Jump to content

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!


Recommended Posts

தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு! கையும் களவுமாக பிடிபட்ட திருமலை யுவதி! யாழில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 08:41.49 AM GMT ]
chain-robber-0.jpg
யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை குறித்த தேர் திருவிழாவின் போது வயதான பெண் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் குறித்த பெண் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு குறித்த பெண் நின்றுள்ளார்.

இதனையடுத்து வயதான பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தன்னுடன் சேர்த்து 3 பெண்கள் வந்ததாகவும் தாங்கள் திருட்டு நோக்கத்திற்காகவே வந்திரு ப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிடிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடைக்குள்ளிரு ந்து கைத்தொலைபேசி ஒன்றும் 15ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆலயத்திலிருந்த பக்தர்களிடம் அறுக்கப்பட்ட 4தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இந்தப் பெண்ணுடன் வந்த மற்றைய இரு பெண்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

chain-robber-02.JPG

chain-robber-03.JPG

chain-robber-04.JPG

chain-robber-01.JPG

 
லங்காசிறி
Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வளர்ச்சியடைந்த ஜனநாயக விழுமியங்களுக்கும் மனிதநேயத்துக்கும் ஒரளவிலேனும் மதிப்பளிக்கும் நாடுகளில் வாழ்ந்தாலும் இன்னமும் சின்னப்புத்தி மாறவில்லை.

 

காவல்துறையால் கைதுசெய்யப்பட்டவர் தற்போதைய நிலையில் குற்றம்சாட்டப்பட்டவரே தவிர குற்றவாளியென நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவரல்ல. இப்படியிருக்கையில் ஒரு செய்தியை அடிப்படையாகவைத்து படங்களை வெளியிடுவது எந்தவிதத்திலும் பத்திரிகைத் தர்மமில்லை.

 

இது வக்கிரங்கள் நிறைந்த இணையவுலகின் இன்னுமொரு அசிங்கமான முகத்தை லங்கசிறி இணையத்தளம் காட்டியிருக்கு.

 

படம் வெளியிட்டது, முற்றிலும் வன்மையாகக் கண்டிக்கக்கூடிய விடையம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் கண்டிக்கத் தக்கவிடயம். இந்தப் பெண்ணின் படத்தைப் பிரசுரித்தது வருந்தத் தக்கது. கேவலமான பத்திரிகைக் கலாசாரம். கண்களை மறைத்துவிட்டாவது போட்டிருக்கலாம்.

Spoiler
பெண் பொலிஸாரின் கால்கள் மிகவும் அழகாக உள்ளது, இதைத் தான் நாம் எமது பெண்களிடமும் எதிர்பார்க்கிறோம்!
Link to comment
Share on other sites

Elugnajiru கூறியது சரி , நிர்வாகம் இந்த படங்களை நீக்கி செய்தியை மட்டும் போடவும்.

Link to comment
Share on other sites

அந்த பெண்ணே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.. மேலும் 4 சங்கிலிகள் கைப்பற்றுள்ளன.

ஆகவே.. குற்றவாளிகள் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படுதலில் எவ்வித தவறுமே இல்லை!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

