Jump to content

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!


Recommended Posts

தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு! கையும் களவுமாக பிடிபட்ட திருமலை யுவதி! யாழில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 08:41.49 AM GMT ]
chain-robber-0.jpg
யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை குறித்த தேர் திருவிழாவின் போது வயதான பெண் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் குறித்த பெண் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு குறித்த பெண் நின்றுள்ளார்.

இதனையடுத்து வயதான பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தன்னுடன் சேர்த்து 3 பெண்கள் வந்ததாகவும் தாங்கள் திருட்டு நோக்கத்திற்காகவே வந்திரு ப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிடிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடைக்குள்ளிரு ந்து கைத்தொலைபேசி ஒன்றும் 15ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆலயத்திலிருந்த பக்தர்களிடம் அறுக்கப்பட்ட 4தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இந்தப் பெண்ணுடன் வந்த மற்றைய இரு பெண்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

chain-robber-02.JPG

chain-robber-03.JPG

chain-robber-04.JPG

chain-robber-01.JPG

 
லங்காசிறி
Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வளர்ச்சியடைந்த ஜனநாயக விழுமியங்களுக்கும் மனிதநேயத்துக்கும் ஒரளவிலேனும் மதிப்பளிக்கும் நாடுகளில் வாழ்ந்தாலும் இன்னமும் சின்னப்புத்தி மாறவில்லை.

 

காவல்துறையால் கைதுசெய்யப்பட்டவர் தற்போதைய நிலையில் குற்றம்சாட்டப்பட்டவரே தவிர குற்றவாளியென நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவரல்ல. இப்படியிருக்கையில் ஒரு செய்தியை அடிப்படையாகவைத்து படங்களை வெளியிடுவது எந்தவிதத்திலும் பத்திரிகைத் தர்மமில்லை.

 

இது வக்கிரங்கள் நிறைந்த இணையவுலகின் இன்னுமொரு அசிங்கமான முகத்தை லங்கசிறி இணையத்தளம் காட்டியிருக்கு.

 

படம் வெளியிட்டது, முற்றிலும் வன்மையாகக் கண்டிக்கக்கூடிய விடையம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் கண்டிக்கத் தக்கவிடயம். இந்தப் பெண்ணின் படத்தைப் பிரசுரித்தது வருந்தத் தக்கது. கேவலமான பத்திரிகைக் கலாசாரம். கண்களை மறைத்துவிட்டாவது போட்டிருக்கலாம்.

Spoiler
பெண் பொலிஸாரின் கால்கள் மிகவும் அழகாக உள்ளது, இதைத் தான் நாம் எமது பெண்களிடமும் எதிர்பார்க்கிறோம்!
Link to comment
Share on other sites

Elugnajiru கூறியது சரி , நிர்வாகம் இந்த படங்களை நீக்கி செய்தியை மட்டும் போடவும்.

Link to comment
Share on other sites

அந்த பெண்ணே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.. மேலும் 4 சங்கிலிகள் கைப்பற்றுள்ளன.

ஆகவே.. குற்றவாளிகள் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படுதலில் எவ்வித தவறுமே இல்லை!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

