Jump to content

ஆகாயத்தாமரை (வல்வை சகாறா)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தாமரை

 

2421954896_58d792ab36_m.jpg

மீனா சலனங்கள் அற்ற பார்வையுடன் என்னை நோக்கினாள். அவளின் பார்வை எனக்குள் பலத்த அதிர்வை ஏற்படுத்தி என் எண்ணங்களை புரட்டிப்போட்டது. அவளுடைய பார்வையை மீறி பேசும் நிலையை அடைய முடியாத தவிப்பு என்னை ஆக்கிரமித்தது…..

 

ஐரோப்பாவிலிருந்து உறவினர்களின் திருமண விழாவில் கலந்து கொள்ள கனடா வந்த எனக்கு மன ஆழத்தில் புதைந்திருந்த ஆவல் தலைதூக்கியதில் வியப்பில்லை பதின்ம வயதில் மறுக்கப்பட்ட காதலின் தாக்கம் ஐம்பதைத் தாண்டியும் மனதில் துயரமாக யாரும் அறியாமல் அழவைத்திருந்தது. நம்பியவளை  ஏமாற்றிவிட்டோமோ என்று சிறுகச் சிறுக என்னைச் சாகடித்து எனக்குள் தன்னை மட்டும் உயிர்ப்பாக வைத்திருக்கும் உணர்வு காதலுக்கு மட்டுந்தான் இருக்கமுடியும். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் இன்னும் இருநாட்கள்தான் இங்கு நிற்கமுடியும் எப்படி அவளைப்பார்ப்பது…… கண்ணாடிக்கூண்டுக்குள் பறக்க விட்ட பறவைபோல எண்ணங்கள் எல்லாத்திசைகளிலும் வேகத்துடன் எழுவதும் கண்களுக்குத் தெரியாத தடைகளில் முட்டி சுழன்று விழுவதுமாக அந்த இரவு என்னை வாட்டி எடுத்தது. கனடாவின் உறைந்தபனியில் நாயக்கரா வீழ்ச்சியின் தோற்றத்தை காண்பதற்காக அதன் அழகை இரசிக்கும் கொலிடே இன் ஹோட்டலில் இருந்தபடி ரொரன்ரோவில் வாழும் அவளைச்சந்திக்க மனதில் ஆர்ப்பாட்டம்.

. மேசையில் கண்ணாடி குவளையில் நிரப்பப்பட்ட பொன்நிற திரவம் தன்னைப்பருக அழைப்பு விடுத்தபடி கிடக்க…அனைத்தையும் விழுங்கியபடி பதின்மவயது மீனா உடலின் இயக்கங்களைச் சிறைப்படுத்திக் கொண்டிருந்தாள். எப்படியாவது… எப்படியாவது அவளைப்பார்த்தே ஆகவேண்டும்…..

 

கைத்தொலைபேசி ஒலித்தது..

கரிணி….. ……

என்னுடைய மனைவி அழைத்துக்கொண்டிருந்தாள். தொலைபேசியை எடுக்க மறுத்து மனம் குளறுபடி செய்தது. மீளவும் தொடர்ச்சியாக ஒலித்த தொலைபேசி அழைப்பை மறுக்கமுடியாமல் எடுத்தேன்.

எதிர்ப்பக்கத்தில் நீண்டநேரம் தொலைபேசியை எடுக்காத கோபத்தில் என்னைப் பேசவிடாமல் கரிணி பொரிந்து தள்ளினாள்  மௌனமாக கண்களை இறுக மூடிக்கொண்டேன் மீனா என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

 

“ வினோத் ஆர் யூ தெயா?”

என்று கரிணி கேட்க சட்டென மீனா மறைந்து போனாள்

 

“ஆங் கேட்கிறேன் “

என்னுடைய குரல் உயிர்ப்பிழந்து கரகரத்தது…..

 

“ஆர் யூ ஓகே வினோத்”…..

கரிணி குரலில் கலவரம் கலக்க நெருக்கமாகிக் கேட்டாள்

 

“ஐ”ம் ஓக்கேடா”

என்னுடைய பதில்  அவள் கலவரத்தை குறைத்திருக்கவேண்டும் சற்று சமாதானமாகி என் வரவுக்காக காத்திருப்பதாக காதலோடு சொல்லி போனை வைத்தாள்.

