Jump to content

பிறந்த நாளை கண்டுபிடியுங்க பார்ப்பம் ( தலை சுத்துது எனக்கு )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜுலை 16 :D

Link to comment
Share on other sites

விடை சரிதான். ஆனால் எப்பிடி என்று விளக்கம் தேவை்

Link to comment
Share on other sites

விடை சரிதான். ஆனால் எப்பிடி என்று விளக்கம் தேவை்

 

அது தானே.. இணையத்தளம் ஒன்றில் விளக்கியுள்ளார்கள் ஆடி 16 எப்படி விடை வந்தது என்று ஆனால் அவர்களது விளக்கம் இன்னும் குழப்பமாக இருக்கு :)

இரண்டு தரம் வாசித்து பார்த்தேன் புரியல :(  யாராவது தமிழில் விளக்கினால் தான் நமக்கு தலைக்குள் ஏறுமோ என்னவோ :lol: )

 

http://www.independent.co.uk/news/world/asia/singapore-maths-problem-can-you-solve-the-viral-maths-question-that-was-set-to-children-in-singapore-10173090.html

Link to comment
Share on other sites

எனக்கும் தான் . ஆங்கிலத்தில் உள்ள விளக்கம் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் முதல் பச்சையைப் போடுங்க அப்புறம் விளக்கத்தக் கேளுங்க! :D

Link to comment
Share on other sites

எல்லோரும் முதல் பச்சையைப் போடுங்க அப்புறம் விளக்கத்தக் கேளுங்க! :D

 

ஆசை தோசை அப்பளம் வடை  :D நீங்கள் திகதியை போடும் முன்னே அது தான் விடை என்று தெரியும் ஆனால் விளக்கம் தெரியாததால் தான் பதிலை எழுதவில்லை. விளக்கம் தந்தால் பச்சை தரப்படும் :):icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை கேம்... கம் விளக் கம்  பிளீஸ்...! :D

Link to comment
Share on other sites

பச்சை எனக்குத்தான் தரணும். ஏன்னா உலகமே விவாதித்துக் கொண்டிருக்கிற விடயத்தை பதிந்ததுக்கு ...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் இல்லாமல் விடயம் போட்டால் பச்சை கிடைக்கவே கிடைக்காது யாருக்கெண்டாலும்

Link to comment
Share on other sites

விளக்கம் இல்லாமல் விடயம் போட்டால் பச்சை கிடைக்கவே கிடைக்காது யாருக்கெண்டாலும்

http://www.straitstimes.com/news/singapore/education

ஒரு பச்சை வேண்ட எவ்வளவு கஸ்டப்பட வேண்டியிருக்கு்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூளையைக் கசக்கிறதை விட்டிட்டு கூகிள் ஆண்டவரை நாடினால் விடை தெரிந்தாலும் விளக்கம் தெரியாது. இது எப்படி அறிவைப் பெருக்கும்?

பிள்ளைகளுக்கும் கூகிளில் தேடிக்கண்டுபிடியுங்கள் என்று சொல்லி வளர்த்தால் எதிர்காலத்தில் பூமியை எந்திரன்கள்தான் ஆளும்.

ஜூலை 16 என்று விடையை வாலி பதிந்ததால் நானாகக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஏன் என்ற காரணத்துக்கு கொஞ்சம் மினக்கெடவேண்டி வந்துவிட்டது.

பொருந்தக் கூடிய விளக்கம்.

தரவுகள்:

1. அல்பேர்ட்டுக்கு மாதம் மட்டும்தான் தெரியும்.

2. பேர்னாட்டுக்கு திகதி மட்டும்தான் தெரியும்

3. மாதங்கள்: மே, ஜூன், ஜூலை, ஆக்ஸ்ட்

4. திகதிகள்: 14, 15, 16,17,18,19

18,19 திகதிகள் பிறந்தநாளாக இருக்கமுடியாது.

இத்திகதிகள் ஒரு தடவைதான் வருகின்றன என்பதால் மாதம் தெரியாமலேயே பேர்னார்ட் பிறந்தநாளைக் கண்டுபிடித்திருக்கலாம்.

முதல் வசனப்படி அல்பேர்ட் பேர்னாட்டுக்கும் பிறந்தநாள்தெரியாது என்று சொல்கின்றார். 18, 19 திகதிகள் ஜூனிலும், மேயிலும் வருவதால் ச்செரில் இந்த மாதங்களில் ஒன்றை அல்பேர்ட்டுக்கு சொல்லியிருந்தால் அல்பேர்ட்டின் இந்த வசனம் பிழை. பேர்னாட்டிற்குத் தெரியாது என்று அல்பேர்ட் உறுதியாகச் சொல்வதால் மாதம் மே, ஜூனாக இருக்கமுடியாது.

இப்ப உள்ள தெரிவுகள்:

ஜூலை 14, 16

ஆகஸ்ட் 14, 15, 17

இரண்டாவது வசனப்படி பேர்னாட் தனக்கு இப்போது தெரியும் என்கின்றார். 14 ஜூலையிலும் ஆகஸ்ட்டிலும் இருப்பதால் 14 ஆக இருக்கமுடியாது.

இப்ப தெரிவுகள்:

ஜூலை 16

ஆகஸ்ட் 15, 17

பேர்னார்ட் தெரியும் என்று சொன்னதால் ஒரு திகதி மட்டுமுள்ள ஜூலை 16தான் பிறந்தநாள்.

