Jump to content

அழகிய திருக்கோணமலை


Recommended Posts

 

கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு.

கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா?
கொடி படைசூழ நாட்டை இழப்போமா?
மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ
முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா?
கோணமலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும்.
பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும்.
மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும்.
மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

வீரம் விளையாடும் நேரம் எழுவாயா?
வேங்கைப் படையோடு நீயும் வருவாயா?
தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா?
தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா?
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய வயதில்... அப்பா திரிகோணமலையில் வேலை செய்த போது, ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு செல்வது வழக்கம்.
அவர் வசித்த வீடு திருகோணமலை வைத்தியசாலையை... அண்மித்து இருந்தது. கடற்கரைக்கு நடந்து செல்லும் தூரம்.
ஒவ்வொரு நாள் மாலையிலும், கடற்கரையில் குடும்பத்துடன் இருந்து விளையாடுவது... இன்னும் பசுமையாக உள்ளது.
அழகிய பிரதேசம் திருகோணமலை. இணைப்பிற்கு நன்றி  செந்தமிழாளன்.

Link to comment
Share on other sites

சிறிய வயதில்... அப்பா திரிகோணமலையில் வேலை செய்த போது, ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு செல்வது வழக்கம்.

அவர் வசித்த வீடு திருகோணமலை வைத்தியசாலையை... அண்மித்து இருந்தது. கடற்கரைக்கு நடந்து செல்லும் தூரம்.

ஒவ்வொரு நாள் மாலையிலும், கடற்கரையில் குடும்பத்துடன் இருந்து விளையாடுவது... இன்னும் பசுமையாக உள்ளது.

அழகிய பிரதேசம் திருகோணமலை. இணைப்பிற்கு நன்றி செந்தமிழாளன்.

நன்றி தமிழ்சிறி அண்ணா வரவுக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

அழகான இடங்கள். தொடர்ந்து இணையுங்கள்.

 

வரவுக்கு நன்றி ஆரணி .

படங்களை இணைத்தமைக்கு நன்றி ஆதவன் 

253133_10151207496367673_1259713642_n.jp

 

 

 

 

401751_10150945436527673_862280194_n.jpg

542898_10150841782022673_1305636371_n.jp

560301_10150808073297673_1392666791_n.jp

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 1 month later...
  • 1 year later...

இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் யாழ்ப்பாணத்திற்கு 113 கிலோமீற்றர்கள் தெற்கிலும் மட்டக்களப்பிற்கு 69 கிலோமீற்றர்கள் வடக்கிலும் அமைந்துள்ள திருகோணமலை இலங்கைத் திருநாட்டின் இயற்கை வனப்புக்கும் எழில்மிகு தோற்றத்துக்கும் சான்றாக விளங்கும் ஓர் நகராகும்.trincomalee-01

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைத் தனது எல்லையாகக்கொண்ட திருகோணமலையின் இயற்கையாக அமைந்த கடற்கரை அழகு உள்நாட்டவர் முதல் வெளிநாட்டவர் வரை திருகோணமலையைத் தங்கள் நினைவுகளில் நீங்கா இடம்பெற்று நிற்கச் செய்கின்றது. இருப்பினும், இவையனைத்தையும் தாண்டி, திருகோணமலையானது மிகத் தொன்மையான வரலாற்றுக் கதைகளையும் தனது சுற்றுலாத்தளங்களுக்குள் உள்ளடக்கி நிற்கிறது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகவும் திருகோணமலை விளங்கி நிற்கின்றது.

வரலாற்றுடன் கலந்த சுற்றுலாப்பிரதேசங்களை அனுபவிக்கின்ற எவருக்குமே திருகோணமலை ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாகவிளங்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கையின் சுற்றுலாத்துறை சம்மேளனத்தின் வருடாந்த அறிக்கைக்கமைவாக, 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளில் 74.1% சதவீதமானவர்கள் இலங்கையின் கிழக்குக்கடற்கரைப் பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளார்கள் என்பதே அதனை நிரூபிக்கப் போதிய சான்றாக உள்ளது.

