Jump to content

கே இனியவனின் கஸல் கவிதைகள்


Recommended Posts

உன்னை ....
காதலித்ததால் ....
எனக்கு விஞ்சியது ....
ஒன்றே ஒன்றுதான் ....
கவிதை ....!!!


பூக்களால் கவிதை ....
எழுதுகிறேன் ....
சோகத்துடன் வாசிக்காதே ....
பூக்கள் அழுதுவிடும் ....!!!


நீ 
எதை பேசினாலும் ....
அதில் அர்த்தமில்லை ....
அர்த்தமாக்கவே ....
கவிதை எழுதுகிறேன் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 900

 

Link to comment
Share on other sites

  • Replies 219
  • Created
  • Last Reply

நான் சில காலம் 
முள் மெத்தையில்.....
தூங்கபோகிறேன் .... 
காதலிக்கபோகிறேன்....!!!

ஒவ்வொரு நொடியும் ...
மூச்சு விடும் போது ....
இதயம் சுடுகிறது ....
உள்ளிருப்பது -நீ ,,,,!!!

வாழ்வதற்காக காதலா ..?
சாவதற்காக காதலா ...?
நீ எதை தந்தாலும் ....
காதலோடு ஏற்பேன் ....!!! 

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 901

Link to comment
Share on other sites

நீயும் நானும் நிம்மதியாய் ....
இருக்க ஒரே ஒரு வழி ....
நீ என்னை காதலிப்பதே ....!!!

நீ 
எதற்காக தூண்டில் ...
போட்டாய் - நான் 
எதற்காக துடிக்கிறேன் ...?
ஆட்டிப்படைகிறது காதல் ....!!!

உனக்கு என் கவிதை ....
பொழுதுபோக்கு - எனக்கு ....
வாழ்கை பொழுது....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 902
Link to comment
Share on other sites

புவியீர்ப்பால் ....
பொருட்கள் கீழே வரும் ....
கண் ஈர்ப்பால் ....
காதல் உள்ளே வரும் ...!!!

என்னை கவிதை ....
எழுத வைத்தவளே ....
கண்ணீர் அஞ்சலி ....
எழுத வைத்துவிடாதே ....!!!

இதயமே ....
கவனமாய் இரு ....
என்னை பார்த்து ....
சிரிக்கபோகிறாள்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 903

எரிந்து கொண்டிருக்கும் 
காதலை அணைத்துவிடு ...
என்னை நீ அணைத்து....!!!

நீ .....
ஒளி காத்திருக்கிறேன் ...
நீ உதிக்கும்வரை .....
நான் உன்னில் மறையும் ...
வரை காத்திருப்பேன் ...!!!

இந்த 
உலகம் அழிய வேண்டும் ....
புதிய உலகில் நாம் தான் ....
முதல் காதலர் என்ற ....
வரலாறு படைக்கவேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 904

Link to comment
Share on other sites

காதலோடு வாழ்ந்த நீ 
இறக்கிவைத்துவிட்டு ....
என்னை சுமைதாங்கி ...
ஆக்கிவிட்டாய் ....!!!

எதுவுமே நிஜமில்லை 
காதல் மட்டுமே நிஜம் ....!!!

இதுவரை ....
என் எழுத்து கருவி ....
என் துன்பத்தையே ....
எழுதிகொண்டு இருக்கிறது ....
கொஞ்சம் உன்னை பற்றி...
எழுதபோகிறேன் ...
தாங்கிகொள் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 905

Link to comment
Share on other sites

உன்னோடு 
வாழ ஆசைப்பட்டேன் ....
உன்னோடுடனா...?
வாழப்போகிறேன் ....
என்றாகிவிட்டாயே ...!!!

உன்னை காதலித்தேன் ....
காதலோடு இருக்கிறேன் ....
காதலியை காணவில்லை ....!!!

மறதியை மறந்திடலாம் ....
மறந்துகூட உன்னை ....
மறக்க முடியவில்லை ....!!! 

