Jump to content

அழகிய திருக்கோணமலை


Recommended Posts

 

கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு.

கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா?
கொடி படைசூழ நாட்டை இழப்போமா?
மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ
முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா?
கோணமலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும்.
பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும்.
மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும்.
மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

வீரம் விளையாடும் நேரம் எழுவாயா?
வேங்கைப் படையோடு நீயும் வருவாயா?
தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா?
தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா?
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய வயதில்... அப்பா திரிகோணமலையில் வேலை செய்த போது, ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு செல்வது வழக்கம்.
அவர் வசித்த வீடு திருகோணமலை வைத்தியசாலையை... அண்மித்து இருந்தது. கடற்கரைக்கு நடந்து செல்லும் தூரம்.
ஒவ்வொரு நாள் மாலையிலும், கடற்கரையில் குடும்பத்துடன் இருந்து விளையாடுவது... இன்னும் பசுமையாக உள்ளது.
அழகிய பிரதேசம் திருகோணமலை. இணைப்பிற்கு நன்றி  செந்தமிழாளன்.

Link to comment
Share on other sites

சிறிய வயதில்... அப்பா திரிகோணமலையில் வேலை செய்த போது, ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு செல்வது வழக்கம்.

அவர் வசித்த வீடு திருகோணமலை வைத்தியசாலையை... அண்மித்து இருந்தது. கடற்கரைக்கு நடந்து செல்லும் தூரம்.

ஒவ்வொரு நாள் மாலையிலும், கடற்கரையில் குடும்பத்துடன் இருந்து விளையாடுவது... இன்னும் பசுமையாக உள்ளது.

அழகிய பிரதேசம் திருகோணமலை. இணைப்பிற்கு நன்றி செந்தமிழாளன்.

நன்றி தமிழ்சிறி அண்ணா வரவுக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

அழகான இடங்கள். தொடர்ந்து இணையுங்கள்.

 

வரவுக்கு நன்றி ஆரணி .

படங்களை இணைத்தமைக்கு நன்றி ஆதவன் 

253133_10151207496367673_1259713642_n.jp

 

 

 

 

401751_10150945436527673_862280194_n.jpg

542898_10150841782022673_1305636371_n.jp

560301_10150808073297673_1392666791_n.jp

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 1 month later...
  • 1 year later...

இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் யாழ்ப்பாணத்திற்கு 113 கிலோமீற்றர்கள் தெற்கிலும் மட்டக்களப்பிற்கு 69 கிலோமீற்றர்கள் வடக்கிலும் அமைந்துள்ள திருகோணமலை இலங்கைத் திருநாட்டின் இயற்கை வனப்புக்கும் எழில்மிகு தோற்றத்துக்கும் சான்றாக விளங்கும் ஓர் நகராகும்.trincomalee-01

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைத் தனது எல்லையாகக்கொண்ட திருகோணமலையின் இயற்கையாக அமைந்த கடற்கரை அழகு உள்நாட்டவர் முதல் வெளிநாட்டவர் வரை திருகோணமலையைத் தங்கள் நினைவுகளில் நீங்கா இடம்பெற்று நிற்கச் செய்கின்றது. இருப்பினும், இவையனைத்தையும் தாண்டி, திருகோணமலையானது மிகத் தொன்மையான வரலாற்றுக் கதைகளையும் தனது சுற்றுலாத்தளங்களுக்குள் உள்ளடக்கி நிற்கிறது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகவும் திருகோணமலை விளங்கி நிற்கின்றது.

வரலாற்றுடன் கலந்த சுற்றுலாப்பிரதேசங்களை அனுபவிக்கின்ற எவருக்குமே திருகோணமலை ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாகவிளங்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கையின் சுற்றுலாத்துறை சம்மேளனத்தின் வருடாந்த அறிக்கைக்கமைவாக, 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளில் 74.1% சதவீதமானவர்கள் இலங்கையின் கிழக்குக்கடற்கரைப் பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளார்கள் என்பதே அதனை நிரூபிக்கப் போதிய சான்றாக உள்ளது.