என் அன்புக்குரிய சகோதரி!
கடந்த சில நாட்களில் உன்னை சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் நீ நகை திருடிவிட்டாயாம் என்று கொந்தளித்த மகா வீரர்கள் கண்டு. மிக்க மனவேதனை அடைந்தேன்.நீ கள்ளி இருந்துவிட்டுபோகட்டும்.நீ என் சகோதரி.நீ என் இரத்தம்.நீ என் மொழி.இதை கண்ணீரோடுதான் எழுதுகின்றேன்.உன்னை கள்ளியென இந்த உலகத்துக்கு அறிவித்த சகலபேரின் மதுரைகளும் நிச்சயம் எரியும்.இவர்களின் குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தர்மத்தால் தண்டிக்கப்படுவார்கள்.நான் மிக்க இரக்கப்படுகின்றேன்.நீதித்துறைகளும் காவல்துறையும் தீர்ப்பளிக்க முன்பு எங்கள் சமுகத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான மனிமாபிமானம் அற்ற ஒரு நாகரிகமற்ற ஒருவனே ஒருத்தியோ அவளை படம்பிடித்து முகநூல்களில் போட்டு பெருமை தேடிக்கொண்டதாக நினைத்தால் அது தவறு.அதை செய்தவர் மிகவும் கீழ்த்தரமான பண்பாட்டில் பிறந்தவர்களாகவே இருக்கமுடியும்.அவள் திருக்கோணமலையை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள்.அவள் எந்த இடமாக இருந்தாலும் அவள் என் சோதரி.கிட்டதட்ட முள்ளிவாய்க்காலில் எங்கள் சோதரிகள் மனதாபிமானம் அற்ற வெறியர்களால் எப்படி சீரிழிக்கப்பட்டார்களோ அது போன்றதன் இன்னொரு வடிவம்தான் இது.எங்களுக்குள் இருக்கின்றார்கள் இன்னமும் துச்சாதனர்கள்.முகநூல்களை பார்த்தேன் ஆண்களை விட பெண்கள் பலரை அவளை அவமானப்படுத்தியிருந்தார்கள்.ஏழைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் பசியிலும் படடிணியிலும் கிடக்க கொளுத்த தாலிகளோடும் நகைகளோடும் தங்கள் ஆடம்பரங்களையும் பணத்திமிரையும் காட்ட முனையும் ஒரு சமுகத்தில் அவள் கைவைத்திருக்கின்றாள்? அவள் ஒரு எழையின் சோற்றை திருடவில்லை.திருட்டு தவறுதான்.ஆனால் திருடியவளின் உரிமைகளை கையிலெடுக்க எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. அவள் வாழவேண்டியள்.உங்களால் வசைபாடவேண்டியவள் அல்ல.எனக்கு யேசுநாதரின் வாக்கியங்கள் ஞாபகம் வருகின்றது.உங்களில் எந்த தவறும் செய்யாதவர்கள் இருந்தால்! என்பதுதான்!ஊடகங்களாலும் முகநூல்களாலும் அவமானப்படுத்தப்படும் என் இரத்ததுக்காக இரக்கப்படுகின்றேன்.வேதனை அடைகின்றேன். 

 

முகநூல் பதிவு 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

Spoiler
பெண் பொலிஸாரின் கால்கள் மிகவும் அழகாக உள்ளது, இதைத் தான் நாம் எமது பெண்களிடமும் எதிர்பார்க்கிறோம்!

 

Spoiler
இருக்கிற சோலி காணாதெண்டு......இந்தாளுக்கு சில்லெடுத்த சோலி வேறை.. :lol:  :D 
Link to comment
Share on other sites

என் அன்புக்குரிய சகோதரி!

