Jump to content

பழைய திரைப்பட,நிழற் படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bakthagowri_1941.jpg

பக்த கௌரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, யு. ஆர். ஜீவரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Pandhayam_(1967).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mani_Malai_poster.jpg

Directed by    Bomman Irani
Screenplay by    A. M. Somarajulu
S. Ramaiah
Based on    Manimekalai
by Chithalai Chathanar
Produced by    T. Krishnachand
Starring    K. B. Sundarambal
Cinematography    Bomman Irani
Music by    Papanasam Sivan
Papanasam Rajagoplan
Production
company
    
T. K. Productions
Release date
    

  23 November 1940

 

   
   
   
   
   
   
   
   
   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கால சரோஜாதேவி ஒப்பனை ..☺️

Screenshot-2021-08-08-07-56-15-736-com-a

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bhishma_(1936).jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1970'S புன்னகை அரசி ..👌

Screenshot-2021-09-03-11-35-16-990-com-a

K.R. விஜயா 70 களில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். சரோஜாதேவி சாவித்திரி ஜெயலலிதா போன்ற நடிகைகளுக்கு இல்லாத பெருமை KR.விஜயாவுக்கு உண்டு. K.R.விஜயா தனிப்பெரும் கதாநாயகியாக விளங்கினார். இவர் நடித்த திருடி, வாயாடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, கியாஸ்லைட் மங்கம்மா, நம்ம வீட்டு தெய்வம் மற்றும் அம்மன் படங்களிலும் தனியாக ஜொலித்தார்.

அதிலும் மதுரை திருமாறன் இவரை கதாநாயகியாக வைத்து தொடர்ச்சியாக படம் எடுத்தார்.
நம்ம வீட்டு தெய்வம் படத்துக்கு பெண்களுக்கு தனிகாட்சி வைக்கும் அளவு தாய்மார்களின் கூட்டம் இருந்தது. சின்ன சின்ன ஊர்களில் கூட 50 நாட்களை தாண்டி ஓடியது.

ஜெய்சங்கர், ரவிச்சந்திரனை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கினார் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் இவரே. இப்போ நயன்தாரா இருந்தாலும் சில படங்கள்(டோரா) அவரையும் கவிழ்த்து விடுகின்றன..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mqdefault.jpg

 

Vedavathi.jpg

வேதவதி அல்லது சீதா ஜனனம் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்

எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி,

எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஷ்யாமளா பிச்சர்ஸ் தயாரிப்பில், 11 ஜனவரி 1941 ஆம் தேதி இப்படம் வெளியானது

 

எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி - நாரதர்

ஆர். சுப்பிரமணியம் - ராவணன்

பி. ஜி. வெங்கடேசன் - விபீஷணன்

எம். ஜி. ஆர் - இந்திரஜித்

வி. எஸ். மணி - ராமர்/விஷ்ணு

எம். ஜி. சக்கரபாணி - ஜனகர்/குபேரன்

பி. எஸ். வீரப்பா - இந்திரன்

எஸ். நந்தரம் - யமன்

கே. எஸ். வேலாயுதம் - நந்தி/அனுமான்

என். எஸ். வேலப்பன் - நளகூபரன்

வி. ஸ்ரீனிவாச சாஸ்திரி - அக்னி

கே. ராமசாமி ஐயர் - கும்பகர்ணன்

எஸ். ராமுடு - வருணன்

பி. கோவிந்தசாமி - சிவன்

டி. வி. கிருஷ்ணசாமி - சூரியன்

பி. லக்ஷ்மணசாமி - லக்ஷ்மணன்

எம். சங்கரராமன் - வாயு

ஏ. சி. சுந்தரம் - தூதர்

கோலார் ராஜம் - மண்டோதரி

கே. தவமணி தேவி - வேதவதி/சீதா

குமாரி ருக்மணி - ரம்பை

எம். எஸ். சரோஜா - மேனகா

டி. என். சுந்தரம்மா - லட்சுமி

எம். வி. குஞ்சம்மாள் - ஊர்வசி

எம். எஸ். சுந்தராம்பாள் - திலோத்தமை

ஜி. எஸ். சரஸ்வதி - பூதேவி

வி. எஸ். கௌசல்யா - பார்வதி

விசாலாக்ஷி - சூர்ப்பனகை
ஆகாச வாணி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

420px-Anbalippu_poster.jpg 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Araichimani_or_manuneethich_chozhan_tami

 

