Jump to content

கடற்சூரியன் (மறுபக்கம் - ஆகாயத்தாமரை )


Recommended Posts

வினோத்தின் நேர்கொண்ட பார்வையை தவிர்க்கவே அடிக்கடி உடையை சரி செய்வது போல கீழே குனிந்து கொண்டேன். இதை வினோத் அறிந்திருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாது தவித்தது. அந்த இத்தாலிய உணவகத்தின் யன்னைலினூடே வெளியே பார்க்கிறேன். சவர்க்கார கரைசலை வாயிலே வைத்து ஊதும் வெள்ளை இன சிறுவன். அவன் ஊதும் குமிழி போலவே, என் எண்ணங்களும் வளர்வதும் வெடித்து சிதறுவதுமாக இருந்தன. கடவுள் நிறைய நேரங்களில் எங்கள் எண்ணங்களை எம் கண்முன்னே காட்சி ஆக்குவதில் வல்லவர் என்று யாரோ சொன்னது எனக்குள்ளே வந்து போனது.

ஐரோப்பாவில் இருந்து உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளவந்திருந்த வினோத்தை சந்திப்பதற்கான ஒழுங்கை மதி ஏற்படுத்திவிட்டு, பழைய நண்பர்களை சந்திக்க என்னை அழைத்தபோது, எனக்குள்ளே நடந்த போராட்டம் பத்து முள்ளிவாய்க்கால்களுக்கு ஒப்பானது.

நம்பி இருந்த என்னை ஏமாற்றியவனை சந்திக்கத்தான் வேண்டுமா. ? இல்லாவிட்டால் அவன் என்னை ஏமாற்றியதுக்கும் பின்னால் எப்பவும் போலவே ஒரு நியாயமான காரணம் இருக்குமா ? என்று என் மனம் ஒற்றை கயிறிலே கட்டிய தோணியை போல அங்கும் இங்கும் அல்லாடியபடியே இருந்தது. எதுக்கும் அவன் இப்போ எப்படி இருக்கிறான் என்று ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்று மனம் ஏங்கியதை என் மூளையால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பதின்மவயது முதற்காதல். யாரையுமே ஏறெடுத்து கூட பார்க்காத என் பெண்மை என்னும் திமிருக்கு சவாலாக வந்தவன். பார்த்த நாளில் இருந்து பார்க்க துடித்த அவன் முகம். கன்னத்திலே தூசி என்று முத்தமிட்ட நேர்மையான திருட்டுத்தனம். அவன் முத்தமிட்ட நாள் இரவு. கடிகாரத்துக்கு 60 நிமிடங்கள் தான் ஒரு மணித்தியாலம் என்று வரையறுத்தவனை கழுவில் ஏற்ற வேண்டும் என்ற எண்ணங்களை கடந்த அந்த இரவுகள். அவனது அரும்பு மீசை குத்திய இடத்தில் இருந்த செல்ல நோ.

வெளியே செல்லும்போது கைதொலைபேசியை கூட மறந்துவிட்டு செல்லும் நான், காதல் எண்ணங்களை மட்டும் இப்போது கூட ஒரு இடைவெளி இல்லாமல் அப்படியே நினைவில் வைத்திருக்க வைக்கும் ஆற்றல் அந்த காதலால் மட்டும் ஏற்பட்டு தான் இருக்க முடியும்.

இத்தாலிய உணவகத்தின் வாசலை அடையும் போது, வினோத்தை காணும் என் மனதின் பதைபதைப்பின் எதிரொலியோ என்னவோ மனோவின் கைத்தொலைபேசி கிணுகிணுத்தது.

கலோ நான் மனோ..

..............................

ஓம் பக்கத்தில தான் நிக்கிறாள் இப்பவே கொடுக்கிறேன்.

ஒருவேளை விநோத்தாக இருக்குமோ ..??

தொலைபேசிய நீட்டிய மனோவிடம் யார் என்ற கேள்வியை கண்கள் தொடுத்தாலும் கைகள் வாங்கி காதினருகே கொண்டு செல்வதில் தயக்கம் எதுவுமே கைகளுக்கு இருந்ததாக தெரியவில்லை.

கலோ மீனா நான் பரத்.

ஒரு கணம் வினோத் மறைந்து என் அன்பு கணவன் பரத் வந்து போனார்.

நாடகங்களின் திரையை மாற்றும் அளவு நேரம் கூடம் மனம் அதற்கு விட்டு வைக்கவில்லை.

சொல்லுங்கோ..

இல்லை உங்கட போனிற்கு அடிச்சு பார்த்தேன் ரிங் போய் கொண்டே இருந்தது.

