Jump to content

றோஸ் பாண்


Recommended Posts

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் திருமலையை ஆட்டிப்படைத்த ராணுவ புலனாய்வாளர்களின் பெயரை ஐந்து வயது குழந்தை கூட சொல்லும்.

 

அந்த அளவுக்கு பிரபல்யம் வாய்ந்தவர்கள் பெர்னாண்டோ, பைத்துல்லா, ராஜப்த்தீன். அவர்கள் செய்த கொடுமைகள் சொல்ல இந்த கதை போதாது.

 

நிறைய குறுக்கு தெருக்களை கொண்ட திருமலை நகரின் மத்தியை நிறைந்த படையினரை கொண்டு அடைத்து விட்டு, நீல வானை கொண்டுவந்து, திருமலை மாவட்ட அடையாள அட்டை (முதலில் மஞ்சள் பின்னர் வெள்ளை) பரிசோதிக்கும் படையினரை இப்போ நினைத்தால் கூட வடிவேலு பாணியில் பில்டிங்கை ஸ்ட்ரோங் ஆக வைத்து கொண்டு பேஸ்மெண்டை நடுங்கும் பலரை இப்போதும் காணலாம்.

 

இவர்களது ஆட்டங்கள் கோலாச்சிய அந்த கால பகுதியில், திருமலை நகரின் மத்தியில் கல்லூரி வீதியையும் மூர் வீதியையும் இணைக்கும் அந்த மூலையில் இருக்கும் கோணேஸ்வரா இந்து கல்லூரியின் ஆரம்ப பாடசாலை வகுப்பறையின் கதிரைகளை இழுத்து போட்டுவிட்டு  தூங்கும் சுகமே எங்களுக்கு ஒரு தனி சுகம் தான்.

 

நாங்கள் நாலுபேர் மட்டும் தான் திருமலை நகரின் காவல் அணி. மின்மாற்றிகளை தகர்ப்பதோ,நிதி சேகரிப்போ, துரோகிகளை எச்சரிப்பதோ எல்லாம் எங்கள் நாலுபேரின் பணிகளுக்குள் தான் வரும்.

 

ஊரேல்லாம் உறங்கும் அதிகாலை மூன்று மணிக்கு தான் எங்களுக்கு சாப்பாடு. தவணை முறையில் ஆட்கள் மாறி மாறி காவல் நிற்போம். காவல் நிற்பவர்களை தவிர்த்து ஏனையவர்கள் அருகில் இருக்கும் முஸ்லிம் பேக்கரியில் போய் பாண் அல்லது கறி பணிஸ் வாங்கி வரவேண்டும்.  அந்த அதிகாலை நேரத்தில் சுட சுட வரும் ரோஸ் பாண், கறி பணிசின் சுவையே தனி சுவை. சுவைத்து பார்த்தவர்களுக்கு நான் எழுத்தில் அந்த அனுபவத்தை சொல்ல வேண்டியதில்லை.

 

அன்றும் அப்படி தான். நானும் கார்த்தீபனும் காவல் நிற்க கோகுல்ராஜ்ஜும் நியாஸும் பாண் வேண்டும் முறை. ஐம்பது ரூபாய் தாளுடன் ஆரம்ப பாடசாலை மதில் ஏறி அந்தோனியார் வீதி தாண்டினால் மூன்று நிமிட நடை தான் அந்த பேக்கரிக்கு. மதில் பாயும்போது சத்தம் கேட்காமல் இருக்க வெறும்காலுடன் வெளியே இருக்கும் மெட்ரோ (ஒறேஞ்) பேபோன் காட் போடும் தொலைபேசி கூண்டில் கால்வைத்து அருகில் ஓடும் கால்வாயின் ஓரத்தில்  இருக்கும் அழுக்கு  புற்களில் கால் பதிக்கலாம்.

 

அன்றும் கோகுல்ராஜ் மதில் மீது ஏறி தொலைபேசி கூண்டில் கால்பதிச்சு புல்லுக்கு மேலே வைக்கும் போது யாருடையதோ முதுகில் வைப்பது போன்ற உணர்வு. ச்சீ அப்படி இருக்காது என்று கொஞ்சம் ஊண்டியே காலைப்தித்து நிமிர்ந்தால் இராணுவம். மதில் நீட்டுக்கு படுத்திருந்தாங்கள். நியாஸை எச்சரிக்கை செய்யகூட அவகாசம் இல்லாமல் அவனும் சொப்பின் பையுடன் குதித்து விட்டான்.