கடந்த சில நாட்களில் உன்னை சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் நீ நகை திருடிவிட்டாயாம் என்று கொந்தளித்த மகா வீரர்கள் கண்டு. மிக்க மனவேதனை அடைந்தேன்.நீ கள்ளி இருந்துவிட்டுபோகட்டும்.நீ என் சகோதரி.நீ என் இரத்தம்.நீ என் மொழி.இதை கண்ணீரோடுதான் எழுதுகின்றேன்.உன்னை கள்ளியென இந்த உலகத்துக்கு அறிவித்த சகலபேரின் மதுரைகளும் நிச்சயம் எரியும்.இவர்களின் குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தர்மத்தால் தண்டிக்கப்படுவார்கள்.நான் மிக்க இரக்கப்படுகின்றேன்.நீதித்துறைகளும் காவல்துறையும் தீர்ப்பளிக்க முன்பு எங்கள் சமுகத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான மனிமாபிமானம் அற்ற ஒரு நாகரிகமற்ற ஒருவனே ஒருத்தியோ அவளை படம்பிடித்து முகநூல்களில் போட்டு பெருமை தேடிக்கொண்டதாக நினைத்தால் அது தவறு.அதை செய்தவர் மிகவும் கீழ்த்தரமான பண்பாட்டில் பிறந்தவர்களாகவே இருக்கமுடியும்.அவள் திருக்கோணமலையை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள்.அவள் எந்த இடமாக இருந்தாலும் அவள் என் சோதரி.கிட்டதட்ட முள்ளிவாய்க்காலில் எங்கள் சோதரிகள் மனதாபிமானம் அற்ற வெறியர்களால் எப்படி சீரிழிக்கப்பட்டார்களோ அது போன்றதன் இன்னொரு வடிவம்தான் இது.எங்களுக்குள் இருக்கின்றார்கள் இன்னமும் துச்சாதனர்கள்.முகநூல்களை பார்த்தேன் ஆண்களை விட பெண்கள் பலரை அவளை அவமானப்படுத்தியிருந்தார்கள்.ஏழைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் பசியிலும் படடிணியிலும் கிடக்க கொளுத்த தாலிகளோடும் நகைகளோடும் தங்கள் ஆடம்பரங்களையும் பணத்திமிரையும் காட்ட முனையும் ஒரு சமுகத்தில் அவள் கைவைத்திருக்கின்றாள்? அவள் ஒரு எழையின் சோற்றை திருடவில்லை.திருட்டு தவறுதான்.ஆனால் திருடியவளின் உரிமைகளை கையிலெடுக்க எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. அவள் வாழவேண்டியள்.உங்களால் வசைபாடவேண்டியவள் அல்ல.எனக்கு யேசுநாதரின் வாக்கியங்கள் ஞாபகம் வருகின்றது.உங்களில் எந்த தவறும் செய்யாதவர்கள் இருந்தால்! என்பதுதான்!ஊடகங்களாலும் முகநூல்களாலும் அவமானப்படுத்தப்படும் என் இரத்ததுக்காக இரக்கப்படுகின்றேன்.வேதனை அடைகின்றேன். 

 

முகநூல் பதிவு 

 

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மசனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

 

அண்ணா

 

இதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கா?

 

கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா

தயாரித்து வெளியிட

அதை உங்கள் இணையத்தில் வெளியிட்டு

பார்க்கின்றவர்களிடமும் விளம்பரத்தின் மூலமும்

காசு சம்பாதித்தவர் நீங்கள்

 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத

ஒரு பெண்ணை குற்றம் சாட்ட உங்களுக்கு

என்ன தகுதி இருக்கு

 

 

போலி முகம் ஒன்றின் பின்

மறைந்திருப்பதால் மட்டும்

இங்கு எவரும் சுற்றவாளிகள் அல்ல

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்.... அதுகும் பெண், திருட்டை செய்யும் போது...
தனக்கு வாழ வேறு வழி தெரியாத கட்டத்தில் தான்.... அதனைச் செய்ய முனைகிறார்.
இவருக்கு என்ன கஷ்டமோ... கணவர் உயிருடன் உள்ளாரா என்று கூட தெரியாது.
அவரை கண்டித்து... அனுப்பியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
களவு செய்து மாட்டிய பெண், முகம் கொஞ்சம் நல்லா, இருந்தால் போதும், இரங்க, அண்ணன்மார் வந்து விடுவார்கள்.  :wub:
 
அங்கே காவல் துறை அதிகாரிகள் விசாரித்தே அழைத்துப் போகின்றனர். இலங்கை போன்ற, கல்வி அறிவு ஆசியாவில் அதிகமான நாடுகளில், இது போன்ற சிறு திருட்டு விசயங்களுக்கு, தகுந்த விசாரணை இன்றி, ஒரு பெண்ணை பொலிசார் கைது செய்ய மாட்டார்கள்.
 
மேலும் ஒரு பெண் அப்பாவியாயிருந்தால், உயிரே போனாலும், தான் திருட்டுப் பின்னணி கொண்டவர் அல்ல, என்பதை நின்று நிரூபித்திருப்பார். :icon_idea:
 
எனவே சட்டம் தனது கடமை செய்ய விடுவோம். மேலும் அங்கே அவர் இருப்பது, ஆபத்தானதாக இருந்தால் (மக்கள் தாக்கக் கூடும்), பொலிசாருடன் வெளியேறுவது தான், நல்லது. :rolleyes:
 
இது தொடர்பான தமிழ் தள செய்திகள் தவறானதாக இருக்கலாம்.  :o
 
வாலி,
 
அதெல்லாம், பின்னால வார இன்சுபெட்டர் ஐயா, விவரமா கவனிச்சுக் கொள்ளுவாரு. கவலைப் படாதீங்கோ... :icon_mrgreen:
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடியா கொள்ளையடிக்கிற டக்கிளஸ்.. கருணா.. என்று அரசியல்வாதிகள் இருக்கினம். அவையை ஒருத்தரும் ஒன்றும் கேட்கமாட்டினம்...?!

