Jump to content

பிரான்ஸில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது


Recommended Posts

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் இன்னொருவனை நம்பி எங்கள் பாதுகாப்பை ஒப்படைக்கும் போது எதுவுமே நடக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ப்ளைட்  ஏறமுதல் கப்டனின் முகத்தை வடிவாய் பார்த்து வைக்கணும், முடிந்தால் அவர்களின் மன நல அத்தாட்ச்சி பத்திரம் மெடிக்கல் ரிப்போட் எல்லாத்தையும் வாசலில் தொங்கவிட சொல்லணும் .

Link to comment
Share on other sites

இனி அனைத்து விமானிகளினதும் back ground check up ஐ அதிகப்படுத்தனும்...எந்த விமானி எப்ப என்ன செய்வார் என்றே தெரியல :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி அனைத்து விமானிகளினதும் back ground check up ஐ அதிகப்படுத்தனும்...எந்த விமானி எப்ப என்ன செய்வார் என்றே தெரியல :(

 

அவர் இசுலாமீயராக இருந்தால்

ஐரோப்பாவில் பெரும் பதட்டநிலை வரலாம்.. :(  :(  :(

Link to comment
Share on other sites

இப்படி நடப்பது இது முதல் தடவையல்ல.. இதற்கு முன்னமும் ஒரு விமானி தனது சொந்தப் பிரச்சினைக்காக விமானத்தை விழுத்தியவர். ஏதோ ஒரு அரபு நாட்டு விமானி.. மறந்துவிட்டது.

ஆகவே, இனிமேல் விமானம் ஏறும்போது, இறங்கினால் கிங்கு.. விழுந்தால் சங்கு என்றிட்டு ஏறவேண்டியதுதான்.. :lol::D

Link to comment
Share on other sites

விமானத்தில் ஏற முதல் உயில் எழுதுபவர்கள் எழுதிவைப்பதுடன் மரணத்திற்கு முன்பு செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்திட்டு விமானம் ஏறினால் சங்கோ கிங்கோ பிரச்சனையில்லை :):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில் ஏற முதல் உயில் எழுதுபவர்கள் எழுதிவைப்பதுடன் மரணத்திற்கு முன்பு செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்திட்டு விமானம் ஏறினால் சங்கோ கிங்கோ பிரச்சனையில்லை :):(

 

 

சகோதரி  உயில் எழுதும்போது

இந்த அண்ணரை மறக்கவேண்டாம்.. :)

Link to comment
Share on other sites

ஆழ்த்த அனுதாபங்கள்   :(

 

வந்தவர் எல்லாம் தங்கி  விட்டால் இந்த மண்ணில் நமக்கு  இடம் ஏது . :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தை விழுத்திய உதவி விமானி 28 வயதுடையவர்.
630 விமானப் பறப்பு மணித்தியால அனுபவம் கொண்டவர்.
பாவிக்கு... இந்த வயதிலை, என்ன பிரச்சினையோ..... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த விமானியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக இத்தனை உயிர்களை பலிகொள்வதா ? உலகம் எங்கே செல்கின்றது ??  :o  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த விமானியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக இத்தனை உயிர்களை பலிகொள்வதா ? உலகம் எங்கே செல்கின்றது ??  :o  :(

 

1.இவருக்கு மன நோய்.

2.விமான சேவை நிறுவனத்தைப் பழி வாங்கும் செயல்

3.தனிப்பட்ட பிரச்சனை என்றால் வீட்டு முகட்டிலேயே தொங்கியிருக்கலாம்.

4.அல்லது பெரிய விமானிக்குத் தனது திறமையைக் காட்ட வேண்டும் என்ற ஆவலில் தவறு நடந்துவிட்டது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.இவருக்கு மன நோய்.

2.விமான சேவை நிறுவனத்தைப் பழி வாங்கும் செயல்

3.தனிப்பட்ட பிரச்சனை என்றால் வீட்டு முகட்டிலேயே தொங்கியிருக்கலாம்.

4.அல்லது பெரிய விமானிக்குத் தனது திறமையைக் காட்ட வேண்டும் என்ற ஆவலில் தவறு நடந்துவிட்டது

 

 

கதவை.... இறுக்கிப் பூட்டிப் போட்டு, தனது திறமையை... காட்ட வெளிக்கிட்டது தான்... பெரிய பிழையாய் போயிட்டுது. :)

Link to comment
Share on other sites

விமானத்தை விழுத்திய உதவி விமானி 28 வயதுடையவர்.

630 விமானப் பறப்பு மணித்தியால அனுபவம் கொண்டவர்.

பாவிக்கு... இந்த வயதிலை, என்ன பிரச்சினையோ..... :o

இதுககுத்தான் பெண்கள் சகவாசமே வேண்டாம் என்கிறார் நெடுக்ஸ்.. :D

Link to comment
Share on other sites

a08q0171_photo_5.jpg

விமானம் தானியங்கி முறையில் பறக்கும் போது மேலே உள்ளதை பிடித்து இழுத்தால் மனித கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும்.

