Jump to content

அரசியற் போராட்டமே இந்திய கொள்கையை மாற்றியது. - தமரா முன்னாள் சிறிலங்கா ராஜதந்திரி


Recommended Posts

இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம். தகுந்த தலைமை தமிழ்நாட்டில் தோன்றும்போது டில்லியை கட்டுப்படுத்தி வைக்க முடியும்.

http://statisticstimes.com/economy/gdp-of-indian-states.php

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரெண்டே இரண்டு வர்த்தைகள் மட்டும்.....

Dream on.......

அப்ப நான் வட்டா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு வில்லுப்பாட்டு :) சின்ன மணி தோத்தார்!

இந்தியாவிடம் Tamil Nadu containment strategy ஒன்று இருக்கு.

அதை அவர்கள் எப்போதும் நடைமுறைப்படுத்திய படியே இருப்பார்கள்.

இது ஒரு constant (மாறிலி). இது எப்போதும் அமுலிலே இருக்கும்.

தேர்தல் போன்ற விடயங்கள் வரும் போது இதன் அமுலாக்கம் வெளித்தெரியும். அவ்வளவே.

கூட்டணிக்காக ஒரு மென்போக்கை தற்காலிகமாக கடைப்பிடித்த படியே, மாணவர் போராட்டம் போன்றவற்றை நலிவடையச் செய்வார்கள். Short term இல் பார்த்தால் இந்த போராடங்கள் ஏதோ வெற்றி அடைவதைப் போல தோன்றினாலும், end result டெல்கி விரும்பியபடியே இருக்கும்.

இந்த containment ஐ உடைத்தால் - தமிழ் நாட்டை எரிநிலைக்கு கொண்டுவந்தால் - எமக்கு நன்மை வரும். இது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல.

ஆனால் இது சாத்தியமா என்பதுதான் கேள்வி.

தமாரா மேலே சொன்னது, நீங்கள் சொல்வது அத்தனையும் 100% உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.

இப்போ நீங்கள் சொன்ன போராட்டத்துக்கு என்ன ஆச்சு? பிசு பிசுத்து விட்டதா இல்லையா?

இறுதியில் இந்தியாவின் நோக்கப் படி விடயங்கள் நடகிறதா இல்லையா?

டெல்லியின் Tamil Nadu containment ஐ உடைப்பத்கற்கு முயற்சிப்பது மேலும் டெல்லியை சினம் கொள்ளவே செய்யும்.

இது ஒரு high risk, low probability option.

பிரபா கையாண்டு தோல்வியில் முடிந்தது.

நல்லவேளை கூட்டமப்புத்தலைமைக்கு இது விளங்கிறது.

 

றோவுக்கும், மத்திய அரசுக்கும் தெரியாதது எல்லாம் உங்களுக்கு தெரிகிறது. இதற்குள் மற்றவர்கள் வில்லுப்பாட்டாம். :icon_mrgreen:

வெளிநாட்டில் சாய்மன கதிரையில் இருந்து எவ்வளவு high risk உம் எடுக்கலாம். சாகாப்போறது நாமோ நம்ம பிள்ளையளோ இல்லைத்தானே.

போராட்டம் என்பது ஒரு அடையக் கூடிய இலக்கு நோக்கியே இருக்க வேண்டும்.

Struggle for struggle's sake என்பதாக அமைவது மக்களுக்கு நன்மை பயக்காது, சில சாய்மன கதிரை போராளிகளுக்கு it may give some colour to their otherwise pointless existence.

Accepting ground realities and endeavouring for a just and honourable solution, with minimal risk, is not servitude. It is common sense survival strategy.

 

இப்போ நீங்கள் பாயில் இருந்து ரைப் அடிபதால் பாய் போராளியாகிறீர்கள். :icon_mrgreen:  வெளிநாட்டில் இருந்து எழுதுவது. அதற்குள் மற்றவர்களை பார்த்து நக்கல்.

நல்லவேளை கூட்டமப்புத்தலைமைக்கு இது விளங்கிறது. 

 

 

கூட்டமைப்பை போல ஜீனியசை எடுப்பது ரொம்ப கயிட்டம். :)

Link to comment
Share on other sites

மத்தியால் எந்த அளவுக்கு மாகாணத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை எமக்குணர்த்தி வருகின்றார் பிரதமர். இதை அறியாமல் மத்தியின் மாய்மாலங்களுக்கு மண்டியிட முனைந்துள்ளோம் எம்முட்சிலர். இதிலே எமது மக்களின் உரித்துக்கள் அடங்கியுள்ளன. இப்பேர்ப்பட்ட செயல்களை வெறும் மனித உறவுகளின் வெளிப்பாடு என்று கூறமுடியாது."

 

சொன்னவர் விக்கினேசுவரன் , யாருக்குச் சொன்னார் என்று எல்லோருக்கும் விளங்கும்.