என் அன்புக்குரிய சகோதரி!
கடந்த சில நாட்களில் உன்னை சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் நீ நகை திருடிவிட்டாயாம் என்று கொந்தளித்த மகா வீரர்கள் கண்டு. மிக்க மனவேதனை அடைந்தேன்.நீ கள்ளி இருந்துவிட்டுபோகட்டும்.நீ என் சகோதரி.நீ என் இரத்தம்.நீ என் மொழி.இதை கண்ணீரோடுதான் எழுதுகின்றேன்.உன்னை கள்ளியென இந்த உலகத்துக்கு அறிவித்த சகலபேரின் மதுரைகளும் நிச்சயம் எரியும்.இவர்களின் குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தர்மத்தால் தண்டிக்கப்படுவார்கள்.நான் மிக்க இரக்கப்படுகின்றேன்.நீதித்துறைகளும் காவல்துறையும் தீர்ப்பளிக்க முன்பு எங்கள் சமுகத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான மனிமாபிமானம் அற்ற ஒரு நாகரிகமற்ற ஒருவனே ஒருத்தியோ அவளை படம்பிடித்து முகநூல்களில் போட்டு பெருமை தேடிக்கொண்டதாக நினைத்தால் அது தவறு.அதை செய்தவர் மிகவும் கீழ்த்தரமான பண்பாட்டில் பிறந்தவர்களாகவே இருக்கமுடியும்.அவள் திருக்கோணமலையை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள்.அவள் எந்த இடமாக இருந்தாலும் அவள் என் சோதரி.கிட்டதட்ட முள்ளிவாய்க்காலில் எங்கள் சோதரிகள் மனதாபிமானம் அற்ற வெறியர்களால் எப்படி சீரிழிக்கப்பட்டார்களோ அது போன்றதன் இன்னொரு வடிவம்தான் இது.எங்களுக்குள் இருக்கின்றார்கள் இன்னமும் துச்சாதனர்கள்.முகநூல்களை பார்த்தேன் ஆண்களை விட பெண்கள் பலரை அவளை அவமானப்படுத்தியிருந்தார்கள்.ஏழைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் பசியிலும் படடிணியிலும் கிடக்க கொளுத்த தாலிகளோடும் நகைகளோடும் தங்கள் ஆடம்பரங்களையும் பணத்திமிரையும் காட்ட முனையும் ஒரு சமுகத்தில் அவள் கைவைத்திருக்கின்றாள்? அவள் ஒரு எழையின் சோற்றை திருடவில்லை.திருட்டு தவறுதான்.ஆனால் திருடியவளின் உரிமைகளை கையிலெடுக்க எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. அவள் வாழவேண்டியள்.உங்களால் வசைபாடவேண்டியவள் அல்ல.எனக்கு யேசுநாதரின் வாக்கியங்கள் ஞாபகம் வருகின்றது.உங்களில் எந்த தவறும் செய்யாதவர்கள் இருந்தால்! என்பதுதான்!ஊடகங்களாலும் முகநூல்களாலும் அவமானப்படுத்தப்படும் என் இரத்ததுக்காக இரக்கப்படுகின்றேன்.வேதனை அடைகின்றேன். 

 

முகநூல் பதிவு 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

Spoiler
பெண் பொலிஸாரின் கால்கள் மிகவும் அழகாக உள்ளது, இதைத் தான் நாம் எமது பெண்களிடமும் எதிர்பார்க்கிறோம்!

 

Spoiler
இருக்கிற சோலி காணாதெண்டு......இந்தாளுக்கு சில்லெடுத்த சோலி வேறை.. :lol:  :D 
Link to comment
Share on other sites

என் அன்புக்குரிய சகோதரி!