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 906

Link to comment
Share on other sites

என்னை கொடுத்து ...
உன்னை பெறுவது ...
காதல் .....!!!


மலர் செடியில் ....
இருக்கும் போதுஅழகு ...
நீ என்னோடு காதலில் ....
இருந்தாலே அழகு ....!!!


காதல் கண்ணோடு....
விளையாடி ...
காற்றோடு கலந்து 
மூச்சோடு முடிகிறது ...!!!


+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 907

Link to comment
Share on other sites

தென்றல் காற்று ....
தோளில் படும்போது ....
உன் நினைவுகள் .....
மெல்ல சுடுகிறது ...!!!

மூச்சால் அடைத்து ...
காதலை பாதுகாத்தேன் ...
முள் கம்பியால் ....
பாதுகாக்க ஏன்...?
வழிவகுத்தாய்....?

தவமிருந்து 
வரம் பெற்றேன் .....
காதலி நீ கிடைத்தாய் ...
என்ன சாபமோ ...?
நிலைக்கவில்லை ...!!!


+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 908

இறைவனை தரிசித்து ....
நாட்களாகிவிட்டது ....
உன் தரிசனம் ....
கிடைத்ததிலிருந்து ....!!!

பகலெல்லாம் இரவாகி ...
உன்னையே கனவாக்கி ....
வாழ்ந்த எனக்கேன் ....
கண்ணெல்லாம் ....
கண்நீராக்கினாய்...?

நீ எனக்காக ...
பிறந்த தேவதை ....
காதலையும் தருகிறாய் ....
கவலையும் தருகிறாய் ....
கவிதையும் தருகிறாய் ....
வாழ்கை எப்போது தருவாய் ...?

உன்னை மறந்து வாழ ....
மறந்துபோய் உன் வீட்டுக்கு ...
வந்துவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 909

உன் 
கனவு வலைக்குள் ...
சிக்கி தவிக்கிறேன் ...
என்னை மீட்டுவிடு ....!!!

பார்க்கும் இடமெல்லாம் ....
பாவையாக இருந்தாய் ....
எப்படி இப்போ ...?
பாவியாக  மாறினாய் ...?

என் இதயம் இருண்டு  ....
பலகாலம் என்றாலும் ....
இதய நரம்பில் உன் கீதம் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 910

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நான் 
பின்னும் வலை ..
கண் மீனுக்காக ..
இல்லை .
கண்ணீருக்காக....!!!

நீ 
விட்டுவிட்டு போனால்
தோல்வியை உனக்கு
முன்பே விரும்பிவிட்டேன்
நான் வென்றும் விட்டேன்....!!!

இரவு நட்சத்திரம் போல்
உன் நினைவுகளும்
மின்னுகின்றன.....
விடிந்தபின் எல்லாம் மாயம் ....!!!

+
கே இனியவன் - கஸல் 106

Link to comment
Share on other sites

நீ 
தரும் வேதனைகள்...
நீ தருவதில்லை .....
நீ தரும் இன்பம் ...
நீ தருவதில்லை ....
எல்லாம் காதல் தரும் ....!!!

என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை

என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது...!!!

+
கே இனியவன் - கஸல் 107
Link to comment
Share on other sites

காற்றில் ஆடும் 
தீபம் போல் ஆனேன் ....
நீ 
சொல்லும் சொல்லால் ...!!!

நினைக்கவும் ...
மறக்கவும் ....
பழகிய இதயத்துக்கு ....
நன்றி ....!!!

தனிமையில் அழுதேன்,,
உறவுகள் இல்லாமல் அல்ல....
காதல் இல்லாமல் ...!!!

+
கே இனியவன் - கஸல் 109

பூவைப்போல் காதலும் ....
போராடி பூக்கும் ...
ஒரு நொடியில் கசங்கும் .....!!!

உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் மையாகவும் ....
வலிகள் எழுத்து கருவியாகவும் ....
இருக்கும் ....!!!

பூத்திருந்த காதல் ....
உத்திர தொடங்கிவிட்டது ....
உதிர்ந்திருந்த கனவு ...
தளிர் விடுகிறது ....!!!