 

he is also dreaming. In order to change you need to dream about the change. If you don't dream you cannot change.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இங்கு கோஷனும் இசையும் போடும் போட்டி கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. தமிழக தமிழனான என்னை கேட்டால் ஈழ விஷயத்தில் தமிழக தமிழர்களிடம் அனுதாபமும் , அன்புமும் இருக்கிறது. ஆனால் தெருவில் வந்து இறங்கி தினமும் போராட  நேரமும், ஈழ தமிழர்களை போல் தன்னுடைய இந்திய அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமும் இல்லை. 
 
அதனால் கொஷன் சொல்வதை போல் தமிழ் நாட்டை முற்றும் நம்பி இருக்க வேண்டாம். உங்களின் எதிர் காலத்தை நீங்களே உங்கள் தலைமைகளை வைத்து தான் தீர்க்க வேண்டும். வேறு வழி இல்லை. ஒரு வாரம் எங்களால்  உங்களுக்காக போராட முடியும். தினமும் செய்ய முடியுமா. யார் வந்து சோறு போடுவார்கள். எங்களை ஆள்பவர்களை எங்களை விட நன்றாக தேர்ந்து எடுக்க இந்தியாவில் உள்ள எந்த மாநிலதவராலும் முடியாது. தமிழ் நாடு ஒரு அரசை தேர்ந்து எடுக்கிறது என்றால் 237 தொகுதிகளில் 200 ஐ ஒரே கட்சிக்கு கொடுப்பார்கள்.
 
 திராவிட கட்சிகளுக்கு வாக்கு அளித்ததால்  தான் இந்தியாவுடன் முரண் படாமல் ஈழத்தை போல் ஜனங்களை இழக்காமல் காப்பாற்ற முடிந்தது. மேலும் வளர்ச்சியையும் பெற முடிந்தது. இப்பொழுது இசை சொன்னதுபோல் இந்தியாவின் முதல் மாநிலங்களின் வரிசையில் தமிழ் நாடு உள்ளது. எனவே  நான் முன்பு சொன்னது போல் தனி நாட்டுக்காக போராடாமல் இந்தியாவின் ஒரு அதிகாரமிக்க ஒரு மாநிலமாக வேண்டும் என்று  ஈழம் போராடியிருந்தால் இந்நேரம் ஈழம் ஒரு வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாகி இருக்க முடியும். தமிழ்  நாட்டை  தன்னுடைய ஒரு அங்கமாக வைத்து கொண்டு ஒரு தனி தமிழ் ஈழம் உருவாக இந்திய விடவே விடாது. அது ஒரு கானல் நீர் தான் என்று வருத்ததுடன் சொல்லி கொள்கிறேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கோஷனும் இசையும் போடும் போட்டி கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. தமிழக தமிழனான என்னை கேட்டால் ஈழ விஷயத்தில் தமிழக தமிழர்களிடம் அனுதாபமும் , அன்புமும் இருக்கிறது. ஆனால் தெருவில் வந்து இறங்கி தினமும் போராட  நேரமும், ஈழ தமிழர்களை போல் தன்னுடைய இந்திய அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமும் இல்லை. 

 

அதனால் கொஷன் சொல்வதை போல் தமிழ் நாட்டை முற்றும் நம்பி இருக்க வேண்டாம். உங்களின் எதிர் காலத்தை நீங்களே உங்கள் தலைமைகளை வைத்து தான் தீர்க்க வேண்டும். வேறு வழி இல்லை. ஒரு வாரம் எங்களால்  உங்களுக்காக போராட முடியும். தினமும் செய்ய முடியுமா. யார் வந்து சோறு போடுவார்கள். எங்களை ஆள்பவர்களை எங்களை விட நன்றாக தேர்ந்து எடுக்க இந்தியாவில் உள்ள எந்த மாநிலதவராலும் முடியாது. தமிழ் நாடு ஒரு அரசை தேர்ந்து எடுக்கிறது என்றால் 237 தொகுதிகளில் 200 ஐ ஒரே கட்சிக்கு கொடுப்பார்கள்.

 

 திராவிட கட்சிகளுக்கு வாக்கு அளித்ததால்  தான் இந்தியாவுடன் முரண் படாமல் ஈழத்தை போல் ஜனங்களை இழக்காமல் காப்பாற்ற முடிந்தது. மேலும் வளர்ச்சியையும் பெற முடிந்தது. இப்பொழுது இசை சொன்னதுபோல் இந்தியாவின் முதல் மாநிலங்களின் வரிசையில் தமிழ் நாடு உள்ளது. எனவே  நான் முன்பு சொன்னது போல் தனி நாட்டுக்காக போராடாமல் இந்தியாவின் ஒரு அதிகாரமிக்க ஒரு மாநிலமாக வேண்டும் என்று  ஈழம் போராடியிருந்தால் இந்நேரம் ஈழம் ஒரு வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாகி இருக்க முடியும். தமிழ்  நாட்டை  தன்னுடைய ஒரு அங்கமாக வைத்து கொண்டு ஒரு தனி தமிழ் ஈழம் உருவாக இந்திய விடவே விடாது. அது ஒரு கானல் நீர் தான் என்று வருத்ததுடன் சொல்லி கொள்கிறேன்.