கடந்த சில நாட்களில் உன்னை சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் நீ நகை திருடிவிட்டாயாம் என்று கொந்தளித்த மகா வீரர்கள் கண்டு. மிக்க மனவேதனை அடைந்தேன்.நீ கள்ளி இருந்துவிட்டுபோகட்டும்.நீ என் சகோதரி.நீ என் இரத்தம்.நீ என் மொழி.இதை கண்ணீரோடுதான் எழுதுகின்றேன்.உன்னை கள்ளியென இந்த உலகத்துக்கு அறிவித்த சகலபேரின் மதுரைகளும் நிச்சயம் எரியும்.இவர்களின் குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தர்மத்தால் தண்டிக்கப்படுவார்கள்.நான் மிக்க இரக்கப்படுகின்றேன்.நீதித்துறைகளும் காவல்துறையும் தீர்ப்பளிக்க முன்பு எங்கள் சமுகத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான மனிமாபிமானம் அற்ற ஒரு நாகரிகமற்ற ஒருவனே ஒருத்தியோ அவளை படம்பிடித்து முகநூல்களில் போட்டு பெருமை தேடிக்கொண்டதாக நினைத்தால் அது தவறு.அதை செய்தவர் மிகவும் கீழ்த்தரமான பண்பாட்டில் பிறந்தவர்களாகவே இருக்கமுடியும்.அவள் திருக்கோணமலையை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள்.அவள் எந்த இடமாக இருந்தாலும் அவள் என் சோதரி.கிட்டதட்ட முள்ளிவாய்க்காலில் எங்கள் சோதரிகள் மனதாபிமானம் அற்ற வெறியர்களால் எப்படி சீரிழிக்கப்பட்டார்களோ அது போன்றதன் இன்னொரு வடிவம்தான் இது.எங்களுக்குள் இருக்கின்றார்கள் இன்னமும் துச்சாதனர்கள்.முகநூல்களை பார்த்தேன் ஆண்களை விட பெண்கள் பலரை அவளை அவமானப்படுத்தியிருந்தார்கள்.ஏழைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் பசியிலும் படடிணியிலும் கிடக்க கொளுத்த தாலிகளோடும் நகைகளோடும் தங்கள் ஆடம்பரங்களையும் பணத்திமிரையும் காட்ட முனையும் ஒரு சமுகத்தில் அவள் கைவைத்திருக்கின்றாள்? அவள் ஒரு எழையின் சோற்றை திருடவில்லை.திருட்டு தவறுதான்.ஆனால் திருடியவளின் உரிமைகளை கையிலெடுக்க எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. அவள் வாழவேண்டியள்.உங்களால் வசைபாடவேண்டியவள் அல்ல.எனக்கு யேசுநாதரின் வாக்கியங்கள் ஞாபகம் வருகின்றது.உங்களில் எந்த தவறும் செய்யாதவர்கள் இருந்தால்! என்பதுதான்!ஊடகங்களாலும் முகநூல்களாலும் அவமானப்படுத்தப்படும் என் இரத்ததுக்காக இரக்கப்படுகின்றேன்.வேதனை அடைகின்றேன். 

 

முகநூல் பதிவு 

 

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மசனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

 

அண்ணா

 

இதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கா?

 

கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா

தயாரித்து வெளியிட

அதை உங்கள் இணையத்தில் வெளியிட்டு

பார்க்கின்றவர்களிடமும் விளம்பரத்தின் மூலமும்

காசு சம்பாதித்தவர் நீங்கள்

 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத

ஒரு பெண்ணை குற்றம் சாட்ட உங்களுக்கு

என்ன தகுதி இருக்கு

 

 

போலி முகம் ஒன்றின் பின்

மறைந்திருப்பதால் மட்டும்

இங்கு எவரும் சுற்றவாளிகள் அல்ல

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்.... அதுகும் பெண், திருட்டை செய்யும் போது...
தனக்கு வாழ வேறு வழி தெரியாத கட்டத்தில் தான்.... அதனைச் செய்ய முனைகிறார்.
இவருக்கு என்ன கஷ்டமோ... கணவர் உயிருடன் உள்ளாரா என்று கூட தெரியாது.
அவரை கண்டித்து... அனுப்பியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
களவு செய்து மாட்டிய பெண், முகம் கொஞ்சம் நல்லா, இருந்தால் போதும், இரங்க, அண்ணன்மார் வந்து விடுவார்கள்.  :wub:
 
அங்கே காவல் துறை அதிகாரிகள் விசாரித்தே அழைத்துப் போகின்றனர். இலங்கை போன்ற, கல்வி அறிவு ஆசியாவில் அதிகமான நாடுகளில், இது போன்ற சிறு திருட்டு விசயங்களுக்கு, தகுந்த விசாரணை இன்றி, ஒரு பெண்ணை பொலிசார் கைது செய்ய மாட்டார்கள்.
 
மேலும் ஒரு பெண் அப்பாவியாயிருந்தால், உயிரே போனாலும், தான் திருட்டுப் பின்னணி கொண்டவர் அல்ல, என்பதை நின்று நிரூபித்திருப்பார். :icon_idea:
 
எனவே சட்டம் தனது கடமை செய்ய விடுவோம். மேலும் அங்கே அவர் இருப்பது, ஆபத்தானதாக இருந்தால் (மக்கள் தாக்கக் கூடும்), பொலிசாருடன் வெளியேறுவது தான், நல்லது. :rolleyes:
 
இது தொடர்பான தமிழ் தள செய்திகள் தவறானதாக இருக்கலாம்.  :o
 
வாலி,
 
அதெல்லாம், பின்னால வார இன்சுபெட்டர் ஐயா, விவரமா கவனிச்சுக் கொள்ளுவாரு. கவலைப் படாதீங்கோ... :icon_mrgreen:
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடியா கொள்ளையடிக்கிற டக்கிளஸ்.. கருணா.. என்று அரசியல்வாதிகள் இருக்கினம். அவையை ஒருத்தரும் ஒன்றும் கேட்கமாட்டினம்...?!