கரிணி என் மனைவி பெற்றோரால் தெரிவு செய்யப்பட்டு என் மனைவியாக்கப்பட்டவள். என் மனச்சிம்மாசனத்தில் அமர மீனா என்கிற என்னுடைய பதின்மவயது காதலியோடு எனக்குள் சண்டைபோட்டுக் கொண்டிருப்பவள். ஆனால் கரிணிக்கு மீனாவோடு அவள் சண்டைபோடுவது தெரியவே தெரியாது. தெரிவதற்கான வாய்ப்பையும் வழங்காதவனாக இன்றுவரை இரகசியத்திற்குள் என் அக உருவம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

 

நான் இங்கு வருவதற்கு முன்பே என்னுடன் படித்த நண்பர்கள் பலருக்கு தகவல் கொடுத்திருந்தேன் உறவினரின் திருமணநிகழ்வில் பலர் என்னை சந்தித்து அளவளாவி சென்றனர் நாளை மதி ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறான் போகவேண்டும். விடுபட்ட சில நண்பர்களையும் அழைப்பதாக கூறியிருந்தான் பழைய தோழர்களை சந்திக்கும்போது யாரிடமாவது மீனாவைப்பற்றி கேட்கவேண்டும் என்று சிந்தனை மையமிட்டது… மீனாவும் என்னுடன் படித்தவள்தான் ஆனால் ஆண் நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்ற படியால் மீனாவைப்பற்றிய விடயங்கள் தெரியாது. அவளைப்பற்றி அறிவதற்காக யாரிடமும் தகவல் சேகரித்ததும் இல்லை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் இரகசியமாக மீனாவை பத்திரப்படுத்தியது மனம்.

கடிதப்பரிமாற்றங்கள், பார்வைமொழிகள் கிடைத்த சில நிமிட தனிமையில் உடல் அதிர பரபரக்க, வியர்த்து விறுவிறுக்க அவளை இழுத்தணைத்து கொடுத்த முத்தம். உதறி திமிறி மானாக அவள் ஓடிய கணம்………. எல்லாம் என்னை விழுங்கியபடி…. இரவென்னும் நரகம் உறைபனியினூடே மந்தமாக நகர்ந்து மறைந்தது.

புதிய காலை யன்னல்களுக்கு வெளியே வெண்பனியோடு உறவாட கதிர்கரங்கள் சிரித்தன. நிர்மல வானின் முகில்களில் காற்றின் கைகள் ஓவியங்களை தீட்டுவதும் அழிப்பதுமாக நகர்ந்து கொண்டிருந்தது. இன்று நண்பர்களை சந்திக்க ரொரன்ரோ நகருக்கு செல்வதற்கான டாக்சியை ஒழுங்கு செய்து விட்டு வந்து குளித்து சவரம் செய்து மெல்லிய நீல நிறத்தில் சேர்ட்டை அணிந்தபடி கண்ணாடியில் ஒரு கணம் நிலைத்து  என்னை உற்று நோக்கினேன். அரைவாசிக்கு அதிகமாக தலைமுடியும், மீசையும் நரைத்திருந்தன. இளவயதில் இருந்த ஒற்றைநாடி உடல் மறைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதை உடல்வாகு காட்டியது. துருதுருவென்றிருந்த கண்களும் கனத்த இமைகளுக்குள் சோர்வாக ஒளித்திருந்தன. தடித்த தாடைகள் முதுமையின் பயணத்தை ஆரம்பித்துவிட்ட அரும்பலை காட்டத்தயங்கவில்லை. புன்னகையிற்கூட இயற்கை மறைந்து ஒரு இயந்திரத்தனம்  தெரிவதாக மனம் சொல்லியது. அன்று என்னைத் தள்ளிவிட்டு மானாக ஓடிய மீனா கண்ணாடிக்கு அப்பால் இருந்து கைகொட்டி ஏளனமாக சிரிப்பதாக தெரிந்தது.

