Jump to content

வல்லை முனீசுவரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

11046564_10153727517905744_2338746810012

வல்லை முனீசுவரரின் செல்வாக்குக் குறைந்து விட்டதா? வல்லை வெளியால் பயணிக்கும் வேளையில் என் நெஞ்சைக் குடையும் கேள்வி இது.

.

1902 ஆம் ஆண்டில் வல்லைப் பாலம் கட்டப்பட்ட பின்னர் வடமராட்சிக்கும் வலிகாமத்திற்குமான இணைப்புப் பாதையாக வல்லைப் பாதையே விளங்குகின்றது. அதற்கு முன்னர் வடமராட்சி வலிகாமம் இணைப்புப் பாதையாக வாதரவத்தையே விளங்கியது. இதனால் ஒருகாலத்தில் வீரவாணி (வாதரவத்தை) செழிப்புப் பெற்ற ஊராகத் திகழ்ந்திருக்கிறது.

.

வல்லையினூடாக மக்கள் போக்குவரத்துச் செய்யப் பயந்தமைக்குப் பல காரணங்கள் இருந்தன. அது பாலைநிலச் சாயலைக் கொண்டிருந்தது என்பதற்கு அப்பால் அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் எனப் பெருந்திருடர்களின் ஆட்சியும் அப்பிரதேசத்தில் ஒரு காலத்தில் நிலவியதாம்.

.

புறாப்பொறுக்கியை மையப்படுத்தி வல்லை முனியின் (முனீசுவரன்) ஆதிக்கம் நிலவியது. இவற்றிற்கெல்லாம் பயந்த மக்கள் வல்லை வெளியூடான பயணத்தைத் தவிர்த்தனர். கப்புது – வாதரவத்தை - நீர்வேலி ஊடாகவே பயணம் மேற்கொண்டனர்.

.

காதலியாற்றுப்படை பாடிய வடமராட்சியைச் சேர்ந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை வல்லை முனியைப் பற்றியும் திருடர்களைப் பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

.

“புறாப் பொறுக்கி ஆலென் பெருமரம்

தன்னைத் தன்வாழ் பதியெனக் கொண்ட

வல்லை முனியும் வாரிரு சங்கிலி

கலகல வென்னப் பலபல ஒலியொடு

தன்பரி வாரம் சார்ந்து சூழப்

பாதி யாம வேளை தன்னில்

கூகூ என்று குமுறிக் குமுறிப்

பற்பல உருவோடு எழுந்து இருந்தும்

இராவழி போந்திடு மாந்தரை அடித்துந்

தொல்லை செய்யும் பொல்லாத் தனியிடம்”

புறாப்பொறுக்கியை மையப்படுத்தி இருந்த முனீசுவரர் வல்லைக் கடல் நீரேரிக்கு அண்மையில் மையங்கொண்டார். அதற்குப் பின்னர் போவோர் வருவோர் உண்டியலில் காணிக்கை செலுத்தி வணங்கி – தம்மைப் பாதுகாக்குமாறு வழுத்திப் பின் பயணந் தொடர்வதை வழக்கமாக்கினர்.

.

காலவோட்டத்தில் முனிசுவரருக்குப் பக்கத்தில் பிள்ளையாரும் சேர்ந்து கொண்டார். (பிள்ளையார் கோவில் வந்த காலம் பற்றி எனக்குச் சரியாக ஞாபகமில்லை. ஆனால் ஆமியின் வரவுக்குப் பின்னர்தான் இந்தக் கோவில் வந்தது என்கின்றனர்.)

போர்க்காலத்தில் வல்லை வெளிப் பயணம் உயிராபத்து மிக்கதாக விளங்கியமையால் பிள்ளையாரை நேர்ந்து வணங்கிப் பயணம் செய்வோருடைய எண்ணிக்கையும் பெருகியது. இதனால் முனீசுவரரை வணங்குகின்றார்களோ இல்லையோ பிள்ளையாரை வணங்கத் தவறுவார் இலர் எனக் கூறும் அளவிற்கு விநாயகரின் செல்வாக்கு மேலோங்கியது.