 

கோயிலுக்கு படம் காட்ட நகை போடுறவையிட்ட அதைப் பறிக்கத்தான் வேணும்.

 

கோயிலுக்கு எதுக்குப் போறது.. சாமி கும்பிட என்றால்.. நகை.. விலையுயர்ந்த சாறி.. பட்டு வேட்டி சால்வை.. அவசியம் இல்லை.

 

சாதாரண.. பருத்தி உடைகள்.. போதும். தூய்மையாக உடலும் உளமும் இருந்தால்.. சாமியை கும்பிடலாம்.

 

இதில் அந்தப் பெண்ணை விட.. குற்றம் எம் சமூகத்தின் நடவடிக்கைகள் சார்ந்தே உள்ளது. கோவிலுக்கு போகும் போது எதுக்கு ஆடம்பரம்..??! நகைகளை வெளிப்படுத்திக் காட்டுவான்..?!

 

மேற்கு நாடுகளில் ஒரு அறிவிப்பு இருக்கும்.. உங்கள் பொதிகளுக்கு நீங்களே பொறுப்பு. அதேபோல்.. தான் இங்கும்.

 

திருடுபவரை விட திருட சந்தர்ப்பம் அளிப்பவர்கள் தான் கூடுதலாக தண்டிக்கப்படனும். அப்படி செய்தால் திருட்டை குறைக்கலாம். :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D முனி சார் என்னுடைய கருத்து இந்தப் பெண் குற்றமற்றவர் என்பதல்ல, மாறாக இவரின் படத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பதே. மற்றும்படி பக்கத்தில் வரும் இரு பொலீசாரை விட இந்தப் பெண் பெரிய அழகி அல்ல.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D முனி சார் என்னுடைய கருத்து இந்தப் பெண் குற்றமற்றவர் என்பதல்ல, மாறாக இவரின் படத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பதே. மற்றும்படி பக்கத்தில் வரும் இரு பொலீசாரை விட இந்தப் பெண் பெரிய அழகி அல்ல.

 

போலிஸ் அக்கா மேல, இம்புட்டு பாசமா?
 
புடிச்சா, முட்டிக்கு, முட்டி தட்டி, உங்க காலை ஒரு வழி பண்ணி உள்ளார போட்டுருவா. 
 
அப்புறம், நீங்க உங்க காலைப் பாத்து, பாத்து, ரொம்ப.... ப .. அழகா இருக்கில்ல என்னு சொல்லப் போறீக..  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க  என்ன பெண்பிள்ளை அழைப்பா நடக்குது....

 

இந்தப்பெண் வெளியில் வந்து

இந்தப்படத்தை எடுத்து செய்தி போட்டவரை சட்டத்தின் முன் நிறுத்தி

அவர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதை

இதேபோல் படம் எடுத்துப்போடணும்

 

 

முதலில் செய்தியாளர்கள்

இணைய முகநூல் வியாபாரிகளுக்கு 

சட்டம் என்றால் என்ன?

தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்று படிப்பிக்கணும்.........

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிழையான விடயம். இப்படி ஒரு பெண்ணை அவமதிக்கக்கூடாது. Very poor journalism.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகை அணிவதும், பட்டு வேட்டி சீலை உடுப்பதும் அவரவர் சுதந்திரம்.