மனோவுடன் தான் போறீங்கள் என்றாலும் மனசு நீங்கள் பத்திரமா போயிருபீங்களோ எண்டு தான் அடிச்சு பார்த்தேன்.

ஓ திரும்பவும் கைதொலைபேசியை வீட்டிலேயே விட்டிட்டு வந்தது மனசிலே உறைத்தது. இருந்தும் கணவனின் அக்கறையை மனசிலே பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.

இல்லையப்பா. போனை வீட்டிலேயே மறந்துபோய் விட்டிட்டு வந்திட்டேன் சொறியப்பா. என்று மீனா சொல்லும்போது கணவனின் மீதான காதல் வெளிப்பட தவறவில்லை.

ஓகே வீட்டை போனதும் போன் பண்ணுங்க என்று பாய் சொல்லி வைத்துவிட்டான்.

மனோவின் பின்னால் கதைத்து கொண்டே உள்ளே வந்ததில் வினோத்தை தேடும் கணங்களை தொலைத்துவிட்டேன். தொலைபேசியை மனோவிடம் கொடுக்கவும் நான் வினோத்தை காணவும் சரியாக இருந்தது.

நான் கண்ட வினோத்துக்கு 35 வயசு கூடி இருந்தால் எப்படி இருப்பார் என்று நான் எண்ணியதை விடவும் கொஞ்சம் வயசு போயிருந்தான். முன் தலையிலே சிறு வழுக்கை, வயிறு கொஞ்சம் கூடி இருந்தது. வேலைப்பளுவும் மாலையில் அருந்தும் மதுபானமும் முறையே காரணங்களாக இருக்கலாம் என்று என் மனசுக்குள்ளே சொல்லி கொண்டே வினோத்துக்கு முன்னால் இருந்த ஒரு இருக்கையில் நான் அமர்ந்தேன்.

அவனின் முகத்தில் விழுந்த சிறு சுருக்கத்தின் பின்னான தெளிவு அவன் என்னை அடையாளம் கண்டுகொண்ட அதிர்ச்சியை எனக்கு வெளிக்காட்டியது.

இவ்வளவு வயசானாலும் அவர் என்று அவனை குறிப்பிட என்மனம் ஒப்பவில்லை.

எந்த சலனத்தையும் காட்டிகொள்ளாது மனசை அடக்கி கொண்டேன். எவ்வளவோ அவனோடு பேச வேண்டும் என்று மனம் கொந்தளித்தாலும் அவனாக பேசட்டும் என்று இருந்துவிட்டேன்.

கூடி இருந்த நண்பர்களும் அவர்களின் மனைவிமாரும், இறுதி தரிப்பிடத்தை நோக்கி நகரும் பேரூந்தில் இருந்து படிப்படியாக இறங்கும் பயணிகள் போல இறங்கி சென்று விட்டார்கள்.

நானும் மனோவும் மதியும் வினோத்தும் தான் அங்கே மிஞ்சி இருந்தோம். எங்களுக்குள்ளே இருந்த ஏதோ ஒன்று எங்களை அசையவிடாமல் தடுத்திருந்தன.

பழைய காதல் அப்படியே இருக்குமா அவனிடம். இல்லை கால ஓட்டத்தில் குடும்ப சுமைகளில் அவை கரைந்து போய்விடுமா.

அல்லது என்னைபோல ஒரு பசுமையான நினைவாக மட்டும். மனம் துன்பப்படும்போதெல்லாம் அசைபோட வைத்திருக்கும் மாத்திரை போல தான் எம் காதல் அவனிடமும் இருக்குமா என்று எண்ணங்கள் அலைமோத அவனாக பேசட்டும் என்று காத்திருந்தேன்.

திடீர் என பின்னால் சலசலப்பு, இன்னும் பதின்ம வயது காதலர்கள் போல மனோவும் மதியும் பேசி கொண்டிருந்தார்கள். மதி இப்பவும் வைத்திருந்த தன பழைய காதலை வைன் தந்த போதையில் மனோவிடம் உளறிகொண்டிருந்தான் . யதார்த்ததுக்கு எந்தவிதத்திலையும் ஒத்துவராத இலட்சிய எண்ணங்களை போதையில் மட்டுமே ஆண்கள் வெளிபடுத்துவார்கள் என்பதை மதி மறுபடியும் ஒருமுறை நிரூபித்து கொண்டிருந்தான்.