அ....து....!

இங்குள்ளவர்களுக்கு முகத்தில் அறைந்தது மாதிரி சொல்லியிருக்கிறீர்கள் கண்ணா, உண்மையான தமிழகத்து உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றி!

Link to comment
Share on other sites

கண்ணா நீங்கள் இந்தியாவையும் சிறிலங்காவையும் ஒன்றாகப் பார்க்கிறீர்கள். சிறிலங்காவில் இரண்டு தேசிய இனங்கள் பல் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்றன. அதில் ஒன்று முழு இலங்கையும் பிடித்து வைத்துக் கொண்டு , ஒன்று குவிக்கப்பட்ட சகல அதிகாரங்களும் பொருந்திய சனாதிபதி முறைமையின் கீழ் , முற்று முழுதும் சிங்கள மயப்படுத்தப்பட்ட இராணுவ, சட்ட , அரசு இயந்திரத்தைக் கொண்டு ஆட்சி நடாத்துகிறது. இந்தியாவில் இது போன்ற நிலைமை இல்லை. இந்தியாவில் தமிழர்கள் இனப் படுகொலைக்கும் ஆளாக வில்லை. இவை அனைத்துமே இலங்கையில் த்மிழர்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்னும் நிலைக்குத் தள்ளின. தமிழரின் போராட்டம் தனி நாடு கேட்டுத் தொடங்கப்படவும் இல்லை. தனி மாநிலம் கேட்டே  போராட்டம் ஆரம்பமாகியது. பிறகு இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் கொண்டு வரப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டமும், சிறிலங்காவில் உள்ள ஆட்சி அதிகாரம் குவிக்கப்பட்ட சனாதிபதி முறைமையினால் பயனற்றதாக இருக்கின்றது.
 
ஆகவே கருத்து எழுதும் போது இவற்றைப் பற்றியும் அறிந்து, ஆளச் சிந்தித்து எழுத வேண்டும். இங்கே  ஈழத்தில் உள்ள தமிழர்கள் தான் தமக்கு எது தீர்வு எனத் தீர்மானிக்க முடியும், அதற்கு அவர்கள் தான் போராட வேண்டும். ஆனால்   கோசன்  போன்றவர்கள் போராடத் தேவை இல்லை என்னும் நிலையில் இங்கே  கருத்துக்களைப் பலகாலமாக எழுதிக் கொண்டிருகின்றனர். இவர்கள் விளக்கம் குறைத்து இவ்வாறு எழுதுகின்றனரா அல்லது வேண்டும் என்றே  போராட்டங்களைச் சிதைப்பதற்காக  எழுதுகின்றனரா என்று தெரியவில்லை.  புலிகள் களத்தில் நின்று தமக்காகப் போராடினர் . ஆனால் அதனை நசுக்கியதில் சிறிலங்கா அரசுக்கு பெரும் உதவி செய்தது இந்திய அரசு. இந்தியக் குடிமக்கள் என்ற வகையில் தமிழ் நாட்டுத் தமிழருக்கும் அந்தப்படுகொலைகளில்   பங்கு இருக்கிறது. ஆகவே குறைந்த பட்சம் அண்டை நாட்டின் மக்கள், மனிதாபிமானம் என்னும் அடிப்படையிலாவது தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு கடப்பாடு இருக்கிறது, ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க.
 
ஏனெனில் இனப் படுகொலைக்கு உறுதுணை அழித்தவர்கள் தான் இன்றும் அதே சிறிலங்கா அரசுக்கு உறுதுணை வழங்கிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் நாட்டில் பல சக்திகள் எமக்காகக் குரல் கொடுக்கின்றனர், போராடுகின்றனர். மாணவர் போராட்டமே இந்தியக் கொள்கையில் மாற்றத்தை உருவாக்கியது. கோசன் சொல்வதைப் போல் எவருமே எதுவுமே செய்யாது இருந்ததால், ஈழத்தில் தமிழரின் நிலைமை இன்றும் மோசமாகவே    இருந்திருக்கும் இன்றும் மக்கள் முள் வேலி முகாம் கழுக்குள் உள்ளேயி இருந்திருப்பார். இப்போதும் ராஜபக்ஸவிn  ஆட்சியே  நடந்து கொண்டிருக்கும்.
      
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ல் இந்தியாவின் ஒரு அதிகாரமிக்க ஒரு மாநிலமாக வேண்டும் என்று  ஈழம் போராடியிருந்தால் இந்நேரம் ஈழம் ஒரு வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாகி இருக்க முடியும். . அது ஒரு கானல் நீர் தான் என்று வருத்ததுடன் சொல்லி கொள்கிறேன். 

