Jump to content

அரசியற் போராட்டமே இந்திய கொள்கையை மாற்றியது. - தமரா முன்னாள் சிறிலங்கா ராஜதந்திரி


Recommended Posts

கருத்துக்கு பதில் கருத்து எழுதாமல்  கருத்து எழுதுபவர் சாய்மனைக் கதிரையில் இருந்து எழுதிறார் என்று தொடர்ச்சியாக கருத்து எழுதுபவர் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் வறுமை யாரிடம் உண்டு என்பதை இந்தத் திரியையும் இது போன்ற திரிகளையும் வாசித்தால் தெரியும்.   

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply

சாய்மன ( மனை அல்ல) கதிரை என்பது வாய்சொல்லில் மட்டும் வீரர் என்பதை சுட்டும் விமர்சனக்கூற்று.

**********

எந்த பந்தையும் பார்த்து நான் அலட்டிக்கொளுவதில்லை. இதெல்லாம் ஜுஜுபி :)

அது சாய்மனக் கதிரையும் இல்லையாம்.. சாய்மானக் கதிரையாம்.. சாய்மானம் (recline) உள்ளதால் சாய்மானக்கதிரை சரியாகத்தான் இருக்கு..

 

 

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

.இங்கு நாரதர், இசை ஆகியோர் வைக்கும் தர்க்க ரீதியான மற்றும் பூகோள ரீதியிலான கருத்துகளுக்கு சரியான பதிலை வைத்து ஆரோக்கியமான திசையில் உரையாடலை நகர்த்தாமல் வெறும் தனிமனித தாக்குதலை நோக்கி திருப்பும் கோசானின் கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

 

கண்ணா, தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தில் 99 வீதம் நானும் உடன்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

தர்க, பூகோள ரீதியான எல்லா கருத்துகளுக்கும் எப்போதோ பதில் சொல்லியாகி விட்டது.

கண்ணா சொன்னதை தான் 1ம் திரியில் இருந்து நானும் சொல்லி வருகிறேன். 3 பக்கத்தையும் படித்து விட்டுத்தான் கருத்து வைக்கிறீர்கள் என் நம்புகிறேன்.

செயலாக்கம் அற்று, தமிழ்நாடு போராடவேண்டும் அதனால் ஈழ விடுதலை கிட்டும் என்று எழுதுவது சாய்மான கதிரை புரட்சியே ( armchair revolution).

இதை சுட்டிக்காட்டுவது தனிமனித தாக்குதல் அல்ல.

இதற்கும் சக கருதாளரை லூசன் என்று சொல்லுவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

இந்த வேறுபாட்டை உணர உங்களால் முடியாதென்றால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

நிழலி,

தர்க, பூகோள ரீதியான எல்லா கருத்துகளுக்கும் எப்போதோ பதில் சொல்லியாகி விட்டது.

கண்ணா சொன்னதை தான் 1ம் திரியில் இருந்து நானும் சொல்லி வருகிறேன். 3 பக்கத்தையும் படித்து விட்டுத்தான் கருத்து வைக்கிறீர்கள் என் நம்புகிறேன்.

செயலாக்கம் அற்று, தமிழ்நாடு போராடவேண்டும் அதனால் ஈழ விடுதலை கிட்டும் என்று எழுதுவது சாய்மான கதிரை புரட்சியே ( armchair revolution).

இதை சுட்டிக்காட்டுவது தனிமனித தாக்குதல் அல்ல.

இதற்கும் சக கருதாளரை லூசன் என்று சொல்லுவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

இந்த வேறுபாட்டை உணர உங்களால் முடியாதென்றால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

உங்களால் கருத்துக்களை சரியாக கிரகிக்க முடியவில்லை.. தமிழ்நாடு போராட வேண்டும் என்று யார் எழுதினார்கள்?? வேறு களங்களில் நடப்பதைக் குழப்பிக்கொண்டு இங்கே எழுதுகிறீர்களா??

