Jump to content

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!


Recommended Posts

தாயகத்தில் வாழும் பெரும்பான்மையான தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.
அதேசமயம் வெளிநாட்டில் வாழும் உறவினர்களின் பணத்தில் சோம்பேறிகளாக வாழும் ஒரு பகுதியினர் உள்ளார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

 

இப்படியான பொருளாதாரம் ஒருகட்டத்தில் களவுக்கு ஏவும் என்பதை கடந்து போன பல சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

இத்தகைய களவுகளை கண்டும் அதைக் காணாதுவிடுவதோ அல்லது அதற்கு நியாயம் கற்பிப்பதோ எதிர்காலத்தில் இதன் வளர்ச்சிக்கு உதவுவது போன்றது.

 

இவற்றின் பரிணாமம் கொலையளவுக்குக் கூட வளர்ச்சியடையலாம். அதனால் மக்கள் காவற்துறையை சார்ந்து வாழ்வது தவிர்க்க முடியாதது என்றொரு நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

இங்கே அவர் ஏற்கெனவே சில சங்கிலிகளை அந்த இடத்தில் திருடி இருக்கிறார்.. வேறு 2 பெண்களுடன் தூர இடத்தில் இருந்து திருடுவதற்காக வந்திருக்கிறார்.. ஆகவே இது அவரது முதல் திருட்டு முயற்சி என்றும் கூற முடியாது. இவரை அடையாளப்படுத்தாதுவிட்டால் இவர் இதே திருட்டை இன்னோர் இடத்தில் தொடரமாட்டார் என என்ன நிச்சயம்?!!

 

இப் பெண்ணுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்... சட்டதரணி மூலம் இவரை வெளியில் எடுத்து, இனிமேல் திருடாமல் இருக்கும்விதத்தில் ஒரு நிரந்தர வருமானத்திற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொடுக்கலாம்... இவருக்காக செய்வீர்கள் என நினைக்கிறேன்.. செய்தால் அறியத் தாருங்கள்.. ஒரு நன்றியாவது சொல்ல ஆசைப்படுகிறேன்!!

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா சண்டை சும்மா பிடிக்கிறியள்.... :D

எதுக்கும் இவை இரண்டு பேரிட்டையும் ஒரு பைனல் ஒப்பினியன் கேட்டுப்பாக்கலாமே....ஏனெண்டால் இவைக்கு அனுபவம் கூட இருக்குமெண்டு நினைக்கிறன். :icon_mrgreen:

 

thirudar_breaking_house.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா சண்டை சும்மா பிடிக்கிறியள்.... :D

எதுக்கும் இவை இரண்டு பேரிட்டையும் ஒரு பைனல் ஒப்பினியன் கேட்டுப்பாக்கலாமே....ஏனெண்டால் இவைக்கு அனுபவம் கூட இருக்குமெண்டு நினைக்கிறன். :icon_mrgreen:

thirudar_breaking_house.png

இவர்கள் சம்மந்தமான செய்தியில், இவர்களின் பின்புலம், குடும்ப நிலமைகள், சமுதாயத்தில் பொருளாதார சமனிலையின்மை, படம் போட்டதனால் இவர்களுக்கு ஏற்பட கூடிய கொளரவ பாதிப்புக்கள், லண்டன் இல் வாழ்பவர்கள் எல்லாரும் குடிசைக்கு சமினில்லாத வீடுகளில் வாழவில்லை என்ற குற்றம்...போன்றவற்றை பதிந்ததாக ஞாபகம் இல்லை.....இல்லா விட்டால் என் கண்ணுக்கு படவில்லையோ தெரியாது :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற நடைமுறைகளால் குற்றம் என்று நிரூபிக்காத வரை ஒருவரை கள்வன்.. கள்ளி என்று சொல்ல முடியாது. சாதாரண பொதுமக்கள் சொல்லலாம். ஊடகங்கள் சொல்ல முடியாது.

 

அந்த வகையில்.. சந்தேக நபர் என்று செய்தி வெளியிடுவதே பொருத்தமானது.

 

இணைய தமிழ் ஊடகங்கள் நடத்துபவர்களில் பலர் சும்மா நபர்கள். ஊடகவியலாளர் பயிற்சி நெறிகளை கற்றவர்களோ.. பயிற்சி பெற்றவர்களோ கிடையாது. அவர்களை கட்டுப்படுத்த உலகில் எதுவும் இல்லை என்ற நினைப்பு அவர்களுக்கு. எமது மக்களுக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தெரியாத அறியாமை.

