Jump to content

பிரான்ஸில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலசெக்கன்களில் ஒரு மனிதனின் மூளையில் எற்படும்  மாற்றங்கள் எவ்வாறான அழிவுகளையும்

பாதகங்களையும் கொண்டுவரும்  என்பதற்கு இது ஒரு உதாரணம்...

இதற்கு மாற்றுவழிகள் இருக்குமா?

இவற்றை தடுக்கமுடியுமா???

ஆயிரம் கேள்விகள்

பதில் தான் பூச்சியம்.... :(  :(  :(

 

விசுகு,

இவர், பெற்றோரின் வற்புறுத்தலால்.... இந்த வேலையை தேர்வு செய்திருக்கலாம்,

பின் காலப் போக்கில்.. அந்த வேலையின் மீதே... வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று, நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

Germanwings co-pilot had serious depressive episode: Bild newspaper

இவர் பாரிய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாராம். :o

http://www.msn.com/en-ca/news/germanwings%20crash/germanwings-co-pilot-had-serious-depressive-episode-bild-newspaper/ar-AAa4xk7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடாரியை கொண்டு கதவை உடைக்க முயன்ற விமானி: அம்பலமான பகீர் தகவல்   germanpilot_removedoor_001.jpgஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமான அறையின் கதவை கோடாரியை கொண்டு விமானி உடைக்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் வெளிவரும் தினப்பத்திரிகையான Bild, இன்று விமான விபத்து குறித்த புதிய தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், ஜேர்மன் விங்க்ஸின் முதன்மை விமானி வெளியே சென்றவுடன், அங்கிருந்த துணை விமானியான Andreas Lubitz அறையின் கதவை மூடியதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு அறைக்கு திரும்பிய முதன்மை விமானி மூடியிருந்த கதவை திறக்கும்படி மெதுவாக தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கதவை திறக்க போராடிய விமானி,இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக, கோடாரியை எடுத்து வந்து கதவை உடைத்தெரிய முயற்சித்ததாக ஜேர்மனிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், விமான கதவை பலம் கொண்டு தாக்கிய ஒலிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஜேர்மனியில் உள்ள துணை விமானியின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் சில முக்கிய பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இருப்பினும், துணை விமானி தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் தற்சமயம் வரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனிய பத்திரிகைகள் வெளியிட்டு வரும் செய்திகளில் ‘துணை விமானி சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு உறுதியான எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

tamilwin.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் இவருடைய வீட்டில் நடந்த சோதனை மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.

Link to comment
Share on other sites

இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் இவருடைய வீட்டில் நடந்த சோதனை மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

:o  இனி விமானிகள் விமானங்களுக்குள் போகுமுன் அவர்களது மன அழுத்தத்தை பரீட்சித்து அனுப்பவேண்டும். ( மன அழுத்தத்தை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் கருவிகளை யாராவது கண்டுபிடியுங்கோ இல்லாவிட்டால் இனி விமானம் ஏறுவது ரிஸ்க் தான்  :blink: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:o  இனி விமானிகள் விமானங்களுக்குள் போகுமுன் அவர்களது மன அழுத்தத்தை பரீட்சித்து அனுப்பவேண்டும். ( மன அழுத்தத்தை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் கருவிகளை யாராவது கண்டுபிடியுங்கோ இல்லாவிட்டால் இனி விமானம் ஏறுவது ரிஸ்க் தான்  :blink: )

 

 

இன்று பிரெஞ்சு  தொலைக்காடசியில் ஒரு அதிகாரி சொல்லிக்கொண்டிருந்தார்..

 

இன்றைய நிலையில் உலகமெல்லாம்

ஒவ்வொரு செக்கனுக்கும்  ஒவ்வொரு விமானம் புறப்படுகிறது..

அப்படிப்பார்த்தால்

இது அதில் கோடியில் ஒன்று..