Link to comment
Share on other sites

நன்றி கண்ணா. தமிழக தமிழரின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக கூறி இருக்கிறீர்கள்.
இங்கு சிலர் இன்னும் 5-10 வருடங்களில் சீமான் தமிழ் நாட்டு அரசியல் அதிகாரத்தை பிடித்துவிடுவார் என்று கூறி வருகிறார்கள். சிலர் 2016 கனவில் கூட மிதக்கிறார்கள். அதை பற்றிய‌ உங்கள் கருத்து என்ன? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா,

நானும் கேட்க நினைத்த கேள்விதான் இது?

சீமான் பற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராடாமல் மாற்றம் இல்லை என்பதற்கான சான்று , புலம் தமிழ்நாடு தளம் அனைத்தும் போராடினாலேயே எமக்கு விடிவு.

இசை 1ம் பக்கத்தில் இந்த செய்தியை இணைத்தவர் செய்திக்கு கீழே போட்ட கருத்து இது.

இதுக்குத்தான் நான் பதில் எழுதினேன்.

இப்ப 3 பக்கத்தில் வந்து தமிழ் நாட்டை நாங்க போராடச் சொல்லவில்ல என்கிறீர்கள்.

தமிழ் நாடு போராடாது - அதன் மூலம் எமக்கு ஒரு விடுதலையும் வராது - இது என் வாதம்.

ஆம் அல்லது இல்லை என்பதுதான் இங்கே விடயதானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.
Link to comment
Share on other sites

கண்ணா,மிக தெளிவான அரசியல் பார்வை .எங்கள் விருப்பம் வேறு யதார்த்தம் என்பது வேறு.விரும்பியோ விரும்பாமலோ ஜே யும் கருணாவும் தான் நாங்கள் தொடர்பு வைக்கவேண்டியவர்கள் .

 

"அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார் வை கோ".

தமிழ்நாட்டு அரசியலை  அவர் தெளிவாக கணிக்கவில்லை .

 

Link to comment
Share on other sites

 

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.

 

 

 

நன்றி கண்ணா. இதை நாங்கள் சொன்னால் துரோகி நரி பூனை ஆறறிவு அற்றவர் என்று வசைவு வரும். உங்களுக்கு என்ன பட்டம் வருகிறதென்று பார்ப்போம். 
இனியாவது இங்கிருப்பவர்கள் கனவு காண்பதை நிறுத்தி விட்டு யதார்த்தமாக சிந்த்தித்தால் நல்லது. கோசான் சொல்லும் சாய்மனை கதிரை அரசியல் என்பது இதுதான். 
தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் radicalism or Extremism சார்ந்த சிந்தனை கொண்ட எந்த குழுக்களுக்கும் ஆதரவு வழங்கியது கிடையாது. சீமான் கனடாவில வந்து பேசின பேச்சை கேட்டா பிரபாகரனே முகம் சுளிச்சிருப்பார். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் கூறிய அணைத்து அரசியல் சார்ந்த கருத்துக்களும் சாமானியன் என்ற வகையால் கூறிய கருத்துக்கள் ஆகும். நான் ஒரு சாதாரண குடிமகன். எனக்கும் எந்த அரசியல் இயக்கத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். 
 
மேலும் தமிழ் நாட்டில் உள்ள மக்களின் பிரச்சனைகளை கையாளக்கூடிய இயக்கங்களுக்கே ஆதரவு கிடைக்கும். அந்த வகையில் திமுக, அதிமுகவிற்கே அந்த அனுபவம் உள்ளது. கொஞ்சம் மக்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஜாதி ரீதியாக வட தமிழ் நாட்டில் வன்னியர் என்ற முறையில் வாக்கு அளிப்பார்கள். தமிழ் நாட்டின் பெண் வாக்காளர்களின் 80 % வாக்குகள் ஜெயாவிர்க்கே செல்லும்.ஏன் என்றால் அவர் பெண்களுக்கு நிறைய திட்டங்கள் வகுத்து கொடுத்து இருக்கிறார். கருணாநிதியின் ஆட்சியில் தமிழகம் மிக பெரிய கட்டமைப்பு (infrastructure) திட்டங்களை கண்டு பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது. இப்படி தங்களின் வாழ்க்கையை , தங்களின் படித்த பிள்ளைகளின் வாழ்க்கையை முன்னேற்ற திட்டம் உள்ள கட்சிகளுக்கே வாக்குகள் அளித்தார்கள். அளிப்பார்கள். மாநிலத்தை முன்னேற்ற திட்டம் ஒன்றும் கையில் இல்லாமல் , தொண்டர் அமைப்பே இல்லாமல் எப்படி ஆட்சிக்கு வர முடியும். வெறும் கையால் முழம் போட முடியாது அல்லவா ?
Link to comment
Share on other sites

