Jump to content

'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! நான் மரபுக் கவிதைகள்தான் வேண்டும் என்று கேட்கவில்லை. கவிதை எந்த வடிவத்தில் வேண்டும் என்றாலும் இருந்து விட்டு போகட்டும்.

சென்ற நூற்றாண்டில் நீங்கள் பாரதியை உதாரணம் சொல்கின்ற பொழுது, உங்களினால் ஒரு பெண் கவிஞரை உதாரணம் சொல்லமுடியாது இருக்கிறது அல்லவா?

அதைத்தான் நான் சொல்கிறேன்.

இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் பெண்கள் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

சங்க காலத்தில் இருந்ததை விட மிக பலமடங்கு அதிகமான புலவர்கள் இன்று இருக்கிறார்கள் போன்ற ஒரு தோற்றம்.

ஆனால் பெண்கவிஞர்கள் ஒரு வட்டத்தை விட்டு வெளியே வருகிறார்கள் இல்லையே என்பதே என்னுடைய ஆதங்கம். நான் சொன்ன உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள் போன்றவைகள் வெறும் உதாரணங்கள்தான்.

வெறும் சோகத்தையும், காதலையும் பாடிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

அந்த நிலை இவளுக்கும் ஆகட்டும்.

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

இப்படித்தான் ஒரு காலை

அவள் போனாள்.

பரீட்சையில் வென்று வரும்

கனவுடன் தான் போனாள்.

காவலரண் தாண்டிப் போவேனென்ற

தைரியத்துடன் தான் தங்கை கிரிசாந்தி

தடையரண் தாண்டினாள்.

'எங்கை போறாய்"

என்ற பேய் முகத்தை

எரித்தாற்போல் பார்த்தாளாம்.

அதுதான் அவளைத் தின்றார்களாம்.

'ஏனந்தத் தலைக்கனம் காட்டினவ

பேசாமல் போயிருந்தால்

பாவமெண்டு விட்டிருப்பான்."'

அவவட தடிப்புத்தான் அவவை அழிச்சது."'

அவங்கள் நல்லவங்கள்

புலியள் சொறியாட்டி

பேசாம இருப்பாங்கள்.

நாங்களும் ஊருக்கைதான்

நாலுவருசம் இருந்தனாங்கள்.

நல்லாத்தான் எங்களோடை

நட்பாயிருந்தவங்கள்".

நல்லவகைச் சவுக்காரம்

நல்ல வானொலி நிகழ்ச்சிஒலிபரப்பு

ரெலிபோனைக் காணாத எங்களுக்கு

ரெலிபோனும் குளிர்சாதனமும்

மின்னொளியும் தந்தவங்கள்.

இதைவிட வேறையென்ன

எங்களுக்கு வேணும்....?

அவள் புதைந்த ஊரருகின் குடியிருந்து

கலியாணக் கனவோடு

ஜேர்மனி வந்த

ஒரு தமிழச்சியின்

வாயுரைத்த மெய்களிவை.

கிரிசாந்தி நிலையிந்தக்

குடிமகளின் குடிக்கொரு நாள் வாராதோ....?

இதைவிட என் வாயில்

இவளுக்கொரு வார்த்தையில்லை.

அந்த நிலை இவளுக்கும் ஆகட்டும்.

சபித்தலல்ல இது

மாண்ட கிரிசாந்தி

மண்ணிலிருந்து எழுந்த

அழுகையின் வலியெந்தன்

விழியிலும் மனசிலும் கனமாக....

அவளுக்காய் அழுத என்

இதயத்தில் எரிந்த வரிகளிவை.

அந்த நிலை இவளுக்கும் ஆகட்டும்.

போராடும் போர்க்களத்திலேயே இரண்டு மனவோட்டங்கள். ஒருத்தி புலியாகி இருக்கிறாள் இன்னொருத்தி பூனையாகி இருக்கிறாள். இது நிஜத்தை தொட்டுச் செல்லும் வரிகள். ஒரு பெண்ணின் அரசியல் ஆழமற்ற சிந்தனை இத்தனை துயர்களின் பின்னும்...ஆக்கிரமிப்பின் நோக்கமறியாத பெண்கள்..என்று பல கோணங்களை இவ்வரிகள் சொல்கின்றது.

இது பகுத்தறிவைத் தட்டிக்கேட்கும் கவிதையாக இல்லை என்றால் ஏன் இல்லை என்று சபேசன் சொல்ல வேண்டும். நாம் அறியவேண்டும்.

டிசே தமிழன் என்பவர் சொன்னதையும் இங்கிணைத்துவிடுவமே...

சபேசன், பெண் படைப்பாளிகளை விமர்சனபூர்வமாய் அணுக விரும்பியிருக்கின்றீகள். நல்ல விடயம். பெண்கள் எழுதுகின்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காய் அவர்களின் படைப்புக்களை அளவுக்குமதிகமாய் பாராட்டத் தேவையில்லை. அத்தகைய பாராட்டுக்களை எழுதுகின்ற பெண்களும் விரும்பமாட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

நீங்கள் சிலவிடயங்களை ஆகவும் தனிமைப்படுத்திப் பார்க்கின்றீர்களோ என்று தோன்றுகின்றது. குறிப்பாய் புலம்பெயர் பெண் படைப்பாளிகள் குறித்து வைக்கும் விமர்சனங்கள் ஆண்களுக்கும் பொருந்தக்கூடியவை. ஒரு துயரகரமான சம்பவம் நடந்தால் அதன் வடுக்கள் ஆறமுன்னரே கவிதைப் பாடி ஆபாசமாக்குவதைப் பெண்களைப் போலவே ஆண்களுந்தானே செய்கின்றார்கள்?

/உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள், சாதியம் போன்றவற்றையெல்லாம் பெரும்பாலும் பெண்களின் கவிதைகள் தொட்டுச் செல்வதில்லை. அதற்கான தேடல்களை செய்வதிலும் பெண் கவிஞர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை/

இப்படி நாம் கூறவெளிக்கிடும்போது ஒரு ஆண்பார்வை (அல்லது ஆணாதிக்கப் பார்வை) வந்துவிடுகின்றது அல்லவா? ஏன் நாங்கள் நினைப்பதை அல்லது இதுவரை செய்துகொண்டிருப்பதைத்தான் பெண்களும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கவேண்டும்? நாம் எவற்றையும் திணிக்காமல் பெண்கள் தாங்கள் சொல்லவிரும்புவதைச் சொல்வதற்கான வெளியைக் கொடுக்கும்போது அவர்கள் தமக்குரிய தனித்துவத்துடன் புதிய தளங்களை உருவாக்கவும் கூடும் அல்லவா?

...

வீம்பாய் எதிர்விமர்சனம் வைக்கின்றேன் என்று நீங்கள் நினைக்காமாட்டீர்கள் என்றே நம்புகின்றேன். புலத்தின் ஆண் கவிஞர்கள் எழுதிக் கிழித்துத் தள்ளுகின்றார்கள்; பெண் கவிஞர்கள் அப்படியொன்றும் சாதிக்கவில்லை என்ற ஒரு தொனி வருவதலேயே மேலேயுள்ளவற்றைக் குறிப்பிட்டேன். அதேவேளை இரண்டு பாலிலும் குறிப்பிடத்தக்கவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவ்வளவே நன்றி.

Link to comment
Share on other sites

நீங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கவிதைகளை பொறுக்கி எடுத்து வந்து இணைத்து விட்டு, இது நன்றாக இல்லையா என்று கேட்டால் எப்படி?

புலம்பெயர்ந்த பெண்கள் எழுதிய இதை விட நல்ல கவிதைகளும் உண்டு. அவைகளையும் கொண்டு வந்து போடுங்கள்.