 

இந்தச் செய்திகளை யாழில் தான் படித்து அறிகிறோம். தமிழ் செய்தி இணைய ஊடகங்களை  வாசிப்பதில்லை. அவர்களின் தரம் அப்படி.

 

மேலும் பெண் என்பதற்காக சந்தேக நபர்கள் குறித்து ஈவு இரக்கம் காட்டனும் என்றில்லை. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் இந்த பெண்ணுக்காக வாதாடும் சிலர் " இலன்டனில் வீடுடைக்கும் தமிழர்கள்" என்ற திரியில் எழுதியதை வாசியுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/155592-லண்டனில்-வீடுடைக்கும்-தமிழ்-தி/

Link to comment
Share on other sites

பிழை செய்தால் சந்தியில்  வைத்து  சுடும்  நிலைமையில் வளர்த்த  நாம் குற்றம்  யாரு  செய்தாலும்  தண்டனை  கொடுப்பதில்  தவறு  இல்லை  இது  பெண்ணை  இருந்தால் என்ன ஆணா  இருந்தால்  தான்  என்ன  குற்றம்  குற்றமே  இங்க  போலி  மனிதாபிமானத்துக்கு  இடம்  இல்லை ...

 

படம்  இன்னும்  பெரிய  போஸ்டர்  அடிச்சு  ஓட்டனும் இல்லை  பிழை  என்பவர்கள்  அந்த  பிள்ளை  களவு  எடுக்காமல்  இருக்க  மாதம்  காசு  அனுப்பலாம்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக் காசு வராதவன் எல்லாம் ஊரில களவெடுத்துக்கொண்டா இருக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சுரன் அண்ணே.....  களவெடுத்து நிரூபிக்கப்பட்டால்.. மொட்டை தாணண்ணே போடுறது. சுடுறதில்லை அண்ணே. அது உங்களைப் போல முன்னாள் இயக்கம் என்று கொண்டு காட்டிக்கொடுத்திட்டு வெளிநாட்டுக்கு ஓடியந்தாக்களை தான் அண்ணே தேசத்துரோகக் குற்றத்துக்காக சுடுறது. அது உலகம் பூரா அப்பாவி மக்களை.. அவர்களின் நாடுகளை..  உங்களைப் போன்றவர்களிடம் இருந்து காப்பாற்ற செய்யுற நடவடிக்கை தானுண்ணே. :lol::icon_idea:

Link to comment
Share on other sites

தேய்க்காய்  களவு  எடுத்தவனை  எல்லாம்  சுட்ட  வரலாறு  இருக்கு எங்களிடம் இது  எல்லாம்  பிரிட்டன்  மகாராணி  பேரனுக்கு  எங்க  புரியபோகுது  விளங்க  போகுது  விடுங்கோ .... :icon_idea:

 

புலிய மட்டுமே  தெரிந்த  ஆக்கள் யூடிப்பில்  சீமான்  பேச்சை  கேட்டு  ஈழ  விடுதலை  பேசினா  இப்படித்தான்  நெடுகர்    :)

Link to comment
Share on other sites

எத்துணை துன்பம் வந்தாலும் இடர்கள் ஏற்பட்டாலும் உயர்ந்த மனித நாகரீகத்தைப் பேணவேண்டும் என்ற உள்ளம்கொண்டவர்கள் தமிழர்கள். யாழ்களமும் அத்தகைய தமிழர்களை வெளியே கொண்டுவந்து காட்டுவதற்கு இந்தப்பதிவும் உதவியிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி. ஆனாலும் 'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்பதுபோல் சிறீலங்கா அரசுகளுக்கு ஏற்ப அந்தநாட்டுச் செயல்முறைகளும் இருப்பது ஆச்சரியமானது அல்ல. 
 
