Jump to content

தாடிக்கார அண்ணே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக வெளியீடு என்ற விளம்பரத்தை இணையத்தில பார்த்தவுடன் அதில் கலந்துகொள்வது எனமுடிவெடுத்தேன். மெல்பேர்னிலிருந்து எழுத்தாளர்கள் வேறு பங்குபற்றுகிறார்கள் என எழுதியிருந்தார்கள் எனவே நிச்சயம் போகவேணும் என தீர்மானித்தேன்.

அந்த நாளும் வந்தது.

கதிரவன் இளைபாறும் நேரம். மனிதர்களுக்கு அடுத்த நாள் ஒய்வு. வாயில் சுவிங்கத்தை போட்டு மென்றுகொண்டு பின்வரிசையில் போய் உட்கார்ந்தேன். முற்போக்கு பிற்போக்கு, நடுபோக்கு எழுத்தாளர்கள் எல்லாம் மேடையில் இருந்தார்கள்.

புத்தக வெளியீட்டு வைபவம் தொடங்கியது. வரவேற்புரை, மெளனஞ்சலி என சம்பிராதய சடங்குகள் முடிவடைந்த பின்பு, இப்பொழுது மெல்பேர்னிலிருந்து வந்த முற்போக்கு எழுத்தாளர் ,கவிஞர், நாடக நடிகர் ,பேச்சாளர் .சு.கா.....பேசுவார் என் அறிவிப்பாளர் அறிவித்தார்.

கையை கட்டிகொண்டிருந்தோர் எல்லோரும் கைக்கு சிறிய வேலைகொடுத்தனர். மண்டபம் ஒலி அலைகளை ரசித்தது. நித்திரை தூங்கியோர் திடுகிட்டு எழுந்தனர்.

 

குறுந்தாடி வைத்த, நனஷனல், பான்ட் அணிந்த 55க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதுடைய சு.கா புத்தகத்தை பற்றிய விமர்சனத்தை வைத்தார்.

பதின்ம வயதில் புத்தகங்கள் வாசிப்பு, மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடித்தல் போன்ற செயல்களால் சுரேஸின் சிந்தனையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. முக்கியமாக அவனது இனம் வேற்று இனத்தவர்களால் ஒடுக்கப்படுவதை உணர்ந்த அவனது நண்பர்கள் போரட புறப்பட்டனர். ஒவ்வொருத்தரும் தனிநாடு வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெவ்வேறு பாதைகளில் சென்றனர்.

குகன் சுரேசின் தெருவில் வசிப்பவன். இருவரும் ஒரே வகுப்பில்தான் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். இருவரும் சுரேஸின் சைக்கிளில்தான் பாடசாலை சென்றுவருவார்கள். அன்று பாடசாலையிலிருந்து திரும்பி வரும்பொழுது

"மச்சான் இன்றைக்கு பின்னேரம் உன்ட சைக்கிளை ஒருக்கா தாடா, டவுனுக்கு போகவேணும் "

"பின்னேரம் வா தாரன்"

மூன்று தரம் கேற் கொழுக்கி தட்டும் சத்தம் கேட்டால் அது குகன் தான் என வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். அம்மா அந்த சத்தத்தை கேட்டவுடன் கேற்றடியை பார்க்காமலயே தம்பி குகன் வந்திருக்கிறான் என குரல் கொடுத்தார். அடிவளவுக்குள் ஆட்டுக்கு குழை ஒடித்து கொண்டிருந்த நான் கொக்கத்தடியை அப்படியே மரத்தில் கொழுவி விட்டு , முற்றத்தில் நின்ற சைக்கிளை வந்து எடுக்கும் படி அழைத்தேன்.. நானும் அவனுடன் வருவதாக சொல்ல தான் திரும்பி வருவதற்கு நேரம் செல்லும் என்று சொல்லி என்னை அழைத்து செல்லவில்லை.

 

கிழமையில் ஒரு நாள் எனது சைக்கிளை எடுத்து செல்வான். ஆறு மாதங்களின் பின்பு என்னை அவனுடன் அழைத்து சென்றான். என்னை ஒரு கடையில் நிற்கும் படி கூறிவிட்டு அவன் சென்று சிறிது நேரம் கழித்து ஒரு தாடி வைத்த அண்ணருடன் வந்தான். இவர் சுதா அண்ணே என எனக்கு அறிமுகம் செய்து வைத்தான் .நானும் கலோ அண்ணே என்றேன் ,அவரும் பதிலுக்கு கலோ என்றார் .தேனீர் அருந்த வருமாறு பக்கத்திலிருந்த தேனீர்கடைக்கு அழைத்து சென்றார்.

தேனீர் குடித்தபடியே "தம்பி மட்டர்ன் ரோல் சாப்பிடுவீரோ" என்றார்.

