Jump to content

நான் மரம் .!


Recommended Posts

துளிர் விட தொடங்கியது மரம் 
இறக்கை முளைக்கும் குருவி குஞ்சு போல 
தூரமா போன பறவைகள் எல்லாம் 
மீண்டும் வந்து அமர்வதை பார்க்கிறேன் 
காற்றுக்கும் ,மழைக்கும் ,ஈடு கொடுக்கும் 
பலத்துடன் மரம்  இருந்தாலும் 
ஆடை களையப்பட்டு அம்மணம் ஆனால் 
யார்தான் விரும்புவார் ஒதுங்குவார் அருகில் 
இப்பொழுது சிறகு விரிக்கிறேன் 
என்னருகில் பலர் பாயை விரிக்கிறார் 
வரலாம் அமரலாம் கதைகள் பேசலாம் 
நீங்கள் உங்கள் தேவைகள் உள்ளவரை 
சுடும் அனல் வெய்யிலின் தாக்கம் போகும்வரை 
மீண்டும் மரம் இலை உதிர்க்கும் 
சருகாக அதனருகில் காற்றுடன் பறக்கும் 
அப்பொழுதுகளில் கால்களால் தள்ளி விட்டு 
விலகி போகும் கட்சிகளை மரம் கண்ணுறும் 
அப்பொழுது பணம் இருக்கும் உறவு தேடி வரும் 
சொந்தங்கள் போல என் நிலை தெரியும் 
பூப்பதும் உதிர்வதும் வாழ்வில் இரண்டற கலந்தது 
எப்பொழுது விளங்கும் எம் உறவுகளுக்கு .
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பூப்பதும் உதிர்வதும் வாழ்வில் இரண்டற கலந்தது 
எப்பொழுது விளங்கும் எம் உறவுகளுக்கு.
 
கவிதை அழகு.  இறுதி வரிகள் மிகவும் அழகு.
Link to comment
Share on other sites

 

பூப்பதும் உதிர்வதும் வாழ்வில் இரண்டற கலந்தது 
எப்பொழுது விளங்கும் எம் உறவுகளுக்கு.
 
கவிதை அழகு.  இறுதி வரிகள் மிகவும் அழகு.

 

நன்றி சேயோன் வருகைக்கும் கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பூப்பதுவும் உதிர்வதுவும் வாழ்வில் இரண்டறக்கலந்தது"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.