Jump to content

கமலினி செல்வராஜன் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த இரங்கல்கள், 70 களில் மிக பிரபலமானவர், இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பல நாடங்களில் நடித்தவர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைத்தாகம் மிக்க தம்பதியரின் தணியாத தாகம் கலைத்தாகம்!

எழுத்தாளர் முருகபூபதி

"அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உன்னைத்தானே.? " எனக்கேட்ட கமலினி செல்வராசன் அத்தானிடமே சென்றார். திருமதி கமலினி செல்வராசன் கொழும்பில் மறைந்தார் என்ற செய்தி இயல்பாகவே கவலையைத்தந்தாலும், அவர் கடந்த சில வருடங்களாக மரணத்துள் வாழ்ந்துகொண்டே இருந்தவர், தற்பொழுது அந்த மரணத்தைக்கடந்தும் சென்று மறைந்திருக்கிறார் என்றவகையில் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.

ஈழத்தின் மூத்த தமிழ் அறிஞர் தென்புலோலியூர் கணபதிப்பிள்ளையின் புதல்வி கமலினி, இயல்பிலேயே கலை, இலக்கிய, நடன, இசை ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தமைக்கு அவரது தந்தையும் வயலின் கலைஞரான தாயார் தனபாக்கியமும் மூலகாரணமாக இருந்தனர். எனினும் புலோலியூர் கணபதிப்பிள்ளையின் நெருங்கிய நண்பராகவிருந்த பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன், அந்த நெருக்கத்தை அவர் புதல்வியின் மீதும் செலுத்தியமையினால், ஏற்கனவே ஜெரல்டின் ஜெஸி என்ற மனைவியும் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி ஆகிய பிள்ளைகள் இருந்தும் கமலினியை கரம் பிடித்தார்.

கலைத்தாகம் மிக்க, கமலினி - களனி பல்கலைக்கழக பட்டதாரியாகி ஆசிரியராகவும் பணியாற்றியவர். தந்தை வழியில் தமிழ்த்தாகத்தை பெற்று வளர்ந்த கமலினி தாய்வழியில் இசை ஞானமும் , கணவர் சில்லையூர் வழியில் கலைத்தாகமும் பெற்று பல்துறை ஆற்றல் மிக்கவராக திகழ்ந்தார்.

சில்லையூர் செல்வராசன் , 1970 இல் எழுதிய " ஈழத்து தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி " என்ற நூலுக்கு கமலினியின் தந்தை கணபதிப்பிள்ளை முன்னுரை எழுதினார். பின்னாளில் சில்லையூர் கமலினிக்கு புதிய முகவரி வரைந்தார்.

எனினும் அந்த முகவரி - கமலினியின் தீராத கலை, இலக்கிய தாகத்திற்கு எப்பொழுதும் துணையாக நின்று பாதுகாத்தது. இருவரும் பல கலை - இலக்கிய மேடைகளில் தோன்றினார்கள். அதற்காக பல ஊர்களுக்கும் பயணமானார்கள். அவர்கள் கலந்துகொள்ளும் எந்தவொரு விழாவிலும் இருவரும் உரையாற்றும் வகையிலேயே நிகழ்ச்சி நிரல்களும் தயாரிக்கப்படும்.

சில்லையூர் , இலங்கை வானொலியில் நடத்திய மக்கள் வங்கி விளம்பர நிகழ்ச்சிக்காக தமது தணியாத தாகம் நாடகத்தையும் தொடராக ஒலிபரப்பியபொழுது, தாம் இயற்றிப்பாடிய "அத்தானே...அத்தானே ....எந்தன் ஆசை அத்தானே... கேள்வி ஒன்று கேட்கலாமா... உனைத்தானே " என்ற பாடலில் கமலினியும் இணைந்தார். தமது மதுரமான குரலில் அந்தக்கேள்வி ஒன்றையும் கேட்டார். அந்தப்பாடல் தொலைக்காட்சி இல்லாத அக்காலத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் புகழ்பெற்றிருந்தது.

சில்லையூரை மணந்து சித்தி என்ற ஸ்தானம் பெற்று கணவரின் பிள்ளைகளுடன் வாழ்ந்த கமலினிக்கும் தாய் அந்தஸ்த்தை வழங்கினார் சில்லையூர். சில்லையூரின் மற்றுமொரு வாரிசாக அதிசயன் பிறந்தான். சில்லையூரின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். அவர் மகன்மாரும் கமலினியும் நடித்த சந்திரன் ரத்தினம் இயக்கிய ஆதர கதாவ திரைப்படம் இலங்கையில் முக்கியமானதொரு படமாகும். தமிழ் - சிங்கள உறவை , இனநெருக்கடி உச்சத்திலிருந்த காலத்தில் சித்திரித்த படம். இதில் கமலினியும் நடித்திருந்தார்.