உள்ளத்தின் அலைக்கழிவைத்தாங்க முடியாமல் “ ச்சீ வேண்டாம்” என்று உதறினாலும் போக மறுத்தவளாக உறுதியாக நின்றாள். மீனா திருமணம் செய்தாளா என்ற தகவல்கூடத் தெரியாமல்…… கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவளை தேடுகிற விசித்திரம் காதலுக்கு மட்டுந்தான் சாத்தியம்.

 

ரொரன்ரோ பயணம்… 2 மணித்தியாலங்களில் மதியை சந்தித்து நேராக ஒரு இத்தாலியன் ‘வுப்பே’க்கு கூட்டிச் சென்றான் அங்கு கரன், உதயா, பரணி  அவர்களின் துணைவியர் என்று ஒரு நண்பர்கள் குழாமே இருந்தது. ஒவ்வொருவரும் அறிமுகம் செய்தபின் பள்ளிக்கதைகள் பேசி கலாய்த்து அவ்விடம் களைகட்டியது அப்போது மதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர

“வினோத் இன்னும் இரு நண்பர்கள் எங்களோடு இணைகிறார்கள் இரு அழைத்து வருகிறேன்” என்று வெளியே சென்றவன் எங்கள் வயதையொத்த இரு பெண்களை அழைத்து வந்தான்.

கலகலப்பாக வந்த இருவரும் என்னை உற்று பார்த்தபடி நெருங்கி வந்தனர் கைகளை குலுக்கி சிரித்தவளைப்பார்க்க தெரிந்தவளாக இருந்தாள் அடையாளம் பிடிக்க கடினமாக தடுமாற “டேய் வினோத் நான் மனோடா” என்று சிரித்தவளுக்குப் பின்னால் வந்தவளை பார்த்ததும் என் புலன்கள் அனைத்து அதிர்ந்து போயின. தலை லேசாக கிறுகிறுக்க கால்கள் தள்ளாட மூர்ச்சையாகி போவதுபோல ஒரு மாயைக்குள் அமிழ்ந்து தத்தளித்தது இயல்பு. “ஹாய் வினோத்” என்றபடி எனது கைகளை குலுக்கியவள் சிறிய புன்னகையுடன் சுற்றிவரப் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் எனக்கு எதிரில் அமர்ந்து கொண்டாள்.

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்  அவளைப் நேராக பார்க்கும் துணிவும் அற்றவனாக…… கோழைமையில் தகர்வதை அவள் பார்த்திருப்பாளோ......... என்ற வீம்பு வர மிகுந்த பிரயத்தனப்பட்டு நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன்

மீனா எந்தவித சலனங்களும் இன்றி மிக நிதானமாக என்னை பார்த்து புன்னகைத்தபடி இருந்தாள். ம்… அவள் திடமாகத்தான் தெரிந்தாள் நான்தான்…. நான்தான் இன்னும் பதின்ம நினைவுகளில் இருந்து விடுபடாமல் உள்ளுக்குள் உருக்குலைந்து கொண்டிருக்கிறேன்.

இதோ எதிரே அவள்….. அவள் கண்களுக்குள் என் தேடல் விரிந்தது அவளிடம் பார்வை மொழி புலப்படவில்லை….. என்ன ஒரு அழுத்தம் இவளிடம்…..

நண்பர்கள் பேச்சுகள் ,கேலிகள், சிரிப்பு வெடிகளாக அன்றைய விருந்து அமர்க்களமாக நண்பர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர் முன்பே எனக்காக காத்திருந்த உதயா பரணி, கரன் ஆகியோர் துணைகள் சகிதம் விடை பெற நானும் மதியும் மனோவும் மீனாவும் எஞ்சியிருந்தோம்…..

அப்போதுதான் மதியை அவதானித்தேன் அவன் மனோவை உற்று நோக்கியபடியே இருந்தான் மனோவும் அவனை அன்றைய நாட்களில் திட்டுவதுபோல ஆனால் பக்குவமாக முறைப்பது  விளங்கியது.

‘ஓ… கதை இதுவா….”……….

“ஏன்டா மதி நீ திருந்தவே மாட்டாயா?”