ஆகவே முதன்மை விமானி வெளியே போனதும் பணிப்பெண் உள்ளே சென்றாரா என்பதையும் ஆராயவேணும்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் இன்னொருவனை நம்பி எங்கள் பாதுகாப்பை ஒப்படைக்கும் போது எதுவுமே நடக்கலாம்.

 

திருமணத்தின் போது இது பொருந்தும். நாமே தானே நமக்கு பாதுகாப்பு.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்ப்ஸ் மலை உச்சியில் மோதினால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று யாரும் உதவி விமானிக்கு சொல்லிச்சினமோ என்னமோ..?! எனி இமயமலைப்பக்கமா போற விமானங்களில் பயணிக்கவே கூடாது.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கின்றது. ஏதோ ஒன்றை மறைக்க முயற்சிக்கின்றார்கள் போல் தெரிகின்றது.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கின்றது. ஏதோ ஒன்றை மறைக்க முயற்சிக்கின்றார்கள் போல் தெரிகின்றது.  :rolleyes:

 

அந்த.... உதவி விமானியில் தான்.. பிழை என்றால், அவரின் படத்தை.... வேளே காட்ட ஏன் தயங்குகின்றார்கள் என்பதும்  புரியவில்லை. இதுவே... வேறு நாடுகளில், நடந்திருந்தால்... படம் எப்பவோ... வெளி வந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த.... உதவி விமானியில் தான்.. பிழை என்றால், அவரின் படத்தை.... வேளே காட்ட ஏன் தயங்குகின்றார்கள் என்பதும்  புரியவில்லை. இதுவே... வேறு நாடுகளில், நடந்திருந்தால்... படம் எப்பவோ... வெளி வந்திருக்கும்.

 

6351948-3x2-700x467.jpg

 

http://www.abc.net.au/news/2015-03-26/germanwings-co-pilot-andreas-lubitz-crashed-plane-deliberately/6351854

ஆழ்த்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

Who was Andreas Lubitz? Germanwings co-pilot who 'intentionally killed' 150 passengers in deliberate Alps crash

  • tom-porter.jpg?w=54&h=54&l=50&t=40
 
andreas-lubitz.jpgAndreas Lubitz was the co-pilot on the Germanwings plane that crashed in the Alps(Facebook)
 
 
 

The German co-pilot who allegedly flew a Germanwings flight into the French Alps has been named as Andreas Lubitz, who was aged 28. Prosecutors claimed information suggested he was fully conscious as the plane went down.

"The co-pilot is alone at the controls," prosecutor Brice Robin said, drawing on information gathered from the black box recorder. "He voluntarily refused to open the door of the cockpit to the pilot and voluntarily began the descent of the plane."

Details of Lubitz's life are still emerging, with investigators confirming he did not have any known terrorist links. According to the website of the flight club where he was a member, the co-pilot was from Montabaur in Rhineland Palatinate.

"He was very happy. He gave off a good feeling."
- Peter Ruecker, fellow pilot

Members of the Montbaur flying club where Lubitz renewed his glider license last month said he was pleased to have gained a job with Germanwings. 

"He was happy he had the job with Germanwings and he was doing well," longtime club member Peter Ruecker, told AP. "He was very happy. He gave off a good feeling."

Ruecker said that Lubitz had a girlfriend. "I can't remember anything where something wasn't right," he said.

Others who knew him said he may have been suffering psychological problems.

The mother of an ex-classmate of Lubitz told how the co-pilot had confided in her daughter a few years ago.

She added though that he had seemed normal when her daughter saw him before Christmas.

 "I can only image the whole thing was a knee-jerk reaction. It can't have been planned, although it was actually like a killing spree," she said.

She said: "He apparently was suffering from burnout or depression."

Lufthansa said that Lubitz had missed a few weeks training six years ago, though did not confirm the reason.

Montabaur city mayor Gabriele Wieland, speaking to the DPA press agency, said Lubitz lived with his parents in Montabaur and also had a residence in Dusseldorf, where the Germanwings flight was heading before it crashed.

German media reports he had 630 flight hours and joined budget airline Germanwings straight out of Lufthansa Flight Training School in Bremen in September 2013. Authorities have not confirmed if he had any experience as a professional pilot prior to that.

At a press conference on 26 March, Lufthansa announced Lubitz interrupted his training for a number of weeks six years ago. They did not provide details on the reasons for this interruption, but said he had been subjected to health checks afterwards. 

They said he had passed all psychological and physical tests prior to starting work as a pilot.

"Andreas became a member of the club as a youth to fulfil his dream of flying," the club said in a death notice on its website.

