Jump to content

2025இல் இந்தியா சிதறலாம்


Recommended Posts

“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்

 

1.jpg
 
 
 சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பலநாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்அதேபோல இந்தியத் தேர்தல்ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் திருலிண்டோ அவர்களும் ஓய்வு பெறுவதற்குமுன் ஊடகவியலாளர் சந்திப்பில் “இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் தேர்தல்முறை எவ்வாறு இருக்கும்?” என்ற கேள்விக்கு விடை அளிக்கும் போது “இருபத்தைந்துஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இருக்குமா?” என்று பதில் கேள்வி எழுப்பினார்இதுபோன்றஐயங்கள் சிந்தனையாளர்களிடையே தோன்றிக் கொண்டே இருக்கின்றனகாரணம் தேசஅரசுகளை நிறுவிக் கொள்ளும் தகுதியும் ஆற்றலும் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் இந்தியஒற்றை வல்லாண்மை அரசின் காலனிகளாக சிறைப்பட்டிருப்பதுதான்தேசிய இனங்கள் தங்களின்அடையாள மீட்புக்காகவும் நீர்நில உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தொடர்ந்துபோராடிக் கொண்டிருக்கின்றனஇந்தத் தொடர் போராட்டங்களுக்கு இந்திய ஒற்றை வல்லாண்மைஅரசு முகம் கொடுக்க முடியாமல் போகும் நிலையில் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்றுஓப்பன் (OPEN) என்ற ஆங்கில வார இதழில் (சூலை, 2010) வெளியான கேஸ்ரோலிக் குழுவின்ஆய்வறிக்கையின் சாரமே இக்கட்டுரை.
 
·         இந்திய ஐக்கிய நாடுகள்
·         அரை – தற்சார்புள்ள நகர அரசுகள்
·         22க்கும் மேலான புதிய அரசுகள்
 
இந்திய ஆளும் வர்க்கம் மாற்றுத் திட்டங்கள், வழிகள் மேற்கொள்ளாவிட்டால் 2025இல் இந்தியத்துணைக் கண்டம் இந்த திசை வழியில்தான் செல்லப்போகிறது எனக் கூறுகிறது ஆய்வறிக்கை.
 
கேஸ்ரோலிக் குழு’ - நிதிவணிகம்பொது அலுவல்ஊடகம்கொள்கை உருவாக்கம்தன்னார்வதொண்டு நிறுவனங்கள் என்று பல துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய மற்றும் இந்தியமரபு வழிவந்த ஐம்பது வயதிற்குட்பட்ட உயர்மட்ட வல்லுநர்களைக் கொண்டது.
 
நாட்டின் பொருளாதார வளர்ச்சிமக்களின் வாங்கும் சக்திஉலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள ஏற்புஎன்ற பெருமித நிலை ஒருபுறம் உள்ளதுதகவல் அறியும் சட்டம்வாக்காளர்களின் முதிர்ச்சி என்றவிழிப்புணர்வு நிலையும் வளர்ந்துள்ளது. ஆயினும், கட்டுக்குள் கொண்டுவர முடியாத எங்கும்நிறைந்திருக்கும் இலஞ்சம், ஊழல், அதிகாரவர்க்கத்தின் இரக்கமற்ற ஆணவப் போக்கு மறுபுறம் உள்ளது.
 
“இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள சமூக உணர்வாளர்கள்சிந்தனையாளர்கள் பலஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும்புறக்கணிக்கும் போக்கு மறுபுறம்” என்று அதிகார வர்க்கத்தின் மனப்போக்கை படம் பிடித்துக்காட்டுகிறது.
 
“மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்படுத்தும் அழுத்தங்கள்மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் உண்மைநிலைக்கும் உள்ள இடைவெளிசாதி மற்றும் பழங்குடி மக்களின் சிக்கல்களின் வேர்களைக்கண்டறியும் அக்கறையின்மை. மேலும் அவர்களின் வாழ்வாதாரம்சொத்துப் பாதுகாப்புசட்டம்ஒழுங்கு, நீதிக்குப் பொறுப்பு ஏற்கும் கடமையைத் தவிர்க்கும் போக்கினால் மா.லெ. குழுக்களின்வன்முறைப் போராட்டங்களுக்கு வழிவகுத்தல் போன்ற நடவடிக்கைகள் இந்திய ஒருமைப்பாட்டைக்கேள்விக்குள்ளாக்கும் காரணிகளாகும்” என்று இந்த ஆய்வுக்குழுக் கூறுகிறது.
 