தாடியே வளராத, மதுவை மணந்து கூட பார்க்காத பெண்களால், தோற்ற காதலை மறக்க ஒரு மன வலிமை வேணும். அது காதல் தோற்ற நாளில் இருந்தே பெண்களால் சிறுக சிறுக கட்டி இப்போ ஒரு கோட்டையாக எங்களுக்குள்ளே இருப்பது மதிக்கோ வினோத்துக்கோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

எங்கே ஒரு வார்த்தை கூட பேசாமல் போவிடுவாளோ என்ற எண்ணம் வினோத்தின் முகத்தில் தெரிந்தது. நான் தான் அவன் மௌனத்தை குழப்ப கலோ சொன்னேன்.

பொதுவாக குடும்பவிபரங்களையும் சில சம்பவங்களையும் பரிமாறிக்கொண்டோம். எங்கே ஒரு வார்த்தை பழைய காதலைப்பற்றி நான் சொல்ல மாட்டேனா என்று அவன் மனம் ஏங்குவதை இந்தோனேசியா பூமி அதிர்ச்சி இந்தியாவின் தனுஷ்கோடியில் உணர்வதை போல மெதுவாக உணர்ந்தேன். வாழ்கையும் யதார்த்தமும் காதலையும் தாண்டி பயணிப்பது என்பதை என்றாவது ஒருநாள் அவன் உணருவான் என்ற மனதுடன் விடைபெற்றோம்.

வரும்வழியில் கடற்கரை வீதியில் மனோவை காரை செலுத்த சொல்லிவிட்டு கார் கண்ணாடிவழியே கடலை பார்த்து கொண்டிருந்தேன்.

கடலிலே தெறித்த மாலை சூரியனின் விம்பத்தை அலைகளால் அழித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அலைகள் மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டே இருந்தன.

நன்றி - ஆகாயத்தாமரை (வல்வை சகாறா)

http://www.yarl.com/forum3/index.php?/topic/155778-ஆகாயத்தாமரை-வல்வை-சகாறா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகலவன் ஆகாயத்தாமரையின் மறுபக்கத்தை எழுதி இருக்கிறீர்கள் அழகான உவமிப்புகள் இந்தோனேசியாவின் பூமி அதிர்ச்சியை தனுஸ்கோடியில் உள்ளவர் உணர்வதுபோல...........................மேலும் சில பளிச்சென்று தெரிகின்றன........ அடுத்து நீங்கள் எழுத முற்பட்டிருக்கும் தளத்தை சற்று மறந்து விட்டீர்களே என்றும் எண்ணத்தோன்றுகிறது...... இதை குறையாக எண்ணவில்லை அழகான உவமிப்பு ஆனால் இடம்பொருள் ஏவல் என்பதில் இடத்தை தவறவிட்டுவிட்டீர்கள்.... சூழலை அதாவது ஒரு பனி கொட்டி உறைந்திருக்கும்  இடத்தில் சவர்க்கார கரைசலை யாரும் ஊதமாட்டார்கள். எழுதும் உத்வேகத்தில் சூழல் சற்று கற்பனையில் சிதறிவிட்டது. சொல்ல எடுத்த கருத்துக்கு அருமையான பொருத்தம் இருக்கிறது ஆனால் அந்த இடத்தை அதன் உறைநிலையை தவறவிட்டுவிட்டீர்கள்.

 

பகலவன் குறை சொல்வது என் நோக்கமல்ல ஆரோக்கியமான சுட்டிக்காட்டுதலாக மட்டுமே இவற்றைப் பாருங்கள்.  உண்மையிலேயே இங்கு பதிவிடப்படும் எழுத்துகளுக்கு என்வரையில் நான் உணர்வதை வெளிப்படுத்தவேண்டும் என்ற அவா அதிகம்  எங்கே என்னுடைய கருத்து வைப்புகள் படைப்பாளிகளை சங்கடப்படுத்திவிடுமோ என்ற பயத்திலேயே வெளிப்படையாக மனந்திறந்து பேசுவதில்லை. இப்போது நீங்கள் ஆகாயத்தாமரையின் மறுபக்கத்தை தொட்டு எழுதியதால் நானும் மனந்திறந்து உங்களுடன் கருத்தாட முடிகிறது. ஒரு வேளை நான் எழுதுவது உங்களைச் சங்கடப்படுத்தினால் மன்னித்துவிடுங்கள்.