மூன்றாவது வசனப்படி அல்பேர்ட்டுக்கும் பிறந்தநாள் தெரிந்துவிட்டது. 15, 17 ஆக திகதி இருந்தால் அவரால் அப்படிச் சொல்லமுடியாது. ஆகவே ஜூலைதான் அவருக்குச் சொல்லப்பட்டது.

Link to comment
Share on other sites

1. Albertற்கு மாதமும், Bernardற்கு திகதியும் தெரியும்

2. 14,15, 16,17 ம் திகதிகள் 2 தடவையும், 18 ம் 19ம் ஒரு தடவையும் தரபட்டுள்ளது

3. Albert கூறுகிறான் Bernard இற்கு தெரியாது என்று, ஆகவே 18 ம் 19ம் இல்லை

4. 18 ம் 19ம் திகதிகள் வரும் மாதங்கள் *(May, June)இல்லை என்பது தெளிவாகின்றது

5. அகவே July 14, 16ம் Auguest 14, 15, 17 தெரிவாகின்றது

6. இப்போ 14ம் திகதி இரண்டு மாதங்களும் வருகுறது, Bernard மாதத்தை கண்டறிகிறான் அகவே 14ம் திகதிகளும் இல்லை

7.இப்போ மிஞ்சி இருப்பது July 16ம் Auguest 15, 17 தெரிவாகின்றது

8. திகதி தெரியும் என்பதால் Bernard இப்பொழுது மாதத்தயும் தெரிந்து விடுகிறான்

9. இப்போ அல்பேர்டிட்கு திகதி தெரியும் என்று கூறுகிறான்,
எதை வைத்து கூறுகிறான்?.... 14ம் திகதிகளும் இல்லை என்ற முடிவில் இருந்து

10. Augustஇல் 2தடவை உள்ளது...கண்டறியமுடியாது

11. மாதம் தெரிந்த Albertற்கு விடை தெரிகிறது ஆயின் Ausust மாதம் வராது


ஆகவே July 16


அப்பா................விளங்காட்டி தயவு செய்து கேட்கவேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேவியர் ஒருக்கா வடிவா விளங்கப்படுத்த ஏலுமே ???? :lol:

Link to comment
Share on other sites

உண்மையை சொல்லப்போனால் இன்னும் எனக்கு தெளிவா விளங்கேல்லை  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே15, மே16, மே19, ஜூன்17, ஜூன்18, ஜூலை14, ஜூலை16 ஆகஸ்ட்14, ஆகஸ்ட்15, ஆகஸ்ட்17

ஜெனிபர் லோரன்ஸ் :rolleyes:இன் எண்ணத்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

படிமுறை1

இவற்றுள் மே19 உம் ஜூன்18 உம் பிறந்தநாளாக இருக்கமுடியாது. (பேர்னாட்டுக்கு திகதி தெரியும்)

இப்போது எஞ்சியிருப்பது

மே15, மே16, ஜூன்17, ஜூலை14, ஜூலை16 ஆகஸ்ட்14, ஆகஸ்ட்15, ஆகஸ்ட்17

படிமுறை2

இனி ஜூன்17 உம் விடுபட்டுப் போகும் (அல்பேர்ட்டுக்கு மாதம் தெரியும்)

இப்போது எஞ்சியிருப்பது

மே15, மே16, ஜூலை14, ஜூலை16 ஆகஸ்ட்14, ஆகஸ்ட்15, ஆகஸ்ட்17

படிமுறை3

மீண்டும் ஆகஸ்ட்17 விடுபட்டுப் போகும்(பேர்னாட்டுக்கு திகதி தெரியும்)

இப்போது எஞ்சியிருப்பது

மே15, மே16, ஜூலை14, ஜூலை16 ஆகஸ்ட்14, ஆகஸ்ட்15

இனி அல்பேர்ட் மற்றும் பேர்னாட் இருவரின் கூற்றுக்களின் படி

படிமுறை4

மே15 உம் மே16 உம் விடுபட்டுப் போகும் (அல்பேர்ட்டின் முதலாவது கூற்று)

இப்போது எஞ்சியிருப்பது

ஜூலை14, ஜூலை16 ஆகஸ்ட்14, ஆகஸ்ட்15

படிமுறை5

ஜூலை14 உம் ஆகஸ்ட்14 உம் விடுபடும் (பேர்னாட்டின் கூற்று)

இப்போது எஞ்சியிருப்பது

ஜூலை16 உம் ஆகஸ்ட்15 உம்

அல்பேர்ட்டின் மூன்றாவது கூற்றுப் பொய் :D

ஜூலை16 நம்பர் சரியில்லை ஆகஸ்ட்15 தான் நல்ல நம்பர் இது ஜெனிபர், வாலிக்குச் சொன்னது.

எனவே விடை ஆகஸ்ட் 15 :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சேவியர் ஒருக்கா வடிவா விளங்கப்படுத்த ஏலுமே ???? :lol:

அக்கா எந்த இடத்தில உங்களுக்கு சந்தேகம்?

அந்த இடத்தை கூறினால் இலகுவாக இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை இங்கும் சொல்லப்பட்டுள்ளது.

 

http://www.bbc.co.uk/news/world-asia-32297367

 

11111802_983395601695416_320802234673757

Link to comment
Share on other sites

சாறி வாலி சார். நீங்க ரொம்ப லேட்டா விளக்கம் தந்தால உங்களுக்கு ஆறுதல் பரிசா சுவியிட பச்சை புள்ளி மட்டும் வழங்கப்படுது.  :lol:
 
கிருபன் அவர்களை வெற்றியாளராக அறிவித்து அவருக்கு நான்கு பச்சை புள்ளி வழங்கப்படுகிறது.  :D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.