Jump to content

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!


Recommended Posts

தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு! கையும் களவுமாக பிடிபட்ட திருமலை யுவதி! யாழில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 08:41.49 AM GMT ]
chain-robber-0.jpg
யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை குறித்த தேர் திருவிழாவின் போது வயதான பெண் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் குறித்த பெண் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு குறித்த பெண் நின்றுள்ளார்.

இதனையடுத்து வயதான பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தன்னுடன் சேர்த்து 3 பெண்கள் வந்ததாகவும் தாங்கள் திருட்டு நோக்கத்திற்காகவே வந்திரு ப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிடிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடைக்குள்ளிரு ந்து கைத்தொலைபேசி ஒன்றும் 15ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆலயத்திலிருந்த பக்தர்களிடம் அறுக்கப்பட்ட 4தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இந்தப் பெண்ணுடன் வந்த மற்றைய இரு பெண்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

chain-robber-02.JPG

chain-robber-03.JPG

chain-robber-04.JPG

chain-robber-01.JPG

 
லங்காசிறி
Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வளர்ச்சியடைந்த ஜனநாயக விழுமியங்களுக்கும் மனிதநேயத்துக்கும் ஒரளவிலேனும் மதிப்பளிக்கும் நாடுகளில் வாழ்ந்தாலும் இன்னமும் சின்னப்புத்தி மாறவில்லை.

 

காவல்துறையால் கைதுசெய்யப்பட்டவர் தற்போதைய நிலையில் குற்றம்சாட்டப்பட்டவரே தவிர குற்றவாளியென நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவரல்ல. இப்படியிருக்கையில் ஒரு செய்தியை அடிப்படையாகவைத்து படங்களை வெளியிடுவது எந்தவிதத்திலும் பத்திரிகைத் தர்மமில்லை.

 

இது வக்கிரங்கள் நிறைந்த இணையவுலகின் இன்னுமொரு அசிங்கமான முகத்தை லங்கசிறி இணையத்தளம் காட்டியிருக்கு.

 

படம் வெளியிட்டது, முற்றிலும் வன்மையாகக் கண்டிக்கக்கூடிய விடையம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் கண்டிக்கத் தக்கவிடயம். இந்தப் பெண்ணின் படத்தைப் பிரசுரித்தது வருந்தத் தக்கது. கேவலமான பத்திரிகைக் கலாசாரம். கண்களை மறைத்துவிட்டாவது போட்டிருக்கலாம்.

Spoiler
பெண் பொலிஸாரின் கால்கள் மிகவும் அழகாக உள்ளது, இதைத் தான் நாம் எமது பெண்களிடமும் எதிர்பார்க்கிறோம்!
Link to comment
Share on other sites

Elugnajiru கூறியது சரி , நிர்வாகம் இந்த படங்களை நீக்கி செய்தியை மட்டும் போடவும்.

Link to comment
Share on other sites

அந்த பெண்ணே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.. மேலும் 4 சங்கிலிகள் கைப்பற்றுள்ளன.

ஆகவே.. குற்றவாளிகள் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படுதலில் எவ்வித தவறுமே இல்லை!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