 

கோயிலுக்கு படம் காட்ட நகை போடுறவையிட்ட அதைப் பறிக்கத்தான் வேணும்.

 

கோயிலுக்கு எதுக்குப் போறது.. சாமி கும்பிட என்றால்.. நகை.. விலையுயர்ந்த சாறி.. பட்டு வேட்டி சால்வை.. அவசியம் இல்லை.

 

சாதாரண.. பருத்தி உடைகள்.. போதும். தூய்மையாக உடலும் உளமும் இருந்தால்.. சாமியை கும்பிடலாம்.

 

இதில் அந்தப் பெண்ணை விட.. குற்றம் எம் சமூகத்தின் நடவடிக்கைகள் சார்ந்தே உள்ளது. கோவிலுக்கு போகும் போது எதுக்கு ஆடம்பரம்..??! நகைகளை வெளிப்படுத்திக் காட்டுவான்..?!

 

மேற்கு நாடுகளில் ஒரு அறிவிப்பு இருக்கும்.. உங்கள் பொதிகளுக்கு நீங்களே பொறுப்பு. அதேபோல்.. தான் இங்கும்.

 

திருடுபவரை விட திருட சந்தர்ப்பம் அளிப்பவர்கள் தான் கூடுதலாக தண்டிக்கப்படனும். அப்படி செய்தால் திருட்டை குறைக்கலாம். :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D முனி சார் என்னுடைய கருத்து இந்தப் பெண் குற்றமற்றவர் என்பதல்ல, மாறாக இவரின் படத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பதே. மற்றும்படி பக்கத்தில் வரும் இரு பொலீசாரை விட இந்தப் பெண் பெரிய அழகி அல்ல.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D முனி சார் என்னுடைய கருத்து இந்தப் பெண் குற்றமற்றவர் என்பதல்ல, மாறாக இவரின் படத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பதே. மற்றும்படி பக்கத்தில் வரும் இரு பொலீசாரை விட இந்தப் பெண் பெரிய அழகி அல்ல.

 

போலிஸ் அக்கா மேல, இம்புட்டு பாசமா?
 
புடிச்சா, முட்டிக்கு, முட்டி தட்டி, உங்க காலை ஒரு வழி பண்ணி உள்ளார போட்டுருவா. 
 
அப்புறம், நீங்க உங்க காலைப் பாத்து, பாத்து, ரொம்ப.... ப .. அழகா இருக்கில்ல என்னு சொல்லப் போறீக..  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க  என்ன பெண்பிள்ளை அழைப்பா நடக்குது....

 

இந்தப்பெண் வெளியில் வந்து

இந்தப்படத்தை எடுத்து செய்தி போட்டவரை சட்டத்தின் முன் நிறுத்தி

அவர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதை

இதேபோல் படம் எடுத்துப்போடணும்

 

 

முதலில் செய்தியாளர்கள்

இணைய முகநூல் வியாபாரிகளுக்கு 

சட்டம் என்றால் என்ன?

தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்று படிப்பிக்கணும்.........

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிழையான விடயம். இப்படி ஒரு பெண்ணை அவமதிக்கக்கூடாது. Very poor journalism.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகை அணிவதும், பட்டு வேட்டி சீலை உடுப்பதும் அவரவர் சுதந்திரம்.