குற்றமிழைத்த ஒருவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கும்வரையில் அவரைச் சந்தேக நபராகப் பார்க்கவேண்டிய பண்பு சிறந்தது. மனிதநேயத்தைக் கொண்ட நாடுகள் அதனைக் கடைப்பிடித்து வருவதும் கண்கூடு. அத்தகைய நாடுகளோடு சிறீலங்காவை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்குச் சார்பாக நீதிவழங்கும் நீதிபதிகளையும் கொண்ட நாடுதான் சிறீலங்கா என்ற நாடு.  இதனை அதிகமாக அந்நாட்டுத் தமிழர்கள் அறிந்துகொண்டுள்ளது மட்டுமல்ல அனுபவித்தும் வருகின்றனர். இந்தப்பெண் உண்மையிலே குற்றவாளியாக இருந்தாலும் அவரைக் குற்றமற்றவர் என விடுவித்து நீதிமன்றம் செயற்பட்டவும் அங்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி ஏற்பட்டால் பல பொதுமக்கள் பாதிப்படையப் போவதைத் தவிர்க்க முடியாது. அன்றிக் குற்றவாளியல்ல என்றால், அந்தப் பெண்மட்டுமே பாதிப்படைவார். இது தற்போதைய சிறீலங்கா நாட்டைப்பொறுத்த ஒரு கசப்பான உண்மை.  
 
Link to comment
Share on other sites

அஞ்சுரன் அண்ணே.....  களவெடுத்து நிரூபிக்கப்பட்டால்.. மொட்டை தாணண்ணே போடுறது. சுடுறதில்லை அண்ணே. அது உங்களைப் போல முன்னாள் இயக்கம் என்று கொண்டு காட்டிக்கொடுத்திட்டு வெளிநாட்டுக்கு ஓடியந்தாக்களை தான் அண்ணே தேசத்துரோகக் குற்றத்துக்காக சுடுறது. அது உலகம் பூரா அப்பாவி மக்களை.. அவர்களின் நாடுகளை..  உங்களைப் போன்றவர்களிடம் இருந்து காப்பாற்ற செய்யுற நடவடிக்கை தானுண்ணே. :lol::icon_idea:

 

களவெடுத்தவங்களை மட்டுமில்லை.. தனது குடும்பத்து கஸ்ட நிலையை சமாளிக்க கசிப்புக் காச்சினவங்களையே போட்டி போட்டுக்கொண்டு சுட்ட இயக்கங்களைப்பற்றி தெரியாதா?! இந்த வேலையை அப்போது அனேகமாக எல்லோருந்தான் செய்தார்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவெடுத்தவங்களை மட்டுமில்லை.. தனது குடும்பத்து கஸ்ட நிலையை சமாளிக்க கசிப்புக் காச்சினவங்களையே போட்டி போட்டுக்கொண்டு சுட்ட இயக்கங்களைப்பற்றி தெரியாதா?! இந்த வேலையை அப்போது அனேகமாக எல்லோருந்தான் செய்தார்கள்!!

 

கஸ்டத்துக்கு கசிப்புக் காச்சி வித்து பறித்த உயிர்கள் எத்தனை. அத்தனைக்கும்.. பரிகாரம்..?!

 

கசிப்பு தடைசெய்யப்பட்ட ஒன்று. அதனை உற்பத்தி செய்வதும்.. விற்பதும் தண்டனைக்குரிய குற்றம்.

 

கஸ்டம் என்று கள்ள நோட்டு அடிச்சு பணக்காரன் ஆனால்.. உலகத்தில் எந்த அரசு அனுமதிக்கும்..??!

 

கஸ்டம் என்று கஞ்சா விற்றால்.. அனுமதிப்பார்களா..?!

 

கஸ்டத்தைப் போக்க எத்தனையோ நேர்மையான வழிகள் இருக்குது. பாடுபடாமல்.. கஸ்டத்தை நீக்க முடியாது.

 

ஒரு கொக்கு மீனுக்கு கஸ்டம் என்று திருடித் தின்பதில்லை. காத்திருந்து பிடித்துத் தின்கிறது. அந்தப் பொறுமை கூட இல்லாத மனிதர்களை திருத்துவது எப்படி..??!

 

மற்றைய இயக்கங்களைப் பற்றி தெரியாது. புலிகளைப் பொறுத்த வரை.. விசாரணைகள்.. 3 எச்சரிக்கைகளுக்கு அப்புறம் தான் தீவிர தண்டனை வழங்கினார்கள். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி யு டேர்ன் அடிச்சாச்சு.
மற்ற ஊர் அறிஞர்கள் இனி களமிறங்கலாம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி படங்கள் பிரசுரம் செய்வது பிழை என்றால், மற்றவர்களின் அனுமதி பெறாமல் சமூக வலைத்தளங்களில் படங்கள், வீடியோவை போடுவது எந்தவகையான பத்திரிகை தர்மத்தில் வருகின்றது? பத்திரிகை தர்மம் என்று சொல்லப்படுவதே ஒரு ஏமாற்று. அப்படி ஒன்று உண்மையில் உலகத்தில் உள்ளதா?