என் அன்புக்குரிய சகோதரி!
கடந்த சில நாட்களில் உன்னை சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் நீ நகை திருடிவிட்டாயாம் என்று கொந்தளித்த மகா வீரர்கள் கண்டு. மிக்க மனவேதனை அடைந்தேன்.நீ கள்ளி இருந்துவிட்டுபோகட்டும்.நீ என் சகோதரி.நீ என் இரத்தம்.நீ என் மொழி.இதை கண்ணீரோடுதான் எழுதுகின்றேன்.உன்னை கள்ளியென இந்த உலகத்துக்கு அறிவித்த சகலபேரின் மதுரைகளும் நிச்சயம் எரியும்.இவர்களின் குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தர்மத்தால் தண்டிக்கப்படுவார்கள்.நான் மிக்க இரக்கப்படுகின்றேன்.நீதித்துறைகளும் காவல்துறையும் தீர்ப்பளிக்க முன்பு எங்கள் சமுகத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான மனிமாபிமானம் அற்ற ஒரு நாகரிகமற்ற ஒருவனே ஒருத்தியோ அவளை படம்பிடித்து முகநூல்களில் போட்டு பெருமை தேடிக்கொண்டதாக நினைத்தால் அது தவறு.அதை செய்தவர் மிகவும் கீழ்த்தரமான பண்பாட்டில் பிறந்தவர்களாகவே இருக்கமுடியும்.அவள் திருக்கோணமலையை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள்.அவள் எந்த இடமாக இருந்தாலும் அவள் என் சோதரி.கிட்டதட்ட முள்ளிவாய்க்காலில் எங்கள் சோதரிகள் மனதாபிமானம் அற்ற வெறியர்களால் எப்படி சீரிழிக்கப்பட்டார்களோ அது போன்றதன் இன்னொரு வடிவம்தான் இது.எங்களுக்குள் இருக்கின்றார்கள் இன்னமும் துச்சாதனர்கள்.முகநூல்களை பார்த்தேன் ஆண்களை விட பெண்கள் பலரை அவளை அவமானப்படுத்தியிருந்தார்கள்.ஏழைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் பசியிலும் படடிணியிலும் கிடக்க கொளுத்த தாலிகளோடும் நகைகளோடும் தங்கள் ஆடம்பரங்களையும் பணத்திமிரையும் காட்ட முனையும் ஒரு சமுகத்தில் அவள் கைவைத்திருக்கின்றாள்? அவள் ஒரு எழையின் சோற்றை திருடவில்லை.திருட்டு தவறுதான்.ஆனால் திருடியவளின் உரிமைகளை கையிலெடுக்க எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. அவள் வாழவேண்டியள்.உங்களால் வசைபாடவேண்டியவள் அல்ல.எனக்கு யேசுநாதரின் வாக்கியங்கள் ஞாபகம் வருகின்றது.உங்களில் எந்த தவறும் செய்யாதவர்கள் இருந்தால்! என்பதுதான்!ஊடகங்களாலும் முகநூல்களாலும் அவமானப்படுத்தப்படும் என் இரத்ததுக்காக இரக்கப்படுகின்றேன்.வேதனை அடைகின்றேன். 

 

முகநூல் பதிவு 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

Spoiler
பெண் பொலிஸாரின் கால்கள் மிகவும் அழகாக உள்ளது, இதைத் தான் நாம் எமது பெண்களிடமும் எதிர்பார்க்கிறோம்!

 

Spoiler
இருக்கிற சோலி காணாதெண்டு......இந்தாளுக்கு சில்லெடுத்த சோலி வேறை.. :lol:  :D 
Link to comment
Share on other sites

என் அன்புக்குரிய சகோதரி!