ஆராய்ச்சி மணி  அல்லது மனுநீதி சோழன்  ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பி. பி. ரங்காச்சாரி, எம். ஆர். சந்தானலட்சுமி, எஸ். பாலச்சந்தர், எஸ். வரலட்சுமி, ஏ. ஆர். சகுந்தலா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

220px-Unmaiye_Un_Vilai_Enna-220x275.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் அந்த காலதிற்கு பயணிப்பம்..☺️

Screenshot-2021-09-20-13-50-03-052-com-a

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Aasai_Manaivi.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

250px-Kubera_Kuchela_1943.jpg

 

குபேர குசேலா 1943
ஆர். எஸ். மணி, மற்றும் பி. எஸ். இராமையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Paattum_Bharathamum.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணப்பரிசு (1959)

67041614.jpg

அப்போதெல்லாம் எம்ஜிஆரையோ சிவாஜியோ போட்டால், பூஜையின் போது மொத்த ஏரியாவே விற்றுவிடும். ’நான் தரேன் எவ்ளோ வேணும்?’ என்று பைனான்ஸியர்கள் வரிசைகட்டி கையில் பணத்துடன் வந்து நிற்பார்கள்..

ஆனால், எம்ஜிஆர் பக்கமும் போகாமல் சிவாஜி பக்கமும் போகாமல், ‘கல்யாண பரிசு’ படத்தில் ஜெமினி கணேசனை நாயகனாக்கினார். பாஸ்கராகவே வாழ்ந்து காட்டினார் ஜெமினி கணேசன்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும் கேவி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியும் அவரவர் பாணியில் இசையால் தமிழகத்தைக் குளிர்வித்துக் கொண்டிருந்தார்கள். சீர்காழி கோவிந்தராஜன், டிஎம்.செளந்தர்ராஜன், டி.ஆர்.மகாலிங்கம், பிபி.ஸ்ரீநிவாஸ் என பலரும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தன் முதல் படத்துக்கு, இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவை நியமித்தார். இன்னொரு விஷயம்... பாடகராக எல்லோருக்கும் ராஜாவைத் தெரியும். ஆனால், அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.ஸ்ரீதர்.

ஜெமினி கணேசன் சரோஜாதேவியைக் காதலிப்பார். சரோஜாதேவியும் ஜெமினியை விரும்புவார். சரோஜாதேவியின் அக்கா விஜயகுமாரியோ, ஜெமினிகணேசனை காதலிப்பார். அக்காவின் காதலும் விருப்பமும் தங்கைக்குத் தெரியவர, அக்காவுக்காக தன் காதலையே தியாகம் செய்வார் சரோஜாதேவி. ஜெமினியையும் அப்படி தியாகம் செய்ய மன்றாடுவார். இறுதியில்,தன் காதலியின் விருப்பத்தை நிறைவேற்ற சம்மதிப்பார்.

ஜெமினிக்கும் விஜயகுமாரிக்கும் கல்யாணம். பிறகு மூவரின் வாழ்க்கையிலும் நிம்மதியோ ஆனந்தமோ இல்லாத நிலை. இவர்களை விட்டு சரோஜாதேவி எங்கோ செல்ல, குழந்தையும் பெற்றுவிட்ட நிலையில் விஜயகுமாரி இறந்துவிட, கையில் குழந்தையுடன் உலகமே சூன்யமாகிவிட்டதாகக் கருதும் வாழப் பிடிக்காத ஜெமினி சரோஜாதேவியைத் தேடிக்கொண்டு வர, அங்கே... சரோஜாதேவிக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்க, குழந்தையின் கையில் கடிதத்தைக் கொடுத்து உள்ளே அனுப்பிவிட்டுச் செல்ல, சரோஜாதேவியும் அவரைக் கல்யாணம் செய்துகொள்ளும் நாகேஸ்வர ராவும் அந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ள... அவர்களுக்கு அந்தக் குழந்தைதான் ‘கல்யாண பரிசு’ என்பதுடன் படத்தை முடித்திருப்பார் ஸ்ரீதர்.

ஒரு படத்தில், கதைக்குள்ளேயே காமெடியை எப்படி நுழைக்கவேண்டும் என்பதற்கு ‘கல்யாண பரிசு’ மிகச்சிறந்த உதாரணம். தங்கவேலு சரோஜா ஜோடியின் கலாட்டாவும் காமெடியும் அமர்க்களம். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் காமெடி தொகுக்கப்பட்டு, அது தனி ரிக்கார்டாக ஆக்கப்பட்டு, கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், கோயில் திருவிழா சமயங்களில் ஒலிபரப்பப்பட்டதென்றால்... அது ‘கல்யாண பரிசு’ காமெடியாகத்தான் இருக்கும். இதுதான் ஆரம்பம்!