இயற்கையாக மூன்று பக்கங்களிலும் மலையால் சூழப்பட்ட இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட திருகோணமலைப் பிரதேசமானது ஆதி முதல் ஆங்கிலேயர் வரை பிரசித்தம்பெற்றிருந்தமைக்கு, இந்நிலம் தாங்கியுள்ள வரலாற்று எச்சங்களே சான்றாக உள்ளன.

திருகோணமலையின் அழகை ஏற்கனவே கண்டு ரசித்த ஒருவர் மீண்டும் அங்கு செல்லும்போது, தான் பார்த்த இடங்களின் மற்றுமொரு பரிமாணத்தையும், புதிதாக செல்ல இருப்பவர்களுக்கு முழுமையான சுற்றுலா அனுபவத்தையும் இந்த ஆக்கம் நிச்சயம் வழங்கும்.

கன்னியா வெந்நீரூற்றுக்கள் (Kanniya Hot Water Springs)trincomalee-02

இலங்கையை ஆண்ட இராவணன் என்கிற மன்னனால், தனது தாயின் கிரியை நிகழ்வுகளுக்காக உருவாக்கபட்ட ஏழு கிணறுகளுமே இதுவாகும் என இராமாயண வரலாறு கூறுகிறது. இந்த ஏழு கிணறுகளும் வெவ்வேறு விதமான வெப்பநிலையை வெளிப்படுத்தும் ஊற்றுக்களாக அமைந்துள்ளதுடன், குறுகிய தூர இடைவெளியில் அமைந்துள்ள இவ்வூற்றுக்களின் வெப்பநிலை வேறுபாட்டுக்கான காரணங்கள் இதுவரையிலும் அறிவியல்பூர்வமாகக் கண்டறியப்படவில்லை என்பது பெரும் விந்தையாகும்.

இந்துக்களால் இறந்தவர்களின் ஆத்ம கிரியைகளுக்குப் புனித இடமாக பயன்படுத்தபடுகின்ற இவ்விடம், தற்போது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் மூலமாக, நாட்டின் பாதுகாக்கப்படவேண்டிய இடங்களின் பட்டியலில் உள்ளடக்கப்படுகின்றது. இனமத பேதமின்றி அனைத்து மக்களும் இந்த அபூர்வ வெந்நீர் ஊற்றுக்கு வருகைதருவது இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

திருக்கோணேஸ்வர ஆலயம் (Koneswaram Temple)trincomalee-03

திருகோணமலையின் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த புனிதஸ்தலங்களில் முதன்மை பெறுவது இந்த திருக்கோணேஸ்வர ஆலயமே! பல நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்த ஆலயம் மலைமீதே அமைந்திருக்கிறது என்பது பலரது எண்ணம். ஆனாலும், குறித்த ஆலயத்தின் தொன்மை, குறித்த ஆலயம் அமைந்துள்ள மலையடிவாரத்தில் கடலுடன் முழுமையாகப் புதைந்து காணப்படுகிறது.

முன்னொரு காலத்திலே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் ஏற்பட்ட கடற்கோளில் ஆட்கொள்ளப்பட்டதன் விளைவால் அங்கு காணப்பட்ட பழமையான கோவில் கடலுக்குள் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.trincomalee-04

படகின் மூலமாக கோணேஸ்வர மலையின் பின்புறமாகப் பயணிப்பதன் மூலம் இக்கோயில்களின் எச்சங்களை தற்போதும் பார்வையிடக் கூடியதாக உள்ளது. திருக்கோணேஸ்வர ஆலய தரிசனம் மட்டுமன்றி அங்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்ட புராதன கோட்டைகளில் ஒன்றான பிரெட்றிக் (Fort Frederick) கோட்டையின் எச்சங்களையும் பார்வையிட முடியும்.trincomalee-05

வெல்கம் விகாரை (Velgam Vehara)

இலங்கையின் ஆரம்பகால பெளத்தவரலாறுகளில் மிக முக்கியமான பங்கை வகிப்பவன் மன்னன் தேவநம்பியதீசன். இம்மன்னனது காலப்பகுதியில் அமைக்கப்பட்டு, பின்னர் பாத்திய திஸ்ஸ அரசரினால் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட, பல வரலாற்றுக் கல்வெட்டுக்களைத் தன்னகத்தே தாங்கிநிற்கும் இந்த மிகப்பழமையான விகாரை திருகோணமலையின் மற்றுமொரு வரலாற்றுச் சின்னமாகும்.