கடந்த சில நாட்களில் உன்னை சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் நீ நகை திருடிவிட்டாயாம் என்று கொந்தளித்த மகா வீரர்கள் கண்டு. மிக்க மனவேதனை அடைந்தேன்.நீ கள்ளி இருந்துவிட்டுபோகட்டும்.நீ என் சகோதரி.நீ என் இரத்தம்.நீ என் மொழி.இதை கண்ணீரோடுதான் எழுதுகின்றேன்.உன்னை கள்ளியென இந்த உலகத்துக்கு அறிவித்த சகலபேரின் மதுரைகளும் நிச்சயம் எரியும்.இவர்களின் குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தர்மத்தால் தண்டிக்கப்படுவார்கள்.நான் மிக்க இரக்கப்படுகின்றேன்.நீதித்துறைகளும் காவல்துறையும் தீர்ப்பளிக்க முன்பு எங்கள் சமுகத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான மனிமாபிமானம் அற்ற ஒரு நாகரிகமற்ற ஒருவனே ஒருத்தியோ அவளை படம்பிடித்து முகநூல்களில் போட்டு பெருமை தேடிக்கொண்டதாக நினைத்தால் அது தவறு.அதை செய்தவர் மிகவும் கீழ்த்தரமான பண்பாட்டில் பிறந்தவர்களாகவே இருக்கமுடியும்.அவள் திருக்கோணமலையை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள்.அவள் எந்த இடமாக இருந்தாலும் அவள் என் சோதரி.கிட்டதட்ட முள்ளிவாய்க்காலில் எங்கள் சோதரிகள் மனதாபிமானம் அற்ற வெறியர்களால் எப்படி சீரிழிக்கப்பட்டார்களோ அது போன்றதன் இன்னொரு வடிவம்தான் இது.எங்களுக்குள் இருக்கின்றார்கள் இன்னமும் துச்சாதனர்கள்.முகநூல்களை பார்த்தேன் ஆண்களை விட பெண்கள் பலரை அவளை அவமானப்படுத்தியிருந்தார்கள்.ஏழைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் பசியிலும் படடிணியிலும் கிடக்க கொளுத்த தாலிகளோடும் நகைகளோடும் தங்கள் ஆடம்பரங்களையும் பணத்திமிரையும் காட்ட முனையும் ஒரு சமுகத்தில் அவள் கைவைத்திருக்கின்றாள்? அவள் ஒரு எழையின் சோற்றை திருடவில்லை.திருட்டு தவறுதான்.ஆனால் திருடியவளின் உரிமைகளை கையிலெடுக்க எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. அவள் வாழவேண்டியள்.உங்களால் வசைபாடவேண்டியவள் அல்ல.எனக்கு யேசுநாதரின் வாக்கியங்கள் ஞாபகம் வருகின்றது.உங்களில் எந்த தவறும் செய்யாதவர்கள் இருந்தால்! என்பதுதான்!ஊடகங்களாலும் முகநூல்களாலும் அவமானப்படுத்தப்படும் என் இரத்ததுக்காக இரக்கப்படுகின்றேன்.வேதனை அடைகின்றேன். 

 

முகநூல் பதிவு 

 

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மசனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

 

அண்ணா

 

இதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கா?

 

கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா

தயாரித்து வெளியிட

அதை உங்கள் இணையத்தில் வெளியிட்டு

பார்க்கின்றவர்களிடமும் விளம்பரத்தின் மூலமும்

காசு சம்பாதித்தவர் நீங்கள்

 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத

ஒரு பெண்ணை குற்றம் சாட்ட உங்களுக்கு

என்ன தகுதி இருக்கு

 

 

போலி முகம் ஒன்றின் பின்

மறைந்திருப்பதால் மட்டும்

இங்கு எவரும் சுற்றவாளிகள் அல்ல

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்.... அதுகும் பெண், திருட்டை செய்யும் போது...
தனக்கு வாழ வேறு வழி தெரியாத கட்டத்தில் தான்.... அதனைச் செய்ய முனைகிறார்.
இவருக்கு என்ன கஷ்டமோ... கணவர் உயிருடன் உள்ளாரா என்று கூட தெரியாது.
அவரை கண்டித்து... அனுப்பியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
களவு செய்து மாட்டிய பெண், முகம் கொஞ்சம் நல்லா, இருந்தால் போதும், இரங்க, அண்ணன்மார் வந்து விடுவார்கள்.  :wub:
 
அங்கே காவல் துறை அதிகாரிகள் விசாரித்தே அழைத்துப் போகின்றனர். இலங்கை போன்ற, கல்வி அறிவு ஆசியாவில் அதிகமான நாடுகளில், இது போன்ற சிறு திருட்டு விசயங்களுக்கு, தகுந்த விசாரணை இன்றி, ஒரு பெண்ணை பொலிசார் கைது செய்ய மாட்டார்கள்.
 
மேலும் ஒரு பெண் அப்பாவியாயிருந்தால், உயிரே போனாலும், தான் திருட்டுப் பின்னணி கொண்டவர் அல்ல, என்பதை நின்று நிரூபித்திருப்பார். :icon_idea:
 
எனவே சட்டம் தனது கடமை செய்ய விடுவோம். மேலும் அங்கே அவர் இருப்பது, ஆபத்தானதாக இருந்தால் (மக்கள் தாக்கக் கூடும்), பொலிசாருடன் வெளியேறுவது தான், நல்லது. :rolleyes:
 
இது தொடர்பான தமிழ் தள செய்திகள் தவறானதாக இருக்கலாம்.  :o
 
வாலி,
 
அதெல்லாம், பின்னால வார இன்சுபெட்டர் ஐயா, விவரமா கவனிச்சுக் கொள்ளுவாரு. கவலைப் படாதீங்கோ... :icon_mrgreen:
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடியா கொள்ளையடிக்கிற டக்கிளஸ்.. கருணா.. என்று அரசியல்வாதிகள் இருக்கினம். அவையை ஒருத்தரும் ஒன்றும் கேட்கமாட்டினம்...?!