 

அதுவும் ஒரு கானல் நீர் தான்.......இந்தியாவின் கனவு சிறிலங்கா, தான் அதிகாரம் செய்யக்கூடிய அரசாக இருக்க வேண்டும் என்பதே .....நேபாள்,மாலைதீவு,பூட்டான் போன்ற நாடுகள் போன்று

Link to comment
Share on other sites

சிறிலங்காவைப் போல் இந்தியாவில் பவுத்த பேரினவாதம்  இல்லை என்பதே அடிப்படையான வேற்றுமை. அதில் இருந்து தான் ஈழத்தில் தமிழர்கள் தனி ஈழம் கோரினர். இந்த அடிப்படை வேறு பாட்டை விளங்கிக் கொள்ளாத எவராலும், சிறிலங்காவில் நிகழும்  எந்த அரசியல் நிகழ்வையும்  விழங்க்கிக்கொள்ள முடியாது. துரதிஸ்டவசமாக ஈழத் தமிழர்கள் சிலருக்கு இந்த அடிப்படை அரசியல் அறிவு இல்லை. இது எமது போராட்டம் தொடர்ந்தும்  தோற்பதற்கு  இன்னொரு காரணம்.      
 
நாம் எமது இன்றைய  சோற்றுக்கு வழியைப் பார்ப்போம் என்று இருப்பதே , தமிழர்களின் போராட்டங்கள் வெற்றி பெறாததற்கான அடிப்படை. இதனாலேயே  நாம் இன்றும் நாடு நாடாக சோத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். அப்படி அன்றாடம் காட்ச்சிகளாகத்  தொடர்ந்து இருப்பதையா தமிழர்கள் விரும்புகின்றனர்.? சிந்தித்து ,தெளிவுற்று , ஒன்று சேர்ந்து போராடுவதன    மூலமே விடுதலையைப் பெற முடியும். அவ்வாறு போராடிய மக்களே உலகில் விடுதலை பெற்று தமது பொருளாதாரத்தையும் வளm படுத்தி உள்ளார்கள். தமிழ் நாட்டிலும் திராவிட இயக்கங்கள் நிகழ்த்திய போராட்டங்க்கலே  தமிழ் மக்களுக்கு இன்றைய பொருளாதார வழத்தைக் கொடுத்திருக்கிறது. 

பெரியாரின் தனி நாட்டுக் கோரிக்கை தான் இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் தோன்றக் காரணம். பெரியார் அவ்வாறு கூறி இருக்கவிட்டால் நேரு  அதைப் பற்றிச் சிந்தித்து இருக்க மாட்டார். சிறிலங்கா போல் ஒன்றுபட்ட மத்தயில்  ஆட்ச்சி அதிகாரம்  குவிக்கப்பட்ட ஒரு இந்தியாவே உருவாகி இருக்கும்.      

Link to comment
Share on other sites

தேசிய இனங்களின் சுயநிர்ணயக்  கோரிக்கை என்பது பிரிந்து செல்வதற்கான உரிமையே . அது பிரிப்பதற்கான கோரிக்கை அல்ல. எவ்வாறு ஒரு குடும்பத்தில் மனைவியைக் கணவன் சமமாக நடத்தாமல் இருந்து , மனைவிக்கு  விவாகரத்துப் பெறும் உரிமை இருக்கிறதோ அவ்வாறன ஒரு அடிப்படை ஜனநாயக உரிமையியே சுயநிர்ணய உரிமை. இதனைப் பிழையாகக் விளங்கிக் கொண்டு அது தனி நாட்டுக் காண கோரிக்கை என எழுதுவது தவறு. ஒரு நாட்டில் பேரினவாதம் இன்னொரு இனக் குழுமத்தை அடக்கும் போது அந்த அடக்கப்படும் இனக் குழுமம் தனது சுய நிர்ணயத்தைக் கூறுவது, தன்னைப் பாதுகாக்க. தினம் அடிக்கும் ஒரு கணவனுடன் வாழ வேண்டும் என்று அந்தப் பெண்ணுக்கு என்ன தலை எழுத்து? எனது கணவர் என்னை நன்றாக வைத்திருக்கிறார் அதனால் நீயும் கணவருடன் சேர்ந்து வாழு என்று சொல்ல எந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் உரிமை இல்லை. அடக்கப்படும் பெண் தான் தான் விவாகருத்துப் பெறுவதா சேர்ந்து வாழ்வதா என்று தீர்மானிக்க முடியும்.    

Link to comment
Share on other sites


சம்பந்தரின் போக்கிரித்  தனத்தை உடைக்கும் கஜன். விக்கினேசுவருனும்  கஜனும் இணைய வேண்டும் .