சுவாரஸ்யமாக இவ்விகாரையின் கட்டுமானப் பணிகளுக்காகப் பல தமிழ் மன்னர்கள் நன்கொடை வழங்கிய வரலாறையும் இவ்விகாரைக் கல்வெட்டுக்கள் கொண்டுள்ளன. இப்பழைமைவாய்ந்த விகாரையின் எச்சங்கள் மிகுந்த காலம்கடந்து இலங்கைத் தொல்பொருள் ஆய்வாளர்களால் 1929ம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.trincomalee-06

2ம் உலகப்போரின் நினைவுச் சின்னங்கள்

இந்துசமுத்திரத்தில் உள்ள இச்சிறியயதீவாம் இலங்கையின் எழில்மிகு இத்திருகோமலை இந்து மற்றும் பெளத்தமத காலச்சுவடுகளை மட்டுமல்லாது, நவீனகால வரலாற்று எச்சங்களையும் தன்னகத்தே தாங்கி நிற்பது இப்பிரதேசத்தின் பெறுமதியை உலகுக்குப் பறைசாற்றுவதாய் அமைகிறது. இயற்கையாக பாதுகாப்பு அரணாக அமைந்த சீன வளைகுடா (China Bay), 2ம் உலகப்போரில் பிரித்தானியார்களால் ஒரு போர்த்தளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீன வளைகுடாவின் தரைத்தோற்றம் பிரித்தானியர்களின் போர் முறைமைகளைக் கொண்டுநடாத்த ஏதுவாக அமைந்திருந்ததே இதற்கான காரணமாகும். இதற்கு ஆதாரமாக, மிகசிறப்பான முறையில் பராமரிக்கபடுகின்ற 2ம் உலகப்போரில் உயிர்நீத்த போர்வீரர்களின் சமாதி இன்னும் திருக்கோணமலையைத் தரிசிக்கச் செல்லும் சுற்றுலாப்பயணிகளால் பார்வையிடக்கூடியதாக இருக்கின்றது.trincomalee-07

இலங்கை உள்நாட்டு போரின் நினைவிடங்கள்

அண்மையில் முடிவுக்குவந்த இலங்கையின் இருதசாப்தகால உள்நாட்டுப் போரில் இலங்கைக் கடற்படையினால் பெறப்பட்ட வெற்றிகள் மற்றும் சவால்களைக் காட்சிப்படுத்தும் நினைவகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது புனரமைக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டுக்கான டச்சுக் கடற்படை ஆணையாளரின் இல்லமாகும். இலங்கையின் 65ஆவது சுதந்திர தினத்தின் நினைவையொட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.

கூடவே, இந்த நினைவிடங்களுக்கு அண்மித்ததாகவுள்ள சிறு சோபர் தீவுகளில் (Sober Island) முழுநாளையும் செலவிடக்கூடியவகையில் கடற்படையின் உதவியுடன் இலங்கை அரசு, சுற்றுலாதள வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.trincomalee-08

நிலாவெளி – புறாத் தீவு

திருகோணமலையின் கரையோர சுற்றுலாதளங்கள் என்றதுமே நினைவுக்கு வருவது, நிலாவெளி கடற்கரையும் அதனைச் சார்ந்ததாக அமைந்துள்ள புறாத் தீவுமே ஆகும். திருகோணமலை நகரிலிருந்து 21Km தொலைவில் இப்புறாத்தீவு அமைந்துள்ளது.trincomalee-09

1963ம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்தப் புறாத் தீவு. (இந்த தீவு கண்டறியப்பட்ட காலம்முதல் பெருமளவிலான புறாக்களின் வசிப்பிடமாக இது அமைந்திருந்ததால், இன்றும் இது புறாத்தீவு என்றே அழைக்கப்படுகிறது. ஆயினும், மனித நடமாட்டம் அதிகரித்தபின்பு, இங்கு புறாக்களின் வருகை குறைவடைந்து விட்டது.) இலங்கை அரசினால் பாதுகாத்துப் பராமரிக்கபடுகின்ற 17வது தேசிய பூங்காவாகவும் 2ஆவது தேசிய கரையோரப் பூங்காவாகவும் இப்புறாத்தீவு அறிவிக்கபட்டது.

