Jump to content

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முனி.. நீங்கள் கேட்பது நியாயமே. பிபிசியில் கூட இப்படி கள்வர்களின் காணொளிகள்.. பல வந்துள்ளன. முக மறைப்பின்றி வந்துள்ளன. ஆனால் பொலிஸாரின் அனுமதியுடன் தான் அவை வெளியிடப்பட்டிருக்கும்.

 

இந்தப் படங்கள் சொறிலங்கா பொலிஸின் அனுமதியுடன் வெளியிடப்பட்டிருந்தால்.. அதில் தப்பில்லை.

 

பொதுவாக.. தமிழ் இணைய ஊடகங்கள் அவ்வாறு செயற்படுவதில்லை. தள பிரபல்யத்துக்காக.. அவர்கள் இணையத்தள செய்தி முறைமைகளை மீறி நடப்பது கண்கூடு.

 

கடந்த காலங்களில் சிங்களத்தால் சீரழிக்கப்பட்டு.. படுகொலை செய்யப்பட்ட.. பெண் போராளிகளின் ஆடையற்ற படங்களையும் சிங்கள ஊடங்களுக்கு போட்டியாக தமிழ் ஊடகங்களும் வெளியிட்டன. :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெளியே வந்ததும் திருமலையில் பெரிய தாதாவாக இருப்பார்.

அந்த அளவுக்கு பிரபலமாகிட்டா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

chain-robber-01.JPG

 

உண்மையில்.... இந்தப் பெண்ணின் மன நிலையை நினைக்க, மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
இந்த, இணையத்தளங்களின் அயோக்கிய வேலையால்....  அவர் பொலிசாரின் கைதில் இருந்து, விடுவிக்கப் பட்டதும்.. தற்கொலை முயற்சிக்கு கூட போகலாம் என்பதை... எமது ஊடகங்கள், புரிந்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை தர்மம், சரி தவறு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று தான்... மாற்றுக் கருத்து இல்லை.

 

நாங்கள் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் இருந்து கொண்டு இங்கு இருக்கும் தார்மிகங்களை

மூன்றாம் உலக நாடு ஒன்றில் எதிர்பார்க்க முடியாது.

 

இந்த பெண்ணின் நிலமை கவலைக்குரியது தான்...

இதே நேரம் இந்த குற்றத்தை ஒரு ஆண் ஒருவர் செய்து கையும் களவுமாக பிடிபட்டு படங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தால் நாங்கள் 4 பக்கத்திக்கு நீட்டி முழக்கி பரிதாபப் படுவோமா என்பது ஒரு கேள்விக்குறிதான் !!!

 

(இப்படிப்பார்த்தால் இலங்கை அரச அதிகாரிகள் கூட தமிழ் இன அழிப்பு நடவடிக்கையில் தாங்கள் வெறும் சந்தேக நபர்கள் தான் என்று கூறி .... எஸ்கேப் ....)  என்னுடைய ஒப்பீடு தார்மீகம் குறித்தே

Link to comment
Share on other sites

இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.
 
"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  
 
'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.' 
 
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.
 
அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o     
 
Link to comment
Share on other sites

இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.

 

"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  

 

'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.'

 

"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.

 

அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o

படங்களை போட்டு கிழிப்பவர்களை வாழிய வாழிய என வாழ்த்துவோம் :icon_mrgreen: :icon_mrgreen:

அண்ணை தெரியாமல் தான் கேக்குறன், நீங்க நேர்மையாவோ ஜேர்மனிக்கு போனநீங்கள்?

கள்வர்கள் மீது எப்பவுமே அவதானமா இருக்கவேண்டும், நீங்க யாழில் படம் போட்டு கிழிச்சு வேலையில்லை

ரெண்டு மூண்டு செல்லோட ஓடின உங்களுக்கு எங்க விளங்கபோகுது. மல்டி பரல், கிபிர், மிக் போன்றவற்றில் மாட்டியிருந்தால் கூட கதைக்க மாட்டிங்கள்

எவனும் ஒரு சந்தர்பத்தில் தவறிளைக்குறான்... திருந்த சந்தர்பம் குடுப்பதே சரியானது

அபிவிருத்தி அடைந்த நாடுகளை பற்றி கதைக்குறீர்கள்... ஆஸ்திரேலியா மயூரன் சூகுமார் விடையத்தில் என்ன சொல்கிறது?

