Jump to content

குருவிகளுக்காக அலைபேசி வசதிகளை நிராகரித்த புலிகளின் தலைவர்.


Recommended Posts

குருவிகளுக்காக அலைபேசி வசதிகளை நிராகரித்த புலிகளின் தலைவர்.


அலைபேசி வசதிகள் எல்லா மக்களுக்கும் கிடைக்கப் பெற தொலைபேசி கோபுரம் ஈழத்தின் பல பகுதிகளில் நிறுவுவதற்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய இருந்த போது அதன் பலன்களைப் பற்றி அந்த நிறுவன பிரதிநிதிகள் மிகைப்படுத்தி விளக்கிய பிறகு தலைவரிடம் “உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்” என்றனர்.

அலைபேசி கோபுரத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குருவிகளின் கருவை சிதைக்கும் என அறிந்திருக்கின்றேன்.நீங்கள் நிறுவும் இந்த கருவியிலும் அது போல் ஏற்ப்படுமா என வினவினார் தேசியத் தலைவர்.


அதற்கு அவர்கள் ஆம் இதை தவிர்க்க முடியாது.எதிர் வருங்காலங்களில்
வேண்டுமானால் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்திட கருவிகள் வரலாம் என்றனர்.

அப்படியானால் எதிர்வரும் காலங்களில் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்திட கருவிகள் வந்த பின்னே எங்களுக்கு சொல்லியனுப்புங்கள்.இப்போது வேண்டாம் என்றார் தேசியத் தலைவர் பிரபாகரன்.

குருவிகளுக்காக மனமிரங்கிய ஒரே தலைவன் இவர்.இந்த நாட்டில் மனிதர்களுக்கு கூட மனமிரங்காத மிருகங்களெல்லாம் தலைவராக இருக்கின்றார்கள்.

www.asrilanka.com/2015/03/22/28184#sthash.uAx50C3Q.dpuf

Link to comment
Share on other sites

அனைத்து உயிர்களையும் நேசித்தவர் தலைவர் என்றால் அது மிகையல்ல.. ஆனால் பிற்காலத்தில் எவ்வாறு செல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தின என்பதும் நாம் அறிந்ததே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து உயிர்களையும் நேசித்தவர் தலைவர் என்றால் அது மிகையல்ல.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாவுக்கு அஹமட் ஷா மசூத் ஆப்கானில் எப்படி கொல்லப் பட்டார் என்பது தெரியும். அதனால் இந்த நரித்திட்டத்தை புத்திசாலித்தனமாக நிரகரித்திருப்பார்.

பாரி ரேஞ்சுக்கு வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினான் என்று சில துதிபாடிகள் கிளம்பி இருக்கிறார்கள்.

பிரபா ஒரு ஆயுதப் போராளி, விடுதலை வீரன் -

அந்தாளை போய் ஏன் இப்படி கேவலம் செய்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாவுக்கு அஹமட் ஷா மசூத் ஆப்கானில் எப்படி கொல்லப் பட்டார் என்பது தெரியும். அதனால் இந்த நரித்திட்டத்தை புத்திசாலித்தனமாக நிரகரித்திருப்பார்.

பாரி ரேஞ்சுக்கு வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினான் என்று சில துதிபாடிகள் கிளம்பி இருக்கிறார்கள்.

பிரபா ஒரு ஆயுதப் போராளி, விடுதலை வீரன் -

அந்தாளை போய் ஏன் இப்படி கேவலம் செய்கிறீர்கள்.

இல்லை கோசான் ,அவர் வெளியில் சொன்னது குருவிகளைப்பற்றி . உண்மையில் அப்போதிருந்த பாதுகாப்பு காரணங்களுக்காகவே  அத்திட்டம் நிராகரிக்கப்பட்டது .

Link to comment
Share on other sites

11081054_836625286430921_423104406608918


அனைத்து இயக்கங்களும் செய்தவைதான். விகிதாசாரம் மாறுபடும். 

-7ம்கட்டை சேச்லேன் மல்லாகத்தில் வசிக்கும் தேவசோதி எட்வேட் ஆகிய நான் கீழ்காணும் பொருட்களை திருடியதன்பேரில் LTTE வினால் வழங்கப்படும் இத் தண்டனையை ஏற்கிறேன்.
............
மொத்தம் 6000 பெறுமதியான நகைகள்
அந்த வாலிபரின் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அட்டையில் மேற்கொண்டவாறு எழுதப்பட்டுள்ள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் செய்ததைவிடகொடுமையானது

 இத்தனைவருடமாக 

மறக்கப்பட்ட அவ்நிகழ்வையும் படத்தையும்  

மீண்டும் தூக்கி திரிவது.... :(  :(  :(

Link to comment
Share on other sites

"மறக்கபட்ட " அப்படி ஒன்று உலக சரித்திரத்தில் இல்லை .