 

இந்த பெண்ணிற்காய் இரக்கப்படுபவர்கள் ஒன்று சேர்ந்து பெண்ணின் பின்புலத்தை ஆராய்ந்து அவருக்கு பணஉதவி செய்து சிறு தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யலாம்.

 

படங்களை போட்டதால் இந்தப்பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துவிட்டதா? தனது படங்கள் பிரசுரம் செய்யப்பட்டது முதலில் அவருக்கு தெரியுமா?

 

இந்தப்படங்கள் ஒரு முக்கியமான செய்தியை கூறிச்செல்கின்றது.

 

பொருட்களை திருடுபவர்கள் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதே அது. வடிவாக உடை அணிந்து பார்ப்பதற்கு அழகாகவும், பவ்வியமாகவும் ஒருவர் காணப்பட்டால் கோயிலில் அவருக்கு அருகில் உரசிக்கொண்டு நின்றாலும் பரவாயில்லை என்று ஒருவரும் நினைக்கக்கூடாது. முன்பின் தெரியாதவர்கள் எவருடனும் பொது இடங்களில் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்பதை இந்தச்செய்தி சொல்கின்றது.

 

தாலிக்கொடி அணிவது பலருக்கு வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த கலாச்சார அம்சம். அதுவும் கோயிலுக்கு தாலிக்கொடியுடன் செல்வது பலருக்கு முக்கியமான விசயம். சாமி கும்பிடும்போது பலர் தமது தாலியை ஒற்றிக் கும்பிடுவார்கள். தனது தாலியை சாமி காப்பாற்றும் என்று அவரவருக்கு நம்பிக்கை. எனவே, இங்கு சிலர் கோயிலுக்கு தாலிக்கொடி அணிந்துகொண்டு போகக்கூடாது என்று அறிவுரை கூறுவது எவ்வகையில் நியாயம்?

 

சமூக, பகிரங்க வலைத்தளங்களில் மற்றவரின் அனுமதி பெறாமல் எதை போடுகிறார்கள் என்பதே அது பாதிப்பா நன்மையா என்பதைத் தீர்மானிக்கும் காரணி. புத்தக வெளியீட்டுக்குப் போனவர்களின் படங்களை முகங்களுடன்  செய்தியில் போட்டால் அது விதிமீறல் அல்ல, செய்தி! செய்தியில் வரக் கூடும் என்று தெரிந்து போனவர்களுக்கு இதனால் பாதிப்பு வருமா என்றால் இல்லை! ஆனால் ஒரு சந்தேக நபரை நீதி விசாரணைக்கு முன்பே படம் எடுத்து பகிரங்கப் படுத்துவது கேவலமான செயல் மட்டுமல்ல, நீதி நடைமுறைகளைப் பாதிக்கும் செயல். ஒரு உதாரணத்திற்கு, அதே கூட்டத்தில் இன்னொரு நபரின் நகையைத் திருடிய வேறொரு திருடன் தப்பி விட்டான் என்று வைத்துக் கொள்வோம். நகை போன ஆத்திரத்தில் பறி கொடுத்தவர், பேப்பரில் படத்தைப் பார்த்து விட்டு "இந்தப் பெண் தான் அருகில் நின்றார்" என்று சாட்சி சொல்லக் கூடும்! மேற்கு நாடுகளில், நீதிக்குப் பங்கம் வரக் கூடாது என்பதாலும் தான் சந்தேக நபர்களைப் பகிரங்கப் படுத்துவதில்லை. மேற்கு நாடுகளில் இருந்து, குடி கூத்து, கடன் வாங்குதல், வங்குரோத்து அடித்தல் எல்லாம் கற்றுக் கொள்வோம் நாங்கள், ஆனால் உருப்படியான விடயங்கள் வரும் போது வடலியை விட்டு வரவே மாட்டம்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எத்துணை துன்பம் வந்தாலும் இடர்கள் ஏற்பட்டாலும் உயர்ந்த மனித நாகரீகத்தைப் பேணவேண்டும் என்ற உள்ளம்கொண்டவர்கள் தமிழர்கள். யாழ்களமும் அத்தகைய தமிழர்களை வெளியே கொண்டுவந்து காட்டுவதற்கு இந்தப்பதிவும் உதவியிருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி. ஆனாலும் 'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' என்பதுபோல் சிறீலங்கா அரசுகளுக்கு ஏற்ப அந்தநாட்டுச் செயல்முறைகளும் இருப்பது ஆச்சரியமானது அல்ல. 
 