நான் சில விதிவிலக்குகளை பற்றி பேசவில்லையே. பொதுவான நிலை எப்படி இருக்கிறது என்றுதானே சொல்கிறேன்.

டீசே தமிழனுக்கும் நான் என்னுடைய பதிலை சொல்லி விட்டேன்.

அந்தப் பதில்களின் சராம்சம் நான் மேலே எழுதிய கருத்துக்களில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கவிதைகளை பொறுக்கி எடுத்து வந்து இணைத்து விட்டு, இது நன்றாக இல்லையா என்று கேட்டால் எப்படி?

புலம்பெயர்ந்த பெண்கள் எழுதிய இதை விட நல்ல கவிதைகளும் உண்டு. அவைகளையும் கொண்டு வந்து போடுங்கள்.

நான் சில விதிவிலக்குகளை பற்றி பேசவில்லையே. பொதுவான நிலை எப்படி இருக்கிறது என்றுதானே சொல்கிறேன்.

டீசே தமிழனுக்கும் நான் என்னுடைய பதிலை சொல்லி விட்டேன்.

அந்தப் பதில்களின் சராம்சம் நான் மேலே எழுதிய கருத்துக்களில் இருக்கிறது.

ஆனால் பெண்கவிஞர்கள் ஒரு வட்டத்தை விட்டு வெளியே வருகிறார்கள் இல்லையே என்பதே என்னுடைய ஆதங்கம். நான் சொன்ன உலக அரசியல், பகுத்தறிவு, வர்க்கப் போராட்டங்கள் போன்றவைகள் வெறும் உதாரணங்கள்தான்.

அப்ப ஏன் இப்படிச் சொன்னீர்கள். பெண் கவிஞர்கள் என்று பொதுப்படையாகச் சொல்வது தவறானது தானே.

அப்படிப் பார்க்கையில் பல ஆண் கவிஞர்களும் தான் வட்டத்தை விட்டு வெளியில் வராமல் இருக்கின்றனர். ஓரிருவர்தான் பல தளங்களிலும் கவிதைக்குரிய சிந்தனைகளைப் புகுத்துகின்றனர். 6 கோடி தமிழர்கள் உள்ள இடத்தில் ஒரு வாலி ஒரு வைரமுத்து ஒரு பா விஜய் கைவிரல் விட்டு எண்ணிடலாம். அவர்கள் கூட ஒரு வட்டத்துக்குள் தான் விட்டமடித்த படி உள்ளனர்.

புகலிடப் பெண்களிலும் இப்படி பகுத்தறிவுக் கவிதைகள் எழுதுபவர்கள் உள்ளனர் என்பது வெளிப்படை. ஆண்களிலும் வெகு சிலர்தான் இப்படி எழுதுகின்றனர். இந்த இடத்தில் டி ஜே தமிழனின் கருத்தோடு நாம் கூட உடன்படுகின்றோம். இதில் ஆண் பெண் என்று பிரிப்பதில் எமக்கும் உடன்பாடில்லை. பொதுவாகவே புகலிடத் தமிழ் கவிஞர்கள் என்று குறிப்பிடுதல் மிகப் பொருத்தமாக இருக்கும். காரணம் இரு பாலினரிலும் சிலர் பரந்த நோக்கோடு எழுதுகின்றனர்.

பெண்கள் அவர்களின் எண்ண ஓட்டத்தில் செல்ல வேண்டுமே தவிர ஆண்களின் எதிர்பார்ப்புக்கு எழுதுவது என்பதாக இருக்கக் கூடாது. இதுதான் ஆண்கள் தங்கள் சிந்தனையை திணிக்கும் செயல். பெண்கள் சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்குவதை அவர்கள் உணர்வதை கவிதையில் சொல்ல அவர்களா சிந்திக்க இடமளிக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய வடிவில் சொல்ல வேண்டும்.

டிஜே தமிழனுடன் ஓரிடத்தில் முரண்படுகின்றோம். சோகத்தை சோகமான வேளையில் உணர்வுக் கவிதைகளால் பகர்வதால் அது ஆபாசமாகி விடாது. சரி அப்படித்தான் ஆகிறது என்றாலும் அதில் பெண்களை மட்டும் பங்காளிகளாக்கி விட முடியாது.

ஆனால் சோகத்தின் போது முற்போக்கென்று சோகத்தை வெளிப்படுத்தாமல் வைத்திருக்க வேண்டும் என்பது எம்மைப் பொறுத்தவரை சரியாகத்தென்படவில்லை.

சோகங்களை தங்கள் சுய விளம்பரமாக்க நினைப்பவர்களை அவர்கள் எதிர்கருத்தாளர்கள் வடிவில் இருக்கலாம் அல்லது இப்படியான அடுத்தவர் விமர்சனக்காரர்களாக இருக்கலாம் எவரென்றாலும் அதை மலினப்படுத்துவதை நாம் கண்டிக்கின்றோம். சோக உணர்வுகளை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்வதற்கு கவிதை ஒரு ஊடகமாகி உள்ளதே ஈழத்துச் சோக நிகழ்வுகளின் பாதிப்புக்கள் கவிதைகளாய் சொரிகின்றன என்பது எமது நோக்கு. அதற்குள் சுய விளம்பரக்காரர்கள் கூட இருக்கலாம் அது வாசகர்கள் தீர்மானிக்க வேண்டிய விடயம். கவிஞர்களல்ல.

Link to comment
Share on other sites

சென்ற நூற்றாண்டில் நீங்கள் பாரதியை உதாரணம் சொல்கின்ற பொழுது, உங்களினால் ஒரு பெண் கவிஞரை உதாரணம் சொல்லமுடியாது இருக்கிறது அல்லவா ?

அதைத்தான் நான் சொல்கிறேன்.

ஆத்திசூடி, கொண்றைவேந்தன் போண்ற இன்னும் பல நற்கவிகள் தந்த ஒளவை பெண்தான், இறைவனைப்பாடி மகிழ்ந்த காரைக்கால் அம்மையும் பெண்தான்.... தமிழகத்தின் பெண் கவிஞர் தாமரையை தெரியாம இருக்காது....

இப்படி நீங்கள் ஏற்கனவே சொன்னது போல விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை... அதுக்கு பல காரணங்களை சொல்லலாம்... பொதுவாழ்க்கைக்கு பெண்கள் பொதுவாக வரவிரும்புகிறவர்கள் இல்லை... அப்படி வந்தாலும் வெகுசிலரை மட்டும் எண்ணிக்காட்டலாம்... அப்படி வந்தாலும் மேலோட்டமான போக்கு கொண்டவர்கள் அதிகம் எண்று நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ள படவேண்டியது...

ஆனாலும் பெண்கள் அப்படியான தீவிரகவித்துவம் கொண்டு எழுத்துலகுக்கு வராமல் அலங்காரப்பதுமைகளாய் விளம்பரங்களிலும், சினிமாக்களில்லும், முகம்காட்டுவதை விரும்புகிறார்கள்... மற்றய சிலர் வெளியுலகுக்கு தங்களை வெளிக்காட்டாமல் இருக்கவே விரும்புகிறார்கள்.. அதுக்கு என்ன காரணம் எண்று ரசிகையை கூப்பிட்டு ஒரு பட்டிமண்றம் வைத்தால் அருமையாக இருக்கும்...

Link to comment
Share on other sites

எல்லா இடத்திலும் "பெரும்பாலான" என்று சொல் தேவையில்லை என்று நினைத்தேன்.