பெரிதாக்கி  பயப்படுத்தத்தேவையில்லை என்றார்..

Link to comment
Share on other sites

விமானம் பாதுகாப்பற்ற சூழலுக்குள் போகும்போது தரைக்கட்டுப்பாட்டு நிலையம் அதனைப் பொறுப்பெடுக்கலாம் என்பதுபோல செய்துகொண்டால் பல கடத்தல்களையும் தடுக்க உதவும்.

ஒரு கிரேக்க நாட்டு விமானத்தில் ஒருமுறை பிராணவாயுவின் அளவு குறைந்து பலரும் மயக்கமாகிவிட்டார்கள். தானியங்கி முறையின்படி அது இறங்கவேண்டிய இடம் வந்ததும் விமான நிலையத்துக்கு அருகில் சுற்ற ஆரம்பித்துவிட்டது. இரண்டு போர்விமானங்களில் சென்று பறக்கும் விமானத்தை ஆராய்ந்தபோது எல்லோருமே அசைவற்று இருந்துள்ளார்கள். எரிபொருள் முடிந்தது விமானம் விழுந்துவிட்டது. :o

தரையில் இருந்து கட்டுப்படுத்தும் வசதி இருந்தால் அந்த விமானத்தைக் காப்பாற்றியிருக்க முடியும்.

https://www.youtube.com/watch?v=1JRoozoz6Zk

Link to comment
Share on other sites

ஏனோ தெரியவில்லை... எத்தனையோ விமான விபத்துக்கள் நடைபெற்று அவைபற்றித் தெரியவந்தபோதும் ஏற்படாத கலக்கமும், பயமும் பிரான்சில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதை மீடியாக்களும், இணையங்களும் வெளிப்படுத்திய முறைமை ஏற்படுத்தியது. விமானப் பயணம் பயங்கரமானது, ஆபத்தானது என எல்லோருமே கதிகலங்கிப் பயந்திருப்பது போன்ற ஓர் உணர்வு...! 
 
விபத்திற்கு விமானம் காரணமில்லை என்று தற்போது வரும் செய்திகள் மனதுக்குச் சற்று அமைதியையும், ஆறுதலையும் அளிக்கின்றது. 
 

 

Link to comment
Share on other sites

Neue Erkenntnisse 
Co-Pilot war am Flugtag krankgeschrieben

http://www.t-online.de/nachrichten/panorama/id_73440026/germanwings-co-pilot-war-krankgeschrieben-kein-abschiedsbrief.html

 

அன்றையதினம் உதவி விமானி சுகவீன விடுமுறை எடுத்துவிட்டு கடமைக்கு போய் உள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் இவருடைய வீட்டில் நடந்த சோதனை மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

:o  இனி விமானிகள் விமானங்களுக்குள் போகுமுன் அவர்களது மன அழுத்தத்தை பரீட்சித்து அனுப்பவேண்டும். ( மன அழுத்தத்தை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் கருவிகளை யாராவது கண்டுபிடியுங்கோ இல்லாவிட்டால் இனி விமானம் ஏறுவது ரிஸ்க் தான்  :blink: )

 

அமெரிக்கா... நியூயோர்க் நகரில் நடந்த 9/11 தாக்குதலின் பின்...

விமானிகளின் அறைக்குள், எவரும் கண்ட படி, உள்ளே... நுழைய முற்படாதவடி, பூட்டு முறைப்படி சர்வதேச சட்டம் மூலம் கொண்டு வரப்பட்டது. (முன்பு... சாதாரண பயணிகளும், கொக்பிட்டை... திறந்து பார்க்க முடியும்)

இந்த விபத்தின் பின்.... ஒரு விமானத்தில்,  விமான ஓட்டிகளின் அறையில்... இரண்டு விமானிகளாவது, கட்டாயம் இருக்கையில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய சட்டத்தத்தை கொண்டு வர திட்டமிடுகிறார்கள். அதாவது... ஒரு உள்ளூர் விமானத்தில்... 3 விமான ஓட்டிகள்.

