Jump to content

அந்தப் பத்து நிமிடங்கள் !


Recommended Posts

மனம் உயிர்ப்புடன் இருக்கிறது என்று அர்த்தம், ரகு!

உயிர்ப்புடன் இருந்தால் எந்த வயதிலும் இந்த உணர்வு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு அண்ணா உங்கள் கதையை நீங்கள் முடிக்காவிட்டால்..உங்கள் கதையோடு சார்ந்த எங்கள் சொந்த அனுபவங்களை எழுதி கதையை "Based on True Story".... ஆக்கிவிடுவோம்   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு அண்ணா உங்கள் கதையை நீங்கள் முடிக்காவிட்டால்..உங்கள் கதையோடு சார்ந்த எங்கள் சொந்த அனுபவங்களை எழுதி கதையை "Based on True Story".... ஆக்கிவிடுவோம்   :)

 

 

அன்பு சசி,

 

நான் கதை தொடங்கும்போதே முடிவுறாத கதை என்று தெரியும் எனக்கு. :icon_idea:

 

பயணங்கள் முடிவதில்லை...ஒருதலை ராகம் பார்த்ததில்லையோ ??? :wub:

 

ஆனாலும், உங்கள் அனுபவங்களைத் தொடுத்து இதை நீட்டித்து முடிப்பதைப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன். :rolleyes:  

 

இந்தக் கதை அப்போது "Based on True Story" என்று இல்லாது " Based on multiple true stories" ஆக மாறிவிடும் !!!!! ^_^ 

 

சவால், முடிந்தால் இந்தக் கதையை முடியுங்கள் பார்க்கலாம் !!!! :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

து "Based on True Story" " Based on multiple true stories" >சவால், முடிந்தால் இந்தக் கதையை முடியுங்கள் பார்க்கலாம் !!!! :D 

 

நான் கதையை முடிக்கிறேன் ...எந்த வீதி,எந்த சப்பேர்ப் என்று சொன்னால் நல்லம்...:D ....கார் நம்பரையும் தருவீர்கள் என்றால் மிகவும் விறுவிறுப்பாக கதையை முடிக்கலாம்...:D யாவும் முஸ்பாத்திக்கே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா, விட்டால் பெயர் விலாசம் எல்லாம் கேப்பியல் போல கிடக்கு. அது தெரியாமத்தானே நானே கதையா எழுதிக் கொண்டிருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே தொடர்ந்து எழுதவேணும் போல கிடக்கு இதை.நீங்கள் வேறை :lol:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்கள் இருக்கலாம், இறுதியாக அவளைப் பார்த்து. அல்லது அவளை இனிமேல் பார்க்கக் கூடாதென்று மனம் அழுங்காகப் பற்றிக்கொண்டிருக்கலாம், ஏதோ ஒன்று அவளிடமிருந்து என்னைத் தூர விலத்தியிருக்க வேண்டியது. 

 

கடுமையான மனப் போராட்டங்களினூடு, ஒரு நிலைக்கு மனம் வந்திருந்தது. இது விரும்பி எடுத்த முடிவா என்றால் இல்லையென்றுதான் அடித்துச் சொல்லும் மனது, ஆனால் அதுவே  இப்போதைக்கு தேவையாகவிருந்தது.

 

அவளைப் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பங்களையும் வேண்டுமென்றே மனம் கவலையுடன் தவிர்த்துக்கொண்டது. இதயத்தின் ஒருமூலையில் லேசான வலிப்பு பல காலங்களுக்குப் பின்னர் முதன்முறையாக தொடங்கியது தெரிந்தது எனக்கு. ஆனால், வேறு வழியில்லை. தறிகெட்டுத் திரியும் மனதைக் கட்டிப் போடவேண்டும் என்று மூளை சொல்லியதால், வெகு சிரமப்பட்டு கண்களையும், மனதையும் கறுப்புத்துணி மூடிக் கட்டிக் கொண்டேன்.

 

என்னில் இந்த மாற்றத்தை அவளும் உணர்ந்திருப்பாள் போலும். வழமையான கனிவான கடைக்கண் பார்வையும், மெலிதான உதட்டோரப் புன்னகையும் அவள் முகத்திலிருந்து மெதுவாக மறைய ஆரம்பித்துவிட்டன. கூட்டத்தில் என்னைத் தேடிய கண்கள் வேண்டுமென்றே வேறு எங்கோ வெறித்தபடி அவள் என்னை சிலவேளைகளில் கடந்துபோவாள். அந்த ஒவ்வொரு கணமும் மனதில் அந்த வலி வந்துபோகும். ஆனால், இந்தக் காதலை விடவும் வலி பரவாயில்லை என்று பிடிவாதமாக கண்களையும், மனதையும் கட்டிப் போட்டேன். சிறிது சிறிதாக அவள் என்னை முற்றாக ஒதுக்கத் தொடங்கினாள். நான் இருப்பதை சட்டை செய்யாமல் என்னை முற்றாகப் புறக்கணித்துப் போனாள். மனதில் வலி சிறுகச் சிறுக கூடிக் கொண்டே போனது.

 

நான் ஏன் இப்படி ஆனேன் என்று அவளிடம் என்னால் சொல்ல முடியாது. கேட்கும் நிலையிலோ அல்லது தேவையோ அவளுக்குச் சற்றும் கிடையாதென்பது எனக்கு நன்றாகவே தெரியும். இன்றுவரை ஒரு சொல்லூக்கூட பேசத் தெரியாத எமதிரு மனங்களும் சொல்லிக்கொள்ளாத பனிப்போருக்குள் வீழ்ந்துபோயிருக்க, யுத்தமெதுவுமே இன்றி எனது மனது முற்றாகத் தோற்றிருந்தது. 