மனோ மதியைநோக்கி சொல்லிக் கொண்டிருந்தாள்……

“வினோத்!....... இவன் கதையை கேள் இப்பவும் என்னைக் காதலிக்கிறானாம் இவனை என்ன செய்யலாம் சொல்லு?”

என்று என்னை நோக்கி மனோ சொன்னாள்.

 

மதியும் கிண்டலாக

“ மனோ உன்னை எப்ப என்னால மறக்க முடியும் சொல் என்னுடைய முதல் காதல் நீ என்ன நீ காதலிக்காவிட்டாலும் நான் சாகும்வரைக்கும் காதலிப்பேன்…..”

 

“ டேய் டேய் முட்டாளே இப்படி லாசுத்தனமாக உளறுவதை நிற்பாட்டு அதுக்குத்தான் நான்  உங்களை எல்லாம் சந்திக்கிறதை விரும்பிறேல்லை…… இப்படி ஏடாகூடமாக எதையாவது கதைக்கிறதை நீ நிற்பாட்டினால்தான் நான் இனிமேல் இப்படியான நண்பர்கள் சந்திப்புக்கு வருவேன்”

என்று மனோ டென்சனாகிக் கொண்டிருந்தாள்….

மீனா அவர்களின் உரையாடலை மெல்லிய புன்னகையுடன் இரசித்தபடி இருந்தாள்……. மீனாவுடன் பேச்சுக் கொடுக்க அவா ஏற்பட்டது ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.

மீனாதான் பேசினாள் நலம் விசாரித்தாள். மனைவியைப்பற்றிக் கேட்டாள். தான் தனது குடும்பம் பிள்ளைகள் பற்றி சொன்னாள். கணவனைப்பற்றி மிகப் பெருமையாக சொன்னாள். எனக்கு சிறிது எரிச்சலாக இருந்தது. என்னுடைய இடத்தில் இன்னொருவன் என்ற குரோதம் எட்டிப்பார்த்தது. சிம்பிளாகப் பேசி நட்புடன் கைகுலுக்கிவிட்டு மனோவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

இப்போதும் என்னுடைய நப்பாசை விடவில்லை அவளுடைய செயலில் முகத்தில் பார்வையில் எங்காவது என்னை உணர்ந்ததற்கான அடையாளம் தெரிகிறதா என்று துருவித் துருவித்தேடினேன் தோல்வி மட்டுமே எனக்கு கிடைத்தது. என்னுடைய எண்ணத்தை உருவத்தை அவளின் அகவெளியிலிருந்து அகற்றி எறிந்துவிட்டாள் என்றே அவளுடைய ஒவ்வொரு செயலும் நிரூபித்தன.....

நாளை நானும் மீளவும் ஐரோப்பாவுக்கு பயணமாகவேண்டும். மதியுடன் விடை பெற்றுக் கொண்டு மீளவும் ஒரு டாக்சியில் நாயக்கராவை நோக்கிப் புறப்பட்டேன். மனிதர்களை, நிலத்தை, மரங்களைப் பார்க்க பிடிக்கவில்லை டாக்சியின் இருக்கையைச் சரித்துவிட்டு வான் நோக்கி என் பார்வையை நகர்த்தினேன் இப்போதும் காற்று முகிலில் ஓவியங்களை வரைவதாகவும் களைவதாகவும்...., அதைப்போல மனமும் ஒரு நிலையிழந்து அலைக்கழிந்தது.

 

கண்ணெதிரே முகிலில் போட்ட தாமரையை காற்று கண்களுக்குத் தெரியாத கரங்களால் கலைத்துக் கொண்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் காதலின் முறிவானது  கிணற்றில் போட்ட கல் போன்று சலனமற்று இருக்கும் உயிர்ப்புடன்....! 

 

ஆண்களின் காதல் முறிவானது அதே கிணற்றில் வாழும் தவளை போல , எப்பவும் சலனத்துடனும் அப்பப்ப நீருக்கு மேல் வந்து இரை மீட்டுச் செல்லும்...!