Link to comment
Share on other sites

தவறு செய்தால் திருந்துவதற்கும் தங்கள் வாழ்வை சீரமைப்பதற்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அவர்களின் படங்களைப் போட்டு இப்படியான சந்தர்ப்பங்களை நிராகரிப்பது மிகத் தவறு.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சட்டத்தின் முன்னால் குறிப்பிட்டவரை நிறுத்தி உறுதிப்படுத்தியிருக்கவேண்டும். அடுத்து தண்டனை என்பது ஒருவர் திருந்தி வாழ கொடுக்கப்படும் சந்தர்ப்பம் ஆகும். சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படாதவரை ஒருவர் நிரபராதியாகவே கருதப்படுவார் அப்படி இருக்கும்போது ஊடகங்கள் செய்தியைப்போடலாமே தவிர ஒருவருடைய படத்தைப்போட்டு நீதிமன்றின் தண்டனையைக்காட்டிலும் அதீத தண்டனை கொடுத்திருக்கிறது. இந்தப்பெண் திருட்டை செய்திருந்தாலும் தண்டனை  என்பது அவருடைய எதிர்காலத்தைப்பாதிக்காவண்ணமே வழங்கப்படவேண்டும். ஆனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலத்தையே நாசமாக்கிய ஊடகத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? எவ்வளவு பெரிய நாடுகளிலும் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டவரை ஊடகங்கள் குற்றவாளி எனப் படம் பிடித்துப் போட்டதில்லை. ஊடகங்களுக்கும் அடிப்படை மனிதாபிமானம் இருக்கவேண்டும்....... இப்போது இந்தப்பெண் குற்றவாளி என்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவராகவே எடுக்கப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஒரு இளம்பெண் திருட்டில் ஈடுபடுகிறார் என்றால் அதன் பின்புலத்தைஆராயவேண்டும். நீதிமன்றம் ஆராயுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி படங்கள் பிரசுரம் செய்வது பிழை என்றால், மற்றவர்களின் அனுமதி பெறாமல் சமூக வலைத்தளங்களில் படங்கள், வீடியோவை போடுவது எந்தவகையான பத்திரிகை தர்மத்தில் வருகின்றது? பத்திரிகை தர்மம் என்று சொல்லப்படுவதே ஒரு ஏமாற்று. அப்படி ஒன்று உண்மையில் உலகத்தில் உள்ளதா?

 

இந்த பெண்ணிற்காய் இரக்கப்படுபவர்கள் ஒன்று சேர்ந்து பெண்ணின் பின்புலத்தை ஆராய்ந்து அவருக்கு பணஉதவி செய்து சிறு தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யலாம்.

 

படங்களை போட்டதால் இந்தப்பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துவிட்டதா? தனது படங்கள் பிரசுரம் செய்யப்பட்டது முதலில் அவருக்கு தெரியுமா?

 

இந்தப்படங்கள் ஒரு முக்கியமான செய்தியை கூறிச்செல்கின்றது.

 

பொருட்களை திருடுபவர்கள் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதே அது. வடிவாக உடை அணிந்து பார்ப்பதற்கு அழகாகவும், பவ்வியமாகவும் ஒருவர் காணப்பட்டால் கோயிலில் அவருக்கு அருகில் உரசிக்கொண்டு நின்றாலும் பரவாயில்லை என்று ஒருவரும் நினைக்கக்கூடாது. முன்பின் தெரியாதவர்கள் எவருடனும் பொது இடங்களில் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்பதை இந்தச்செய்தி சொல்கின்றது.

 

தாலிக்கொடி அணிவது பலருக்கு வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த கலாச்சார அம்சம். அதுவும் கோயிலுக்கு தாலிக்கொடியுடன் செல்வது பலருக்கு முக்கியமான விசயம். சாமி கும்பிடும்போது பலர் தமது தாலியை ஒற்றிக் கும்பிடுவார்கள். தனது தாலியை சாமி காப்பாற்றும் என்று அவரவருக்கு நம்பிக்கை. எனவே, இங்கு சிலர் கோயிலுக்கு தாலிக்கொடி அணிந்துகொண்டு போகக்கூடாது என்று அறிவுரை கூறுவது எவ்வகையில் நியாயம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முள்ளிவாய்காலுக்கு முன்னதான அனந்தபுரம் வீரச்சமர் நாள், இணையத்தள வியாபாரிகள் அவ்வீரமிக்க நாளில் தமிழர் போராட்டத்தின் இருப்பையே எதிரிக்குக் காட்டிக்கொடுத்த அப்பட்டமான துரோகியது விடுதலைப்புலிகளதும் அதன் தலைவரதும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் செய்தியைப் பிரதானப்படுத்தி வெளியிட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

 

நேற்றையதினம் ஐநா விசேடதூதர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியது என்ன எனும் தலைப்பில் அனைவரையும் கவரும்வகையில் செய்தித் தலைப்பிட்டு பின்பு உரிக்க உரிக்க வெங்காயத்தில எதுவுமே இல்லையடா அங்கையும் எதையுமே அறியமுடியவில்லை என எழுதியிருந்தது.

