Jump to content

பொய்யால் விளைகிற வன்முறைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யால் விளைகிற வன்முறைகள்

தமிழ்மணி. பெரு. அ.

poi.jpg

என் மனதுக்குப் பட்டதைப்பேசுகிறேன் என்று பொய்ச்சான்று வழங்க விரும்பவில்லை. அதற்காக, நான் சொல்வதெல்லாம் உண்மையும் அல்ல பொய்யும் அல்ல. அவை இரண்டுமே என்னிடம் அடிக்கடி உரசிக்கொள்ளவே செய்கிறது. இருப்பினும், இந்த இரண்டும் எப்படியோ பல வேளைகளில் ஒரே நேர்கோட்டில் சங்கமித்தும் விடுகின்றன.

மனம் என்று ஒன்று இருப்பதை நான் எப்போதும் ஏற்பதில்லை. மூளைதான் மனிதனுக்கு இருக்கிறதே ஒழிய மனம் என்ற வடிவம் ஏது?

இதய வடிவம் என்று ஒன்று இருக்கிறதேயொழிய, மனசாட்சி என்ற உருவம் இருப்பதில்லை. பொய்சாட்சியென்று ஒன்று புறப்படலாமேயொழிய, மனசாட்சியென்று ஒன்று புறப்படுவதில்லை. எனவே பொய்க்கு உள்ள வலிமை, பெரும்பாலும் உண்மைக்கு இருப்பதில்லை. இந்த உலகம் 99.9 சதவீத பொய்யர்களை வாழ்வித்துக்கொண்டிருக்கிறது. கர்த்தரின் பெயரால், அல்லாவின் பெயரால், ஒட்டு மொத்த கடவுள்களின் மதங்களின் பெயரால் அன்றாடம் பொய்தான் முதலீடாகிக் கொண்டிருக்கிறது.

எனவே மனம் பேசுகிறது என்று பொய் சொல்ல வேண்டிய அவசியமென்ன வந்தது? முதலில் யாருக்காக வாழ்கிறோம்; எதற்காக வாழ்கிறோம் என்பதில் ஒரு தெளிவு பிறந்தாக வேண்டும். வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்ளவும் பெருக்கிக்கொள்ளவும் இந்த கேள்வி அவசியமாகிறது. நமக்காக வாழவே என்று தொடங்குகிறோம் என்றால் அதற்குரிய எல்லை எதுவரை என்பது விளங்கிவிடும்.

பிறருக்காக என்றால் அதன் எல்லை தேவையில்லாமல் விரிந்துகொண்டே போகும். இந்த இரு கூறுகளில் மட்டுமல்ல பல தலைமுறைகளுக்குரிய எல்லைகளைத் தொடுவதற்கு தேவைகளும் அதன் விளைவுகளும் விரிந்துவிடும்.

மனிதன் பிறக்கும் போதே பல வேளைகளில் நல்லவனாகப் பிறக்கவில்லை. அவன் கெட்டவனாகப் பிறக்கிறான். பலவேளைகளில் வளரும்போதுதான் நல்லவனாகவோ கெட்டவனாகவோ முழுமையாக வார்த்தெடுக்கப்படுகின்றான். கருவிலே வளரும் குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் பேசும் சக்தியிருக்கிறது.பேசும் சக்தியின் வெளிபாடு ஒலியின் செயல்பாடாகி விடுகிறது. இங்கே மனசு என்பதென்ன? குழந்தைக்கும் முளையின் பதிவுதான். அதனுடைய வளர்ச்சியில் பாதிப்படைந்தால் மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்பதை விட முளை வளர்ச்சி குறைந்த குழந்தை என்றழைப்புத்தான் தகும்.

இத்தகையக் கட்டமைப்பிலிருந்து பிறந்து வளர்ந்து முழு உருவம் பெறும் போது ஏன் அவ்வளவு நல்லவனாக இருப்பதில்லை? ஒவ்வொரு மனிதனிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழக வேண்டியுள்ளது.நல்லவன் கெட்டவன் என்ற இரு வகை கூறுகளையும் நிறுத்துப்பாரக்கும் போது எவ்வளவு கெட்டவன்? எவ்வளவு நல்லவன்? என்ற கேள்விக்குப் பதிலைத் தயாரிக்க வேண்டியுள்ளது. ஏதோ ஒரு விசயத்தில் நல்லவனா?ஆளே மொத்தத்தில் நல்லவனா? இருப்பினும் உண்மையில் ஒட்டு மொத்தமாக ஒருவன் எப்படியும் நல்லவனாக இருக்கவே முடியாது. அப்படியென்றால் விவாதித்த விசயத்தில் மட்டுமே நல்லவனா? ஒருவன் எதுவரை நல்லவனாகயிருக்க முடியும்? எதுவரை கெட்டவனாகயிருக்க முடியும்? இந்த அளவு கோளை வைத்து சுற்றி வரவேண்டியுள்ளது.