 

முதல் காதலையும் முதல் முத்தத்தையும் முற்றும் துறந்த முனிவனும் /முனிவியும் கூட மறக்க மாட்டினம்...!  :lol::)

 

கதை கலக்கல் சகோதரி...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் காதலின் முறிவானது  கிணற்றில் போட்ட கல் போன்று சலனமற்று இருக்கும் உயிர்ப்புடன்....! 

 

ஆண்களின் காதல் முறிவானது அதே கிணற்றில் வாழும் தவளை போல , எப்பவும் சலனத்துடனும் அப்பப்ப நீருக்கு மேல் வந்து இரை மீட்டுச் செல்லும்...!

 

முதல் காதலையும் முதல் முத்தத்தையும் முற்றும் துறந்த முனிவனும் /முனிவியும் கூட மறக்க மாட்டினம்...!  :lol::)

 

கதை கலக்கல் சகோதரி...!!

 

சுவியண்ணா உண்மைதான் ஆண்களின் அனுபவத்தைத்தானே லொடலொட என்று கேட்க முடியும் அனுபவப்பட்ட பெண்கள் வாயைத்திறந்து அனுபவத்தைச் சொன்னால்தான் நம்மைப்போன்றவர்கள் அந்த உணர்வைப்படம் பிடித்து கதையாக எழுதமுடியும்  பெண்கள் நிலை எப்படி இருக்கும் என்பது என் கற்பனையிலும் எட்டாததாக இருக்கிறது.... அதனால்தான் பெண் கதாப்பாத்திரமாக நின்று எழுத முடியாமல் இருக்கிறது :rolleyes:  உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு உயிரோட்டமாக எழுதியுள்ளீர்கள் . நன்றாக இருக்கிறது . :D

 

சஹாரா , நானும் ஆண்கள் ஒரு பெண்ணை வர்ணிப்பது போன்று கவிதைகள் எழுத போய், அக்கவிதைகளை வாசித்தவர்கள்

எல்லோரும் என்னை ஆண் என்று நினைத்து விட்டார்கள் . நீங்கள் எழுதிய கதையைப்பார்த்த பின்னர் எனக்கு நிம்மதியாக

இருக்கிறது . ஒன்று சொல்லவா ? பெண்கள் ஆண்களை விட கெட்டிக்காரர்கள் . எம்மால் கற்பனையில்

ஒவ்வொரு படைப்புக்கும் உயிர் கொடுக்க முடிகிறது அல்லவா ?

 

இப்ப ஆண்கள் எனக்கு எதிராக போர் கொடி தூக்காட்டி போதும் . சும்மா சொன்னனப்பா . தப்பாக எடுக்காதீங்க !!!!! :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு உயிரோட்டமாக எழுதியுள்ளீர்கள் . நன்றாக இருக்கிறது . :D

 

சஹாரா , நானும் ஆண்கள் ஒரு பெண்ணை வர்ணிப்பது போன்று கவிதைகள் எழுத போய், அக்கவிதைகளை வாசித்தவர்கள்

எல்லோரும் என்னை ஆண் என்று நினைத்து விட்டார்கள் . நீங்கள் எழுதிய கதையைப்பார்த்த பின்னர் எனக்கு நிம்மதியாக

இருக்கிறது . ஒன்று சொல்லவா ? பெண்கள் ஆண்களை விட கெட்டிக்காரர்கள் . எம்மால் கற்பனையில்

ஒவ்வொரு படைப்புக்கும் உயிர் கொடுக்க முடிகிறது அல்லவா ?

 

இப்ப ஆண்கள் எனக்கு எதிராக போர் கொடி தூக்காட்டி போதும் . சும்மா சொன்னனப்பா . தப்பாக எடுக்காதீங்க !!!!! :unsure:

 

நன்றி மீராகுகன்

 