Link to comment
Share on other sites

இங்கு கோஷனும் இசையும் போடும் போட்டி கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. தமிழக தமிழனான என்னை கேட்டால் ஈழ விஷயத்தில் தமிழக தமிழர்களிடம் அனுதாபமும் , அன்புமும் இருக்கிறது. ஆனால் தெருவில் வந்து இறங்கி தினமும் போராட நேரமும், ஈழ தமிழர்களை போல் தன்னுடைய இந்திய அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமும் இல்லை.

அதனால் கொஷன் சொல்வதை போல் தமிழ் நாட்டை முற்றும் நம்பி இருக்க வேண்டாம். உங்களின் எதிர் காலத்தை நீங்களே உங்கள் தலைமைகளை வைத்து தான் தீர்க்க வேண்டும். வேறு வழி இல்லை. ஒரு வாரம் எங்களால் உங்களுக்காக போராட முடியும். தினமும் செய்ய முடியுமா. யார் வந்து சோறு போடுவார்கள். எங்களை ஆள்பவர்களை எங்களை விட நன்றாக தேர்ந்து எடுக்க இந்தியாவில் உள்ள எந்த மாநிலதவராலும் முடியாது. தமிழ் நாடு ஒரு அரசை தேர்ந்து எடுக்கிறது என்றால் 237 தொகுதிகளில் 200 ஐ ஒரே கட்சிக்கு கொடுப்பார்கள்.

திராவிட கட்சிகளுக்கு வாக்கு அளித்ததால் தான் இந்தியாவுடன் முரண் படாமல் ஈழத்தை போல் ஜனங்களை இழக்காமல் காப்பாற்ற முடிந்தது. மேலும் வளர்ச்சியையும் பெற முடிந்தது. இப்பொழுது இசை சொன்னதுபோல் இந்தியாவின் முதல் மாநிலங்களின் வரிசையில் தமிழ் நாடு உள்ளது. எனவே நான் முன்பு சொன்னது போல் தனி நாட்டுக்காக போராடாமல் இந்தியாவின் ஒரு அதிகாரமிக்க ஒரு மாநிலமாக வேண்டும் என்று ஈழம் போராடியிருந்தால் இந்நேரம் ஈழம் ஒரு வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாகி இருக்க முடியும். தமிழ் நாட்டை தன்னுடைய ஒரு அங்கமாக வைத்து கொண்டு ஒரு தனி தமிழ் ஈழம் உருவாக இந்திய விடவே விடாது. அது ஒரு கானல் நீர் தான் என்று வருத்ததுடன் சொல்லி கொள்கிறேன்.

கண்ணா..

உங்களுடைய கருத்துக்கள் தமிழகத்தின் நிலையை பிரதிபலிக்கின்றன. ஆனால் சிலவற்றில் எனக்கு முரண்பாடுகள் உண்டு..

1) தமிழகம் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என்று இங்கு யாரும் நினைக்கவில்லை..

2) தமிழக மக்கள் வாரக்கணக்கில் வீதியில் நின்று போராட வேண்டும் என்றும் இப்போது நினைக்கவில்லை.. இது நடந்திருக்க வேண்டியது முள்ளிவாய்க்கால் நேரத்தில்.. ஆனால் அப்போது நடைபெறாமைக்குப் பல காரணிகள்..

3) தமிழகத்தின் அரசியல் தலைமைகள் ஊழல் பேர்வழிகளிடம் சிக்கியிருப்பதே பல சீர்கேடுகளுக்கும் முக்கிய காரணம்.. முதன்மை மாநிலமாக இருந்தாலும் அதன் குடுமி மத்தியில் மாட்டிக் கொண்டுள்ளது.. ஜெயாவுக்கும், கலைஞருக்கும் தங்களைக் காப்பாற்றும் போராட்டமே பெரும் போராட்டமாக உள்ளது.

குட்டி கேரளம் மத்தியில் எத்தனை செல்வாக்கு செலுத்தகிறது!! (மலையாளத்தையும் செம்மொழி என்று அறிவிக்க வைத்துவிட்டார்களாமே.. அதுக்கு தொல்காப்பியம் தமது இலக்கியம் என்று சொல்லியுள்ளார்களாம்.. :o )

கேரளத்தின் அரசியல் தலைமைகள் டெல்லியில் செல்வாக்கு செலுத்த முடிகிறது.. காரணம் அவர்கள் ஊழல்களில் அகப்படுகிறவர்கள் அல்ல..

தமிழக மக்கள் செய்யவேண்டியது வீதியில் இறங்குதல் அல்ல.. மாறாக, தமது வாக்குரிமைகளை முறையாகப் பயன்படுத்துவது ஒன்றுதான் அவர்கள் செய்யவேண்டியது. திமுகவை விட்டால் அதிமுக.. அதிமுகவை விட்டால் திமுக என்கிற நிலை மாற வேண்டும்.