குற்றமிழைத்த ஒருவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கும்வரையில் அவரைச் சந்தேக நபராகப் பார்க்கவேண்டிய பண்பு சிறந்தது. மனிதநேயத்தைக் கொண்ட நாடுகள் அதனைக் கடைப்பிடித்து வருவதும் கண்கூடு. அத்தகைய நாடுகளோடு சிறீலங்காவை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்குச் சார்பாக நீதிவழங்கும் நீதிபதிகளையும் கொண்ட நாடுதான் சிறீலங்கா என்ற நாடு.  இதனை அதிகமாக அந்நாட்டுத் தமிழர்கள் அறிந்துகொண்டுள்ளது மட்டுமல்ல அனுபவித்தும் வருகின்றனர். இந்தப்பெண் உண்மையிலே குற்றவாளியாக இருந்தாலும் அவரைக் குற்றமற்றவர் என விடுவித்து நீதிமன்றம் செயற்பட்டவும் அங்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி ஏற்பட்டால் பல பொதுமக்கள் பாதிப்படையப் போவதைத் தவிர்க்க முடியாது. அன்றிக் குற்றவாளியல்ல என்றால், அந்தப் பெண்மட்டுமே பாதிப்படைவார். இது தற்போதைய சிறீலங்கா நாட்டைப்பொறுத்த ஒரு கசப்பான உண்மை.  

 

 

மேலே கிழவிக்கு எழுதிய பதிலில் இதையும் தான் சொல்ல நினைத்தேன்! "படத்தை போட்டதால் என் கட்சிக் காரர் மேல் அபாண்டமான பழி விழுந்து விட்டது" என்று வாதாடி வெளியே விட்டால், நகை பறி கொடுத்தவருக்கு நீதியும் இல்லை, பறித்தவருக்கு திருந்துவதற்கான சந்தர்ப்பமும் இல்லை, அவசியமும் இல்லை. படத்தோட செய்தி போட்ட வெங்கணாந்திக்கு ஒரு பதிப்பும் இல்லை! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா, விட்டால், போலீஸ்காரர் அங்க நிண்டதே பிழை, அந்தப் பெண் நகை போட்டு வந்து, திருட்டை ஊக்குவித்ததே பிழை என்ற ரீதியில் கதைப்பியல் போல கிடக்கிறதே.

குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண், பொலீசாரால் 'சந்தேகத்தின்' பால் கைது செய்யப்பட்டுள்ளார். படங்களை பிடிக்கவும், அதை வெளியிடவும் அநுமதித்து, இவரது பின்புலம் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புர கோருவதும் எங்கும் நடப்பது.

சிலரது வாதங்களன்படி, கதவு உடைத்து உள்ள பூரும், வீடியோவில் உள்ளவர்களும், அப்பாவிகள் அல்லவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா, விட்டால், போலீஸ்காரர் அங்க நிண்டதே பிழை, அந்தப் பெண் நகை போட்டு வந்து, திருட்டை ஊக்குவித்ததே பிழை என்ற ரீதியில் கதைப்பியல் போல கிடக்கிறதே.

குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண், பொலீசாரால் 'சந்தேகத்தின்' பால் கைது செய்யப்பட்டுள்ளார். படங்களை பிடிக்கவும், அதை வெளியிடவும் அநுமதித்து, இவரது பின்புலம் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புர கோருவதும் எங்கும் நடப்பது.

சிலரது வாதங்களன்படி, கதவு உடைத்து உள்ள பூரும், வீடியோவில் உள்ளவர்களும், அப்பாவிகள் அல்லவோ?

 

நாதமுனி! எங்க உகண்டாவிலயா இருக்கிறீங்கள்? :D எங்கும் நடப்பதா இது??

 

சந்தேக நபரைக் காவல் துறை பிடித்து வழக்குப் பதிவு செய்து mug shot எடுத்துப் பதிவு செய்த பின்னர் தான் மேலதிக தகவலுக்காக அவர்களது உத்தியோக பூர்வ இணையத் தளத்தில் வரும்! இந்த முறை கூட பாரதூரமான வன்முறைக் குற்றங்களுக்கு மட்டும் தான்! எந்த நாட்டிலும் "இந்தா போட்டோ பிடியுங்கோ!" எண்டு காவல் துறை சந்தேக நபரைக் காட்டிக் கொண்டு நிற்பதாக நான் கேள்விப் படவில்லை!