ஆணாக நம்மை நினைத்துக்கொண்டு எழுதுவது அதிகசாத்தியப்படுகிறது. காரணம் ஆண்களின் திறந்த மனமும் உரையாடல்களுமாக இருக்கலாம். பெண்களின் உணர்வுகளைப்பிரதிபலிப்பதற்கு இன்னும் நான் நிறையத்தூரம் பயணிக்கவேண்டி இருக்கிறது. ஏனெனில் என்னுடன் சுமார் 15 பெண்கள் வேலை செய்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரகம் சில சமயங்களில் ஒவ்வொருவரையும் புரிந்து கொள்வது என்பது மிகக்கடினமாக இருக்கிறது. ஆண்களுக்கு பொதுக்குணாதிசயம் என்பது அதிகபடியாக ஒன்றாகவே உணர முடிகிறது ஆனால் பெண்களின் குண இயல்புகளை ஒரு பெண்ணாக இருந்தும் ஆழமாக நோட்டமிடமுடிவதில்லை. ஒரு படைப்பாளியாக இன்னும் முழுமைபெற முடியாமல் நான் இருப்பதாக உணர்கிறேன். இதன் எதிர்ப்பக்கத்தையும் செவ்வனே எழுத முடிந்தால்தான் நான் இக்கதையை எழுதியதில் வெற்றி பெற்றவளாக கொள்வேன் அதனை செம்மையுற எழுதமுடியாவிட்டால் தோல்வியாகவே உணரமுடியும். எனிவே முயன்று கொண்டிருக்கிறேன்.... ஆமாம் என்னம்மா ஆண்களைச் சீண்டி வம்புக்கு இழுத்திருக்கிறீர்கள்...... :blink: :blink:

Link to comment
Share on other sites

ம்...ம்..... பெண்கள் இலகுவாக அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விடுவார்கள்.......ம்..ம்...வினோத் போல் பலபேர். அக்கா நன்றாக உள்ளது யாரினதும் கடந்த கால வாழ்வை தழுவி எழுதியதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகாயத்தாமரை என்றால் சூரியனா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஆண் நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்ற படியால் மீனாவைப்பற்றிய விடயங்கள் தெரியாது. அவளைப்பற்றி அறிவதற்காக யாரிடமும் தகவல் சேகரித்ததும் இல்லை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் இரகசியமாக மீனாவை பத்திரப்படுத்தியது மனம்.

-----

உள்ளத்தின் அலைக்கழிவைத்தாங்க முடியாமல் “ ச்சீ வேண்டாம்” என்று உதறினாலும் போக மறுத்தவளாக உறுதியாக நின்றாள். மீனா திருமணம் செய்தாளா என்ற தகவல்கூடத் தெரியாமல்…… கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவளை தேடுகிற விசித்திரம் காதலுக்கு மட்டுந்தான் சாத்தியம்.

------

 

ஆண்களின் காதல் தோல்வியை.....

ஒரு பெண்ணாக இருந்து, அழகாக வெளிக்காட்டியுள்ளீர்கள் வல்வை சஹாரா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் மன நிலையை படமாக   காட்டும் தங்கள் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா

ரகுநாதனின் உண்மைக் காதல் போலவே உங்கள் கதையும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஆண்கள் நினைப்பினமாம்.. :unsure: அதை இவையள் பிடிப்பினமாம்.. :rolleyes: யாருக்கையா கதை விடுறீங்க.. :wub:

ஆனாலும் கற்பனைக்கதை நல்லாயிருக்கு..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35 வருடங்களாக தனது முதல்க்காதலை இன்னும் மறக்காமல் இருக்கும்

அரைக் கிழவனைக் கதாநாயகனாக்கிய பெருமை உங்களையே சாரும் :):D

Link to comment
Share on other sites

அதை வாசிச்ச பெருமை எங்களை சேரும்

கதை நல்லா இருக்குது அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணெதிரே முகிலில் போட்ட தாமரையை காற்று கண்களுக்குத் தெரியாத கரங்களால் கலைத்துக் கொண்டிருந்தது.

 

என்ற கவித்துவ வரிகளோடு கதையை முடித்திருப்பது அருமை.      பொதுவாக எல்லாருக்கும் இந்தக் கதை பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.. இது கற்பனை போலத் தெரியவில்லை!

 

நானும் ஒன்றை மறக்கலாம் என்று நினைத்துச்... சில வேளைகளில் மறந்து விட்டதாக நினைத்து எனது முதுகில் நானே தட்டிக்கொண்ட நாட்கள் பல உண்டு!

 

ஆனால் அவளை.. யாருடனும் ஒப்பிட்டுப் பார்த்து.. ஒப்பிட்டது மட்டும் இல்லை!