மேலும் பாகிஸ்தான்வங்க தேசம்சீனாநேபாளம்மியான்மர் போன்ற அண்டை நாடுகளில் ஏற்படும்அரசியல்பொருளாதாரசமூக மாற்றங்களினால் இந்தியாவில் ஏற்படும் தாக்கங்கள்அண்டைநாடுகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக அந்நாட்டு மக்கள் இந்தியாவிற்கு இடம் பெயரும்வாய்ப்பும் அதன் விளைவாக மண்ணின் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நெருக்கடியும் அடையாளஇழப்பும் ஏற்படுவதற்கு எதிராக வெளியாருக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
 
பல்வேறு காரணங்களால் நிலவுடைமை நொறுங்கிப் போவதாலும் இடுபொருள்களின் விலையுயர்வு,விளை பொருள்களுக்கு உரிய ஞாயமான விலையின்மைவெள்ளப் பெருக்குவறட்சி போன்றசொல்லொன்னா துயரங்களுக்கு ஆட்படும் விவசாயிகளும்விவசாய கூலிகளும் நகர்ப்புறங்களைநோக்கி படையெடுப்பதால் நகர்ப்புறங்கள் குடிநீர்ப் பற்றாக்குறைசுகாதாரச் சீர்கேடுகளுக்குஉள்ளாவதால்புறநகர்ப் பகுதிகள் வேகமாக உருவாதல்உழவுத்தொழில் நசிவால் உணவு உற்பத்திகுறைந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய அபாய நிலை ஏற்படும்.
 
வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு சுருங்கிப் போதல்உள்நாட்டில் படிப்புக் கேற்ற வேலை தேடும்இளைஞர்கள் பெருகுதல் இந்நெருக்கடிகளின் விளைவாக இளைஞர்கள் மதங்களின் பிடியிலிருந்துவிலகி பகுத்தறிவுச் சிந்தனைகளின் பால் ஈர்க்கப்படுதல் என்ற பல்வேறு காரணிகளின் காரணமாக,இந்த நிலை ஏற்படும் எனத் தங்களின் முடிவுகளுக்கானக் காரணத்தை வரிசைப்படுத்துகிறதுகேஸ்ரோலிக் குழு.
 
இறுதியாகநிலவும் நெருக்கடிகளுக்கு அடிப்படையானக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைமுற்றாகக் களைவதற்கான தெளிவான கொள்கைத் திட்டங்களை முன்வைக்காமல், அச்சிக்கல்கள்வரம்பு மீறாமல், அதே நேரத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனும் ஆளும்வர்க்கத்தினுடைய அணுகுமுறை கவலையளிப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது அக்குழு.
 
கேஸ்ரோலிக் குழு மேலே பட்டியலிட்டுள்ள முரண்பாடுகள் முற்றிவரும் நிலையில் இந்தியாதவிர்க்க இயலாதவாறு மீண்டும் பிரிவினைக்கு உள்ளாகும் என்னும்  ஆய்வு முடிவுகள் அச்சத்தின்விளைவாக எழுந்த கற்பனையாக இருக்குமாஅல்லது உண்மையில் நடந்தேறுமாகேஸ்ரோலிக்குழு’ அளித்துள்ள காலவரையரைக்குள் (2025) பிரிவினை நடந்தேறாவிட்டாலும்இந்தியா பல தேசங்களாகப் பிரிவது தவிர்க்க முடியாதது என்பது இயக்கவியல் உணர்த்தும் பாடம்.
 
