Jump to content

அகராதி தமிழில் கவிதை


Recommended Posts

அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!

அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!

அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!

அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!


அகமதி - செருக்கு 
அகோராத்திரம் - பகலும் இரவும் 
அந்தகாரம் - இருள் 

கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை 
கவிஞர் ; கே இனியவன்

Link to comment
Share on other sites

ஆருயிர் நண்பா .....!!!
ஆட்கொண்டாயடா தூய அன்பில் ...
ஆதாயம் எதுவும் இல்லாமல் ....
ஆதரவு ஒன்றே போதும் என்று ...
ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!!

ஆகம் நிறைந்து வாழ்பவனே ....
ஆகாரம் இன்றி வாழ்வேன் -உன் 
ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ...
ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ 
ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!!

ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ...
ஆச்சியம் போல் உருகுதடா மனசு ....
ஆணு தரும் நினைவுகள் தருவாய் ....
ஆதிவாரம் நாம் பெறும் ஆணு ....
ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!!

ஆத்திகனுக்கு சமனானவனே......
ஆதவன் போல் பிரகாசமானவனே .....
ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ...
ஆரி கொண்டேனடா உன் அன்பில் ...
ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!!

ஆகம் - நெஞ்சு 
ஆகூழ் -நல்வினைபயன் 
ஆணு -இன்பம் 
ஆசந்தி -சவபெட்டி 

கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை 
கவிஞர் ; கே இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகுந்த முயற்சி எடுத்து அகர ஆகார  வரிசைகளில் கவிதை எழுதியிருக்கிறீர்கள். நன்று.  கவிதைகளை இன்னும் செம்மைப்படுத்த இயலும் என்று நினைக்கிறேன்.

சேயோன் யாழ்வேந்தன்

 

Link to comment
Share on other sites

மிகுந்த முயற்சி எடுத்து அகர ஆகார  வரிசைகளில் கவிதை எழுதியிருக்கிறீர்கள். நன்று.  கவிதைகளை இன்னும் செம்மைப்படுத்த இயலும் என்று நினைக்கிறேன்.

சேயோன் யாழ்வேந்தன்

ஆம் நிச்சயம் உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கிறேன் 
நன்றி 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.