இத்தீவு பல்வேறுபட்ட முருகைக்கற்பாறைகளின் களஞ்சியமாகக் காணப்படுவதோடு, அண்ணளவாக நூறு இன முருகைக்கல் பாறைகளையும் முன்னூறுக்கும் அதிகமான முருகைக்கல்வாழ் மீனினங்களையும் கொண்டது.

குறிப்பு – பொலித்தீன் மற்றும் பிளாஸ்திரிக் பாவனை முற்றிலும் தடைசெய்யப்பட்ட தீவாக இது அமைந்துள்ளது.

மார்பிள் கடற்கரை (Marble Beach)

மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா கடல் மற்றும் காலியில் அமைந்துள்ள ஜங்கிள் (jungle Beach) கடற்கரை போன்றவொரு அனுபவத்தை திருகோணமலை சுற்றுலாவின்போது பெற்றுக்கொள்ளக்கூடியதொரு தளமாக இம்மார்பிள் கடற்கரை அமைந்துள்ளது. திருகோணமலையின் கிண்ணியா கடற்பரப்பில் அமைந்துள்ள இந்தக் கடற்கரை, இலங்கையின் அருகிவரும் முருகைக்கற்பாறைகளை கொண்டவொரு கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது.

குறிப்பு – பொலித்தீன் மற்றும் பிளாஸ்திரிக் பாவனை முற்றிலும் தடைசெய்யப்பட்ட இடமாக இது அமைந்துள்ளது.trincomalee10

கடற் சுற்றுலா (Whale & Dolphin Watching)

அண்மைக்காலத்தில் திருகோணமலையின் பிரசித்தம் பெற்ற மற்றுமொரு துறையாக இந்தக் கடற் சுற்றுலா மாறிவருகிறது. குறிப்பாக, திமிங்கலம் மற்றும் டொல்பின் பார்வைடுதலுக்கு இலங்கையின் உகந்த இடங்களில் ஒன்றாக திருகோணமலை காணப்படுகிறது.trincomalee11

பசுபிக் சமூதிரத்துக்கு அண்மையில் இலங்கையின் கடற்பரப்பு அமைந்துள்ளது இதற்கு ஏதுவாக உள்ளது. குறிப்பாக, மே மாதம் முதல் அக்டோபர் (May-October) மாதம் வரை இந்த பார்வையிடலுக்கு உகந்த இடமாக திருகோணமலை உள்ளது. இலங்கை கடற்படையினால் பாதுகாப்பான முறையில் ஒழுங்குசெய்யப்பட்ட படகுகள் மூலம் இந்த சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.

2727 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட இத்திருகோணமலை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் ஓர் பிரதேசமாக விளங்குகின்றது. கிழக்கு மாகாணத்தின் ஒரு சிறிய நிலப்பரப்பில் இத்துணை பெறுமதிவாய்ந்த இயற்கை, கலை, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இடங்கள் காணப்படுவது இம்மண்ணிற்கேயுரிய தனிச்சிறப்பென்று போற்றினால் அது மிகையாகாது.

குறுகிய வார விடுமுறைகள் அல்லது வார இறுதி நாட்கள் என இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முழுமையாகக் கண்டுகளிக்கக்கூடிய சுற்றுலாத்தளமாக இதனைக்கொள்ளலாம். தனது வியத்தகு சுற்றுலாத் தளங்களைக்கொண்டு பயணிகளை மீண்டும் மீண்டும் தன்புரமீர்க்கும் இத்திருகோணமலை உங்கள் விடுமுறை அனுபவத்தை மென்மேலும் மெருகூட்டவல்லது!

இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவியரீதியில் சுற்றுலாவிரும்பிகள் பார்வையிடவேண்டிய தலங்களின் வரிசையில் திருகோணமலை முக்கிய இடம்பெற்று வீற்றிருப்பது இலங்கை மண்ணுக்கும் அதன் வரலாற்றுச் சிறப்பிற்கும் பெருமை சேர்த்துக்கொண்டே இருக்கும்!

http://www.addtamil.com/இலங்கையின்-எழில்மிகு-அழக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.