 

ஏன் உங்கட பிள்ளையளில் உங்களுக்கு கைவைக்கும் உரிமை இருக்குறதா?

Link to comment
Share on other sites

கள்வர்கள் மீது எப்பவுமே அவதானமா இருக்கவேண்டும்,

உங்கள் கருத்திற்கு நன்றி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இலங்கை ஜனாதிபதியினால் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்ட சில பெண்களின் படங்களும் இணையத்தில் வெளிவந்திருந்தன. அவர்கள் மேல் சுமத்தப்பட்ட  குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை.

பொது மன்னிப்புக்குள் இந்தப்படங்கள் போடும் விடையங்கள்  மறைந்து விடும்.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்திற்கு நன்றி!!

எழுதிபோட்டு திருப்பி வாசிக்கேக்க உள்ளுக்க குத்தியிருக்குமே

உந்த சமாளிவுகேஷன் எல்லாம் வேலைக்கு ஆகாது

Link to comment
Share on other sites

போதை பொருள் கடத்திய சுவிஸ் பெண்: கைது செய்த அமெரிக்க பொலிசார் [ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 09:00.00 மு.ப GMT ] heroin_001.jpgசுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 45 பைகளில் ஹெராயின் போதை பொருளை கடத்திய போது அமெரிக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸின் ஜேனிவா (Geneva) நகரத்தை சேர்ந்தவர் Natasha Laurenza (25). தற்போது அமெரிக்காவில் உள்ள மான்செஸ்டர் (Manchester) நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு செல்போன் பேசிக்கொண்டு காரை ஓட்டிச்சென்றபோது, போக்குவரத்து ஆய்வில் இருந்த பொலிசார் அவரது காரை மடக்கினர்.

அப்போது, அவரது காரின் பின்புறம் சந்தேகத்திற்குரிய பொருட்கள் அடைக்கப்பட்டு இருந்ததை கண்ட பொலிசார், அவற்றை தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையின் போது காரின் பின்புறம் சுமார் 45 பைகளில் ஹெராயின் என்ற போதை பொருள் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

போதை பொருள் மட்டுமில்லாமல், உரிய அனுமதி இல்லாமல் ‘ஸ்டன்’ (Stun) துப்பாக்கியும் வைத்திருந்த அவரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர்.

சுவிஸ் பெண்ணின் கைது குறித்து பேசிய ஒன்ராறியோ ஷெரீஃப் (Ontario, sheriff) அலுவலகம், சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தியது மற்றும் உரிய அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருந்த குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது ஒன்ராறியோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் இன்னும் சில தினங்களில் மான்செஸ்டர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

Swiss News

Link to comment
Share on other sites

அலைகள் ஓய்வதில்லை படத்தில் "கோயிலில் காதல் தொழுகை" என்றொரு பாடல்வரி உள்ளது
அந்த வரி எவ்வாறு உருவானது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.
 
"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  
 
'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.'
 
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.
 
அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o     

 

 

ஐரோப்பாவில் வசித்தாலும் நான் "சுழல் கக்கூசில் தான் இன்னும் இருக்கிறேன்" என்பதைப் பறைசாற்றும் படி இருக்கிறது பாஞ்ச் உங்கள் கருத்து! :D

"மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு" என்பது தேர்தலுக்கு அரசியல் வாதிகள் பயன்படுத்தும் கோஷம்! சந்தேக நபருக்கு நீதி வழங்கும் கோஷம் அல்ல! நாங்கள் இன்னும் ஒன்றைச் செய்யலாம்! மக்களின் தீர்ப்புத் தான் முக்கியமெண்டு ஆப்கானிஸ்தான் போல மக்களே தூக்கில் போடவும் அனுமதி கொடுக்கலாம்! 