 

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.

 

 

இந்த நிலை மாற வேண்டும். தமிழர் தலையில் மிளகாய் அரைப்பவர்களிடம் சென்று உதவி கேட்பதா? கோடிக்கணக்கான மக்களின் பணத்தை சுருட்டுபவர்கள்  தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?

 

வை.கோ ஏன் வெல்லவில்லை என மேலே கேட்டிருந்தேன்.அதற்கான பதிலுக்கு நன்றி.

புலிகள் ராஜீவின் தாக்குதலின் பின் தமிழ் நாட்டு மக்களுக்கு இருக்கின்றது என்கிறீர்கள். 30 மைல்களுக்குள் இந்திய இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகள் தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான். தெரிந்து இருந்தால் ராஜீவின் கொலை பற்றி ஒரு மீளாய்வு செய்திருப்பார்கள். அதற்காக ராஜீவின் கொலையை நியாயப்படுத்தவில்லை.

 

சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 

 

 

கட்சியை புதிதாக தொடங்குபவருக்கு 2 லட்சம் தொண்டர்கள் போதுமானது. அதிமுக, திமுக கட்சி தொடங்கிய போது கோடிக்கணக்கான தொண்டர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா நாங்களும் சாமானியர்கள்தாம். உங்களிடம் இருக்கும் பார்வை அற்புதமானது. 100% யதார்த்தமானது.

சாமானியர்களிடம் இருக்கும் தெளிவு பத்தி எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர் என தம்மை தாமே உருவகிப்போரிடம் இல்லை என்பதுதான் உண்மை.

தமிழ் நாடு இப்போதும் எப்போதும் இப்படித்தான் இருந்தது. ஈழப் பிரச்சினை என்பது வாக்காளரின் 6 வது அல்லது 7 வது பிரையோரிட்டி தான். அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும்.

நாங்கள் புலத்தில் இருக்கிறோம். இந்த வெளிநாட்டு அரசுகள் தமிழர் தலையில் மிளக்காய் அல்ல மிளகாய் தோட்டத்தையே அரைத்தன ஆனால் நாம் அவர்களுக்கு எதிராக ஒரு துரும்பையும் தூக்கிப் போட மாட்டோம்.

ஏனெனில் அது எம்,

எம் பிள்ளைகளின் இருபுக்கே ஆபத்தாய் முடியும்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இந்தியாவுடன் பகச்சுகணும். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கணும்.

சீமான் போன்றவர்கள் - சி எம் ஆனால் 5 வருடத்தில் தமிழகம் பிகாரிடம் பிச்சை எடுக்கும் படி ஆக்குவார்கள்.

மக்களுக்கும் இது தெரியும். அதனால்தான் அடித்துச்சொல்கிறேன் - தமிழக மக்களின் நிதானத்தின் மீது நம்பிக்கை வைத்து - சீ எம் அல்ல 2016 இல் அவர் சொந்த தொகுதொயிலே சீமான் டெபாசிட் வாங்குவதே பெரிய விசயம்.

