Jump to content

சூத்திரக்கிணறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பணச்செலவில்லாதது....சூழலுக்கு பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது, பாட்டி கூட... திருநெல்வேலியில், சூத்திரக் கிணறு இருந்ததை குறிப்பிட்டு கூறுவார்.
அதனை.... சூத்திரக் கிணத்தடி என்று.... பலரும் கூறுவதையும் கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

நீர்வேலில சில சூத்திர கிணறுகள் இருந்தன. நான் நினைக்கிறான் 1989, 1990 ம் ஆண்டளவில் பாடசாலை மூலம் கூட்டிக்கொண்டுபோய் காட்டினவை. ஆனால் அந்த சூத்திர கிணறுகள் கொஞ்சம் வித்தியாசம். 2 பெரிய வாளிமதிரி இருக்கும் (கிடத்தட்ட பாதி மண்எண்ணை பெரல் சைஸ்). அந்த வாளிகள் மேலை கீழை போய் வரும். நல்ல வேகமா தண்ணி பாயும். சுத்துறதுக்கு 2 மாடு வேண்டும். சூழலுக்கு தீங்கு இல்லாத முறை. ஆனால் இப்பவும் அந்த சூத்திர கிணறுகள் பாவனையில் இருக்குதோ தெரியாது.

Link to comment
Share on other sites

இந்தக்காலத்தில்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்தில்..

 

யாழ்ப்பாண தமிழர்கள், தமது.... சூத்திரக் கிணறுக்கு.....  Copy Right  எடுத்து வைக்காததால்,

வெள்ளைக்காரன் எமது கண்டு பிடிப்பை.... கொப்பி அடிச்சு விட்டான். :icon_idea:

Link to comment
Share on other sites

நான் சிறுவனாக இருக்கும் போது எமது தோட்டத்தில் சூத்திர கிணறுதான் இருந்தது .(பலாலி வீதியில் கோண்டாவில் டிப்போவிற்கு முன்னால் )

பின்னர் மோட்டார் பூட்டிய பின்பும் சில்லுகள் சுற்றும் வளையமும் இரும்பு குழாயும் இருந்தது .தம்பியார் அதில் ஏறி விழுந்து காலை கிழித்து பத்து இழை போட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இது போன்ற கிணறு நேரில் பார்க்கவில்லை, ஆனால் பட்டை எனப்படும் பெரிய இரண்டு கடகத்தால் நீர் இறைப்பார்கள் . இரு மாடுகள்  முன்னுக்கு நேரே போய் ரிவர்ஸில் பின்னுக்கு வரும். அப்போது தண்ணீர் வாய்க்காலில் விழுந்து ஓடும்....!  :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுவனாக இருக்கும் போது எமது தோட்டத்தில் சூத்திர கிணறுதான் இருந்தது .(பலாலி வீதியில் கோண்டாவில் டிப்போவிற்கு முன்னால் )

பின்னர் மோட்டார் பூட்டிய பின்பும் சில்லுகள் சுற்றும் வளையமும் இரும்பு குழாயும் இருந்தது .தம்பியார் அதில் ஏறி விழுந்து காலை கிழித்து பத்து இழை போட்டார் .

 

அர்ஜுன்.. கோண்டாவில், டிப்போவிற்கு , முன்னால் தானே.. ரகுநாதன் வீடும் உள்ளது.

அங்குள்ள, இடத்தில்,..... ஒருமுறை, கள்ளு அடிக்க வந்திருக்கின்றேன்.

அழகான... கத்தரி, மிளகாய் தோட்டங்கள்,  பார்க்க... ஆசையாக இருக்கும்.

அங்கு, கந்தசாமி.... என்ற ஒரு நண்பரும் எனக்கு இருந்தவர்.

 

Link to comment
Share on other sites

நான் இது போன்ற கிணறு நேரில் பார்க்கவில்லை, ஆனால் பட்டை எனப்படும் பெரிய இரண்டு கடகத்தால் நீர் இறைப்பார்கள் . இரு மாடுகள்  முன்னுக்கு நேரே போய் ரிவர்ஸில் பின்னுக்கு வரும். அப்போது தண்ணீர் வாய்க்காலில் விழுந்து ஓடும்....!  :):D

சுவி, நீங்கள் சொன்னமாதிரி ஒரு நீர் இறைக்கும் முறை கருத்தம்மா படத்திலும் வருகுது எண்டு நினைக்கிறன். :icon_idea:

Link to comment
Share on other sites

அர்ஜுன்.. கோண்டாவில், டிப்போவிற்கு , முன்னால் தானே.. ரகுநாதன் வீடும் உள்ளது.

அங்குள்ள, இடத்தில்,..... ஒருமுறை, கள்ளு அடிக்க வந்திருக்கின்றேன்.

அழகான... கத்தரி, மிளகாய் தோட்டங்கள்,  பார்க்க... ஆசையாக இருக்கும்.

அங்கு, கந்தசாமி.... என்ற ஒரு நண்பரும் எனக்கு இருந்தவர்.

