Jump to content

திருநாவுக்கரசர் பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேவார முதலிகளில ஒருவரான திருநாவுக்கரசருக்கு மருணீக்கியார்> தருமசேனர்> வாகீசர்> அப்பர்> தாண்டகவேந்தர் என்னும் நாமங்களுமுண்டு.  இதில் அப்பர் என்னும் திருநாமம் திருஞானசம்பந்தரால் கொடுக்கப்படது என்பர்.  அப்பர் பாடிய முதற்பாடல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்..” என்று தொடங்குவதாகும்.   இந்தப் பதிகம் முழுவதும் அவர் வயிற்று உபாதையால் அதாவது சூலை நோயாற் பட்ட துன்பத்தின் ஆற்றாமையையும் அதனைக் குறைக்குமாறு இறைவனை வேண்டுவதையுமே காட்டி நிற்கின்றது.

அப்பர் தான் பெற்ற இறையனுபவத்தைப் பற்றிப் பாடும் “மாசில் வீணையும்…” பாடல் மிகுந்த இயற்கை நுகர்வை அனுபவிக்கும் ஓர் கவிஞனாக அவரை வெளிப்படுத்துகின்றது.  அவரின் து}ய இசைப்பற்றும் அதில் தெரிகின்றது.   அபசுரம் தட்டாத> பழுதுபடா மாசில் வீணையின் நாதம்> மாலையில் தோன்றும் குளிர் நிலா> உடலை இதமாக வருடி வீசும் தென்றல்> பூக்கள் மலர்ந்து சிரிக்கும் வசந்த காலமான இளவேனில்> ரீங்காரமிட்டு பூக்களெங்கும் மொய்த்துத்திரியும் வண்டுகள் நிறைந்த பொய்கை - இவைகளைப் போன்று இன்பம் தருவதே இறைவனின் பாத சரணாகதியென்று அவர் அந்த இன்பநிலையை ஒப்பிடுகிறார்.

இங்கு ஒரு கேள்வியெழுகின்றது.  மேற்சொன்னவையெல்லாம் எளிதில் கிடைக்கக் கூடியவையே.  பூரண சரணாகதி மூலம் இறைவனைக் கலத்தலால் வரும் பேரின்பத்தை இவற்றிற்கு நிகராகக் கொள்ள முடியுமா? என்பதுதான் அந்தக் கேள்வி.  உண்மையில் அந்தப் பேரானந்த அனுபவத்தைத் தம்முள் உணர்ந்த அப்பர் இயற்கையை நுகரும்போது அங்கே இறையருளைக் காண்கிறார்.  அதுவே அவரை அவ்வாறு ஒப்பிடச் செய்கின்றது.

பாரதியும் காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா பார்க்குமிடங்களெல்லாம் நந்தலாலா உன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா என்று தான் பெற்ற தெய்வீகவுணர்வை தனது இயற்கை நுகர்ச்சியினூடாக வெளிப்படுத்துவதையும்> வாடிய பயிரைக் கண்டால் வாடுமென் நெஞ்சு என்று வள்ளலார் பசுமைக்காய் ஏங்குவதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

அப்பர் இறைவனை இயற்கை நிகழ்வுகளில் கண்டின்புறுவதை  அவரது இன்னொரு பாடலான “மாதர்ப் பிறைக்கண்ணியானை…” என்னும்பாடல் விளக்குகின்றது.  திருவையாற்றில் கங்கையையும் இளம் பிறையையும் சூடிய சிவனை மலைமகளுடன் சேர்த்துப் பாடிச்செல்லும் அடியார் கூட்டத்துள் யாரும் அடையாளம் காணாதபடி செல்கையில் களிறெொன்று மடப்பிடியோடு காதல் செய்வதைக் கண்டேன்.  நான் கண்டறியாத விடயமது. அந்த இயற்கை நிகழ்வு இறைவனின் திருப்பாதத்தை எனக்கு நினைவூட்டியது> கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். என்று இரண்டு தடவைகள் வியந்து சொல்கிறார்.  இந்த இயற்கைச் செயற்பாட்டில் இறைவனைக்காணும் அப்பரின் பாடலை குழந்தைகளெல்லாம் ஆலய பஜனைகளில் பக்தியோடு பாடுவதை சைவ சமய ஆர்வலர்கள் கேட்டு மகிழ்கிறார்கள்.