தமிழகத்தில், இலங்கையில் வாழும் மக்கள் அரசியல் தெளிவோடுதான் இருக்கிறார்கள். புலத்தில்தாம் சாய்மான கதிரைகள் கூடிப்போனதால் இந்த அலுப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் தின்டது செமிக்கத்தானே வேணும்

Link to comment
Share on other sites

 

இசை,
 
தமிழக மக்கள் விஜய காந்திற்கு இரண்டு முறை10 சதவிகத வாக்குகள் அளித்தார்கள். இந்த வாக்குகள் அனைத்தும் இரண்டு திராவிட கட்சிகள் மேல் வெறுப்பு உள்ளவர்கள் போட்ட வாக்குகள் ஆகும். அந்த சந்தர்பத்தை சரியாக தேமுதிக பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் 20 -25 % வாக்குகள் பெற்று தனி பெரும் கட்சியாக வரும் தேர்தலில் வர வாய்ப்பு இருந்தது. இது இப்பொழுது  எட்டா கனியாக போய் விட்டது. இப்பொழுது ஜெயாவின் மேல் வரும் தீர்ப்பை பொருத்து தமிழக அரசியல் உள்ளது. தீர்ப்பு வரும் 20 நாட்களில் வர இருக்கிறது. அந்த தீர்ப்பே ஒரு திராவிட கட்சி இருக்குமா இல்லையா என்ற மிக முக்கிய நிலையை தமிழக மக்களிடம் கொடுக்க உள்ளது. 

 

 

அந்த வெற்றெடம் யாருகு பொகும் கண்ணா..

Link to comment
Share on other sites

 

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடி
 

 

அடுத்த 50 ஆண்டுகள் தமிழகத்தை யார் ஆட்சி  செய்வார்யென்று நீனைகீரீர்?

Link to comment
Share on other sites

இங்கே  பலர் அரசியற் போராட்டம் என்றால் வெறும் கட்சிப்  போராட்டம், என்றும் இன்னும் சிலர் ஆயுதப் போராட்டம் வன்முறைப் போராட்டம் என்று நினைத்துக் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் நாட்டின் அரசியலைச் சற்றுப் பின்நோக்கிப் பார்ப்போம். 
 
தமிழ் நாடு ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காது என்று ஐம்பது வருடங்களின் முன்னர் யாராவது சொன்னால், அது சாய்மனைக் கத்தரியில் இருந்து சொல்கிறார் என்று தான் எழுதி இருப்பார்கள். 
 
மற்றம் என்பது தொடர்ந்து நிகழ்வது. தமிழ் நாட்டில் திராவிடக் கட்ச்சிகள் எவ்வாறு தோன்றின இறுதியில் ஆட்ச்சியைப் பிடித்தன? பெரியார் என்ற ஒற்றை மனிதர் தன்னான் தனியாக துவக்கிய ஒரு அரசியல் இயக்கம் எப்படி ஒரு மாபெரும் இயக்கமாக விரிந்தது?
 
பெரியாரின் அரசியல் போராட்டமே அதனை ஒரு மாபெரும் இயக்கமாக்கி இன்று ஆட்சி  அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. அவர் தொடங்கிய போதும், இன்று கேட்கப்படும் அதே    கேள்விகள் அவரிடமும் கேட்கப்படலாம்.     
 
அரசியல் இயக்கங்கள் போராட்டங்கள் , சமூகம் சார்ந்த கருத்து நிலைகளில் இருந்து பிறந்து , வளர்ந்து அரசியல் இயக்கங்கள் ஆகின்றன. திராவிடர் என்னும் கருத்து நிலையில் இருந்தே திராவிட இயக்கம் பிறந்தது. அதுவே ஒரு அரசியற் செயற்பாடாகி மக்கள் இயக்கம் ஆகியது.
 
இன்றைய காலகட்டத்தின் சமூக அரசியல் நிலைகள் இன்று பிறக்கும் கருத்து நிலைகளைத் தீர்மானிக்கின்றன. அதில் இருந்து புதிய அரசியல் இயக்கங்கள் பிறக்கின்றன. தமிழ் நாடும் அதன் அரசியலும் இதற் கு விதிவிலக்கானது அல்ல.  
 
புலிகள் என்னும் வார்த்தையையீ உச்சரிக்க முடியாத ஒரு காலகட்டம் தமிழ் நாட்டில் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னர் இருந் தது. இன்று அந்த நிலை இல்லை. அதனை மாற்றியது அரசியற் போராட்டங்களே .
 