இயற்கையாக மூன்று பக்கங்களிலும் மலையால் சூழப்பட்ட இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட திருகோணமலைப் பிரதேசமானது ஆதி முதல் ஆங்கிலேயர் வரை பிரசித்தம்பெற்றிருந்தமைக்கு, இந்நிலம் தாங்கியுள்ள வரலாற்று எச்சங்களே சான்றாக உள்ளன.

திருகோணமலையின் அழகை ஏற்கனவே கண்டு ரசித்த ஒருவர் மீண்டும் அங்கு செல்லும்போது, தான் பார்த்த இடங்களின் மற்றுமொரு பரிமாணத்தையும், புதிதாக செல்ல இருப்பவர்களுக்கு முழுமையான சுற்றுலா அனுபவத்தையும் இந்த ஆக்கம் நிச்சயம் வழங்கும்.

கன்னியா வெந்நீரூற்றுக்கள் (Kanniya Hot Water Springs)trincomalee-02

இலங்கையை ஆண்ட இராவணன் என்கிற மன்னனால், தனது தாயின் கிரியை நிகழ்வுகளுக்காக உருவாக்கபட்ட ஏழு கிணறுகளுமே இதுவாகும் என இராமாயண வரலாறு கூறுகிறது. இந்த ஏழு கிணறுகளும் வெவ்வேறு விதமான வெப்பநிலையை வெளிப்படுத்தும் ஊற்றுக்களாக அமைந்துள்ளதுடன், குறுகிய தூர இடைவெளியில் அமைந்துள்ள இவ்வூற்றுக்களின் வெப்பநிலை வேறுபாட்டுக்கான காரணங்கள் இதுவரையிலும் அறிவியல்பூர்வமாகக் கண்டறியப்படவில்லை என்பது பெரும் விந்தையாகும்.

இந்துக்களால் இறந்தவர்களின் ஆத்ம கிரியைகளுக்குப் புனித இடமாக பயன்படுத்தபடுகின்ற இவ்விடம், தற்போது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் மூலமாக, நாட்டின் பாதுகாக்கப்படவேண்டிய இடங்களின் பட்டியலில் உள்ளடக்கப்படுகின்றது. இனமத பேதமின்றி அனைத்து மக்களும் இந்த அபூர்வ வெந்நீர் ஊற்றுக்கு வருகைதருவது இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

திருக்கோணேஸ்வர ஆலயம் (Koneswaram Temple)trincomalee-03

திருகோணமலையின் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த புனிதஸ்தலங்களில் முதன்மை பெறுவது இந்த திருக்கோணேஸ்வர ஆலயமே! பல நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்த ஆலயம் மலைமீதே அமைந்திருக்கிறது என்பது பலரது எண்ணம். ஆனாலும், குறித்த ஆலயத்தின் தொன்மை, குறித்த ஆலயம் அமைந்துள்ள மலையடிவாரத்தில் கடலுடன் முழுமையாகப் புதைந்து காணப்படுகிறது.

முன்னொரு காலத்திலே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் ஏற்பட்ட கடற்கோளில் ஆட்கொள்ளப்பட்டதன் விளைவால் அங்கு காணப்பட்ட பழமையான கோவில் கடலுக்குள் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.trincomalee-04

படகின் மூலமாக கோணேஸ்வர மலையின் பின்புறமாகப் பயணிப்பதன் மூலம் இக்கோயில்களின் எச்சங்களை தற்போதும் பார்வையிடக் கூடியதாக உள்ளது. திருக்கோணேஸ்வர ஆலய தரிசனம் மட்டுமன்றி அங்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்ட புராதன கோட்டைகளில் ஒன்றான பிரெட்றிக் (Fort Frederick) கோட்டையின் எச்சங்களையும் பார்வையிட முடியும்.trincomalee-05

வெல்கம் விகாரை (Velgam Vehara)

இலங்கையின் ஆரம்பகால பெளத்தவரலாறுகளில் மிக முக்கியமான பங்கை வகிப்பவன் மன்னன் தேவநம்பியதீசன். இம்மன்னனது காலப்பகுதியில் அமைக்கப்பட்டு, பின்னர் பாத்திய திஸ்ஸ அரசரினால் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட, பல வரலாற்றுக் கல்வெட்டுக்களைத் தன்னகத்தே தாங்கிநிற்கும் இந்த மிகப்பழமையான விகாரை திருகோணமலையின் மற்றுமொரு வரலாற்றுச் சின்னமாகும்.