மனைவியிடம் கணவன் நல்லவன் வேசம் போடவேண்டியுள்ளது, அதேபோன்று கணவனிடம் மனைவி நல்லவள் வேசம் போட வேண்டியுள்ளது. பெரும்பாலும் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்கு வாழ்கையில் நடித்துக்கொண்டே ஒரு தலைமுறையை உற்பத்தி செய்ய வேண்டிய குற்றவாளிகளாகயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவர்கள் உற்பத்திசெய்யும் குழந்தைகளும் அவர்களின் எண்ணத்தில் பயணத்தைத்தொடர்வதைத்தவிர வேறு வழியில்லை.

கணவன் – மனைவியிடையே யார் அழகு? யார் குறைவான அழகு? யார் சிகப்பு? யார் கருப்பு? யாருக்கு தரமான வருமான படிப்பு? யாருக்கு சமூக மரியாதை? இப்படிப்பட்ட எண்ணங்களுடன் அன்றாட வாழ்கையை எதிர் கொள்கிற உள் போராட்ட நெருக்கடிகளும் இதற்கு அழுத்தம் கொடுக்கின்ற நடைமுறை சிக்கல்களும் ஏராளம். எனவே, வாழ்க்கை வழிதடத்தில் அன்றாடம் கோடிக்கணக்கானவர்கள் உழன்றுக்கொண்டிருக்கிறார்கள் பல்வேறு பண்பாட்டுப்பின்னணி மொழிவழி.

ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளவே செய்கின்றன. அதனால் மனித வாழ்ககை ஏதோ ஒன்றுக்காக ஏங்குகிறது. அவை என்னவென்று தெரிவதற்குள் மோதிக்கொளகிறது. இது ஏதோவொரு தத்துவவிளக்கம் அல்ல! உண்மை எதுவென்ற தெரிந்துகொள்ள திட்டமிடவில்லை என்பதுதான் உண்மையை அறிவதற்கு தெளிவின்மையே காரணம். இதிலிருந்து தெரிவது மனித சமுதாயத்தில்ஓர் ஒழுங்கற்ற போக்கு காலங்காலமாக பின்பற்றப்பட் டு வருகிறது. அந்த ஒழுங்கற்றப்போக்கை சட்டங்களால் மட்டுமே அடக்கி ஆளமுடியும் என்ற நம்பிக்கை வழிகாட்டப்பட்டுள்ளது. அதனால் குற்றவியல் சட்டங்கள் மூலம் மிரட்டப்பட்டு, சிறைத்தண்டனை அதற்கு தீர்வு என்று திணிக்கப்பட்டுள்ளது.

முதலில் கடவுளை நம்புகிற மனிதன் ஏன் பாவத்தைச்செய்கிறான்? மதத்தால் நல்வழி காட்டப்பட்டுள்ள மனிதன் எதற்கு கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபடுகின்றான்? எனவே நல்வழிகள், நல்வழிகாட்டிகள் என்பது ஒருவனின் சுயசிந்தனையில மட்டுமல்ல. சூழ்நிலையிலும் பின்னப்பட்டுள்ளது என்பதுதான் நிஜம். இதேபோன்றுதான் எல்லா தவறுகளிலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிற மனிதன் அதற்குரிய காரணங்களை தேடுகிறான். அல்லது தேடி கண்டுபிடிக்கிற காரணத்தில் மாட்டிக்கொள்கிறான். இன்று உலகம் மோசமான மனித கொலைகளுக்குத்தயாராகி விட்டது. இதற்கு ஒன்று கடவுள்; மற்றது மதம் இந்த இரண்டுக்குமுள்ள பின்னணிகளும் மனிதனை நல்வழி படுத்துவதற்குரியது என்ற ஒப்புதல் வாக்கு மூலம் வெற்றிப்பெறுவதில்லை.

அதனால் மனிதன் உண்மையானவன் அல்ல. அவன் பிறப்பு பல கேள்விகளுக்குக் காரணமாகி விட்டது. அவன் வளர்பபு பல்வேறு கேலிகளுக்கு உதாரணமாகி விட்டது. எங்கே உண்மை? எதிலெல்லாம் பொய்? சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் போதே உண்மையற்ற நிலை. அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளிடம் பொய் கலந்த வாழ்க்கை. மதம், கடவுள் தத்துவங்களாலும் மக்களை நல்வழிபடுத்தமுடியாத பின்னடைவு!

இதேநிலையில் உலக அமைப்பு தொடருமேயானால் பொய் மட்டுமே கடவுளின் தத்துவமாகவும் மதம் மட்டுமே அதனுடைய ஆதிக்க சக்தியாகவும் இருக்க முடியும்.மனித தலைகளை வெட்டவும், மனித உடல்களைச் சிதைக்கவும் மத தீவிரவாதம் மனித தீவிரவாதமாக மாறிவிடுவதே பிறப்பின் கட்டளை என்றாகி விடுமோ? எனவே கருவின் குற்றம் எங்கிருந்து புறப்படுகிறது. அது எப்படியெல்லாம் வார்த்து வளர்க்கப்படுகிறது. பகுத்தறிவு உலகம் அதுபற்றி சிந்திக்குமா? மனிதனை மனிதன் அழித்து வாழும் வாழ்வைத் துறக்குமா?

http://vallinam.com.my/version2/?p=2005

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.