அண்மைக் காலமாக எதிரே ஓர் ஆஞ்சநேயரும் இங்கு தோற்றம் பெற்று விட்டார். (ஆண்டு சரியாக ஞாபகமில்லை. ஓர் ஐந்தாண்டுக்குள் இருக்கலாம்)

.

ஆக, வல்லை முனீசுவரர், அம்மையன், கந்தன், ஆட்குத்தி நாகன் என இவர்களை எல்லாம் இக்காலத்தவர்கள் மறந்து விட்டனர். விநாயகரும் ஆஞ்சநேயரும் செல்வாக்குப் பெற்று விட்டனர். காலமாற்றத்திற்கேற்ப வழிபாட்டு முறையும் மாற்றங்காணத் தொடங்கிவிட்டது.

.

இன்று 05.04.2015 வடமராட்சிக்குச் செல்லும் தேவை ஏற்பட்ட போது மூன்று கோவில்களுக்கும் மத்தியில் ஒரு பதினைந்து நிமிடங்கள் நின்று மக்கள் வழிபாட்டைத் தரிசித்தேன். ஒரு சில வாகனங்களைத் தவிர ஏனையவை யாவும் கோவிலடியில் தரித்தன. அதில் எல்லோரும் பிள்ளையாரைக் கைகூப்பித் தொழுதனர். சிலர் திருநீறு பூசினர். சிலர், அருகில் இருந்த இரப்போர்க்கு இரங்கி வழங்கினர். சிலர் ஆஞ்சநேயரையும் வணங்கினர். ஓர் ஐம்பது பேரை அவதானித்திருப்பேன். ஐந்துபேருக்குள்ளாகத்தான் வல்லை முனீசுவரரை வழிபாடு செய்தனர். இது ஏன் என்றுதான் என்னுள் விடை கிடைக்கவில்லை.

.

இதனைத்தான் முந்தி வந்த செவியை பிந்த வந்த கொம்பு மறைத்தது என்று சொல்லி வைத்தார்களோ?

Facebook : Santhiramouleesan Laleesan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வழியால் போய்வரும்போது பலமுறை வணங்கி வந்துள்ளேன்...! மோட்டார் சயிக்கிள் பயணத்தில் அங்கு சற்று இளைப்பாறிச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும், அப்படியே கல்லுன்டாய் வயிரவர் கோவிலும்...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதை படித்தவுடன் அந்த சோழககாற்று சாதுவான உப்பு வாடையுடன் முகத்தில் அறைந்து விட்டு போனது மாதிரி ஒரு உணர்வு அவை எல்லாம் இனி கனவே .
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனியப்பருக்குப் பக்கத்தில் இரண்டு கடவுள்கள் முளைத்ததை இரண்டு வருடங்களுக்கு முன்னர் போனபோது கவனிக்கவில்லை. நீண்ட 50 கலிபர் துவக்குடன் தாழப் பறந்து வந்த ஹெலியைப் பார்த்ததும் காரைப் பற்றைக்குள் உருண்டு உடம்பெல்லாம் காரைமுள் ஏறியதும், அதனாலேயே இரண்டு, மூன்று நாட்கள் கண்மூடிய போதெல்லாம் ஹெலியில் என்னைத் தூக்குவதுபோல் பிரமைவந்து காய்ச்சலடித்ததும் முனியப்பரால்தான். ஆனால் முதல்நாள் சண்டையில் அடிச்ச 50 கலிபர் எம்ப்ரி கப்ஸ் (empty caps) மட்டும் கிடைக்கவேயில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம் போனபோது வல்லை முனியப்பரோட நிண்டேன். :)

எனக்கென்னமோ முனீஸ்சுக்குத்தான் அதிக வரவேற்பிருந்தாப் போல தெரிந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.