 

உங்கட வசதிக்கு மறப்பீங்க நினைப்பீங்க ஏனென்றால் நீங்க வியாபாரிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி நிறைய அப்துல்கலாம் மகாத்மாகாந்தி போன்றவர்களின் கதைகள் இனையத்தில் கொட்டிக் கிடக்கு! இது நமக்கு புது ட்றெண்ட்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11081054_836625286430921_423104406608918

அனைத்து இயக்கங்களும் செய்தவைதான். விகிதாசாரம் மாறுபடும். 

-7ம்கட்டை சேச்லேன் மல்லாகத்தில் வசிக்கும் தேவசோதி எட்வேட் ஆகிய நான் கீழ்காணும் பொருட்களை திருடியதன்பேரில் LTTE வினால் வழங்கப்படும் இத் தண்டனையை ஏற்கிறேன்.

............

மொத்தம் 6000 பெறுமதியான நகைகள்

அந்த வாலிபரின் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அட்டையில் மேற்கொண்டவாறு எழுதப்பட்டுள்ள

இதைவிட கொடுமையான வேலைகளில் நானும் ஈடுபட்டிருக்கிறேன் 
இப்போது நினைக்குபோது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது.
 
நீங்கள் யாழில் இருந்து கிளம்பும் காலத்தில் உங்கள் வீதியால் ஒருவர் சென்றால் அவரை உங்களால் அடையாளம் 
காணக்கூடியதாக இருக்கும்.
பின்பு இடபெயர்வால் எல்லா ஊரிலும் பலரும் வந்து குடி ஏறினார்கள்.
அவர்களும் வயிற்றுபசி வாழ்விற்கு ஆகவே திருடினார்கள் (என்பது எனது தனிப்பட எண்ணம்)
 
களவாடிய ஒருவரை இப்படி கட்டிவிட்டால் 
ஊரில் இருக்கும் எல்லோரும் இவரை அடையாளம் தெரிந்துவிடும் .
பின்பு அவரின் நடமாட்டத்தில் எல்லோரும் அவதானமாக இருப்பார்கள்.
 
அப்போதைய காலத்தில் இது மிகவும் சரியான தண்டனை எனபதே எனது எண்ணம்.
 
அப்போ கோர்ட் போலிஸ் ஏதும் கிடையாது.
 
என்ன பேசுகிறோம் என்பது முக்கியமுல்லை ....
யாரோடு பேசுகிறோம் என்பது முக்கியம் என்பதால்.
ஆறாம் அறிவு சார் விடயங்களை ஆடு மாடுகளுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை.
 
justice vs mercy ethical dilemma
உலகில் எப்போதும் உள்ள தீர்க்கபட முடியாத விடயம்.
மாறி மாறி குத்துகரணம் அடித்துக்கொண்டு இருக்கலாம். 

அர்ஜுன் அண்ணே ...
எனது கருத்து சரி பிழைகள் பற்றியதில்லை ...
எம்மிடம் இருந்த வசதி அடிப்படை பற்றியது. 
 
65 வயதிற்கு பின்புதான் காந்தி மகாத்மா ....
20 வயதிற்கு முன்பு ஒரு காமக்காரன் இதை காந்தியே எழுதியுள்ளார். 
கடந்த கால அனுபவமே ஒரு மனிதனை உருவாக்குகிறது.
அதுவும் சில ஆமைகளை அசைக்காது போனது தமிழனின் துரதிசடம் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மறக்கபட்ட " அப்படி ஒன்று உலக சரித்திரத்தில் இல்லை .

 

உங்கட வசதிக்கு மறப்பீங்க நினைப்பீங்க ஏனென்றால் நீங்க வியாபாரிகள் .

 

உங்களிடம் சில கேள்விகள்

 

1 - இந்த தண்டனையை  இன்றும் ஏற்றுக்கொள்கின்றீர்களா???

2-  இது உங்கள் சகோதரராக இருந்தால் இங்கே மீண்டும் காட்சிப்பொருள் ஆக்குவீர்களா??