Link to comment
Share on other sites

தவறு செய்தால் திருந்துவதற்கும் தங்கள் வாழ்வை சீரமைப்பதற்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அவர்களின் படங்களைப் போட்டு இப்படியான சந்தர்ப்பங்களை நிராகரிப்பது மிகத் தவறு.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சட்டத்தின் முன்னால் குறிப்பிட்டவரை நிறுத்தி உறுதிப்படுத்தியிருக்கவேண்டும். அடுத்து தண்டனை என்பது ஒருவர் திருந்தி வாழ கொடுக்கப்படும் சந்தர்ப்பம் ஆகும். சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படாதவரை ஒருவர் நிரபராதியாகவே கருதப்படுவார் அப்படி இருக்கும்போது ஊடகங்கள் செய்தியைப்போடலாமே தவிர ஒருவருடைய படத்தைப்போட்டு நீதிமன்றின் தண்டனையைக்காட்டிலும் அதீத தண்டனை கொடுத்திருக்கிறது. இந்தப்பெண் திருட்டை செய்திருந்தாலும் தண்டனை  என்பது அவருடைய எதிர்காலத்தைப்பாதிக்காவண்ணமே வழங்கப்படவேண்டும். ஆனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலத்தையே நாசமாக்கிய ஊடகத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? எவ்வளவு பெரிய நாடுகளிலும் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டவரை ஊடகங்கள் குற்றவாளி எனப் படம் பிடித்துப் போட்டதில்லை. ஊடகங்களுக்கும் அடிப்படை மனிதாபிமானம் இருக்கவேண்டும்....... இப்போது இந்தப்பெண் குற்றவாளி என்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவராகவே எடுக்கப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஒரு இளம்பெண் திருட்டில் ஈடுபடுகிறார் என்றால் அதன் பின்புலத்தைஆராயவேண்டும். நீதிமன்றம் ஆராயுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி படங்கள் பிரசுரம் செய்வது பிழை என்றால், மற்றவர்களின் அனுமதி பெறாமல் சமூக வலைத்தளங்களில் படங்கள், வீடியோவை போடுவது எந்தவகையான பத்திரிகை தர்மத்தில் வருகின்றது? பத்திரிகை தர்மம் என்று சொல்லப்படுவதே ஒரு ஏமாற்று. அப்படி ஒன்று உண்மையில் உலகத்தில் உள்ளதா?

 

இந்த பெண்ணிற்காய் இரக்கப்படுபவர்கள் ஒன்று சேர்ந்து பெண்ணின் பின்புலத்தை ஆராய்ந்து அவருக்கு பணஉதவி செய்து சிறு தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யலாம்.

 

படங்களை போட்டதால் இந்தப்பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துவிட்டதா? தனது படங்கள் பிரசுரம் செய்யப்பட்டது முதலில் அவருக்கு தெரியுமா?

 

இந்தப்படங்கள் ஒரு முக்கியமான செய்தியை கூறிச்செல்கின்றது.

 

பொருட்களை திருடுபவர்கள் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதே அது. வடிவாக உடை அணிந்து பார்ப்பதற்கு அழகாகவும், பவ்வியமாகவும் ஒருவர் காணப்பட்டால் கோயிலில் அவருக்கு அருகில் உரசிக்கொண்டு நின்றாலும் பரவாயில்லை என்று ஒருவரும் நினைக்கக்கூடாது. முன்பின் தெரியாதவர்கள் எவருடனும் பொது இடங்களில் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்பதை இந்தச்செய்தி சொல்கின்றது.

 

தாலிக்கொடி அணிவது பலருக்கு வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த கலாச்சார அம்சம். அதுவும் கோயிலுக்கு தாலிக்கொடியுடன் செல்வது பலருக்கு முக்கியமான விசயம். சாமி கும்பிடும்போது பலர் தமது தாலியை ஒற்றிக் கும்பிடுவார்கள். தனது தாலியை சாமி காப்பாற்றும் என்று அவரவருக்கு நம்பிக்கை. எனவே, இங்கு சிலர் கோயிலுக்கு தாலிக்கொடி அணிந்துகொண்டு போகக்கூடாது என்று அறிவுரை கூறுவது எவ்வகையில் நியாயம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முள்ளிவாய்காலுக்கு முன்னதான அனந்தபுரம் வீரச்சமர் நாள், இணையத்தள வியாபாரிகள் அவ்வீரமிக்க நாளில் தமிழர் போராட்டத்தின் இருப்பையே எதிரிக்குக் காட்டிக்கொடுத்த அப்பட்டமான துரோகியது விடுதலைப்புலிகளதும் அதன் தலைவரதும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் செய்தியைப் பிரதானப்படுத்தி வெளியிட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

 

நேற்றையதினம் ஐநா விசேடதூதர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியது என்ன எனும் தலைப்பில் அனைவரையும் கவரும்வகையில் செய்தித் தலைப்பிட்டு பின்பு உரிக்க உரிக்க வெங்காயத்தில எதுவுமே இல்லையடா அங்கையும் எதையுமே அறியமுடியவில்லை என எழுதியிருந்தது.