மக்கள் பலமே அரசியல் பலம். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் எப்பொழுதும் லேட்டாக முடிவு எடுப்பார்கள் என்பதற்கு ஈழ போராட்டங்களும் ஒரு எடுத்துகாட்டு. இலங்கை விடுதலை பெரும் 1948 இல் ஆங்கிலேயர்களிடம் பேசி ஒரு தனி நாடு பெற முயற்சி எடுக்காமல் அதற்க்கு பிறகு நாம் சிங்களத்திடம் மாட்டி கொண்டு விட்டோம் என்று குய்யோ  முய்யோ சத்தம் போடுவதால் என்ன பயன். இலங்கையில் எப்பொழுதும் இரண்டு தேசிய இனங்கள் இருக்கிறது, இரண்டு ராஜ்ஜியங்கள் இருந்தது என்று இப்பொழுது சொல்லி என்ன பயன். ஏன் இந்த சிந்தனையும், முன் எச்சரிக்கை நடவடிக்கையும் அப்பலொழுது இருந்த ஈழ தலைமைகள் எடுக்காமல் கோட்டை விட்டார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இனி ஒன்று பட்ட இலங்கையில் அதிகாரம் பெற்று தான் இருக்க வேண்டிய கட்டாயம் வேறு. இதையாவது ஈழ தலைமைகள் சரியாக செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

தமிழர்கள் எப்பொழுதும் லேட்டாக முடிவு எடுப்பார்கள் என்பதற்கு ஈழ போராட்டங்களும் ஒரு எடுத்துகாட்டு. இலங்கை விடுதலை பெரும் 1948 இல் ஆங்கிலேயர்களிடம் பேசி ஒரு தனி நாடு பெற முயற்சி எடுக்காமல் அதற்க்கு பிறகு நாம் சிங்களத்திடம் மாட்டி கொண்டு விட்டோம் என்று குய்யோ முய்யோ சத்தம் போடுவதால் என்ன பயன். இலங்கையில் எப்பொழுதும் இரண்டு தேசிய இனங்கள் இருக்கிறது, இரண்டு ராஜ்ஜியங்கள் இருந்தது என்று இப்பொழுது சொல்லி என்ன பயன். ஏன் இந்த சிந்தனையும், முன் எச்சரிக்கை நடவடிக்கையும் அப்பலொழுது இருந்த ஈழ தலைமைகள் எடுக்காமல் கோட்டை விட்டார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இனி ஒன்று பட்ட இலங்கையில் அதிகாரம் பெற்று தான் இருக்க வேண்டிய கட்டாயம் வேறு. இதையாவது ஈழ தலைமைகள் சரியாக செய்ய வேண்டும்.

இது சரியான கேள்வி!! படித்த மேட்டுக்குடி தமது சொந்த நோக்கங்களை தாயகத்தின் நோக்கமாக நினைத்ததால் அன்றே பிரச்சினை தீர்க்கப்படவில்லை. 1915 இல் சிங்களவர்கள் இலங்கை முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய வரலாற்றைக் கண்டபின்பும்கூட அவர்களது சிந்தனைகள் மாறவில்லை.. தென்னிலங்கையில் அவர்களுக்கு இருந்த நொடர்புகளை, சொத்துக்களை காப்பாற்றும் ஆர்வம் காரணமாக இருந்திருக்கலாம்..

அட.. அவ்வளவு தூரம் போகவேண்டாம்.. 1947 இல் பாகிஸ்தான் பிரிவினையைக் கண்ட பிறகாவது யோசித்திருக்கலாம்.. இலங்கையின் ஏட்டுப்படிப்பு நாட்டுக்கு உதவாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இசை
 
தமிழகம் அதிமுக , திமுக என்ற இரண்டு கட்சிகளிடம் மாட்டி கொண்டுள்ளனர் என்பது உண்மை தான். அவர்களிடம் வேறு வாய்ப்புகள் இல்லை. தேமுதிக விஜய காந்திற்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தார்கள் ஆனால் அவருடைய பல நடவடிக்கைகள் மக்களிடம் திராவிட கட்சிகளே பரவா இல்லை என்று மக்களை எண்ண தூண்டியது. இன்னும் 5 -10 வருடங்களுக்கு திராவிட கட்சிகளை தவிர வேறு மாற்று சக்தி வரும் என்று நான் நினைக்க வில்லை. 
 