 

பிற்குறிப்பு: "சந்தேக நபர்" , அப்பாவி, குற்றவாளி போன்ற பதங்களுக்கு என்ன வரைவிலக்கணம் என்று கையோட ஒருக்காத் தேடிப் படித்து விடுங்கள்! :D இங்கே இதைக் கண்டிக்கும் யாரும் "அப்பாவி" என்று சொன்னதாக எனக்குத் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Justin என்னையா சொல்கிறீர்கள்?

இந்த தமிழர் உள்ள வீடீயோவை வெளியிட்டு தகவல் கேட்பது பொலீசார் இல்லையா?

பிரித்தானியாவில், அப்பாவிகளை, 'Trail by media' வகையில், குற்றவாளிகளாக காட்ட வைத்து, உண்மையான குற்றவாளியை, அப்பாடா தப்பித்தோம், என நிம்மதியாக வெளிவர வைத்து, அமுக்கிய சம்பவங்கள் கூட நடந்து உள்ளனவே. (Bristol, Jonna Yates Murder case என google பண்ணிப்பாருங்சள்)

பொலீசார், 'சந்தேகத்தின்' பேரால் யாரையும் கைது செய்ய முடியும். அது 'வெறும்' சந்தேகம் மட்டுமே என வாதாடி வெளிவருவதே 'சந்தேகநபர்' வேலை. இதுவே அடிப்படை கிரிமினல் சட்டம். (It is unfortunate for that suspected person to be in the wrong place at the wrong time, if that person is innocent: as they say in lawyers chambers)

e-fit வகை படங்களை வெளியிட்டு தகவல் கேட்பது என்ன வகை ஜயா?

Crime Watch பார்ப்பதில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி! எந்த வீடியோவைக் கேக்கிறீர்கள் என்று விளங்கவில்லை? ஆனால், சங்கிலி திருடிப் பிடிபட்ட பெண்ணின் படத்தைப் பொலிஸ் கொடுத்தா நியூ ஜவ்னா போட்டது? எ-fஇட் சட்ட பூர்வமாக ஒருவரைக் காவல்துறை தேடுவது, அதுவா இங்கே நடந்தது?

"trial by media" இல் தற்காலிகமாகவேனும் அப்பாவிகள் மாட்டிக் கொண்டார்கள் என்று நீங்களே சொல்லி இந்த மீடியாக்கள் ஏன் சட்டத்தின் வேலையைத் தாங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஆதாரம் தருகிறீர்கள்! நீங்கள் எழுதுவதை நீங்களே வாசிக்க மாட்டீர்கள் போல! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி! எந்த வீடியோவைக் கேக்கிறீர்கள் என்று விளங்கவில்லை? ஆனால், சங்கிலி திருடிப் பிடிபட்ட பெண்ணின் படத்தைப் பொலிஸ் கொடுத்தா நியூ ஜவ்னா போட்டது? எ-fஇட் சட்ட பூர்வமாக ஒருவரைக் காவல்துறை தேடுவது, அதுவா இங்கே நடந்தது?

"trial by media" இல் தற்காலிகமாகவேனும் அப்பாவிகள் மாட்டிக் கொண்டார்கள் என்று நீங்களே சொல்லி இந்த மீடியாக்கள் ஏன் சட்டத்தின் வேலையைத் தாங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஆதாரம் தருகிறீர்கள்! நீங்கள் எழுதுவதை நீங்களே வாசிக்க மாட்டீர்கள் போல! :D

முடியல,

Trail by media பத்தி தானே பேசுறோம் தல!!

ஆ, இந்த பெண்......

ஆகா, கோயிக்கு வெளில, Justin உடன் பேசிக் கொண்டு இருந்ததைக் கண்டனான் என்பது போன்ற தகவல்கள் தான், போலீசாரும், சமூகத்திடம் இருந்து எதிர்பார்ப்பது, இல்லையா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி! நீங்கள் செய்தியின் ஆரம்பத்திலிருந்து வாசித்து விட்டு வருவது பலரின் நேரத்தைச் சேமிக்கும்! இது பொலிசார் வெளியிட்ட படம் அல்ல! பொறுப்பற்ற ஒரு மீடியா வெளியிட்ட படம்! அதுவே இங்கு பிரதான வாதம்!