"He fulfilled his dream, the dream he now paid for so dearly with his life," the club said, reports the Wall Street Journal.

French authorities said his family had left Marseille, where a press conference was held earlier on 26 March. His Facebook page lists his interests as aviation and music. Police have been deployed to guard the pilot's family home, which they have searched, reports the BBC. 

Information from the black box recorder of the flight, which crashed on 24 March and killed 150 people, indicated Lubitz was alone in the cockpit, and intentionally started a descent while the other pilot was locked out.

The Airbus 320 from Barcelona to Dusseldorf hit a mountain near Barcelonette in the French Alps, after an eight-minute

descent.

http://www.ibtimes.co.uk/who-was-andreas-lubitz-germanwings-co-pilot-who-murdered-150-innocent-passengers-deliberate-alps-1493685

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.... உடையார், நுணாவிலான் இங்குள்ள ஊடகங்களில்... உருமறைப்பு செய்தே படத்தை பிரசுரிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

விமானத்தின் இறுதி நிமிடங்கள்... அலறிய பயணிகள், பதறாத துணை விமானி, கதவை பலமாக தட்டிய தலைமை விமானி : துணை விமானி சதி :பரபரப்பு தகவல்

 

Pilot-Andreas-Lubitz-might.jpg

 

 

150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. விமானத்தை மலையில் மோதச் சென்ற போது விமானிகள் கூக்குரலிட்டதாகவும் அதனை துணை விமானி கண்டகொள்ளவில்லை எனவும் தலைமை விமானி கதவை பல முறை பலமாக தட்டியும் உதைத்துள்ளதாகவும் ஆனால் துணை விமானி அமைதியாக இருந்து விமானத்தை மலையில் மோதியுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
விமான விபத்து
 
ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ எயார் பஸ் ஏ-320 விமானம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டொர்ப் நகருக்கு கடந்த 24 ஆம் திகதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது.
 
பிரான்ஸ் நாட்டில் எல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் எல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர். 
 
பல நாட்டவர்கள்
அவர்களில் 72 பேர் ஜெர்மானியர்கள், 51 பேர் ஸ்பெயின் நாட்டினர், 3 பேர் அமெரிக்கர்கள். இங்கிலாந்து, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கொலம்பியா, டென்மார்க், இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, ஈரான், நெதர்லாந்து, மொராக்கோ நாட்டினரும் பலியானவர்களில் அடங்குவர்.
 
தேடல் பணி
கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் விமானத்தின் சிதைவுகளையும், பலியானவர்களின் உடல்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 
பிரான்ஸ் ஜனாதிபதி 
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்டே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் ஆகியோர் நேற்று சென்றனர்.
 
ஒரு விமானி வெளியேறியது ஏன்?
இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்து, விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி பதிவுகள் ஆராயப்பட்டுள்ளன. 
அதில் விமானிகளில் ஒருவர், விபத்துக்கு முன்னதாக விமானி அறையை விட்டு வெளியே சென்றதும், அவர் திரும்ப வந்தபோது விமானி அறை கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
 
இது தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரி ஒருவர், “வெளியே சென்ற விமானி, மீண்டும் வந்து கதவை லேசாக தட்டியுள்ளார். பதில் இல்லை. அதன்பின்னர் கதவை வலுவாக தட்டியுள்ளார். அதற்கும் பதில் இல்லை. அதன்பின்னர் எந்தப் பதிலும் இல்லை என்பது விமானி அறை ஒலிப்பதிவு கருவி மூலம் தெரிய வந்துள்ளது” என கூறியதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
 
ஓயப்போவதில்லை 
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வரை ஓயப்போவதில்லை என்று பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறினார். 
 
ஒலிப்பதிவு கிடைத்துள்ளது
விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்ஸ் விமானம் எதற்காக கீழே இறங்கியது என்பது குறித்து எந்த முடிவுக்கும் இப்போதைக்கு வர முடியவில்லை. இப்போதுதான் ஒரு ஒலிப்பதிவு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது   அதை ஆய்வு செய்ய வேண்டும்”  என பிரான்ஸ் விசாரணை குழு தெரிவித்துள்ளது.
 
விமானிகள் இடையே  இணக்கமான உரையாடல்கள் 
விசாரணையில் தொடர்புடைய இராணுவ உயர் அதிகாரி ஒருவர், “விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி, விமானிகள் இடையே மிகவும் இணக்கமான வகையில் உரையாடல்கள் நடந்ததைத்தான் காட்டுகிறன்ன. விமானிகளில் ஒருவர் வெளியே  சென்றுள்ளார். அவர் எதற்காக வெளியே சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால், விமானத்துக்கு முடிவு ஏற்பட்டபோது, விமானி அறையில் ஒரு விமானிதான் இருந்திருக்கிறார், அவர் கதவைத் திறக்கவில்லை என்பது தெளிவாகின்றது என்றார்.
 