 

நாதமுனியிடம் கேட்ட அதே கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன்! (அவர் கம்மெண்டு இருக்கிறார் இன்னும்!) இப்படி ஒரு நிலையில் படம் வெளிவந்தது உங்கள் குடும்பப் பெண்ணாக இருந்தால் உங்கள் நிலைப்படு என்ன? (விடை சொல்ல வேண்டாம்! தெரியும் நீங்களும் இத்தோடு பம்மிக் கொண்டு போய் விடுவீர்கள்! :rolleyes: )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பொலிசார் யாரையும் முன்னரைப்போல இப்போது கண்மூடித்தனமாகக் கைது செய்வதில்லை என எங்கேயோ கேட்ட ஞாபகம் இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D பலருக்கு இங்கே திரி எதைப் பற்றி என்பதில் குழப்பம்! பொலிசார் கைது செய்தால் சந்தேக நபர் தான், அது கண்ணை மூடிக் கொண்டு செய்தாலும் திறந்து கொண்டு செய்தாலும்! சந்தேக நபருக்கு உரிமைகள் இருக்கு! இப்ப இதுவா விவாதம்? சந்தேக நபரை ஏன் ஒரு மூன்றாம் தர மீடியா பகிரங்கப் படுத்த வேண்டும் என்பதே விவாதம்! ஏதாவது இது பற்றிச் சொல்ல இருந்தால் சொல்லலாம்!

Link to comment
Share on other sites

நாதமுனியிடம் கேட்ட அதே கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன்! (அவர் கம்மெண்டு இருக்கிறார் இன்னும்!) இப்படி ஒரு நிலையில் படம் வெளிவந்தது உங்கள் குடும்பப் பெண்ணாக இருந்தால் உங்கள் நிலைப்படு என்ன? (விடை சொல்ல வேண்டாம்! தெரியும் நீங்களும் இத்தோடு பம்மிக் கொண்டு போய் விடுவீர்கள்! :rolleyes: )

 

யாழைவிடவும் வேறு இணையங்களுக்கும் நான் எழுதியுள்ளேன். ஆனால் அங்கு இல்லாத பண்பு யாழ்கள உறவுகளில் தெரிந்ததால் இங்கு தொடர்ந்திருக்க விரும்பினேன். நாதமுனியவர்கள் உங்கள் கேள்விக்குப் பதில்தராது கம்மெண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளீர்கள். அதற்குக் காரணம் உங்கள் கேள்வியின் பண்பைப் பொறுத்ததாக இருக்கலாம். அவரிடம் கேட்ட அதே கேள்வியை என்னிடமும் கேட்பதாக எழுதியுள்ளீர்கள். கேள்வி பண்பற்றதாகவே எனக்குப்படுகிறது. ஆகவே நானும் கம்மெண்டு இருந்துவிட விரும்புகிறேன்.  :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழைவிடவும் வேறு இணையங்களுக்கும் நான் எழுதியுள்ளேன். ஆனால் அங்கு இல்லாத பண்பு யாழ்கள உறவுகளில் தெரிந்ததால் இங்கு தொடர்ந்திருக்க விரும்பினேன். நாதமுனியவர்கள் உங்கள் கேள்விக்குப் பதில்தராது கம்மெண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளீர்கள். அதற்குக் காரணம் உங்கள் கேள்வியின் பண்பைப் பொறுத்ததாக இருக்கலாம். அவரிடம் கேட்ட அதே கேள்வியை என்னிடமும் கேட்பதாக எழுதியுள்ளீர்கள். கேள்வி பண்பற்றதாகவே எனக்குப்படுகிறது. ஆகவே நானும் கம்மெண்டு இருந்துவிட விரும்புகிறேன்.  :(

 

 

அன்புள்ள பாஞ்ச்! இதில் என்ன பண்புக் குறைவைக் கண்டீர்கள்? உங்கள் உறவினர்கள் யாரும் இப்படிச் செய்பவர்கள் என்று எங்கேயும் நான் எழுதவில்லை! தங்கள் உறவுகள், நெருக்கமானவர்கள் போல முன் பின் தெரியாத அன்னியர்களையும் பார்த்தால் இப்படி பட்ட தரக்குறைவான காரியங்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதே கேள்வியின் பின்னாலுள்ள செய்தி! இது ஒன்றும் உங்களுக்கோ நாதமுனிக்கோ எதிரான தனிப் பட்ட தாக்குதல் அல்ல! அப்படிக் கருத்து இங்கே தொனித்தால் முறையிடுங்கள், நிர்வாகம் சொல்வதை நான் கேட்கிறேன்!