 

சில வேளைகளில்.. நள்ளிரவில்.. அவளது குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்து விடுவதும் உண்டு..!

 

இரவின் மிகுதி முழுவதையும்.. ஆகாயத் தாமரை கலைந்து போகும் நேரம் எடுத்துக்கொள்ளும்!

 

சில நினைவுகளை மறக்க முயன்றாலும் முடியாது...!

 

கல்லறை வரை காவிக்கொண்டு செல்ல வேண்டியது தான்! :o

 

அருமையான ஒரு கதைக்கு நன்றிகள்..வல்வை! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா, இரண்டா வானத்தில் பூத்தது ஏராளம்!

ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல. உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்த அனுபவம் இல்லாவிடினும், சிலவேளை சிலரை மீண்டும் சந்திக்க வேண்டும் போல் இருக்கும். 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்..... பெண்கள் இலகுவாக அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விடுவார்கள்.......ம்..ம்...வினோத் போல் பலபேர். அக்கா நன்றாக உள்ளது யாரினதும் கடந்த கால வாழ்வை தழுவி எழுதியதா?

 

யாருடைய கடந்தகாலத்தையும் என்று குறிப்பாக சொல்லமுடியாது ஆனால் பல ஆண்களின் வெளிப்படையான பேச்சுக்களை வைத்து எழுதியது பலருக்கு இது நியமாக இருக்கலாம் புலிக்குரல் :)

ஆகாயத்தாமரை என்றால் சூரியனா ?

 

மருது இடத்திற்கேற்ப ஆகாயத்தாமரையை உவமிப்பதுண்டு. இந்தக்கதையில் ஓட்டத்தில் சூரியனுக்கும் ஆகாயத்தாமரைக்கும் மிக எட்டம். :)

ஆண்களின் காதல் தோல்வியை.....

ஒரு பெண்ணாக இருந்து, அழகாக வெளிக்காட்டியுள்ளீர்கள் வல்வை சஹாரா. :)

 

பெண்களிடம் இதன் மறுபக்கம் பற்றிய தேடலை ஆரம்பித்துள்ளேன்  ஏதாவது அகப்படுகிறதா என்று பார்ப்போம் :)

ஆண்களின் மன நிலையை படமாக   காட்டும் தங்கள் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

 

நன்றி நிலாக்கா

சகாரா

ரகுநாதனின் உண்மைக் காதல் போலவே உங்கள் கதையும் இருக்கிறது.

 

ரகுநாதனின் பதிவை வாசிக்கவேண்டும் என்று  இருந்தேன் நல்ல காலம் ஞாபகப்படுத்தினீங்கள் ஈழப்பிரியன்  சனி ஞாயிறு கண்டிப்பாக வாசித்து பதிவிடவேண்டும்.

ஆண்கள் நினைப்பினமாம்.. :unsure: அதை இவையள் பிடிப்பினமாம்.. :rolleyes: யாருக்கையா கதை விடுறீங்க.. :wub:

ஆனாலும் கற்பனைக்கதை நல்லாயிருக்கு..! :D

 

எல்லா ஆண்களும் சரண்டர் இவர் மட்டும் என்ன சிலுப்பிக் கொண்டு நிற்கிறார் :icon_mrgreen:

35 வருடங்களாக தனது முதல்க்காதலை இன்னும் மறக்காமல் இருக்கும்

அரைக் கிழவனைக் கதாநாயகனாக்கிய பெருமை உங்களையே சாரும்

 

எல்வோருமே கதாநாயகர்கள்தானே இதில் அநியாயத்திற்கு அரைக்கிழடை கதாநாயகன் ஆக்கியதாக சொல்லக்கூடாது வாத்தியார்.

அதை வாசிச்ச பெருமை எங்களை சேரும்

கதை நல்லா இருக்குது அக்கா

 

நன்றி சுவி அண்ணா......

கண்ணெதிரே முகிலில் போட்ட தாமரையை காற்று கண்களுக்குத் தெரியாத கரங்களால் கலைத்துக் கொண்டிருந்தது.