தமிழ் பெண்கள் நீளமான தலை முடி கொண்டிருப்பார்கள் என்று எழுதுகின்ற பொழுது, அது எல்லோரையும் குறிக்கவில்லை, பெரும்பாலானவர்களைத்தான் குறிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம் அல்லவா?

நான் பல மாதமாகவே கவிஞர்களில் இருபாலரையும் கவனித்து வருகிறேன். நான் கவனித்ததில்

புலம்பெயர் நாடுகளில் (குறிப்பாக ஐரோப்பாவில்)

- ஆண்களை விட பெண்கள் அதிகமாக கவிதை எழுதுகிறார்கள்

- பெண்கள் எழுதுகின்ற கவிதைகள் அநேகமாக ஒரே மாதிரியாக இருக்கின்றன.

- சாவு நடந்து பிணங்களை எண்ணி முடிப்பதற்குள் கவிதையோடு வந்து நிற்கிறார்கள்.

- சோகம், காதல், மாவீரர் போன்ற விடயங்களையே அதிகமாக கவிதைகளின் கருப்பொருளாக இருக்கின்றன

இப்படி பல விடயங்களை கவனிக்கிறேன்.

நீங்கள் இதுவரை இவைகளில் கவனம் செலுத்தி இருக்க மாட்டீர்கள். ஆனால் இனிமேல் கவனித்துப் பாருங்கள். நான் சொல்வதில் உண்மை இருப்பது புரியும்.

நான் சொன்ன கருத்தை இதில் கருத்து எழுதிய பெண்கள் ஓரளவு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்கள் இது பற்றி ஆராய்ந்து பார்க்கததால், மறுப்பு எழுதுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இடத்திலும் "பெரும்பாலான" என்று சொல் தேவையில்லை என்று நினைத்தேன்.

தமிழ் பெண்கள் நீளமான தலை முடி கொண்டிருப்பார்கள் என்று எழுதுகின்ற பொழுது, அது எல்லோரையும் குறிக்கவில்லை, பெரும்பாலானவர்களைத்தான் குறிக்கிறது என்று புரிந்து கொள்கிறோம் அல்லவா?

நான் பல மாதமாகவே கவிஞர்களில் இருபாலரையும் கவனித்து வருகிறேன். நான் கவனித்ததில்

புலம்பெயர் நாடுகளில் (குறிப்பாக ஐரோப்பாவில்)

- ஆண்களை விட பெண்கள் அதிகமாக கவிதை எழுதுகிறார்கள்

- பெண்கள் எழுதுகின்ற கவிதைகள் அநேகமாக ஒரே மாதிரியாக இருக்கின்றன.

- சாவு நடந்து பிணங்களை எண்ணி முடிப்பதற்குள் கவிதையோடு வந்து நிற்கிறார்கள்.

- சோகம், காதல், மாவீரர் போன்ற விடயங்களையே அதிகமாக கவிதைகளின் கருப்பொருளாக இருக்கின்றன

இப்படி பல விடயங்களை கவனிக்கிறேன்.

நீங்கள் இதுவரை இவைகளில் கவனம் செலுத்தி இருக்க மாட்டீர்கள். ஆனால் இனிமேல் கவனித்துப் பாருங்கள். நான் சொல்வதில் உண்மை இருப்பது புரியும்.

நான் சொன்ன கருத்தை இதில் கருத்து எழுதிய பெண்கள் ஓரளவு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்கள் இது பற்றி ஆராய்ந்து பார்க்கததால், மறுப்பு எழுதுகிறார்கள்.

ஆண்கள் நுணுக்கமாகப் பார்ப்பதால் உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண்கள் கவிதை மொழிநடையை அதிகம் விரும்புவர்களாகக் கூட மாறி இருக்கலாம். அந்த வகையில அவர்கள் அதை அதிகம் பாவிக்கக் கூடும். சாவு நடந்து பிணங்கள் எண்ணி முடிந்த பின் பத்திரிகைகளில் வரும் கண்ணோட்டங்களை விடவுமா பெண்கள் அதிகம் எழுதி விடுகின்றனர். அவர்கள் சாவு விழுந்ததும் எழும் உணர்வுகளை சொல்லக் கவிதைகளைப் பாவிக்கின்றனர். அதில் ஆண்கள் குறைச்சலாக இல்லையே. இங்கு வன்னி மைந்தனைப் பாருங்கள். அவரை விடவா யாழ் களப் பெண்கள்..??!

சோகம் காதல் மாவீரர் அதிகம் பேரின் வாழ்வோடு கலந்துவிட்டதால் அது அதிகம் வெளிப்படுகிறது. ஏன் நீங்கள் கூட ஆரியம் பார்ப்பர்ணியம் என்ற வட்டத்துக்குள் நின்றுதான் புதுமை பேசுகிறீர்களே தவிர நவீன ஆர்கியோலஜிக்குள் உங்கள் சிந்தனியைப் பரப்ப முடியாமல் இருக்கிறீர்கள். அது போன்று சில பெண்களும் தங்களின் அந்த சிந்தனை வட்டத்துக்குள் இருக்கலாம். அவர்களுக்கு சமனாக ஆண்களும் இருக்கின்றனர்.

உதாரணத்துக்கு நீங்கள் ஒளவையார் ஆண்டாளைக் கொண்டு வந்த போது அவர்களும் ஓரிருவர் தானே அந்தந்த சமூகத்தில். ஆனால் இப்போது அதையும் விட அதிக எண்ணிக்கையில் பெண்கள் பகுத்தறிவு வர்க்க பேதம் குறித்தெல்லாம் கவிதை வரைகின்றனர். உங்கள் ஆய்வை மாதக்கணக்கில் செய்யாமல் வருடக்கணக்கில் செய்யுங்கள் அதிகம் திருத்தமாக இருக்கும். குறுகிய வட்டத்துக்குள் நின்று செய்யாமல் பரந்தளவு தகவல்களைப் பெற்றுச் செய்யுங்கள் அதிக திருத்தம் இருப்பதோடு ஆண்களை நோக்கியும் சில அறிவுரைகளை சொல்ல நேரிடும்.

விமர்சனமாக இதைப் பார்ப்பினும் வெறும் எதிர்விமர்சனமாக மட்டும் இருந்ததால் தான் சில உதாரணங்களோடு பெண் கவிஞர்களை குறுகிய வட்டத்துக்குள் அடக்கிய உங்களிப் பார்வைக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. பெண்களின் பார்வையிலும் அகன்ற வட்டம் உண்டு. அது ஓரிருவரல்ல ஒரு சில பத்துக்களில் என்றாலும் உண்டு என்பதை நம்பலாம். அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது என்பதும் எமது நிலைப்பாடு. எனி வருங்காலங்களில் அது ஓரிரு ஆயிரம் ஆவதில் எமக்கும் மகிச்சிதான். அது பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் அமைய வேண்டும்.

Link to comment
Share on other sites

உங்களின் புண்ணியத்தில் நான் "தீபாவளி" பற்றிய விவாதத்தில் நீண்ட நாட்கள் இழுபட வேண்டி இருந்தது. அதை வைத்துக் கொண்டு "ஆரியம், பார்ப்பனியத்திற்குள்தான் என்னுடைய சிந்தனைகள் அடங்குகின்றன என்று சொல்லாதீர்கள்.

"இராணுவத்தினருடன் பாலியல் தொடர்பு", "ஓரினச்சேர்க்கை" போன்ற விவாதங்களில் நான் ஆரியம், பார்ப்பனியம் என்று பேசவில்லையே.

இதிலும் நான் "பார்ப்பனியம் பெண் கவிஞர்களை மழுங்கடித்துவிட்டது" என்று சொல்லவில்லை.

மனதி அவலத்தின் பொழுது, உடனடியாகவே கவிதை எழுதுவது எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லாத செயல்.