இந்திய விடுதலைப் போருக்குத் தலைமைதாங்கிய பெருமுதலாளியப் பார்ப்பனிய இந்தி ஆதிக்க ஆற்றல்கள் வெள்ளையனை வெளியேற்ற அவர்களால் செயற்கையாக இணைக்கப்பட்ட பல்வேறுமொழி இன மக்களுக்கு ஆசைவார்த்தை கூறியும் உறுதிமொழியளித்தும் தங்களுக்குப் பின்அணிதிரட்டிக் கொண்டார்கள்விடுதலைக்கு முன் மாநிலங்கள் விரும்பினால் பிரிந்து போகலாம்என்று வாக்குறுதி அளித்தவர்கள் விடுதலைக்கு பின் மாநில அதிகாரங்களைப் பறித்து மாநகராட்சிஅளவிற்கு மதிப்பிழக்கச் செய்தனர்மொழிவழி மாநிலங்களைப் பெற உயிரிழப்பும் பெரும்போராட்டங்களும் தேவையாயிருந்தனஇவ்வாறு பல வழிகளிலும் வஞ்சிக்கப்பட்ட பன்மொழி பேசும் பல தேசிய இன மக்கள் தங்கள் அடையாளங்களை மீட்டெடுப்பதற்காகவும் வாழ்வுரிமைக்காகவும் நீர் -நில உரிமைகளுக்காகவும்சட்டம் ஒழுங்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவும்தொடர்ந்து போராடி வருகின்றனர்.
 
இன்றைய காலகட்டம் தேசிய இன உரிமைப் போராட்டக் காலகட்டம். ஒரு நாடு என்ற சிறைக்குள்அடைக்கப்பட்ட பல்வேறு தேசிய இனங்கள் பிரிந்து பல்வேறு தேசிய இன அரசுகள் உருவாகிக்கொண்டிருப்பதும், பிரிந்திருந்த தேசிய இனங்கள் ஒரு தேசமாகஒரு நாடாக உருவாகிக் கொள்வதுமான காலகட்டம். 14 நாடுகளைக் கொண்டிருந்த ஐரோப்பா முதல் உலகப் போருக்குப் பின்26 நாடுகளாகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின் 35 நாடுகளாகவும் மாறியதுசோவியத் ஒன்றியம்வீழ்ச்சிக்குப் பிறகு புதிதாக 15 நாடுகள், செக்கோசுலோவேக்கியா இரண்டு நாடுகளாதல்,யூகோசுலேவியா ஆறு நாடுகளாதல் எனப் புதிய தேசிய இன அரசுகள் உருவாயினகனடாவில்கியுபெக்கும் கூட்டு முடியரசில் (United Kingdom) ஸ்காட்லாந்தும் தனி அரசு இலக்கை நெருங்கிவருகின்றன.
 
உலகமயத்தை வலியுறுத்துகிற உலக வணிக மாநாடுகள் நடைபெறும் காலங்களில், உலகின் பலபகுதிகளில் வாழும் பல தேசிய இன மக்கள் தங்கள் அடையாளங்களான பாரம்பரிய உடைகளுடனும்,அணிகலன்களுடனும்உற்பத்திப் பொருட்களுடனும் மாநாடுகள் நடக்கும் அரங்குகள் முன் கூடிஆர்ப்பாட்டம் செய்தும்உலகமய மாநாட்டுக்கு மாற்றாக தேசிய இன மக்களின் மாநாடுகள் நடத்தியும்வருகின்றனர்இதுபோன்ற நடவடிக்கைகள் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் அடைபட்டுச்  சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் தேசிய இன மக்களிடையே நம்பிக்கையையும் எழுச்சியையும் ஊட்டிவருவதால் அந்நாடுகள் கொதி நிலையை அடைந்து கொண்டிருக்கின்றன.
 
இந்தியா ஒரு தேசம் அல்ல, பல தேசங்களைக் கொண்ட ஏகாதிபத்திய நாடு என்ற முடிவிற்கு வருவதுதவிர்க்க முடியாததுமாறிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்தியாவும் இன்று உலகம்போய்க் கொண்டிருக்கும் திசைவழியில்தான் தவிர்க்க முடியாமல் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறதுஎன்பதற்கு அடையாளம்தான் இந்தியத் தேசியம், இந்திய ஒருமைப்பாடு முழக்கங்கள்கேள்விக்குள்ளாக்கப்பட்டு மாநில உணர்வுகள் மொழி, இன உரிமை முழக்கங்கள் முன்னுக்கு வருவது!
 