அப்பரின் பாடல்களில் அஞ்சாமையை வெளிப்படுத்தும் “நாமார்க்கும் குடியல்லோம்  நமனையஞ்சோம்…” என்னும்பாடல் இறைபக்தியுள்ளோருக்கு வாழ்வில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.  தருமசேனராயிருந்தபோது சூலைநோயென்னும் வயிற்று உபாதையால் துன்ப்பபட்ட அப்பர் “ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே ஒருநாளும் துன்பமில்லை..” என்று உறுதியோடு கூறுவது இறை நம்பிக்கையால் அவரடைந்த சுகத்தை வெளிப்படுத்துகிறது.  சிவபெருமானின் சுற்றத்தார் நாம் அஞ்சுவதற்கு எதுவுமில்லை அஞ்சப் போவதுமில்லை  என்று “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்..” என்று தொடங்கும் பாடலில் இவ் அஞ்சாமையை அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

மகா அலெகஸாண்டர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தபோது ஒரு திகம்பரர் இவ்வாறு அந்த மன்னனின் அழைப்பைப் பயமின்றி மறுத்ததாக வரலாறுண்டு. பின்னர் மன்னனே சென்று அவரைச் சந்தித்தானாம்.  வடக்கிருந்து மகாநிர்வாண நிலையடைந்த இத்தகைய ஜைன ஞானிகளிடமிருந்த அச்சமற்ற போக்கு> தர்மசேனராயிருந்து வைதிகத்திற்கு மீண்ட திருஞானசம்பந்தரிடமும் குடிகொண்டிருந்தது தனது ஜைன வாழ்வில் அவர் பெற்ற பக்குவ நிலையாலேயே என்று ஊகிக்கத் தோன்றுகின்றது.  அல்லாவிடில்> சைவத்திற்கு மீண்ட குறுகிய காலத்தினுள்ளேயே மகேந்திர பல்லவ மன்னனின் அழைப்பை மறுத்து அவர் இவ்வாறு கூறுமளவுக்குப் பரிபக்குவ நிலை ஏற்பட்டிருக்க நியாயமில்லை.

அப்பரின் இறை தொடர்பான கொள்கையில் அவர் தன் பக்தியின் பயனாய் இறைவனின் இருப்பிடத்தைக் கண்டுகொண்டமையை “தேடிக் கண்டு கொண்டேன் தேடிக் கண்டு கொண்டேன் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்..” என்ற வரிகள் மூலம் தெளிவாக்குகிறார்.   “உள்ளம் பெருங்கோயில்> ஊனுடம்பு ஆலயம்> தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்..” என்னும் திருமூலர் திருமந்திரம்> “நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்துறீர் நட்ட கல்லுப் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்..” என்னும் சித்தர் பாடல்;;> “தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே…” என்னும் மணிவாசகர் கூற்று போன்றவற்றால் இறைவன் மேற் பக்திசெய்த அனைவரும் இறுதியில் இறைவனைத் தம் உள்ளத்திலேயே கண்டு இன்புறுவதைக் காண முடிகின்றது.  யேசுபிரானும் தனது மலைப்பிரசங்கத்தில் இவ்வாறே உள்ளத்தைத் தட்டுங்கள் திறக்கப்படும்> கேளுங்கள் தரப்படும்> அங்கே தேடுங்கள் கிடைக்குமென்று  என்று வேறொரு வகையாகக் கூறுகிறார்.