 

இப்படியே சில வாரங்களாக போராடிப் போராடி இறுகியிருந்த மனது இன்று மறுபடியும் விழித்துக்கொள்ளப் பார்த்தது. மூடிவைத்த உணர்வெல்லாம் சட்டை தறி தெறித்து வெளியே பாய்ந்துவிடப் பார்த்தது. அவளை சில வாரங்களுக்குப் பின்னர் இன்று நேருக்கு நேராகக் கண்டேன். ஒரு சில நொடித்துளிகளில் என்னைப் பார்த்த அவளது விழிகள் சட்டென்று வேறெங்கோ திரும்பியபடி, அவள் என்னை வேகமாகக் கடந்து போனாள். அவள் முகத்தில் எந்தச் சலனமுமில்லை, மனது  லேசாக அழத் தொடங்கியது. ஆனாலும், இது நடப்பது சாத்தியமில்லை என்பதுமட்டும் எனக்குத் தெரிகிறது, மனதைக் கஷ்ட்டப்பட்டு மறுபடி சமாதிக்குள் அடைத்துவிட்டு தொடர்ந்து நடந்தேன். சமாதிக்குள்ளிருந்து மனம் விசும்புவது எனக்குக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அண்ணா.ஆனாலும் எதோ ஒன்று உங்கள் எழுத்தில் விடுபட்டுவிட்டதான தோற்றம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அண்ணா.ஆனாலும் எதோ ஒன்று உங்கள் எழுத்தில் விடுபட்டுவிட்டதான தோற்றம்

 

சுமே,

 

எனது எழுத்தில் எதை விட்டு விட்டேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தெரிந்துகொள்ள ஆசை. :)

 

என்னடா, இவன் சப்பென்று முடித்துவிட்டானே என்று நினைக்கிறீர்களா? இதைவிட எழுதுவதற்கு என்னிடம் வேறு எதுவுமே இல்லையே! இருந்தால் எழுதாமல் இருப்பேனா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பகுதியை எழுதியபோது கதையில் இருந்த உயிர்ப்பு அடுத்த பகுதியில் இல்லை. கதையை நீங்கள் முடித்ததாக நான் நினைக்கவே இல்லை. வேண்டா வெறுப்பா சாப்பிடுவதுபோல் .......இப்ப புரிந்து இருக்குமே உங்களுக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே,

 

கதையை நீட்டிக்க என்னால் முடியாது. ஏனென்றால் கதையைக் கொண்டு நடத்துவது என் கைய்யில் இல்லை. நடப்பதை எழுதுவதுதான் எனது வேலையென்று ஆகிவிட்டது. 

 

வேண்டுமென்றால் முடித்துவைக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றதென்று மட்டும் என்னால் சொல்ல முடியும் ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நடக்கும் போது மிகுதியை எழுதுங்கள் :lol: அதுவரை காத்திருக்கிறம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே,

 

வேண்டுமென்றால் முடித்துவைக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றதென்று மட்டும் என்னால் சொல்ல முடியும் ! :D

 

ஆளை முடிக்கிற பிளனோ கதையை முடிக்கிற பிளானோ:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை முடிக்கிற பிளனோ கதையை முடிக்கிற பிளானோ:D

ஆத்துக்காரி ரகுவை முடிக்கிற பிளான்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை முடிக்கிற பிளனோ கதையை முடிக்கிற பிளானோ :D

 

 

நக்கலு ????? ஆளோட பேசவே ஏலாது, அதுகுள்ள முடிகிறது ??????? அதுசரி, நீங்கள் எந்த "முடிக்கிறதைச்" சொல்லுறீங்கள் ? :icon_mrgreen:

ஆத்துக்காரி ரகுவை முடிக்கிற பிளான்

 

 

எனக்கொரு வழிபண்ணாமல் விடுறதில்லையெண்டு இருக்கிறையள் போல ? அவ்வளவு அக்கறை ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதிற்கு சமாதி கட்டி அதற்குள் இருந்து விசும்ப வைத்துவிட்டு வாசிக்கவந்த எங்களையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது நல்லா இல்லை சொல்லிட்டன்.. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசன் ரசிகனைய்யா என்னயமாதிரியே சிலதுகளில, :D அப்பப்ப வந்தெழுதினாலும் மனசுக்குள்ள ஒட்டிவிடுகுது உங்களோட எழுத்துக்கள் றகு அண்ணா ரசனைகள் நிறைய இடங்களில் ஒத்தே இருப்பதால்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனுசன் ரசிகனைய்யா என்னயமாதிரியே சிலதுகளில, biggrin.png அப்பப்ப வந்தெழுதினாலும் மனசுக்குள்ள ஒட்டிவிடுகுது உங்களோட எழுத்துக்கள் றகு அண்ணா ரசனைகள் நிறைய இடங்களில் ஒத்தே இருப்பதால்.. smile.png

 

 

நீங்களும் ஒண்டை எழுதுறது? எழுதினால் நாங்களும் வாசிப்போமில்லை ?smile.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மனதைக் கஷ்ட்டப்பட்டு மறுபடி சமாதிக்குள் அடைத்துவிட்டு தொடர்ந்து நடந்தேன். சமாதிக்குள்ளிருந்து மனம் விசும்புவது எனக்குக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

 

கதையின் பெயர் தான் அந்தப்பத்து  நிமிடங்கள்.

முடிவு.... அந்த விசும்பல் மட்டும்  கட்டை வேகும் வரை 

உள்ளேயிருந்து கேட்ட படியே இருக்கும்.smile.png

 

பகிர்விற்கு நன்றி ரகு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.