"சாப்பிடுவேன் ஆனால் இன்றைக்கு வெள்ளிக்கிழமை சாப்பிட மாட்டேன்".

"தம்பி நல்ல பக்திமான் போலகிடக்கு"

சிரிச்சு சமாளித்தேன்.

நேற்று இரண்டு தமிழ்சனத்தை பொலிஸ் சுட்டவன். அப்ப உம்மட கடவுள் என்ன கண்ணை மூடிக்கொண்டே இருந்தவர்? என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கும் சிரித்து மழுப்பினேன்.

 

அவர் கேட்ட கேள்விகளில் நியாயம் இருந்தாலும் கடவுளை எதிர்த்து கருத்து சொல்லவில்லை.

எந்த துறையில் படிக்கபோறீர் டாக்டராகவோ இஞ்ஜினியராகவோ வரப்போறீர் என்று அடுத்த கேள்வியை கேட்டார். இல்லையண்ணே, எங்களுக்கும் அதற்கும் வெகுதூரம் கொழும்பில போய் ஐ.சி.எம்.எ செய்யலாம் என்று இருக்கிறேன் என சொன்னேன்.

 

கொழும்பிலும் தமிழன் இனிவரும் காலங்களில் வாழமுடியுமோ தெரியாது. 1977 இல் நடந்த இனக்கலவரம் பற்றி அறிந்திருப்பீர். ஒசியில லங்காராணியில் யாழ்ப்பாணத்திற்கு வரவேணும் என்றால் கொழும்பில போய் படியும் என்று நக்கலடித்தார். அவரிடமிருந்து இருவரும் விடைபெறும் பொழுது தாடிக்கார அண்ணே குகனிடன் சொன்னார் அடுத்த வகுப்புக்கு தோழரையும் அழைத்து கொண்டு வருமாறு.

"அடே குகன் என்ன வகுப்படா தாடிக்காரன் எடுக்கப்போறான்"

"அரசியல் வகுப்படா காய் பேய்காய் ,லெபனான் ரிட்டன்., ஆயுதங்கள் எல்லாம் அந்த மாதிரி கழற்றி பூட்டும்"

"ஆயுதங்களடா , ஆளைவிடடா நான் வகுப்புக்கு வரவில்லை"

"நீ பயப்பிடாத,ஆயுதம் ஒன்றும் நீ தூக்க தேவையில்லை. முதலில் போராளிகள் அரசியல் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு அந்த அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.  பின்பு மக்கள் போராட்டம் வெடிக்கும். அது ஒரு புரட்சிக வெகுஜன போராட்டமாக இருக்கும்"

எனக்கு முதலில் பயமாக இருந்தாலும் போய் பார்ப்போம் என்ன நடக்குது என்று தாடிக்கரா அண்ணேயின்ட இருப்பிடத்திற்கு போக முடிவெடுத்தேன். நேரடியாக தாடிக்கார அண்னையின்ட வீட்டை போய் அரசியல் பாடம்படிக்கலாம் என நினைத்தபடி குகனுடன் சென்றேன். என்னை பெருமாள் கோவிலடி சந்தியில நிற்க்கும் படிசொல்லிவிட்டு குகன் சென்றுவிட்டான்.

 

அரை மணித்தியாலத்தின் பின்பு தனியாக நான் நிற்க்கும் இடத்திற்கு வந்தான். எங்கயடா அண்ணையை காணவில்லை என்று கேட்க, வருவார் தோழரிட்ட சொல்லிவிட்டனான், அவர் கூட்டிகொண்டு வருவார். ஏன்டா உனக்கு அவரின்ட வீடு தெரியாதோ என நான் கேட்க, அடே அவர் என்னைப்போல உன்னைப்போல சாதாரண ஆளே? லெபனான் ரிட்டேன் காய் . அடேய்! இன்னும் கொஞ்ச நாளில் என்னை சந்திப்பதும் இலகுவாக இருக்காது என நக்கலாகவும் அதே நேரம் நம்பக்கூடிய வகையில் சொன்னான்.

தனியாக வந்த தோழர், அண்ணே வர நேரமாகுமாம் என்னை வகுப்பு எடுக்க சொன்னவர், வாங்கோ தேர்முட்டி படியடியிலிருந்து கதைக்கலாம் என எங்களை அழைத்து சென்றார். தேர்முட்டியடியில் ஏற்கனவே எனக்கு அறிமுகமில்லாத இருவர் இருந்தனர். ஆனால் குகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் போலதெரிந்தது. அவர்களின் உரையாடல் குகனை கணட அந்த இருவரும், தோழர் பீட்டர் எப்படி இருக்கின்றீர்கள் என சுகம் விசாரித்தனர். நான் குகனை திரும்பி பார்த்தேன். இங்கு எனது பெயர் பீற்றர் மச்சான் என்றான். சரி அண்ணே வரும் வரை நாங்கள் அரசியல் கலந்துரையாடுவோம் என மூத்த தோழர் தொடங்கினார்.