ஒரு விமானிக்கு... ஒண்டுக்கு, இரண்டுக்கு வந்தால்.... அவர், தாரளமாக "கக்கூசுக்கு" போய் வரலாம்.

இரண்டு விமானிகள் உள்ள, விமானத்தில்... அவருக்கு, என்ன வந்தாலும்... அடக்கிக் கொண்டு, "எயாப் போட்டில்" விமானத்தை இறக்கிய பின் தான்.... "உச்சா.." போகலாம். :D

Link to comment
Share on other sites

அமெரிக்கா... நியூயோர்க் நகரில் நடந்த 9/11 தாக்குதலின் பின்...

விமானிகளின் அறைக்குள், எவரும் கண்ட படி, உள்ளே... நுழைய முற்படாதவடி, பூட்டு முறைப்படி சர்வதேச சட்டம் மூலம் கொண்டு வரப்பட்டது. (முன்பு... சாதாரண பயணிகளும், கொக்பிட்டை... திறந்து பார்க்க முடியும்)

இந்த விபத்தின் பின்.... ஒரு விமானத்தில்,  விமான ஓட்டிகளின் அறையில்... இரண்டு விமானிகளாவது, கட்டாயம் இருக்கையில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய சட்டத்தத்தை கொண்டு வர திட்டமிடுகிறார்கள். அதாவது... ஒரு உள்ளூர் விமானத்தில்... 3 விமான ஓட்டிகள்.

ஒரு விமானிக்கு... ஒண்டுக்கு, இரண்டுக்கு வந்தால்.... அவர், தாரளமாக "கக்கூசுக்கு" போய் வரலாம்.

இரண்டு விமானிகள் உள்ள, விமானத்தில்... அவருக்கு, என்ன வந்தாலும்... அடக்கிக் கொண்டு, "எயாப் போட்டில்" விமானத்தை இறக்கிய பின் தான்.... "உச்சா.." போகலாம். :D

பெரிய விமானங்களில் ஃபிளைட் எஞ்சினியர் என்று சொல்லிக்கொண்டு மூன்றாவது நபர் ஒருவர் குந்தியிருப்பார் என நினைக்கிறேன். :D சற்று சிறிய விமானங்களில்தான் பிரச்சினை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
co-pilot-andreas-l-.jpg
 

Wieder werden neue Erkenntnisse bei den Ermittlungen zur Germanwings-Katastrophe bekannt: Der Co-Pilot Andreas L. war nach Angaben der Staatsanwaltschaft Düsseldorf für den Unglückstag krankgeschrieben und hat das seinem Arbeitgeber verheimlicht. Nach Medieninformationen soll es sich um eine psychische Erkrankung gehandelt haben.

 

இந்த, இளைஞர் தான்...  அந்த உதவி விமானி.
அன்று, அவர் மனநிலை அழுத்தத்தில்  இருந்ததாகவும், அவரை.. விமானப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று... அவரின் வைத்தியர் மருத்துவ விடுப்பு கொடுத்துள்ளார். அதனை அந்த, உதவி விமானி.... தனது மேலதிகாரிகளிடம் காட்டாது... தனது பணியை... ஆரம்பித்து, 150 உயிர்களுக்கு... உலை வைத்து விட்டார். :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய விமானங்களில் ஃபிளைட் எஞ்சினியர் என்று சொல்லிக்கொண்டு மூன்றாவது நபர் ஒருவர் குந்தியிருப்பார் என நினைக்கிறேன். :D சற்று சிறிய விமானங்களில்தான் பிரச்சினை.

 

சிறிய விமானங்களில் இன்னொரு கதிரையை போட்டு, 

ஒரு, பிளைட் என்ஜினியரை இருத்துவதை விட....