இதை வல்வைசகறா அழகாக விளக்கி இருந்தார்.

சாவு வீட்டில் சாவு கொடுத்தவர்கள் அழுது கொண்டு இருப்பார்கள். சுற்றத்தவர்கள்தான் ஒப்பாரி படிப்பார்கள். நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஒப்பாரி செய்வது இல்லை என்று சொல்லி இருந்தார்.

"நான் சோகத்தை கவிதை ஆக்குகிறேன்" என்பது எல்லாம் வெறும் புருடா.

ஆயிரம் பேர் செத்துக் கிடக்கின்ற பொழுது, ஐயோ என்று அழுகை வருமா

இல்லை கவிதை வருமா?

எனக்கு வராது. அந்த சாவு நேரடியாக தாக்காத ஒருவருக்குத்தான் அது வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் புண்ணியத்தில் நான் "தீபாவளி" பற்றிய விவாதத்தில் நீண்ட நாட்கள் இழுபட வேண்டி இருந்தது. அதை வைத்துக் கொண்டு "ஆரியம், பார்ப்பனியத்திற்குள்தான் என்னுடைய சிந்தனைகள் அடங்குகின்றன என்று சொல்லாதீர்கள்.

"இராணுவத்தினருடன் பாலியல் தொடர்பு", "ஓரினச்சேர்க்கை" போன்ற விவாதங்களில் நான் ஆரியம், பார்ப்பனியம் என்று பேசவில்லையே.

இதிலும் நான் "பார்ப்பனியம் பெண் கவிஞர்களை மழுங்கடித்துவிட்டது" என்று சொல்லவில்லை.

அங்கெல்லாம் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தவிர்த்துக் கொண்டீர்கள். சிலர் கடவுள்கள் பற்றி பேச முனைந்த போது அதைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் பேசி இருப்பீர்கள். அதனால் அவை தவிர்க்கப்பட்டுக் கொண்டன.

மனதி அவலத்தின் பொழுது, உடனடியாகவே கவிதை எழுதுவது எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லாத செயல்.

இதை வல்வைசகறா அழகாக விளக்கி இருந்தார்.

சாவு வீட்டில் சாவு கொடுத்தவர்கள் அழுது கொண்டு இருப்பார்கள். சுற்றத்தவர்கள்தான் ஒப்பாரி படிப்பார்கள். நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஒப்பாரி செய்வது இல்லை என்று சொல்லி இருந்தார்

"நான் சோகத்தை கவிதை ஆக்குகிறேன்" என்பது எல்லாம் வெறும் புருடா".

ஆயிரம் பேர் செத்துக் கிடக்கின்ற பொழுது, ஐயோ என்று அழுகை வருமா

இல்லை கவிதை வருமா?

எனக்கு வராது. அந்த சாவு நேரடியாக தாக்காத ஒருவருக்குத்தான் அது வரும்.

அது உங்களின் மனநிலை. அப்படித்தான் எல்லோரும் என்றில்லை. எமக்கெல்லாம் எங்களை அறியாமலே பழைய நினைவுகளை மீட்டிச் செல்லும். காரணம் போர்ச் சூழலின் சோக வடுக்களைத் தரிசித்தவர்கள் என்ற வகையில். அப்படிப் பலர் இருக்கலாம். உங்களுக்கும் சகாராவுக்கும் தோன்றவில்லை என்பதற்காக அப்படித்தான் மற்றவர்களும் என்று கூறிவிட முடியாது, அதேபோல் எல்லோரும் மனதில் எழும் சோகத்தின் பாதிப்பைத்தான் தருகின்றனர் என்றும் இல்லை. குறிப்பிடத்தக்கவர்கள் மனதோடு வருந்தித்தான் கவிதை தருகின்றனர். அதை கவிதைகளை வாசிக்கும் போதே உணர்ந்து கொள்ளலாம். முன்னரெல்லாம் காசி ஆனந்தன் ஈழத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் கவிதை ஆக்குவார். புதுவை கூட அப்படி செய்திருக்கிறார். பலர் புரட்சிக் கவிதைகள் எழுதியுள்ளனர். அவர்கள் மனதில் புரட்சிகர சிந்தனை எழாமலே வரிகளை மட்டும் தான் கொட்டியுள்ளனர் எனும் உங்களின் வாதமே புருடா. நீங்கள் அனேக விடயங்களில் உங்களை மையப்படுத்தி மற்றவர்களை தாழ்த்தி எடை போடுகின்றீர்கள்.

தீபாவளியிலும் ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதத்திலும் நீங்கள் கேட்ட கேள்விகளும் வைக்கப்பட்ட பதிலுக்கு நீங்கள் அளித்த பதிலும் நீங்கள் அடுத்தவரை உங்களை விட மட்டமாகக் கருதியே கருத்துக்களை முன்வைக்கிறீர்கள் என்று காட்டியது. அது தவறு. ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு ஆற்றல் தனித்துவமானதாக இருக்கும். அந்த வகையில் ஒவ்வொருவரைவிடவும் மற்றவர் ஏதோ ஒரு வகையில் சிறப்பிப்பவராக இருப்பார். சந்தர்ப்பம் சூழலுக்கு ஏற்ப கண்ணோட்டங்கள் மாறுபடினும் பகுத்தறிவு என்பது புகட்டிப் பெறப்படுபவை அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். பகுத்தறிவு என்பது ஆளாளுக்கு வேறுபடினும் அனுபவம் சொல்லும் விளைவுகளில் இருந்து புடமிடப்படுகிறது. உங்களுக்கு எப்படி பகுத்தறியும் ஆற்றல் உள்ளதாக நீங்களா கருத முடிந்ததோ அப்படி மற்றவர்களுக்கும் எழும் என்பதை உணர்ந்து உபதேசங்களாக கருத்துக்களை வைப்பதைத் தவிர்த்து உங்கள் விமர்சனங்களாக பொதுமைப்பாடு நோக்கி வைத்துக் கொள்ள விளையுங்கள்.அது அனைவரையும் சிந்திக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டுமே தவிர பகுத்தறிவைப் புகட்டுவதாக தோற்றம் காட்டப்படக் கூடாது. பகுத்தறிவை யாரும் புகட்ட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய உபதேசத்தை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

அது உபதேசமல்ல கோரிக்கை மட்டுமே. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியின் பின்னர் சுனாமி என்ற கவிதைத் தொகுப்பை வைரமுத்து வெளியிட்டார். அந்தத் துன்பத்தை சோகத்தை காலப்பதிவாக்கும் நோக்கோடு.

போர்க்களத்தில் வீழ்ந்த போராளிகளை மையப்படுத்திப் பல பாடல்கள் வந்துள்ளன. சுனாமி அழிவுகளை சொல்லும் பாடல்கள் வந்துள்ளன. அவை காலத்தின் பதிவுகளாகவே பார்க்கப்படுகின்றன. இன்னும் 100 வருடத்தின் பின் சுனாமியைக் கண்டவர்கள் இருக்கப்போவதில்லை. ஆனால் இப்பதிவுகள் வாழும் அன்றும். எனவே படைப்பாளிகள் சில அடிமட்டத்தனமான கருத்துக்களால் அநாவசிய மன உளைச்சல்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்..!

இதோ பா.விஜய் ஈழத்துச் சோகத்தைக் கண்டு வடித்துள்ள வரிகள்...

புத்தனின் போதிமரத்தில் - தொங்கும் உடல்கள்!

ஈழத்திருநாட்டின் இதயத்தில் செஞ்சோலை மீதான தாக்குதல் தொடர்பாக தமிழ் நாட்டு கவிஞன் ஒருவன் தன் பேனாவால் வரைந்த கண்னீர் கவியிது!

