Jump to content

ராமானுஜர் வாழ்க்கை தொலைக்காட்சி தொடராகிறது கருணாநிதி வசனத்தில்


Recommended Posts

150319171049_dmkkarunanidhiramanujar_304
 
ராமானுஜர் வாழ்க்கைத் தொடர்- எழுதுபவர் கருணாநிதி
 
வைணவ சீர்திருத்தவாதியும், விசிஷ்டாத்வைத தத்துவத்தை கற்பித்தவருமான, ராமானுஜர் குறித்த தொலைக்காட்சித் தொடருக்கு திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதுவது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தனியார் தொலைக்காட்சியில் ,11வது நூற்றாண்டில் தமிழ்நாட்டின் திருபெரும்புதூரில் பிறந்த சமய சீர்திருத்தவாதியும் விஷிஷ்டாத்வைதவாதியுமான ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு, தொடராக வெளிவரவிருக்கிறது. இந்தத் தொடரின் கதை திரைக்கதை - வசனத்தை எழுதியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
 
 
நாத்திகராகக் கருதப்படும் திமுக தலைவர் கருணாநிதி, ஒரு சமய சீர்திருத்தவாதியின் வாழ்க்கை பற்றிய தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதுவது குறித்து இணையத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை எழுப்பியிருக்கும் நிலையில், இது குறித்து விளக்கமொன்றையும் கருணாநிதி அளித்திருக்கிறார்.
 
 
'பகுத்தறிவுக்கு எதிரானதல்ல'
 
 
"இதில் கொள்கை மாறுபாடு எதுவுமில்லை. ஒருவரைப் பாராட்டுவதாலேயே அவருடைய அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு விட்டதாகப் பொருள் கொள்ளக் கூடாது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரையும், கிருபானந்த வாரியாரையும், மதுரை ஆதினத்தையும் - அவர்கள் எல்லாம் சிறந்த ஆன்மீகவாதிகள் என்ற போதிலும், அவர்களின் தமிழுக்காகவும், சாதி மதப் புரட்சிகளுக்காகவும் நாம் ஆதரிக்கவே செய்தோம். குன்றக்குடி அடிகளாரை மேலவை உறுப்பினராகவே நியமித்தோம். கிருபானந்த வாரியாரை எதிர்த்து திருவாரூர் கோயிலிலே கேள்வி கேட்ட நானே, அவருடைய திருவுருவச் சிலையை சேலத்தில் திறந்து வைத்தேன். எனவே "இராமானுஜரின்" வாழ்க்கை வரலாறு என்றதும் எதையெதையோ எண்ணி யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை" என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.
 
ராமானுஜர் குறித்த தொடரை எடுப்பதற்கான யோசனையைத் தந்தவரே அவர்தான் என்கிறார் தொடரின் இயக்குனரும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினி. ராமானுஜரைப் பற்றிய வரலாற்று நூல்களில் இருப்பதைப் போன்றே தொடரை எடுக்க வேண்டுமென கருணாநிதி கூறியதாகவும் கூறுகிறார் குட்டி பத்மினி.
கருணாநிதியின் இந்த முயற்சியை பகுத்தறிவு இயக்கத்திற்கு எதிரானதாகப் பார்க்கத் தேவையில்லை என்கிறார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி.
 
 
"ஆன்மீகத்தை நாடுகிறாரா கருணாநிதி?"
 
 
ராமானுஜரைப் பற்றி நூல்களை எழுதியவரான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியிடம் இந்தத் தொடருக்கு வாழ்த்தைப் பெறும்படி கருணாநிதி கூறியிருக்கிறார்..
 
அந்தக் காலத்திலேயே ஒருவர் இவ்வளவு சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கிறாரே என்பதால் கருணாநிதி இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிறார் இந்திரா பார்த்தசாரதி.
கருணாநிதி ஆன்மீகத்தை நாடுகிறாரோ என்றும் தனக்குத் தோன்றுவதாகச் சொல்கிறார் இந்திரா பார்த்தசாரதி.
 
 
தற்போது தன்னுடைய முகநூல் பக்கத்திலும் ராமானுஜர் படத்தை பதிவுசெய்து, தன்னுடைய கொள்கை உறுதியை யாரும் ஐயுறத் தேவையில்லை என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். இந்தத் தொடர் வரும் மே மாதத்திலிருந்து ஒளிபரப்பாகவிருக்கிறது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.