Jump to content

புளியம்பொக்கணை நாகதம்பிரானுக்கு இன்று பொங்கல் உற்சவம்


Recommended Posts

puliyampokkanai%20659563.jpg

 

வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறுகிறது. இதற்காக நேற்று மீசாலை தட்டாங்குளம் நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து பண்டங்கள் கொண்டு செல்லப்பட்டன.
 
கடந்த திங்கட்கிழமை மாலை நாகதம்பிரான் ஆலயத்தில் விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து மீசாலை தட்டாங்குளம் நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து பொங்கல் திருவிழாவுக்கான வழுந்துப் பானைகள், பழங்கள் மற்றும் பூசைக்கு தேவையான பண்டங்கள் மரபு முறைப்படி மாட்டுவண்டில்களில் எடுத்துச் செல்லப்பட்டன்.
 
நேற்று இரவு பரந்தன் சந்தியை அடைந்த பண்ட ஊர்வலம், இன்று காலை கண்டாவளை நோக்கிப் புறப்பட்டது. இன்று பிற்பகல் 2 மணிக்கு கண்டாவளை சந்தியை அடையும் ஊர்வலம், மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலயத்தை நோக்கி செல்லும். நள்ளிரவு ஆலயத்தை அடைந்ததும், அங்கு விசேட பொங்கல் உற்சவம் நடைபெறும்.
 
puliyampokkanai%20659562.jpg
 
puliyampokkanai%20659561.jpg
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்ட ஊர்வலம் அருமையான காட்சி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் ஒருமுறை இவ்விழாவுக்கு சென்றிருக்கின்றேன்

மிகவும் சிறப்பாகக்கொண்டாடப்படும்விழா இது

காணக்கண்கள் கோடி வேண்டும்

 

படங்களைப்பார்க்கும் போதே அங்கு நாமே நிற்கும் எண்ணம் வருகிறது...

Link to comment
Share on other sites

தலைமுறை பல கடந்த மாட்டுவண்டி பயணம் 

 

மேற்க்கத்தேயர்கள் கூட வியந்து போற்றும் எங்கள் பாரம்பரியம் இண்று எம்மவர் பலரால் கைவிடப்பட்டு மேலைத்தேய மோகத்தில் உழல்கிண்ற இண்றைய சூழலில் ஆங்காங்கே எமது பண்பாடு பாரம்பரியம் பேணப்படுகிண்றமை சற்று ஆறுதலே.அந்த வகையில் கிளிநொச்சி மாவடட்டத்தின் பல இடங்களில் இண்றும் பல பாரம்பரிய விடையங்களை பேணுகிறார்கள். அவ்வாறு தொண்று தொட்டு தமது பாரம்பரிய முறைப்படி பண்டம் எடுக்கப்படும் முறையை பேணி வருகிறார்கள் புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில்.

 
 
541068_284722741661478_1009263892_n.jpg
 
பங்குனி உத்தரத்தில் தம்பிரானுக்கு பொங்கல் விழா எடுக்கிறார்கள்.அந்த நிகள்வுக்காக புளியம்பொக்கணையில் இருந்து மீசாலை புத்துர் சந்தி வரை பல கிலோமீட்டர் துரம் பயணிக்கிறார்கள் மாட்டு வண்டியில் இந்த மாட்டுவண்டி பயணமானது தலைமுறைகள் பல தாண்டியும் தொடர்கிறது. பொங்கல் விழா நிகள்வுகள் ஆரம்பமாகும் நாளண்று இவர்களுடைய மாட்டு வண்டி பயணம் ஆரம்பமாகிறது. 
மாட்டு வண்டியில் தங்களுககு தேவையான பொருட்களுடன் மாடுகளுக்கு தேவையான வைக்கோல் போண்ற வற்றுடன் புளியம் பொக்கணையில் இருந்து புறப்படடு ஏ முப்பத்தைந்து வீதியை அடைந்து அங்கிருந்து பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ ஒன்பது வீதியுடாக அனையிறவு முகமாலை போண்ற இடங்களினுடாக பயணித்து மீசாலை புத்துர் சந்தியை அடைகிறார்கள். 
அங்கே அமைந்திருக்கிண்ற நாகதம்பிரான் ஆயத்தில் பூசைகள் இடம்பெறுகிண்றன. அத்துடன் மீசாலை சாவகச்சேரி போண்ற ஊர்களில் தண்டல் இடம்பெறுகிண்றதுடன் இத்தண்டலின் போது மக்கள் கோழி இழநீர் அரிசி பொங்கலுக்கு தேவையான பொருட்கள் எனபவற்றை வழங்குவதோடு மதிய நேரங்களி அன்னதானமும் இடம்பெறுகிண்றது.
 