 

என்ற கவித்துவ வரிகளோடு கதையை முடித்திருப்பது அருமை.      பொதுவாக எல்லாருக்கும் இந்தக் கதை பிடிக்கும்.

 

அநேகமானர்வளின் கடந்தகால அனுபவத்தை தொட்டுள்ளேன் சேயோன் எது எப்படியாக இருந்தாலும் 89 வீதமானர்களின் கடந்தகாலத்தை அசைபோட இக்கதை வழி சமைத்திருக்கும்.

பதிவிட்ட மிகுதிப்பேருக்கு மாலையில் வந்து பதிவிடுகிறேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கதைக்கு சகாரா....

 

தொடர்ந்து எழுதவும்

ஆனால் 

ஆணாக எங்கள் நிலையிலிருந்து உங்களால் சிந்திக்கமுடியாது..

எதற்கு இந்த வேண்டாத வேலை......... :lol:  :D

 

இது ஒரு ஆணின் பார்வை.... :lol:  :icon_idea:

http://www.yarl.com/forum3/index.php?/topic/153858-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ பேருக்குள்ள கனன்றுகொண்டிருந்த நெருப்பை சகாரா ஊதி விட்டிருக்கிறா. இது இனி கொழுந்து விட்டு எரிந்து காட்டுத்தீயாகாமல் எப்படி அணைப்பது என்று சகாராதான் பதில் சொல்ல வேணும். கதை நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.. இது கற்பனை போலத் தெரியவில்லை!

 

நானும் ஒன்றை மறக்கலாம் என்று நினைத்துச்... சில வேளைகளில் மறந்து விட்டதாக நினைத்து எனது முதுகில் நானே தட்டிக்கொண்ட நாட்கள் பல உண்டு!

 

ஆனால் அவளை.. யாருடனும் ஒப்பிட்டுப் பார்த்து.. ஒப்பிட்டது மட்டும் இல்லை!

 

சில வேளைகளில்.. நள்ளிரவில்.. அவளது குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்து விடுவதும் உண்டு..!

 

இரவின் மிகுதி முழுவதையும்.. ஆகாயத் தாமரை கலைந்து போகும் நேரம் எடுத்துக்கொள்ளும்!

 

சில நினைவுகளை மறக்க முயன்றாலும் முடியாது...!

 

கல்லறை வரை காவிக்கொண்டு செல்ல வேண்டியது தான்! :o

 

அருமையான ஒரு கதைக்கு நன்றிகள்..வல்வை! :D

 

என்ன ஒரு ஒப்புதல் வாக்குமூலம் :rolleyes::lol:

 

ரோமியோ பலருடைய வாய்மொழிமூலம் எடுத்த கருதான் கதை இன்னாரடையது என்று குறிப்பிடமுடியாது சம்பவங்களை சூழலை மட்டுமே நாங்கள் கிரியேட் பண்ணினமாக்கும். மற்றப்படி எல்லாம் பல வாலிபக்கிழவர்களின் வாக்குமூலங்கள்தான் :lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா, இரண்டா வானத்தில் பூத்தது ஏராளம்!

ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல. உள்ள உணர்ச்சியை வார்த்தையில் வடித்துச் சொல்ல!!

 

ஐயே.... தீராத விளையாட்டுப்பிள்ளையாக்கும். வானத்தில தெரிஞ்சதையெல்லாமா காதலிப்பீங்க........ :lol:

 

பட்டாம்பூச்சி பிடிக்கிற சின்னப்பையன்தான் ஞாபகத்தில வருது... பிடிச்ச பட்டாம் பூச்சிகளின்  செட்டைகளைக் காயப்படுத்துறது.... கண்ணாடிக்குடுவைக்குள் அடைச்சுவைச்சு வேடிக்கை பார்க்கிறது இதெல்லாம்  காதலுக்குள்ள வராது கிருமி.... :icon_mrgreen: :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

அக்கா இதை தொடர் கதை ஆக்குங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரமே உங்கள் கதையை வாசித்திருந்தாலும் என் கணனியின் சிக்கலால் உங்களுக்கு எழுத மறந்துவிட்டேன். வித்தியாசமாக இருக்கிறது கதையின் எழுத்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.