Jump to content

புளியம்பொக்கணை நாகதம்பிரானுக்கு இன்று பொங்கல் உற்சவம்


Recommended Posts

puliyampokkanai%20659563.jpg

 

வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறுகிறது. இதற்காக நேற்று மீசாலை தட்டாங்குளம் நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து பண்டங்கள் கொண்டு செல்லப்பட்டன.
 
கடந்த திங்கட்கிழமை மாலை நாகதம்பிரான் ஆலயத்தில் விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து மீசாலை தட்டாங்குளம் நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து பொங்கல் திருவிழாவுக்கான வழுந்துப் பானைகள், பழங்கள் மற்றும் பூசைக்கு தேவையான பண்டங்கள் மரபு முறைப்படி மாட்டுவண்டில்களில் எடுத்துச் செல்லப்பட்டன்.
 
நேற்று இரவு பரந்தன் சந்தியை அடைந்த பண்ட ஊர்வலம், இன்று காலை கண்டாவளை நோக்கிப் புறப்பட்டது. இன்று பிற்பகல் 2 மணிக்கு கண்டாவளை சந்தியை அடையும் ஊர்வலம், மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலயத்தை நோக்கி செல்லும். நள்ளிரவு ஆலயத்தை அடைந்ததும், அங்கு விசேட பொங்கல் உற்சவம் நடைபெறும்.
 
puliyampokkanai%20659562.jpg
 
puliyampokkanai%20659561.jpg
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்ட ஊர்வலம் அருமையான காட்சி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் ஒருமுறை இவ்விழாவுக்கு சென்றிருக்கின்றேன்

மிகவும் சிறப்பாகக்கொண்டாடப்படும்விழா இது

காணக்கண்கள் கோடி வேண்டும்

 

படங்களைப்பார்க்கும் போதே அங்கு நாமே நிற்கும் எண்ணம் வருகிறது...

Link to comment
Share on other sites

தலைமுறை பல கடந்த மாட்டுவண்டி பயணம் 

 

மேற்க்கத்தேயர்கள் கூட வியந்து போற்றும் எங்கள் பாரம்பரியம் இண்று எம்மவர் பலரால் கைவிடப்பட்டு மேலைத்தேய மோகத்தில் உழல்கிண்ற இண்றைய சூழலில் ஆங்காங்கே எமது பண்பாடு பாரம்பரியம் பேணப்படுகிண்றமை சற்று ஆறுதலே.அந்த வகையில் கிளிநொச்சி மாவடட்டத்தின் பல இடங்களில் இண்றும் பல பாரம்பரிய விடையங்களை பேணுகிறார்கள். அவ்வாறு தொண்று தொட்டு தமது பாரம்பரிய முறைப்படி பண்டம் எடுக்கப்படும் முறையை பேணி வருகிறார்கள் புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில்.

 
 
541068_284722741661478_1009263892_n.jpg
 
பங்குனி உத்தரத்தில் தம்பிரானுக்கு பொங்கல் விழா எடுக்கிறார்கள்.அந்த நிகள்வுக்காக புளியம்பொக்கணையில் இருந்து மீசாலை புத்துர் சந்தி வரை பல கிலோமீட்டர் துரம் பயணிக்கிறார்கள் மாட்டு வண்டியில் இந்த மாட்டுவண்டி பயணமானது தலைமுறைகள் பல தாண்டியும் தொடர்கிறது. பொங்கல் விழா நிகள்வுகள் ஆரம்பமாகும் நாளண்று இவர்களுடைய மாட்டு வண்டி பயணம் ஆரம்பமாகிறது. 
மாட்டு வண்டியில் தங்களுககு தேவையான பொருட்களுடன் மாடுகளுக்கு தேவையான வைக்கோல் போண்ற வற்றுடன் புளியம் பொக்கணையில் இருந்து புறப்படடு ஏ முப்பத்தைந்து வீதியை அடைந்து அங்கிருந்து பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ ஒன்பது வீதியுடாக அனையிறவு முகமாலை போண்ற இடங்களினுடாக பயணித்து மீசாலை புத்துர் சந்தியை அடைகிறார்கள். 
அங்கே அமைந்திருக்கிண்ற நாகதம்பிரான் ஆயத்தில் பூசைகள் இடம்பெறுகிண்றன. அத்துடன் மீசாலை சாவகச்சேரி போண்ற ஊர்களில் தண்டல் இடம்பெறுகிண்றதுடன் இத்தண்டலின் போது மக்கள் கோழி இழநீர் அரிசி பொங்கலுக்கு தேவையான பொருட்கள் எனபவற்றை வழங்குவதோடு மதிய நேரங்களி அன்னதானமும் இடம்பெறுகிண்றது.
 