கைவல்ய நவனீதனான இறைவன் விறகில் தீயைப் போலவும் பாலின் நெய்யைப் போலவும் மறைய நிற்கிறான்.  அவனுடன் உறவு கொண்டு உணவென்னும் மத்தால் முறுகக் கடையும்போது முன்வந்து நிற்பான் என்கிறார் அப்பர்.  தனியே வைதிகத்தின் சகுண பக்திக்கு மட்டும் உட்படாது ஆரம்பத்தில் நிர்க்குண பிரமத்தில் ஈடுபாடு காட்டிப் பல யோக தியான சாதனைகளின் மூலம் புறச் சமயங்களைத் தழுவியவர்கள்; இறைவனைத் தம் உள்ளத்திற் காணலாம் என்னும் நம்பிக்கையுடனேயே வைதிகத்திற்கு மீண்டு வருகிறார்கள்.  மணிவாசகரும் பற்பல மதி மயக்களுக்குட் சிக்கி இறுதியில் “அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையினால்..” சிவனவன் என் சிந்தையுள் நின்றவதனால் அவனருளாலே அவன்றாள் வணங்கினேன்..” என்கிறார். அப்பரும் இவ்வாறே தருமசேனராயிருந்து பல சமண தியான சாதனைகளால் தன்னுணர்வு பெற்றவராதலால் வைதிகத்திற்கு மீண்டபோது தான்பெற்ற அனுபவங்களைக் கொண்டு வந்ததோடல்லாமல் “தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்..” என்கிறார்.

அப்பரின் பாடல்களில் சங்ககால அக இலக்கிய மரபைத் தழுவிய பாடலுக்கு உதாரணமாக “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்..” என்னும் திருத்தாண்டகத்தைக்; குறிப்பிடலாம்.  தன் கணவன் பெயரைப் பிறர் சொல்லக் கேட்டு இன்புறுவது தலைவியாகிய மனைவிக்கு இயல்பு.  “சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடுபால் முறையாலே உணத்தருவேன்… துலங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயோ!”  என்று சம்பந்தர் நாயகன் நாயகி பாவத்துடன் இறைவனைப் பக்தி செய்கிறார்.  அவர் இறைவியின் திருமுலைப்பாலை உண்டு சிவனுக்கு மகனானதாகவும் வரலாறுண்டு.  ஆனால் அதனைத் தந்தையாருக்குச் சொன்ன போதும்கூட “காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்..” என்று ஒரு இளநங்கை காதலனைப்பற்றிக் கூறுவதைப் போன்றே கூறியிருக்கிறார்.  இதே நாயகன் நாயகி பாவத்தில் தன்னைமறந்து இறைவனிடம் சரண்புகும் ஓர் பெண் இறைவனின் நாமம்> அவனிருக்கும் வண்ணம்> அவன் எழுந்தருளியிருக்கும் ஊர் ஆகியவற்றைக் கேட்டு அவன் மேற் பித்துப்பிடித்தவளாகி> தன் குல ஒழுக்கத்தை மறந்து> தாய் தந்தையரைத் துறந்து காதல் வயப்பட்டு தலைவன் திருவடிகளிலேயே சரணடைந்து விடுகிறாள்.  என்பதை ஓர் அழகிய அக இலக்கிய வடிவில் பக்திச் சுவை ததும்ப அப்பர் எடுத்துரைக்கிறார்.

ஓர் மிகச்சிறந்த கவிஞராகவும் சிந்தனாவாதியாகவுமிருந்த அப்பர்> இளமையிலேயே தாய் தந்தையரையிழந்து பின் நிச்சயிக்கபபட் மணவாளனையுமிழந்த தனது தமக்கையாரான திலவதியாரின் அன்பு வேண்டுகோளைத் தட்ட முடியாது> எல்லா வழியுமொன்றே என்ற உறுதியான நம்பிக்கையோடு சைவத்தைத் தழுவிக்கொண்டார். பிற்காலத்தில் அவர் சமணத்தை எதிர்த்தாராயினும் தருமசேனராயிருந்த அவரது காலப்பகுதியில் அவர் ஜைன மார்க்கம் தொடர்பான பல்வேறு அருட்பாக்களை இயற்றியிருக்கவும் கூடும். “தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்று பாடிய அவர் தனது இளமைக் காலத்தில் எதையும் எழுதாமல் இருந்திருக்க நியாயமில்லை.

சரித்திரம் இருண்ட காலமென்று பலவற்றை ஒதுக்கி விட்டது போல அப்பரின் ஜைன மதம் தொடர்பான கருத்துக்களையும் பாடல்களையும் இருட்டடிப்புச்செய்து விட்டது போலும்.  அவையெல்லாம் இன்று நமக்குக் கிடைத்திருக்குமாயின் தமிழிலக்கியத்தில்>  குறிப்பாக தத்துவ இலக்கியத்தில் மேலும் அரிய ஆக்கங்கள் எமக்குச் சேர்ந்திருக்கும். ஒரு வள்ளுவம் எம் தமிழை உலகில் உயர்த்தி வைத்திருப்பது போல தர்மசேனரின் பாடல்களும் வியத்தகு சொத்தாய் தமிழ்த் தாயை அலங்கரித்திருக்கும்.