இன்றைய உலக சமூகத்தின் அடிப்படை அலகு ஒரு தேசிய இனம்அதற்கொரு நாடு என்பதாகும்.இந்த அறிவியல் அணுகுமுறையில் முகிழ்த்ததுதான் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின்,
 
எமது தேசிய மொழி தமிழ்
எமது தேசிய இனம் தமிழர்
எமது தேசம் தமிழ்த் தேசம்
எமது இலக்கு  இறையாண்மையுள்ள  தமிழ்த் தேசக் குடியரசு
 

என்னும் தமிழ்த் தேசியக் கருத்தியல் இயல்பானதுஅறம் சார்ந்ததுஇது ஒரு கட்சியின்,இயக்கத்தின் கருத்தியல் அன்றுஇது ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கருத்தியல். தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் சரியான நிலைபாடு என்பதைத் தான் கேஸ்ரோலிக் குழு அறிக்கை மறுவகையில் உணர்த்துகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் தமிழர்கெல்லாம் திருநாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் தமிழர்கெல்லாம் திருநாள்!

 

ஆனால் தமிழ் நாட்டுடன் சேரவேண்டிய நிலை வருமோ? நினைத்துப் பார்க்க முடியவில்லை! (No offense ராஜவன்னியன்! :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோ......

அது சட்டியில் இருந்து நெருப்புக்குள் குதித்த மாதிரி ஆகிவிடும் ( நோ ஒபென்ஸ் எகெய்ன்).

ஒரு மொழி பேசும் இரு நாடுகளாக இருந்து விட்டுப்போவேமே. கனடாவும், யு எஸ் சும் போல.

Link to comment
Share on other sites

நான் முன்னம் நினைப்பதுண்டு.. இந்தியா பிளவுபட்டால் வரைபடம் எப்படி இருக்குமென்று..

ஆந்திரா நாடு, கேரளா நாடு, கர்நாடகா நாடு, மகாராஷ்டிரா நாடு இத்யாதி.........

மிகுதி இந்தி பேசும் மாநிலங்கள் "இந்தியா"வாக இருக்கும்.. அந்த நாட்டின் வால்போல தமிழ்நாடு தொங்கிக் கொண்டிருக்கும்.. :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டையைப் போடுவதற்கிடையில் அந்த கண் கொள்ளா காட்சியை காண வேண்டும்.

 

தமிழ்நாடு தனியே நின்று ஓகோ என்று வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த, சந்தோஷ நாளை பார்த்த பிறகு தான்.... கண் மூட வேண்டும்.
 

இந்தியா சிதறிய முதல் நாள், முதல் விமானத்தில் தமிழ்நாடு சென்று... அங்குள்ள மக்களுடன், எனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

அந்த, சந்தோஷ நாளை பார்த்த பிறகு தான்.... கண் மூட வேண்டும்.

 

இந்தியா சிதறிய முதல் நாள், முதல் விமானத்தில் தமிழ்நாடு சென்று... அங்குள்ள மக்களுடன், எனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வேன்.

நிச்சயமா சிறியர்.

நானும் உங்களுடன் அந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் இணந்து கொள்வேன்.  :D  :icon_idea:

தமிழ் ஈழம் கிடைக்க முன்னம் தமிழ் நாடு இந்தியாவிலிருந்து பிரிவதை பார்க்கவேண்டும். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா சிறியர்.

நானும் உங்களுடன் அந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் இணந்து கொள்வேன்.  :D  :icon_idea:

 

அப்போ.... தமிழ்நாட்டு ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ.. 

வைகோ, சீமான், வேல்முருகன் போன்றவர்கள் தான் இருப்பார்கள்.