பேசிகொண்டிருக்கும்பொழுது எப்படி தோழர்களே என கூறிக்கொண்டு அண்ணே எமது அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றினார்.

"நாம் ஏன்போரட வேண்டும தோழர்களே" என அண்ணர் ஒரு கேள்வியை கேட்டார்.

 

ஒவ்வொருத்தரும் ஒரு பதிலை சொல்லிகொண்டிருந்தனர். எனது முறை வந்தவுடன் சொன்னேன் சிங்களவன் அடிக்கிறான் நாங்கள் அவனை திருப்பி அடிக்கவேணும் என்றேன்.

"சிங்களவன் என்று சொல்லக்கூடாது ,சிங்களவர்களிலும் நல்ல சிங்களவர்கள் பலர் உண்டு ஏன் எங்கன்ட ஆட்களை விட சிங்களவர்கள் நல்லவர்கள்".

சிறிது நேரம் மெளனமாக இருந்தது அந்த இடம். அண்ணரே மெளனத்தை கலைத்தார்.

நாளைக்கு யாரவது வெருளிகள் ஆர்மிக்கு கண்ணிவெடி வைக்குங்கள் அதில ஆர்மியும் சாகும் அதனால் எமது எமக்கு தமிழீழம் கிடைக்காது... மக்கள் போராட்டம் மூலம்தான் ஈழம் கிடைக்கும் "

கம்யுனிசம் பற்றி யாருக்கு தெரியுமோ? கம்னிஸ்ட் நாடுகள் எவை? என அடுத்த கேள்வியை அண்ணர் கேட்டார். ஒருத்தரும் பதிலளிக்காதபடியால் எனக்கு தெரிந்த இரண்டு கம்னிஸ்ட் நாடுகளாகிய சீனாவையும் ரசியாவையும் சொல்லி, எனக்கும் அரசியல் தெரியும் என்ற வகையில் அங்கு இருந்தவர்களை பார்த்து ஏளன புன்னகையை உதிர்ந்தேன்.

"தோழரே உலகத்தில் இன்னும் கம்னிஸ்ட் நாடுகள் என்று ஒன்றில்லை , எப்ப உலகம் பூராவும் சோசலிச சமதர்ம சமுதாயம் உருவாகுதோ அப்ப கம்னிஸ்ட் நாடுகள் சாத்தியம் "என்றார்  அண்ணை தோழர்.

இதென்ன கோதாரியா கிடக்குது என்றுபோட்டு அதன் பின்பு அரசியல் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்துகொண்டேன். முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நவகாலனித்துவம் இப்படி பல எமது பழக்கத்தில் இல்லாத சொற்களையெல்லாம் சொல்லி அரசியல் பாடம் எடுத்தார்.

 

இப்படியாக எமது அரசியல் பாடம் தொடர்ந்தது. அடுத்த வகுப்பை வேறு இடத்தில வைப்போம் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒன்று கூடினால் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என மூத்த தோழர் ஒருவர் கருத்து சொன்னார். அடுத்த வகுப்புக்கு மயிரத்தான் வந்தான் சிங்கன் என்று மனதில் நினைத்து விடைபெற்றேன்.

இனிமேல் குகன் சைக்கிளுக்கு வந்தால் கொடுங்கோ என்னை கூப்பிடவேண்டாம் என வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு நான் பின் வளவில் ஆடுகளுக்கு குழை ஒடிப்பதற்க்கு சென்று விடுவேன். உயர்தர பரீட்சை எடுத்து பெறுபெறுகளுக்கு காத்திருந்தமையால் பாடசாலைக்கு செல்வதில்லை இதனால் அவனை சந்திக்கும் வாய்ப்பு குறைந்திருந்தது.

ஒரு நாள் சைக்கிளை திருப்பி வீட்டை கொண்டு வந்துவிடும் பொழுது சந்திக்கவேண்டியதாகிவிட்டது. மச்சான் என்னடா உன்னை காணக்கிடைக்கிதில்லை. வகுப்புக்கு வாரது என்று சொல்லிப்போட்டு காய்வெட்டிப்போட்டாய், அடுத்த வகுப்பு எங்கன்ட அம்மன் கோயிலில் தான் நடக்குது வாடா. அண்ணரும் உன்னை கேட்டவர் என்று சொல்லியடி சைக்கிளை மாமரத்தடியில் சாய்த்து வைத்தான். பார்ப்போம் நேரம் கிடைச்சா வாறன் என சொல்லி தொடர்ந்து கதையை வளர்க்காமல் அவனை விடை பெறவைத்தேன். அவனுடன் தொடர்ந்து நற்பை வளர்ப்பதா அல்லது துண்டிப்பதா என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