இந்தியா வித்தியாசமான நாடு!

உள்நாட்டுத் தொழிலாளர்களைப்

பிச்சைக் காரர்களாக்கும்!

வெளிநாட்டு முதலாளிகளைப்

பணக்காரர்கள் ஆக்கும்!

அமெரிக்கா விவரமான நாடு!

வெளிநாட்டு தொழிலாளர்களை

பிச்சைக் காரர்களாக்குகிறது!

உள்நாட்டு முதலாளிகளைப்

பணக்காரர்கள் ஆக்கும்!

இலங்கை விபரீதமான நாடு!

சவப்பெட்டிகளை தயாரித்து

சமாதானம் பேசும்!

சமாதானம் பேசிக் கொண்டே

ஏவுகணை வீசும்!

புத்தனின் போதிமரத்தில் - இன்று

செஞ்சோலை சிறுமிகளின்

உடல்கள் தொங்குகின்றன

செஞ்சோலை வளாகத்தின் மேல்

குண்டு வீசிப் பறந்தது

விமானம் அல்ல

சிங்கள ராணுவத்தின்

மானம்!

ஒரு ராணுவம்

எதிரி ராணுவத்தை தாக்கும்!

என்றும் வேவு பார்க்கும்.

ஆனால் அறுபது சிறுமிகளை

அடையாளம் பார்த்துக் கொன்றது ஏன்?

இலங்கை ராணுவம் தெரிந்து வைத்திருக்கிறது

ஈழத்துச் சிறுமிகளுக்கு

பூக்கோலமும் போடத் தெரியும்

போர்க்கோலமும் பூணத் தெரியும்

அவர்களுக்குப்

பல்லாங்குழியும் ஆடத் தெரியும்

பகைவர் தலைகளுக்கு

பிணக்குழியும் தோண்டத் தெரியும்

அவர்களுக்கு

தலைவாரிப் பூச்சூடவும் தெரியும்

எதிரிகளின்

தலைசீவி பந்தாடவும் தெரியும்

படுகளத்தில் ஒப்பாரி ஏன்

சிலபேர் சிலிர்க்கலாம்

இது ஒப்பாரி அல்ல

இழந்த வீராங்கனைகளுக்கொரு

வீரத்தாலாட்டு!

(நெடுக்காலபோவனின் நெஞ்சைத் தொட்டவரிகள்)

நம்தமிழ் இளைஞர்கள்

வீறு கொண்டவர்கள்

செஞ்சோலையில் விழுந்த ஏவுகனை

நமீதா வீட்டில் விழுந்திருந்தால்

இந்துமகா சமுத்திரத்தை

இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்

இருபது மைல் இடைவெளியில்

இங்குள்ள தமிழருக்கும்

ஈழத் தமிழருக்கும்

எத்துனை வித்தியாசம்?

நாம்

குண்டுதுளைக்காத கூண்டில்

தயங்கியபடி நிற்கிறோம்

தேசக் கொடியேற்ற

அவர்கள்

குண்டு துளைப்பதற்காகவே

தயாராக நிற்கிறார்கள்

தமிழ்தேச கொடியேற்ற

நம் குழந்தைகள் கையில்

விளையாடுவதற்காக

பொம்மை துப்பாக்கிகள்

அவர்கள் குழந்தைகள் கையில்

விடுதலை ஆவதற்காக

உண்மை துப்பாக்கிகள்

நமக்கு

குளிர்பானத்தில் விஷமிருக்கிறது

அவர்களுக்கு

விஷம்தான் குளிர்பானமாக இருக்கிறது!

புறநானூற்றை

நாம் வாசிக்கிறோம்

அவர்கள்தான்

எழுதுகிறார்கள்

கலிங்கத்து பரணியை

நாம் படிக்கிறோம்

அவர்கள்தான்

நடத்துகிறார்கள்!

இருபது மைல் இடைவெளியில்

இங்குள்ள தமிழருக்கும்

ஈழத் தமிழருக்கும்

எத்துனை வித்தியாசம்?

தமிழனை

உணர்ச்சிவசப்படுத்துவது வேறு!

தமிழனுக்கு

உணர்ச்சி இருக்கிறது என்று

உணர்த்துவது வேறு!

இரண்டாவது பணியை

இந்த உண்ணாவிரதம் செய்கிறது!

உணர்ச்சி வரும் - ஒரு நாள்

புரட்சி வரும்

(பேரா. சுப. வீரபாண்டியன் தமிழர் பேரவை சார்பில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில் பாடிய கவிதை -தட்டச்சு: நிலாரசிகன்)

http://vannithendral.net/index.php?option=...07&Itemid=1

இனமானமுள்ள இனப்பற்றுள்ள மனிதாபிமானமுள்ள மனிதர்களிடம் நிச்சயம் தமிழனின் அழிவில் சோகம் எழும். சிலருக்கு அது விளம்பரமாக ஆபாசமாகத் தெரியலாம். பலருக்கு தங்கள் சோகங்களில் இன்னும் பலரும் பங்கெடுக்கின்றனே என்ற ஆறுதல்...அதுவே உத்வேகமும் ஆகிறது.

Link to comment
Share on other sites

மிக அழகான கவிதை. உண்மையிலேயே கவிதை. கவிதை எழுதத் தெரிந்தவர் எழுதியிருக்கின்ற கவிதை.

இவருக்கு கவிதை சுரந்திருக்கின்றது.

இவரின் மொழி கவிதையாக இருக்கிறது. அவர் பேசுவது கூட கவிதையாகத்தான் இருக்க வேண்டும்.

அவரின் சோகக் கதறலும் கோபக் கேள்விகளும் எங்களின் காதுகளில் கவிதையாக வந்து விழுகிறது.

கவிஞன் பா.விஜய் சிறந்த கவிஞருக்கான தேசிய விருது பெற்றது வெறும் சிபார்சில் அல்ல என்று புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவான் உங்கள் வாதத்திறமையால் ஒரு கருத்தாடலை திசை மாற்றுவது என்பது நான் அறியாத விடயம் அல்ல...

உணர்ச்சிக் கவிஞர் கா.சி ஆனந்தன் அவர்களையும், உலைக்களக்கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களையும் மனம் வருந்திக்கவி பாடியுள்ளார்கள் என்று நீங்கள் சுட்டிக்காட்டும் வேளையில் அவர்கள் அந்த வருத்தப்பாடலின் ஊடாக எழுச்சியை விதைத்தார்கள். வேதனைப்பாடலுடன் ஓய்ந்து விடவில்லை என்பதை நீங்கள் அறியவில்லையா?

நான் நினைக்கிறேன் சபேசன் எடுத்த விடயம்....

இந்த வேதனைப்பாடல்களை எழுதிச் சொல்லிவிட்டு அத்தோடு முடிந்தது என்று விலகும் நிலைப்பாடு மாறாதா? என்ற எதிர்பார்ப்பில் எழுந்த கேள்வியாக இருக்கலாம் அல்லவா..

தாயகத்தை நோக்கிய எம் பார்வைகள் அழுகையோடு ஓய்ந்தால் போதும் என்கிறீர்களா? ஆதரவு தோள் என்பது தேவையில்லாத ஒன்றா?

Link to comment
Share on other sites

அதைத்தன் நானும் சொல்கிறேன்.

அவர்கள் கவிஞர்கள். அவர்கள் பேசுவதும் கவிதையாக இருக்கும். சாவு வீடுகளில் ஒப்பாரி வைப்பதோடு அவர்கள் கவிதை நின்று விடுவதில்லை.