 

உருளைக்கிழங்குவிற்கு யட்டி போட்டமாதிரி தான் கோகுல்ராஜ். அவன் துப்பாக்கி முனையில் யட்டியுடன் இருப்பதை பார்க்க நியாஸு க்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.  இராணுவத்துடன் வந்திருந்த ஈபிஆர்எல் எப் தோழர்களும் சிரித்தபடிதான் அவனிடம் கேட்டார்கள்.

 

இந்த நேரம் சொப்பின் பாக்கோட எங்கடா போறீங்கள்.

 

 

கெற்றபோல்  தடிக்கு துணி சுத்தினமாதிரி யட்டியுடன் இருந்த நியாஸ், மாலை கட்ட பூ புடுங்க வந்தனாங்கள் என்று சொல்ல வாயெடுக்கவில்லை. கோகுல்ராஜ் சொல்லிபோட்டான்.

 

நாங்கள் பாண் வேண்ட போறோம் அண்ணே.

 

யாருக்குடா புலிக்கு தானே அவனின் குரலில் மாற்றம் தெரிந்தது.

 

இல்லை அண்ணே எங்கள் இரண்டு பேருக்கும் தான். இன்னும் ஒரு வாரத்திலே பரீட்சை படிச்சு கொண்டு இருந்தனாங்கள் பசிச்சுது பாண் வேண்டுவம் என்று வந்தம்.

 

சரி ஒருத்தன் இரு. ஒருத்தன் போய் வாங்கி கொண்டு வா.

 

என்று சொல்லி முடிக்கவில்லை நியாஸ் எழும்பிவிட்டான் பையுடன்.

 

ஒரு இராணுவ வீரனின் காவலில் நியாஸ் பேக்கரிக்குள் புகும்போது வழமையான சலசலப்பு பேக்கரியினுள் இல்லை.

 

மனசை ஏதோ வருடினாலும் அங்கே  இருந்த முனீர் நானாவிடம் அண்ணே பாண் இருந்தால் தாங்கோ என்று ஐம்பது ரூபாயை நீட்டினான் நியாஸ்.

 

தம்பி உனக்கு விஷயம் தெரியாதா நாளைக்கு ரமலான் பண்டிகை நாங்கள் பாண் போடலை தம்பி.

 

எண்ட அல்லாவே...

 

அண்ணே ..இப்போ பாண் இல்லாமல் போனால் துவக்காலே அடிப்பான் என்ன இருந்தாலும் தாங்கோ அண்ணே.

 

தம்பி இண்டைக்கு பாண் போடவே இல்லை நேற்றையான் ரோஸ் பாண் இருக்கு என்று பழைய ரோஸ் பாணை சோப்பின் பாக்  நிறைய தந்து அனுப்பினார் முனீர் நானா. அன்றைக்கு அவர் தான் அல்லாவாக தெரிந்தார் நியாஸுக்கு.

 

பாண் கிடைத்த சந்தோசம் ஒரு தைரியத்தை கொடுத்தது நியாஸுக்கு, அண்ணை இப்போ ஆவது நம்புறீங்க தானே நாங்க சத்தியமா பாண் வாங்க தான் போனாங்கள் என்று   தோழரிடம் தைரியமாக சொல்லும்போதே தெரியவில்லை ஓணானை தேடி பிடிச்சு வேட்டிக்குள்ளே விடுறம் என்று.

 

இவ்வளவு பாணையும் நீங்க இரண்டு பேரும் தானா சாப்பிட போறீங்கள். பொய் சொல்லாதே புலிக்கு தானே சாப்பாடு.

 

இல்லை சத்தியமா நாங்கள் இரண்டு பேரும் தான் சாப்பிட போறோம்.

 

சரி அப்போ இங்கயே இப்பவே  சாப்பிடு.

 

 

 

 

 

 

கோகுல்ராஜ்ஜும் நியாஸும் எங்களிடம் வரும்போது விடிகாலை நாலு முப்பது, கண்கள் எல்லாம் சிவந்து அழுதது அப்படியே  தெரிந்தது.

 

 

ஒரு துண்டு கூட விடாமல் ஆறு றாத்தல் பழைய ரோஸ் பாணை துப்பாக்கி முனையில் யட்டியுடன் குந்தி இருந்து திண்டால் யாருக்கு தான் அழுகை வராது.  