அவர்களை சந்தித்து, கை குலுக்கவும்... ஆசை. :)  

Link to comment
Share on other sites

தமிழ்நாடு தனிநாடாக பிரிந்தாலும் திமுக, அதிமுக போன்ற ஊழல் கூட்டம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் தமிழ்நாட்டின் நிலை என்ன? அப்ப அந்த ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காபத்த முடியாது.
முதல்ல தமிழ்நாட்டில ஒரு தமிழன் (நீதி நேர்மை ஞாயம்  உள்ள ஆள்) முதலமைச்சர் ஆக வரவேண்டும். அதைவிட்டு வந்தவன் போனவன் எல்லாம் முதலமைச்சர் ஆக இருந்தால், அவனுக்கு என்ன நாடு எப்படிபோனாலும், அவனுக்கு தன்ரை சொந்த பந்தங்களுக்கு சொத்துப்பத்து, பதவி பட்டம் சேர்ப்பதில்தான் கவனம் இருக்கும், நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும். 
Link to comment
Share on other sites

தமிழ்நாடு தனிநாடாக பிரிந்தாலும் திமுக, அதிமுக போன்ற ஊழல் கூட்டம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் தமிழ்நாட்டின் நிலை என்ன? அப்ப அந்த ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காபத்த முடியாது.

முதல்ல தமிழ்நாட்டில ஒரு தமிழன் (நீதி நேர்மை ஞாயம் உள்ள ஆள்) முதலமைச்சர் ஆக வரவேண்டும். அதைவிட்டு வந்தவன் போனவன் எல்லாம் முதலமைச்சர் ஆக இருந்தால், அவனுக்கு என்ன நாடு எப்படிபோனாலும், அவனுக்கு தன்ரை சொந்த பந்தங்களுக்கு சொத்துப்பத்து, பதவி பட்டம் சேர்ப்பதில்தான் கவனம் இருக்கும், நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும்.

தமிழ்நாடு பிரிந்துவிட்டது என்றாலே இந்தப் போலி திராவிட மற்றும் பார்ப்பன குமபல்கள் துரத்தப்பட்டுவிட்டன என்று பொருள்..! :icon_idea::D

Link to comment
Share on other sites

தமிழ்நாடு பிரிந்துவிட்டது என்றாலே இந்தப் போலி திராவிட மற்றும் பார்ப்பன குமபல்கள் துரத்தப்பட்டுவிட்டன என்று பொருள்..! :icon_idea::D

அப்படி நடந்தால் அது மிகவும் சந்தோசமான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் பிரியுமென்றால்

அதற்கான விலையையும் ஈழமே கொடுக்கவேண்டியிருக்கும்....

தமிழகம் எமது  தொப்பிள்க்கொடி என்பதால் தான் தற்பொழுதும் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்

தமிழகம் பிரியுமென்றால் தற்பொழுது கொடுத்துக்கொண்டிருப்பதைவிட

அது மிகமிக அதிகமாக இருக்கும்......... :(  :(  :(

Link to comment
Share on other sites

தமிழகம் பிரியும்போது கருணாநிதி உயிருடன் இருப்பாரா?

ஆரோ ஒருவர் 2 நாடு கேக்குறார், ஒரு நாட்டுக்கு ஒழுங்கா போராட வக்கில்லை அதுக்க 2 நாடு

நாடு கேட்ட கேடுக்க நரி ஞாயிற்டுக்கிழமையில் லீவு கேட்டிச்சாம் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நடந்தால் மகிழ்ச்சியே .
ஆனாலும் இந்தத் திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ் நாடு  இந்தியாவிலிருந்து பிரிவதற்குச்  சாத்தியமில்லை. முதலில் அவர்களை ஒழித்துத் தமிழர்கள்  தமிழ் நாட்டைக் கைப்பற்ற வேண்டும்

இந்தியாவில் பல நாடுகள் உருவானாலும் ஈழமும் தமிழ் நாடும் தனித்தே இருக்கவேண்டும்

Link to comment
Share on other sites

அப்போ.... தமிழ்நாட்டு ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ.. 

வைகோ, சீமான், வேல்முருகன் போன்றவர்கள் தான் இருப்பார்கள்.