சுவாரஸ்யமாக இவ்விகாரையின் கட்டுமானப் பணிகளுக்காகப் பல தமிழ் மன்னர்கள் நன்கொடை வழங்கிய வரலாறையும் இவ்விகாரைக் கல்வெட்டுக்கள் கொண்டுள்ளன. இப்பழைமைவாய்ந்த விகாரையின் எச்சங்கள் மிகுந்த காலம்கடந்து இலங்கைத் தொல்பொருள் ஆய்வாளர்களால் 1929ம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.trincomalee-06

2ம் உலகப்போரின் நினைவுச் சின்னங்கள்

இந்துசமுத்திரத்தில் உள்ள இச்சிறியயதீவாம் இலங்கையின் எழில்மிகு இத்திருகோமலை இந்து மற்றும் பெளத்தமத காலச்சுவடுகளை மட்டுமல்லாது, நவீனகால வரலாற்று எச்சங்களையும் தன்னகத்தே தாங்கி நிற்பது இப்பிரதேசத்தின் பெறுமதியை உலகுக்குப் பறைசாற்றுவதாய் அமைகிறது. இயற்கையாக பாதுகாப்பு அரணாக அமைந்த சீன வளைகுடா (China Bay), 2ம் உலகப்போரில் பிரித்தானியார்களால் ஒரு போர்த்தளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீன வளைகுடாவின் தரைத்தோற்றம் பிரித்தானியர்களின் போர் முறைமைகளைக் கொண்டுநடாத்த ஏதுவாக அமைந்திருந்ததே இதற்கான காரணமாகும். இதற்கு ஆதாரமாக, மிகசிறப்பான முறையில் பராமரிக்கபடுகின்ற 2ம் உலகப்போரில் உயிர்நீத்த போர்வீரர்களின் சமாதி இன்னும் திருக்கோணமலையைத் தரிசிக்கச் செல்லும் சுற்றுலாப்பயணிகளால் பார்வையிடக்கூடியதாக இருக்கின்றது.trincomalee-07

இலங்கை உள்நாட்டு போரின் நினைவிடங்கள்

அண்மையில் முடிவுக்குவந்த இலங்கையின் இருதசாப்தகால உள்நாட்டுப் போரில் இலங்கைக் கடற்படையினால் பெறப்பட்ட வெற்றிகள் மற்றும் சவால்களைக் காட்சிப்படுத்தும் நினைவகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது புனரமைக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டுக்கான டச்சுக் கடற்படை ஆணையாளரின் இல்லமாகும். இலங்கையின் 65ஆவது சுதந்திர தினத்தின் நினைவையொட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.

கூடவே, இந்த நினைவிடங்களுக்கு அண்மித்ததாகவுள்ள சிறு சோபர் தீவுகளில் (Sober Island) முழுநாளையும் செலவிடக்கூடியவகையில் கடற்படையின் உதவியுடன் இலங்கை அரசு, சுற்றுலாதள வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.trincomalee-08

நிலாவெளி – புறாத் தீவு

திருகோணமலையின் கரையோர சுற்றுலாதளங்கள் என்றதுமே நினைவுக்கு வருவது, நிலாவெளி கடற்கரையும் அதனைச் சார்ந்ததாக அமைந்துள்ள புறாத் தீவுமே ஆகும். திருகோணமலை நகரிலிருந்து 21Km தொலைவில் இப்புறாத்தீவு அமைந்துள்ளது.trincomalee-09

1963ம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்தப் புறாத் தீவு. (இந்த தீவு கண்டறியப்பட்ட காலம்முதல் பெருமளவிலான புறாக்களின் வசிப்பிடமாக இது அமைந்திருந்ததால், இன்றும் இது புறாத்தீவு என்றே அழைக்கப்படுகிறது. ஆயினும், மனித நடமாட்டம் அதிகரித்தபின்பு, இங்கு புறாக்களின் வருகை குறைவடைந்து விட்டது.) இலங்கை அரசினால் பாதுகாத்துப் பராமரிக்கபடுகின்ற 17வது தேசிய பூங்காவாகவும் 2ஆவது தேசிய கரையோரப் பூங்காவாகவும் இப்புறாத்தீவு அறிவிக்கபட்டது.