அன்று அம்மன் கோயில் வகுப்புக்கு போவதற்கு முடிவெடுத்தேன். வழமைபோல தோழர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். தாடி அண்ணர் எனது தோளில் கை போட்டபடி என்ன தோழர் உம்மை பிறகு காணகிடைக்கவில்லை, நீங்கள் எல்லாம் பின்நின்றால் எப்படி நாங்கள் மக்கள் புரட்சியை உருவாக்குவது? எல்லாம் வெல்லலாம் அண்ணே வகுப்பை தொடங்குங்கோ என்று கூறியபடி படிக்கட்டில் இருந்தேன்.

தொடரும்

நியானி: சீர் செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் இந்தக் கதையில வருகின்றவர்களை ஊரில் இருந்தபோது சந்திக்கவில்லை. தெரிந்ததெல்லாம் புலிதான்!

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!

தொடருங்கள் புத்தன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!

தொடருங்கள் புத்தன் :)

 

நன்றாக.... அவதானித்து, எழுதப்பட்ட கட்டுரை புத்தன்.

அதிலும்... கிருபனின், கருத்து.... என்னையறியாமல், சிரிக்க வைத்து விட்டது. :D

Link to comment
Share on other sites

சீக்கியரிடம் போய் எங்கட பிரச்சனை கதைத்தது கிருபனின் பிழை . :lol:

Link to comment
Share on other sites

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,    :o  :D  :icon_idea: 

தொடரட்டும் புத்தர் . 

 
கிருபன், on 04 Apr 2015 - 5:53 PM, said:
புத்தனின் இந்தக் கதையில வருகின்றவர்களை ஊரில் இருந்தபோது சந்திக்கவில்லை. தெரிந்ததெல்லாம் புலிதான்!

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!  :D  :icon_idea: 

தொடருங்கள் புத்தன்  :)

Link to comment
Share on other sites

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் .

சரி தவறவிட்டாலும் அரசியல் ஞானி ஆகிவிட்டீர்களே :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

 

நன்றிகள் பகலவன் ..... தொடரும் எனது கிறுக்கல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளட்டின் அந்தரங்கத்தை தொடருங்கோ,புத்தா

 

சும்மா ஒரு பார்வையாளனாக மட்டுமே .....இயக்க முகாமில் ஒரு நாள் தங்கியவனுக்கு இருக்கும் தகுதி கூட எனக்கு இல்லை, அவர்களின் அந்தரங்கத்தை விமர்சிக்கும் தகுதி.....நன்றிகள் நந்தன் என்னை தொடர்ந்து கிறுக்க ஊக்க படுத்தியமைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் . 

 

அந்த தாடிக்காரர்களில் அன்டன் பாலசிங்கமும் அடக்கம்:D நன்றிகள் அர்ஜூன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாடிக்காரர்களின் வகுப்புக்கள் கோயில் தேர்முட்டிகளிலும்
கடற்கரை வாடி வீடுகளிலும் தான் அதிகம் நடக்குமாம் உண்மையோ
புத்தரே :D

 

நானும் ஒரு நாலு வகுப்புக்குப்  போனனான்.
ஒண்டுமே விளங்கவில்லை.

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாடிக்காரர்களின் வகுப்புக்கள் கோயில் தேர்முட்டிகளிலும்

கடற்கரை வாடி வீடுகளிலும் தான் அதிகம் நடக்குமாம் உண்மையோ

புத்தரே :D

 

நானும் ஒரு நாலு வகுப்புக்குப்  போனனான்.

ஒண்டுமே விளங்கவில்லை.

தொடருங்கள்

 

அப்பதான் மக்களுடன் இயக்கம் மின்கில் பண்ணமுடியும்,மக்களுடன் மின்கில் பண்ணினால் மக்கள் புரட்சி வெடிக்கும் ,மக்கள் புரட்சி வெடித்தால் சோசலிச சமதர்ம ஈழம் பிறக்கும்.....ஈழம்பிறந்தால் வி ஆர் கப்பி....நீங்கள் நாலு வகுப்புக்கு போனனீங்களா? தாடி வைத்திருக்கின்றீர்களா ....அப்ப நீங்களும் புரட்சி திலகம் ..முற்போக்கு சிந்தளையாளர் ...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் புத்தன்...........உங்கள் எழுத்துநடை மிகவும் சுவாரசியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... கரத்துச் சொல்லத்தெரியேல்லை கிருபனின் நிலைதான் நம்மளதும்......புத்தனுக்கு பிடரியில சனியன் ஏதாவது ஏறிக் குந்திட்டுதோ என்னவோ :lol: :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.