 

என்றாலும் உங்களிடம் ஒரு கேள்வி, தனிப் பட்ட தாக்குதலாக எடுக்க வேணாம்! ஒரு உதாரணம் மட்டுமே! இது போன்ற நிலைமைகளில் படம் வெளிவந்தவர் உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும் உங்கள் பதில்கள் இப்படித் தான் இருக்குமா? (இதைப் personal ஆக எடுக்க வேண்டாம்! நியூ ஜவ்னாக் காரர்களிடமும் இதையே கேட்க ஆசை, ஆனால் இவர்களுக்கு விரயம் செய்ய என்னிடம் நேரம் இல்லை!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி! நீங்கள் செய்தியின் ஆரம்பத்திலிருந்து வாசித்து விட்டு வருவது பலரின் நேரத்தைச் சேமிக்கும்! இது பொலிசார் வெளியிட்ட படம் அல்ல! பொறுப்பற்ற ஒரு மீடியா வெளியிட்ட படம்! அதுவே இங்கு பிரதான வாதம்!

என்றாலும் உங்களிடம் ஒரு கேள்வி, தனிப் பட்ட தாக்குதலாக எடுக்க வேணாம்! ஒரு உதாரணம் மட்டுமே! இது போன்ற நிலைமைகளில் படம் வெளிவந்தவர் உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தாலும் உங்கள் பதில்கள் இப்படித் தான் இருக்குமா? (இதைப் personal ஆக எடுக்க வேண்டாம்! நியூ ஜவ்னாக் காரர்களிடமும் இதையே கேட்க ஆசை, ஆனால் இவர்களுக்கு விரயம் செய்ய என்னிடம் நேரம் இல்லை!)

உங்களிடம் ஒரு அப்பாவித்தனமான கேள்வி!

கமராவைக் கொண்டு போய் போலீசாரையும், சந்தேக நபரையும், 'ஏதோ' வகை அனுமதி இன்றி, படம் பிடிக்கவும், பிரசுரிக்கவும் முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் ஒரு அப்பாவித்தனமான கேள்வி!

கமராவைக் கொண்டு போய் போலீசாரையும், சந்தேக நபரையும், 'ஏதோ' வகை அனுமதி இன்றி, படம் பிடிக்கவும், பிரசுரிக்கவும் முடியுமா?

 

:rolleyes: உங்களுக்கு அதே அப்பாவித் தனத்துடன் ஒரு பதில்: இப்ப யாரும் கமெராவைத் தூக்கித் திரிவதில்லை! யாழில் ஸ்மார்ட் போன் பாவனை லண்டனுக்குச் சமமாக இருக்கிறது இப்போது! புள்ளிகளை இணைக்க முடிகிறதா அல்லது அதையும் செய்து விடவா? :rolleyes:

Link to comment
Share on other sites

ஒன்று மட்டும் உண்மை் இப்படியான படங்களை பிடித்து வெளியிடுபவர்களை போன்ற அயோக்கியர்களை போன்று உலகில் எவருமில்லை.

இவர்கள் தான் விபத்தில் உயிர் துடிக்கும்போதும் புலிக் கூண்டில் ஒருவன் உயிருக்காக போராடும் போதும் அவர்களை காப்பாற்றும் சிந்தனையற்று அச் சம்பவங்களை படம் பிடித்து பணம் பெருக்கும் வக்கிர மனம் கொண்டவர்கள் .

இவர்களை விட அந்த பெண்ணை மேலாகத்தான் நான் பார்க்கின்றேன்் ஏனெனில் அவள் நிச்சயமாக தன் குடும்ப துயர் துடைக்கவோ இல்லாவிடின் தனது குழந்தைகளின் வயிற்றுப் பசி போக்கவோ தான் திருடியிருப்பாள் .

அந்த பெண் நினைத்திருந்தால் தனது உடலினையும் மானத்தையும் விற்று நிறைய சம்பாதித்திருக்கலாம் . ஆனால் வேறு பிழைப்புக்கு வழியின்றித்தான் அவள் திருடியிருப்பாள் .

ஆனால் மற்றவர்களின் வலியினிலே பணம் சேர்க்கும் கேவலமான ஊடகங்கள் அப் பெண்ணின் படத்தினை வெளியிட்டு அப்பெண்ணை கேவலப்படுத்தி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.