- By Karu -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவார முதலிகளில் ஒருவரான திருநாவுக்கரசருக்கு மருணீக்கியார், தருமசேனர், வாகீசர், அப்பர், தாண்டகவேந்தர் என்னும் நாமங்களுமுண்டு. இதில் அப்பர் என்னும் திருநாமம் திருஞானசம்பந்தரால் கொடுக்கப்படது என்பர். அப்பர் பாடிய முதற்பாடல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்..” என்று தொடங்குவதாகும். இந்தப் பதிகம் முழுவதும் அவர் வயிற்று உபாதையால் அதாவது சூலை நோயாற் பட்ட துன்பத்தின் ஆற்றாமையையும் அதனைக் குறைக்குமாறு இறைவனை வேண்டுவதையுமே காட்டி நிற்கின்றது.

அப்பர் தான் பெற்ற இறையனுபவத்தைப் பற்றிப் பாடும் “மாசில் வீணையும்…” பாடல் மிகுந்த இயற்கை நுகர்வை அனுபவிக்கும் ஓர் கவிஞனாக அவரை வெளிப்படுத்துகின்றது. அவரின் தூய இசைப்பற்றும் அதில் தெரிகின்றது. அபசுரம் தட்டாத, பழுதுபடா மாசில் வீணையின் நாதம், மாலையில் தோன்றும் குளிர் நிலா, உடலை இதமாக வருடி வீசும் தென்றல், பூக்கள் மலர்ந்து சிரிக்கும் வசந்த காலமான இளவேனில், ரீங்காரமிட்டு பூக்களெங்கும் மொய்த்துத்திரியும் வண்டுகள் நிறைந்த பொய்கை - இவைகளைப் போன்று இன்பம் தருவதே இறைவனின் பாத சரணாகதியென்று அவர் அந்த இன்பநிலையை ஒப்பிடுகிறார்.

இங்கு ஒரு கேள்வியெழுகின்றது. மேற்சொன்னவையெல்லாம் எளிதில் கிடைக்கக் கூடியவையே. பூரண சரணாகதி மூலம் இறைவனைக் கலத்தலால் வரும் பேரின்பத்தை இவற்றிற்கு நிகராகக் கொள்ள முடியுமா? என்பதுதான் அந்தக் கேள்வி. உண்மையில் அந்தப் பேரானந்த அனுபவத்தைத் தம்முள் உணர்ந்த அப்பர் இயற்கையை நுகரும்போது அங்கே இறையருளைக் காண்கிறார். அதுவே அவரை அவ்வாறு ஒப்பிடச் செய்கின்றது.

பாரதியும் காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா பார்க்குமிடங்களெல்லாம் நந்தலாலா உன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா என்று தான் பெற்ற தெய்வீகவுணர்வை தனது இயற்கை நுகர்ச்சியினூடாக வெளிப்படுத்துவதையும், வாடிய பயிரைக் கண்டால் வாடுமென் நெஞ்சு என்று வள்ளலார் பசுமைக்காய் ஏங்குவதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

அப்பர் இறைவனை இயற்கை நிகழ்வுகளில் கண்டின்புறுவதை அவரது இன்னொரு பாடலான “மாதர்ப் பிறைக்கண்ணியானை…” என்னும்பாடல் விளக்குகின்றது. திருவையாற்றில் கங்கையையும் இளம் பிறையையும் சூடிய சிவனை மலைமகளுடன் சேர்த்துப் பாடிச்செல்லும் அடியார் கூட்டத்துள் யாரும் அடையாளம் காணாதபடி செல்கையில் களிnறொன்று மடப்பிடியோடு காதல் செய்வதைக் கண்டேன். நான் கண்டறியாத விடயமது. அந்த இயற்கை நிகழ்வு இறைவனின் திருப்பாதத்தை எனக்கு நினைவூட்டியது, கண்டேனவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன். என்று இரண்டு தடவைகள் வியந்து சொல்கிறார். இந்த இயற்கைச் செயற்பாட்டில் இறைவனைக்காணும் அப்பரின் பாடலை குழந்தைகளெல்லாம் ஆலய பஜனைகளில் பக்தியோடு பாடுவதை சைவ சமய ஆர்வலர்கள் கேட்டு மகிழ்கிறார்கள்.