 

கோயிலுக்கு படம் காட்ட நகை போடுறவையிட்ட அதைப் பறிக்கத்தான் வேணும்.

 

கோயிலுக்கு எதுக்குப் போறது.. சாமி கும்பிட என்றால்.. நகை.. விலையுயர்ந்த சாறி.. பட்டு வேட்டி சால்வை.. அவசியம் இல்லை.

 

சாதாரண.. பருத்தி உடைகள்.. போதும். தூய்மையாக உடலும் உளமும் இருந்தால்.. சாமியை கும்பிடலாம்.

 

இதில் அந்தப் பெண்ணை விட.. குற்றம் எம் சமூகத்தின் நடவடிக்கைகள் சார்ந்தே உள்ளது. கோவிலுக்கு போகும் போது எதுக்கு ஆடம்பரம்..??! நகைகளை வெளிப்படுத்திக் காட்டுவான்..?!

 

மேற்கு நாடுகளில் ஒரு அறிவிப்பு இருக்கும்.. உங்கள் பொதிகளுக்கு நீங்களே பொறுப்பு. அதேபோல்.. தான் இங்கும்.

 

திருடுபவரை விட திருட சந்தர்ப்பம் அளிப்பவர்கள் தான் கூடுதலாக தண்டிக்கப்படனும். அப்படி செய்தால் திருட்டை குறைக்கலாம். :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D முனி சார் என்னுடைய கருத்து இந்தப் பெண் குற்றமற்றவர் என்பதல்ல, மாறாக இவரின் படத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பதே. மற்றும்படி பக்கத்தில் வரும் இரு பொலீசாரை விட இந்தப் பெண் பெரிய அழகி அல்ல.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D முனி சார் என்னுடைய கருத்து இந்தப் பெண் குற்றமற்றவர் என்பதல்ல, மாறாக இவரின் படத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பதே. மற்றும்படி பக்கத்தில் வரும் இரு பொலீசாரை விட இந்தப் பெண் பெரிய அழகி அல்ல.

 

போலிஸ் அக்கா மேல, இம்புட்டு பாசமா?
 
புடிச்சா, முட்டிக்கு, முட்டி தட்டி, உங்க காலை ஒரு வழி பண்ணி உள்ளார போட்டுருவா. 
 
அப்புறம், நீங்க உங்க காலைப் பாத்து, பாத்து, ரொம்ப.... ப .. அழகா இருக்கில்ல என்னு சொல்லப் போறீக..  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க  என்ன பெண்பிள்ளை அழைப்பா நடக்குது....

 

இந்தப்பெண் வெளியில் வந்து

இந்தப்படத்தை எடுத்து செய்தி போட்டவரை சட்டத்தின் முன் நிறுத்தி

அவர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதை

இதேபோல் படம் எடுத்துப்போடணும்

 

 

முதலில் செய்தியாளர்கள்

இணைய முகநூல் வியாபாரிகளுக்கு 

சட்டம் என்றால் என்ன?

தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்று படிப்பிக்கணும்.........

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிழையான விடயம். இப்படி ஒரு பெண்ணை அவமதிக்கக்கூடாது. Very poor journalism.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகை அணிவதும், பட்டு வேட்டி சீலை உடுப்பதும் அவரவர் சுதந்திரம்.