மேலும் நீங்கள் ஊழலை பற்றி சொன்னீர்கள். ஆம் ஊழல் ஒரு பெரிய பிரச்னை. ஆனால் அது ஒரு தமிழ் நாடு பிரச்னை மட்டும் அல்ல. அது ஒரு பெரிய இந்திய பிரச்னை ஆகும். கேரளத்திலும் இப்பொழுது ஊழலை பற்றி தான் செய்திகள் அதிகம் வருகின்றன. கேரளத்தில் எப்பொழுதும் தேசிய கட்சிகள் தான் ஆட்சிக்கு வரும். ஆனால் தமிழ் நாட்டில் பிராந்திய திராவிட கட்சிகளே வரும். தேசிய கட்சிகளை எப்பொழுதும் தமிழக மக்கள் நம்பியதில்லை. நம்பவும் மாட்டார்கள். இந்த விசயத்தில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து கொண்டு, தங்களின் பிராந்திய கட்சிகள் மூலம் தேவைகளை நிறைவேற்றி கொள்வதே சரியான வழி என்று தெரிகிறது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சரியான கேள்வி!! படித்த மேட்டுக்குடி தமது சொந்த நோக்கங்களை தாயகத்தின் நோக்கமாக நினைத்ததால் அன்றே பிரச்சினை தீர்க்கப்படவில்லை. 1915 இல் சிங்களவர்கள் இலங்கை முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய வரலாற்றைக் கண்டபின்பும்கூட அவர்களது சிந்தனைகள் மாறவில்லை.. தென்னிலங்கையில் அவர்களுக்கு இருந்த நொடர்புகளை, சொத்துக்களை காப்பாற்றும் ஆர்வம் காரணமாக இருந்திருக்கலாம்..

அட.. அவ்வளவு தூரம் போகவேண்டாம்.. 1947 இல் பாகிஸ்தான் பிரிவினையைக் கண்ட பிறகாவது யோசித்திருக்கலாம்.. இலங்கையின் ஏட்டுப்படிப்பு நாட்டுக்கு உதவாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.. :lol::D

 

இலங்கையில்  படித்த தமிழன் 

தமிழர் வாழ்வை அழித்தான்

தமிழகத்தில் வெளியிலிருந்து வந்துவேசம் போட்டவன் அழித்தான்

இனியாவது தமிழர்கள்இ ஏமாறாமல்

தமது சொந்தக்காலில் நிற்கணும்

அதுவே இன்றைய தேவை

அதுவே தமிழருக்கான மீட்ச்சியைத்தரும்...

2016 அதற்கானதே..... :icon_idea:

Link to comment
Share on other sites

இசை

தமிழகம் அதிமுக , திமுக என்ற இரண்டு கட்சிகளிடம் மாட்டி கொண்டுள்ளனர் என்பது உண்மை தான். அவர்களிடம் வேறு வாய்ப்புகள் இல்லை. தேமுதிக விஜய காந்திற்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தார்கள் ஆனால் அவருடைய பல நடவடிக்கைகள் மக்களிடம் திராவிட கட்சிகளே பரவா இல்லை என்று மக்களை எண்ண தூண்டியது. இன்னும் 5 -10 வருடங்களுக்கு திராவிட கட்சிகளை தவிர வேறு மாற்று சக்தி வரும் என்று நான் நினைக்க வில்லை.

மேலும் நீங்கள் ஊழலை பற்றி சொன்னீர்கள். ஆம் ஊழல் ஒரு பெரிய பிரச்னை. ஆனால் அது ஒரு தமிழ் நாடு பிரச்னை மட்டும் அல்ல. அது ஒரு பெரிய இந்திய பிரச்னை ஆகும். கேரளத்திலும் இப்பொழுது ஊழலை பற்றி தான் செய்திகள் அதிகம் வருகின்றன. கேரளத்தில் எப்பொழுதும் தேசிய கட்சிகள் தான் ஆட்சிக்கு வரும். ஆனால் தமிழ் நாட்டில் பிராந்திய திராவிட கட்சிகளே வரும். தேசிய கட்சிகளை எப்பொழுதும் தமிழக மக்கள் நம்பியதில்லை. நம்பவும் மாட்டார்கள். இந்த விசயத்தில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து கொண்டு, தங்களின் பிராந்திய கட்சிகள் மூலம் தேவைகளை நிறைவேற்றி கொள்வதே சரியான வழி என்று தெரிகிறது.

விஜய்காந்துக்கு அவர் தனித்து நின்ற தேர்தலில் எத்தனை வீத வாக்குகள் கிடைத்தன?? அவர் தனது தொகுதியில் வெற்றிபெற்ற ஒரு விடயம்தான் அவரது சாதனை. மற்றும்படி அதிமுகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தினால்தான் எதிர்க்கட்சித் தலைவராக முடிந்தது.

கட்சியை ஆக்குவதும் அழிப்பதும்கூட மக்கள் பலம்தான். தனது முதல் தேர்தலில் பொதுவுடமைக் கட்சியுடன் கூட்டணி கண்ட வைகோ அவர்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்கவில்லை.. வேறு வழியில்லாமல் அவரும் பிற்காலங்களில் ஊழல் இயக்கங்களுடன் கூட்டணி கண்டார்.