இங்கி எழுதும் பலருக்கு அரசியலை நுணுகி ஆராயம் தன்மை இல்லை. வெறும் தனி மனித தாக்குதல்களையே  யாழ்க் களம் எங்கும் காணலாம்.
 
காத்திரமான எந்த உரையாடலையும் செய்யக் கூடிய களமாக யாழ்க் களம் இல்லை. இதில் எழுதி என்ன பிரியோசனம் என்னும் அயற் சியே  வருகிறது. இங்கி எழுதும் எல்லோரும் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு எழுதுவதில்லை. அவ்வாறான நிலையில் கண்ணை மூடிக் கொண்டு அனுமானங்களின் அடிப்படையில் , எழுதப்படும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லாமால், வெறும் தனி மனித தாக்குதலே இங்கு நிகழ்கிறது.
 
 
எல்லோரும் கதிரையில் இருந்து கீ போட்டைப்  பாவித்துத் தான் எழுதுகிறோம். அதற்காக எல்லோரும் இதனை மட்டுமே செய்கிறோம்  என்று ஆகிவிடாது. எழுதுவதற் கு அப்பால் எமக்கு எனச் செயற்பாடு இருக்கிறது. 
 
இந்ததக் கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களைப் பின்நோக்கிப் பார்த்தால் அது விளங்கும். தமிழ் நாட்டில் மாணவர் போராட்டங்கள் உண்டாவதற்கான ஏது  நிலை , சனல் நான்கு வெளியிட்ட பாலச்சந்திரனின் கொலைப் படங்கள் ஒரு காரணம். அது பிரித்தானியாவில் இருந்தே வெளியிடப்பட்டது. உலகெங்கும் இயங்கும் தமிழார் அரசியல் இயக்கங்களுக்கு தொடர்புகள் இருக்கின்றன. இவை எல்லாம் இந்தத் தொடர்புகளைப் பயன் படுத்தி நிகழ்ந்த   அரசியற் செயற்பாட்டின் மூலம்  வந் தவை.  
 
வெறுமணே இணையத்தில் இருந்து சாய்மனக் கதிரையில் அமர்ந்து    தட்டச்சும் அரசியல் செயற்பாடு எதுவும் அற்ற ஒருவரால், இந்த இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாது.   இங்கே எழுதும் பலரின் பிரச்சினை அதுவே. இயங்குபவர்கள் எழுதுவது குறைவு. 
 
விளங்கிக் கொள்ள முற்படுபவர்களுக்கு நான் எழுதி இருப்பது விளங்கி இருக்கும். இதற்க்கு மேல் இங்கே  எழுதுவது எதுவித பயனும் அற்ற செயல்.
 
நன்றி, வணக்கம்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளுக்கு எல்லை வகுத்தவன் யார்? அவர்களின் நன்மை தீமை எவை ? என்பவை பற்றி மனதில் கொண்டு அரசியல் அலசப்படவேண்டும்.....பூர்வீக மக்களின் விருப்பு வேறுப்பு கணக்கில் எடுக்கபடுவதில்லை....என்பது என் கருத்து......

Link to comment
Share on other sites

உலக நாடுகளுக்கு எல்லை வகுத்தவன் ஒருவன் இல்லை. எல்லைகள் நிரந்தரமானவையும் இல்லை. உலகில் பலமான சக்தி என்பது மாறிக் கொண்டே வந்திருக்கிறது. அரசியல் பொருளாதர இராணுவ பலம் யார் நிர்ணயிக்கும் சக்தி என்பதை அந்த காலகட்டத்தில்  தீர்மானிக்கிறது. அரசியல் பொருளாதார இராணுவ வலிமை என்பது ஒரு மக்கட் சமூகத் தாலேயே   தோற்றுவிக்கப்படுகிறது .   மக்கட் சமூகம் என்பது ஒரு நிலம் சார்ந்து அல்லது  ஒரு தேசிய அடையாளம் சார்ந்து தீர்மானிக்கப்படுகிறது.   மக்களின் குடிப் பரம்பல் தேசிய அடையாள ஆக்கம் என்பன தொடர்ந்துமாறும்  உலகில் பூர்வீகம் என்பது அர்த்தமற்றது. ஆகவே தேசியம்  என்பது இன்றைய  நிலையின் அடையாளம். இதில் தான் திராவிட, தமிழார் அடையாளச் சிக்கலுக்கான பதில் இருக்கிறது. 
 