 

உண்மை என்னவென்றால், எங்கள் உறவுகள், தெரிந்தவர்களுக்கு இதே போல நடக்கும் போது நாம் எல்லோருமே யூ-ரர்ண் எடுத்துத் திரும்பி எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வோம்! ஆனால் இப்போது அதை ஒப்புக் கொள்ள மாட்டோம், மௌனமாகி விடுவோம்! இதுவே நான் சொல்ல வந்த விடயம், வேறெதுவும் இல்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ஜயா,

பதிவிட்டு விமானம் ஏறினேன். இறங்கி பார்த்தேன்.

'இப்படி படம் உங்கள் குடும்ப....?

உங்களிடமே கேட்கிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிபதியிடம், எனது நிலை உங்சள் குடும்ப உறவுக்கு வந்திருந்தால் தண்டிப்பீர்களா என்பது போன்ற அபத்தமாக தெரிகிறது.

தெளிவாக சொல்வதானால், சரியாகப் படிக்கவில்லை என்று வாத்தியார் நாலு சாத்து சாத்தினால், பயிலின் தகப்பன், தலைமை வாத்தியாரிடம் போய், வாத்தியாரின் மகன் படியாமல் இப்படி அடிவாங்கினால் உவர் என்ன செய்வார் என்று கேட்டால் எப்படி.

ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்குதே கேள்வி.

Link to comment
Share on other sites

இனி ஒவ்வொருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வரவேண்டும்

சபா கண்ணை கட்டுதே

திருந்துவார்கள் என்ற எதிர் பார்ப்புடன் நான் விமானத்தில் ஏறப்போறேன்

கண்டபடி விமானம் விழுவதால் பயமா இருக்குது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஒவ்வொருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வரவேண்டும்

சபா கண்ணை கட்டுதே

திருந்துவார்கள் என்ற எதிர் பார்ப்புடன் நான் விமானத்தில் ஏறப்போறேன்

கண்டபடி விமானம் விழுவதால் பயமா இருக்குது :rolleyes:

சேர்வையர்,

பதில் தராமல் ஓடிவிட்டேன் என்று, ஜஸ்டீன் போட்ட பதிவுக்கு, நீங்கள் மூக்கை நுளைத்து, கண்ணைக் கட்டுது என்றால் ஏப்புடி?

VVT கொத்து அந்த மாதிரி. டிஸ்கவுண்ட் ஏதும் கிடைக்கும் எண்டு, உங்கட பேரை சொல்லப் போக, நீங்கள் மறதில போட்டியலாம் எண்டு, ஒரு பில்லை இழுத்திச்சினம்.

என்ன செய்யிறு, நம்ம கள உறவாச்சே எண்டு, கட்டியாச்சு. பிறகு ஆறுதலா தாருங்கோவன்.:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு, தனிநபர் சுதந்திரம், மதிப்பீடுகள், பண்புகள் போன்றனவற்றை அதிகம் மதிக்கும் மேற்கு நாடுகளில் நியமங்களை பரபரப்புக்காக செய்திகளை வெளியிட்டு தங்களைப் பிரபல்யப்படுத்தி பணம் சம்பாதிக்கும் இணையக் குடிசைக் கைத்தொழில் புரிபவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாது. மூன்றாம் தரச் செய்திகளிலும், கிசுகிசுக்களிலும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். அதைப் படித்தோம், அப்பால் போனோம் என்று இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ஜயா,

பதிவிட்டு விமானம் ஏறினேன். இறங்கி பார்த்தேன்.

'இப்படி படம் உங்கள் குடும்ப....?