Link to comment
Share on other sites

தவறு செய்தால் திருந்துவதற்கும் தங்கள் வாழ்வை சீரமைப்பதற்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அவர்களின் படங்களைப் போட்டு இப்படியான சந்தர்ப்பங்களை நிராகரிப்பது மிகத் தவறு.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சட்டத்தின் முன்னால் குறிப்பிட்டவரை நிறுத்தி உறுதிப்படுத்தியிருக்கவேண்டும். அடுத்து தண்டனை என்பது ஒருவர் திருந்தி வாழ கொடுக்கப்படும் சந்தர்ப்பம் ஆகும். சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படாதவரை ஒருவர் நிரபராதியாகவே கருதப்படுவார் அப்படி இருக்கும்போது ஊடகங்கள் செய்தியைப்போடலாமே தவிர ஒருவருடைய படத்தைப்போட்டு நீதிமன்றின் தண்டனையைக்காட்டிலும் அதீத தண்டனை கொடுத்திருக்கிறது. இந்தப்பெண் திருட்டை செய்திருந்தாலும் தண்டனை  என்பது அவருடைய எதிர்காலத்தைப்பாதிக்காவண்ணமே வழங்கப்படவேண்டும். ஆனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலத்தையே நாசமாக்கிய ஊடகத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? எவ்வளவு பெரிய நாடுகளிலும் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டவரை ஊடகங்கள் குற்றவாளி எனப் படம் பிடித்துப் போட்டதில்லை. ஊடகங்களுக்கும் அடிப்படை மனிதாபிமானம் இருக்கவேண்டும்....... இப்போது இந்தப்பெண் குற்றவாளி என்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவராகவே எடுக்கப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஒரு இளம்பெண் திருட்டில் ஈடுபடுகிறார் என்றால் அதன் பின்புலத்தைஆராயவேண்டும். நீதிமன்றம் ஆராயுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி படங்கள் பிரசுரம் செய்வது பிழை என்றால், மற்றவர்களின் அனுமதி பெறாமல் சமூக வலைத்தளங்களில் படங்கள், வீடியோவை போடுவது எந்தவகையான பத்திரிகை தர்மத்தில் வருகின்றது? பத்திரிகை தர்மம் என்று சொல்லப்படுவதே ஒரு ஏமாற்று. அப்படி ஒன்று உண்மையில் உலகத்தில் உள்ளதா?

 

இந்த பெண்ணிற்காய் இரக்கப்படுபவர்கள் ஒன்று சேர்ந்து பெண்ணின் பின்புலத்தை ஆராய்ந்து அவருக்கு பணஉதவி செய்து சிறு தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யலாம்.

 

படங்களை போட்டதால் இந்தப்பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துவிட்டதா? தனது படங்கள் பிரசுரம் செய்யப்பட்டது முதலில் அவருக்கு தெரியுமா?

 

இந்தப்படங்கள் ஒரு முக்கியமான செய்தியை கூறிச்செல்கின்றது.

 

பொருட்களை திருடுபவர்கள் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதே அது. வடிவாக உடை அணிந்து பார்ப்பதற்கு அழகாகவும், பவ்வியமாகவும் ஒருவர் காணப்பட்டால் கோயிலில் அவருக்கு அருகில் உரசிக்கொண்டு நின்றாலும் பரவாயில்லை என்று ஒருவரும் நினைக்கக்கூடாது. முன்பின் தெரியாதவர்கள் எவருடனும் பொது இடங்களில் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்பதை இந்தச்செய்தி சொல்கின்றது.

 

தாலிக்கொடி அணிவது பலருக்கு வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த கலாச்சார அம்சம். அதுவும் கோயிலுக்கு தாலிக்கொடியுடன் செல்வது பலருக்கு முக்கியமான விசயம். சாமி கும்பிடும்போது பலர் தமது தாலியை ஒற்றிக் கும்பிடுவார்கள். தனது தாலியை சாமி காப்பாற்றும் என்று அவரவருக்கு நம்பிக்கை. எனவே, இங்கு சிலர் கோயிலுக்கு தாலிக்கொடி அணிந்துகொண்டு போகக்கூடாது என்று அறிவுரை கூறுவது எவ்வகையில் நியாயம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முள்ளிவாய்காலுக்கு முன்னதான அனந்தபுரம் வீரச்சமர் நாள், இணையத்தள வியாபாரிகள் அவ்வீரமிக்க நாளில் தமிழர் போராட்டத்தின் இருப்பையே எதிரிக்குக் காட்டிக்கொடுத்த அப்பட்டமான துரோகியது விடுதலைப்புலிகளதும் அதன் தலைவரதும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் செய்தியைப் பிரதானப்படுத்தி வெளியிட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

 

நேற்றையதினம் ஐநா விசேடதூதர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியது என்ன எனும் தலைப்பில் அனைவரையும் கவரும்வகையில் செய்தித் தலைப்பிட்டு பின்பு உரிக்க உரிக்க வெங்காயத்தில எதுவுமே இல்லையடா அங்கையும் எதையுமே அறியமுடியவில்லை என எழுதியிருந்தது.