கணவனும் மனைவியும் இணைந்து காதலர்களாக நடித்த படம் கோமாளிகள் முழு நீள நகைச்சுவைப்படம். கலைஞர்கள் அருணா செல்லத்துரை, கே.எஸ். பாலச்சந்திரன், கோமாளிகள் ராமதாஸ், வரணியூரான் கணேசபிள்ளை, கே.எம். வாசகர் முதலானோர் தயாரித்து இயக்கிய பல வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் தமது திறமையான நடிப்பினால் புகழ்பெற்றவர் கமலினி. சில்லையூர் மறைந்த பின்னர் அவரது முதல்தாரத்துப்பிள்ளைகளும் வெளிநாடுகளுக்கு சென்றதையடுத்து கமலினி மகன் அதிசயனுடன் தனது வாழ்வை கொழும்பில் தொடர்ந்தார். ஆசிரியப்பணியுடன் ஐ.ரி. என். தொலைக்காட்சியில் தேசிய லொத்தர் சபையின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கலை, இலக்கிய மேடைகளிலும் தோன்றினார்.

கணவர் மறைந்த பின்னரும் அவரது விருப்பப்படி நெற்றியில் திலகத்துடன் வலம் வந்து பெண்ணியமும் பேசினார். அது தொடர்பாக பத்திரிகைக்கும் நேர்காணல் வழங்கினார். அவரது கலைத்தாகத்தின் ஊற்றாக விளங்கிய தந்தையினதும் கணவரினதும் மறைவையடுத்து எதிர்கொண்ட சவால்களை சமாளித்தார். சில்லையூரினால் ஏற்கனவே எழுதப்பட்டு சிதறிப்போயிருந்த கவிதைகள், காவியங்களைத் தேடித்திரட்டினார். தேர்ந்தெடுத்த கவிதைகள் வரிசையில் சில்லையூர் செல்வராசன் கவிதைகள் ( தொகுதி - 1) நூலை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டில் கமலினியால் தொகுக்கப்பட்டு வெளியான அந்த நூலில் சில்லையூரின் கவியரங்கப்பாடல்கள், தேசபக்திப்பாடல்கள், புலவன் மனங்கவர்ந்த பொன்னாடுகள், அகம் - புறம் , அங்கதம், கவிஞனின் தத்துவம், பெண்மை, இசைப்பாடல்கள், பரிவும் - பிரிவும் , நெடும்பா , மொழிபெயர்ப்பு பாடல்கள் என அதிகாரங்கள் பிரித்து அந்தத் தொகுதியை வெளிக்கொணர்ந்தார் கமலினி. அத்துடன் அந்த நூலில் சில்லையூரின் வாழ்வில் நிகழ்ந்த பல உள்நாட்டு, வெளிநாட்டு இலக்கிய பொது நிகழ்ச்சிகளை சித்திரிக்கும் படங்கள், அவரின் பெற்றோர், பிள்ளைகள், முதல் மனைவி உட்பட பலரும் இடம்பெறும் படங்களையும் தவிர்க்காமல் அந்த நூலில் இணைத்திருந்தார். அவற்றையெல்லாம் சேகரிப்பதில் கமலினி காண்பித்த தீவிர அக்கறையை அந்த நூல் காலம்தோறும் சொல்லிக்கொண்டிருக்கும்.

அந்தவகையில் - சில்லையூரைப்பற்றிய படைப்பிலக்கியத்தகவல்களுக்கு ஆவணமாகவே அந்த நூல் இன்று திகழுகின்றது. சில்லையூருக்கு இவ்வாறும் ஒரு மனைவி வந்து வாய்த்தது அவருக்கு இறைவன் கொடுத்த வரம்தான்.

சில்லையூர் 25-01-1933 ஆம் திகதி பிறந்து 14-10-1995 ஆம் திகதி மறைந்தார். ஆனால், 1997 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த நூலில் - வாழ்க்கைக்குறிப்புகள் பகுதியில் அவரது பிறப்பு, பெற்றோர், பெற்ற விருதுகள், தெரிந்த மொழிகள், நடித்த நாடகங்கள், கூத்துக்கள், திரைப்படங்கள், வெளியான நூல்கள், பெற்ற விருதுகள் பற்றியெல்லாம் பதிவுசெய்துள்ள கமலினி , கணவரின் மறைவுத் திகதியை மாத்திரம் பதிவு செய்யவில்லை. இந்த உலகத்தைப்பொறுத்தவரையில் அவர் மறைந்தாலும் தன்னைப்பொறுத்தவரையில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் உள்ளுணர்வையே அந்த நூலில் இழையோடவிட்டிருந்தார் கமலினி செல்வராசன்.