 

எதிர்வினை என்ற பதம் தவறானது என்று நினைக்கிறேன். பெண்ணின் மனதை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இவ்விடயம் தொடர்பாக பெண்களின் மனங்களைத் தேடல் செய்து கொண்டிருக்கிறேன் இன்னும் முழுமையடையவில்லை. கண்களுக்குத் தெரியும் விடயத்தைக் காட்சிப் பொருளாக்கி எழுத விருப்பமில்லை மனதிற்குள் ஆழமாக ஊடுருவி எழுத நினைக்கிறது மனம்..... இருப்பினு; ஒரு ஆணாக இருந்து பெண்ணின் மனதை எழுத நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இம்மறுபக்கத்தை எழுதுவதற்கு அனுமதி கேட்டிருந்தீர்கள். ஒரு படைப்பாளி தான் நினைப்பதை எழுதுவதற்கு எவரிடமும் அனுமதி கேட்கவேண்டிய அவசியமே இல்லை. ஒருவருடைய சொந்தக்கதையை எழுதப்போகிறீர்களா அப்போது கண்டிப்பாக அனுமதி பெற்றுத்தான் எழுதவேண்டும் ஆனால் கற்பனையில் எழுத ஒரு படைப்பாளி மற்றவர் அனுமதி வேண்டுவது தவறு. ஏனெனில் அவனுடைய கற்பனைக்கு அவனே சொந்தக்காரன்... தாய் அவன் உருவாக்குவதை வளர்ப்பதும் தகர்ப்பதும் அழகுபடுத்துவதும் அவன் பணி பெற்ற குழந்தையை காட்ட மற்றவர்களின் அனுமதியைத் தாய் நாடமாட்டாள்.

 

கதையில் மனோ மதியினூடகவும் நீங்கள் பேசியிருக்கிறீர்கள். சில விடயங்களை சொல்வதற்கு சரியான சந்தர்ப்பங்கள் அமைவதில்லை ஆனால் சந்தர்ப்பங்களை தவறவிடாமல் பெண்ணாக நின்று பேசியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஒரு ஆணாக இருந்தாலும் ஓரளவு வெற்றிபெற்றுள்ளீர்கள். என்னுடைய படைப்பை வாசித்து அதன் எதிர்ப்பக்கத்தை எழுதியிருக்கிறீர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்தும் எழுதுங்கள் பகலவன். :rolleyes:

Link to comment
Share on other sites

கடற்சூரியன் கதையில் பகலவன் இன்னொரு சிறந்த கதைசொல்லியை காண்பித்திருக்கிறீர்கள். வளமையான நகைச்சுவை உணர்வு கடந்து கதை காதலோடு மெல்ல மெல்ல கரைந்து ஒரு காலத்தை கடந்து சென்றுள்ளது. 
 
முன்புபோல இப்போது  நிலமையில்லாமல் சற்று மாற்றம் கண்டுள்ளதை தற்கால எழுத்துக்கள் வெளிக்கொண்டு வருகிறது. எனினும் பெண்களின் காதல் நினைவு என்பது ஏதோ ஒளித்து வைத்து இரகசியம் பேணும் ஒன்றாகவே இன்னும் காக்கப்படுகிறது.காதல் என்பது ஆண் , பெண் இருவருக்கும் உணர்வுகள் நினைவுகள் ஒன்றாகவே இருக்கும். இதனை பலர் 3ம் நபரின் கதையாக நின்றே தங்கள் காதலை ரசிக்கிறார்கள். சொந்த அனுபவமாக எழுதவோ வெளிப்படுத்தவோ துணிவற்றவர்களாகிறார்கள்.
 
தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் பார்வையில் கதாநாயகர்களாக நின்று கொள்வதில் பல எழுத்துக்களும் எழுத்தாளர்களும் முனைவது கூட இச் சமூகம் மீதான பயமே காரணம்.
 
ஒரு பெண்ணின் நிலை சார்ந்து பகலவன் எழுதிய கதையில் குறித்த பாத்திரம் (கற்பனையானாலும் கூட) நேர்மையோடு உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் இல்லையடா தம்பி தொடர்ந்து எழுது இதுதான் உனக்கான ஊக்கம்.
Link to comment
Share on other sites

எழுத்துகள் நன்றாக இருக்கிறது பகலவன். பாராட்டுகள்.
 
பெண்ணின் மனதை எழுத முற்படுவதில் இருந்து ஒன்று தெரிகிறது...............
 
உங்கள் அம்மா அல்லது மனைவி வாசிக்கும் பெண் எழுத்தாளர்கள் எழுதும் நாவல்களை நீங்களும் அவ்வப்போது வாசித்துள்ளீர்கள்.  :)
Link to comment
Share on other sites

நன்றி சகாரா அக்கா உங்கள் விமர்சனத்துக்கு. நான் உண்மையில் கோடை காலம் என்று கருதி எழுதிவிட்டேன். என் தவறு தான் மன்னிக்கவும்.

நன்றி அக்கா உங்கள் படைப்பின் கருவை தந்தமைக்கு.