இவ்வாறு அங்கே தங்கி இருக்கும். இவர்கள் பொங்கல் தினத்திற்கு முதன்நாள் மீசாலையில் இருந்து புறப்பட்டு ஏ ஒன்பது வீதியூடே பயணித்து பரந்தனை அடைந்து அங்கிருந்து ஏ முப்பத்தைந்து வீதியுடாக கண்டா வளையை அடைந்து அங்கிருந்து ஆலயத்தை நோக்கி பயணிக்கிண்றனர். வரும் வழிகளில் அடியார்களினால் அன்னதானம் வழங்கப்படுகிண்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
487603_284723994994686_1702637167_n.jpg
 
 
இவ்வாறானதொரு மாட்டு வண்டி பயணத்தின்போது ஆலயம் நோக்கி பண்டத்துக்குரிய பொருட்களோடு வந்துகொண்டிருந்த போது ஆனையிறவில் வைத்து ஒல்லாந்தர்கள் வழிமறித்ததாகவும் வழிமறித்து இவர்களை சோதனை இட்டதாகவும் இவர்களை கேலிசெய்ததாகவும் தமது மதத்திற்கு மாறும்படி கூறியதாகவும் இல்லையெனில் கொண்று விடுவோம் எண்று மிரட்டியதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் பூசகர் நாகதம்பிரானை வளிபட்டு வேட்டி ஒண்றை முறுக்கி பொங்கல் பானையில் இட்டதாகவும் உடனே ஜந்துதலை நாகபாம்பு தொண்றியதாகவும் உடனே வழிமறித்த ஒல்லாந்தர்கள்
 
பொங்கல் தினத்தண்று மாலை மாட்டுவண்டிகள் ஆலயத்தை வந்தடைகிண்றன. மக்களால் வழங்கப்பட்ட நேர்த்திப்போருட்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பண்டம் எடுக்கும் இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்குவைத்து பண்டம் எடுக்கும் நிகள்வு இடம்பெறும்.
பொங்கல் விழா நிகழ்வை காண்பதற்கு வன்னி பெருநிலப்பரப்பின் பல பகுதிகளில் இருந்தும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம் பெயர் நாடுகளில் இருந்தும் பல லடச்சக்கணக்கான மக்கள் வருகிண்நனர். இப்பெரும் பொங்கலண்று தருசிக்க வருகிண்ற பக்த அடியார்களுக்கு நாகதம்பிரான் அவர்களது கண்களுக்கு புலப்பட்டு காட்சி கொடுக்கும் அறப்புதமும் இடம்பெற்று வருகிண்றது. இப்பொங்கல் விழாவானது ஏறக்குறைய ஜநுறு ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருவதாக ஆலய தல புராண நுலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் இவ்வாலயத்தில் ஆகமம் சார்ந்த கிரியைகள் இடம் பெறுவதுடன் ஆகமம் சாராத கிரியைகளும் இடம்பெற்ற வருகிண்றது. இவ்வாலயத்தில் அரசமரப்பொந்திலுள்ள பரம்பரை நாகபாம்புகளுக்கு நீதிநாயக முதலியாரின் பரம்பரையிலிருந்து வந்த ஆண்வழி உரித்துடையோர் பூசகர்களாக இருந்து வருகிண்றனர் என்றும் தர்மகத்தா சபையினர் தெரிவித்தன்ரர்.
இவ்வாறு அருள்மிகு நாகதம்பிரான் ஆலயத்தில் ஆகமம் சாராத வளிபாடுகளும் பண்டம் எடுக்கும் நிகள்வுகளும் தனித்துவமாக இடம்பெற்று வருகிண்றன.வன்னி பெருநிலப்பரப்பில் கிராமிய வழிபாட்டில் முக்கியம் பெற்ற ஆலயமாக அருள்மிக கரையச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயம் விளங்குகிண்றது.
                                                                                                                                                                                                           சு.முரளீதரன்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு

தமிழரின் ஆவணங்களும் பாதுகாப்படவேண்டியவையும் இவை..

Link to comment
Share on other sites

ஆடு  கோழிசேவல்  மாடு  என்று  விடிய  ஏலம்  போகும் கோழி  வாங்கலாம்  என்று  கொண்டுபோன  காசு  ஐஸ்கிரீம்  குடிச்சு  முடிச்சிடும் அப்புறம்  என்ன  ஒரு பிலாப்பழம்  வாங்கிக்கொண்டு  வீட்டுக்கு  வாறது  சமாளிப்புக்கு ......

 

மாண்டு போன  கலர்  கனவுகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி  ஆதவன்...!

Link to comment
Share on other sites

நானும் ஒன்று இரண்டு முறை போனனான். மறக்க முடியாத சந்தோஷமான நாட்கள் மீண்டும் அந்த காலத்துக்கு போக மனம் விரும்புது. அத்துடன் வற்றாப்பளை அம்மன் பொங்கல், பூதூர் நாகதம்பிரான் பொங்கல் போன்றவையும் மறக்கமுடியதவை. அவை ஒரு அழகான காலங்கள் ........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.