இன்றைய நிலையில் மக்களின் வாழ்வை வளம் படுத்தக் கூடிய அடையாளம் ஆக மக்கள் எதனைக் கருதுகின்றனர்  அதுவே அவர்களின் அடையாளம் ஆகிறது. அந்த தேசிய  அடையாளக் கருத்தியல் , அரசியல் வடிவம் எடுத்து அரசியல் இயக்கம் ஆகிறது. அந்த இயக்கத்தின் போராட்டாங்கள் வலிமை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றுகிறது. அதிகாரம் எல்லைகளைத் தீர்மானிக்கிறது.    
 
ஆகவே அடையாள அரசியல் என்பது மாறிக் கொண்டு வருவது, இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் எது தமக்கு நன்மை பயக்கும் என்னும் நிலையில் , ஒரு மக்கட் சமூகம் தனது அரசியல் இயக்கங்களைத் தேர்வு  செய்து கொள்கின்றது. இன்றைய நிலையே  நாளைக்குமான நிலை எனக் கூற முடியாது. 
 
இதில் புதிய  கருத்துகளின் உருவாக்கம் , புதிய பார்வையை முன் வைத்து மக்கள் முன் உள்ள தெரிவுகளை துலங்கச் செய்கிறது. எல்லா மக்களும் ஒரே  சிந்தனை உடையவர்கள் அல்ல. எல்லாராலும் நுணுகி ஆராயும் திறனும் நாளைய மாற்றத்தை விளங்கிக்   கொள்ளும் பக்குவமும் இல்லை. மாறி வரும் உலகையும் அதன் நிர்ணய சக்திகளின் போட்டிகளையும் விளங்கிக் கொண்டு, அதனூடாக தமது மக்களின்  நலன் சார்ந்து சிந்தித்துச் செயற்படும் ஒரு தலமையினாலையே  அந்த மக்கட் சமூகத்தின் இலக்கு எட்டப் பட முடியும்.    அவ்வறு இல்லாத தலைமைகள் மக்களால் தூக்கி எறியப்பட்டு புதிய தலைமைகள் உருவாகின்றன. 
 
     
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியம்,திராவிட தேசியத்தை விட .....இந்தியா தேசியம், சிறிலங்கா(சிங்கள தேசியம் அல்ல) தேசியம் போன்றவை எல்லை வகுத்த சீமான்களுக்கு முக்கியம்....எல்லை வகுத்த சீமான்கள் இன்று பிராந்திய தேசியங்களை உருவாக்குவதில் முனைப்புகாட்டுகிறார்கள் ..... இன தேசியத்தை விட இந்துநாகரீகம்,கிறிஸ்தவ நாகரீகம்,இஸ்லாமீய நாகரீகம்,பெளத்த நாகரீகம் என நாகாரீக அடிப்படையில் உலக ஒழுங்கை செயல்படுத்த முயற்சிக்கின்றனர் .....வளைகுடாவில் சுன்னி பிராந்தியத்திற்க்கு ...சவுதி அரெபியா......சியா பிராந்தியத்திற்கு ஈரான்......தெற்காசியாவிற்க்கு இந்தியா.....

Link to comment
Share on other sites

இப்ப  அண்மையில் ஆறரை  கோடி  கைமாறி  இருக்காம் நாம் தமிழர் கட்சி  பெயர்  மாற எங்கிருத்து  வருகிறது இவ்வளவு  மனம்  சீமானுக்கு  :D

 

ஈழமும்  தமிழும்  வியாபார உச்ச  முத்திரை ஆகிட்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறரைக் கோடியில் அரைப் பைசா வை.. அண்ணேட்ட காட்டிட்டுத்தான் கொடுத்தவை. அதுதான் அண்ணே வந்து கணக்கை எடுத்து விடுறார். :lol::D

Link to comment
Share on other sites

இரண்டு வாரங்களுக்கு முன் எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன்.

