Jump to content

2025இல் இந்தியா சிதறலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையும்போது ஈழத்தீவில் தமிழர்கள் இருக்கமாட்டார்கள். எல்லோரையும் சிங்களவர்கள் ஒன்றில் விரட்டியடித்திருப்பார்கள் அல்லது சிங்களவர்களாகவே மாற்றியிருப்பார்கள். இலங்கையில் தமிழ் பேசுவது முஸ்லிம்களாக இருப்பார்கள் <_<

 

 

இல்லை

மறுக்கின்றேன்

காலம் பதில் சொல்லும்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

அது நாங்கள் அதுவரை செய்யப் போகும் அரசியலில் தங்கியுளது.

இருப்பை தக்க வைக்கும், குடியேற்றத்தை முடக்கும் சமயோசித "நாணல் அரசியலை மேற்கொண்டால் எமக்கான சூழல் வரும் வரை முகிழ்திருக்கலாம்.

அடிதடி, கொடிபிடி அரசியல் செய்தோமாயின் நீங்கள் சொல்வதே நடக்கும்.

Link to comment
Share on other sites

நடக்க போகாத ஒரு விடயத்திற்கு இவ்வளவு வியாக்கியானங்களா ?

பொழுது போகாவிட்டால் ,

சீனா அமெரிக்காவை பிடிக்கும் போது தமிழர்களை நிலை என்ன ?

உலகில் உள்ள பனி முழுக்க உருகி கடலானால் தமிழன் அதற்குள் சுழி ஓடுவானா இல்லையா ?

இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் உரையாடலாம் .

:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 


முப்பது வருட பழக்கம் இப்பவும் போகுதில்லை இலகுவில் போகாது . 

Link to comment
Share on other sites

முப்பது வருசத்துக்கு முதல் இருந்த சத்துருக்களை பற்டி சிலர் இப்பவும் போட்டு இழுத்தோண்டு திரியினம்..அதுக்க :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையும் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருப்பவர்கள் இந்தியா உலகின் பெரிய சக்தியாக வருவதைக் கவனிக்காமல் இருப்பவர்கள்தான்.

அநேகமான இந்தியர்கள் தாம் இந்தியர்கள் என்பதைப் பெருமையாகக் கருதுபவர்கள். அந்த உணர்வைக் குறைக்கக் கூடிய விடயங்கள் எதுவென்றாலும் அதனை முளையிலேயே கிள்ளியெறிய சரியான திட்டமிடலோடு செயற்படும் கொள்கையைக் கொண்ட கட்டமைப்பு இந்தியாவில் உள்ளது.

காலிஸ்தான், அசாம், டார்லிஜிங், மிசோராம், தெலுங்கானா என்று தொடங்கிய கிளர்ச்சிகள் எல்லாம் எவ்வாறு இல்லாமல் போயின என்று அறிந்தால் இந்தியா உடைவது கற்பனையில்தான் என்று புரியும்.

Link to comment
Share on other sites

http://www.worldology.com/Europe/Europe_Articles/causes_soviet_collapse.htm

இதில் சோவியத் யூனியன் உடைந்ததுக்கான காரணங்களில் சிலவற்றை எழுதியுள்ளார்கள். 'எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்' என்பதுபோல ஒரு ஐந்து வருட காலத்தில் எல்லாம் உடைந்து கொட்டிவிட்டது.

இவற்றில் இருந்து இந்திய ஆட்சியாளர்கள் பாடம் படித்திருக்க வேண்டும். ஆனால் அப்படித் தோன்றவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை உடைக்க வேண்டிய அவசியம்  மேற்குலகிற்கு இன்னும் வரவில்லை. அப்படியொரு அவசியம் வந்தால் அதற்காக மேற்குலகம் அதிகம் உழைக்க வேண்டியதில்லை. ஒரு வருடம் போதுமானது.  :D

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு இந்தியாவிலிருந்து பிரியும் நிலை வருமெனின்,  இந்திய ஆழும் வர்க்கமானது, அதனைத் தடுப்பதற்காக ' அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும்' கூட நியாயப்படுத்தும்!

 

பார்ப்பனிய மனநிலையைப் புரிந்தவர்களுக்கு 'இது' நன்றாக விளங்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகமாவது பிரிவதாவது. வெரோசூசு இருந்தால்தானே!

20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுக்கு இதுவரை மத்தி எந்தப் பதிலும் சொல்லவில்லை! தமிழகம் இந்தியாவின் அடிமை மாநிலம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகமாவது பிரிவதாவது. வெரோசூசு இருந்தால்தானே!

20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுக்கு இதுவரை மத்தி எந்தப் பதிலும் சொல்லவில்லை! தமிழகம் இந்தியாவின் அடிமை மாநிலம்!

 

 

எல்லை மீறி வந்தால் சுடுவார்கள்தானே என்று கூறியதும் நீங்கள் தானே?? பிறகு ஏன் மத்தி  இந்தக் கொலை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்கிற கவலை ?? :D

இந்தியா பிரிவதற்கான வலுவான காரணங்கள் இருந்தாலும் கூட,ணாது நடப்பதற்கான சாத்தியப்பாடுகள் தற்போதைக்கு இல்லை. சீனாவின் கொட்டத்தை அடக்குவதற்கு இன்று மேற்குலகிற்கு மிகவும் இன்றியமையாதது வலுவான இந்தியா. ஆகா மேற்குலகு நிச்சயம் இந்தியா பிரிவதை விரும்பாது.

 

சோவியத் ராச்சியம் பிரிந்தது மேற்குலகின் விருப்பத்திற்காகவே. ஒன்றுபட்ட சோயியத் யூனியனை உடைத்துவிட்டால் பனிப்போரில் தமது பலத்தை அதிகரித்துவிடலாம் என்கிற மேற்குலகின் திட்டமே சோவியத் பல துண்டுகளாகப் பிரியக் காரணமாகியது. 

 

இன்றைக்கு இந்தியா மேற்குலகின் செல்லப்பிள்ளை, ஆகவே அது ஒன்றாக இருப்பதைத்தான் மேற்குலகு விரும்பும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகமாவது பிரிவதாவது. வெரோசூசு இருந்தால்தானே!

20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுக்கு இதுவரை மத்தி எந்தப் பதிலும் சொல்லவில்லை! தமிழகம் இந்தியாவின் அடிமை மாநிலம்!

 

நடக்கும் என்பார் நடக்காது....

நடக்காதென்பார் நடந்து விடும்

 

எல்லாம் ஆண்டவன் பாத்துப்பார் விட்டுடுங்கோ ..... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.