3- மேலே நான் கருத்து வைத்ததால் தங்கள் கருத்து மாற்றம் கண்டதா??

4- ஒரு தப்பை ஒருவர் உணர்வதற்கே அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது. அது மறக்கப்படவேண்டியதில்லையா??  வரலாறும் முழுவதும் அவரது பரம்பரை தொடர்ந்து தண்டிக்கப்படணுமா??

5 - இன்று  அவர்  திருந்தி குடும்பமாக மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தால் இது அவற்றைப்பாதிக்காதா??

Link to comment
Share on other sites

ஏய் குருவிக் குருவிக் குருவி அடிச்சா......

ஏய் குருவி.. சிட்டுக் குருவி ... :icon_idea:

 

குருவியை விட்டு நீன்ற தூரம் சென்றுவிட்டோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இயக்கங்களிலும் இருந்தவர்கள் தமிழ்ச்சமூகத்தில் இருந்துதான் வந்தார்கள். புலிக்குப் பதிலாக புளட் இல்லாட்டி ரெலோ பெரிய இயக்கமாக வந்திருந்தால் உத்தமர்களாக நடந்திருக்கமாட்டார்கள். ரெலோ தாஸ் பிரச்சினையின்போது உள்ளுக்குள்ளேயே இருந்தவர்களை பாண் போறணைக்குள் போட்டுக் கொன்றார்கள் என்று நெல்லியடிச் சந்தியில் எழுதப்பட்டதை எழுத்துக் கூட்டிப் படித்துத்தான் தமிழையையும் வளர்த்தேன். எதிரிகளிடம் பிடிபடக்கூடாது என்று கரும்புலி போறணைக்குள் குதித்ததையும் படித்தேன்.

சும்மா புலி பயங்கரவாதிகள், மற்றவர்கள் எல்லாம் காந்தீயவாதிகள் என்று கதை விடக்குடாது.

மற்றும்படி குருவியின் கதையை பாலர் வகுப்புப் புத்தகத்தில் போடுவது நல்லது.

Link to comment
Share on other sites

அங்கு தான் போடப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

எல்லா இயக்கங்களிலும் இருந்தவர்கள் தமிழ்ச்சமூகத்தில் இருந்துதான் வந்தார்கள். புலிக்குப் பதிலாக புளட் இல்லாட்டி ரெலோ பெரிய இயக்கமாக வந்திருந்தால் உத்தமர்களாக நடந்திருக்கமாட்டார்கள். ரெலோ தாஸ் பிரச்சினையின்போது உள்ளுக்குள்ளேயே இருந்தவர்களை பாண் போறணைக்குள் போட்டுக் கொன்றார்கள் என்று நெல்லியடிச் சந்தியில் எழுதப்பட்டதை எழுத்துக் கூட்டிப் படித்துத்தான் தமிழையையும் வளர்த்தேன். எதிரிகளிடம் பிடிபடக்கூடாது என்று கரும்புலி போறணைக்குள் குதித்ததையும் படித்தேன்.

சும்மா புலி பயங்கரவாதிகள், மற்றவர்கள் எல்லாம் காந்தீயவாதிகள் என்று கதை விடக்குடாது.

மற்றும்படி குருவியின் கதையை பாலர் வகுப்புப் புத்தகத்தில் போடுவது நல்லது.

அனைத்து இயக்கங்களும் செய்தவைதான். விகிதாசாரம் மாறுபடும். 

நான் போட்ட பதிவின் தலைப்பே இதுதான் .அனைத்து கொலைகாரர்களையும் தான் விமர்சிகின்றோம் .இவர்கள்  எவரும் சிபி சக்கரவர்த்திகள் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5000 பேர் கொண்ட புளொட்.. 1500 பேரை போட்டிருந்தால்.. விகிதாசாரம் என்ன..?!

 

3000 பேரைக் கொண்ட ஈபி 1000 பேரைப் போட்டிடுந்தால்.. விகிதாசாரம் என்ன..?!

 

3000 பேரைக் கொண்ட டெலோ.. 1500 பேரைப் போட்டிருந்தால் விகிதாசாரம் என்ன..?!

 

2500 பேரைக் கொண்ட ஈபிடிபி 1000 பேரைப் போட்டிருந்தால் விகிதாசாரம் என்ன..?!

 

40,000 பேரைக் கொண்ட புலி 2000 பேரைப் போட்டிருந்தால் விகிதாசாரம் என்ன..?!