+
கே இனியவன் - கஸல் 110

Link to comment
Share on other sites

காதலில் ....
அவளில் நனைவதற்காக ....
பனித்துளியில் நனைந்து .....
பார்கிறேன் ....!!!

ஒவ்வொரு உயிரினமும் ....
தன்னை பெருக்க ....
என்னைபோல் காதலுக்கு ....
ஏங்குகின்றன ....!!!

ஒவ்வொரு குழந்தையும் 
காதலின் அழகை காட்டும் ...
கண்ணாடிகள் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 911

Link to comment
Share on other sites

கவிதை ....
உனக்கு வரிகள் ...
எனக்கு நீ தந்த ....
காயங்கள் .....!!!

அரைகுறையாய் ....
இருக்கும் காதல் இதயத்தை ....
காதல் இதயமாக்குவோம் ...
வருகிறாயா ...?

உன் 
மின்காந்த கண்ணில்....
தப்புவதற்காக -உன் 
கண்ணுக்குள் நீராய் ....
இருக்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 912

நீ 
பார்த்த போதுதான் ...
ஆணழகனானேன் ....!!!

எல்லோரும் 
ஒருவகையில் ....
பிச்சைகாரர்தான் ....
நான் காதலில் - நீ 
அழகில் .....!!!

உன் ....
பேச்சு வல்லினம் ...
எனக்கு மெல்லினம் ...
காதலுக்கு இடையினம் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 913

Link to comment
Share on other sites

காதலுக்காக ...
பூக்கப்பாடதமலர் -நீ 
வாடிவிழுந்த மலர் -நான் ...!!!

உன் புருவம் ....
உனக்கு வில் ...
எனக்கு அம்பு ....!!!

உன்னையும் ....
மரணத்தையும் ...
ஒன்றாக காதலிக்கிறேன் ....
நிச்சயம் முடிவு உண்டு ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 914
Link to comment
Share on other sites

காதலில் 
ஏற்ற இறக்கம் ....
நீ அமர் முடுகளில் ....
நான் ஆர்முடுகளில் ....!!!

என் .....
தலையெழுத்தை ....
நீ காதல் ரேகையால் ...
வரைந்து விட்டாய் ....!!!

எப்போது 
கண்ணீர் விட்டேன் ....?
காதலுக்கு தண்ணீர் ...
தெளித்தல்லவா விட்டேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 915

Link to comment
Share on other sites

உன்னை 
காதலித்து பஞ்சு மெத்தையில் ...
உறங்காமல் முள் மெத்தையில் ....
உறங்குகிறேன் ....!!!

நினைவுகள் ...
நீர்குமிழியை இருக்கலாம் 
குங்கும சிமிழாய் இருக்கலாம் 

சோகத்தின் பாதையில் ....
வருகிறேன் நீயும் நிச்சயம் 
வருவாய் என்ற நம்பிக்கையுடன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 916

Link to comment
Share on other sites

பட்டாம் பூச்சியாய் ...
பறந்த என்னை ...
விட்டில் பூச்சியாய் ...
கருக்கி விட்டாய் ....!!!

கண்ணீர் கடலைவிட ....
சோகமானது ....
உவர்ப்பதில் இரண்டும் ...
ஒன்றுதான் ...!!!

நான் 
மூச்சுவிடுவதால் ....
நீ வாழுகிறாய் .....
போதும் அது காதல் ...
இல்லாவிட்டாலும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 917
Link to comment
Share on other sites

ஜென்ம பாவத்துக்கு ....
பரிகாரமாய் நீ 
காதலாய் வந்தாய் ....!!!

ஏன் 
முகம் திருப்புகிறாய்...
தவறு மனதை உறுத்துதா ..?

உனக்கு அனுப்பிய ...
காதல் கடிதங்கள் ....
திரும்பி எனக்கே வருகிறது ....
முகவரியை மாற்றி விட்டாயா ...?