அப்பரின் பாடல்களில் அஞ்சாமையை வெளிப்படுத்தும் “நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்…” என்னும்பாடல் இறைபக்தியுள்ளோருக்கு வாழ்வில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. தருமசேனராயிருந்தபோது சூலைநோயென்னும் வயிற்று உபாதையால் துன்ப்பபட்ட அப்பர் “ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம் இன்பமே ஒருநாளும் துன்பமில்லை..” என்று உறுதியோடு கூறுவது இறை நம்பிக்கையால் அவரடைந்த சுகத்தை வெளிப்படுத்துகிறது. சிவபெருமானின் சுற்றத்தார் நாம் அஞ்சுவதற்கு எதுவுமில்லை அஞ்சப் போவதுமில்லை என்று “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்..” என்று தொடங்கும் பாடலில் இவ் அஞ்சாமையை அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

மகா அலெகஸாண்டர் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தபோது ஒரு திகம்பரர் இவ்வாறு அந்த மன்னனின் அழைப்பைப் பயமின்றி மறுத்ததாக வரலாறுண்டு. பின்னர் மன்னனே சென்று அவரைச் சந்தித்தானாம். வடக்கிருந்து மகாநிர்வாண நிலையடைந்த இத்தகைய ஜைன ஞானிகளிடமிருந்த அச்சமற்ற போக்கு, தர்மசேனராயிருந்து வைதிகத்திற்கு மீண்ட திருஞானசம்பந்தரிடமும் குடிகொண்டிருந்தது தனது ஜைன வாழ்வில் அவர் பெற்ற பக்குவ நிலையாலேயே என்று ஊகிக்கத் தோன்றுகின்றது. அல்லாவிடில், சைவத்திற்கு மீண்ட குறுகிய காலத்தினுள்ளேயே மகேந்திர பல்லவ மன்னனின் அழைப்பை மறுத்து அவர் இவ்வாறு கூறுமளவுக்குப் பரிபக்குவ நிலை ஏற்பட்டிருக்க நியாயமில்லை.

அப்பரின் இறை தொடர்பான கொள்கையில் அவர் தன் பக்தியின் பயனாய் இறைவனின் இருப்பிடத்தைக் கண்டுகொண்டமையை “தேடிக் கண்டு கொண்டேன் தேடிக் கண்டு கொண்டேன் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்..” என்ற வரிகள் மூலம் தெளிவாக்குகிறார். “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம், தௌ;ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்..” என்னும் திருமூலர் திருமந்திரம், “நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்துறீர் நட்ட கல்லுப் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்..” என்னும் சித்தர் பாடல்;;, “தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே…” என்னும் மணிவாசகர் கூற்று போன்றவற்றால் இறைவன் மேற் பக்திசெய்த அனைவரும் இறுதியில் இறைவனைத் தம் உள்ளத்திலேயே கண்டு இன்புறுவதைக் காண முடிகின்றது. யேசுபிரானும் தனது மலைப்பிரசங்கத்தில் இவ்வாறே உள்ளத்தைத் தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும், அங்கே தேடுங்கள் கிடைக்குமென்று என்று வேறொரு வகையாகக் கூறுகிறார்.

