Jump to content

என் பட்டாம் பூச்சி செத்துவிட்டது


Recommended Posts

எனக்குள் ஒரு பட்டாம் பூச்சி

இருந்தது

 

குளக்கரைகளில் மிதக்கும்

தாழம் பூவிலும்

குதித்து விளையாடும்

குளப்படி

வாண்டுகளிலும்

லயித்து மகிழும்

பட்டாம் பூச்சி

அது

 

 

கடந்து போகும் ஒரு

துளி இசையை நூல் பிடிச்சு

அதில் தொங்கி

கூத்தாடும்

பின்

தூரத்தே கேட்கும் பறையொலியிலும்

தன் சிறகுகளை

விரித்து நடனமாடும்

 

செங்கறுப்பு பெண்களின்

கருத்த முலைக் காம்புகளின்

மீது

தீராக் காதல் கொண்டு

கவி பாடும்

சிலவேளைகளில்

சரசமாடும்

 

பெரும் வனம் புகும்

இருள் விரும்பும்

சிறுகாடு ஒன்றில் தனித்து இருக்கும்

மழை நாளில்

மழை நீரில்

தன்  குஞ்சுகளுடன்

நடனமாடும்

 

இலக்கியம் அருந்தும்

மதுக் கோப்பைகளின்

மிதக்கும் நுரையில்

தாளம் போடும்

யாருமற்ற கடற்கரை ஒன்றில்

துணைவியுடன் குளிர் காற்றினூடெ

கலவி கொள்ளும்

பின்

கர்வம் கொள்ளும்

 

அது எல்லாமுமாக இருந்தது

ஒரு மேகமாக

என்னை வைத்து

மோகித்தது

 

இன்று

என் பட்டாம் பூச்சி

செத்து விட்டது

 

நெருக்கும் பின்

பரிகசிக்கும்

கேட்காவிடின்

கழுத்தை நெரிக்கும்

காலங்கள் அதைக் கொன்றதாகச்

சொல்கின்றனர்

 

கால நீட்சியினுடன்

போராட தோற்று

இவன் பட்டாம் பூச்சியை

கொன்று விட்டான் என்று

சொல்கின்றனர்

 

இவன் தீராக் காமமே

பட்டாம் பூச்சியை

வல்லுறவு கொண்டதாக

ஊரின் இருட்டு தெருக்களில்

இருக்கும் கிழவர்கள்

பேசிக் கொண்டனர்

 

பட்டாம் பூச்சிகள்

ஒரு முறை இறப்பின்

மீள திரும்புவதில்லை

என்றும்

சொல்லிக் கொள்கின்றனர்

 

----------------------------------------------------------

 

March 19, 2015 by நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாம் பூச்சிகள்

ஒரு முறை இறப்பின்

மீள திரும்புவதில்லை

என்றும்

சொல்லிக் கொள்கின்றனர்

 

 

விறகினில் நின்டெரியும் தீயானது

 

சாம்பலில் தங்குவதில்லை...!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செங்கறுப்பு பெண்களின்

கருத்த முலைக் காம்புகளின்

மீது

தீராக் காதல் கொண்டு

கவி பாடும்

சிலவேளைகளில்

சரசமாடும்

 

 

உங்கட பட்டாம்பூச்சி சரியான குறும்புக்கார பட்டாம்பூச்சியா இருந்திருக்குது.  :lol:  :icon_idea:

 

அதுசரி.. வேலைக் களைப்பாலா.. குடும்பப் பாரம் சுமக்கேலாமலா.. பட்டாம்பூச்சியை கொன்றீர்கள்..?! :)

 

Link to comment
Share on other sites

என்னுடைய பட்டாம் பூச்சியின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலியை அண்மையில் தான் கொண்டாடினேன்.
 
சிறகடிக்கும் பட்டாம் பூச்சியின் நினைவுகளுடனேயே என்றும்.
 
 
காயமே..
பொய்யடா
அது....
காத்துப் போன 
ரயறடா.. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுள்ளும் ஒரு பட்டாம்பூச்சி இருக்கின்றது!

 

அது உயிருடன் தான் இருக்கின்றதா அல்லது செத்துப்போய் விட்டதா என்று இன்னும் கணிப்பிட முடியவில்லை!

