Jump to content

பட்டப்பெயர்கள் வைக்கலாமா?


Recommended Posts

சிவகொழுந்து தாத்தா சொன்னா ஊரே சொன்னா மாதிரி...சிலதுகளுக்கு இது புரியுமா தாத்தா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவக்கொழுந்து சார், நான் அப்படி எழுதியதுக்கு காரணம் இருக்கின்றது. சாமத்திய சடங்க்கு செய்வதா இல்லையா என்பது தற்போதய பிரச்சனை என்றும் கூறி இருந்தேன்.

யாழில் இந்த சாமத்திய சடங்க்கு பற்றி ஒரு பெரிய கருத்தாடல் நடந்தது.. அதனால் தான் அப்படி எழுதினேன்... உங்களால இரண்டையும் இனைத்துப்பார்க்க முடியாததற்கு வருந்துகின்றேன்... இந்த பதில் ஈழவனுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவகொழுந்து தாத்தா சொன்னா ஊரே சொன்னா மாதிரி...சிலதுகளுக்கு இது புரியுமா தாத்தா???

இப்படி யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு அது சரி என்று நாம் எல்லோரும சுய அறிவை பயன்படுத்தாமல் செயற்படுவதால் தான்.. அனேக தமிழர் நிலை இன்று கேள்விக்குறி.... சுயமாக சிந்தியுங்கள்...

சிவக்கொழுந்து ஈழவன் தூயா, எதைப்பற்றியாவது விவாதிக்க விரும்பினால், எதற்காக அது சொல்லப்பட்டது என்பதை அறிந்து விவாதியுங்கள்....ஒவ்வொரு மனிதனும் தனது அறிவுக்கு எட்டியபடியும் தான் பழகும் நபர்களின் புரிந்து கொள்ளும் தன்மை அல்லது வேகத்துக்கேற்பவும் கருத்துகளை வெளியிடுகின்றார்கள். ஒரு காரணத்துக்காக அந்த கருத்து எழுதப்பட்டிருக்கலாம். எதையாவது சுட்டிக்காட்ட கருத்து எழுதப்பட்டிருக்கலாம். நான் எனது வாழ்வில் பழகும் நபர்கள் பரந்து சிந்திப்பவர்கள். ஒரு விடயத்தை கூறினால் அதனை பல முனைகளில் சிந்திப்பவர்கள். அதனால் யாழ் உறுப்பினர்களும் அப்படி இருப்பார்கள் என்ற நம்ப்பிக்கையில் அப்படி எழுதினேன். அதை நீங்கள் எடுத்த விதம் தவறு. நான் யாழ் உறுப்பினர்கள் யாரும் வயதுக்கு வந்து விட்டார்கள் என்று சொல்லவில்லை.ஒரு பொம்மை உடைமாற்றி புதுப்பொழிவுடன் வந்ததுக்கு ஒரு காரணம் சொல்லி... அந்த சடங்கு தேவையா இல்லையா என்பது தற்போதய பிரச்சனை என்று சொல்லி இருந்தேன். யாழில் இந்த தலைப்பில் கருத்துகள் பரிமாறியதை யாரும் பார்க்கவில்லையா? சிவக்கொழுந்து, அறிவில் பெரியவர் போல தெரிகின்றீர்கள், உங்களாலும் எதற்கு ஒருவர் அப்படி சொல்லி இருக்கின்றார் என்று சிந்திக்க முடியவில்லையா? நான் ஆணாதிக்கம் உள்ளவன் என்று நீங்கள் நினைத்தால், தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள், பெண்கள் உலகில் உயர்வதற்கு நான் நிஜ வாழ்வில் என்ன செய்கின்றேன் என்பது பற்றி சொல்கின்றேன். நேரில் வந்தும் அல்லது போயும் பார்க்கலாம். மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.யாழ் ஒரு கருத்துக்களம். சில விடயங்களை உணர்த்துவதற்கு, தப்பான விடயங்களை சரி என சொல்லி பலரது கருத்துகளை உள்வாங்கி, அந்த தப்பான விடயங்களை தப்பென நிறுவுவது ஒரு சிறந்த வழி. அதைத்தான் நான் சில சமயங்களில் செய்ய முனைகின்றேன். என் வழியில் தயவு செய்து வராதீர்கள். வேறு களத்தை நாட சொல்லி, மட்டுறுத்தினர் அல்லது கள நிர்வாகம் சொல்லட்டும், அடுத்த நிமிடம் நான் யாழில் எழுதுவதை நிறுத்துகின்றேன். எதையும் உள் நோக்கோடு பார்க்காமல் கருத்தினை சொல்லும் உங்கள் சொல் கேட்டு வேறு களம் செல்ல நான் முட்டாள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமப்பு எனக்கு பலமுனையில யோசிக்கத்தெரியாது ஏன் எண்டா பழசுதானே அப்பு நான் .நீர் பழகிற அதி புத்திசாலிகள் போல நாமில்லையப்பு சரியோ நீர் பழகும் அதீத புத்திசாலிகள் பற்றியும் எனக்குதெரியுமப்பு உம்மை பற்றியும் எனக்கு தெரியுமப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவக்கொழுந்து சார், நான் அப்படி எழுதியதுக்கு காரணம் இருக்கின்றது. சாமத்திய சடங்க்கு செய்வதா இல்லையா என்பது தற்போதய பிரச்சனை என்றும் கூறி இருந்தேன்.