இத்தீவு பல்வேறுபட்ட முருகைக்கற்பாறைகளின் களஞ்சியமாகக் காணப்படுவதோடு, அண்ணளவாக நூறு இன முருகைக்கல் பாறைகளையும் முன்னூறுக்கும் அதிகமான முருகைக்கல்வாழ் மீனினங்களையும் கொண்டது.

குறிப்பு – பொலித்தீன் மற்றும் பிளாஸ்திரிக் பாவனை முற்றிலும் தடைசெய்யப்பட்ட தீவாக இது அமைந்துள்ளது.

மார்பிள் கடற்கரை (Marble Beach)

மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா கடல் மற்றும் காலியில் அமைந்துள்ள ஜங்கிள் (jungle Beach) கடற்கரை போன்றவொரு அனுபவத்தை திருகோணமலை சுற்றுலாவின்போது பெற்றுக்கொள்ளக்கூடியதொரு தளமாக இம்மார்பிள் கடற்கரை அமைந்துள்ளது. திருகோணமலையின் கிண்ணியா கடற்பரப்பில் அமைந்துள்ள இந்தக் கடற்கரை, இலங்கையின் அருகிவரும் முருகைக்கற்பாறைகளை கொண்டவொரு கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது.

குறிப்பு – பொலித்தீன் மற்றும் பிளாஸ்திரிக் பாவனை முற்றிலும் தடைசெய்யப்பட்ட இடமாக இது அமைந்துள்ளது.trincomalee10

கடற் சுற்றுலா (Whale & Dolphin Watching)

அண்மைக்காலத்தில் திருகோணமலையின் பிரசித்தம் பெற்ற மற்றுமொரு துறையாக இந்தக் கடற் சுற்றுலா மாறிவருகிறது. குறிப்பாக, திமிங்கலம் மற்றும் டொல்பின் பார்வைடுதலுக்கு இலங்கையின் உகந்த இடங்களில் ஒன்றாக திருகோணமலை காணப்படுகிறது.trincomalee11

பசுபிக் சமூதிரத்துக்கு அண்மையில் இலங்கையின் கடற்பரப்பு அமைந்துள்ளது இதற்கு ஏதுவாக உள்ளது. குறிப்பாக, மே மாதம் முதல் அக்டோபர் (May-October) மாதம் வரை இந்த பார்வையிடலுக்கு உகந்த இடமாக திருகோணமலை உள்ளது. இலங்கை கடற்படையினால் பாதுகாப்பான முறையில் ஒழுங்குசெய்யப்பட்ட படகுகள் மூலம் இந்த சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.

2727 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட இத்திருகோணமலை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் ஓர் பிரதேசமாக விளங்குகின்றது. கிழக்கு மாகாணத்தின் ஒரு சிறிய நிலப்பரப்பில் இத்துணை பெறுமதிவாய்ந்த இயற்கை, கலை, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இடங்கள் காணப்படுவது இம்மண்ணிற்கேயுரிய தனிச்சிறப்பென்று போற்றினால் அது மிகையாகாது.

குறுகிய வார விடுமுறைகள் அல்லது வார இறுதி நாட்கள் என இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முழுமையாகக் கண்டுகளிக்கக்கூடிய சுற்றுலாத்தளமாக இதனைக்கொள்ளலாம். தனது வியத்தகு சுற்றுலாத் தளங்களைக்கொண்டு பயணிகளை மீண்டும் மீண்டும் தன்புரமீர்க்கும் இத்திருகோணமலை உங்கள் விடுமுறை அனுபவத்தை மென்மேலும் மெருகூட்டவல்லது!

இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவியரீதியில் சுற்றுலாவிரும்பிகள் பார்வையிடவேண்டிய தலங்களின் வரிசையில் திருகோணமலை முக்கிய இடம்பெற்று வீற்றிருப்பது இலங்கை மண்ணுக்கும் அதன் வரலாற்றுச் சிறப்பிற்கும் பெருமை சேர்த்துக்கொண்டே இருக்கும்!

http://www.addtamil.com/இலங்கையின்-எழில்மிகு-அழக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.