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 918
Link to comment
Share on other sites

என்று 
ஆதாம் ஏவாள் ...
தோன்றினார்களோ ...
அன்றே காதலும் ....
ஏவல் ஆகிவிட்டது ...!!!

காதலிலும் ...
பாகபிரிவினை ...
உடல் என்னிடம் ...
உயிர் உன்னிடம் .....!!!

பூக்களின் காதல் 
தோல்வி பனித்துளி ,,,,
மேகத்தில் காதல் 
தோல்வி மழைதுளி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 919
 

Link to comment
Share on other sites

வானவில்லைபோல் ....
காதல் அழகாயிருந்தது ,,,,
எப்படி வில் உடைந்தது ,,,?

உன் 
முக அழகை விட ....
உன் காதல் அழகு ....
பிறப்பின் புனிதத்தை ...
பெற்று விட்டாய் ...!!!

சோதிடமும் காதலும் ....
ஒன்று தான் புரிந்துகொள் ....
ஒருவனை 
கொஞ்சம் கொஞ்சமாய் ....
கொல்லும்....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 920

Link to comment
Share on other sites

இதய தீபத்தை ....
அணைத்து விட்டாய் ...
மீதி எண்ணையில் ....
கசியும் வரிகள் தான் ...
என் கவிதைகள் ....!!!

இதுவரை 
பூக்களின் மேல் ....
நடந்து வந்தவன் ....
முற்களின் மேல் .....
நடக்கப்போகிறேன் ....!!!

நீ 
என்னை விட்டு .....
போகப்போகிறாய் .....
என்பதை அறிந்து ....
இதயம் அழத்தொடங்கி....
விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 921
Link to comment
Share on other sites

வா 
நிம்பதியை தொலைத்து ...
காதல் வழியே போவோம் ...!!!

பாவம் காதல் ....!!!
காதல் இல்லாத இரண்டு ....
இதயத்துக்கு நடுவில் ...
தத்தளிக்கிறது ....!!!

கண்ணீரை ....
என் கண்ண்கூட ....
விரும்ப்பவில்லை ....
வழிந்தோடுகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 922

Link to comment
Share on other sites

இணையாத ....
நம் காதல் ....
எங்கிருந்து ,,,,,
அழுதுகொண்டிருக்கும் .....?

இறைவனையும் ....
காதலையும் ....
அழுதுதான் பெறவேண்டும் ....
வேறு வழியில்லை ....!!!

தன் வலிமையை ....
பார்க்கமுடியாத ...
குதிரையின் கடிவாளம் ....
போல் நீயும் காதலை ....
பார்க்கவில்லை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 923

காதல் விடி வெள்ளி ....
அருகில் மின்மினிகளை ...
இணைத்து பிரகாசமாய் ....
இருக்கிறது ....!!!

உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!!!

நீ காதல் ஜுரம் ....
தொற்றிக்கொண்டே ...
இருக்கிறாய் ...
தொல்லை கொடுத்து ...
கொண்டே இருக்கிறாய்....!!! 

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 924

Link to comment
Share on other sites

நினைத்துக்கொண்டே ....
இருக்க இனிக்கும் காதல் ...
உன்னை நினைத்ததும் ....
கண்ணீரும் இனிக்கிறது ....!!!

நிலாவில் பேசுவது ....
காதலுக்கு அழகு ...
எதற்காக நண்பகலில் ....
பேச ஆசைப்படுகிறாய் ....?

வானமும் பூமியும் ....
என்று இணைகிறதோ ...
அன்று நீயும் நானும் ...
நிச்சயம் சேர்வோம் ....!!!

^ 

கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம் 
தொடர் பதிவு கஸல் - 925
Link to comment
Share on other sites

நீ 
எனக்காகவே பிறந்தவள் ....
நான் 
உனக்காக இறக்கிறேன் ....!!!

உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!!!

எத்தனை காலம் 
கடிகாரம் முள் போல் ...
சுழண்டு கொண்டே...
இருப்பது ....!!!

கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம் 
தொடர் பதிவு கஸல் - 926

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.