 

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிங்களவன்... 150,000 தமிழரைப் போட்டுள்ளான்... விகிதாசாரம் என்ன..?!

 

150,000 பேரைக் கொண்ட இந்தியன் 15,000 தமிழர்களைப் போட்டுள்ளான... விகிதாசாரம் என்ன..?!

 

சில பேருக்கு விகிதாசாரமும் விளங்குதில்ல.!!  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5000 பேர் கொண்ட புளொட்.. 1500 பேரை போட்டிருந்தால்.. விகிதாசாரம் என்ன..?!

3000 பேரைக் கொண்ட ஈபி 1000 பேரைப் போட்டிடுந்தால்.. விகிதாசாரம் என்ன..?!

3000 பேரைக் கொண்ட டெலோ.. 1500 பேரைப் போட்டிருந்தால் விகிதாசாரம் என்ன..?!

2500 பேரைக் கொண்ட ஈபிடிபி 1000 பேரைப் போட்டிருந்தால் விகிதாசாரம் என்ன..?!

40,000 பேரைக் கொண்ட புலி 2000 பேரைப் போட்டிருந்தால் விகிதாசாரம் என்ன..?!

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிங்களவன்... 150,000 தமிழரைப் போட்டுள்ளான்... விகிதாசாரம் என்ன..?!

150,000 பேரைக் கொண்ட இந்தியன் 15,000 தமிழர்களைப் போட்டுள்ளான... விகிதாசாரம் என்ன..?!

சில பேருக்கு விகிதாசாரமும் விளங்குதில்ல.!! :icon_idea::)

எங்கட விகிதாசாரம் இப்படியல்ல நெடுக்ஸ்

புளட் - 1500

புலி - 2000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தில் இருப்பது ஒரு சங்க கடை பெற்றோல் கடை போலத் தெரியுது. எந்த இடம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5000 பேர் கொண்ட புளொட்.. 1500 பேரை போட்டிருந்தால்.. விகிதாசாரம் என்ன..?!

 

3000 பேரைக் கொண்ட ஈபி 1000 பேரைப் போட்டிடுந்தால்.. விகிதாசாரம் என்ன..?!

 

3000 பேரைக் கொண்ட டெலோ.. 1500 பேரைப் போட்டிருந்தால் விகிதாசாரம் என்ன..?!

 

2500 பேரைக் கொண்ட ஈபிடிபி 1000 பேரைப் போட்டிருந்தால் விகிதாசாரம் என்ன..?!

 

40,000 பேரைக் கொண்ட புலி 2000 பேரைப் போட்டிருந்தால் விகிதாசாரம் என்ன..?!

 

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிங்களவன்... 150,000 தமிழரைப் போட்டுள்ளான்... விகிதாசாரம் என்ன..?!

 

150,000 பேரைக் கொண்ட இந்தியன் 15,000 தமிழர்களைப் போட்டுள்ளான... விகிதாசாரம் என்ன..?!

 

சில பேருக்கு விகிதாசாரமும் விளங்குதில்ல.!!  :icon_idea:  :)

 

ஆக மொத்தத்தில் 403,500 காட்டுமிராண்டிகள் 172,000 மக்களை கொன்று குவித்துள்ளார்கள்?

 

மனித உயிர்களின் மதிப்பு ஆடு, மாட்டை இறைச்சிக்கு வெட்டும் அளவிற்கு இறங்கிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் 403,500 காட்டுமிராண்டிகள் 172,000 மக்களை கொன்று குவித்துள்ளார்கள்?

 

மனித உயிர்களின் மதிப்பு ஆடு, மாட்டை இறைச்சிக்கு வெட்டும் அளவிற்கு இறங்கிவிட்டது.

STATES WITH THE DEATH PENALTY (32)
Other State Information:
Alabama

Arizona

Arkansas

California

Colorado

Delaware

Florida

Georgia

Idaho

Indiana

Kansas

Kentucky Louisiana

Mississippi

Missouri

Montana

Nebraska

Nevada

New Hampshire

North Carolina

Ohio

Oklahoma

Oregon Pennsylvania

South Carolina

South Dakota

Tennessee

Texas

Utah

Virginia

Washington

Wyoming

ALSO

- U.S. Gov't

- U.S. Military STATES WITHOUT THE DEATH PENALTY (18) (YEAR ABOLISHED IN PARENTHESES) Alaska (1957)

Connecticut** (2012)

Hawaii (1957)

Illinois (2011)

Iowa (1965)

Maine (1887)

Maryland (2013)

Massachusetts (1984) Michigan (1846)

Minnesota (1911)

New Jersey (2007)

New Mexico* (2009)

New York (2007)#

North Dakota (1973)

Rhode Island (1984)^

Vermont (1964) West Virginia (1965)

Wisconsin (1853)

ALSO

Dist. of Columbia (1981) 

இறந்தவர்கள் இறந்துவிட்டார்கள் ....
 