கொழும்பில் நாரஹேன்பிட்டியில் அந்தத்தம்பதியர் வாழ்ந்த பைஃப் ரோட் ( Fife Road) இல்லம் எப்பொழுதும் கலகலப்பாகவே இருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், வானொலி, தொலைக்காட்சி, ஊடகத்துறையினர் அடிக்கடி வந்து செல்லும் கலையகமாகவே அந்த இல்லம் திகழ்ந்தது. ஆனால், அது வாடகை இல்லம். சில்லையூரின் மறைவுக்குப்பின்னர் அந்த இல்லத்தை தேசிய நினைவில்லமாக்குவதற்கு கமலினி அரும்பாடுபட்டார்.

அரச மட்டத்திலும் கலை, இலக்கிய அமைப்புகள் மட்டத்திலும் கடும் முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் - அந்த இல்லம் வாடகை இல்லம் என்பதனால் சட்டப்பிரச்சினை காரணமாக கமலினியின் கனவு நனவாகவில்லை. அந்த ஏமாற்றம் அவரிடம் நீண்ட நாட்கள் நீடித்தது.

எனினும் சில்லையூருக்காக பொரளை கனத்தை மயானத்தில் ஒரு நினைவுச்சிற்பத்தை அவர் அமைத்தார். அதற்கு அவருடன் இணைந்து ஆக்கபூர்வமாகச்செயற்பட்டவர் அகில இலங்கை கண்ணதாசன் மன்றத்தின் தலைவரும் கலை, இலக்கிய ஆர்வலரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான திரு. கங்கை வேணியன் என்பதையும் இங்கு தெரிவித்தல் பொருத்தமானது.

அந்த நினைவுச்சிற்பத்தை செதுக்கியவர் கலைஞர் புல்லுமலை நல்லரத்தினம். நினைவுச்சிற்பத்தின் திறப்பு நிகழ்ச்சியில் அப்பொழுது மேயராக இருந்த கே. கணேசலிங்கம், கனத்தை மயான பரிபாலகர் சானக பெரேரா, ஆகியோரும் கலந்துகொண்டனர். மற்றவர்கள் வழக்கம்போல், கணவர் மறைந்தவுடன் அந்தியேட்டி நடத்தி - கல்வெட்டு வெளியிட்டு - அன்னதானம் வழங்கும் ஆயிரத்தில் ஒரு நிகழ்ச்சியாக அந்த மறைவை அனுட்டிக்காமல் என்றென்றும் நிலைத்திருக்கும் சில்லையூரின் நூல்களையும் வெளியிட்டு, அன்னாருக்காக நாம் என்றென்றும் பார்க்கத்தக்க நினைவுச்சிற்பமும் அமைத்த ஆளுமையுள்ள பெண்தான் திருமதி கமலினி செல்வராசன்.

அவருக்கு இருந்த கலைத்தாகம் காதல் கணவர் மீதும் அபரிமிதமாக இருந்ததை பதிவு செய்திருப்பதே அவர் வாழ்ந்த வாழ்க்கை. கமலினிக்கு நினைவு மறதி நோய் எதிர்பாரத விதமாக வந்தபொழுது - தனது தாயை ஒரு தாயாகவும் தந்தையாகவும் தனயனாகவும் பாதுகாத்து உணவூட்டி போசித்தவர் அருமைச்செல்வன் ஏக புதல்வன் அதிசயன் செல்வராசன்.

தமிழ் கலை, இலக்கிய, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத்துறையில் மங்காப்புகழுடன் வாழ்ந்த கமலினி செல்வராசன் நோயுற்றபொழுது அவரின் அந்திமகால துயரச்சித்திரத்தை வரைந்தது ஒரு சிங்கள ஏடுதான் என்பதை அறிந்தால் அதிசயிப்பீர்கள். ஆம், அதுதான் உண்மை. அதிசயன் செல்வராசனின் நேர்காணல் கமலினியின் அந்திமகால தோற்றத்துடன் ரவிரச என்ற சிங்கள ஏட்டில் வெளியானது. தனது தாயாரை பராமரிக்க அதிசயன் நாளாந்தம் மேற்கொண்ட பாசமிகு பணிகள் பலருக்கும் முன்மாதிரியானது. சில்லையூருக்கு கமலினி வந்து வாய்த்தது எத்தகைய கொடுப்பினையோ அதற்குச்சற்றும் குறைவில்லாதது கமலினிக்கு அதிசயன் என்ற மகன் உருவில் கிடைத்த கொடுப்பினை.

இன்று தாயையும் தந்தையையும் இழந்து நிற்கும் அதிசயனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதுடன் நின்றுவிடாமல் அந்த இளைஞரின் இழப்பில் பங்கேற்று ஆறுதல் வார்த்தைகள் சொல்வோம். அவருக்கு பக்கபலமாக இருப்போம். கலைத்தம்தியர்கள் சில்லையூரும் - கமலினியும் மேல் உலகில் தமது எஞ்சியிருக்கும் கலைத்தாகத்தையும் தணித்துக்கொள்ளட்டும் என பிரார்த்திப்போம். எனினும் அவர்களின் கலைத் தாகம் தணியாத தாகம்தான்.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2638:2015-04-08-00-22-16&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.