அவர்களின் சோகத்தில் கோபம் இருக்கும். நெருப்பு இருக்கும். அத்தோடு அவர்கள் வெற்றியையும் பாடுவார்கள்.

இது வரை எங்களின் வெற்றிகளை கவி பாடிய ஒரு புலம்பெயர்ந்த கவிஞை என் கவனத்திற்கு வரவில்லை. வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

மீண்டும் விடயத்திற்கு வருகிறேன்.

குறிப்பிட்ட கவிஞர்களிடம் இருந்து கவிதை சுரப்பதால், அவைகள் சோகத்திலும் எங்களுக்கு எழுச்சியை ஊட்டுகிறது.

அவர்களின் பேச்சே கவிதையாக இருப்பதால், அவர்கள் அழுவதும் கவிதையாக வருகிறது. காரணம் அவர்கள் கவிஞர்கள்.

ஆனால் இங்கு சாவுக்கு மட்டும் கவிதை படித்து விட்டு தங்களை கவிஞர்கள் என்று சொல்லுகின்ற பொழுதுதான் எனக்கு கோபம் வருகிறது.

கவிதைகள் எழுச்சி ஊட்டுவதாக இருக்க வேண்டும்.

இங்கு வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் வருகின்ற கவிதைகள் எரிச்சல் ஊட்டுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தன் நானும் சொல்கிறேன்.

நீங்கள் எதைச் சொன்னீர்கள்..??! சொன்னதெல்லாம் பெண்கள் பகுத்தறிவு உலகறிவு வர்க்கபேதமென்று கவிதை எழுதினதே கிடையாது. அது ஆண்டாளோடு போயிட்டுது. இப்ப வெறும் சோகக்கவிதைகள் காதல்கவிதைகள் மாவீரர்கவிதைகள் தான் எழுதினம். சுத்த வேஸ்டு என்று.

சோகத்திலா கவிதை எழுதுகிறார்கள் அது வெறும் புருடா என்றீர்கள்.

இப்போ வல்வை சகாறாவை கண்டதும் அதுதான் சொன்னேன் எங்கிறீர்கள்.

நீங்கள் சொன்னீர்களா சோகத்தை உணர்த்தும் கவிதைக்குள்ளேயே வீரத்தையும் உணர்த்துங்கள் புரட்சிகர சிந்தனைகளையும் உணர்த்துங்கள் வெற்றிகளையும் பாடுங்கள் என்று.

இல்லையே அப்புறம் என்ன அதைத்தான் நானும் சொன்னன்...??! என்று பக்கப்பாட்டு..!

அவர்கள் கவிஞர்கள். அவர்கள் பேசுவதும் கவிதையாக இருக்கும். சாவு வீடுகளில் ஒப்பாரி வைப்பதோடு அவர்கள் கவிதை நின்று விடுவதில்லை.

அவர்களும் இப்படி ஆரம்பத்தில் இருந்துதான் கவிஞர்கள் ஆனார்கள். வளர்ந்து வரும் கவிஞர்களுக்கு அடைமொழி கொடுத்துப் பொன்னாடை போர்த்துவதல்ல கடமை. அல்லது இரண்டு வரி பேச மறுக்கப்படும் விடயங்களைப் பேசிவிட்டால் அதுவல்ல முற்போக்குக் கவிதை.

கவிதை வாசகன் உணர்வோடு கலக்க வேண்டும். அதுதான் கவிஞருக்கு அவசியம். கவிஞராக அமைய. அது எடுத்த எடுப்பில் அமையாது. பல தடைகள் படிகள் தாண்டி விமர்சனங்களைத் தாண்டி மெருகேற்றப்பட்டு வரவேண்டும். அதை விடுத்து சோர்ந்து போக சொற்களால் அடித்து அடக்க முனையக் கூடாது.

அவர்களின் சோகத்தில் கோபம் இருக்கும். நெருப்பு இருக்கும். அத்தோடு அவர்கள் வெற்றியையும் பாடுவார்கள்.

இது வரை எங்களின் வெற்றிகளை கவி பாடிய ஒரு புலம்பெயர்ந்த கவிஞை என் கவனத்திற்கு வரவில்லை. வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

மீண்டும் விடயத்திற்கு வருகிறேன்.

குறிப்பிட்ட கவிஞர்களிடம் இருந்து கவிதை சுரப்பதால், அவைகள் சோகத்திலும் எங்களுக்கு எழுச்சியை ஊட்டுகிறது.

அவர்களின் பேச்சே கவிதையாக இருப்பதால், அவர்கள் அழுவதும் கவிதையாக வருகிறது. காரணம் அவர்கள் கவிஞர்கள்.

ஆனால் இங்கு சாவுக்கு மட்டும் கவிதை படித்து விட்டு தங்களை கவிஞர்கள் என்று சொல்லுகின்ற பொழுதுதான் எனக்கு கோபம் வருகிறது.

கவிதைகள் எழுச்சி ஊட்டுவதாக இருக்க வேண்டும்.

கவிதைகள் எல்லாம் எழுச்சி ஊட்டுவனவாக இருக்க வேண்டும் என்றில்லை. உணர்வோடு கலப்பனவாக கவிதைகள் இருக்க வேண்டும். அது சோகமாக இருக்கட்டும் காதலாக இருக்கட்டும் வீரமாக இருக்கட்டும் ஏன் நீங்கள் விரும்புகிற வர்க்க பேதத்தை உணர்த்துவதாக இருக்கட்டும் எதுவானாலும் வாசகனில் ஒரு உணர்வை கவிதை தூண்ட வேண்டும். அதில் வாசகனுக்கு கவிதையை விருப்போடு படிக்கும் மனநிலை அவசியம். இது புகலிடத்தார் கவிதை என்று வெறுப்போடு படிக்கும் நிலையில் எரிச்சலும் கோபமுமே மிஞ்சும். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் அது நல்லதாக இருக்கட்டும் மோசமாக இருக்கட்டும் உணர்வைத் தேட வேண்டும். நல்ல விமர்சனங்களைச் செய்ய வேண்டும். அப்போதுதான் கவிஞன் மெருகேற்றிக் கொள்வான். இது என்னடா என்றால் குறுகிய வட்டம்...இவைக்கு இதுதான் தெரியும். ஒரே வசனம் தான் எழுதினம். வசனம் போல இருக்குது. இவை பொறாமையின் வெளிப்பாடுகளா அல்லது விமர்சனங்களா என்று வேறுபிரித்தறிய முடியாதபடி அமைந்து விடுவது கவிஞன் உங்கள் கருத்துக்களை தட்டிக்கழிக்கவே வழி செய்யும்.

இங்கு வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் வருகின்ற கவிதைகள் எரிச்சல் ஊட்டுகின்றன.

Link to comment
Share on other sites

சோகத்தை மட்டும் பாடாதீர்கள் என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன?

மற்றவைகளையும் பாடுங்கள் என்றுதானே அர்த்தம்.

அது உங்களுககு; புரியாமல் போகலாம்

ஆனால் கவிஞர்களுக்கு நான் சொல்வது புரியும் என்று நம்புகிறேன்.

நான் ஒவ்வொன்றாக என்ன எதிர்பாக்கிறேன் என்று எழுதிக் கொண்டிருந்தால் கட்டுரையாக இருக்காது. ஒரு புத்தகமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அவர்களே

உங்களுக்கு எரிச்சலையும் இத்தனையளவு அறிவு தரும் கருத்தையும் தரக்காரணம் புலம் பெயர் பெண்கவிஞர்களா ? அல்லது வானொலி தொலைக்காட்சிகளில் வரும் கவிஞர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோகத்தை மட்டும் பாடாதீர்கள் என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன?