அவர்களை சந்தித்து, கை குலுக்கவும்... ஆசை. :)  

யாரப்பா வேல்முருகன் . :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

இறுதியாக வந்த தகவலின் படி....இந்தியா சிதற மாட்டாதாம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேவயர்,

நரிக்கும் ஆசா பாசங்கள் இருக்கும் தானே?

:)

ஜின்சிஸ் கான், தைமூர், அலெக்ஸாண்டர், பிரித்தானியா, சோவியத் இப்படிப் பலர் கட்டிய சாம்ராஜ்யங்களை காலம் காலில் போட்டு மிதித்தது வரலாறு.

இது இந்தியாவுக்கும் நடக்கலாம். கட்டாயம் என்றில்லை. நடந்தால் நல்லம் அவ்வளவே.

தமிழ் நாடு தனி நாடாகினால் ஒரு வருடத்துக்குள் இலங்கை பிளவு படுவது தவிர்க முடியாதது ஆகும்.

கற்பனைதான் ஆனா நல்லா இருக்கில்ல :)

Link to comment
Share on other sites

நீங்கள் எங்கள் சோழமகராஜர்களை மறந்துவிட்டீர்களா? இல்லை மறைத்துவிட்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேவயர்,

நரிக்கும் ஆசா பாசங்கள் இருக்கும் தானே?

:)

ஜின்சிஸ் கான், தைமூர், அலெக்ஸாண்டர், பிரித்தானியா, சோவியத் இப்படிப் பலர் கட்டிய சாம்ராஜ்யங்களை காலம் காலில் போட்டு மிதித்தது வரலாறு.

இது இந்தியாவுக்கும் நடக்கலாம். கட்டாயம் என்றில்லை. நடந்தால் நல்லம் அவ்வளவே.

தமிழ் நாடு தனி நாடாகினால் ஒரு வருடத்துக்குள் இலங்கை பிளவு படுவது தவிர்க முடியாதது ஆகும்.

கற்பனைதான் ஆனா நல்லா இருக்கில்ல :)

 

அகண்ட தமிழ் ஈழத்திலோ

அகண்ட தமிழகத்திலோ ஆசையில்லை

பல தமிழர் நாடுகள்

இதுவே தேவை...

அவசியமும் கூட..

 

இதுவும் கற்பனை தான்

ஆனால்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேவயர்,

நரிக்கும் ஆசா பாசங்கள் இருக்கும் தானே?

:)

ஜின்சிஸ் கான், தைமூர், அலெக்ஸாண்டர், பிரித்தானியா, சோவியத் இப்படிப் பலர் கட்டிய சாம்ராஜ்யங்களை காலம் காலில் போட்டு மிதித்தது வரலாறு.

இது இந்தியாவுக்கும் நடக்கலாம். கட்டாயம் என்றில்லை. நடந்தால் நல்லம் அவ்வளவே.

தமிழ் நாடு தனி நாடாகினால் ஒரு வருடத்துக்குள் இலங்கை பிளவு படுவது தவிர்க முடியாதது ஆகும்.

கற்பனைதான் ஆனா நல்லா இருக்கில்ல :)

 

தனி நாடு கிடைத்தாலும் தமிழர்கள் பிரிந்து அடிபட்டு மறுபடியும் சிங்களவனிடம் மண்டியிடுவதை தவிர்க்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறந்துதான் போனேன். கடாரம் கண்டவன் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் - நீங்கள் சொல்பது 100% யதார்தமான பேச்சு. ஜாதிக்கொரு நாடு கேட்டிட மாட்டோம் :)

வடக்கு கிழக்கு என பிரிந்திட மாட்டோம்?

நரிண்ட தலையில ஆயிரம் பேனனாம், ஆனா சிங்கத்துக்கு மண்டை உடையணும்ணு ஆசப் பட்டிச்சாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையும்போது ஈழத்தீவில் தமிழர்கள் இருக்கமாட்டார்கள். எல்லோரையும் சிங்களவர்கள் ஒன்றில் விரட்டியடித்திருப்பார்கள் அல்லது சிங்களவர்களாகவே மாற்றியிருப்பார்கள். இலங்கையில் தமிழ் பேசுவது முஸ்லிம்களாக இருப்பார்கள் <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.