நன்றி சாந்தி அக்கா. மாற்றங்கள் தான் மனிதரை வாழவைப்பது.

நன்றி ஈசன். சிறு வயதில் அருகில் இருந்த நூலகத்தில் பெரும்பாலான பெண் எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கதையை வாசிக்க ஆரம்பித்து முடித்தபின்னர் கூட கதையின் இரண்டாம் பாகம் என்று எண்ணி யபடி வாசித்தேனே தவிர யார் எழுதியது என்பது உறைக்கவே இல்லை. எனது மேலோட்டமான வாசிப்புக் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். பின் சகாராவுக்கு  நன்றி கூறிய பின்னர் தான் எனக்கே என்ன இது ஏன் நன்றி  கூறுகிறார் என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டது பகலவன். சகாரா ஆணின் உணர்வுகளைக் கூறிய அளவு நீங்கள் பெண்ணின் உள்ளக்கிடக்கையைக் கூறவில்லை. இருந்தாலும் அருமையாக இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் வாழ்வின் அழியாத கோலங்களை ஒரு பெண்ணாக இருந்து கதைசொல்லி இருக்கறீர்கள். அழகான உவமானங்கள். நல்ல உரைநடை. பெண்ணின் காதல் நினைவுகள் பொக்கிசமாகப் பூட்டி வைக்கப்பட வேண்டியது என்ற நிலைப்பாடு இப்பெழுது மாறிவிட்டது. எமது பிள்ளைகள் எம்மிடம் திறந்த புத்தகமாகத்தான் பழகுகிறார்கள் அவர்களைப் பார்க்கும் பொழுது நாங்களும் அவர்களைப்போல் மனம் திறந்து பேச எழுத ஏன் நாம் தயங்குகிறோம் என்று சிந்திப்பதுண்டு. நன்றாக எழுதியுள்ளீர்கள் பகலவன் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

நான் கதையை வாசிக்க ஆரம்பித்து முடித்தபின்னர் கூட கதையின் இரண்டாம் பாகம் என்று எண்ணி யபடி வாசித்தேனே தவிர யார் எழுதியது என்பது உறைக்கவே இல்லை. எனது மேலோட்டமான வாசிப்புக் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். பின் சகாராவுக்கு  நன்றி கூறிய பின்னர் தான் எனக்கே என்ன இது ஏன் நன்றி  கூறுகிறார் என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டது பகலவன். சகாரா ஆணின் உணர்வுகளைக் கூறிய அளவு நீங்கள் பெண்ணின் உள்ளக்கிடக்கையைக் கூறவில்லை. இருந்தாலும் அருமையாக இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்.

நன்றி சுமே அக்கா. என்னால் கூடுமானவரை பெண்ணின் மனசை சொல்ல நினைத்தேன். சகோதரியுடன் பிறந்திருந்தாலும் அவருடன் வாழ்ந்த காலங்கள் கொஞ்சம். காதலி மனசை அறிவதற்கு கடல் தண்ணியிலே கார் ஓட்டலாம். நீங்கள் அறியாததா. நன்றி உங்கள் கருத்துக்கு.

 

 

ஒரு பெண்ணின் வாழ்வின் அழியாத கோலங்களை ஒரு பெண்ணாக இருந்து கதைசொல்லி இருக்கறீர்கள். அழகான உவமானங்கள். நல்ல உரைநடை. பெண்ணின் காதல் நினைவுகள் பொக்கிசமாகப் பூட்டி வைக்கப்பட வேண்டியது என்ற நிலைப்பாடு இப்பெழுது மாறிவிட்டது. எமது பிள்ளைகள் எம்மிடம் திறந்த புத்தகமாகத்தான் பழகுகிறார்கள் அவர்களைப் பார்க்கும் பொழுது நாங்களும் அவர்களைப்போல் மனம் திறந்து பேச எழுத ஏன் நாம் தயங்குகிறோம் என்று சிந்திப்பதுண்டு. நன்றாக எழுதியுள்ளீர்கள் பகலவன் பாராட்டுக்கள்.

நன்றி கண்மணி அக்கா. உங்கள் போன்றவர்களின் வாயால் பாராட்டுகளை பெறும் அளவுக்கு நான் இன்னும் வளர்ந்துவிடவில்லை அக்கா. உங்கள் கதைகள் எனது வழிகாட்டிகள். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் அக்கா. நன்றி அக்கா கருத்து பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நன்றாகத்தான் இருக்கின்றது.
ஆகாயத் தாமரைக்கும் கடல் சூரியனுக்கும் எப்போதும் அழிவு இல்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.