரசர் டேவிட் காலம் முதல், மோசஸ் காலத்திலிருந்து, ஆபிரகாம் தொட்டு இஸ்ரேலின் பூர்வ குடிகள் யூதர்கள்.

இப்ப யார் பழைய கதை கேட்பவங்கள் என்ன ஆதாரம் சும்மா கதை விடுவாங்கள் ................................

அதிகம் வேண்டாம் 400வருடங்களுக்கு முன் எங்கடை வாழ்க்கை அந்த புள்ளிக்கு போவதுக்கு திரணி அற்ற தற்போதைய  சமூக தலைமைகள் அதுக்கு வால் பிடியென உங்களின் வாதங்கள் . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வக்கணையயாய் கதைக்கும் நீங்கள் ஊரில் தேசிய அடையாள அட்டை எடுக்காமல்லா இருந்தீர்கள்?

எந்த பாஸ்போர்டை பாவித்து நாட்டை விட்டு வெளியேற்னீர்கள்?

இப்போ forms இல் previous nationality எனும் இடத்தில் தமிழ் ஈழம் எண்டா எழுதுறியள்? எழுதினாலும் உலகம் ஏற்குமா?

ஏன் இந்தப் பொய்ப் பித்தலாட்டம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

400 வருடங்களுக்கு முன் ஈழம் இருந்தது ஆனால் அது ஒரு geographic description.

இருந்த தமிழ் அரசுகள் யாழ்ப்பாண அரசு. வன்னி குறு நில அரசு. அப்போ உங்களுக்கு தேவைப்படுவது யாழ்ப்பாண அரசின் பிரஜா உரிமையா? தமிழ் ஈழத்தின் பிரஜா உரிமையா ?

ஒன்று பட்டு யாழ் முதல் கதிர்காமம் வரையான தமிழ் அரசு எல்லாலனுக்கு பின் இருக்கவில்லை.

அப்போ எல்லாளன் காலத்தில் இருந்து துவங்குவோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கெல்லாம் பொலன்னறுவை அரசின் பிரஜா உரிமை வேண்டும்.

தயவு செய்து வரிசையில் வரவும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கெல்லாம் பொலன்னறுவை அரசின் பிரஜா உரிமை வேண்டும்.

தயவு செய்து வரிசையில் வரவும் :)

நான் சொறி லங்காவில் பிறந்தவன். எனது தந்தையும் அப்படியே... கனடாவில் பிரஜாவுரிமை பெற்றபோது Former Nationality என்ற கேள்விக்கு சொறி லங்கா.. sorry.. ஸ்ரீலங்கா என்று எழுத வேண்டியதாக போச்சு. ஈழம் என்று எழுத கனடாவில் முடியாதாம்.  

 

இந்த அடிப்படையில் இந்த சொறியனுக்கு பொலன்னறுவை சிட்டிசன்ஷிப் தர முடியுமா? எனக்கு தந்தால் பல முன்னாள் சொறியர்களும் வாங்க தயாராக உள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வக்கணையயாய் கதைக்கும் நீங்கள் ஊரில் தேசிய அடையாள அட்டை எடுக்காமல்லா இருந்தீர்கள்?

எந்த பாஸ்போர்டை பாவித்து நாட்டை விட்டு வெளியேற்னீர்கள்?

இப்போ forms இல் previous nationality எனும் இடத்தில் தமிழ் ஈழம் எண்டா எழுதுறியள்? எழுதினாலும் உலகம் ஏற்குமா?

ஏன் இந்தப் பொய்ப் பித்தலாட்டம் ?

 கொழும்பு 4மாடியில் வேலை செய்த அனுபவ கேள்விகள் போல் உள்ளது  :D
 
ஆனாலும் uk விசாவில் தான் உள்ளே வந்தனான் uk citizenship எடுக்கும்போது திருக்குறள் புத்தகம் கையுடன் கொண்டு போய் அதன்மீது சத்திய பிரமானம் காணுமா  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாள மஹாராஜா

பிரஜா உரிமை பிரிவு

அரச மாளிகை

ஜனநாதபுரம்

பொலன்னறுவை

என்ற முகவரிக்கு ஒரு விண்ணப்பத்தை புறாவின் காலில் கட்டி அனுப்பவும்.

மூன்று சுய ஓவியங்கள் கட்டாயம்

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் வரை தேசிய அடையாள அட்டை என்பது முக்கியமற்றது பன்சிகாவதையில் 100க்கும் 200க்கும் சோரம் போன சொறிலங்காவின் அரச இயன்திரம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விசாவில் வந்ததெண்டதில்லை கேள்வி?

எந்த பாஸ்போர்டை காட்டி யூகே விசா எடுத்தனிங்கள்?

யூகே விசா அப்ளிகேசனில் நேசனாலிட்டி எனும் கேள்விக்கு என்ன பதில் போட்டனிங்கள்?

ஓல்/ஏல் பரீட்சைக்கு எந்த அடையாள அட்டையை காட்டின்னீங்கள்?

இப்படி யூகே நசுரலைசேசன் செய்யும் வரைக்கும் உங்கள் தமிழ் ஈழ பிரஜா உரிமையை மறந்து சிறீலங்கா பிரஜா உரிமையை ஏன் பயன்படுத்தினீர்கள்?

நம்மை அடக்கி ஆண்ட, சிங்களவன் கையில் எம் நாட்டை கொடுத்துப்போன மகராணிக்கு விசுவாசமாய் இருப்பேன் என்று ஒரு ஈழப் பிரஜை திருக்குறளில் அடித்து சத்தியம் செய்யலாமா ?

இது ராஜதுரோகம் இல்லையா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விசாவில் வந்ததெண்டதில்லை கேள்வி?

எந்த பாஸ்போர்டை காட்டி யூகே விசா எடுத்தனிங்கள்?

யூகே விசா அப்ளிகேசனில் நேசனாலிட்டி எனும் கேள்விக்கு என்ன பதில் போட்டனிங்கள்?

ஓல்/ஏல் பரீட்சைக்கு எந்த அடையாள அட்டையை காட்டின்னீங்கள்?

இப்படி யூகே நசுரலைசேசன் செய்யும் வரைக்கும் உங்கள் தமிழ் ஈழ பிரஜா உரிமையை மறந்து சிறீலங்கா பிரஜா உரிமையை ஏன் பயன்படுத்தினீர்கள்?

நம்மை அடக்கி ஆண்ட, சிங்களவன் கையில் எம் நாட்டை கொடுத்துப்போன மகராணிக்கு விசுவாசமாய் இருப்பேன் என்று ஒரு ஈழப் பிரஜை திருக்குறளில் அடித்து சத்தியம் செய்யலாமா ?

இது ராஜதுரோகம் இல்லையா? :)

உங்களின் ஒட்டு மொத்த கேள்விக்கும் எம் தேசத்தை இன்னொரு தேசம் அடிமைபடுத்தியுள்ளது அது சொறிலங்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மை அடக்கி ஆண்ட, சிங்களவன் கையில் எம் நாட்டை கொடுத்துப்போன மகராணிக்கு விசுவாசமாய் இருப்பேன் என்று ஒரு ஈழப் பிரஜை திருக்குறளில் அடித்து சத்தியம் செய்யலாமா ?

இது ராஜதுரோகம் இல்லையா? :)

கடவுளா? ராணிய?கடவுள் எனில் பகவத் கீதை புத்தகம் என்னுடையது அதுவல்லவே திருக்குறள் தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.