இவ்வாறு அங்கே தங்கி இருக்கும். இவர்கள் பொங்கல் தினத்திற்கு முதன்நாள் மீசாலையில் இருந்து புறப்பட்டு ஏ ஒன்பது வீதியூடே பயணித்து பரந்தனை அடைந்து அங்கிருந்து ஏ முப்பத்தைந்து வீதியுடாக கண்டா வளையை அடைந்து அங்கிருந்து ஆலயத்தை நோக்கி பயணிக்கிண்றனர். வரும் வழிகளில் அடியார்களினால் அன்னதானம் வழங்கப்படுகிண்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
487603_284723994994686_1702637167_n.jpg
 
 
இவ்வாறானதொரு மாட்டு வண்டி பயணத்தின்போது ஆலயம் நோக்கி பண்டத்துக்குரிய பொருட்களோடு வந்துகொண்டிருந்த போது ஆனையிறவில் வைத்து ஒல்லாந்தர்கள் வழிமறித்ததாகவும் வழிமறித்து இவர்களை சோதனை இட்டதாகவும் இவர்களை கேலிசெய்ததாகவும் தமது மதத்திற்கு மாறும்படி கூறியதாகவும் இல்லையெனில் கொண்று விடுவோம் எண்று மிரட்டியதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் பூசகர் நாகதம்பிரானை வளிபட்டு வேட்டி ஒண்றை முறுக்கி பொங்கல் பானையில் இட்டதாகவும் உடனே ஜந்துதலை நாகபாம்பு தொண்றியதாகவும் உடனே வழிமறித்த ஒல்லாந்தர்கள்
 
பொங்கல் தினத்தண்று மாலை மாட்டுவண்டிகள் ஆலயத்தை வந்தடைகிண்றன. மக்களால் வழங்கப்பட்ட நேர்த்திப்போருட்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பண்டம் எடுக்கும் இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்குவைத்து பண்டம் எடுக்கும் நிகள்வு இடம்பெறும்.
பொங்கல் விழா நிகழ்வை காண்பதற்கு வன்னி பெருநிலப்பரப்பின் பல பகுதிகளில் இருந்தும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம் பெயர் நாடுகளில் இருந்தும் பல லடச்சக்கணக்கான மக்கள் வருகிண்நனர். இப்பெரும் பொங்கலண்று தருசிக்க வருகிண்ற பக்த அடியார்களுக்கு நாகதம்பிரான் அவர்களது கண்களுக்கு புலப்பட்டு காட்சி கொடுக்கும் அறப்புதமும் இடம்பெற்று வருகிண்றது. இப்பொங்கல் விழாவானது ஏறக்குறைய ஜநுறு ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருவதாக ஆலய தல புராண நுலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் இவ்வாலயத்தில் ஆகமம் சார்ந்த கிரியைகள் இடம் பெறுவதுடன் ஆகமம் சாராத கிரியைகளும் இடம்பெற்ற வருகிண்றது. இவ்வாலயத்தில் அரசமரப்பொந்திலுள்ள பரம்பரை நாகபாம்புகளுக்கு நீதிநாயக முதலியாரின் பரம்பரையிலிருந்து வந்த ஆண்வழி உரித்துடையோர் பூசகர்களாக இருந்து வருகிண்றனர் என்றும் தர்மகத்தா சபையினர் தெரிவித்தன்ரர்.
இவ்வாறு அருள்மிகு நாகதம்பிரான் ஆலயத்தில் ஆகமம் சாராத வளிபாடுகளும் பண்டம் எடுக்கும் நிகள்வுகளும் தனித்துவமாக இடம்பெற்று வருகிண்றன.வன்னி பெருநிலப்பரப்பில் கிராமிய வழிபாட்டில் முக்கியம் பெற்ற ஆலயமாக அருள்மிக கரையச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயம் விளங்குகிண்றது.
                                                                                                                                                                                                           சு.முரளீதரன்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு

தமிழரின் ஆவணங்களும் பாதுகாப்படவேண்டியவையும் இவை..

Link to comment
Share on other sites

ஆடு  கோழிசேவல்  மாடு  என்று  விடிய  ஏலம்  போகும் கோழி  வாங்கலாம்  என்று  கொண்டுபோன  காசு  ஐஸ்கிரீம்  குடிச்சு  முடிச்சிடும் அப்புறம்  என்ன  ஒரு பிலாப்பழம்  வாங்கிக்கொண்டு  வீட்டுக்கு  வாறது  சமாளிப்புக்கு ......

 

மாண்டு போன  கலர்  கனவுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி  ஆதவன்...!

Link to comment
Share on other sites

நானும் ஒன்று இரண்டு முறை போனனான். மறக்க முடியாத சந்தோஷமான நாட்கள் மீண்டும் அந்த காலத்துக்கு போக மனம் விரும்புது. அத்துடன் வற்றாப்பளை அம்மன் பொங்கல், பூதூர் நாகதம்பிரான் பொங்கல் போன்றவையும் மறக்கமுடியதவை. அவை ஒரு அழகான காலங்கள் ........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.