கைவல்ய நவனீதனான இறைவன் விறகில் தீயைப் போலவும் பாலின் நெய்யைப் போலவும் மறைய நிற்கிறான். அவனுடன் உறவு கொண்டு உணவென்னும் மத்தால் முறுகக் கடையும்போது முன்வந்து நிற்பான் என்கிறார் அப்பர். தனியே வைதிகத்தின் சகுண பக்திக்கு மட்டும் உட்படாது ஆரம்பத்தில் நிர்க்குண பிரமத்தில் ஈடுபாடு காட்டிப் பல யோக தியான சாதனைகளின் மூலம் புறச் சமயங்களைத் தழுவியவர்கள்; இறைவனைத் தம் உள்ளத்திற் காணலாம் என்னும் நம்பிக்கையுடனேயே வைதிகத்திற்கு மீண்டு வருகிறார்கள். மணிவாசகரும் பற்பல மதி மயக்களுக்குட் சிக்கி இறுதியில் “அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையினால்..” சிவனவன் என் சிந்தையுள் நின்றவதனால் அவனருளாலே அவன்றாள் வணங்கினேன்..” என்கிறார். அப்பரும் இவ்வாறே தருமசேனராயிருந்து பல சமண தியான சாதனைகளால் தன்னுணர்வு பெற்றவராதலால் வைதிகத்திற்கு மீண்டபோது தான்பெற்ற அனுபவங்களைக் கொண்டு வந்ததோடல்லாமல் “தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்..” என்கிறார்.

அப்பரின் பாடல்களில் சங்ககால அக இலக்கிய மரபைத் தழுவிய பாடலுக்கு உதாரணமாக “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்..” என்னும் திருத்தாண்டகத்தைக்; குறிப்பிடலாம். தன் கணவன் பெயரைப் பிறர் சொல்லக் கேட்டு இன்புறுவது தலைவியாகிய மனைவிக்கு இயல்பு. “சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடுபால் முறையாலே உணத்தருவேன்… துலங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயோ!” என்று சம்பந்தர் நாயகன் நாயகி பாவத்துடன் இறைவனைப் பக்தி செய்கிறார். அவர் இறைவியின் திருமுலைப்பாலை உண்டு சிவனுக்கு மகனானதாகவும் வரலாறுண்டு. ஆனால் அதனைத் தந்தையாருக்குச் சொன்ன போதும்கூட “காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்..” என்று ஒரு இளநங்கை காதலனைப்பற்றிக் கூறுவதைப் போன்றே கூறியிருக்கிறார். இதே நாயகன் நாயகி பாவத்தில் தன்னைமறந்து இறைவனிடம் சரண்புகும் ஓர் பெண் இறைவனின் நாமம், அவனிருக்கும் வண்ணம், அவன் எழுந்தருளியிருக்கும் ஊர் ஆகியவற்றைக் கேட்டு அவன் மேற் பித்துப்பிடித்தவளாகி, தன் குல ஒழுக்கத்தை மறந்து, தாய் தந்தையரைத் துறந்து காதல் வயப்பட்டு தலைவன் திருவடிகளிலேயே சரணடைந்து விடுகிறாள். என்பதை ஓர் அழகிய அக இலக்கிய வடிவில் பக்திச் சுவை ததும்ப அப்பர் எடுத்துரைக்கிறார்.

ஓர் மிகச்சிறந்த கவிஞராகவும் சிந்தனாவாதியாகவுமிருந்த அப்பர், இளமையிலேயே தாய் தந்தையரையிழந்து பின் நிச்சயிக்கபபட் மணவாளனையுமிழந்த தனது தமக்கையாரான திலவதியாரின் அன்பு வேண்டுகோளைத் தட்ட முடியாது, எல்லா வழியுமொன்றே என்ற உறுதியான நம்பிக்கையோடு சைவத்தைத் தழுவிக்கொண்டார். பிற்காலத்தில் அவர் சமணத்தை எதிர்த்தாராயினும் தருமசேனராயிருந்த அவரது காலப்பகுதியில் அவர் ஜைன மார்க்கம் தொடர்பான பல்வேறு அருட்பாக்களை இயற்றியிருக்கவும் கூடும். “தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்று பாடிய அவர் தனது இளமைக் காலத்தில் எதையும் எழுதாமல் இருந்திருக்க நியாயமில்லை.

சரித்திரம் இருண்ட காலமென்று பலவற்றை ஒதுக்கி விட்டது போல அப்பரின் ஜைன மதம் தொடர்பான கருத்துக்களையும் பாடல்களையும் இருட்டடிப்புச்செய்து விட்டது போலும். அவையெல்லாம் இன்று நமக்குக் கிடைத்திருக்குமாயின் தமிழிலக்கியத்தில், குறிப்பாக தத்துவ இலக்கியத்தில் மேலும் அரிய ஆக்கங்கள் எமக்குச் சேர்ந்திருக்கும். ஒரு வள்ளுவம் எம் தமிழை உலகில் உயர்த்தி வைத்திருப்பது போல தர்மசேனரின் பாடல்களும் வியத்தகு சொத்தாய் தமிழ்த் தாயை அலங்கரித்திருக்கும்.