மற்றவைகளையும் பாடுங்கள் என்றுதானே அர்த்தம்.

அது உங்களுககு; புரியாமல் போகலாம்

ஆனால் கவிஞர்களுக்கு நான் சொல்வது புரியும் என்று நம்புகிறேன்.

நான் ஒவ்வொன்றாக என்ன எதிர்பாக்கிறேன் என்று எழுதிக் கொண்டிருந்தால் கட்டுரையாக இருக்காது. ஒரு புத்தகமாக இருக்கும்.

சோகமாகப் பாடாதீர்கள்..உலக அரசியல் பாடுங்கள்...மாவீரர்களைப் பாடாதீர்கள்.. வர்க்க பேதங்களைப் பாடுங்கள்..காதலைப் பாடாதீர்கள் .. பெரியார் போன்ற சுயதம்பட்டங்களின் பகுத்தறிவு பாடுகள்..! ஆக கவிஞர்கள் பகுத்தறிவில்லாமல் தான் பாடிக்கொண்டிருக்கின்றனர். நீங்கள் அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கின்றீர்கள்.

நல்ல விடயம். பார்ப்போம் புரிந்து கொள்கின்றனரா என்று.

நாங்கள் சொல்கின்றோம்..கவிஞன் தன் உணர்வுகளுக்கு ஏற்ப பாடட்டும் எதையென்றாலும். அவனால் எதை உணர்வு பூர்வமாகச் சொல்ல முடிகிறதோ அதைச் சொல்லட்டும். அதில் எவரும் தலையிட வேண்டாம். அவர்களா தீர்மானிப்பார்கள் காலத்தின் தேவை எவை என்று. வாசகர்கள் கவிதைக்கான விமர்சனங்களை வையுங்கள். அப்போதுதான் உங்கள் ரசனையின் பாங்கறிய முடியும். அதை விடுத்து வெறும் தீபாவளி ஆரியர் கொண்டாட்டம் என்பது போன்ற சுயேட்சைப் பிரகடனங்களை கவிஞர்கள் மீதும் திணித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். அது உங்கள் பகுத்தறிவு எல்லைக்கு அப்பால் பட்டது. அது கவிஞனின் பகுத்தறிவின் பால்பட்டது. அவர்களே அங்கு அனைத்தின் சிருஷ்டிகள். இது ஆண் பெண் கவிஞர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

உங்கள் குற்றச்சாட்டு தவறு என்பது சாந்தியக்காவின் கவிதை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டது என்று நிறுவ நினைக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

அஸ்வினி! என்னுடைய கட்டுரையில் பார்த்தீhகள் என்றால் இப்படி எழுதியிருப்பேன்

"பெரும்பாலான பெண்கவிஞர்கள் பெரும்பாலும் வனொலியிலும், தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதன் மூலமே, தங்கள் கவிதைகளை வெளிக்கொணர்கிறார்கள்".

நேற்று பலர் அறிந்த ஒரு கவிஞையுடன் பேசினேன். அவர் சொன்னார் " உங்களுடைய பார்வை தவறானது, நீங்கள் வானொலிகளில், தொலைக்காட்சிகளில் வருபவர்களை கவிஞர்கள் என்றோ, அவர்களுடையது கவிதைகள் என்றோ கணக்கிடாதீர்கள்". இப்படி அவர் சொன்னார். அவரும் வானொலியில் வருகின்ற "பெரும்பாலானவர்களை" கருதியே அப்படிச் சொன்னார்.

அப்படிப் பார்க்கின்ற பொழுது, நான் கவிஞர்கள் இல்லாதவர்களை எல்லாம், கவிஞர்கள் என்று கருதிவிட்டேன் போல் இருக்கிறது. அப்படி என்றால் தவறு என்னுடையதுதான்.

Link to comment
Share on other sites

:( சபேசன் அவர்களே இந்த விடயத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் நீங்களும் மற்றையவர்கள் சொன்னது போல புலத்து பெண்கவிஞர்கள் அல்லது வானெலிகளில் தொலை காட்சிகளில் அதிகம் வருகின்ற பெண்கவிஞர்கள் என்று கொஞ்சம் பிரித்து பார்க்க வேண்டிய கட்டாயம் இங்குள்ளது. சரி ஒரு இழப்பிற்கு கவிதை படிக்கிறார்கள் அதுவும் உடனேயே சரி ஏதோ அவர்களால் முடிந்தது அதுதான் அதை செய்கிறார்கள். இல்லாட்டி அதுவும் முடியும் அதை செய்கிறார்கள் என்றும் வைத்து கொள்ளலாம்.கவிதை படித்து விட்டால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா?என்றும் கேட்கலாம்.குறைந்தபட்சம் கவிதையாவது படித்தோமே என்றும் சொல்லி கொள்ளலாம்.எடுத்து வாருங்கள் உங்கள் கவிகளை என்று வானொலி அறிவிப்பாளர் சொல்வதான் தானே நாங்கள்: எடுத்து போகிறோம் என்றும் சொல்லலாம். அவர்கள் எழுதுவதால் தானே நாங்களும் சொல்லவேண்டியிருக்கிறது என்று அறிவிப்பாளர்களும் சொல்லலாம். இங்கு யாரிடம் எப்படி குறை காண??? :blink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை படிப்பது எப்போதும் கவர்ச்சிக்குரியதாக இருந்து வந்துள்ளது.

பாடசாலையில் ஒருவன்/ஒருத்தி கவிதை படித்தால் அவர் பெரிய ஆள்.

நிகழ்ச்சியொன்றுக்கு குறைந்தநேரத்தில், அதிக முயற்சியின்றி அவசரமாகத் தயார்ப்படுத்தக்கூடிய நிகழ்ச்சி, பாட்டுப்பாடுவதற்கு அடுத்ததாக கவிதை படிப்பதுதான்.

இந்தத் தன்மைதான் இன்று கவிதையின் பரந்தளவுப் பயன்பாட்டுக்குக் காரணம்.

ஏனைய இலக்கிய வடிவங்களோடு ஒப்பிடுகையில் கவிதை மட்டும் ஏன் எல்லாராலும் முயற்சிக்கப்படுகிறது, எல்லாராலும் எழுத முடிகிறது என்று பார்த்தால் புரியும்.

சகல மனிதர்களும் கவிஞர்களே.

ஒருத்தராவது ஒரு கவிதை தன்னும் எழுதாமலோ முயற்சிக்காமலோ இருப்பதில்லை.

_______________________________

சபேசன்,

நீங்கள் தனியே பெண்களை வாதப்பொருளாக எடுத்துக்கொண்டது தவறென்றே சொல்வேன். சிலவேளை நாங்கள் பெண்களிடமிருந்து அதிகமாக அல்லது வித்தியாசமாக எதிர்பார்க்கிறோமோ என்றும் நினைக்கிறேன்.

சொல்லப்போனால் ஆண்கள்தான் அதிகளவில் "கவிதை" எழுதுகிறார்கள் (புலத்தில் என்று பார்த்தாற்கூட) என்றே நினைக்கிறேன்.

மற்றது, எல்லா நிகழ்வுக்கும் கவிதை வடிப்பது தொடர்பானது.