உங்களிடமே கேட்கிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிபதியிடம், எனது நிலை உங்சள் குடும்ப உறவுக்கு வந்திருந்தால் தண்டிப்பீர்களா என்பது போன்ற அபத்தமாக தெரிகிறது.

தெளிவாக சொல்வதானால், சரியாகப் படிக்கவில்லை என்று வாத்தியார் நாலு சாத்து சாத்தினால், பயிலின் தகப்பன், தலைமை வாத்தியாரிடம் போய், வாத்தியாரின் மகன் படியாமல் இப்படி அடிவாங்கினால் உவர் என்ன செய்வார் என்று கேட்டால் எப்படி.

ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்குதே கேள்வி.

 

:rolleyes: சரி நீதிபதி அவர்களே! நீங்கள் தான் தீர்ப்பு எழுதும் தகுதி வாய்ந்த ஜட்ஜ் ஐயா! உங்களிடம் கேட்டது இந்த சாதாரண குடிமகனின் தவறு தான்! எனக்கும் தீர்ப்பெழுதிப் போடாதையுங்கோ!

 

(இது பயனுள்ள வாதம் தான் என்றாலும், சுவரோடு ஒரு அளவுக்குத் தான் முட்டலாம், இதை விட அடுத்த கட்டிடத்தில கூட்டில இருக்கிற சிம்பன்சிக்கு சைகைப் பாசை படிப்பிக்கலாம், அது நல்ல பயனுள்ள வேலையாக இருக்கும்!எனவே நான் புறப்படுறன்! :D )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D பலருக்கு இங்கே திரி எதைப் பற்றி என்பதில் குழப்பம்! பொலிசார் கைது செய்தால் சந்தேக நபர் தான், அது கண்ணை மூடிக் கொண்டு செய்தாலும் திறந்து கொண்டு செய்தாலும்! சந்தேக நபருக்கு உரிமைகள் இருக்கு! இப்ப இதுவா விவாதம்? சந்தேக நபரை ஏன் ஒரு மூன்றாம் தர மீடியா பகிரங்கப் படுத்த வேண்டும் என்பதே விவாதம்! ஏதாவது இது பற்றிச் சொல்ல இருந்தால் சொல்லலாம்!

 

இலங்கைச் சட்ட திட்டம் எனக்குத் தெரியாது.அது அவர்களுக்கேற்ற மாதிரி அடிக்கடி மாறும்.

சந்தேகத்தில் ஒருவர் கொடுக்கும் புகாரின் மேல் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்  போது நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

ஆனால் பொது இடத்தில்  கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.திருடப்பட்ட நகைகள் கூட மீட்கப்பட்டுள்ளனவாம்.

அந்தச் செய்தித்தளம் மூன்றாந்தரமாக இருந்தால் என்ன முதலாந்தரமாக இருந்தால் என்ன?

செய்தி உண்மையா இல்லையா என்பது தான் முதற்பிரச்சனை.

 

உங்கள் ஆதங்கத்தைப்பார்த்தால் இந்தச் செய்தியும் படமும் கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிகையில் வந்திருந்தால்

நீங்களும் கம்மன்னு இருந்திருக்கலாம். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைச் சட்ட திட்டம் எனக்குத் தெரியாது.அது அவர்களுக்கேற்ற மாதிரி அடிக்கடி மாறும்.

சந்தேகத்தில் ஒருவர் கொடுக்கும் புகாரின் மேல் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் போது நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

ஆனால் பொது இடத்தில் கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.திருடப்பட்ட நகைகள் கூட மீட்கப்பட்டுள்ளனவாம்.

அந்தச் செய்தித்தளம் மூன்றாந்தரமாக இருந்தால் என்ன முதலாந்தரமாக இருந்தால் என்ன?

செய்தி உண்மையா இல்லையா என்பது தான் முதற்பிரச்சனை.

உங்கள் ஆதங்கத்தைப்பார்த்தால் இந்தச் செய்தியும் படமும் கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிகையில் வந்திருந்தால்

நீங்களும் கம்மன்னு இருந்திருக்கலாம். :D

வாத்தியார்,

உங்க சிலர் குய்யோ, முறையோ எண்டு விதண்டாவாதம் பண்ணுகினம்.