 

எமது தோட்டத்திற்கு அடுத்த காணியில் தான் ரகுநாதன் இருந்திருக்கின்றார் .அவருக்கு என்னை விட வயது மிக குறைவு என்று நினைக்கின்றேன் அதனால் தெரிய நியாயம் இல்லை .

எமது தோட்டத்துடன் சேர்ந்து ஒரு கள்ளு கொட்டில் இருக்கு உரிமையாளர் இரத்தினசிங்கம் .அங்குதான் வந்தீர்களோ தெரியாது .

எனது தம்பியை கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும் அது இப்ப வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்து இருப்பது கோத்திரம், ஆர்த்து வருவது ஆத்திரம்  .
இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம்
பின்னர்  சூத்திரம் ஆகியது.
நிறைந்த பல வாளிகள் ஒன்றன்பின்னர் ஒன்றாகச் சூழ்ந்து  வருகின்றன. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்து இருப்பது கோத்திரம், ஆர்த்து வருவது ஆத்திரம்  .

இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம்

பின்னர்  சூத்திரம் ஆகியது.

நிறைந்த பல வாளிகள் ஒன்றன்பின்னர் ஒன்றாகச் சூழ்ந்து  வருகின்றன. :D

 

வாத்தியாரண்ணே..... இது, நல்ல கவிதை. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரண்ணே..... இது, நல்ல கவிதை. :D  :lol:  :icon_idea:

 

முந்திக்கொண்டு  மூர்த்து  வருவது இன்னொன்று....... இடக்கரடக்கல் :D:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்திக்கொண்டு  மூர்த்து  வருவது இன்னொன்று....... இடக்கரடக்கல் :D:lol: :lol:

 

வாத்தியார்..... ப்ளீஸ்,  இதுக்கு, பொழிப்புரை சொல்லுங்கோ.... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்திக்கொண்டு  மூர்த்து  வருவது இன்னொன்று....... இடக்கரடக்கல் :D:lol: :lol:

 

முந்திக்கொண்டு என்பது பிழை

 

முண்டிக்கொண்டு என வரவேண்டும்  :D

 

Link to comment
Share on other sites

5689297.jpg

இப்படியான நீர் இறைக்கும் முறை நெதர்லாந்து நாட்டில் பெருமளவில் பாவிக்கினம் எண்டு நினைக்கிறன்.  நெதர்லாந்து சம்பந்தமான ஒரு டொக்குமென்றி படத்தில் பார்த்தனான். ஆனால் அவை காற்று வலு மூலம் இயங்குவது என்று நினைக்கிறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூத்திரம் -----  சக்கரம்.

சூத்திரதாரி ------ திருமால்.

சூத்திரக்காரன் -----  பின்னால் நின்று இயக்குபவன். ( பொம்மலாட்டம்).

சூத்திரம் ---  உள்ளே கட்டங்களால் பிரிக்கப் பட்ட வட்டம். ( முந்தைய சாதகத்தின் லக்கனத்தில்  ஒரு வட்டத்தை  ஒன்பது இராசிகளாகப் பிரித்து பின் அதில்  இருபத்தேழு நட்சத்திரங்களும் , அவற்றின் பாதங்களும் பொருத்தியிருக்கும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாயிரத்து ஐந்தாம் வருடமளவில் ஏழாலை டச்சிரோட்டில பாவனைக்கு உதவுமாப்போல் நல்ல நிலையில் ஒரு சூத்திரக்கிணறு இருந்தது, மற்ற்ப்படி கோண்டாவிலில் டிப்போவுக்கு முன்பாக ஒரு சூத்திரக்கிணறு இருந்தது நினைவிருக்கு அது அர்ச்சுணது வளவு என்பது எனக்குத் தெரியாது தவிர இருபாலைப்பகுதியிலும் நிறையப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதன் தண்ணீர் மேலேற்றும் விகிதம் கிட்டத்தட்ட ஒரு வூள்சிலிப் பம் அளவுக்கு வலிவானதாக இருக்கும் என்பதில்லை. ஆனால் யாழில் நிலத்தடி நீரினது தரத்தினைப் பெரிதும் பாதுகாக்க உதவும் முறையாகும்.

 

இதவிட யாழ் குடாநாட்டின் கிராமங்களில் துலா மிதித்து நீரிறைக்கும் முறை மிகவும் அலாதியானது இன்று எனது தோட்டம் நாளை உனது தோட்டம் என முறைவைத்து ஒருவர் இன்னுமொருவருக்கு உதவுவது என ஒரு கிராமியக் கூட்டுறவே தானாக உருவாகியிருந்தது. வலிகாமத்தின் சில தோட்டக்கிணறுகளின் துலா ஆடுகால்களிலிருந்து வீழ்ந்தே பலர் இறந்த செய்திகள் நிறையவே உண்டு.

Link to comment
Share on other sites

துலா மிதித்து இறைப்பதனை கேள்விபட்டுள்ளேன். ஆனால் நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

 

 வூள்சிலிப் பம் அளவுக்கு வலிவானதாக இருக்கும் என்பதில்லை

இப்ப எங்கை அண்ணை ஊசிளிபும்ப் பாவிக்கினம். எலோரும் ரொபின் பம் தான் பாவிக்கினம். விலையும் குறைவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.