 

தனிநபர் ஒருவர் எதையாவது செய்துவிட்டுப்போகட்டும் இங்கு யாழ்கள உறுப்பினர்கள் கூறுவதுபோல் படங்களை ஒட்டுவது வீடியோக்களை இணப்பது அது தனிநபர்களது தனிப்பட்ட விடையம்.

 

முற்ரிலுமே புலம்பெயர் தமிழர்களது அறியாமையிலேயே கட்டியெழுப்பபட்டு தற்போது அனைத்து நாடுகளிலும் வேரோடிப்போயிருக்கும் ஒரு இணையத்தளம் சமூகப்பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லங்காசிறி இப்படி படம் போட்டு வெளியிட்ட செய்திக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் இதே செய்திக்கு "புதிய தமிழர்கள்" என்ற இணையம் போட்ட தலைப்பையும் பார்க்கவேண்டும்.. செய்தி ஒன்றுதான்.. தலைப்புத்தான் வேற! வாசித்தபோது பிரக்கேறிவிட்டது!

"யாழ்ப்பாணத்தில் சங்கிலிகள் அறுத்து மர்ம உறுப்பினுள் வைத்த அழகிய கள்ளி பிடிக்கப்படப்டாள் (புகைப்படங்கள்)"

http://newtamils.com/fullview.php?id=15210

Link to comment
Share on other sites

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

அது எனது கருத்தல்ல . முகநூலில் காணப்பட்ட ஒரு பதிவையே இங்கு பதிவிட்டேன் . 
 
அனால் என்னை பொருத்தவரை குறித்த பெண்ணின் படத்தினை இணைத்திருக்க வேண்டியதில்லை. தேச விடுதலைக்காக சேர்த்த பணத்தினை கொள்ளையடித்தவர்கள் கடனட்டை மோசடி செய்பவர்கள் போன்ற கொள்ளையர்கள் எல்லாம் கம்பீரமாக எந்தவித குற்ற உணர்ச்சியற்று வாழும்போது ஒரு பெண்ணின் பின்புலம் அறியாது அவளின் படத்தினை இணைத்து துகிலுரிவதுதான் தர்மமா ?
 
என்னை பொருத்தவரை அந்த பெண் தண்டனைக்குரியவர், முகநூல் பதிவுகளின் மூலம் அவர் குழந்தைகளின் சங்கிலிகளையும் அருத்திருக்கின்ரார். குழந்தையின் கழுத்து வெட்டுப்பட்டிருந்தால் கதி என்ன ?
Link to comment
Share on other sites

அண்ணா

 

இதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கா?

 

கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா

தயாரித்து வெளியிட

அதை உங்கள் இணையத்தில் வெளியிட்டு

பார்க்கின்றவர்களிடமும் விளம்பரத்தின் மூலமும்

காசு சம்பாதித்தவர் நீங்கள்

 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத

ஒரு பெண்ணை குற்றம் சாட்ட உங்களுக்கு

என்ன தகுதி இருக்கு

 

 

போலி முகம் ஒன்றின் பின்

மறைந்திருப்பதால் மட்டும்

இங்கு எவரும் சுற்றவாளிகள் அல்ல

 அப்பு வைரவன் ஏன் இந்த அபாண்டம்.. நான் குறிப்பிட்டகாலம் tamilamutham.net என்றொரு இணையம் மட்டுமே விளம்பரமோ சினிமா படங்களோ இன்றி, எனது கைக் காசில் மட்டும் நடாத்தினேன்.

ஆக, எவ்வித ஆதாரமும் இன்றி என்மீது குற்றம் சுமத்தும் நீங்கள்.. அடுத்த கள்ளன் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.