அங்கே பொலீஸ் விசாரனை நடந்திருக்கிறது. யாழில் உறவுகள் இல்லா நிலையில், திருகோணமலையில் இருந்து திருவிழாவிற்கு, அதுவும், நல்லூர் முருகன் போன்ற பிரபல்யமில்லா ஆலயத்திற்கு வந்ததற்கு திருப்தியான காரணம் கொடுக்க வில்லை.

நகை எடுக்க முயற்சித்த போதே பிடிபட்டார்.

பெண் பொலீசார் சோதனையிட்ட போது, உள்ளாடையிலிருந்து வேறு நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.

அவர்கள் மூவரும், விரைவில் நீதிமன்றில் நிறுத்தப்படுவர் என தெரிகிறது.

உங்க எண்னெண்டா, மனித உரிமை அது, இதுவாம் சிலர். சிம்பென்சிக்கு படிபிக்கிறன் எண்டு கெளம்பிட்டாரு ஜஸ்டின்.

பாதிக்கப்பட்டவர் மனித உரிமை பற்றியோ, குருவி சேர்ப்பது போல், சேர்த்து வாங்கின நகைகளை பறி கொடுத்தவர்கள் தற்கொலை செய்யக் கூடுமே என்று யாருமே கவலைப்படவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பொது இடத்தில்  கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.

:D

 

இதைக் கேள்வியுற்று எனக்கு சத்தியமாய் அதிர்ச்சியில்லை! :rolleyes:

 

Link to comment
Share on other sites

அன்புள்ள பாஞ்ச்! இதில் என்ன பண்புக் குறைவைக் கண்டீர்கள்? உங்கள் உறவினர்கள் யாரும் இப்படிச் செய்பவர்கள் என்று எங்கேயும் நான் எழுதவில்லை! தங்கள் உறவுகள், நெருக்கமானவர்கள் போல முன் பின் தெரியாத அன்னியர்களையும் பார்த்தால் இப்படி பட்ட தரக்குறைவான காரியங்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதே கேள்வியின் பின்னாலுள்ள செய்தி! இது ஒன்றும் உங்களுக்கோ நாதமுனிக்கோ எதிரான தனிப் பட்ட தாக்குதல் அல்ல! அப்படிக் கருத்து இங்கே தொனித்தால் முறையிடுங்கள், நிர்வாகம் சொல்வதை நான் கேட்கிறேன்!

 

உண்மை என்னவென்றால், எங்கள் உறவுகள், தெரிந்தவர்களுக்கு இதே போல நடக்கும் போது நாம் எல்லோருமே யூ-ரர்ண் எடுத்துத் திரும்பி எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வோம்! ஆனால் இப்போது அதை ஒப்புக் கொள்ள மாட்டோம், மௌனமாகி விடுவோம்! இதுவே நான் சொல்ல வந்த விடயம், வேறெதுவும் இல்லை!

 

எனக்குக் குறைவாகத் தெரிவது உங்களுக்கு நிறைவாகத் தெரியலாம் அல்லது மாறி உணர்வதும் மனித இயல்பு. அப்படி இருப்பதால்தான் நாங்களும் விவாதங்களைப் புரிந்து மோதமுடிகிறது. குத்துச்சண்டை புரிபவர்களும் மோதல்முடிவில் கைகுலுக்கிக்கொள்வார்கள் அதுவும் ஒரு சிறந்தபண்பாகும். அதனை உங்களிடமும் கண்டேன்.
 
அன்புள்ள பாஞ்ச்! இது எங்கள் மோதலை முடித்து கைகுலுக்க வைத்துவிட்டது. சண்டைகளைப் பார்ப்பதிலும் மக்களுக்கு அதீத ஆர்வம் உள்ளது. பார்ப்பதற்குத் திரண்டு வருவார்கள். நாங்கள் தொடர்ந்து மோதுவோம், விவாதிப்போம் முடிவில் கைகுலுக்கிக்கொள்வோம் இனிய உறவுகளாக. :rolleyes:  :rolleyes:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.