இன்றைய காலகட்டத்தில் பாறைகளில் சிக்கியிருக்கும் நல்ல வைரங்களைக் கண்டுபிடிப்பது மக்களின் கடமை / பொறுப்பு..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இசை,
 
தமிழக மக்கள் விஜய காந்திற்கு இரண்டு முறை10 சதவிகத வாக்குகள் அளித்தார்கள். இந்த வாக்குகள் அனைத்தும் இரண்டு திராவிட கட்சிகள் மேல் வெறுப்பு உள்ளவர்கள் போட்ட வாக்குகள் ஆகும். அந்த சந்தர்பத்தை சரியாக தேமுதிக பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் 20 -25 % வாக்குகள் பெற்று தனி பெரும் கட்சியாக வரும் தேர்தலில் வர வாய்ப்பு இருந்தது. இது இப்பொழுது  எட்டா கனியாக போய் விட்டது. இப்பொழுது ஜெயாவின் மேல் வரும் தீர்ப்பை பொருத்து தமிழக அரசியல் உள்ளது. தீர்ப்பு வரும் 20 நாட்களில் வர இருக்கிறது. அந்த தீர்ப்பே ஒரு திராவிட கட்சி இருக்குமா இல்லையா என்ற மிக முக்கிய நிலையை தமிழக மக்களிடம் கொடுக்க உள்ளது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா,

மிகச் சரியாக சொன்னீர்கள்.

வாலி மேலே சிவப்பில் கோடிகாட்டியுள்ள, நீங்கள் சொல்லியுள்ள விடயங்கள்தான் அடிப்படை உண்மைகள்.

உங்கள் உண்மையான, தமிழ்நாட்டின் நிலப்பாட்டை 100% பிரதிபலித்த கருத்துக்களுக்கு நன்றி.

சாய்மன கதிரை சேகுவராக்கள் பத்தி எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர்களுக்கும் வாழ்வில் ஒரு பிடிப்பு தேவைதானே :)

Link to comment
Share on other sites

சாயாத கதிரையில்  இருந்து தானே புரட்சியாளர் கோஷான் சே  எழுதிறார். நாங்கள் தான் சாய்ந்த கதிரையில  இருந்து எழுதிறம்.

 

 

நியானி: சக களா உறுப்பினரை இழிவுபடுத்தும் வகையில் பெயரைத் திரித்தல் ஆகாது.

Link to comment
Share on other sites

இசை,

தமிழக மக்கள் விஜய காந்திற்கு இரண்டு முறை10 சதவிகத வாக்குகள் அளித்தார்கள். இந்த வாக்குகள் அனைத்தும் இரண்டு திராவிட கட்சிகள் மேல் வெறுப்பு உள்ளவர்கள் போட்ட வாக்குகள் ஆகும். அந்த சந்தர்பத்தை சரியாக தேமுதிக பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் 20 -25 % வாக்குகள் பெற்று தனி பெரும் கட்சியாக வரும் தேர்தலில் வர வாய்ப்பு இருந்தது. இது இப்பொழுது எட்டா கனியாக போய் விட்டது. இப்பொழுது ஜெயாவின் மேல் வரும் தீர்ப்பை பொருத்து தமிழக அரசியல் உள்ளது. தீர்ப்பு வரும் 20 நாட்களில் வர இருக்கிறது. அந்த தீர்ப்பே ஒரு திராவிட கட்சி இருக்குமா இல்லையா என்ற மிக முக்கிய நிலையை தமிழக மக்களிடம் கொடுக்க உள்ளது.

இத்துடன் இன்னொரு புறக்காரணியும் தமிழக அரசியலைப் புரட்டிப் போடப்போகிறது..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

**********

ஜெயா வின் மேல் குற்றம் என்று தீர்ப்பு வந்தாலும், அதிமுகவிற்க்குரிய வாக்கு வங்கியில் ஒரு மாற்றமும் வராது.

அந்த புறக்காரணி யாது? சீமானா! உங்க கேமெடி சென்ஸ் நல்லா இருக்கு இசை.

 

 

 

நியானி: திருத்தப்பட்ட கருத்துக்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

***********


நீங்கள் சாய்மனைக் கதிரை என்று எழுதியதுமட்டும் பொருள் செறிந்த கருத்தோ?? :o பந்தை சுவரில் எறிந்தால் அது திரும்பவும் மூஞ்சைக்குத்தான் வரும்.. :icon_idea::D

அந்த புறக்காரணி யாது? சீமானா! உங்க கேமெடி சென்ஸ் நல்லா இருக்கு இசை.


நீங்களாவே கற்பனை பண்ணுவது.. பிறகு அதுக்கு கருத்து எழுதுவது.. இப்பிடியே காலம் போகுது.. :(

 

 

 

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாய்மன ( மனை அல்ல) கதிரை என்பது வாய்சொல்லில் மட்டும் வீரர் என்பதை சுட்டும் விமர்சனக்கூற்று.

************.

எந்த பந்தையும் பார்த்து நான் அலட்டிக்கொளுவதில்லை. இதெல்லாம் ஜுஜுபி :)
எங்களை சஸ்பென்சில் வைக்காம எது அந்த புறக்காரணி என்று சொன்னால் நாங்களும் கருத்து சொல்லுவோமே? :)

நீங்க மட்டும் அறிந்த அந்த புறக்காரணம் யாரோ?

 

 

நியானி: ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.