 

 

 

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அஜித் பேக்கரி பேமஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பாணை கடையில விட்டுட்டு வந்திருக்கலாம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஒரு துண்டு கூட விடாமல் ஆறு றாத்தல் பழைய ரோஸ் பாணை துப்பாக்கி முனையில் யட்டியுடன் குந்தி இருந்து திண்டால் யாருக்கு தான் அழுகை வராது.  

------

 

ஆறு றாத்தல் பாணையும்.... சம்பல், கறி ஒண்டும் இல்லாமல் சாப்பிடுறது.... இலேசுப் பட்ட வேலை அல்ல. :D  :lol:

Link to comment
Share on other sites

இப்ப அஜித் பேக்கரி பேமஸ்.

 

நன்றி மீரா உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.

 

மணிஸ் கபே நாங்கள் கூடும் முக்கிய இடங்களில் ஒன்று. இப்போ இருக்குதா தெரியவில்லை.

இரண்டு பாணை கடையில விட்டுட்டு வந்திருக்கலாம்...!

 

நன்றி சுவி அண்ணா. அப்போ இருந்த பதற்றத்தில் அவர்களுக்கு அது தோணவில்லை. பாணை  கண்டால் விட்டுவிடுவான்கள் என்று நம்பினார்கள்.

ஆறு றாத்தல் பாணையும்.... சம்பல், கறி ஒண்டும் இல்லாமல் சாப்பிடுறது.... இலேசுப் பட்ட வேலை அல்ல. :D  :lol:

 

நன்றி தமிழ்சிறி அண்ணா. இன்றைக்கும் அவர்களை ஞாபகபடுத்தும் ஒரு நிகழ்வாக ரோஸ் பாண் இருப்பதில் மகிழ்ச்சியே.

 

விருப்பங்களை தெரிவித்த நந்தன், இசை, நுணா, புத்தன் ஆகியோருக்கும் நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தடி சந்தியில் உள்ளதா ?

image.jpg

Link to comment
Share on other sites

இது தான் மீரா. சந்தியில் இருந்து புகையிரத நிலையம் நோக்கி செல்லும் வீதியில் இருக்கும் சனீஸ்வரன் கோவில் கூட எங்கள் சந்திப்பு இடங்களில் ஒன்றாகும். அதெல்லாம் ஒரு காலம்.நன்றி உங்கள் படத்திற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றோஸ் பாண் நல்லாயிருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றே வாசித்து விட்டேன், பகலவன்!

 

ஆனால் அப்போது எனக்கிருந்த  'கணணி வசதியில்' பச்சை போட மட்டும் தான் முடியும்!

 

உருளைக்கிழங்குக்கு 'ஜாக்கெட்' போட்ட மாதிரி...! :D

 

உங்கள் கதை பழைய 'பாண் சுவையை' நாக்கில் ஒரு நிமிடம் கொண்டு வந்து போனது என்பது மட்டும் உண்மை!

 

தொடர்ந்தும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

நன்றி குசா அண்ணா மற்றும் புங்கை அண்ணா.

 

உங்கள் வருகையும் கருத்தும் என்னை மேலும் ஊக்குவிக்கின்றன.

 

விருப்புகளை வழங்கிய சுவி அண்ணா, தமிழினி ஆகியோருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

மொறட்டுவ பஸ்ஸுக்குள்ள சிங்களபெட்டை என்டு காலச் சுறண்டினதும் இதே நியாஸுக்குத் தானோ ?  :rolleyes:
 
( அந்த திரிய தேடிப் பாத்தன். காணேல்ல..)   :unsure:
 
Link to comment
Share on other sites

உண்மை தான் ஈசன். உங்கள் ஞாபகசக்திக்கு தலை வணங்குகிறேன்.

நன்றி ஈசன்.

இதோ அந்த இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?/topic/116156-கொழும்பு-ஃபிகர்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோஸ்பாண் கதை நன்றாக இருக்கிறது பகலவன் சின்னவிடயங்கள்தான் கோர்வையாக்கி எழுதுவதில்தான் சுவார்சியமே அடங்கியிருக்கிறது. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உண்மைச் சம்பவத்தை ஏன் "யாவும் கற்பனை" என்று எழுதியிருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.