Link to comment
Share on other sites

திருவள்ளுவரின் முதலாவது குறளே சமண சமயத்தின் கடவுள் கொள்கையில் இருந்து விலகுகின்றது. அப்படி இருக்க வள்ளுவரை எப்படி சமணர் என்பது ?
 
அப்பர் சமண சமய பாடல்களைப் பாடி இருக்க அவை அழிக்கப்பட்டிருக்கலாம் என்பது கற்பனையாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில்..
 
சைவம் தவிர்ந்த ஏனைய‌ படைப்புகள் அழிக்கப்பட்டிருக்கும் என்றால் மணிமேகலை எப்படித் தப்பியது ?
 
 
 
   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈசன்!

வள்ளுவரைப்பற்றி நானொன்றும் இங்கு எழுதவில்லையே! வள்ளுவம் தமிழுக்கு அழகு செய்வது போல அப்பரின் சமணக் கருத்துக்களும் அவை கிடைத்திருந்தால் தமிழுக்கு மேலும் அழகூட்டியிருக்குமென்றே எழுதினேன். அதை நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்.  

இயற்கையிலேயே சிறந்த கவிஞரான நாவுக்கரசர் சமணராயிருந்தபோது இளைஞராக இருந்திருப்பார்.  பல பாடல்களையும் பாடித்தானிருப்பார்.  ஆனால் எமக்கு அவை கிடைக்கவில்லை.  அது ஒரு இழப்பல்லவா?

 

மணிமேகலை  (பெளத்த காவியம்) சிலப்பத்திகாரம், சீவக சிந்தாமணி (சமண காவியங்கள்)போன்ற நூல்கள் தப்பிப்பிழைத்ததற்காக சமய ரீதியாக எதுவும் ஒதுக்கவோ அழித்தொழிக்கவோ படவில்லையென்று கூறமுடியாது.  பல நூல்களை அப்படி அழித்திருக்கிறார்கள்.  அழிந்தவை போக மிஞ்சியவைதான் இப்போது எம் வசமுள்ளன.

 

 

Link to comment
Share on other sites

அப்பர் உண்மையில் சமண பாடல்களை இயற்றி இருப்பாரயிருந்தால் சில சமயம் அவரே தன் தவறுணர்ந்து அவற்றை அழித்திருக்கலாமல்லவா ? (சைவத்திற்கு மீண்ட போது )
 
அப்பரின் பாடல்கள் தன் உணர்வின் வெளிபாடுகளே.
 
சம‌ணத்தில் தன் உணர்வை வெளிப்படுத்தவல்ல கவித்துவமான விசயங்களும் இல்லை.  :unsure:  :)
 
உதாரணமாக சைவத்தில் அவன் இவன் என்று சொல்லவல்ல உறவுமுறையான இறைவன் இருக்கிறான். ஆட்கொள்ளல் என்னும் பந்தமும் அங்கே வந்து விடுகின்றது. பின் கவிதைகளுக்கா பஞ்சம் ? 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டல கேசி,  நீலகேசி போன்ற பெளத்த சமணத் தருக்க நூல்கள் (குண்டலகேசி முழுமையாக இல்லை) தமிழில் உள்ளன. மணிமேகலையும் அத்தகையதே. அவைகள் கதைகளாயிருந்தாலும் சமயக் கோட்பாடுகளை வலியுறுத்துவனவாகவே யுள்ளன.  நாவுக்கரசரின் நாவன்மையால் சமணக்கருத்துக்களை அவர் கூறாமல் விட்டிருக்க மாட்டார்.   ஆனால்,  இருவேறு கொள்கைகளை ஒருவரே பரப்பக்கூடாது என்பதற்காகத் தனது ஆக்கங்களைத் தானே அழித்திருக்கலாம்.  அவ்வகையில் நீங்கள் கூறுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.