பேருந்துப் பயணத்தில் நேராக எங்கள் கிராமங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் வழக்கத்திற்கு மாறாகக் கைவசம் இருந்த கார் புதிய யோசனைகளைத் தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளால் இணைக்கப்படாமல் வண்டிப்பாதைகளாலும் ஒற்றையடிப்பாதைகளாலும் இணைக்கப்பட்டிருந்த சின்னச்சின்னக் கிராமங்களையும் பார்க்கத்தூண்டியது. அவையெல்லாம் எனது பள்ளிப் பருவத்தில் சல்லிக்கட்டு பார்க்கவும் வள்ளி திருமணம் பார்க்கவும் நடந்து போய் வந்த கிராமங்கள். பின்னர் கபடி விளையாடுவதற்காகச் சைக்கிளில் சென்றுவந்த கிராமங்கள். அப்போதெல்லாம் அந்தக் கிராமங்களில் பளிச்சென்று தெரிந்தவை எம்ஜிஆர் மன்றங்கள். எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களின் திரைப்படச் சுவரொட்டிகள் மாறிக் கொண்டே இருக்கும். அந்த மாற்றம் சாதிச் சங்கங்களின் – சாதிக்கட்சிகளின் சுவரெழுத்துகளாக மாறியபோது எங்கள் பக்கத்து கிராமங்கள் நசிந்து சிவகாசியும் திருப்பூரும் கோயம்புத்தூரும் பெருத்து வீங்கியதைக் கண்டவன் நான்.

நானே ஓட்டியாக மாறிக் காரில் சென்றேன். அப்படிச் சென்ற எனக்குச் சில உண்மைகள் பளிச்சென்று உரைத்தன. 1960- களில் எம்ஜிஆர் மன்றங்கள் இருந்ததுபோல நாம் தமிழர் கட்சியின் வண்ணத் தட்டிகள் பல ஊர்களில் நிற்கின்றன. அத்தட்டிகளில் அக்கட்சியின் தலைவர் சீமானுக்குப் பதிலாகப் படமாக நிற்பவர் ஈழவிடுதலைக்காக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த பிரபாகரன். வரிவரியான வண்ணக்கோடுகள் போட்ட சட்டையும் தலையில் தொப்பியும் கணத்த மீசையுமாகப் புலித்தலைவர் பிரபாகரன் படம் போட்டு நாம் தமிழர் இயக்கம் கிராமங்களில் கால் ஊன்றிக் கொண்டிருக்கிறது. நாம் தமிழர் எனத் தனது அரசியல் இயக்கத்திற்குப் பெயரிட்டுள்ள சீமானின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் பொருட்படுத்தத்தக்கதல்ல; உலகமயக் காலத்தில் வாழும் தமிழர்கள் அவரை ஏற்க மாட்டார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நடப்பு வேறாக இருக்கின்றது. எனது கிராமங்கள் இருக்கும் மதுரை மாவட்டத்தில் மட்டுமல்ல; தென் மாவட்டங்களில் சீமானின் பெயரும் அவர் உச்சரிக்கும் ‘நாம் தமிழர்’ என்ற கூப்பாடும் மௌனமாகப் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. பிரபாகரனின் உருவத்தை முன்னெடுத்த அவர் இப்போது முருகனைத் தனது முப்பாட்டன் எனச் சொல்லத் தொடங்கியிருக்கிறார். வாளொடு தோன்றிய மூத்தகுடி எம் தமிழ்க் குடி என்று சொன்னவர்களின் வாரிசாகத் தன்னை முன்வைக்க விரும்பி வேலொடு தோன்றி வினையாற்றத் தொடங்கியுள்ளார். இந்த மௌனப்பரவல் என்ன செய்யும்?

இந்த கட்டுரை சொல்ல வருகிற நோக்கம் வேறு

http://malaigal.com/?p=6506

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.