 

தனிநபர் ஒருவர் எதையாவது செய்துவிட்டுப்போகட்டும் இங்கு யாழ்கள உறுப்பினர்கள் கூறுவதுபோல் படங்களை ஒட்டுவது வீடியோக்களை இணப்பது அது தனிநபர்களது தனிப்பட்ட விடையம்.

 

முற்ரிலுமே புலம்பெயர் தமிழர்களது அறியாமையிலேயே கட்டியெழுப்பபட்டு தற்போது அனைத்து நாடுகளிலும் வேரோடிப்போயிருக்கும் ஒரு இணையத்தளம் சமூகப்பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லங்காசிறி இப்படி படம் போட்டு வெளியிட்ட செய்திக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் இதே செய்திக்கு "புதிய தமிழர்கள்" என்ற இணையம் போட்ட தலைப்பையும் பார்க்கவேண்டும்.. செய்தி ஒன்றுதான்.. தலைப்புத்தான் வேற! வாசித்தபோது பிரக்கேறிவிட்டது!

"யாழ்ப்பாணத்தில் சங்கிலிகள் அறுத்து மர்ம உறுப்பினுள் வைத்த அழகிய கள்ளி பிடிக்கப்படப்டாள் (புகைப்படங்கள்)"

http://newtamils.com/fullview.php?id=15210

Link to comment
Share on other sites

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

அது எனது கருத்தல்ல . முகநூலில் காணப்பட்ட ஒரு பதிவையே இங்கு பதிவிட்டேன் . 
 
அனால் என்னை பொருத்தவரை குறித்த பெண்ணின் படத்தினை இணைத்திருக்க வேண்டியதில்லை. தேச விடுதலைக்காக சேர்த்த பணத்தினை கொள்ளையடித்தவர்கள் கடனட்டை மோசடி செய்பவர்கள் போன்ற கொள்ளையர்கள் எல்லாம் கம்பீரமாக எந்தவித குற்ற உணர்ச்சியற்று வாழும்போது ஒரு பெண்ணின் பின்புலம் அறியாது அவளின் படத்தினை இணைத்து துகிலுரிவதுதான் தர்மமா ?
 
என்னை பொருத்தவரை அந்த பெண் தண்டனைக்குரியவர், முகநூல் பதிவுகளின் மூலம் அவர் குழந்தைகளின் சங்கிலிகளையும் அருத்திருக்கின்ரார். குழந்தையின் கழுத்து வெட்டுப்பட்டிருந்தால் கதி என்ன ?
Link to comment
Share on other sites

அண்ணா

 

இதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கா?

 

கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா

தயாரித்து வெளியிட

அதை உங்கள் இணையத்தில் வெளியிட்டு

பார்க்கின்றவர்களிடமும் விளம்பரத்தின் மூலமும்

காசு சம்பாதித்தவர் நீங்கள்

 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத

ஒரு பெண்ணை குற்றம் சாட்ட உங்களுக்கு

என்ன தகுதி இருக்கு

 

 

போலி முகம் ஒன்றின் பின்

மறைந்திருப்பதால் மட்டும்

இங்கு எவரும் சுற்றவாளிகள் அல்ல

 அப்பு வைரவன் ஏன் இந்த அபாண்டம்.. நான் குறிப்பிட்டகாலம் tamilamutham.net என்றொரு இணையம் மட்டுமே விளம்பரமோ சினிமா படங்களோ இன்றி, எனது கைக் காசில் மட்டும் நடாத்தினேன்.

ஆக, எவ்வித ஆதாரமும் இன்றி என்மீது குற்றம் சுமத்தும் நீங்கள்.. அடுத்த கள்ளன் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.