உயிர்களில் அக்கறை உள்ளவர்கள் அமெரிக்காவில் 32 மாநிலங்களில் குற்றம் செய்தவர்களை
தூக்கில் போடுகிறார்கள்.
அதை நிறுத்த சொல்லி குரல் கொடுக்கலாம். 
 
மேலே எந்த மாநிலங்கள் என்பது விபரமாக இருக்கிறது.  
Link to comment
Share on other sites

From - http://www.asrilanka.com/2015/03/26/28236

“கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) எட்டாம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள், வான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலுவுடன் இருக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துகூறிய தாக்குதல் நாளாக 2007 மூன்றாம் மாதம் 26 ஆம் நாள் கட்டுநாயாக்கா வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.
விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.
இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

 

- See more at: http://www.asrilanka.com/2015/03/26/28236#sthash.fl0URXFD.dpuf

 

 

"2007 வோர்ல்ட்கப் பைனலுக்கு கொழும்பில வெடி போட்டது ஞாபகம் இருக்குதா?"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 - இந்த தண்டனையை  இன்றும் ஏற்றுக்கொள்கின்றீர்களா???

2-  இது உங்கள் சகோதரராக இருந்தால் இங்கே மீண்டும் காட்சிப்பொருள் ஆக்குவீர்களா??

3- மேலே நான் கருத்து வைத்ததால் தங்கள் கருத்து மாற்றம் கண்டதா??

4- ஒரு தப்பை ஒருவர் உணர்வதற்கே அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது. அது மறக்கப்படவேண்டியதில்லையா?? வரலாறும் முழுவதும் அவரது பரம்பரை தொடர்ந்து தண்டிக்கப்படணுமா??

5 - இன்று  அவர்  திருந்தி குடும்பமாக மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தால் இது அவற்றைப்பாதிக்காதா??

 

அர்ஜுன் இணைத்து இருந்த படம் மற்றும் இந்த கருத்துக்களை தொடர்ந்தும் எழுதி மனதை சோர்வடைய செய்வதில் எனக்கு உடன் பாடில்லை.
அனாலும் நீங்கள் எழுதிய கேள்விகளில் எனக்கு புலப்பட்டதை சொல்ல நினைக்கிறேன்....
புகைப்படத்தில் இருப்பது அநேகமாக ஒரு மரண தண்டனை நிறைவேற்றம்.
ஆதலினால் உங்கள் கேள்வியில் இருக்கும் 
"தப்பை ஒருவர் உணர்வதற்கே அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது" மற்றும் 
"அவர்  திருந்தி குடும்பமாக மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து"
போன்ற ஞாயங்கள் வெறும் வசனங்கள் மட்டுமே.
 
இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்ட சம்பவங்கள் சுமார் 10இற்கு  மேல் நானே நேரில் பார்த்தவன்...
அப்போது இருந்த சூழ்நிலையில் அது சரியா , தவறா என்று கருத்தாடல் செய்யும் வயதோ, பக்குவமோ எனக்கு இருக்கவில்லை ..நான் 10ஆம் வகுப்பு படிக்கும் காலம் என்று நினைக்கிரேன்...
இவை பார்க்கும் போது வயிற்ருக்கும் தொண்டைக்கும் இடையில் அமிலம் கரைந்து, உஷ்ணம் பரவி மனசு தவித்தது தான் உண்மை.... அது மனித இயல்பு...
எந்த ஒரு மானுடனும் இப்படியெல்லாம் அழியக்கூடாது என்பதுவே எனது மன்றாட்டம்  :( 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 - இந்த தண்டனையை  இன்றும் ஏற்றுக்கொள்கின்றீர்களா???

2-  இது உங்கள் சகோதரராக இருந்தால் இங்கே மீண்டும் காட்சிப்பொருள் ஆக்குவீர்களா??