மன்னார் அண்ட் கம்பெனி காமெடியையும் எழுத்தாளர் பைரவன் என்று பொய் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டதையும் இன்னும் நூறு ஆண்டுகளானாலும் மறக்கமாட்டார்கள் ரசிகர்கள். தங்கவேலு - சரோஜாவின் காமெடிகளால் வெடித்து ரசித்தார்கள். ரசித்துச் சிரித்தார்கள். அந்த ‘தட்டுனான் பாரு...’ ‘எங்கே... முதுகுலயா?’ என்கிற வசனங்கள் இன்றைக்கும் பாப்புலர்.

உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதிய ஸ்ரீதரின் வசனங்கள் ஒருபக்கம். இந்தியாவின் ஒளிப்பதிவு மேதையும் ஸ்ரீதரின் மிக நெருங்கிய நண்பருமான ஏ.வின்செண்டின் ஒளிப்பதிவு இன்னொரு பக்கம்.

ஏ.எம்.ராஜாவின் மனதை வருடிக் கொடுக்கும் இசை இன்னொரு பக்கம், ஜெமினி, சரோஜாதேவி, விஜயகுமாரி எனும் முக்கோணக் காதல் கதை என்கிற வார்த்தையையும் கதையாடலையும் உருவாக்கிய ஸ்ரீதரின் திரைக்கதை ஜாலம் ஒருபக்கம் என நாலாபக்கமுமாக நம்மைக் கட்டிப் போட்டது ..‘கல்யாண பரிசு’.

’வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘ஆசையினாலே மனம்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ’அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு’, ’உன்னைக் கண்டு நானாட’, ‘காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்’ என்று எல்லாப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார்.

எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதில் ‘உன்னைக் கண்டு நானாட’வும் ‘காதலில் தோல்வியுற்றான்’ பாடலும் இரண்டிரண்டு முறை வந்து, இன்னும் உலுக்கியது. ’கல்யாண பரிசு’ பட பாட்டுப்புஸ்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு, பாடல்களை மனனம் செய்து, அந்தப் பாடல்களைப் பாடி, தங்கள் காதல் தோல்விக்கு மருந்தாக்கிக் கொண்ட காளையர்களும் யுவதிகளும் அன்றைக்கு ஏராளம்!

அன்றைக்கு ஏகப்பட்ட பேர், தங்கள் காதல் தோல்வியின் ஞாபகார்த்தமாக, வேறு யாரையோ திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள, அந்தப் பெண் குழந்தைக்கு ‘வசந்தி’ என்று பெயர் வைத்து ஆறுதல்பட்டுக்கொண்டார்கள்.

முதல் படமான ‘கல்யாண பரிசு’ படத்தின் மூலமாகவே இப்படியான பல சாதனைகளைச் செய்திருந்தார் ஸ்ரீதர். புதுமை இயக்குநர் என்று கொண்டாடப்பட்டார்.

1959-ம் ஆண்டு, ஏப்ரல் 9-ம் தேதி வெளியானது ‘கல்யாண பரிசு’. இந்தப் படம் வெளியாகி, 62வருடங்களாகிவிட்டன. இன்றைக்கு மட்டுமல்ல... இன்னும் 60 வருடங்களானாலும் காதல் தோல்விப் படத்துக்கான ஆகச்சிறந்த ஐகான்... அடையாளம் என்று கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும் ‘காதல் பரிசு’... இந்தக் ‘கல்யாண பரிசு ..

இலங்கை செய்திதாளில்  அன்றைய நாளில் வெளியான விளம்பரம் யாழ் கள உறவுகளுக்காக இதோ..

Screenshot-2021-10-05-08-48-09-438-com-a

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

320px-Thavapudhalavan.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Devakanya1943.jpg

 

ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், வி. என். ஜானகி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DasiAparanji1944.jpg

தயாரிப்பு    எஸ். எஸ். வாசன்
பி. என். ராவ்
ஜெமினி ஸ்டூடியோ
கதை    கொத்தமங்கலம் சுப்பு
இசை    எம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்பு    கொத்தமங்கலம் சீனு
எம். கே. ராதா
கொத்தமங்கலம் சுப்பு
எம். வி. மணி
புஷ்பவல்லி
என். எஸ். சுந்தரம்
எம். எஸ். சுந்தரிபாய்
ஜெயலட்சுமி
எல். நாராயணராவ்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.