யாழில் இந்த சாமத்திய சடங்க்கு பற்றி ஒரு பெரிய கருத்தாடல் நடந்தது.. அதனால் தான் அப்படி எழுதினேன்... உங்களால இரண்டையும் இனைத்துப்பார்க்க முடியாததற்கு வருந்துகின்றேன்... இந்த பதில் ஈழவனுக்கும்.

யாழில் நிலவிய பல வேண்டத்தகாத நிகழ்வுகளிற்கு உங்களின் இப்பதிலில் கூறப்பட்டிருக்கும் பதிலே காரணம். யாழ் ஒரு கருத்துக்களம். அன்றாட வாழ்வில் தொடர்ந்து நடைபெறும் விடயங்கள் போன்றதல்ல. ஒருவர் தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சில மணித்துணிகளை இத்தளத்தில் செலவிடுகிறார்கள். அந்நிலையில் அவர்களால் தொடர்ந்து இங்கு பகிரப்படும் கருத்துக்களை வாசிக்க முடியாது போகலாம். அதைவிடுத்து, நீங்கள் கூறுவது போல் மற்றைய இடத்தில் பகிரப்படும் கருத்துடன் சம்மந்தப்படுத்திப் பார்க்கவேண்டுமெனில் யாழ் ஏன் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். அனைத்தையும் ஒரே பிரிவில் இட்டுவிடலாமே.

அதிலிருந்து நீங்கள் அடிப்படையில் புரிந்து கொள்ளவேண்டியது என்னவெனில், இது களத்தைப் படிப்பவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டே பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவுடன் சம்மந்தப்பட்ட அல்லது அத்தலைப்புடன் சம்மந்தப்பட்ட விடயங்களிலே கவனத்தைச் செலுத்தி அது பற்றி விவாதிக்கலாம். அடுத்து, உங்கள் நண்பர்கள் பற்றி கூறி இருந்தீர்கள். நல்லதொரு விடயம். உங்கள் நண்பர்கள் பரந்து பட்டு சிந்திக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அது அவர்களின் தொழில் முறையாக இருக்கலாம் அல்லது அவர்களிற்குக் கிடைக்கும் நேரகாலங்களைப் பொறுத்ததாக இருக்கலாம்.

இயந்திர கதியில் இயங்கும் இன்றைய சூழலில் நீங்கள் நினைப்பது போல் அனைவராலும் இருக்கமுடியாது. அவர்கள் தம் எண்ணத்தில் தோன்றியவற்றை இங்கு எழுதுகிறார்கள். அதற்காக அவர்கள் இவ்வாறுதான் சிந்திக்கவேண்டும் என்று நீங்கள் அவர்களின் சிந்தனைக்கு எல்லை வகுக்க முடியாது.

அவர்கள் கூறியவற்றிற்கு உங்கள் தரப்பு பதில்களை வைப்பதில் தவறில்லை. ஆயினும் நீங்கள் அவர்கள் இவ்வாறு மாறவேண்டும் என்று எதிர்பார்ப்பது முரணானது.

சாமத்தியச் சடங்கு பற்றிய தலைப்பில் உங்கள் பதிலைக் கூறியிருக்கலாம். ஆயினும் இங்கு நடைபெற்ற கருத்துப்பரிமாற்றம் ஓர் பொம்மையினைப் பற்றியதாயிருப்பினும், அந்தப் பொம்மை குறித்து நிற்பது ஓர் சக கருத்தாளரை. ஆக இங்கு அப்பொம்மை பற்றி வரும் கருத்துக்கள் அக் கருத்தாளரைப் பற்றியது என்பதாக யாரும் கொள்வதனை மறுதலிக்க முடியாது. எதற்காக படங்களினை இக்கருத்துக்களத்தில் பயன்படுத்துகிறார்கள். அப்படங்கள் மூலம் தங்களை மற்றைய கருத்துக்களில் உடனே அறிமுகப்படுத்துகிறார்கள். இச்சிறு விடயம் கூட புரியாது, மற்றவர்களில் உடனே குற்றம் சாட்டுவதன் மூலம் உங்கள் கருத்துக்களை பூசிமெழுக முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.