3- மேலே நான் கருத்து வைத்ததால் தங்கள் கருத்து மாற்றம் கண்டதா??

4- ஒரு தப்பை ஒருவர் உணர்வதற்கே அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது. அது மறக்கப்படவேண்டியதில்லையா?? வரலாறும் முழுவதும் அவரது பரம்பரை தொடர்ந்து தண்டிக்கப்படணுமா??

5 - இன்று  அவர்  திருந்தி குடும்பமாக மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தால் இது அவற்றைப்பாதிக்காதா??

 

அர்ஜுன் இணைத்து இருந்த படம் மற்றும் இந்த கருத்துக்களை தொடர்ந்தும் எழுதி மனதை சோர்வடைய செய்வதில் எனக்கு உடன் பாடில்லை.
அனாலும் நீங்கள் எழுதிய கேள்விகளில் எனக்கு புலப்பட்டதை சொல்ல நினைக்கிறேன்....
புகைப்படத்தில் இருப்பது அநேகமாக ஒரு மரண தண்டனை நிறைவேற்றம்.
ஆதலினால் உங்கள் கேள்வியில் இருக்கும் 
"தப்பை ஒருவர் உணர்வதற்கே அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது" மற்றும் 
"அவர்  திருந்தி குடும்பமாக மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து"
போன்ற ஞாயங்கள் வெறும் வசனங்கள் மட்டுமே.
 
இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்ட சம்பவங்கள் சுமார் 10இற்கு  மேல் நானே நேரில் பார்த்தவன்...
அப்போது இருந்த சூழ்நிலையில் அது சரியா , தவறா என்று கருத்தாடல் செய்யும் வயதோ, பக்குவமோ எனக்கு இருக்கவில்லை ..நான் 10ஆம் வகுப்பு படிக்கும் காலம் என்று நினைக்கிரேன்...
இவை பார்க்கும் போது வயிற்ருக்கும் தொண்டைக்கும் இடையில் அமிலம் கரைந்து, உஷ்ணம் பரவி மனசு தவித்தது தான் உண்மை.... அது மனித இயல்பு...
எந்த ஒரு மானுடனும் இப்படியெல்லாம் அழியக்கூடாது என்பதுவே எனது மன்றாட்டம்  :( 

 

இல்லை சசி

அவருக்கு மரணதண்டனை வழங்கப்படவில்லை

தமிழகத்திலுள்ளது  போல

குற்றத்தை எழதி அவரது தோழில் கட்டிவிடும் ஒரு நடவடிக்கையே இது...

அவர் இப்பொழுதும் வாழலாம் என்பதே எனது கருத்துக்கான காரணம்.

அதனால்தான் அந்தப்படத்தை மீண்டும்  போட்டு என்னால் அதற்கு விளக்கம் எழுதமுடியவில்லை...

Link to comment
Share on other sites

நானும் ஒருமுறை யாழ் நகரத்தில் இப்படி ஒருவரைக் கண்டேன்.. எந்த இயக்கம் என்று தெரியவில்லை.. சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.. பிறகு ஒரு மணிநேரம் கழித்து அவிழ்த்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

ஊரில எங்க வீட்டுக்கு  பக்கத்தில ரெலோ  ஒருமுறை ஒருவரை  கொண்டுவந்து அன்னதான மடத்தில  கட்டி  வைத்தது ஆறுபேர்  வெளியில் காவல் சனம் எல்லாம் வேடிக்கை  பார்க்குது  அவரு  வேலணை  ஆளாம் ,நகை களவு என்று எங்க  அப்பர் வேகமா  போய்  யன்னலோட  சேர்த்து  கட்டிய  அவரை அவிட்டு  விட்டார் அப்ப  அங்க  நிண்டவ எல்லாம்  மறிச்சு பேசினவ  உனக்கு  ஏன்  தேவையில்லா  வேலை  பிரச்சினை  என்று துவக்கோட நிண்ட  பெடியன் வந்து  சொன்னார் ,ஐயா எதுக்கு  அவிட்டியல் அவரு வந்தால் பேசுவார்  என்று அப்ப அப்பா சொன்னார்  அவருக்கு  சொல்லு  இன்னார்  அவிட்டது  என்று சரி  என்று  சொல்லிட்டு  நிண்டினம் ...

 

அப்ப  ரொலோ பொறுப்பா இருந்தவர் அப்பரின்  மருமகன் அதுதான் இவ்வளவு  துணிவு ஆங்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.