 

தனிநபர் ஒருவர் எதையாவது செய்துவிட்டுப்போகட்டும் இங்கு யாழ்கள உறுப்பினர்கள் கூறுவதுபோல் படங்களை ஒட்டுவது வீடியோக்களை இணப்பது அது தனிநபர்களது தனிப்பட்ட விடையம்.

 

முற்ரிலுமே புலம்பெயர் தமிழர்களது அறியாமையிலேயே கட்டியெழுப்பபட்டு தற்போது அனைத்து நாடுகளிலும் வேரோடிப்போயிருக்கும் ஒரு இணையத்தளம் சமூகப்பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லங்காசிறி இப்படி படம் போட்டு வெளியிட்ட செய்திக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் இதே செய்திக்கு "புதிய தமிழர்கள்" என்ற இணையம் போட்ட தலைப்பையும் பார்க்கவேண்டும்.. செய்தி ஒன்றுதான்.. தலைப்புத்தான் வேற! வாசித்தபோது பிரக்கேறிவிட்டது!

"யாழ்ப்பாணத்தில் சங்கிலிகள் அறுத்து மர்ம உறுப்பினுள் வைத்த அழகிய கள்ளி பிடிக்கப்படப்டாள் (புகைப்படங்கள்)"

http://newtamils.com/fullview.php?id=15210

Link to comment
Share on other sites

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

அது எனது கருத்தல்ல . முகநூலில் காணப்பட்ட ஒரு பதிவையே இங்கு பதிவிட்டேன் . 
 
அனால் என்னை பொருத்தவரை குறித்த பெண்ணின் படத்தினை இணைத்திருக்க வேண்டியதில்லை. தேச விடுதலைக்காக சேர்த்த பணத்தினை கொள்ளையடித்தவர்கள் கடனட்டை மோசடி செய்பவர்கள் போன்ற கொள்ளையர்கள் எல்லாம் கம்பீரமாக எந்தவித குற்ற உணர்ச்சியற்று வாழும்போது ஒரு பெண்ணின் பின்புலம் அறியாது அவளின் படத்தினை இணைத்து துகிலுரிவதுதான் தர்மமா ?
 
என்னை பொருத்தவரை அந்த பெண் தண்டனைக்குரியவர், முகநூல் பதிவுகளின் மூலம் அவர் குழந்தைகளின் சங்கிலிகளையும் அருத்திருக்கின்ரார். குழந்தையின் கழுத்து வெட்டுப்பட்டிருந்தால் கதி என்ன ?
Link to comment
Share on other sites

அண்ணா

 

இதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கா?

 

கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா

தயாரித்து வெளியிட

அதை உங்கள் இணையத்தில் வெளியிட்டு

பார்க்கின்றவர்களிடமும் விளம்பரத்தின் மூலமும்

காசு சம்பாதித்தவர் நீங்கள்

 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத

ஒரு பெண்ணை குற்றம் சாட்ட உங்களுக்கு

என்ன தகுதி இருக்கு

 

 

போலி முகம் ஒன்றின் பின்

மறைந்திருப்பதால் மட்டும்

இங்கு எவரும் சுற்றவாளிகள் அல்ல

 அப்பு வைரவன் ஏன் இந்த அபாண்டம்.. நான் குறிப்பிட்டகாலம் tamilamutham.net என்றொரு இணையம் மட்டுமே விளம்பரமோ சினிமா படங்களோ இன்றி, எனது கைக் காசில் மட்டும் நடாத்தினேன்.

ஆக, எவ்வித ஆதாரமும் இன்றி என்மீது குற்றம் சுமத்தும் நீங்கள்.. அடுத்த கள்ளன் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு. 
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.