இன்று பிரபலமானவர்கள்கூட துக்கமோ மகிழ்ச்சியோ ஒரு கவிதை எழுதியே ஆகவேண்டுமென்ற கட்டாயத்துக்குள் உள்ளார்கள். மக்கள் அவர்களின் கவிதையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

செஞ்சோலை அனர்த்தத்தின்பின் 'என்ன இன்னும் புதுவையின்ர கவிதையைக் காணேல?' என்று "ஆவலோடு" காத்திருந்த சிலரைக் கண்டிருக்கிறேன்

_______________________________

சென்ற நூற்றாண்டில் பாரதியைவிட வேறு பெண்கவிஞர்கள் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காரணம் பற்றிக்கேட்டிருந்தீர்கள். (அதற்கு தல கொடுத்த பதிலில் ஒளவையாரையும் காரைக்கால் அம்மையாரையும் சொல்லியிருக்கிறார், அதுவும் சென்ற நூற்றாண்டு என்ற சபேசனின் வசனத்தை மேற்கோள் காட்டிவிட்டு)

பாரதியின் காலத்தில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டனர் என்று பார்ப்பதும் முக்கியமானது. அது ஈழத்திலென்றாலும் தமிழகத்திலென்றாலும் கவிதையெழுதுமளவுக்கு பெண்களை எம் சமுதாயம் வைத்திருக்கவில்லை. மேலும் இந்தவிசயத்தில் ஊடகங்கள் தாம் அதிக செல்வாக்குச் செலுத்தின.

பாரதிதாசன் மறைக்கப்பட்டு பாரதியார் மட்டுமே வெளிப்படுத்தப்பட்ட, வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையைப் பார்த்தாற் புரியும்.

இதை ஈழ, தமிழக இலக்கியங்கள் என்று பார்த்தாற்கூடப் பொருத்தலாம். இன்று எல்லாமே தமிழகத்திலிருந்து தொடங்கி அங்கேயே முடிகின்றன. தவிர்க்கமுடியாமல் கட்டாயம் சொல்லியே ஆகவேண்டிய பெயர்களைக்கூட இயலுமானவை தங்களுக்குரியதாக்கி வெளிப்படுத்துவதும் நடக்கிறது. வெறுங்கையுடன் வந்த ஆறுமுகனை நாங்கள்தான் வளர்த்து நாவலராக்கி அனுப்பினோம் என்பது போன்று, பிரமிளை முழுக்க முழுக்க தமிழகப் படைப்பாளியாக அடையாளக் காட்டுவது என்பன போன்ற பல விசயங்களைச் சொல்லலாம். அப்படித்தான் சென்ற நூற்றாண்டின் இலக்கியத்தில் பெண்கள் பங்கு பற்றியதான புரிதலும் வெளிப்பாடும்.

எண்பதுகள் தொன்னூறுகள் எல்லாமே சென்ற நூற்றாண்டு தானே?

எண்பதுகளிலேயே பெண்கள் காத்திரமான கவிதைகளைத் தந்திருக்கிறார்கள். ஆனால் பாரதிக்கு இணையாக இல்லாவிட்டாலும் பெண்களும் கடந்த நூற்றாண்டைக் கட்டியிழுத்தார்கள் என்ற புரிதல்கூட இன்று பலரிடமில்லை.

________________________________

பெண்களைச் சுதந்திரமாகப் பேச நாம் விட்டதேயில்லை. ஏன் காத்திரமாக, புதுமையாக எழுதுவதில்ல என்று கேள்வி, அப்படி எழுதினால் அதை எதிர்த்து ஒரு கூட்டம் கூச்சல்.

இன்று தமிழகத்தில் பெண்கள் எழுதிய கவிதைகளுக்கு என்ன நடந்தது? ஆளாளுக்கு மேடைபோட்டு தம் ஆணவத்தைக் காட்டிக்கொண்டனர்.

தன் கவிதைத் தொகுப்புப் புத்தகத்தின் முன் அட்டைப்படமாக முழு நிர்வாணப் பெண்ணின் புகைப்படத்தைப் போட்டுக் கவிதை வியாபாரம் செய்த சினிமாக் கவிஞன் ஒருவன் (புத்தகத்தின் உள்ளடக்கம் இன்னும் விசேசம்), பெண்கள் தம் உடலைப்பற்றி எழுதிய கவிதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தன் வக்கிரத்தைக் கொட்டித்தீர்த்தான் இப்படி,

"இப்படி எழுதுபவர்களை நடுரோட்டில் எண்ணெய் ஊற்றி எரிக்க வேண்டும்"

இது நடந்தது மிக அண்மையில். ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் இதேபோல் பெண்ணுடல் பற்றிப் பேசிய கவிதைகள் எண்பதுகளிலேயே ஈழத்தில் பெண்களால் எழுதப்பட்டபோது சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. எந்த ஆண்மகனும் தன் ஆண்மையைக் காட்ட வீறுகொண்டு எழவில்லை. (அதற்காக நாங்கள் ஏதோ புரட்சிகரமான ஆண் வர்க்கத்தைக் கொண்டிருந்தோம் என்ற முடிபுக்கு உடனடியாக வரமுடியாது. ஆனால் இன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் எண்பதுகளென்பது ஓரளவு புரட்சிகரமான, முற்போக்கான இளைய சமுதாயத்தைக் கொண்டிருந்ததென்பதை மறுக்க முடியாது.) அதனால்தானோ என்னவோ தமிழிலக்கியத்தில் ஈழப்பெண்களின் காத்திரமான, ஒப்பீட்டளவில் முன்னோடியான செயற்பாடுகள் மறைக்கப்பட்டுவிட்டனவோ என்னவோ?

இது உங்கள் விடயத்துக்கு அப்பாற்பட்டதால் விட்டுவிடுவோம்.

________________________________

நீங்கள் 'புலத்தில்' என்ற மட்டுப்படுத்தலுடன் இவ்விடத்தைத் தொட்டபடியால் நல்ல பல கவிஞைகளை எடுத்துக்காட்டிப் பேச முடியாது.

ஆனால், புலத்தில் நீங்கள் சொன்ன விசயங்களைத் தொட்டுச் செல்லும் காத்திரமான நல்ல கவிதைகளை எழுதும் ஆண் கவிஞர்களைக் காட்டுங்கள் பார்ப்போம். (சேரன், ஜெயபாலன் போன்றவர்களை விட்டு. காரணம் அவர்கள் உலகளவில் கவிஞர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். எங்கள் வாதம் 'டப்பா'க் கவிஞர்களைப் பற்றியது. சரிதானே?)

அதன்பின் தனியே உங்கள் ஆதங்கம் தொடர்பில் பெண்களைக்குறித்துப் பேச என்ன இருக்கிறதென்று பார்ப்போம்.

___________________________

உங்கள் கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளில், உங்களுக்குக் கவிதை எழுதத் தெரியுமா என்று வந்த கேள்வி எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. இது அரைவேக்காட்டுத்தனமான வாதம். இதை எழுதுவதற்கு கட்டாயம் ஒரு கவிஞர் வரவேண்டுமென்பதில்லை.

திரைப்படமொன்றைப் பற்றிக் கருத்துச்சொல்ல ஓர் இயக்குநர் தான் வேண்டுமென்பதில்லை.

நல்ல சாப்பாட்டைப் பற்றிக் கருத்துச்சொல்ல அவனுக்கு/அவளுக்கு நன்கு சமைக்கத்தெரிய வேண்டுமென்பதில்லை.

___________________________

ஓர் இரகசினாக, வாசகனாக என்னுடைய ஆதங்கம் என்னவென்றால், தயவு செய்து எல்லோரும் கவிதை எழுதுவதை விட்டுவிட வேண்டுமென்பதே.

Link to comment
Share on other sites

ஓர் இரகசினாக, வாசகனாக என்னுடைய ஆதங்கம் என்னவென்றால், தயவு செய்து எல்லோரும் கவிதை எழுதுவதை விட்டுவிட வேண்டுமென்பதே.

இது தான் உள்ளதிலேயே நல்ல யோசனை. கவிதையே இல்லையெறால் விமர்சனமும் இல்லை தானே. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.