அந்த, இடத்தில்.... இரண்டு "பைலட்டுக்கும்", ஒரு "கக்கூசை".... கட்டி விடலாம், இசை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய விமானங்களில் இன்னொரு கதிரையை போட்டு,

ஒரு, பிளைட் என்ஜினியரை இருத்துவதை விட....

அந்த, இடத்தில்.... இரண்டு "பைலட்டுக்கும்", ஒரு "கக்கூசை".... கட்டி விடலாம், இசை. :D

திறந்த க்க்கூசா கட்டணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய விமானங்களில் ஃபிளைட் எஞ்சினியர் என்று சொல்லிக்கொண்டு மூன்றாவது நபர் ஒருவர் குந்தியிருப்பார் என நினைக்கிறேன். :D சற்று சிறிய விமானங்களில்தான் பிரச்சினை.

கொமர்ஷல் பிளைட்களில் அது கொஞ்சம் பழைய காலம்.  அது ஒரு கனாக்காலம்!!

 

இப்ப அந்த டெசிக்னேஷனே இல்லை.

 

இடதுபுற பைலட்டும் வலதுபுற கோ பைலட்டும் சமாளிக்க வேண்டும்.

 

பரவாயில்லையே.. விமானத்துறை பற்றி அறிந்துள்ளீர்களே. இப்போது சென்ட்ரல் லோட் பிளானிங் சென்டர்கூட வந்துவிட்டது.

Link to comment
Share on other sites

வெள்ளை தோல் செய்தால்  மன அழுத்தம் ,விரக்தி ,இதே வேறு  ஆபிரிக்கன் அல்லது அரபுக்காரன்  செய்தால்  தீவிரவாதம் ,பயங்கரவாதம் இவ்வளவுதான்  உலக  ஒழுங்கு .. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய விமானங்களில் இன்னொரு கதிரையை போட்டு, 

ஒரு, பிளைட் என்ஜினியரை இருத்துவதை விட....

அந்த, இடத்தில்.... இரண்டு "பைலட்டுக்கும்", ஒரு "கக்கூசை".... கட்டி விடலாம், இசை. :D

 

983279_432a501937_m.jpeg

 

 

எல்லாத்தையும் விட விண்வெளி ஆராய்ச்சிக்கு போறவை கட்டுற பம்பஸை பைலட்மாரையும் கட்டச்சொல்லலாம்.  :lol:

Link to comment
Share on other sites

அல்ப்ஸ் மலை உச்சியில் மோதினால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று யாரும் உதவி விமானிக்கு சொல்லிச்சினமோ என்னமோ..?! எனி இமயமலைப்பக்கமா போற விமானங்களில் பயணிக்கவே கூடாது.  :icon_idea:

 

ஸ்ரீலங்காவுக்கு போறதுகள் சிவனொளிபாத மலையடியாலைதான் போறதான்.. இந்த முறை பள்ளிக்கூட லீவுக்கு போறவை கவனம்!! :o  :icon_idea:

Link to comment
Share on other sites

"யாராலுமே தன்னை மறக்க முடியாதபடி ஒரு காரியத்தை செய்வேன் என லுபிட்ஸ் கூறினார்"

 

அல்ப்ஸ் மலையில் கடந்த செவ்வாயன்று ஜெர்மன்விங்ஸ் விமானம் ஒன்றை 150 பேருடன் வேண்டுமென்றே மோதி அனைவரும் உயிரிழக்க காரணமாக இருந்தவராக சந்தேகிக்கப்படும் ஜெர்மன் விமானி ஆந்த்ரேயாஸ் லுபிட்ஸ், எல்லோரும் தன்னை நினைவில் கொள்ளும்படியான ஒரு காரியத்தை தான் செய்வேன் என்று முன்பே கூறியதாக அவரின் முன்னாள் காதலி ஒருவர் கூறியுள்ளார்.