 

அதன் 'தாகம்' இன்னும் வற்றிப் போய் விடவில்லை!

 

ஆயினும் அது தன்னை இப்போதெல்லாம் 'அடிக்கடி' இனங்காட்டிக் கொள்வதில்லை!

 

 

 

அது,,,,,,,!

 

தூக்கம் வராத இரவுகளில்,

 

தென்னோலைளின் இடைவெளிகளின் ஊடே,

 

துருவ நட்சத்திரத்தைத் தேடுகின்றது!

 

தொலை தூரப் பயணமோ..,

 

இராக் காலத்துக் கடலின் இரவோ,

 

இல்லாவிடினும்...,

 

ஏன் தான் 'துருவ நட்சத்திரத்தை,

 

அது தேடுகின்றதோ? 

 

 

அந்தத் தேடலின் போது,

 

எனக்குத் துருவ நட்சத்திரம் காட்டிய,

 

அப்பாவின் நினைவும் வந்து போகின்றது!

 

 

அந்தப் பட்டாம்பூச்சி செத்துப் போகையில்,

 

எனது தேடலும் செத்துப் போகும்!

 

 

இன்னுமொரு காலத்தின் பிறப்பில்,

 

அந்த பட்டாம்பூச்சி உயிர்த்தெழும் !

 

 

 

நிழலி.... நெற்கொழுதாசனின் அண்மைய 'தனிமை' பற்றிய கவிதையும், உங்கள் கவிதையும்... எனது மனதை மிகவும் பாதித்துள்ளன!

 

ஒரு வேளை... கழுத்தில் சங்கிலி போட்ட மாடுகள்.. சாதாரண மாடுகளின் வாழ்க்கைக்காக ஏங்குவது போல, ஒரு 'ஏக்கம்' எமது வாழ்வில் நிரந்தரமாகக் குடி கொண்டுவிட்டது போல உள்ளது!

 

ஒரு போர்க்காலத் தலைமுறையின் மீதான 'தாக்கம்' இதுவோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது!

 

அல்லது நான் உங்கள் கவிதையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்றும் தெரியாது!

 

என்னவோ 'இழப்பு' மட்டுமே பூதாகரமாகிச் செல்வது போல ஒரு 'பிரமை"!

 

கவிதையோட்டம் வழமை போல அழகு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

கால நீட்சியினுடன்

போராட தோற்று

இவன் பட்டாம் பூச்சியை

கொன்று விட்டான் என்று

சொல்கின்றனர்

----

 

இவன் தான்.... "கால நீட்சியுடன் போராட தோற்று, பட்டாம் பூச்சியை கொன்றுவிட்டான்" என, எண்ணுகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலியின் பட்டாம் பூச்சி இன்னும் சாகவில்லை.  அதற்கு இன்னும் உயிர்ப்பிருக்கிறது என்று காட்டுகிறது இக்கவிதை.

பட்டாம் பூச்சி பிழைத்துக்கொள்ளும்.

நல்ல கவிதை. 

வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனையைக் கிளறும் கவிதை.

வண்ணத்துப் பூச்சி என்றே எம்வழக்கில் பாவிப்பதால் பட்டாம் பூச்சி என்பதில் ஒரு அந்நியத்தன்மை தெரிந்தது. நிழலி பட்டாம் பூச்சி என்று கவிதையில் கையாண்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும்?

Link to comment
Share on other sites

  • 3 years later...

Facebook இல் இருக்கும் you have memories to look back on today எனும் தானியங்கி நினைவூட்டல் மூலம் நினைவூட்டப்பட்ட ஒரு கவிதை. யாழில் எழுதிய பின் 2 நாட்கள் கழிய Facebook இல் இதை பகிர்ந்து இருந்தேன். இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கின்றேன் என்ற ஒரு நினைவே எனக்கு இல்லை. கிருபன் கேட்டு இருக்கும் கேள்விக்கும் பதில் இப்ப நினைவில் இல்லை.

இப்ப இதே கவிதையை திருப்பி எழுதினால் எப்படி இருக்கும் என யோசித்து பார்க்கின்றேன். இப்படி முன்னர் எழுதிய ஒன்றை திருப்பி எழுதினால் எப்படி அமையும் என யோசித்து இருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.