“அவர்கள் வெளிநாட்டு வாழ்க்கைக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயராக இருக்கிறார்கள்”.
உண்மைதான், இது இருபாலாருக்குமே பொருந்தும். ஏனெனில் உங்களுக்கு தெரிந்த சம்பவங்கள் இரண்டு வேறு, எனக்கு தெரிந்த சம்பவங்கள் நான்கு வேறுவிதம், இன்னும் பலருக்கு இன்னும் பலவித சம்பவங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள், கருத்துக்களை எழுதுவார்கள். நான் எனது கருத்தை எழுதினேன்.
உங்களது கருத்திற்கும் மிக்க நன்றிகள் அபராஜிதன்.
மரணம் என்பது மிகப் பெரும் விடுதலை. வலியில் இருந்து, நோயிலிருந்து, முதுமையிலிருந்து மட்டுமல்ல செய்த பெரும் குற்றங்களிலிருந்தும் மரணம் கொடுப்பது விடுதலையை.
என் கவுண்டரின் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட இந்த நான்கு அயோக்கியர்களும் மிக இலகுவாக தம் குற்றங்களிருந்து பெரும் விடுதலையை ஒரு சில வினாடிகளுக்குள், வலியை உணராமலே பெற்றுவிட்டனர்.
ஆகக் குறைந்தது இரண்டு வருடங்களாவது கடூழிய சிறையில் அடைக்கப்பட்டு 'சிறை நீதி' யை ஏனைய குற்றவாளிகள் மூலம் கொடுக்கப்பட்டு பின் மரண தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும்.
நீதித்துறையிலும், அரச இயந்திரத்திலும், சமூகத்திலும் ஆணாதிக்கமும் வர்க்க வேறுபாடுகளும் நிரம்பிய இந்தியா சரியான சட்ட நடவடிக்கைகளின் மூலமாக நீதியை நிலை நாட்ட முடியாத நாடு என மீண்டும் நிரூபித்துள்ளது. குற்றத்தின் மூலம் இன்னொரு குற்றம் செய்தவர்களை தண்டித்து வெகுசன மனநிலையை தணித்து இருக்கு. நாளைக்கு இதே பாணியை தன் அரசு மீது விமர்சனம் வைப்பவர்கள் மீதும் அரச எதிர்ப்பாளர்களின் மீதும் கூட கைகொள்வதற்கான ஒரு புறச்சூழலை மீண்டும் உருவாக்கி இருக்கு
பாலியல் வல்லுறவுக்குள்ளாகி பலியான அந்த பெண் மீண்டும் மீண்டும் பலியிடப்பட்டுக் கொண்டு இருக்கின்றாள்.