லுபிட்ஸ்
 
தனக்கிருந்த மனநலப் பாதிப்பை வெளியில் சொல்லாமல் இருந்துவந்தவராக லுபிட்ஸ் தெரிகிறார்.
ஆந்த்ரேயாஸ் லுபிட்ஸ் மனநலப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் என்றும், அவருக்கு அவ்வப்போது கோபமும் மன அழுத்தமும் வந்து ஆக்ரோஷமாக நடந்துகொள்வார் என்றும் விமான சிப்பந்தியாக பணியாற்றும் ஆந்த்ரேயாஸின் முன்னாள் காதலி, 'பைல்ட்' என்ற ஜெர்மன் செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
ஆந்த்ரேயாஸ் ஒரு வருடத்துக்கு முன்னர் கூறியிருந்த ஒரு விஷயத்தை மரியா டபிள்யூ என்று மட்டும் அச்செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள அப்பெண் நினைவுகூர்ந்துள்ளார்.
சென்ற ஆண்டு ஒரு ஐந்து மாத காலம் ஆந்த்ரேயாஸ் லுபிட்ஸுடன் சேர்ந்து தான் வேலை செய்ததாக அந்த விமான சிப்பந்தி தெரிவித்துள்ளார்.
 
தனது மனநலப் பிரச்சினைகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மறைப்பதில், லுபிட்ஸ் கைதேர்ந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது, 'மோதப்போகிறோம்' என்று அலறிக்கொண்டு லுபிட்ஸ் சில நேரம் கண்விழித்தது உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
லுபிட்ஸ் உளவியல் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்றும், தனக்கு மனநலக் கோளாறு இருப்பதால் முதன்மை விமானியாக எப்போதுமே வர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது என்றும் மரியா டபிள்யூ தெரிவித்துள்ளார்.
லுபிட்ஸுக்கு ஏதோ மனநலப் பிரச்சினை இருந்தது அதிகமாகத் தெளிவாகியதால்தான் தாங்கள் பிரிந்துவிட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
 
விழுந்து நொறுங்கிய விமானத்தின் பிளாக் பாக்ஸ் விமானியறை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவான சத்தங்களை ஆராய்ந்த பிரஞ்சு விசாரணையாளர்கள், விமானியறையிலிருந்து முதன்மை விமானி எழுந்து சென்ற நிலையில் இரண்டாம் விமானியான லுபிட்ஸ் விமானியறைக் கதவை தாழிட்டிருந்தார் என்று கூறியிருந்தனர்.
 
முதன்மை விமானி கதவைத் திறக்கச் சொல்லிக் கேட்டும் லுபிட்ஸ் பதிலளிக்கவே இல்லை என்றும், உயரப் பறந்த விமானம் தாழ வருவதற்கான பட்டன்களை லுபிட்ஸ் வேண்டுமென்றேதான் அழுத்தியிருந்தார் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
விமானம் மலையில் மோதும்வரை அவர் உயிருடனும் உஷாருடனும் இருந்தார் என்றும் தாம் யூகிப்பதாகவும் அவர்கள் கூறினர்னர்.
 
பின்னர் லுபிட்ஸின் வீடுகளை பரிசோதனை செய்த ஜெர்மன் சட்ட நடவடிக்கை அதிகாரிகள், லுபிட்ஸ் மனநல சிகிச்சைகளை பெற்றுவதந்தற்கான ஆவணங்களைக் கண்டெடுத்ததிருந்தனர்.
மேலும் உடல்நிலை சரியில்லாததால் லுபிட்ஸ் வேலைக்கு வர இயலாது என தெரிவிக்கும் மருத்துவர் கடிதங்கள் அவர் வீட்டில் கிழிந்து கிடந்ததையும் அவர்கள் கண்டனர்.
 
இதன் எதிரொலியாக விமானியறையில் எல்லா நேரத்திலும் இரண்டு பேர் இருப்பதை கட்டாயமாக்கும் புதிய விதியைளை தாம் அறிமுகப்படுத்துவதாக ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.