நடுவானில் வெடித்து சிதறவில்லை
 
தீவிரவாத தாக்குதல் குறித்த சந்தேகம் எழவில்லை என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பேர்னட் காஸிநியூவ் தெரிவித்துள்ளார். 
என்னதான் நடந்தது என்பதை இப்போது உறுதியாக கூற முடியாதபோதும், நடுவானில் விமானம் வெடித்து சிதறி இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
 
2ஆவது கருப்பு பெட்டி கிடைக்கவில்லை
விபத்துக்குள்ளான விமானத்தின் 2ஆவது கருப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
 
துணை விமானி சதி
இதற்கிடையே பாரீஸ் நகரில் பிரான்ஸ் அரசின் சட்டத்தரணி பிரைஸ் ரொபின் நேற்று இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, கழிவறைக்கு சென்றிருக்கிறார். அவரால் மீண்டும் விமானி அறைக்குள் செல்ல முடியாமல் போய்விட்டது. துணை விமானி ஹென்ட்ரூஸ் லூபிட்ஸ் வேண்டுமென்றே எல்ப்ஸ் மலையின் மீது விமானத்தை கீழாக செலுத்தி உள்ளார். 
 
அவரது நோக்கம், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவதுதான். கருப்பு பெட்டியில் இருந்த விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி மூலம் இந்த முடிவுக்கு வரவேண்டி உள்ளது. 
விமானி, விமானி அறையை விட்டு வெளியேறிய பின்னர் துணை விமானி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விமானி அறையில் நிசப்தம் நிலவி உள்ளது. விமானம் கீழே வந்தபோது அலாரம் ஒலித்திருக்கிறது. கதவை ஓங்கி தட்டும் சத்தமும் கேட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
 
 இதன் மூலம் துணை விமானி சதி செய்துதான், விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும், எதற்காக அவர் இந்த சதியில் ஈடுபட்டார், அதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா என்பது இனிதான் கண்டறியப்பட வேண்டும் என கூறப்படுகிறது.
 
விமானத்தின் கடைசி நிமிடங்கள்... அலறிய பயணிகள், பதறாத துணை விமானி
 
எல்ப்ஸ் மலையில் மோதி விமானத்தை விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்பது துணை விமானி ஹென்ட்ரூஸின் சதித்திட்டமாக இருந்திருக்கிறது.
 
அதற்கு வசதியாக விமானி, இயல்பாக கழிவறைக்கு சென்ற நேரத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். 
 
கழிவறைக்கு சென்றிருந்த விமானி திரும்ப வந்து கதவைத் தட்டியபோது, துணை விமானி கதவை திறக்கவில்லை. ஏர்பஸ் விமானத்தில், அவசரமாக விமானி, விமானி அறைக்குள் போக வழி உண்டு. அதையும் துணை விமானி மூடி, விமானி உள்ளே வர முடியாதபடிக்கு தடை செய்திருக்கிறார்.
 
அடுத்த சில நொடிகளில்தான் துணை விமானி பொத்தானை அழுத்தி விமானத்தை கீழே கொண்டு வந்து மலை மீது மோத வைத்திருக்கிறார்.
 
விமானம் விபத்துக்குள்ளாகப் போவதை உணர்ந்த பயணிகள், பதற்றத்தில் அலறி இருக்கிறார்கள்.
 
ஆனால் துணை விமானி பதற்றமின்றி அமைதியாக இருந்திருக்கிறார். அவரது சுவாசமும் சாதாரணமாக இருந்திருக்கிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலசெக்கன்களில் ஒரு மனிதனின் மூளையில் எற்படும்  மாற்றங்கள் எவ்வாறான அழிவுகளையும்

பாதகங்களையும் கொண்டுவரும்  என்பதற்கு இது ஒரு உதாரணம்...

இதற்கு மாற்றுவழிகள் இருக்குமா?

இவற்றை தடுக்கமுடியுமா???

ஆயிரம் கேள்விகள்

பதில் தான் பூச்சியம்.... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ermittler-tragen-kistenweise-beweismitte

 

Düsseldorf நகரத்தில் உள்ள துணை விமானியின் வீட்டிலிருந்த... சில பொருட்களையும்,  அவரின் ஆவணங்களையும்...

பொலிசார், மேலதிக விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளார்கள்.
இவர் மன அழுத்தம், போதைப் பொருள் பாவனை போன்றவற்றால்  பாதிக்கப் பட்டிருந்தாரா?  என்ற கோணத்திலும்.... ஆராய்கிறார்கள். மன அழுத்தத்தால்.... பாதிக்கப்பட்ட சிலரை, இலகுவில்... அடையாளம் கண்டு பிடிப்பது சிரமம் என்று, அது சம்பந்தமான வைத்தியர் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.